நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

பெரியாரின் 41 ஆவது நினைவு நாள் கூட்டம் 1.2. 2020 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்டம்  நாச்சியார் கோவில் வடக்கு வீதியில்   மிகச் சிறப்பாக நடை பெற்றது.   மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் தலை மையிலும் தலைமைக் குழு உறுப்பினர்  இளைய ராஜா மற்றும் சோலை மாரியப்பன் முன்னிலையிலும் தொடங்கியது. கூட்டத்திற்கு, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட செயலாளர் கு. பாரி, நாகை மாவட்ட செயலாளர்  தே.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்முகமது , சிவபுரம் மாணவர் கபிலன் ஆகியோர் உரையாற்றினர் .

அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் தி.வி.க . கிளைக் கழகம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.30,000  (முப்பதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தா.செ. மணியிடம் வழங்கப்பட்டது. கழகத்  தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகவே பேச்சு நீடித்த போதும் வந்திருந்த பெருந்திரளான மக்கள் சிறிதும் கலைந்து செல்லாது அமைதியாக இருந்து செவிமடுத்தது கூட்டத்தின் சிறப்பு நிகழ்வு. நிறைவாக திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்  மா.கரிகாலன் நன்றி கூறினார் . நினைவு நாள் கூட்டத்தினை நாச்சியார் கோவில் அனைத்துக் கட்சித் தோழர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு. நாகேசுவரம், பெரியார் பற்றாளரும், ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்தி வருபவருமான தமிழ்மணியும், கழகத் தலைவரிடம் தோழர்கள் சார்பில் நிதியை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 06022020 இதழ்

You may also like...