குடியுரிமைச் சட்டங்களால் ஆபத்துகள் இல்லையா?
குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் நோக்கத்தை சங்கிகளே இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பீகாரின் வடகிழக்குப் பகுதியில் பரப்புரை செய்தபோது, “1947க்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரியபோதே இங்கிருந்து முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் அங்குள்ள இந்துக்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்திருந்தால் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்று பேசியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க. அமைச்சரவையிலேயே இடம் பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிரங் பஸ்வான் (பஸ்வானின் மகன்), பீகாரில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார், கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தானி சுவான் மோட்சா (மதச் சார்பின்மை) கட்சியின் தலைவர் கண்டனம் தெவித்திருப்பதோடு, கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கமே இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவது தான் என்ற...
