Category: பெரியார் முழக்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜூலை 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜூலை 2018 இதழ்

தலையங்கம்-ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் ‘தலித்’துகளை புறக்கணிக்கும் கிரிக்கெட் வாரியம் ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறல்- ஒரு விரிவான அலசல் தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் – அய்.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 09082018 இதழ்

மேட்டூர் பகுதியில்  விளக்கக் கூட்டங்கள்

மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பரப்புரைப் பயணத்துக்கு  கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

பரப்புரைப் பயணத்துக்கு கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 03.08.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் வரும் ஆக°ட் 20 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் “கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின்” நோக்கத்தை குறித்தும், பயணத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செய லாளர்) ஒருங்கிணைத்தார். ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு தனசேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர்) மற்றும் கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை கூறினர். இறுதியாக தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

பா.ஜ.க. தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கட்சியின் தேசிய மாவட்ட நிர்வாகிகள் பார்ப்பன-பனியா உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவினர்களிடமே இருக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்சாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளையும் இவர்கள் பின்பற்று கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. பாஜக உருவாகி 38 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அக்கட்சி பொறுப்பில் இன்றளவிலும் முன்னேறிய சமூகத்தினரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. குறைந்த அளவில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளவில்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் பொறுப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன கட்டமைப்பு குறித்த ஒரு...

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் ஆறாவது சந்திப்பு, 30.07.2018 அன்று மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் இமானுவேல் துரை, ‘யோகக் கலை’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் மற்றும் ‘திராவிடர் இயக்க சாதனைகள்’ குறித்து ஜெயபிரகாஷ் ஆகியோர் விரிவாகப் பேசினர். ‘நிமிர்வோம்’ டிசம்பர் 2017 மற்றும் சனவரி 2018 மாத இதழ்களை குறித்தும் தங்களது கருத்துகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு சிறப்புரையாற்ற வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “கலைஞரின் 50 ஆண்டு கால வரலாறு” குறித்து தனது ஆழமான கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன். அவர் தலைமையில் 1948இல் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். அனைவருக்கும் தரமான உயர் கல்வி என்ற இலக்கோடு 1956இல் பல்கலைக்கழக மானியக் குழுவாக (யு.ஜி.சி.) அது சட்டபூர்வமாக நிலைபெற்றது. மாணவர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முன்வைத்த சி.டி.தேஷ்முக், மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவத் திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் ஊதியத்துக்கு யூ.ஜி.சி.யின் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். இப்படிக் கல்வியாளர்களாலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் யு.ஜி.சி. ஆனால், தற்போது அது கலைக்கப்பட விருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn டிக ஐனேயை – ழநுஐ) என்ற புதிய கல்விக் கழகம் வரப்போகிறது. அப்படியானால் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரி களுக்கும் தொடர்பில்லாதவர்கள் இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்க உரிமைகொண்டவராவர். கோரிக்கையின் தொகுப்பு இந்திய உயர்கல்வியின்...

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

திருப்பூர் அருகே திருமலை கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பாப்பாள், உள்ளூர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பால் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு – ஜாதி எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து வந்தன. பிறகு மீண்டும் பாப்பாளின் சொந்த ஊரான திருமலைக் கவுண்டன் பாளையத்துக்கே மாற்றப்பட்டார். இப்போது ஜாதி வெறியர்கள் பாப்பாள் குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாக பாப்பாள் கணவர் பழனிச்சாமி, போலீ° பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். பாப்பாள் நியமனத்துக்குப் பிறகு சில ஜாதி வெறியர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மதிய உணவை பள்ளியில் சாப்பிடக் கூடாது என்று கூறி, வீட்டிலிருந்தே உணவு தயாரித்துக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்களாம். இதே போன்று, திருச்சி  புத்தூரிலிருந்து ஒரு தலித் அர்ச்சகர் சந்திக்கும் ஜாதிக் கொடுமைகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த கே.சிவசங்கரன் (34)...

விடை பெற்றார்!

விடை பெற்றார்!

1924 -2018 கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும்! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்! பெரியார் முழக்கம் 09082018 இதழ்

விடை பெற்றார் கலைஞர் !

விடை பெற்றார்  ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

மாணவர்களைவிட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். கோரக்பூர் ஐ.ஐ.டி.யில்  நடைபெற்ற 64ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: 2017இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர்.அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், மாணவர்களைவிட மாணவியர்  அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற...

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடு களுக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ. 355 கோடியே 78 லட்சம் செலவாகி இருப்பதாகவும் பிரதமர்அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந் தது. இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி, 2014 முதல் கடந்த நான்காண்டுகளில் 84 நாடுகளை சுற்றி வந்திருப்பதாகவும், இதற்காக சுமார் ரூ. ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி மொத்தம் 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை சுற்றி வந்துள்ளார். 2015-16இல் மட்டும் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2016-17இல் 18 நாடுகளுக்கும், 2017-18இல் 19 நாடுகளுக்கும் பயணம் செய்துள் ளார்.இதற்காக 2014-15இல் ரூ. 93 கோடியே 76 லட்சமும், 2015-16இல்...

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள்ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்பேரவை அலுவலகத் திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவதாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.ஆனால், மாந்திரீக பூஜையெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப் பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளைஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர்...

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பார்ப்பனரல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08ஆம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பார்ப்பனரல்லாத  ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப் படுவது இதுவே முதன்முறை. இது குறித்து இந்து சமய அற நிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு கோயிலுக் கும் ஒரு ஆகமவிதி உள்ளது. அந்தக் கோயில்களின் ஆகமவிதிகளுக்குட் பட்டே அர்ச்சகர் நியமனம் நடை பெறும். கோயில் செயல் அதிகாரி நேர்காணல் கண்டு ஆகம விதிகளுக்குட்பட்டு அர்ச்சகர்களைத் தேர்வு செய்வார்கள். எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டுதான்...

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கை யாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… தமிழக முதலமைச்சராக இருந்த சி.என்.அண்ணா துரை 1969-ல் மறைந்தார். மு.கருணாநிதி முதலமைச்சராக அடுத்து பதவிக்கு வந்தார். இந்தியை எதிர்த்தவர்கள், டெல்லிக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியவர்கள், இளைஞர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆற்றொழுக்காக அடுக்கு மொழியில் பேசுகிறவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். முந்தைய அரசுகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தங்களால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள்....

தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு முகவரிப் பட்டியலுக்குரிய முழுமையான சந்தாத் தொகையை வழங்காத தோழர்கள். மீதமுள்ள தொகையை உடனடியாக அனுப்பி உதவ வேண்டுகிறோம். இதுவரை ‘சந்தா’ சேர்க்காத தோழர்கள், ‘சந்தா’ சேர்த்து இதழ் பரவிட ஒத்துழைக்க வேண்டுகிறோம்.  – நிர்வாகி 98414 89896 பெரியார் முழக்கம் 26072018 இதழ்

உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி

உயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி

உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீசார் பசுவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அனுப்பி வைத்த சம்பவம் இராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் மேவாத் மாவட்டத்தில் உள்ள கோல்கோவான் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான் (31). இவர் தனது நண்பர் ஒருவருடன் இரண்டு பசுமாடுகளை ஹரியானாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ராம்கர் பகுதியில் உள்ள லலாவண்டி கிராமத்துக்கு வந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பசுக்களை அங்கிருந்து கடத்திச் செல்வதாக நினைத்து அவர்களை கடுமையாகத் தாக்கியது. இதில் காயமடைந்த அக்பர்கான் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உயிருக்குப் போராடிய 31 வயது இளைஞரான அக்பன் கானுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மாடுகளை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்ல முன்னுரிமை கொடுத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 12.41 மணிக்கு சம்பவம்...

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிரி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சத்துணவு சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமைக்கு எதிராகக் களமிறங்கின. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளை யத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து...

பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ

பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ

துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை குழாய்களில் இறங்கி அடைப்பைச் சரி செய்வதைத் தடுக்கவும், இதனால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்கவும் தமிழகத்தில் முதன்முறையாகக் கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சீரமைக்க ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு பரிசோதனை முயற்சியும் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008-09-ம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125 கி.மீட்டர் நீளத்துக்குக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை துப்புரவுப் பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்வார்கள். அப்போது விஷவாயுக்கள் தாக்கி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு பாதிக்கப்படுவர். இதையடுத்து பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் குழாய்களில் துப்புரவுத் தொழிலாளிகள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது....

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சைப் பதறச் செய்யும் கொடுமையை செய்த அனைவரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு கொடூர சம்பவம் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில் வதந்திகளை பரப்பி அதன் மூலம் இலாபம் அடைவதையே  தங்கள் வேலைத் திட்டமாக வைத்துள்ள காவி வெறி கும்பல் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இந்த குற்றத்தை செய்துள்ள கும்பவில் ஒருவர் என  “பால சுப்ரமணியன்” எனும் பெயர் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்கள். இந்தப் படத்தில் உள்ள நபருக்கும் எமது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் கழகத் தோழருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை. இவர் கருப்புச்சட்டை அணிந்திருப்பது போன்று காட்டி...

கடவுள் எங்கே? காட்டுங்கள் ! பிலிப்பைன்ஸ் அதிபர் சவால்

கடவுள் எங்கே? காட்டுங்கள் ! பிலிப்பைன்ஸ் அதிபர் சவால்

பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். “கடவுளை எனக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுங்கள் அல்லது கடவுளுடன் செல்பியாவது எடுத்துக்காட் டுங்கள். உடனடியாக நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொண்டு பதவி விலகி விடுகிறேன்” என்று கூறியுள்ளார். பாலினீஸிய பெருந்தீவுகளை ஒருங்கிணைத்து உருவான நாடு பிலிப்பைன்ஸ். பசிபிக் கடல் தொழில் மற்றும் குறுகியகாலப் பயிர் விவசாயம் என்று தொழில் செய்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களுக்கென்று இயற்கையான பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பரவி இருந்த புத்த மதமும் அங்கு ஒரு மதமாக இருந்தது. இவர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றக் கொள்கை வடிவிலான நம்பிக்கையான ஒன்றாகவே இருந்தது. காலனி ஆதிக்கம், அய்ரோப்பியர்களின் வருகை தொடர்ந்ததால் கிறித்துவம் மற்றும் இசுலாம் பரவியது. இருப்பினும் அந்த மதங்கள் மற்ற நாடுகளில் ஆழமாக இருக்கும் நிலையில் கடவுள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பான நம்பிக்கைகள்...

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் அக்ராவரம் கிராமத்தில் உப்ரபள்ளி ஆற்றின் அருகில் ஊரின் தெருவில் சென்றதற்காக 22.07.2018 அன்று 40 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜெயபிரகாஷ், ஜெயச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.  களத்தில் இறங்கிய கழகத் தோழர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

தாழ்த்தப்பட்ட – பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக  தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும்  2.7.2018 அன்று  திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில்  தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக   விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக்  கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால்  ஏற்படுகின்ற தீமைகள்  குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று  விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம்...

கையால் மலம் எடுக்கும் இழிவைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

கையால் மலம் எடுக்கும் இழிவைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம்-2015ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், கையால் மலம் அள்ளும் அவல நிலையைப் போக்க, அதனால் ஏற்படும் மலக்குழி மரணங்களைத் தடுக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டத்தில் சூலை 9, 2018 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி அளவில் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவை, அருந்ததியர் சனநாயக முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏஐடியூசி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சார்பில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

சென்னை, ஈரோட்டில்  காமராஜர் பிறந்தநாள் விழா

சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ்  பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது. ‘மதச்சார்பின்மை’யைப் பின்பற்றும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் சாத்தியமா என்ற கேள்வி, கடந்த பல ஆண்டுகாலமாகவே சமூக ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தக் கேள்விகளுக்கு விடை தருவதாக இந்த ஆய்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சமூக ஆய்வாளர்களிடையே இரண்டு கருத்துகள் முன் வைக்கப்பட்டு வந்தன. தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வளர மதங்களின் பல்வேறு செயல்பாடுகள் மறையத் தொடங்கிவிடும் என்று ஒரு சாரார் கூறி வந்தனர். மதத்தை நம்பிக் கொண்டு உழைப்பவர்களின் கலாச்சாரத்தால் ‘முதலாளித்துவம்’ வளர்ச்சியடையும் என்று மற்றொரு சாரார் கூறி வந்தார்கள். “மதத்துக்கும் உடைமைகளுக்கும் (சொத்து) உள்ள தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விவாதங்கள்...

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 17.7.2018 அன்று சென்னையில் தலைமைக் கழகத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தலைமைக் குழு உறுப்பினர்கள் ஈரோடு இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, பால் பிரபாகரன், கோபி. இளங்கோவன், தபசி குமரன், இரா. உமாபதி, அன்பு தனசேகரன், மேட்டூர் சக்தி, அய்யனார், சூலூர் பன்னீர் செல்வம், பாரி சிவக்குமார், பரிமளராசன் ஆகியோர் கலந்து  கொண்டனர். கழக செயல்பாடுகள், கட்டமைப்பு நிதி, கழக அமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. ‘தமிழர் கல்வி உரிமைப் பயணம்’, பரப்புரை இயக்கத்தை ஆகஸ்டு 20 தொடங்கி 26இல் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. குடியாத்தம், கீழப்பாவூர், மேட்டூர், திருப்பூர், சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு பெரம்பலூர் நோக்கிப் புறப்படும். பெரம்பலூரில் ஆக.26இல் மாநாடு நிறைவு விழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 26072018 இதழ்

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...

தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்குக் கொட்டிய ஜாதி வெறியர்கள்

தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்குக் கொட்டிய ஜாதி வெறியர்கள்

பள்ளியில் சமைத்த மதிய உணவை தலித் மாணவி தொட்டு விட்டதாகக் கூறி அதனை நாய்க்குக் கொட்டிய அராஜகம் நடந்துள்ளது. இராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர் கமலா வைஷ்ணவ், தலித் மாணவியை மிக மோசமான முறையில் திட்டி அவமானப்படுத்தியதுடன், தலித் மாணவி தொட்ட உணவு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, உணவு முழுவதையும் நாய்க்குக் கொட்டி யுள்ளார். பள்ளி உதவியாளரின் இந்த தீண்டாமையால் தலித் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனிடையே, மதிய உணவை நாய்க்கு கொட்டப்பட்டதை வீடியோ எடுத்திருந்த ஒருவர், அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியதால்,...

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

திருப்பூர் – கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறையில், 2017 ஜூன் 11, 12 தேதிகளில் நடத்திய பெரியார் பயிலரங்கில் வினோதினி – மணி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். முதலாம் ஆண்டு மணவிழாவின் மகிழ்ச்சியாக பெரியாரியல் பயிலரங்கை நடத்த விரும்பி அதற்கு நிதி உதவி அளிக்க வினோதினி முன் வந்தார். ஏற்கனவே ஜாதி மறுப்பு திருமணம்செய்து கொண்ட கோவை கழக இணையர்கள் நிர்மல் – இசைமதி மணவிழா நாளும் ஏறத்தாழ இதை ஒட்டியே வருவதால் தோழர் நிர்மல், பயிலரங்கத்துக்கு தங்கள் மணவிழா மகிழ்வாக நிதி உதவி செய்ய முன் வந்தார். உடனே பயிலரங்கம் ஏற்பாடானது.  பொள்ளாச்சி கழகத் தோழர் வெள்ளியங்கிரி இத் தகவலை பலத்த கரவொலிக்கிடையே பயிலரங்கில் அறிவித்தார். கழகத் தோழர் கோவை நிர்மல், “இனி ஒவ்வொரு ஆண்டும் மணவிழா நாளில் இத்தகைய பயிலரங்கை வினோத்-மணி இணையருடன் இணைந்து நடத்துவோம்”...

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சி பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்புதூரில் அருள்ஜோதி உணவு விடுதி அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் ஜூலை 15, 2018 அன்று நடந்தது. 84 பேர் பயிலரங்கில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பெண்கள். பயிற்சியாளர்கள் அனைவரும் புதிதாக பெரியாரியலை நோக்கி வரும் இளைஞர்கள். பயிலரங்கைத் தொடங்கி வைத்து, மூத்த கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். 2 மணி நேரம் வகுப்பு நடந்தது. மதிய உணவைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, ‘பயிற்சி முகாம் நோக்கம்’ குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார். சுல்லிமேடு காடுப் பகுதியிலிருந்து பெரியாரியல் நோக்கி வந்துள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த...

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

“நாயக்கர் அடிக்கடி என்னைப் புகழ்ந்து  பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.  அதனால் பல பேர்கள் எனக்கு எதிரிகள் ஆகின்றனர் என்று நண்பர் திரு.வி.க.விடம் ஓமந்தூரார் கூறி அனுப்பினார்.” 1955ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழாவில் பெரியாரும் முதலமைச்சர் காமராசரும் ஒரே மேடையில்  பேசினார்கள். தமிழர் சமுதாயத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன் ‘சுயத்தை’யே இழந்து உழைத்தவர் பெரியார் என்பதை வெளிப்படுத்தும் ஆழமான உரையை காமராசர் பிறந்தநாளை யொட்டி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார் அதற்கு எனது நன்றி. திரு. காம ராசரிடம் நான்அன்பு கொண்டு, என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்துகொண்டு அவருக்குத்  தொல்லை கொடுத்து...

சிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி

சிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி

மோடியால் புதியதாக பிரசவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யால் இன்று தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான பொருட்களுக்கு 18ரூ முதல் 28ரூ வரி விதித்ததாகும், இதனால் தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தொழில் நகரமான கோவையில், சிறு, குறு தொழில்களை நடத்திவந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 20 பேருக்கு மேல் வேலையில் அமர்த்தி நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணகுமார் என்பவர் தற்போது சாலை ஓரத்தில் இட்லி விற்று கொண்டு இருக்கிறார். இதே போல் எஞ்சினியரிங் கம்பெனி வைத்து நடத்தி வந்த பாண்டியன் என்பவர், தற்போது ஒரு எஞ்சினியரிங் கம்பெனியில் எந்திரத்தை இயக்கும் கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஜி.எஸ்.டி-யால்...

அடுக்கடுக்கான முறைகேடுகள் : நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்

அடுக்கடுக்கான முறைகேடுகள் : நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை...

“தி.வி.க. பெரியார் செயலி” அறிமுகம் :  திருப்பூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

“தி.வி.க. பெரியார் செயலி” அறிமுகம் : திருப்பூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் காமராசர் 116ஆவது பிறந்த நாள் விழா, ஜூலை 15, 2018 அன்று திருப்பூர் இராயபுரம் திருவள்ளுவர் வீதியில் சிறப்புடன் நடந்தது. காலை முதல் பகுதி வாழ் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலைப் பொதுக் கூட்டம், ‘நிமிர்வு’ கலைக் குழுவின் பறை இசை நிகழ்வோடு தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட பெண், ஆண் கலைஞர்கள் பறை வரலாற்று விளக்கங்களோடு பறையிசை நிகழ்வை நடத்தியது, மக்களைப் பெரிதும் கவர்ந்தது. க. கருணாநிதி தலைமையில் சு. நீதியரசன் வரவேற்புரை யோடு பொதுக் கூட்டம் தொடங்கியது. செல்லதுரை (தே.மு.தி.க.), இராமகிருஷ்ணன், ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி உரை யாற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பகுதித் தோழர்கள் சரவணன் (தி.மு.க.), சரவணன் (ம.தி.மு.க.), சாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பேருதவி புரிந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின்...

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் –  86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும்  நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...

அமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!

அமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!

1989 – அமெரிக்க தேசியக் கொடியை, எரிப்பது முதலான அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளைக் குற்றமாகக் கருதமுடியாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1984இல்டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஒருபோராட்டத்தில் அமெரிக்க தேசியக்கொடிஎரிக்கப்பட்டது. போராட்டத்தில் யாருக்கும்காயம்கூட ஏற்படாவிட்டாலும், தேசியக்கொடியை அவமரியாதை செய்ததற்காக, எரித்தவருக்கு இரண்டாயிரம் டாலர் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன. இதை எதிர்த்தஅவரது மேல்முறையீடுகளின் தொடர்ச்சியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள, (ஒருங்கிணைதல், அரசுக்கு எதிராகப் போராடுதல் முதலானவற்றுக்கான) பேச்சுரிமைக்கு எதிரானது இத் தண்டனை என்று கூறிய இத்தீர்ப்பு, கொடி தொடர்பாக 50இல் 48 மாநிலங்களில் அப்போது இருந்த சட்டங்களைச் செல்லாததாக்கியது. இதைத் தொடர்ந்து, அவ்வாண்டிலேயே கொடி பாதுகாப்புச் சட்டம் என்பது இயற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே அதையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் இதுதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் தோற்றுப்போயின.  கொடிஎரிப்பு என்ற சொற்றொடரே, அரசுக்கெதிரான போராட்டத்தைக்குறிப்பதாக உலகம் முழுவதும் இருந்தாலும்,...

உருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்

உருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்

உருவாகாத ரிலையன்ஸ் கல்வி நிறுவனத்துக்கு,  ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனத்துக்கான’ தகுதியாம். இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் இந்தியாவி லுள்ள ஆறு உயர்கல்வி நிறுவனங்கள், உலக கல்வி தரத்துக்கு இணையான இந்தியாவின் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence)’ அறிவிக்கப்பட்டன. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (டெல்லி, மும்பை), இந்திய அறிவியல் கழகம் (பெங்களுர்), பிலானியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கழகம் (1964), மணிபால் உயர்கல்வி அகாடமி (1953) என குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு கால உயர்கல்வி பயிற்சி அனுபவ முடைய கல்வி நிறுவனங்களோடு, இன்னும் உருவாக்கப்படாத ரிலையன்ஸ் ஜியோ கல்வி நிறுவனத் துக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவன அந்தஸ்தை இணைத்து வழங்கி யிருக்கிறது இந்திய அரசு. கடந்த 2016ம் ஆண்டைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்து அரசு கல்வி நிறுவங்கள், பத்து தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைகளுக்கு...

கோலாலம்பூரில் பகுத்தறிவு கருத்தரங்கு

கோலாலம்பூரில் பகுத்தறிவு கருத்தரங்கு

மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பெரியார் அரங்கில் 8.7.2018 ஞாயிறு மாலை மூன்று மணி அளவில் ‘பகுத்தலும்-புகுத்தலும்’ என்ற தலைப்பில் மாண வர்கள் மற்றும் இளை ஞர்களுக்கான கட்டண மில்லா கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வரவேற்புரை வழங்கினார், நெறியாளர் சி.மு.விந்தைக்குமரன். எப்.காந்தராஜ் (மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர்) தொடக்க உரை நிகழ்த்தினார்.  கெ.வாசு (துணை தலைவர், மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்) தலைமையேற்றார். மரு.கிருட்டிணன், பாரி சுந்தரம், செம்பியன், பட்டுக்கோட்டை கவிமணி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள். மு.முகிலன் நன்றி உரை நிகழ்த்தினார்.  இதுபோன்ற கருத்தரங்கம் நாடளாவிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று  தொகுப்புரை வழங்கிய, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி கூறினார். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் தீர்ப்பைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து, ஜூலை 2 ஆம் தேதி திங்கள் கிழமை  நடத்திய ரயில் மறியல் போராட்டம், நாமக்கல் ரயில் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு, பள்ளாளையம் நகர அமைப்பாளர் தியாகு மற்றும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி

பார்ப்பன அதிகாரிகள் நிர்வாக ஒழுங்கீனம் – ஊழல்களால் நலிவடையும் பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்ற ஏழை எளிய மக்கள் முதலீடு செய்யும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.அய்.சி.) குலைக்கும் முயற்சிகளில் நடுவண் ஆட்சி இறங்கியுள்ளது. நாட்டின் நிதி நிலைமை மோசமாகும்போதும், பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போதும், எல்ஜசி நிறுவனத்தின் அதீதமுதலீடு மூலம், அந்த பாதிப்பு சரிக்கட்டப்பட்டு வருகிறது. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால், மோடிஆட்சியில் இது அதிகமாகி இருக்கிறது.அந்த வகையில், தற்போது குடைசாய்ந்து நிற்கும் ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகித பங்குகளையும், பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியிடம் தள்ளிவிடும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது, எல்ஐசியிடம் இருந்து ரூ. 13 ஆயிரம் கோடியை பிடுங்கி, ஐடிபிஐ வங்கிக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சாமானியர்கள், தங்களின் குடும்பத் தைக் காப்பாற்ற மாதந்தோறும் நூறும், ஆயிரமுமாய் எல்ஐசி-யின் காப்பீட்டுத் திட்டங்களில்...

கவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது? சங்பரிவார் கும்பல் சதி அம்பலமானது

கவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது? சங்பரிவார் கும்பல் சதி அம்பலமானது

கர்நாடக இதழியலாளரும் முற்போக்கு சிந்தனையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் 05.09.2017 அன்று படுகொலை செய்யப்பட்டார். சில சங்பரிவார ஆதரவு இதழ்கள் இது தனிப்பட்ட விரோதம்காரணமாக நடந்த கொலை என்றனர். இன்னும் சிலர் இது நக்சலைட்டுகளின் செயல் என திசைத் திருப்ப முயன்றனர்.தற்பொழுது 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அனைவரும் சங்பரிவார அமைப்பினர். எனினும் இவர்கள் சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை மிகவும் திட்டமிட்டு மறைப்பது மட்டுமல்ல; கொலை செய்ய இவர்கள் தீட்டிய திட்டம் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறியும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கீழ்கண்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: படுகொலையை அரங்கேற்றியவர்கள் : பரசுராம் (சிறீராம் சேனா), வாக்மோர், நவீன் குமார் (இந்து யுவசேனா ஸ்தாபகர்), சுஜித் குமார் (இந்து ஜனசகுர்த்தி சமிதி), அமோல் காலே (சனாதன சன்ஸ்தா), மனோகர் (சிறீராம் சேனா எடாவே), பிரதீப் (சனாதன சன்ஸ்தா) காவல்...

இராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்

இராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்

இயக்குனர் ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’ திரைப்படம் பம்பாய் ‘சேரிப் பகுதி’ மக்களின் குடியிருப்பையும் நிலங்களையும் பெரும் தொழில் நிறுவனம் அரசியல் அதிகாரத்தோடு கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் நடக்கும் போராட்டத்தை ‘இராம-இராவண’ப் போராட் டத்தின் பின்புலத்தில் சித்தரித்தது. பெரும் முதலாளி இராமர் பஜனை செய்வார்; மக்களுக்காகப் போராடும் ‘காலா’, ‘இராவண காவியம்’ பேசுவார். தமிழ் ஊடகங்கள் இப் பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டு வரா மல் பதுங்கி விட்டாலும் பல தெலுங்கு தொலைக்காட்சிகளில் இது குறித்து விவாதங்கள் நடந்தன. அண்மைக்காலமாக கடவுள் மதத்தை மறுக்கும் நாத்திகராக தன்னைத் துணிவுடன் வெளிப்படுத்தி வரும் தெலுங்கு ஆவணப்பட இயக்குனர் ‘கத்தி’ மகேஷ், இந்த விவாதங்களில் பங்கேற்று ‘இராம’னுக்கு எதிராகப் பேசினார். சங்பரிவார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் தந்தன. உடனே அய்தராபாத் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. கடந்த 2018 ஜூலை 8ஆம் தேதி இரவு அவரை கைது செய்ததோடு 6 மாதங்களுக்கு...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் பார்ப்பனியம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் பார்ப்பனியம்

அமெரிக்காவில் கறுப்பர்கள், ஆசியர்கள், தென் அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த ‘ஹிஸ்பெனிக்ஸ்’ எனும் பிரிவினருக்கு தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் ‘பாகுபாடு’ காட்டாமல், பணி உறுதியாக்கம் (ஹககசைஅயவiஎந ஹஉவiடிn) செய்யும் சட்டம் நீண்டகாலமாக அமுலில் இருந்து வருகிறது. இப்போது நிறவெறியுடன் நடக்கும் ‘டிரம்ப்’ ஆட்சி வெள்ளை நிறவெறியர்களின் அழுத்தத்தை ஏற்று, ‘பாகுபாடு ஒழிப்பு’ சட்டத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி தரும் இந்த அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்துள்ளது. மைனாரிட்டி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ‘உறுதியாக்கும் செயல்பாடு’ என்ற பெயரில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் சட்டம் 1967ஆம் ஆண்டு முதல் அங்கே அமுலில் இருந்து வருகிறது. கருப்பின மக்களுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியை அகற்றுவதற்காக 1967இல் நியமிக்கப்பட்ட ‘ஜெர்னர் ஆணையம்’ அமெரிக்கா ஒரு தேசமாக உருவெடுக்க வேண்டுமானால் இந்த ‘பாகுபாடுகள்’ ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதனடிப்படையில்...

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

நீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப் பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில்...

தமிழக மசோதா காலாவதி…?

தமிழக மசோதா காலாவதி…?

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக,  தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நீட் தேர்வு சட்டபூர்வமாகிவிடும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடக்கும் உரிமத்தேர்வு ஒன்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இது நடைமுறைக்கு வரும்வரை, எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதியாண்டுத் தேர்வையே அகில இந்திய உரிமத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக உருவாக்கி அனுப்பிய இரண்டு சட்டமசோதாக்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந்த இரண்டு மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அதற்காகவே, உள்துறை அமைச்சகம் காலதாமதம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். பெரியார் முழக்கம் 12072018 இதழ்