Category: சிறப்பு கட்டுரை

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

சிறுபான்மையினர் நலன்

சிறுபான்மையினர் நலன்

ளுக்கான நிரந்தரச் சான்றுகளை இணைய வழியில் எளிமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு திருநெல்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம், அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூரும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலைையையும் இணைக்கும் வகையில் நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் இளைஞர்களைக் கவர்ந்து நிற்கின்றது என்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கூட்டம் பெரியார் நூல் விற்பனைக் கடைகளில் அலைமோதுகிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்தி, ஆன்மீக நூலை வாங்குகிறார்கள் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பெரியாரிய – கடவுள் மறுப்புக் கொள்கையில் இளம் வயது முதல் ஈர்க்கப்பட்டேன் என்று தனியார் கல்லூரியில் பணியாற்றும் 27 வயது இளைஞர் சவுமியா நாராயணசாமி கூறுகிறார். மதத்தோடு ஜாதி பிணைந்திருக்கிறது என்று அந்த நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலத்தில் சமூகம், ஜாதி, மதம், பெண்ணடிமை கருத்துகளில் மூழ்கிக் கிடந்தது. “தமிழ்நாட்டு வரலாற்றில் சமூகத்தை வர்ணாஸ்ரமும், ஜாதியும் ஊடுறுவி சிதைத்தது. இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் தொடங்கிவிட்டது” என்கிறார் 19 வயது இளைஞர் கருணாகரன். தமிழ் இலக்கியப் பட்டப் படிப்பில்...

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு தமிழ்நாடு வந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீமாக அதிகரித்தல், நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையை பின்பற்றுதல், மாநிலங்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிர்வு அளித்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

ன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனிச் செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் வழியாக திட்டத்தை அன்றாடம் கண்காணித்து, எந்தக் குறையும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறது அரசு. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வியாண்டுகளில், கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு...

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறித்து சட்ட சபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்களின் தொகுப்பு இது. ஆளுநர் உரையைப் படிக்க மறுத்ததால் பேரவைத் தலைவர் உரையைப் படித்தார். பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னோடி நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான...

சீமான் முகத்திரை கிழிந்தது

சீமான் முகத்திரை கிழிந்தது

தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர்...

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the...

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

திருமணமான பெண்களின் விருப்பத்துக்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய ஆட்சி. உலகம் முழுக்கவே பெண்ணுரிமை சார்நது நடைபெறும் விவாதங்களில் திருமணத்திற்குப் பின்பு கணவனால் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டாய உறவு முக்கியமான ஒன்று. இத்தகைய வல்லுறவை Marital Rape என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே சுமார் 14 விழுக்காடு பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 82 விழுக்காட்டினர் கணவனால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதாக 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது. சுமார் 150 நாடுகளில் திருமணத்திற்குப் பிந்தைய கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தையும் மீறி உலகம் முழுவதும் இக்கொடுமையைப் பெண்கள் எதிர்கொண்டே வருகின்றனர். 32 நாடுகளில் மட்டும்தான் இதனைக் குற்றமாகக் கருதுகிற சட்டம் இல்லை....

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1925 முதல் 1949 வரை அதன் எழுத்தையும் பேச்சையும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் அதைப் படிக்கவும் பேசவும் முடிகிறது. பெரியார் குடிஅரசு இதழை ஆரம்பித்த போது வெறும் 7 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் கூட தந்தை பெரியார் “நான் ஒருவனே எழுதி, நான் ஒருவனே அச்சிட்டு, நான் ஒருவனே எழுதிப் படிக்கின்ற நிலை வந்தாலும் குடிஅரசு இதழை நடத்திக் கொண்டு இருப்பேன்”. நவீன அச்சு இயந்திரங்களோ, தொலை தொடர்பு வசதி என எதுவுமே இல்லாத காலம் அது. 1929ஆம்...

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

21.09.2024 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற “அன்றே எச்சரித்தார் பெரியார் – பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு. சுயமரியாதையோடு மற்றவர்களையும் மதிக்கும் பண்பு. அதே போன்று நம்மை மானம் இழக்கச் செய்து, நமது உரிமைகளைப் பறித்து நம்மை நிராயுதபாணிகளாக மாற்றி, பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கற்பித்து அதை நம்ப வைத்து நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்காகவே, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். எனக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. நான் கடந்துவந்த பாதையை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. நான் கொளத்தூர் மணி அவர்களைக் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக் களத்தில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவரைச் சார்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுவதிலும்...

லப்பர் பந்து

லப்பர் பந்து

அண்மைக் காலமாக தமிழ் திரைப்படங்கள் ஜாதிய ஒடுக்குமுறைகளை ஆழமாகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. சமூக நீதியின் விளைச்சல் களாக அருமையான இளம் படைப்பாளிகளைத் தமிழ் நாடு உருவாக்கியிருக்கிறது. சமூகக் கவலையோடு அவர்கள் படைப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜாதி எதிர்ப்பை முன்வைத்து வந்துள்ள படங்கள் தீண்டப்படாத மக்களின் துயரங்கள், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள், ஜாதித் திமிரின் ஆதிக்கம், அதை எதிர்த்துப் போராடுகிற இளம் போராளிகள், ஜாதி மறுப்புக் காதலர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் இருந்து ஒரு மாறுபட்ட ஒரு பார்வையில் வந்திருக்கக் கூடிய ஒரு படம் தான் லப்பர் பந்து. ஜாதித் தடைகளைக் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதைக்கு ஒளியைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம். தலித் பெண்ணை மணந்த பிற்படுத்தப்பட்ட ஜாதி இளைஞன். அந்த இணையர்களுக்கு பிறந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் புரிய விரும்பும் தலித் இளைஞர். “மாமனார் – மருமகன்” என இந்த தரப்புகளுக்குமான தன் முனைப்புகளில்...

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உதயநிதி துணை முதல்வராவது குறித்தப் பேச்சுக்கள் தான் ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் ஒரு மிகச்சிறந்த பெரியாரிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர் ஆவார். சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கைகளில் அழுத்தமான உறுதிக்கொண்டவர். இதை வெளிப்படையாகவே அவர் அறிவித்திருக்கிறார். டெங்கு, மலேரியாவைப் போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சங்பரிவார கும்பல்கள் வழக்குத் தொடுத்தன. ஆனால் இந்த வழக்குகளுக்கு எல்லாம் அவர் அஞ்சி நடுங்கிடவில்லை. உளவியல் ரீதியாக அவரை நிலைகுலையச் செய்துவிடலாம் என்ற எதிரிகளின் கணிப்பைத் தவிடுபொடியாக்கினார். 2023இல் இராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் “நான் ஒரு கருப்புச்சட்டைகாரன்” என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மிக எளிமையான தோற்றம், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்பவர். அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட...

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

கோவையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் மீது எழுந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்களின் பட்டியலில் புதிதாக ஒன்று இணைந்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் அங்கிருந்து வெளிவந்தால் அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தைக் கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில்...

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான். ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது....

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. புராண புரட்டு ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல்...

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

* மனித குல வரலாற்றில் மாற்றங்கள் இன்றியமையாதவை. மனிதர்களின் கண்டுபிடிப்புகளின் வரிசையில் இன்னுமொரு சிகரம் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் வருகை ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் அளிக்கிறது. மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்தவை, அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஒரு துப்பாக்கியோ, அணுகுண்டோ அதற்குரிய விசையை இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு, மனிதர்களிடமிருந்து எவ்வளவு விரைவாக, ஆழமாகக் கற்றுக் கொள்ள முடியுமோ கற்றுக் கொண்டு, பன்மடங்கு ஆற்றலுடன் சுயமாக இயங்கக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. • மாபெரும் மாற்றங்கள், எப்போதாவது ஏற்படுவதைத்தான் உலகம் கண்டுள்ளது. இப்போது ஒரு சில மணி நேரத்திலேயே புதிய கண்டுபிடிப்புகள் ‘பிரேக்கிங் நியூஸ்’ போல வெளிப்படுவதைக் காண்கிறோம். இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் உலகெங்கும் எழுந்து கேள்வி. அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறிவதே நம் முன்னுள்ள சவால். * மரபியலில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை செயற்கை நுண்ணறிவு உண்டாக்கும் என...

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கப்பெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘குடிஅரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடிஅரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தியால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய்ப் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடிஅரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்காரவேலர், சாமி.சிதம்பரனார்,...

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மரித்துப்போன 15 வயதுப் பெண்ணை, ‘மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துவேன்’ என்று சொல்லி, அவரது சடலத்தைத் தனது ஆட்கள் உதவியோடு எடுத்துக்கொண்டு போனவர், காவல் துறையால் அதற்காகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், அதற்குப் பின்னும் அந்த ஊரே அவரைக் கொண்டாடுகிறது. அப்படியான ஒருவர் குறித்த ‘சாமியார்’ என்னும் பிம்பக் கட்டமைப்பு, ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரை நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் சவக்கிடங்காக மாற்றிவிட்டது. ஹாத்ரஸ் நகர நெரிசல் நிகழ்வில் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் பலி என்பது அரசு சொல்லும் கணக்கு என்றாலும், ‘முந்நூறு சடலங்களுக்கு மேல் எண்ணிப் பார்த்தேன்’ என உள்ளூர் மனிதர் ஒருவர் கூறியது ‘தி இந்து’ நாளேட்டில் பதிவாகியுள்ளது. ஒரு பேருந்தின் இருக்கைகள் எல்லாம் சடலங்களால் நிரப்பப்பட்டு இருக்கும் கோரமான ஒரு காட்சியை இதற்குமுன் நாளேடுகளில் பார்த்த நினைவில்லை. மூன்று பெண் சடலங்கள் வினோத் என்பவர் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சார்ந்த...

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்; நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதைத் தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்! உண்மையில் தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் அனைத்து நிர்மாணத் தளங்களையும் அவர்களே கட்டி எழுப்பி அதிகம் பங்களித்த போதிலும், ஏழ்மையில் வைக்கப்பட்டுள்ளனர்! இப்படி எல்லாம் பேசும் பிரதமர் தான், ”நான் மிகவும் பிற்பட்ட சமூகத்தில் இருந்து பிரதமராகி உள்ளேன்” என்றும் சொல்லி உள்ளார். ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வாக்கான சாதி...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

இந்தியாவில் பாபாக்கள், கடவுள் அவதாரங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன? Times Of India நாளேடு (ஜூலை7) ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளது. பெரும்பாலான பாபாக்கள் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தே வருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலும் தலித் மக்கள். அதில் பெண்களே அதிகம். பாபாவோ ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்துக் கொண்டவர். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள மேல்தட்டு மக்களும் அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாபாக்களை நோக்கி வருவதற்கான காரணம் ஜாதியக் கட்டமைப்பு தான் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். சமூகவியல் பேராசிரியரான கல்யாணி இது குறித்து கூறுகையில்:- ஜாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளையும், சுமைகளையும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள். பாபாவின் சீடர்களாக மாறும்போது இந்த தடைகளில் இருந்து விலகி நிற்க முடிகிறது. ‘தேவி...

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம்...

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடை முறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம் – 2023’ என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள...

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

(சென்னை மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில், 19.05.2024 அன்று நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பில், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் தோழர் இரவிபாரதி ‘தமிழ்ச் சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை) “நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் பத்திரிகை நடத்துவதை நிறுத்த மாட்டேன், ‘குடிஅரசை’ தொடர்ந்து வெளியிட்டு வருவேன். என் கருத்துக்களை எதிர்வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை” என்ற காத்திரமான எழுத்துக்களுடன் இதழியல் களத்திற்கு வந்தவர் பெரியார். லோகோபகாரி, தேசோபகாரி, தேசபிமானி, ஜனாநுகூலன், சுதேச அபிமானி’, சுதேசமித்திரன், மஹாராணி’, கலாதரங்கிணி இதெல்லாம் அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எளிதில் உச்சரிக்கக்கூடியதாக இல்லை. பத்திரிகைகள் தமிழில் வந்தன, ஆனால் அதன் பெயர்கள் தமிழில் இல்லை. காரணம் அப்போது மேட்டுக்குடிகளிடம் மட்டுமே இதழியல் இருந்தது. தமிழ் குடிகளுக்காக இதழ் நடத்த...

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

மறைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பெரியார்தான் இன்னும் காவிகளை கதற வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், பெரியாருக்கு 12 வயதாக இருக்கும்போதே மறைந்துவிட்ட கால்டுவெலும் தன் பங்குக்கு கதற வைத்துக்கொண்டிருக்கிறார். கால்டுவெல் பெரியாரைப் போல நாத்திகர் இல்லை, பெரியாரைப் போல கடவுள் இல்லவே இல்லை என்று கூறவில்லை. பிறகு ஏன் காவிக்கூட்டம் அவரைக் கண்டு அஞ்சுகிறது என்றால், தனித்துவ ‘தமிழ்’நாட்டுக்கான அடித்தளத்தில் அவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. செத்த மொழி சமஸ்கிருதத்தில் இருந்தே இந்திய மொழிகள் அனைத்தும் உருவானவை என்ற ஆரியக் கற்பிதங்களை உடைத்து, சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிறுவியவர் கால்டுவெல். கால்டுவெல் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்? உண்மையில் ஆர்.என்.ரவி கூறுவதுபோல இராபர்ட் கால்டுவெல் மதபோதகராகத்தான் சென்னைக்கு வந்திறங்கினார். ஆனால் அதனால்தான் ஆர்.என்.ரவி வகையறாக்களுக்கு கால்டுவெலின் மீது கோபம் என்றால் அது பெரும் நகைப்புக்குரியது. இன்றைக்கும் இந்தியாவில் கிருத்தவர்களின் மக்கள்தொகை என்பது 2.3%-ஆக மட்டுமே உள்ளது. இந்து மதத்தில் இருந்து...

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி… இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து...

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

பெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக – சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டுவிட முடிவெடுத்துக் கொண்டார். எதையும் ஏன், எதற்கு என்று பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து தனக்கு சரியெனப்பட்டதை ஏற்றுக் கொள்க என்று பெரியார் கூறியது கவிஞருக்கு மிகவும் பிடித்தது. அதிலிருந்து பெரியார் கொள்கையை தனது பாடல்களின் கருப்பொருளாக பயன்படுத்தி பாடல்களை எழுதினார். 1928 இல் கருத்தடைப் பற்றி முதன் முதலாகப் பெரியார் கூறியதை 1936 இல் ‘காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ எனப் பாட்டால் வழி மொழிந்த முதற் கவிஞர்...

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு...

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

(நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் சார்பில் 14.04.2024 அன்று திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 20-வது கூட்டத்தில் ர.பிரகாசு ஆற்றிய உரை) பாரதமா அல்லது இந்தியாவா? என்கிற விவாதத்தில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது. அதனால்தான் பாரதமும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். தனித் தமிழ்நாடு கொள்கையைக் கொண்ட திராவிட இயக்கம் இந்தியா பக்கம் நிற்க வேண்டிய தேவை எங்கே எழுகிறது என்ற கேள்வியை சிலர் முன்வைக்கிறார்கள். ம.பொ.சி.-யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தமிழ்தேசியர்களிடம் இருந்தே இக்கேள்வி பெரும்பாலும் எழுகிறது. தெற்கெல்லை போராட்டத்தில் பெரியார் எடுத்த நிலைப்பாடுதான் இதற்கும் சரியான பதிலாகும் என்று கருதுகிறேன். தேவிக்குளம், பீர்மேடு என்ற 2 பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டம் எழும்போது, முதலில் தட்சணப் பிரதேசத்தில் இருந்து நாம் தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமென்று பெரியார் கூறினார். அதாவது, முதலில் தலையைக் காப்போம், பிறகு தலைப்பாகையை காப்போம் என்பது...

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் நரேந்திர மோடி, சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத அவலத்தில் இருக்கிறார். பணமதிப்பழிப்பு கொண்டு வந்து பல லட்சக் கணக்கானோரை வரிசையில் நிற்க வைத்து, அதில் ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்க வைத்ததுதான் பாஜக ஆட்சியின் சாதனை. ஜிஎஸ்டியை திணித்து பல்லாயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்களுக்கு பூட்டுப் போட வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை. பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக வேளாண் சட்டங்களை திருத்தியமைத்து விவசாயிகளின் பெருங் கோபத்தை பெற்றதுதான் பாஜக அரசின் சாதனை. கொரோனா பேரிடரில் கொத்து கொத்தாக மக்கள் செத்து கொண்டிருந்தபோது வாசலில் நின்று கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னதுதான் பாஜக அரசின் சாதனை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருகிறோம் என்று உறுதியளித்துவிட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்ததுதான் பாஜக அரசின் சாதனை. சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு, எல்லோர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருகிறோம் என்று...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை ‘திராவிட மாடல்’ திமுக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் இத்தகைய திட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. நேரடியாக மக்களிடத்தில் பணத்தை வழங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் தூண்டி விடப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றும், சாமானிய மக்களின் சமூகப் பொருளாதார ஏற்றத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது என்றும் இருக்கிற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு, இத்திட்டமே பிச்சை போடுவது என மிக அநாகரீகமாகப் பேசி, மக்களிடத்தில் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறார். ஒரு திட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் பின்பற்றுவார்கள். தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தை டெல்லி, கர்நாடகா போன்ற அரசுகளும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன. சில மாநிலங்களில் பாஜகவே இதை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. அதையும் ‘பிச்சை’...

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண – வைசிய – சத்திரிய – சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது...

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம். ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில்...

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

‘நாட்டின் மக்கள்தொகையில் 73 விழுக்காடு பேர் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை அறிய முடியும். தற்போது நாட்டில் ஓ.பி.சி. வகுப்பினர் 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு, பழங்குடியினர் 8 விழுக்காடு உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 விழுக்காடு. ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓ.பி.சி. அல்லது தாழ்த்தப்பட்ட...

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் –  ஆளூர் ஷா நவாஸ்

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் – ஆளூர் ஷா நவாஸ்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :- நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார். காந்தியை எதிர்த்தார்,...