பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை  கோவிந்தசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30.12.2021 அன்று, செஞ்சி அத்தியந்தல் சாக்ரடீஸ் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சாக்ரடீஸ் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்விற்கு வரவேற்புரை யாற்றினார். நிகழ்விற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் சு. மழைமேணி பாண்டியன் படத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் கலா நாராயணமூர்த்தி, பகுத்தறிவு பாடகர் காத்தவராயன், பெரியார் சிந்தனையாளர் நா. இராசநாயகம், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ இளையரசன், மருத்துவர் தன்மானம் ஆகியோரின் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து, கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் ந.அய்யனார் நிறைவுரையாற்றினார். கழகத் தோழர் பரிமளா நன்றி கூறினார்.

நினைவேந்தலில், பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, பெரியார் சாக்ரடீஸ் ரூ. 1000/-, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் சு. மழைமேனிப் பாண்டியன் ரூ.500/-, திமுக ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயணமூர்த்தி ரூ.500/-யை தலைமைக்குழு உறுப்பினர் அய்யனாரிடம் வழங்கினர்.

நிகழ்வில், மறைந்த கோவிந்தசாமி திமுகவைச் சார்ந்தவராக இருந்தாலும், தீவிர பெரியார் பற்றாளர், சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர், இறுதிவரை சடங்குகளை பின்பற்றாதவர் என்றும் அவரது நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

 

பெரியார் முழக்கம் 06012022 இதழ்

You may also like...