Category: பெரியார் முழக்கம்

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29)

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29)

“நாடு நமக்கென்று வாங்குவீர்!” மத – ஓடத்திலேறிய மாந்தரே – பலி பீடத்திலே சாய்ந்தீரே! பாடு பட்டீர்கள் பருக்கையில்லா தொரு பட்டியில் மாடென வாழ்கின்றீர் – மதக் கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் – ஒண்ட வீடு மில்லாமலே தாழ்கின்றீர்!   (மத) பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் – மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார் – பதில் ஓதி நின்றால் படை கூட்டுவார்.              (மத) வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ சோதனை என்றவர் சொல்லுவார் – பணச் சாதனையால் உம்மை வெல்லுவார் – கெட்ட போதனையால் தினம் கொல்லுவார். (மத) பேதிக்கும் நோய்க்கும் பெரும் பசிக்கும் பல பீதிக்கும் வாய் திறப்பீர்களோ! – இழி சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? – செல்வர் வீதியைத் தான் மதிப்பீர்களோ?               (மத) கூடித் தவிர்க்கும் குழந்தை மனைவியர் கூழை நினைத்திடும் போதிலே – கோயில் வேடிக்கை யாம் தெரு மீதிலே – செல்வர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர், தான் போட்டியிடும் கர்நாடக-கோலார் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரத்தை வாஸ்து சாஸ்திரப்படி திருப்பி வைத்து வாக்களித்தார்.   – செய்தி தண்டவாளத்தில் ஓடும் ரயில் என்ஜினையும் வாஸ்துப்படி திருப்பி விடாதீங்கய்யா…. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்க்க மாட்டோம்.  – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தேர்தலை சந்திக்காமலேயே அமைச்சரவை அமைக்க புதுசா ஏதோ வழி கண்டுபிடிச்சிருக்கார் போலிருக்கு. சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள்.  – ப. சிதம்பரம் ‘கார்ப்பரேட்’ கம்பெனி தேவைகளை நான் பூர்த்தி செய்துவிட்டேன்; இனி எனது மகன், சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வந்திருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை திருடிவிட்டது பா.ஜ.க.  – மத்திய அமைச்சர் ஆனந்த் வர்மா புரியுது; எங்களுக்கு ஒரே கொள்கைதான்னு சொல்ல வர்றீங்க. அதை ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு சொல்றீங்க? இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை அடுத்த தேர்தலில்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் : ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் செயல்படும் பா.ஜ.க.வை தோற்கடிப்பீர்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் : ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் செயல்படும் பா.ஜ.க.வை தோற்கடிப்பீர்!

16-04-2014 புதன்கிழமை அன்று மாலை 6-30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில், “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமை தாங் கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முனைவர் ஜீவானந்தம், தோழர் ஜேம்ஸ், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, முதலானோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளத்தூர் நாவலரசன் கலைக்குழு வினரின் மதவாதத்திற்கு எதிரான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 17-04-2014 வியாழக்கிழமை அன்று மாலை 6-00 மணியளவில், கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம், கோவை நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களை ஆதரித்து நடைபெற்றது. தோழர் பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். வழக்குரைஞர் ந.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கழகத் தலைவர்...

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’...

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

சமூகத்தில் நிகழும் அரசியல்-பொருளாதார செயல்பாடுகளை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படவிடாது, ஜாதியம் விழுங்கி செரிமானம் செய்கிறது என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் 30.3.2014 அன்று சிறப்புக் கருத்தரங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மாநிலக் குழுத் தலைவர் எல்.பி. சாமி தலைமையில் நடந்த முதல் அமர்வில் ‘ஜாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “ஜாதியப் பாகுபாடுகளுக்கு அடிப்படையானது ஜாதியமைப்பு; ஜாதியமைப்பு உலகிலே எங்கும் இல்லாது இந்தியாவில் மட்டுமே இயங்கிக் கொண் டிருக்கிற பார்ப்பனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியா என்ற ஒன்று உருவாகவில்லை. ஆனால், வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனர் களின் புரோகித ஆட்சிகளையே அரசர்களும் குறுநில மன்னர்களும் நடத்தி வந்தனர். இதனால் உலகில் பல்வேறு சமூக அமைப்புகளில்...

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

‘அறிவின் வழி’ என்ற மாத இதழ் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பகுத்தறிவு பேசும் இயக்கம் குறித்து எழுதியுள்ள தலையங்கம் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையான தன்மையை பகுத்து அறிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் ஆகிறான். தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்ற சொல் கடவுள் மறுப்பு என்பதையே முன்னிலைப்படுத்துகின்றது. பகுத்தறிவாளன் என்றால் நாத்திகன் என்று சொல்லிவிட்டு ஒதுக்கி விடுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். ‘பகுத்தறிவு’ என்று பேசத் தொடங்கியதுமே அதைத் தட்டிக் கழித்து விட்டு, புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஓர் ஒவ்வாமைப் பண்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் பகுத்தறிவுவாதம் பேசுகிறவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் பிரிவினர், பகுத்தறிவு என்ற சொல்லைப் பட்டா போட்டு எடுத்துக் கொண்டிருப்பவர்கள். வேறு எவரும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்துவதை அல்லது அந்தப் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்து வதை விரும்பாதவர்கள். அவ்வாறு ஓர் இயக்கம், அமைப்பு தொடங்கப்படுமானால், அதற்கு யாரும்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...

மோடி: சிறப்பு வினா-விடை

மோடி: சிறப்பு வினா-விடை

ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடித்த குரங்கு மரணம். ரஜினி ரசிகர்கள் இறுதி மரியாதை.   – செய்தி அச்சச்சோ… முக்கிய சாவு ஆச்சே; மோடிக்கு சேதி சொல்லியாச்சா? அரசியல் நோக்கத்தோடு மோடியை நான் சந்திக்கவில்லை.      – நடிகர் விஜய் அது எங்களுக்கும் தெரியுமுங்க… ரசிகர் மன்றத்தை இவ்வளவு பலமா, எப்படி உருவாக்கினீங்கன்னு மோடி கிட்ட ஆலோசனை கேட்கத்தான், போயிருப்பீங்க… அப்படித்தானே? தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்தான் தமிழ்நாட் டுக்கும், நாடு முழுமைக்கும் வரவேண்டிய திட்டங் களை முடக்கினார்.    – ஈரோட்டில் மோடி யாருங்க, அந்தப் பெண்? பெண்கள் பிரச்சினை என்றாலே, மோடி எப்போதும் புதிர் போடுவதே வழக்கமாயிடுச்சு! மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும்.        – பீகார் பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் மோடிக்குத்தான் ‘விசா’ கிடைக்காது; மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சோனியாவும் ராகுலும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நாட்டை ஆள்கிறார்கள்.   – மோடி குற்றச்சாட்டு...

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

“கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இப்படி ஒரு கொடூரமான முறையில் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்கிறார், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் பலியான இளம் பெண் பொறியாளர் சுவாதியின் பாட்டி! காலம் முழுதும் கடவுளை நம்பிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் நியாயமான கோபத்துக்குப் பின்னால், கொந்தளிக்கும் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பேத்தியைப் பறி கொடுத்த துயரத்தின் வெளிப்பாடு – அவர் நம்பும் கடவுளின் நேர்மையை சந்தேகிக்க வைத்துவிட்டது. எப்படியோ குண்டு வைப்பதை கடவுளால் தடுக்கவும் முடியவில்லை. இப்போது மக்களின் கோபம் ஆட்சியின் செயலின்மை மீதுதான். ‘கடவுள்’ தப்பி விட்டார்! ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ என்று கூறுவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிடும். ஆரவாரம், பதட்டம், குற்றவாளிகள் தேடுதல், பாதுகாப்பு கெடுபிடிகள் – இவை எல்லாம் சில வாரங்கள் தொடரும். தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து செய்தி கிடைக்காத சோகத்தில் மூழ்கிக் கிடந்த...

‘அட்சய திருதை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும்.  – நகைக்கடை விளம்பரங்கள் அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத்தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க? ‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும்.   – செய்தி அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க! ‘அட்சய திருதை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை.     – செய்தி ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’! வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதி திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதிக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதி கொண்டாடப்படுகிறது....

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்) திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி ‘இளந்தமிழகம்’ இயக்கம், ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழேந்தி, தியாகு, செந்தில் ஆகியோர் கருத்தாழமிக்க உரைகளும், அவையில் எழுப்பிய வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விடைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதில்களை முன் வைக்கும் கருத்துப் பெட்டகமாக நூல் வெளி வந்திருக்கிறது. நூலின் நோக்கத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் செந்தில் கீழ்க்கண்டவாறு சரியாகவே விளக்குகிறார். “தமிழ்த் தேசியம் என்பது சாதி நாயகத்திற்கு எதிராக சனநாயகத்தை முன்னிறுத்துவ தாகும். சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானப் போராட்டமே நேர்வகைத் தமிழ்த் தேசியம் ஆகும். பெரியாரின் வாழ்வின் சாரமாகப் பெறப்படுவது சாதி ஒழிப்பு. எனவே, பெரியாரும் தமிழ்த் தேசியமும் ஒன்றுபடும் புள்ளி சாதி ஒழிப்பு அரசியலாகும். தமிழ்த்...

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக...

சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

இன்றைய கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி. பாலக்காட்டுக்கு அருகே உள்ள கல்பாத்தி, பார்ப்பன வைதீகத் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கல்பாத்தி, ‘அக்ரகாரங்களில்’ குடியிருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஈழவர்கள் நடக்கவும், அவர்கள் ‘தேர் ரதம்’ வருவதற்கும் தடை விதித்திருந்தனர். இந்தத் தடை அரசாங்கத்தின் தடையாகவே இருந்தது என்பது இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்தத் தடையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜூலு நாயுடு – அவர் ஆசிரியராக இருந்த ‘தமிழ்நாடு’ நாளேட்டில் தலையங்கம் தீட்டினார். அப்போது சென்னை மாகாணத்தை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், இந்தத் தடையை நியாயப்படுத்தினார். தீண்டப்படாத சமூகத்தினரான ஈழவர்களும் அவர்களின் கோயில் தேரும் அக்ரகாரத்தில் வந்தால் கலவரம் வரும் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தடை போட்டுள்ளதாகவும் கூறினார். இதை எதிர்த்து அன்றைய சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி,...

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையிலிருந்து – “பகுத்தறிவாளர் பார்வையில் பெரியார், பெண்கள் பார்வையில் பெரியார், தலித்துகள் பார்வையில் பெரியார், இசுலாமியர் பார்வையில் பெரியார் – என தலை சிறந்த தலைப்புகளில் பலர் பேசியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்ததல்ல இயல்பாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால், பெரியார் ஒரு இசுலாமியர் அல்ல; ஆனால், இசுலாமியர்களின் தலைவர். பெரியார் பெண் அல்ல; ஆனால், பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல; ஆனால், தலித்துகளின் தலைவர் என்பதை உணர்த்துகின்ற மேடையாக இந்த மேடை அமைந்திருக் கின்றது. இதை வேறு எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியாது. பெரியார்தான் ஒடுக்கப்பட்ட,...

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

கடும் மழையில் தமிழகம் தத்தளிக்கிறது; வெள்ளப் பாதிப்புகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; அரசு நிவாரணப் பணிகள் படுமோசமாகி விட்டதால், தங்குமிடம் உணவு இன்றி மக்கள் பரிதவிக்கின்றார்கள். ஆனால், மக்கள் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஸ்ரீரங்கம் கோயிலில் ‘கும்பாபிஷேக’ வேலைகளும், யாக சாலை பூஜைகளும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஊரே வெள்ளத்தில் தவிக்கும்போது, பூணூல் மேனியுடன் வைதிகப் பார்ப்பனர்கள் 28 வெள்ளிக் குடங்களில் ‘புனித நீர்’ கொண்டு வருவதையும், யாக சாலைகளில் பார்ப்பனர்கள் பல்வேறு யாக குண்டங்களில் உணவுப் பொருள்களை தீயில் போட்டு பொசுக்கி தொடர்ந்து பல நாள் யாகங்கள் நடத்துவதையும் ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் படங்களுடன் செய்தி வெளியிட்டு குதூகலிக்கின்றன. பெரியார் முழக்கம் 19112015 இதழ்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மணக்குப்பம். இக்கிராமத்தின் இளைஞர்கள் தாங்களாகவே ‘பெரியார் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களைத் திரட்டி, பெரியார் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தனர். பின்னர், ‘இளம் திராவிடர்’ என்ற பெயரில் இயங்கும் இணையதளக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகத் தோழர் செந்தில் வழியாக பேரவையை வழி நடத்திய ஆனந்த் பெரியார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டார். மணக்குப்பம் கிராமத்தில் இளைஞர் களைத் திரட்டி, ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, ‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைத் தொடங்க முடிவு செய்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு உதவிட விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கரு. அசுரன், முழக்கம் உமாபதி, எப்.டி.எல். செந்தில் ஆகியோர் முன்கூட்டியே மணக்குப்பம் சென்றனர். கடும் மழை காரணமாக நிகழ்ச்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. மணக்குப்பம் தோழர்கள் கிராமத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கூட்டத்தின்...

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது. நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...

திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?

திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?

கருநாடக மாநில அரசு திப்பு சுல்தானுக்கு அரசு விழா எடுத்ததை சகித்துக் கொள்ள முடியாத மதவாத சக்திகள் நடத்திய கலவரத்தில் இரண்டு பேர் பலியாகி விட்டனர். நடிகர் ரஜினிகாந்த், திப்பு சுல்தானாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், பார்ப்பனர்கள் இல.கணேசனும், இராம. கோபாலனும், ரஜினிகாந்தை நடிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். திப்பு சுல்தான் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? தனது தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து, 1782இல் 29 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்து, மைசூர்ப் போரில் வீரமரணம் எய்தியவன் திப்பு சுல்தான். பிரிட்டிஷ் ஆட்சியை தனது படை வலிமையால் நடுங்க வைத்தவன். 1791இல் சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான சாரதா கோயிலை மராட்டியப் படை கொள்ளையடித்து, 17 இலட்சம் மதிப்புள்ள கடவுள் சிலை, நகைகளை வாரிச் சென்றது. அப்போது சிருங்கேரி மடத்தின் பார்ப்பன சங்கராச்சாரி சச்சிதானந்த பாரதி உயிர் தப்பி,...

அந்தோ! பெரியார் சாக்ரடீஸ் முடிவெய்தினாரே!

அந்தோ! பெரியார் சாக்ரடீஸ் முடிவெய்தினாரே!

சுயமரியாதை வீரர் காரைக்குடி என்.ஆர். சாமியின் பேரனும், தோழர் சாமி. திராவிட மணியால் கொள்கை ஊட்டி வளர்க்கப்பட்ட அன்பு மகனுமான பெரியார் சாக்ரடீஸ், சென்னையில் மே 3 ஆம் தேதி சாலை விபத்தில் தலையில் அடிபட்டு 12 ஆம் தேதி மரணமடைந்தார் என்ற செய்தி சொல்லொண்ணா வேதனையில் ஆழ்த்துகிறது. திராவிடர் கழகத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றிய துடிப்பான இளைஞர். தமிழ்நாடு அரசின் ‘தமிழரசு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ பத்திரிகைகள் பொறுப்பையும் ஏற்றார். ‘உண்மை’ இதழை வெகு மக்கள் படிக்கும் வகையில் உள்ளடக்கத்தை மாற்றிக் காட்டியவர். கழகம் என்ற எல்லை கடந்து, பெரியாரியல்வாதிகளிடம் தோழமை பேணியவர். கலை-இலக்கியவாதி களிடம் தோழமை பேணி, திராவிடர் கழக மேடைக்குக் கொண்டு வந்த சிறந்த மக்கள் தொடர்பாளர். ‘மணிமகன்’ என்ற பெயரில் கட்டுரைகள் எழுதியவர். சுறுசுறுப்பும் துடிப்பும், பத்திரிகை அனுபவமும் நிறைந்த பெரியார் இயக்க இளைஞர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். திராவிடர் விடுதலைக் கழகம், இந்த...

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின. இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய...

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

பெரியரின் வாழ்க்கைத் துணையாகவும் அவரது காங்கிரஸ் கால போராட்டங்களான கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் ஆகியவற்றில் ஏராளமான பெண்களையும் உடன் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி ஆவேசமாகப் போராடிய கொள்கைத் துணையாகவும் விளங்கியவர் நாகம்மையார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தி லும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு உணவும், உபசரிப்பும் கொடுத்துப் பேணிய தாயாகவும், பல சுயமரியாதை, சாதிமறுப்பு, மறுமணங்களை முன்னின் றும், தலைமையேற்றும் நடத்தியும் பெரியாருக்கு கொள்கைத் துணைவராக விளங்கியவர் அவர். அவர் 11-5-1933 அன்று இறந்து போனார். அதற்கு அடுத்த நாளே திருச்சிக்கு புறப்பட்டுப் போய், 144 தடை உத்திரவையும் மீறி, கிருத்துவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக கைது செய்யப்பட்டாலும், இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் என்று பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கூறுகின்றன. அவ்வாறு பெரியார் தலைமையில் மணம் முடித்துக் கொண்ட அந்த கிருத்துவ இளைஞர் எம்.ஏ.சவுந்திர ராஜன். 46 ஆண்டுகள் கழித்து 27-5-1979...

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

டெல்லியில் அதிகார மய்யங்களில் அதிகார சக்திகளாக செயல்பட்ட பார்ப்பன உயர்ஜாதி அதிகாரக் கும்பல், ஆட்சி மாற்றம் வரப் போவதை உணர்ந்து, உலக வங்கி, சர்வதேச நிதியம், வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் பதவியை உறுதி செய்து கொண்டுள்ளன. அதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 9, 2014) வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அமைச்சகங்கள் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்கள், கூடு தாவும் பறவைகளாகி விட்டனர். உதாரணமாக, பிரதமரின் தனிச் செயலாளராக இருந்த இந்து சேகர் சதுர்வேதி, இப்போது வாஷிங்டனில் அய்.எம்.எப். எனும் சர்வதேச நிதியத்தில் ஆலோசகர் பதவிக்குப் போய்விட்டார். அன்னிய முதலீட்டு ஆலோசனை துறையின் கூடுதல் செயலாளராக இருந்த அஞ்சலி பிரசாத், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் தூதர் பதவிக்குப் போய்விட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செய்தி தொடர்பாளராக இருந்த நீலம் கபூர், லண்டனில் உள்ள நேரு மய்யத்தில் முக்கிய...

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்! கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு...

வினா-விடை!

வினா-விடை!

சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியி லிருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறுகிறார்கள்.      – மோடி ஆகவே, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிய இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி மோடி தனது சுயமரி யாதையைக் காப்பாற்ற உறுதி ஏற்பாராக! உச்சநீதிமன்றம் ‘ஜல்லிக் கட்டு’ தடை செய் துள்ளது குறித்து – கருத்து கூற விரும்பவில்லை.                 – கி.வீரமணி நியாயமான பேச்சு. அது குறித்து காளைகள் தானே கருத்து கூற வேண்டும். அவைகளின் கருத்துரிமையை நாம் பறிப்பது நியாயம் அல்ல. உடுப்பி கிருஷ்ண மடத்தில் ‘பிராமணர்’களுக்கு தனி இடத்தில் சாப்பாடும் போடும் ‘பங்கி பேதா’ முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.  – செய்தி ‘ஓசி’ சாப்பாடுன்னாலும் ‘ஆச்சாரத்தை’ விட்டுடப்படாது, ஓய்! புகாரி, அஞ்சப்பர், பொன்னுசாமி ஓட்டல்களிலும் ‘பிராமணர்’ களுக்கு தனி இடம் கேட்டு ‘குல தர்மத்தை’க் காப்பாத்துங்கோ! அண்ணா உயிரியல்...

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம் “ தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீஜென்சி ஹோட்டலில், 11.5.2014 காலை 11 மணிக்கு நடைபெற்றது ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்டரீதியானப் பாதுகாப்பு வழங்குவது ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய் யும்போது, ஏற்படும் இடர்ப்பாடு களைக் களைய உதவுவது ஜாதி, மதமறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு “ஜாதியற்றோர்” என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய, விண்ணப்பித்த 30 நாட்கள் கழித்தே பதிவு செய்யப் படும் என்ற விதி இருப்பதால், பதிவுக்குள் இணையருக்கு உறவினர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படுவற்கு உள்ள வாய்ப்பைத் தடுக்க, மதத்துக்குள் நடக்கும் திருமணங்களைப் போல உடனே...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணிக்கு பா.ஜ.க. போட்டி பேரணி – செய்தி எதிர்ப்புகளை சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறாங்க, போல! நீதிமன்றத்தில் தமிழ் உரிமைக் கோரிய போராட்டத்தினால் நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல்துறைக்கு பதில் – மத்திய போலீஸ் படை வருகிறது. – செய்தி நீதிமன்றத்துக்குள் மட்டுமல்ல; நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் தமிழுக்கு இடமில்லை. இனி இந்திக்கார போலீஸ்தான்! வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்ய வரும் ஏழைகளிடம் இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் மோசடி நடக்கிறது. – ‘தினமலர்’ செய்தி ஆனா, முருகனுக்கு இடைத் தரகர்களாக இருக்கும் அர்ச்சகர்கள் மோசடிப் பற்றி மட்டும் பேச மாட்டீங்க. ஆர்.எஸ்.எஸ். சீருடையில் மாற்றம். இனி மூத்தவர்களுக்கு முழுக்கால் சட்டை. – செய்தி ஆக, முழுக்கால் சட்டையை ‘பாரத கலாச்சாரமாக’ ஒத்துக்கீட்டீங்க… பெரிய புரட்சி தான்! பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள். – தேர்தல் பிரச்சாரத்தில்...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை மே மாதம் முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எல்.ராஜா என்பவர் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். (நவம்.4, 2015) அதில், “அர்ச்சகராவதற்கு மதம் குறித்த சடங்குகள் – ஒழுக்கமுமே முக்கியம். ஜாதி முக்கியமல்ல. ஆகம அடிப்படையிலான கோயில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆவதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்க வில்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம். பார்ப்பனர்கள் – பார்ப்பன அமைப்புகள் – இராம கோபாலன்கள் – சங்கராச்சாரியர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்களா? பெரியார் முழக்கம் 12112015 இதழ்

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜி ஜீ மாட்டிறைச்சிக்கு தடை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்; ஆனால், புத்த மார்க்கத்தைத் தழுவியவன்” என்று. டெல்லியில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட் டார். “குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் குளிரை சமாளிக்க புரதச் சத்துள்ள மாட்டிறைச்சியைத் தான் சாப்பிட முடியும். இதனால்தான் இந்தப் பகுதிகளில் இராணுவ வீரர்களுக்கு கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப் படுகிறது. அதுவும் மாட்டிறைச்சி வேண்டாம் என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சியிலேயே வழங்கப்படுகிறது. எனது மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெரும்பாலான மக்களின் உணவு மாட்டிறைச்சிதான். எனவே மாட்டிறைச்சிக்கு தடைபோட முடியாது” என்று கூறியுள்ளார். பெரியார் முழக்கம் 12112015 இதழ்

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

கத்தோலிக்கர்கள் மிரட்டலை சந்தித்த ‘குடிஅரசு’

கத்தோலிக்கர்கள் மிரட்டலை சந்தித்த ‘குடிஅரசு’

15-05-2014 ஆம் நாளிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் 14-05-1933 அன்று பல தடைகளை மீறி, பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட தோழர் எம்.ஏ.சவுந்தரராஜன், 27-05-1979 இல் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்பு வெளி வந்துள்ளது. ‘குடிஅரசு’ ஏட்டின் பதிப்பாளராய் இருந்துவந்த நாகம்மையார் 11-05-1933 அன்று காலமாகிப் போனதால், புதிய பதிப்பாளரின் பெயருக்கு பத்திரிக்கையை மாற்றுவதற்காக அந்த இதழோடு (மாலை-9; மலர்-3) ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டது. பெரியாரின் தங்கை சா.ரா.கண்ணம்மாள் அவர்கள் பதிப்பாளராக பதியப் பெறுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த ‘குடிஅரசு’ இதழ் ( மாலை-9; மலர்-4 ) 16-07-1933 அன்று தான் வெளிவந்தது. அவ்விதழின் 9ஆம் பக்கத்தில் “கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை இங்கு வெளி யிடுகிறோம். “எவனெழுதினாலென்ன?” என்ற புனைப் பெயரில் இக்கட்டுரை வெளி வந்துள்ளது. திருச்சியில் மே மாதம் 14 –ந் தேதி நடந்த ஒரு சுயமரியாதைத் திருமணத்தை முன்னிட்டு தோழர்...

‘நோக்கியா’ சுரண்டலுக்கு துணை போகும் ஆட்சிகள்

‘நோக்கியா’ சுரண்டலுக்கு துணை போகும் ஆட்சிகள்

இந்தியாவில் அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித் துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத் துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின் குறியீடாக இங்கு உருவகப்படுத்தப் பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச் சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம் வாரியிறைக்கப்படு கிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப் பாடற்ற சுதந்திர போக்கு மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படு கிறது. இவர்களின் எதிர்பார்ப்பின்படி இம் முதலீடுகள் நாட்டை வளமாக்க வில்லை. மாறாக இந்திய அரசு அளிக்கும் அத்துனை சலுகைகளை யும் அனுபவிப்பதோடு, சட்ட விரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக் கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன விவகாரங்களை கொண்டே விளங்க முடியும். தமிழக அரசின் ஒப்பந்தம் ஏப்ரல் 2005இல்...

பெண்கள் – பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

பெண்கள் – பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் வித்தோபா கோயில் வழக்கில் பார்ப்பனர் களல்லாத தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “பார்ப்பனர்” மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக் கூறப்படும் இந்நகரில் உள்ள கோயிலின் வரலாற்றிலேயே முதன்முதலாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பழமையான ஆண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. வித்தல் (உ)ருக்குமணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது இரு நூற்றாண்டுகளாக பார்ப்பனர் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய...

தலையங்கம் : அதிகார மாற்றம்

தலையங்கம் : அதிகார மாற்றம்

‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் – இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இது. இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார். நாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான். பார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன. இந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு...

வினா-விடை!

வினா-விடை!

நாட்டை தூய்மைப்படுத்தும் பணியை வாரணாசி யிலிருந்து தொடங்குவோம்.  – மோடி நேர்மையான பேச்சு; உலகிலேயே அதிக சுகாதாரக் கேடு கொண்ட நகரம் அது தானே! எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட பெறாமல் காங் கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.        – செய்தி இருக்கலாம். ஆனால், காங்கிரசையே கலைக்கச் சொன்ன காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்களே! இது சாதனை தானே? தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு களின் சதவீதக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   – செய்தி இது யாருக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ‘வெற்றிக் கூட்டணி’க்கு கணக்குப் போடுவதற்கு தோழர் தமிழருவி மணியனுக்கு நிச்சயம் பயன்படும். தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையீட்டை எதிர்த்து வெற்றி பெற்ற தீட்சதர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தில்லை காவல் நிலையத்தில் புகார்.  – தினமலர் செய்தி இதுக்கு மட்டும், அரசு தலையிடு வேண்டுமா? தில்லை நடராசனிடம் நேரடியாக ‘பாதுகாப்பு’ அர்ச்சனை செய்ய வேண்டியது தானே? பெரியாறு அணை நீர் மட்டத்தை கேரள...

குமரியில் மதம்; தர்மபுரியில் ஜாதி – தேர்தல் குறித்த சில தகவல்கள்:

குமரியில் மதம்; தர்மபுரியில் ஜாதி – தேர்தல் குறித்த சில தகவல்கள்:

மொத்த வாக்குகளில் 31 சதவீதத்தைப் பெற்ற பா.ஜ.க. 282 தொகுதிகளையும் 19.3 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 44 தொகுதிகளையும் கைப்பற்றி யுள்ளது. தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 43.3 சத வீதத்தைப் பெற்றுள்ள அ.இ.அ. தி.மு.க. 37 இடங்களைக் கைப்பற்றி யது. 23.6 சதவீத வாக்குளை பெற் றுள்ள தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முஸ்லிம்கள் – 19 சதவீதம் இருந்தும், போட்டியிட்ட 55 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. முஸ்லிம் ஓட்டுகளை பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துக் கொண்டதே இதற்குக் காரணம். 428 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 7 தொகுதிகளில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவர்கூட வெற்றி பெறவில்ல. பா.ஜ.க.வில் வெற்றி பெற்ற 282 பேரில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. இந்தத்...

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

நாகம்மையார் மறைவு ; கிறிஸ்துவ திருமணம் ; நிலவிய சூழல்: 15-05-2014, 22-05-2014 ஆகிய நாள்களிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நாகம்மையார் மறைவு – அடுத்து தடையை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் – அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது’ என்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம். இவை தொடர்பான வேறு சிலவற்றையும், அதாவது அந்த நாட்களில் நிலவி வந்த சமூக, அரசியல் சூழல்களையும் சற்று நோக்குவோம். அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கில அரசு சில ஆண்டுகளாகவே பொதுவுடைமைக் கருத்துப் பரவலுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடங்கியிருந்தது. 1929 ஆம் ஆண்டே எஸ்.ஏ.டாங்கே, அதிகாரி, தேசாய் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 32 பேர்கள் மீது “இந்தியாவில் பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க” சதி செய்ததாக வழக்குத் தொடுத்திருந்தது. “மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு” என்று அறியப்பட்ட அவ்வழக்கு ஏறத்தாழ நான்காண்டுகள் நடைபெற்று, அவ்வழக்கில் இருந்தோரில் 5 பேர்களை விடுதலை...

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

“இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற தமிழ்ப் படுத்தப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா, ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கில் 11.5.2014 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஆவணப்படத்தை வெளியிட, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கி.வேபொன்னை யன் தலைமை வகித்தார். இலங்கைக்குச் சென்று ஆவணப் படத்தை எடுத்த 23 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனுக்கு தோழர் கண.குறிஞ்சி சிறப்பு செய்தார், மகா. தமிழ்ப் பிரபாகரன் ஏற்புரை வழங்கினார்.

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

‘நெல்லை தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஐந்திணைத் தொண்டு நிறுவனமும், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்தபோது ஆற்று மணலில் புதையுண்டுக் கிடந்த சுமார் 125 டன் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் வீசி எறிந்தவை. இதில் பட்டுச் சேலை, வேட்டிகளே அதிகம். இதுபோன்ற அழுக்குத் துணி மற்றும் பூஜைப் பொருட்களால் ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி, சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு பிற உயிரினங்கள் வாழ லாயக்கற்றதாகப் போய் விட்டது. நீரின் மேல் எண்ணெய்ப் படலம் தேங்கி நிற்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன், தவளைகள் அழிந்து போகின்றன. தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்த பாட்டில்களால் தினமும் பத்து பேருக்காவது ரத்தக் காயம் ஏற்படுவது தவிர்க்க...

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

இந்தியாவில் ‘தூக்குத் தண்டனை’யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த மே 23 ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தூக்குத் தண்டனைக் குறித்து விரிவான ஆய்வுகள், விவாதங்கள் தேவை. இந்த விவாதங்களும் ஆய்வுகளும் சட்டத்தை உருவாக்குவோருக்கும் நீதித்துறைக்கும் பயன்பெறத்தக்க வகையில் உதவிட வேண்டும். தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகி வரும் சர்வதேசப் போக்கினைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, இந்த தண்டனையை வழங்குவதில் ஒரே சீரான அணுகுமுறை மேற்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட ஆணையம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது. கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் செய்வது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற...

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!:- 45 அமைச்சர்களுடன் (23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள்) மோடி பிரதமராக மே 26 அன்று பதவி ஏற்றார். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட  ‘கேபினட்’ அமைச்சராகவில்லை. வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க. வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகியுள்ளார்.  திருச்சியில் படித்து, டெல்லியில் தங்கிவிட்நிர்மலா சீதாராமன் (பார்ப்பனர்) தேர்தலில் போட்டியிடாமலேயே இணை அமைச்சராகி விட்டார்.  சுஷ்மா சுவராஜ், மேனகா, நஜிமா ஹெப்துல்லா, ஹர்ஸ்மிரத் கவுர் பதல், உமாபாரதி, ஸ்மிருதி ராணி என 6 பெண்கள் கேபினட் அமைச்சர்களாகி யுள்ளனர்; மேலே குறிப்பிட்பெண் இணை அமைச்சர்.  பா.ஜ.க. வைச் சார்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க, அமைச்சராக இருந்தபோது அன்புமணி அனுமதித்ததற்காக அவர் மீது சி.பி.அய். வழக்கு உள்ளது. அதன் காரணமாகவே பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது....

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

22-05-2014 வியாழக்கிழமை மாலை 6-00 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூர்த் தமிழ்ச் சங்க கட்டிடம், திருவள்ளுவர் அரங்கில் மறைந்த, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கர்நாடகத் தமிழர்ப் பேரவையின் தலைவருமாகிய திரு பா.சண்முகசுந்தரம் (எ) அண்ணாச்சி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மறைத்திரு பா.சண்முகசுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் “அண்ணாச்சி சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மலரை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். காவேரிக் கலவரம், தொடர்வண்டித் துறையினரின் நிலம் கையகப்படுத்துதல், தலைமுறைக் கணக்காய் வாழ்ந்தோரை வனத்துறையினர் விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளில் கருநாடகத் தமிழரின் உரிமை காக்க முன் நின்றவரும்; ஈழ விடுதலை ஆதரவாளரும்; விடுதலைப் புலிகளின் தோழருமான அண்ணாச்சி அவர்களை நினைவு கூர்ந்து, பலரும் உரையாற்றினர். கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்: கொளத்தூரில்...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப் பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கி யிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறிய மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இ ஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன்...

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.5.2014 சனிக் கிழமை மாலை 4 மணியளவில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.வெற்றிவேல் முன்னிலை வகிக்க, அறிவியல் மன்ற செயலாளர் சி.ஆசைத் தம்பி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, ந. வெற்றிவேல், மதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், வி.வி.மு. பொருப் பாளர் இராமலிங்கம், கழக வழக்கறிஞர் துரை அருண், க. இராமர், பழங்குடியினர் பாதுகாப்பு முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். 1952இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் ஆறரை லட்சம் பேர், 2014-லும் அதே ஆறரை லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அதனால் இவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்...

தலையங்கம் : கள்ள மவுனம்! 0

தலையங்கம் : கள்ள மவுனம்!

19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்

வினா-விடை!

வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு. 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது! அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்! தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்...