வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

சென்னை மாவட்டக் கழகத்தின் வட சென்னை மாவட்ட அமைப் பாளர் தட்சிணாமூர்த்தி தாயார் வரதம்மாள் கடந்த 28.10.2022 அன்று முடிவெய்தினார். வரதம்மாள் படத் திறப்பு நிகழ்வு 20.11.2022 அன்று மாலை 6:30 மணியளவில் சேத்துப்பட்டு தட்சிணாமூர்த்தி இல்லத்தில் நடை பெற்றது.

தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திமுக மாவட்ட பிரதிநிதி மாதவன், அம்பேத்வளவன் – விசிக மேற்கு மாவட்ட செயலாளர், சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 24112022 இதழ்

You may also like...