Category: குடி அரசு 1936

விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்

விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்

அரசியல் பித்தலாட்டம் ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி, பிரதிகட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால் அவ்வித போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும் துஷ்டப் பிரசாரம் செய்வதும் ஒரு நிமிஷமும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத காரியமாகும். நமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சென்ற இந்திய சட்டசபை தேர்தலுக்குப் பின் ஜஸ்டிஸ் கட்சி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்றுதான் இருப்பதாகவும் உண்மைக்கு மாறாக தோழர் சத்தியமூர்த்தி முதல் சாதாரணத் தொண்டர் வரை தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், புதியதாக ஜனக்கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருப்பதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சிக்கு...

ஸ்ரீனிவாச சாஸ்திரியார்

ஸ்ரீனிவாச சாஸ்திரியார்

தி ரைட் ஹானரபிள் சாஸ்திரியார் என்று பெயர் வழங்கப்பெறும் தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இப்போது காங்கிரஸ்காரர்களுடன் வெளிப்படையாய் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிற்போக்கானதென்றும், அதை அடுத்தத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்கச் செய்யவேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு நாட்டில் இடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் நிலை மிக மோசமாகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாலேயே பல பார்ப்பனர்கள் பெரிய பதவிக்கும் அந்தஸ்துக்கும் போக முடியாமல் போய்விட்டதென்றும் கூறி பார்ப்பனர்களை நமக்கு எதிரியாக கிளப்பிவருகிறார். மற்றும் காங்கிரஸ் கொள்கைகளைப் பற்றி தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும், வேலைத்திட்ட நிபந்தனைகளில் மாத்திரம் சிறிது தளர்த்தி தன் போன்றவர் அதில் வந்து சேரும்படி செய்யவேண்டும் என்றும் காங்கிரசுக்கு விண்ணப்பம் போடுகிறார். இப்படிப்பட்ட சாஸ்திரியார் யார்? அவரது பூர்வோத்தரமென்ன? அவரது கொள்கை என்ன என்பவை முதலியவைகளை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பது நமது ஆசை. சாஸ்திரியார் ஒரு சாதாரண உபாத்தியாயராய் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர், ஆங்கிலம் பேசுவதில் நல்ல உச்சரிப்பை உச்சரிக்கக்கூடியவர், பொதுக்கூட்டங்களில்...

ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி தாயார் தாயம்மாள் முடிவு

ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி தாயார் தாயம்மாள் முடிவு

95 வயதுகாலம் சுகமே வாழ்ந்து, சுகமே இருந்து வந்த எனதருமைத் தாயார் சின்னத்தாயம்மாள் 28-7-36ந் தேதி செவ்வாய் நள்ளிரவு 12 மணிக்கு முடிவெய்தினார். அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்துவிட்டார். தானாக நடக்க இருக்க, மலஜலம் கழிக்க சௌகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு சௌகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ந் தேதி இரவு 930 மணிக்கு அம்மையிடம் அனுமதி பெற்றே ஜோலார்பேட்டை பிரசாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்கு வரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர். உதாரணமாக தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார்...

கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்

கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்

கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை தோழர்களே! இன்று கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமான விஷயம். இதைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் தங்களபிப் பிராயங்களைச் சொன்னார்கள். நான் தலைவர் என்கின்ற முறையில் முடிவுரையாக என் அபிப்பிராயத்தை கூறுகிறேன். நான் ஒரு எதிர் நீச்சக்காரன். என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப்பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. கிராமமும் ஆசிரியரும் என்கின்ற பொருள் இன்றைய கூட்ட விஷயமாகும். அதைப்பற்றி மூவர் பேசினார்கள். அது சம்பந்தமாய் என் அபிப்பிராயத்தை தலைவர் முடிவுரை என்கின்ற முறையில் நான் பேசுகிறேன். ஆசிரியர்களை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்புக் கிடையாது. அவர்கள் அறிவுக்கு முட்டுக்கட்டை ஆனவர்கள்...

மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை

மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை

– கோமாளி யெழுதுவ�து மருதையாபிள்ளை: வாங்கய்யா தீக்ஷதரே! சௌக்கியமா? ரொம்பநாளாக காணமே. மார்க்க சகாய தீக்ஷதர்: ஆமாம், என்ன செய்கிறது? பிழைக்கிறவழி பார்க்கவேண்டாமா? மருதையா: நீங்கள் என்ன பாடுபடவா போகிறீர்கள், யாரோ சம்பாதிக்கிறான், எப்படியோ உங்கள் காரியம் நோகாமல் நடந்து விடுமே, என்ன குறை? மார்க்க: பூர்வீகம் போல் எண்ணிக்கொண்டு ஒன்றுந் தெரியாதவர் போல் பேசறீர்களே. மருதையா: பூர்வீகமென்ன? நவீனமென்ன? எப்போதும் போலவேதான் உதயம் அஸ்தமனம் ஆகிக்கொண்டே வருகிறது. உமக்கு மாத்திரம் என்ன வித்யாசப்பட்டு காண்கிறதோ? எனக்கு ஒன்றும் தோணவே இல்லையே. மார்க்க: ஆமாம், உமக்கென்ன தெரியவேண்டி இருக்கிறது? எங்களைப்போல தூங்கி விழித்ததும் எங்கு கல்யாணம், எங்கு கருமாதி என்று வீடுவீடாக அலைந்தாலல்லவோ தெரியும். அப்படித்தான் அலைந்தாலும் முன் போல ஏதாவது மரியாதையுண்டா? இல்லாவிட்டாலும் தக்ஷணையாவது அணாக்கணக்கில் உண்டா? எல்லாம் வர வரக் கெட்டுப் போய்விட்டது. அந்த வயித்தெரிச்சலைக் கிளப்பாதேயும். வேறு ஏதாவது பேச்சிருந்தால் பேசுங்கோ. மருதையா: என்ன தீக்ஷதரே, மிக...

காங்கிரசும் முஸ்லீம்களும்

காங்கிரசும் முஸ்லீம்களும்

  காங்கிரசில் சில முஸ்லீம்கள் தீவிர உணர்ச்சி காட்டுவதாக காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பனவற்றில் அடிக்கடி பிரஸ்தாபப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே முஸ்லீம்கள் எப்படி இப்படிப்பட்ட காங்கிரசில் இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. பதவி மோகம் உள்ளவர்களும் காங்கிரசை தன் சொந்த சுயநல வாழ்க்கைக்கு ஆதார ஸ்தாபனமாய் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுபவர்களும் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் பக்தராய் நடிப்பதில் ஆட்சே பணை இல்லை. ஆனால், தன் காலில் நிற்கக்கூடிய சுதந்திர வாதிகளும் நடுநிலை வகிப்பவர்களும் தங்களது மதத்தையும் சமூகத்தையும் முதன்மையாய்க் கருதுபவர்களும் எப்படி காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இணையில்லாத தேசீய வீரர்கள் என்று போற்றப்பட்ட தோழர்கள் மௌலானாக்கள், மகமதலி, ஷவ்கத்தலி ஆகிய இரு பெரியார்கள் “நாங்கள் முதலில் முஸ்லீம் இரண்டாவதும் முஸ்லீம் மூன்றாவது தேசீய வாதிகள்” என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியிருக்க இன்று காங்கிரசின் முக்கிய சூழ்ச்சியானது முஸ்லீம்களின் ஆதிக்கத்தை எப்படியாவது தாழ்த்துவது என்றே குறிக்கொண்டிருக்கும்போது அதை...

காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்

காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்

தோழர்களே! சமீபத்தில் வரும் அரசியல் சீர்திருத்தமானது எவ்வளவு தான் பயனற்றது என்றும் அதை உடைத்து எரியவேண்டும் என்றும் காங்கிரஸ்காரர்களாலும் மற்றும் பல தேசீயவாதிகள் என்பவர்களாலும் வாயினால் சொல்லப்பட்டாலும் காரியாம்சத்தில் எப்படியாவது சீர்திருத்தத்தின் கீழ்வரும் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று ராஜவிஸ்வாசம், ராஜபக்தி, ராஜிய சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு கட்டுப்படுதல் என்கின்ற காரியங்களுக்கு சர்க்காருக்கு சத்தியம் செய்து கொடுத்து மந்திரி பதவிகளை ஏற்று அதை அமுல் நடத்துவதென்றே சொல்லிக்கொண்டு இப்பொழுதிருந்தே எல்லா அரசியல் கட்சியாருள்ளும் போட்டிப் பிரசாரங்கள் நடந்துவருகின்றன. இந்த லட்சணத்தில் இந்த கொள்கை உடைய காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி ராஜவிஸ்வாச கட்சியென்றும், அதை 500 கெஜ ஆழத்தில் வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும் சட்டசபைத் தேர்தல்களில் தங்களுக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதிதீவிரமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது “அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு சொப்பு கள்ளு ஊத்து” என்று வெறிகாரன் சொல்லுவதுபோல் இருக்கிறது. காங்கிரஸ்காரர் என்பவர்களுக்கு இன்று மானம்,...

வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்

வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களே! பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரம் செய்வதற்காக “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்தியக் கமிட்டி” என்ற பெயரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அப்பிரசாரத்திற்கு ஜில்லாக்கள் தோறும் நிதி வசூலித்து வருகிறோம். வசூல் செய்து முடிந்ததும் ஜில்லாக்கள் தோறும் பிரசாரம் செய்ய போகிறோம். ஒரு சிறு தமிழ் தினசரி பத்திரிகையும் துவக்க எண்ணியுள்ளோம். ஆதலால் கொளும்பு, பர்மா, சிங்கப்பூர், பினாங், ஜாவா, சுமத்திரா, கொச்சின், சைனா, டர்பன் ஆகிய வெளிநாடுகளிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்கள் எங்கள் பிரசாரக் கமிட்டிக்கு உதவி செய்ய வேண்டுகிறோம். முக்கியஸ்தர்களாய் உள்ளவர்கள் முயற்சி எடுத்து பணம் வசூலித்து அனுப்ப விரும்புகிறோம். அந்தப்படி வசூலித்து அனுப்பப்படும் ஒவ்வொரு காசும் பார்ப்பனரல்லாதார் சமூகம் சுயமரியாதை பெறவும் பார்ப்பனீயம் அழிக்கப்படவும் பயன்படுத்தப்படும். அவ்விதம் உதவி செய்பவர்கள் þ கமிட்டி பொக்கிஷதார் விருதுநகர் (சேர்மன்) தோழர் வி.வி. இராமசாமி அவர்கள் பெயருக்கு செக்கு எழுதி “குடி அரசு” ஆபீஸ் மூலம் அனுப்பும்படி வேண்டுகிறோம். மூவார் தோழர்கள்...

டாக்டர் சுப்பராயனும்  C.R. ஆச்சாரியாரும்

டாக்டர் சுப்பராயனும் C.R. ஆச்சாரியாரும்

  சென்னை காங்கிரஸ் கட்டிடத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வரப்போகிற தேர்தலில் முறி அடிப்பதற்கு தீவிரப் பிரசாரம் செய்யவேண்டும் என்று யோசனை செய்து காங்கிரஸ்காரர்கள் 11736ந் தேதி தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். அதற்கு முக்கிய பேச்சாளராக டாக்டர் சுப்பராயன் அவர்களும் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பேசி இருக்கிறார்கள். தோழர்கள் சுப்பராயனும் ஆச்சாரியாரும் பிரிந்து பிரிந்து ஒன்றுகூடி இருப்பது இது ஒரு பத்தாவது தடவை ஆக இருக்கலாம். இருவரும் தலைக்கு ஒரு லட்சியத்தை பிடிவாதமாகக் கொண்டவர்கள். அந்த லட்சியங்கள் தான் அடிக்கடி அவர்களை பிரிக்கவும் கூட்டவும் செய்து வருகிறது. அதென்ன வென்றால் தோழர் சுப்பராயனின் லட்சியமெல்லாம் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்பதேயாகும். தோழர் ஆச்சாரியார் லட்சியமோ எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே அரசியல் என்பது யோக்கியமற்றதும் நாணயமற்றதுமாகும் என மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதை மெய்ப்பிக்க இவ்விரு...

எனது திட்டம்

எனது திட்டம்

தலைவரவர்களே! தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டம் என்று இப்போது என்னால் ஆமோதிக்கப்படும் வேலை தீர்மானமானது சுமார் 2 வருஷத்துக்கு முன்னமேயே என்னால் அக்கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்திற்கு பல சரித்திரங்கள் உண்டு. இத்திட்டம் முதல் முதலில் எப்படி ஏற்பட்டது என்றால் தோழர்கள் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் ஒத்துழைக்க ஏதாவது சந்தர்ப்பம் ஏற்படக்கூடாதா என்ற பிரச்னை எழுந்த காலத்தில் என்னால் யோசித்து எழுதப்பட்டு þயார்களில் ஒருவர் ஆமோதிப்பும் பெற்று காந்தியாருக்கு அனுப்பிக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தத்துவமாகும். அவை ஏற்றுக் கொண்டதாக தோழர் காந்தியாரிடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் வராததாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பித்தேன். அவர்கள் அவற்றை சில வார்த்தைத் திருத்தங்களுடன் ஒப்புக்கொண்டார்கள். அதன்பின் தான் இதே திட்டங்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் இவை பொது உடமைத் தீர்மானங்கள் என்றும் ராமசாமியை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியார் கொடுத்த விலை என்றும் சொல்லப்பட்டதாகும். மற்றும் பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகளாலும்...

பாண்டியன் ராமசாமி வேண்டுகோள்

பாண்டியன் ராமசாமி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும், தாலூகாவிலும் பார்ப்பனரல்லாதார் மகாநாடுகள் கூட்ட ஆங்காங்குள்ள இயக்கத் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம். W.P.A. சௌந்திரபாண்டியன் ஈ.வெ. ராமசாமி குடி அரசு அறிவிப்பு 19.07.1936

“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”

“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”

இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில்...

தஞ்சையில் சத்தியமூர்த்தியார்

தஞ்சையில் சத்தியமூர்த்தியார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் என்னுடைய தஞ்சை உபன்யாசத்துக்கு பதில் என்னும் தலைப்பில் அடியில் கண்டபடி பேசி இருப்பதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் பார்த்தேன். ஆனால் அதே விஷயம் மற்றும் வேறு சில சென்னை பத்திரிகைகளில் சிறிது விஷமத்தனமாகவும் அதாவது ராவணன், விபீஷணன் கதைகளை ஒப்பிட்டு பேசி இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எதை உண்மையாய் வைத்துக் கொள்வதானாலும் சரி. இப்போதைக்கு எனது அபிப்பிராயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சுதேசமித்திரனில் காணப்படுவதாவது: வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ~shend “ஸ்ரீமான் நாயக்கர் தன் பிரசங்கத்தில் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் அவர் காங்கிரசில் சேரத் தயாராக இருப்பதாக கூறினாராம்… ஸ்ரீமான் நாயக்கர் அபிப்பிராயத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக காங்கிரஸ் எப்போதும் தேசமக்கள் யாராய் இருந்தாலும் யாவரும் சமஉரிமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டுள்ளது. ஒரு சிறுபான்மை ஜாதியினரே உத்தியோகங்களை வகிப்பதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்காது. இவ்விஷயம் காங்கிரசால்...

பார்ப்பனரல்லாதார் இயக்கம்  சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபன்யாசங்களின் சாரம்

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபன்யாசங்களின் சாரம்

  தலைவர் அவர்களே! தோழர்களே!! நாங்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாகவே தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறோம். சென்னை நகரத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். சென்னை சென்னையில் தான் இயக்கப் பிரமுகர்கள் என்பவர்கள் எங்களை சிறிதும் சட்டை செய்யவில்லை. அவர்களுக்கு பயம் என்றே கருதுகிறோம். ஏனெனில் பிரசாரம் ஏற்பட்டால் பிறகு தங்களுக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயமேயாகும். காலமெல்லாம் பட்டம், பதவி, பணம் பெற்று சுகமாக தூங்கிக் கொண்டு இருந்துவிட்டு சமயம் வரும்போது எப்படியோ தந்திரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாயளந்து பதவிபெறும் வழக்கம் பட்டணத்தில் தான் இருந்து வருகிறது. ஆனால் இனி அது பலிக்காது என்று கருதுகிறேன். ஜனங்களிடத்தில் வந்து தாங்கள் செய்ததை சொல்லி எதிரிகளின் விஷமங் களை மறுத்துக் கூறினாலல்லது இனி தேர்தல்களில் வெற்றிபெற...

பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி

பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி

சேலத்தில் கூட்டம் பிரசாரக்கமிட்டி நியமனம் “சென்றமுறை நாங்கள் இங்கு வந்தபோது பிரசாரத்துக்குப் பொருளுதவி செய்வதாக தலைவர்கள் வாக்குறுதியளித்தார்கள். எங்கள் முயற்சி வெற்றிபெறுமென்று நம்புகிறேன். சுற்று பிரயாண காலத்தில் நான் கண்ணுற்ற முக்கியமான காட்சி என்னவெனில் காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களுக்கு ஜனங்கள் ஏராளமாக வருவதாகும். இதனால் பொதுஜன ஆதரவு நமக்கு அதிகமாக இருந்து வருவது புலனாகிறது. பிரசாரமில்லாததினாலேயே நமது கட்சி அயர்ச்சி யுற்றிருக்கிறது. தீவிரமாக பிரசாரம் செய்தால் ஜனங்கள் நமது கட்சி விஷயங்களில் சிந்தனை செலுத்துவது நிச்சயம். நமது தோல்விக்கு நமது பலவீனமே காரணம்; எதிரிகளின் வலிமையல்ல. எனவே நமது குறைபாடு களை யுணர்ந்து ஊக்கமாக உழைக்க எல்லோரும் முன்வரவேண்டும்”. குறிப்பு: 27.06.1936 ஆம் நாள் சேலம் போல்க்ஸ் பங்களாவில் நடைபெற்ற தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் பிரசார மையக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் குழு உறுப்பினர் தோழர் ஈ.வெ.ரா. பேசியது. – குடி அரசு வேண்ட�ுகோள் 12.07.1936

“தினமணி”க்கு சவால்

“தினமணி”க்கு சவால்

தென்னாட்டுப் பத்திரிகை யுலகத்தில் மழலைப்பருவங் கடவாதிருக்கும் “தினமணி” மூத்த பத்திரிகைகளைக் கிழடு தட்டிய பத்திரிகைகள் என்றும் விளக்கெண்ணெய், வெண்டைக்காய்ப் பத்திரிகைகள் என்றும் கேலிசெய்து தன்னைத்தானே விளம்பரப்படுத்தி வருவதைத் தென்னாட்டார் அறிந்திருக்கக் கூடும். மழலை உளறலை லக்ஷ்யம் செய்யலாமா எனப் பொறுப்புடையவர்கள் அடங்கியிருப்பதினால் “தினமணி”யின் திமிர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்குத் தானே சக்கரவர்த்தி என பாவித்துக்கொண்டு தலைகால் தெரியாமல் குதிக்கிறது. வசைபுராணம் பாடுவதில் தோழர் சத்தியமூர்த்தியையும் வென்றுவிடப் போட்டி போடுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்குக் கருமம்செய்யத் தனக்கு இருந்து வரும் ஆவலையும் அடிக்கடி காட்டிக்கொள்கிறது. ஜுலை 2ந் தேதி வெளிவந்த “தினமணி”யில் “நாயக்கரின் பாவனை” என்ற தலைப்புடன் எழுதப்பட்டிருக்கும் உபதலையங்கத்தில் “தினமணி”யின் ஆணவமும் அற்பத்தனமும் அறியாமையும் ஒருங்கே மிளிர்கின்றன. ஜுலை 1ந் தேதி மாலை சென்னைப் பச்சையப்பன் கலாசாலை மைதானத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி நிகழ்த்திய பிரசங்கத்தைக் கண்டித்து உப தலையங்கம் எழுதப் புறப்பட்ட “தினமணி” தோழர் நாயக்கரின்...

பார்ப்பனர் யோக்கியதை

பார்ப்பனர் யோக்கியதை

ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் உரிமை சம்பந்தமான சில குறைபாடுகளை நீக்கும் பொருட்டு தோழர் எம்.ஸி. ராஜா இந்தியச் சட்ட சபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார். அது மிகவும் மிதமான ஒரு மசோதா. பொதுஜன அபிப்பிராயம் அறியும் பொருட்டு அது பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. ஜில்லா கலைக்டர்களும் தமது ஜில்லாக்களிலுள்ள பொது ஸ்தாபனங்களுக்கு அந்த மசோதாவை அனுப்பி அபிப்பிராயமறிய முயன்று வருகிறார்கள். திருநெல்வேலி, மதுரை வக்கீல் சங்கத்தார் அந்த மசோதாவை ஆதரிக்க முடியாதென்று அபிப்பிராயம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. தென்னாட்டு வக்கீல் சங்கங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் பெற்றிருப்பது உலகப்பிரசித்தமான விஷயம். தேவகோட்டை வக்கீல் சங்கத்தில் பார்ப்பன வக்கீல்களுக்கென தனியாகத் தண்ணீர்ப் பானை வைத்திருப்பதையும், அந்தப் பானையில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று தடையேற்படுத்தி யிருப்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். தேசீயக் கொடியேற்றுவதைப் பற்றியோ பள்ளிக்கூடங்களில் ஹிந்தி போதனை செய்வதைப்பற்றியோ தீர்மானங்கள் வந்திருந்தால் இந்தப் பார்ப்பன வக்கீல்கள் ஆதரித்துத் தமது “தேசபக்தியை”க் காட்டிக்கொள்ள தயங்க...

கடவுள் செயல்  ஏழைகள் துயரம்

கடவுள் செயல் ஏழைகள் துயரம்

  இடம் கோயில். பாத்திரங்கள் புரோகிதர்கள், ஏழை மக்கள், சாது. ஆண், பெண், குழந்தைகள் ஆகியவர்கள் ஒரு கடவுள் விக்கிரகத்தின் முன் நின்று முறையிடுகின்றார்கள்: ஓ கடவுளே! பஞ்சம்! பஞ்சம்!! இதைப் பார்த்துக் கொண்டு சகித்து மௌனம் சாதிக்கும் கடவுளே தங்களை வணங்குகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும். சதாகாலமும், தங்களையே தொழுகிறோம். ஆனால் தாங்கள் சிறிதும் செவி சாய்ப்பதில்லை. “அதுவும் எங்கள் நன்மைக்கே” என்று நம்பும்படி கற்பிக்கப்பட்டிருக் கிறோம். அவ்வாறே நாங்களும் நம்புகிறோம். நாங்கள் எப்பொழுதும் நம்புகிறவர்கள். யார் எதைச் சொன்னாலும் நம்புகிறோம். அப்படியெல்லாம் நம்பியும் இன்னும் பட்டினி கிடக்கின்றோம். தயவு செய்து எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்! நாங்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்படுபவர்கள், உம்முடைய மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள், உணவற்றவர்கள், ரத்தமற்றவர்கள். குப்பைமேடுகளிலும், அழுக்கு மூலைகளிலும், குடிசைகளிலும் ஆடுமாடுகளைப்போல் சதா “துன்பம்” என்னும் கருவிலேயே வளர்ந்து வருபவர்கள். ஆதரவற்றவர்கள். ஏனைய ஜனங்களால் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்ட, பசிப்பிணியால் வாடிவதங்கும் அனாதைகள். எங்களைக்...

ஆண் பெண் சமத்துவம்

ஆண் பெண் சமத்துவம்

ஆண் மக்கள் தங்களுடைய பெண் மக்களை அதாவது தாங்கள் மிகுதியும் மரியாதை செலுத்தும் தாய்மார்களாயிருந்தாலும் சரி, அன்பு செலுத்தும் சகோதரியாயிருந்தாலும் சரி, காதலுக்குரித்தான மனைவிகளா யிருந்தாலும் சரி ஒரே படியாக அவர்களைக் கேவலமாகவே எண்ணியும், மதித்தும் வருவது சகஜமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் வெகுகாலமாக இம்மாதிரி பெண்களை இழிவாகக் கருதப்படுவதற்கு நமது சாஸ்திரங்களும், பண்டிதப் பெரியோர்களும், முற்றும் துறந்த முனிவர்களென்று சொல்லப் பட்டவர்களும் ஒருவித காரணமுமின்றி பெண்களைக் கேவலமாக வர்ணித்து வந்ததோடு, பாரபக்ஷமாக ஏட்டிலும் எழுதிவைத் திருக்கின்றனர். இதைப் படிக்கும் மக்கள் சாதாரணமாக தங்கள் பகுத்தறிவைக் கொண்டே ஆராயாமல் தங்கள் பெண்மக்களைக் கேவலமாக நடத்தி வந்ததோடு அவர்களுக்கு எவ்விதத்திலும் சமத்துவம் ஏற்படாதபடி சட்ட திட்டங்களையும் செய்து அதைப் பழக்கத்திலும் கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பழக்கமானது இந்தியர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பலனால் மக்கள் சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆண்...

வேதம் அல்லது பைபில் விதிகள்

வேதம் அல்லது பைபில் விதிகள்

வினா: பைபில் விதிகள் எவை? விடை: சமயாசாரியர்களால் தேவ வாக்கென மதிக்கப்படுவன வெல்லாம் பைபில் விதிகள் எனப்படும். வினா: பைபில் விதிகள் ஆதி முதல் ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கின்றனவா? விடை: இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்கள் எல்லாம் யூதர்களா யிருந்ததினால் பழைய ஏற்பாடே கடவுள் வாக்கு என்றும் கிறிஸ்து மதத்துக்கு அதுவே ஆதாரமென்றும் நம்பினார்கள். வினா: இதைப்பற்றி அப்போஸ்தலகர்கள் என்ன சொன்னார்கள்? விடை: புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப்போல் முக்கியமான தென்று அவர்கள் நம்பவில்லை யென்றே தெரிய வருகிறது. வினா: பழைய ஏற்பாட்டுக்கு சமமான நிலையில் புதிய ஏற்பாடு எப்பொழுது மதிக்கப்பட்டது? விடை: யூதக் கிறிஸ்தவர்களுக்கும் இதர கிறிஸ்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதினால் கத்தோலிக்க திருச்சபை ஸ்தாபனமாயிற்று. மத சம்பந்தமான விஷயங்களில் முடிவு கூற கத்தோலிக்க திருச்சபைக்கே அதிகார முண்டென மதிக்கப்பட்டது. எனவே பொதுவாக கடவுள் வாக்கென மதிக்கக் கூடிய ஒரு நூலுக்குத் தேவையுண்டாயிற்று. உடனே பல வேத விதிகள் தொகுக்கப்பட்டன. கடைசியில் அவை...

தேச மக்களே உஷார்!

தேச மக்களே உஷார்!

வரப்போகும் அரசியல் சீர்திருத்தம் இந்தியர் விரும்பும் அளவுக்கு முற்போக்கானதாயில்லை; மற்றும் பல குறைபாடுகளும் அதில் அடங்கி யுள்ளன. எனினும் அரசியல் ஞானமுடையவர்கள் அதை ஒப்புக்கொண்டு அனுதாபத்துடன் அமல் நடத்தினால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்ய முடியுமென்றும் மேற்கொண்டு அதிகப்படியான உரிமைகள் பெற அடிகோலலாமென்றும் அனுபவ ஞானமுடைய அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். காங்கிரஸ்காரர் மதிப்பைப் பெற்றவரும் அசம்பிளியில் காங்கிரஸ் பெற்ற “வெற்றி மேல் வெற்றி”களுக்கு உதவி புரிந்தவருமான தோழர் ஜின்னாவின் அபிப்பிராயமும் அனேகமாக இதுவேயாகும். ஆனால் பூரண சுயேச்சை வாதிகளும் “கலப்பற்ற தேசபத்தி”யுடையவர் களுமான காங்கிரஸ்காரர்களோ, வரப்போகும் சீர்திருத்தம் வேண்டவே வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு, மாகாண கவர்னர்களுக்கும் வைசிராய்க்கும் அதிகப்படியான விசேஷ அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதே காரணமாம். எவ்வளவு திறமையுடைய மந்திரிகளுக்கும் அந்த விசேஷ அதிகாரங்களை மீறி உருப்படியான வேலை செய்யவே முடியாதாம். ஆனால் வரப்போகும் சீர்திருத்தத்தில் அமோகமான விசேஷ அதிகாரங்கள் புகுத்தப்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களே காரணம் என்று ஸர்.டெஜ்...

காங்கிரசும் ஜவஹர்லாலும்

காங்கிரசும் ஜவஹர்லாலும்

பொது உடமையும் இன்று காங்கிரசினுடைய முக்கிய வேலை வரப்போகும் தேர்தலில் காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற வேண்டுமென்கின்ற ஒரே வேலைதான் என்பதைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்குமென்று நாம் கருதவில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்வது என்பதில் காங்கிரஸ் கொள்கை இன்னது என்பதாக ஒருவருக்காவது விஷயம் விளங்கி இருக்கும் என்றோ, அல்லது மக்களுக்கு விளங்கும்படி காங்கிரஸ்காரர்கள் விளக்கி வருகிறார்கள் என்றோ சொல்லுவதற்கில்லை. கட்டுப்பாடாகவே பொது மக்கள் இவ் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சினையாக இருப்பது “காந்தி பெரியவர்” என்பதும் அவர் “மகாத்மா” என்பதும் ஒரு அத்தியாயமாகவும் “காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்குப் போனார்கள், அடிபட்டார்கள்” என்பதும் “பாரத மாதாவுக்கு ஜே” என்பதும் இரண்டாவது அத்தியாயமாகவும், “ஆதலால் காந்திக்கு ஓட்டுப்போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்பது மூன்றாவது அத்தியாயமாகவும் இருந்து எலக்ஷன் பிரசாரம் செய்து வெற்றி உண்டாக்க முயற்சிப்பதாய் இருக்கிறதே ஒழிய வேறில்லை. இவ்வளவோடு தேர்தல் வேலையும் பதவி வேலையும்...

நடந்த விஷயம் என்ன?

நடந்த விஷயம் என்ன?

ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது. என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை. ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும். எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன்....

பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு

பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு

நாளது 21ந் தேதி கோபி – 22ந் தேதி கோயமுத�்தூர் – 23ந் தேதி ஈரோடு – 24ந் தேதி தஞ்சை – 25ந் தேதி திருச்�சி – 26ந் தேதி திருச்�சி – 27ந் தேதி சேலம் – 28ந் தேதி ராசீபு�ரம் – 29ந் தேதி கடலூர்� – 30ந் தேதி சென்னை� ஜூலை 1, 2 ந் தேதிகளில் செங்கல்பட்டு ஜில்லாவுக்காக சென்னையில் உள்ள பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். – 3ந்தேதி வேலூர் – 4ந் தேதி அம்பலூ�ர் சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஜூலை மாதம் புரோகிராம் மாத்திரம் மாற்றப்படலாம். இந்தப்படி தோழர்கள் சௌந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி, சி.டி.நாயகம், வி.வி.ராமசாமி முதலியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். ஆங்காங்கும் மற்றும் அந்தந்த ஜில்லாக்களிலும் உள்ள இயக்கத் தோழர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து வேண்டிய உதவி செய்ய வேண்டுகிறோம். C.D. நாயகம், E.V. ராமசாமி காரியதரிசிகள். குடி அரசு அறிவிப்பு 14.06.1936

“மெயி”லும் பார்ப்பனரும்

“மெயி”லும் பார்ப்பனரும்

“மெயில்” பத்திரிகையானது ஐரோப்பியர்களுடைய உரிமைகளை காப்பாற்ற நடத்தப்படும் பத்திரிகை என்பது பொதுஜனங்களது அபிப்பிராயம். ஆனால் அது அவ்வளவோடு நிற்காமல் இப்போது பார்ப்பனர்கள் உரிமையைக் காப்பாற்ற தீவிரமாய் புறப்பட்டு விட்டது. இதன் முக்கிய காரணம் இன்னது என்பது நமக்கு புலப்படவில்லை. ஜெர்மன் ஹிட்லர் எப்படி தன்னை ஆரியர் எனக் கருதிக் கொண்டாரோ அதுபோல் மெயில் ஆசிரியர் தன்னையும் ஆரியர் சந்ததி என்று கருதிக் கொண்டாரோ, அல்லது தென்னாட்டுப் பார்ப்பனர்களை தங்கள் சந்ததியார் என்று கருதிக் கொண்டாரோ என்னவோ என்று தான் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. எப்படியிருந்த போதிலும் எதற்கும் ஒரு அளவு உண்டு. என்ன காரணத்தால் மெயில் தன் அளவைக் கூட மீறிவிட்டதோ தெரியவில்லை. ஏனென்றால் 6ந் தேதி மெயில் பத்திரிகை உபதலையங்கம் ஒன்றில் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்காரர் ஒப்புக் கொண்டால் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விடுகிறோம்” என்று தோழர் நடேச முதலியார் சொன்னதைக் கண்டித்து எழுதும் போது “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்...

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின்  சுற்றுப்பிரயாண திட்டம்

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின் சுற்றுப்பிரயாண திட்டம்

  ஜஸ்டிஸ் கட்சியில் வறுமை நீங்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் பேசியதாவது: இன்று இந்தியாவில் எந்தக் கட்சியாலும் வறுமை நீங்காது என்றும், வறுமை நீங்க காங்கிரசிலும் கூட திட்டம் இல்லை என்றும் இந்து சமூகத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகளே வறுமைக்கும், செல்வத்துக்கும் பெரும்பாலும் காரணமாய் இருக்கிறதென்றும், அது ஒழிக்கப்பட்டால் இன்றுள்ள இவ்வளவு வறுமை இருக்காதென்றும் வறுமை என்று சொல்லப்படுவது பெரும்பாலும் கீழ் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்தான் இருக்கிறது என்றும் உதாரணமாக பார்ப்பானையும், “பறையனையும்” எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பார்ப்பான் எவனாவது வறுமையில் கஷ்டப்படு கிறானா? எவனாவது மூட்டை தூக்குகிறானா? சரீரக் கஷ்டமான வேலை செய்கிறானா? என்றும், பறையர்கள் முதலிய படிப்படியான கீழ்ஜாதிகள் என்பவைகள் எவ்வளவோ கஷ்டப்படுவதுடன் வறுமையால் படிப்பில்லாமல் வீட்டுவசதி, வயித்திய வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும், ஜாதி ஒழிந்தால் வறுமைகள் அநேகமாய் குறையும் என்றும், ஒரு அளவுக்கு செல்வமும் உழைப்பும் சமமாக பிரிக்கப்படும் என்றும், காங்கிரஸ் இந்த கொள்கைக்கு...

அரசியல் நிலைமை சேலம் விக்டோரியா மார்க்கட்டில் பிரசங்கம்

அரசியல் நிலைமை சேலம் விக்டோரியா மார்க்கட்டில் பிரசங்கம்

தோழர்களே! இங்கு நாங்கள் இன்று பிரசங்கத்துக்காக வரவில்லை. தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டி வேலையாக வந்தோம். வந்த இடத்தில் எங்களைக் கேட்காமலே நோட்டீசு போடப்பட்டிருந்தது. இந்தத் தோழர்களுக்கு பயந்து பேசுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. ~subhead பிரசாரம் ~shend தமிழ்நாட்டிற்கு பார்ப்பனரல்லாதார் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இயக்கப் பிரசாரம் சிறிதும் கூட நடைபெற வில்லை. பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்கு பிரசாரத்தைப் பற்றி கவலை இல்லை. பிரசாரத்தில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. சமய சஞ்சீவிகளுக்கு பிரசாரம் தேவையில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அவர்களுக்கு எந்தக்கட்சி வலுக்கின்றதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் சக்தியும் குணமும் உண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கு நாம் அதிகமான பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம் சமூக நலத்துக்கு நம் சமூகத்தவரே சிலர் எதிரிகளாகவும், எதிரிகளின் ஆயுதங்களாகவும் இருந்து நமக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதால் நமது பாமர மக்கள் ஏமாந்து போக...

கோவை கேசும் பார்ப்பனீயமும்

கோவை கேசும் பார்ப்பனீயமும்

இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் இந்த 20வது நூற்றாண்டிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மத இயலிலும், சமூக இயலிலும், அரசியலிலும் தலைதூக்கி விளங்குவதற்குக் காரணம் பார்ப்பனர்கள் பத்திரிகை உலகத்தை முற்றுகை போட்டு வெற்றியடைந்து சுவாதீனப்படுத்தி அடிமை கொண்டதேயாகும். இத்தென்னாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாக எவராலும் பத்திரிகை நடத்துவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகவே ஆகிவிட்டது. ஏதாவது ஒன்று அரை பத்திரிக்கைகள் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்குமானால் அவற்றின் நிலையும் உயிருக்கு ஊஞ்சலாடும் தன்மையதாகவே இருந்து வரவேண்டியிருக்கிறது. பத்திரிகை நடத்துவதில் கொடுமையையும், கல் நெஞ்சையும், நாணயக் குறைவையும், அதர்மத்தையும் காட்டுவதில் பார்ப்பனர்கள் சிறிது கூடத் தயங்குவதில்லை. உண்மையிலேயே இத்தமிழ்நாட்டில் இந்த 10 வருஷ காலமாய் குடி அரசு என்னும் பத்திரிகை ஒன்று இல்லாமல் இருந்திருக்குமானால் இன்று இத்தென்னாட்டு நிலை, ஏன்? இந்திய காங்கிரஸ் நிலை, அரசியல் சீர்திருத்த நிலை கூட வேறு விதமாகவே இருந்திருக்கும் என்று சொல்லுவதற்கு நாம் சிறிதும் பின்னடையவில்லை. உதாரணமாக இன்று காங்கிரஸ் கொள்கைகளில்...

குற்றாலத்தில் சு.ம. திருமணம்

குற்றாலத்தில் சு.ம. திருமணம்

எனது மதிப்புக்கு உரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும் தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது. இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருந்ததை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக்கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன். எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத் திருமணத்துக்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இது தான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவு தான் வேலை என்றும் இருந்தால் நான் அந்த புரோகித பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவுமாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும்...

பாண்டியன் ராமசாமி சுற்றுப்பிரயாணம்  திருநெல்வேலிக் கூட்டம்

பாண்டியன் ராமசாமி சுற்றுப்பிரயாணம் திருநெல்வேலிக் கூட்டம்

  ஆச்சாரியார் ராமசாமி சம்பாஷணை தலைவர் அவர்களே! தோழர்களே!! இயக்கத்தின் அவசியத்தைப்பற்றியும், அது செய்துள்ள வேலையைப் பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மையைப் பற்றியும் எல்லோரும் பேசிவிட்டார்கள். இனி நான் இக்கூட்டத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றியே சிறிது பேசுகிறேன். தலைவர் தோழர் நாயகம் அவர்கள் தெரிவித்ததுபோல் திருச்சி மீட்டிங் தீர்மானப்படி மேல்கொண்டு அதுவிஷயமாய் நடைபெற வேண்டிய காரியங்களுக்கு ஆக இங்கு வந்திருக்கிறோம். இயக்கத்தின் பேரால் பதவியும் பட்டமும் பெற்று வாழும் பெரியார்கள் எங்களை லட்சியம் செய்யாவிட்டாலும் இந்நாட்டு பாமர மக்களும் வாலிபர்களும் கிராம ஏழை ஜனங்களும் எங்களை மதிக்கிறார்கள். எங்கள் வேலைக்கு ஆக்கமளிக்கிறார்கள் என்பது இம்மாதிரி கூட்டங்களாலேயே விளங்குகிறது. அந்த தைரியத்தின் மீதே நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை சகித்துக்கொண்டு இந்த தொண்டில் ஈடுபட்டு இருக்கிறோம். திருச்சி மத்தியக் கமிட்டி தீர்மானப்படி ஜில்லாவுக்கு சுமார் 1500 ரூ. வசூலானால் போதுமானது. இது கூட செய்ய நம்மால் ஆகவில்லையானால் நம் செல்வவான்களின்...

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

Back to Nature  இயற்கை வழிக்குத் திரும்பு! Back to the Village கிராமத்திற்குப் போ!! Support village industries குடிசைத் தொழிலை ஆதரி! என்கிற பல்லவிகளைத் தேச பக்தர்களில் பலர் இதுபோது பாடி வருகிறார்கள். B.A., M.A.  பட்டதாரிகளுக்கெல்லாம் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை யேற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்யப்படுகிறது. படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கும் பாமரரின் தரித்திரத்தைப் போக்குவதற்கும் எல்லோரும் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கிராமப் புனருத்தாரணஞ் செய்வதற்காக தோழர் காந்தியார் அகில இந்திய கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பதாக (கூடஞு அடூடூ ஐணஞீடிச் ஙடிடூடூச்ஞ்ஞு ஐணஞீதண்tணூடிஞுண் அண்ண்ணிஞிடிச்tடிணிண) ஒரு சங்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். கவர்ன்மெண்டாரும் இந்த வேலையைச் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைத்திருக்கின்றனர். ஆனால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை வழிக்குத் திரும்புவதும், கிராமத்திற்குப் போவதும், எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் நாட்டு மக்களுக்கு...

கடவுள் கதை

கடவுள் கதை

உலக உற்பத்தி “சந்தேகந்தெளிய” சம்பாஷணை – சித்திரபுத்திமன்   கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார். கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்? க.சொ: ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும். க.கே: சரி, சரி சொல்லு, ஒரே ஒரு கடவுள். அப்புறம்? க.சொ: ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். க.கே: சரி, எப்போ? க.சொ: பாரு மறுபடியும், இரட்டை அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. க.கே: சரி, சரி. தப்பு சொல்லப்பா சொல்லு. க.சொ: உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார். க.கே: (அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்திருக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார் பாவம்! என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொறுத்து) சரி அப்புறம்...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும் அவ்வியக்கத்தின் பெயரை ஒப்புக் கொள்ள முடியாதென்றும், ஏனென்றால் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லும்போதே நமக்கு சுயமரியாதை இல்லையென்று ஒப்புக் கொண்டதாக ஆகிறதென்றும் ஆதலால் அந்தப் பெயரை எடுத்துவிட்டு வேறுபெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பல சமாதானம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்கள். இப்போது அந்தப்படி சொன்ன தோழர்களையே உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா? என்று கேட்க வேண்டியதாய் விட்டது. உதாரணமாக பல பெரிய இலாகா தலைமை ஸ்தானங்களுக்கு பார்ப்பனரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும் அவர்கள் கீழுள்ள பார்ப்பனர்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப்போட வேண்டியதைத்தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். சென்னை மாகாணத்தில் ஏறக்குறைய 8 வருஷ காலமாக பார்ப்பன ரல்லாதவர்கள் தான் போலீஸ் இலாகாவில் தலைவர்களாக இருந்து வருகிறார்கள் என்றாலும் போலீஸ் அதிகாரம் பார்ப்பனர்களின் ஏகபோக பிதுரார்ஜிதச் சொத்தாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத போலீசு...

பரிதாபம்

பரிதாபம்

தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் இரண்டாவது மகன் 14 வயதுள்ள ராஜசேகரன் கொடைக்கானல் ஏரியில் விளையாடுகையில் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று கேட்டு விசனிக்கிறோம். ராஜசேகரன் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் 4 புதல்வர்களிலும் இரண்டாவதவன். ஆனாலும் மிகவும் கெட்டிக்காரனும், புத்திசாலியும், நல்ல குணமும், ஜனங்களிடம் குஷாலாய் பழகும் குணமும் உடைய அபுரூபன். அப்படிப்பட்ட அவனைப் பறிகொடுத்த தாயார், தந்தையர், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் துக்கமும், விசனமும், பரிதாபமும் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் துக்கமும் விசனமும் இருந்து என்ன பயன்? யாரால் இனி என்ன செய்யமுடியும்? துக்கப்படுவதில் பயனில்லை என்று சொல்லி தேற்ற முயற்சிக்கத்தான் மற்றவர்களால் முடியும். இயற்கையை நன்றாய் உணர்ந்த தோழர் பாண்டியன் குடும்பத்தாருக்கு எவருடைய தேறுதலும் அவசியமிருக்காது என்றே கருதுகிறோம். குடி அரசு இரங்கற் செய்தி 31.05.1936

ஜவஹர்லாலும் சமதர்மமும்

ஜவஹர்லாலும் சமதர்மமும்

பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதாவது தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமூகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்ல வென்றும், ஆனால் நாளாவட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார். மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-5-36 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 கலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும். இதை அறியாமல் அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள்தனமே யாகும். குடி அரசு துணைத் தலையங்கம் 31.05.1936

சத்தியமூர்த்தியும் சமதர்மமும்

சத்தியமூர்த்தியும் சமதர்மமும்

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலை ஐரோப்பியர் சங்கத்தில் ஐரோப்பியர் முன்னிலையில் பேசும் போது “காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சமதர்மத்துக்கு விரோதமானது, ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொண்டதானது அவருடைய தனிப்பட்ட முறையிலேயே ஒழிய, அவருடைய கொள்கைகளுக்காக அல்ல, சமதர்மம் பணக்காரர்களைப் பாதிக்கும், சமதர்மம் சமூக வேறுபாடுகளை ஒழித்துவிடும், ஏழைகளுக்கு எஜமானர்களாய் எவரும் இருக்க முடியாது, ஆதலால் காங்கிரஸ் சமதர்மத்தை ஆதரிக்காது, காங்கிரஸ் செல்வவான்களைக் காப்பாற்றும், வெள்ளைக்காரரோடு ராஜி செய்து கொள்ளும்” என்பதாக பேசி இருக்கிறார். இதை 27-5-36ந் தேதி தாருல் இஸ்லாம் பத்திரிகை 2ம் பக்கம் 5, 6வது கலத்தில் காணலாம். ஆகவே தமிழ்நாட்டு வாலிபர்களில் சிலர் காங்கிரசானது சமதர்மக் கொள்கையுடையதென்றும், சமூக வேற்றுமையை ஒழிக்கக்கூடிய தென்றும், சமதர்மக்காரரும் சமூக வேற்றுமையை ஒழிக்க வேண்டுமென்பவர்களும் காங்கிரசில் வந்து சேர வேண்டும் என்றும் சொல்லுவார்களேயானால் அவர்களை அறிஞர்கள் என்றோ யோக்கியர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும். தோழர் ஜவஹர்லாலை காங்கிரஸ்...

கொச்சி மதம் மகாநாடு

கொச்சி மதம் மகாநாடு

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் மதம் மகாநாடு என்பதற்கு என்னையும் அபிப்பிராயம் கூறும்படி அழைத்திருக்கிறீர்கள். பல மதங்களைப் பற்றிய பல அபிப்பிராயக்காரர்கள் இப்போது இங்கு தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைப்பற்றி அதன் தலைவர்களால் உபதேசிக்கப்பட்ட தர்மங்களின் பெருமைகளை உங்களுக்கு விளக்கினார்கள். இந்த நிலையில் நான் பேசுவது உங்களுக்கு அவ்வளவு திருப்தி அளிக்குமோ என்று பயப்படுகிறேன். நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவனல்ல, எந்த மதத்தைப் பற்றியும் அதிகம் பாடுபட்டுப் படித்தவனுமல்ல. நான் எல்லா மதங்களையும், அந்தந்த மதக்காரர்களின் வாழ்க்கை நிலை மூலம் வெளியிலிருந்து அறிந்து அதைப்பற்றி மாத்திரமே அபிப்பிராயம் கொண்டிருக்கிறவன். இப்போது நமக்கு மதத்தைப்பற்றிய கவலையும், மத மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டிய அவசியமும் எதனால் ஏற்பட்டது? எதற்காக மதத்தைப் பற்றி பேசுகிறோம்? என்பவைகளை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் மத மகாநாட்டில் எந்த மதத்தில் மோக்ஷம் சமீபத்தில் இருக்கிறது என்றோ, எந்த மதத்தில் நமது...

வெற்றி! வெற்றி!!

வெற்றி! வெற்றி!!

வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொதுரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்டதாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவிதாங்கூரில் எத்தனையோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஏற்பாட்டை முதன் முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி ஹிந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப்பட்டது. நாயர்களுக்கு மட்டும் பிரவேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் சாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்ணர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம். குடி அரசு பெட்டிச் செய்தி 31.05.1936

ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்

ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்

தோழர்களே! ஈரோடு வர்த்தகக் குமாஸ்தாக்களின் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு நிரம்பவுண்டு. நான் எனது 11வது வயதில் வியாபாரத் தொழிலுக்கு வந்தவன். எனது 42வது வயதுவரை வியாபாரியாகவே இருந்தேன். ஈரோடு வர்த்தக சங்கம் 1916ம் வருஷம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இருந்தே அதில் தலைவனாக பல வருஷம் இருந்தேன். கடைசியாக நான் முனிசிபல் சேர்மென் ஆனதும், காங்கிரசில் சேர்ந்ததும்தான் எனது வியாபாரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். நான் ஏற்றுக்கொண்ட பொதுவேலைகளில் அதிகக் கவனம் செலுத்தியதாலேயே என் சொந்த வேலைகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. ஆனபோதிலும் இந்த ஊர் வர்த்தகர்களிடமும் வர்த்தகக் குமாஸ்தாக்களிடமும் எனக்கு மிகவும் பற்றுதலும் மரியாதையும் உண்டு. நான் உள்ளுரிலேயே இருக்க முடியாததாலும் போதிய சாவகாசமில்லாததாலேயும் அடிக்கடி அவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. என்றாலும் இன்று இந்த அதாவது ஈரோடு வர்த்தகர்களும், வர்த்தகக் குமாஸ்தாக்களும் கலந்த இந்தப் பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதை நான்...

டாக்டர் அன்சாரி மரணம்

டாக்டர் அன்சாரி மரணம்

டாக்டர் அன்சாரி பிரிவு பொதுவாக தேசத்துக்கு பெரிய நஷ்டமே. சட்டமறுப்பு மூலம் சுயராஜ்யம் பெற முயல்வது முட்டாள்தனமென உணர்ந்த பின்னரும் நேர் வழியைப் பின்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். தவறை ஒப்புக்கொள்வது அகௌரவமாகாதென உணர்ந்த டாக்டர் அன்சாரியோ துரபிமானத்துக்குக் கட்டுப்பட்டுப் பின்னடையவில்லை. தைரியமாக முன் வந்து சட்ட மறுப்புக் கொள்கையை மாற்றி சட்டசபை மூலம் வேலை செய்யப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு ஸ்தாபனத்துக்கும் அவரே காரணம். பார்லிமெண்டரி போர்டின் முதல் தலைவராயிருந்தவரும் அவரே. அசௌக்கியம் காரணமாக அரசியல் வாழ்வைத் துறந்ததாகக் கூறப்பட்டாலும் சுயநலக்காரர் சூழ்ச்சிகளினால் காங்கிரஸ் அலங்கோலப்பட்டு வருவதை யுணர்ந்தே அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். வகுப்புத் தீர்ப்பு உடைபடாமலிருப்பதற்கும் அவரே காரணம். காங்கிரஸ் ஹிந்து மெம்பர்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கா விட்டாலும் டாக்டர் அன்சாரிக்குப் பயந்தே நடுநிலைமை வகித்து வருகின்றனர். முஸ்லீம்கள் க்ஷேமத்தை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். வகுப்புத் தீர்ப்பை ஹிந்து மகா...

தலைவர்களுக்கு புத்தி வருமா?

தலைவர்களுக்கு புத்தி வருமா?

சென்னை கார்ப்பரேஷன் கௌன்சிலர் தோழர் எம். சுந்தரம் நாயுடு ஜஸ்டிஸ் கட்சியை விட்டுப் பிரிந்து விட்டதாகத் தெரிய வருகிறது. பிரிவதற்குள்ள காரணத்தை விளக்கி அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது முதல் நான் அதில் அங்கத்தினராக இருந்து வந்திருக்கிறேன். கௌன்சில் வேலையைத் தவிர்த்து அதை (கட்சியை) ஒழுங்குபடுத்துவதற்கோ நல்ல தேசீய வழிகளில் அதைத் திருப்புவதற்கோ அதன் தலைவர்கள் கொஞ்சம் கூட இஷ்டப்படுவதாகத் தோன்றவில்லை. நகரத்தில் ஆதரிப்பவர்களோடோ அல்லது மற்ற இடங்களில் தங்களை ஆதரிப்பவர்களோடோ அவர்கள் சம்பந்தம் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமான தீர்மானங்களைச் செய்வதிலும் அவர்கள் கலப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி முறையில் யதார்த்தமாக வேலை செய்வதை அது நிறுத்திவிட்டது”. தோழர் சுந்தரம் நாயுடு கூறியிருக்கும் மேல்காட்டிய அபிப்பிராயங்கள் முற்றிலும் சரியானவைகளாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால நிலைமையை படம் பிடித்ததுபோல் அவர் விளக்கிக் காட்டியிருக்கிறார். சென்ற அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்காக அந்தரங்க சுத்தியாக...

சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்

சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்

  பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றித் தோழர் சத்திய மூர்த்தி சேலம் மகாநாட்டில் பேசிவருகையில் “பண்டித ஜவஹர்லால் சொல்லுவதை நான் ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியாது” “காந்தி அபிப்பிராயம் என்ன என்பது எனக்குத் தெரியாது” “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஆக சிறை செல்லத் தயாராய் இருக்கிறேன்” “மந்திரி ஆகி மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இது 20536ம் தமிழ்நாடுவில் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சி ஒழிவதற்கு ஆக ஒரு பார்ப்பனர் சிறை செல்லுவதாய் இருந்தால் பார்ப்பனப்பூண்டு ஒழிவதற்கு ஆக எத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் சிறைச் செல்லத் தயாராய் இருப்பார்கள் என்பதை சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அறியார் போலும். பார்ப்பன ஆதிக்கமானது மனித சமூகத்துக்கு சிறப்பாக பார்ப்பன ரல்லாத சமூகத்துக்கு செய்துவந்த கொடுமைக்கும் துரோகத்துக்கும் நிவர்த்திக்காக ஆயிரக்கணக்கான பார்ப்பன மக்கள் ஜெயிலுக்குப் போவது மாத்திரமல்லாமல் தூக்கு மேடைக்கு போனாலும் தகும் என்றும் தகுதியான காரியம் என்றும் சொல்லலாம். ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம்...

சேலம் காலித்தனம்

சேலம் காலித்தனம்

சேலத்தில் 18536ந் தேதியில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் சில காங்கிரஸ் தொண்டர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் ஈனத்தனமாய் வைது பிரசங்கம் செய்ததை சுயமரியாதைக்காரர்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறார்கள். அதற்கு காரணம் அத்தொண்டர்கள் மீது குற்றமில்லை என்றும், அவர்களை கூலி கொடுத்து ஏவி விட்டவர்கள் காரணம் என்றும், இந்தியாவின் வறுமை நிலைமையானது இம்மாதிரி இழிவான தொழிலாவது செய்து வயிறு வளர்க்க வேண்டி இருப்பதால் அதைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் கருதியிருந்ததேயாகும் என்று தெரிகிறது. ஆனால் அதே மாதிரி தன்மையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் பேசியதால் அவரை சில தோழர்கள் கேள்வி கேட்க வேண்டியவர்களானார்கள். காரணம் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்றும் மற்றும் கேவலமாகவும் பேசியதேயாகும். இந்நிலைமையில் தோழர் சத்தியமூர்த்தியோ அல்லது அவர்களது கூலிகளோ ஆண்மையும், சுயமரியாதையும், வீரமும் உடையவர்களானால் கேள்விகளுக்கு தக்க விடையளித்திருக்க வேண்டும். விடையளிக்காவிட்டால் அம்மாதிரியான பேச்சுக்களை பேசாமலாவதிருந்திருக்க வேண்டும்....

தற்கால அரசியல்

தற்கால அரசியல்

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று தற்கால அரசியல் என்பது பற்றி நான் பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்கால அரசியல் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். அரசியல் என்கின்ற வார்த்தை புதிய வார்த்தை. நம் நாட்டில் முன் காலத்தில் அரசியல் என்கின்ற பிரஸ்தாபம் இருந்ததாக யாரும் சொல்ல முடியாது. அரசியல் என்று பேசுவதே தோஷமான காரியமாகும். ஏனென்றால் இந்துமத வேத ஆதாரப்படி அரசர்கள் கடவுள்களாவார்கள். அதாவது அரசன் விஷ்ணு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவோ புராணங்களிலும் அரசர்களின் அநீதிக்காகப் பிரஜைகள் அரசியல் என்று பேர் வைத்து இயக்கம் உண்டாக்கி கிளர்ச்சி செய்ததாக ஒரு வார்த்தையும் காண முடியாது. ஆதலால் அரசியல் என்கின்ற வார்த்தை மேல் நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்ததாகும். மேல்நாட்டுக்கார மேதாவி ஒருவரே அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்று சொல்லி இருக்கிறார். அரசியல் என்கின்ற வார்த்தை எப்படி மேல்நாட்டில் இருந்து இறக்குமதி ஆயிற்றோ...

நத்தானியல் தம்பதிகள் பிரலாபம்

நத்தானியல் தம்பதிகள் பிரலாபம்

வேலூர் ஜில்லாபோர்டு உபதலைவர் டாக்டர் நத்தானியேலும் அவரது மனைவியாரும் ஜில்லாபோர்டு மெம்பருமான தோழர் ஜுலியா நத்தானியேல் அம்மாளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவருக்கு அனுப்பிய ராஜிநாமாக் கடிதம் வேறிடத்து வெளிவருகிறது. அதைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு டாக்டர் நத்தானியேல் தம்பதிகள் உள்ளம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறதென்பது விளங்காமல் போகாது. ஆரஅமர யோசியாமல் அவசரப்பட்டு காங்கிரசில் சேர்ந்து விட்டதைப் பற்றி டாக்டர் நத்தானியேல் வருந்துவதுடன் காங்கிரசில் சேர்ந்த அந்தப் பொல்லாத காலம் முதல் தான் மன அமைதியுடன் வாழ்ந்ததில்லையென்றும் கூறுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் என்போர் ஆசை வார்த்தை கூறி மயக்கித் தம்மை காங்கிரசில் சேர்த்ததையும் பிறகு ஒரு உதவியும் செய்யாது கை விட்டதையும், சிரமத்தையும், செலவையும், தொழில் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் மதியாது ஒரு மாத காலம் சுயமாக வேலை செய்து தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் டாக்டர் நன்கு விளக்கியிருக்கிறார். வேலூர் ஜில்லாபோர்டு தேர்தலில் துரோகம் செய்தவர்களைக்கண்டு பிடிப்பது அசாத்தியமென்றும், எனவே காங்கிரஸ் பேரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்...

சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு

சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு

காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் பலர் காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களின் நடத்தையும், நாணயமும், எண்ணமும் பிடிக்காமல் அதாவது காங்கிரசை பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நலத்துக்கும் தங்கள் சொந்த பார்ப்பன சமூக நலத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அக்காரிய சித்திக்கு ஆகவே மற்ற காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் பெயர்களையும், பணங்களையும், தொண்டர்களையும், உழைப்புகளையும், ஆயுதமாக உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், இந்த 20 வருஷ காலமாக எங்கும் கூப்பாடு எழுந்த வண்ணமாக இருந்து வருகிறது என்பது யாரும் அறியாததல்ல. சுமார் 10, 12 வருஷங்களுக்கு முன்பாகவே தோழர் ஈ.வெ.ராமசாமி இதை உணர்ந்து அடியோடு காங்கிரசையும் பார்ப்பனரையும் விட்டு விலகி வந்து தனித்த முறையில் தன்னாலான தொண்டை தான் சரி என்று பட்ட காரியத்திற்கு பயன்படுத்தி வருகிறார் என்பதும் யாரும் அறியாததல்ல. இப்பொழுது சமீபகாலத்தில் அதுவும் காங்கிரசுக்கு எங்கும் வெற்றி என்று சொல்லப்படும் காலத்திலும் தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, ராய சொக்கலிங்கம், தண்டபாணிபிள்ளை,...

திருச்சி கூட்டம் – I

திருச்சி கூட்டம் – I

திருச்சியில் பாண்டியன் ராமசாமி அறிக்கைப்படி ஏற்படுத்தப்பட்ட கூட்டம் 3536ந் தேதி நடந்து விட்டது. கூட்டத்துக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள் என்றால் அவர்களது அறிக்கைக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது என்பது யாவருக்கும் விளங்கும். அக் கூட்டத்தில் பிரசாரத்தைப்பற்றி முக்கியமாய்ப் பேசி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஏற்பாடுகள் காரியத்தில் நடக்கவேண்டும். அதன் பிறகு தான் கூட்டத்தின் வெற்றியைப் பற்றி பேச யோக்கியதை உண்டு. “ஆண்டிகள் மடம் கட்டுவது போல்” என்று ஒரு பழமொழி சொல்லு வார்கள். அதாவது வாயில் பேசிவிட்டு காரியத்தில் அலட்சியமாய் இருப்பது என்பதற்கு இப்பழமொழி சொல்லப்படுவது. அப்படிப்போல் இக்கூட்ட நடவடிக்கையும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படாமல் இருக்க முடியவில்லை. ஐஸ்டிஸ் கட்சியார் பிரசாரத்துக்கு பல கூட்டம் போட்டார்கள். சட்டசபை எலக்ஷன் தோல்வியும், ஜில்லா போர்டு எலக்ஷன் தோல்வியும் ஏற்பட்டும் கூட அவர்களது பிரசார முயற்சி எருமை மாட்டின் மீது மழை பெய்வது போலவே இருந்து வருகிறது. நெல்லூர் கூட்டம், குண்டூர்...

ஆனந்தக் கூத்து  ஈழுவ சமுதாயமும் இந்து மதமும்

ஆனந்தக் கூத்து ஈழுவ சமுதாயமும் இந்து மதமும்

  திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலும், பிரிட்டிஷ் மலபாரிலும் 23 லக்ஷம் ஜனங்கள் ஈழவர்கள் என்றும், தீயர்கள் என்றும் சொல்லப்படுவ தல்லாமல் அவர்கள் 5வது ஜாதியாயும் பஞ்சமரில் பட்டவராயும் தீண்டத்தகாதவராயும் பாவித்து வரப்படுகிறது. ஈழவ சமுதாயம் தீண்டத்தகாத வகுப்புபோல் கொடுமை செய்யப்பட்டு வந்தாலும் அச்சமூகம் இன்று சூத்திரர்கள் என்று தாங்களாகவே ஒப்புக் கொள்ளும் நாயர் சமுதாயத்துக்கும், பார்ப்பன சமுதாயத்துக்கும் அறிவிலும் ஆற்றலிலும் எள்ளளவும் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற நிலையில் இன்று இருந்து வருகிறார்கள். கல்வியிலும் நல்ல முற்போக்கடைந்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணம் வேண்டுமானால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் மகமதியருக்கு பள்ளிக் கூடத்தில் அரைச் சம்பளம் உண்டு. ஆனால் ஈழவருக்கு அரைச் சம்பளச் சகாயம் இல்லை. காரணம் என்னவென்றால் ஈழவர்கள் கல்வியில் பிற்பட்ட வகுப்பு அல்ல என்கின்ற காரணமே யாகும். அப்படிப்பட்ட ஈழவ சமூகம் வைக்கம் சத்தியாக் கிரகத்துக்குப் பிறகும், அவர்களது ஒப்பற்ற தலைவராகிய ஸ்ரீநாராயணகுருசாமியின் தீவிர சீர்திருத்த வேலைக்குப் பின்னும் இனி அரை நிமிஷம்...

இழி தொழில்  காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்

இழி தொழில் காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்

  இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் தங்களுக்கு அனுகூலமாக எவ்வித சேதிகளையும், விஷமத்தனமான காரியங்களையும் அடியோடு பொய்யாக கற்பித்து விஷமப் பிரசாரம் செய்து விடுகிறார்கள். அது பரவி மக்களுக்குள் செய்ய வேண்டிய விஷமங்களைச் செய்த பின் ஒரு அலட்சிய விஷயம் போல் மறுப்பு எழுதி தெரியாத ஏதோ ஒரு கோடியில் பலர் கண்களுக்கு தெரியாமல் பிரசுரித்து விட்டு யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்தப்படியான அயோக்கியப் பிரசாரத்தாலேயே காந்தியாரை மகாத்மாவாக்கியும், பண்டித மாளவியாவை தேச பக்தராக்கியும், பண்டித ஜவார்லாலை வீரராக்கியும், தமிழ் மக்களை ஏமாற்றியும் வாழ்ந்து வருகிறார்கள். காந்தியாரைப் பற்றியும், நேருக்களைப் பற்றியும் இப்பார்ப்பனர்கள் கட்டிவிட்ட புளுகு கொஞ்ச நஞ்சமல்ல. அப்புளுகுகளைப் பிரசாரம் செய்ய காலிகளுக்கும், கூலிகளுக்கும் காசு கொடுத்து உசுப்பிவிட்டதும் கொஞ்ச நஞ்சமல்ல. காந்தியாரை ஜெயிலுக்குள் போட்டு பூட்டினால் வெளியில் வந்து விடுகிறார் என்றும், அதனாலேயே அவரை சர்க்கார் பூட்டுவதில்லை யென்றும், அடிக்கடி விட்டு விடுகிறார்கள் என்றும்...

ராஜினாமா சூழ்ச்சி

ராஜினாமா சூழ்ச்சி

காங்கிரஸ் “கண்டிப்பு” நாடகம் வட ஆற்காடு ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உற்றதை மறைத்து பொது மக்கள் கண்களில் மிளகாய் பொடியைத் தூவ காங்கிரஸ் கண்டிப்பு முறையைக் கையாளப் போவதாக ஒரு நாடகம் நடிக்கப்படுகிறது. காங்கிரசுக்கு எப்போதாவது ஒரு கண்டிப்போ, ஒழுங்கு முறையோ இருந்திருந்தால் இந்த கண்டிப்பு நாடகத்தைப் பார்க்க நாலு பேராவது வரக்கூடும். இன்று திடீரென்று ஏதோ தவறு ஏற்பட்டதாகவும், அதை அடியோடு அடக்கப்போவதாகவும் வேஷம் போடுவதானது தோழர் ஷண்முகம் தேர்தலில் ஏற்பட்ட துரோகத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எடுத்துக் கொண்ட நடவடிக்கையைப் பார்த்து இது காப்பி அடிப்பதேயாகும். அதாவது மயிலைப் பார்த்து வான் கோழி ஆடுவது போலவேயாகும். திருநெல்வேலி ஜில்லாபோர்டு எலக்ஷனில் காங்கிரஸ் எந்தக் கண்டிப்பு முறையை எந்த ஒழுக்கத்தைக் கையாடிற்று. காங்கிரசின் பேரால் இன்று வெற்றி பெற்ற ஜில்லா போர்டு மெம்பருக்கு பிரசிடெண்டு வேலை செய்து வைத்ததா, ஒழுங்கைப் பற்றியோ, கண்டிப்பைப் பற்றியோ பேச காங்கிரசுக்கு வெட்கமில்லையா?...