செல்போன் எதற்கு?

¨        அம்பேத்கர் சிலைக்கு விபூதி அடிக்கும் இந்து முன்னணி கும்பல் தைரியம் இருந்தால் தங்கள் சொந்த மதமான இந்து மதத்தைச் சார்ந்த பெருமாள் சிலைகளுக்கு விபூதி அடிக்குமா? அய்யங்கார்கள் கூட்டம் வாலை ஒட்ட நறுக்கி விடும்!

¨        கோயில்களில் செல்போன் கொண்டுவர உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதுகூட ஒரு வகையில் நியாயம்தான் சமஸ்கிருத மந்திரங்களை கருவறையில் உள்ள கடவுள்கள் நெட்வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்?

¨        ஆகமக் கோயில்களைக் கணக்கெடுக்க அறநிலையத் துறைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். ஓய்வுபெற்ற நீதிபதி குழுதான் கணக்கெடுக்க வேண்டும் என்று  ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறக்கூடாதாம். சரி, ஆகமக்கோயில் சிலை திருட்டையும். ஓய்வு பெற்ற நீதிபதிதான் கண்டு பிடிக்க வேண்டுமா ?

– விடுதலை இராசேந்திரன்

டுவிட்டரிலிருந்து

பெரியார் முழக்கம் 15122022 இதழ்

You may also like...