நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்
நங்கவள்ளி நகரம் சார்பாக, 26.12.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டம் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆனந்த் குழுவினருடன் வீதி நாடகமும் நடைபெற்றது. நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஊஞஐ நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது ரயீஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உரையாற்றினார்கள். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர்,...