Author: admin

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

காஞ்சி தொடர்வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படத்தை குப்பையில் வீசிவிட்டு சங்கராச்சாரி படத்தை வரைந்ததைத் தட்டிக் கேட்டு களமிறங்கிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அவர்கள் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் தஞ்சைத் தமிழன் விடுத்துள்ள அறிக்கை: 21 டிசம்பர் 2017 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தின் வாயிலில் மாட்டப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை குப்பையில் போட்டுவிட்டு அந்த இடத்தில் இந்துமதக் குறியீடுகளும், அதை ஒட்டிய சுவர்களில் சங்கராச்சாரிகளின் படங்களும் வரையப்பட்டிருந்தன. அவ்விடத்தில் தலைவர் அம்பேத்கரின் படத்தை  மீண்டும்  நிறுவிய குற்றத்திற்காக டிச.27 அன்று மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெசி, தஞ்சை தமிழன், பாலு ஆகியோர் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைய மேலாளர் சீனிவாசலு அவர்கள்...

தந்தை பெரியார் 44வது நினைவு நாள் சென்னை 24122017

தந்தை பெரியாரின் 44வது நினைவு நாளான இன்று 24.12.2017 சென்னை சிம்சன் பெரியார் பாலம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன்அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திவிக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். உடன் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் தோழர் உமாபதி, வடசென்னை மாவட்ட தலைவர் யேசுகுமார், செயலாளர் செந்தில் FDL மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராய் உறுதியேற்றனர் பின்னர் தோழர்கள் 10.00 மணிக்கு தியாகராய நகரிலும், 10:30 மணிக்கு ஆலந்தூர், 11மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம்.

பெண்களே களப்பணியாற்றிய மாநாடு

ஈரோடு பெண்கள் சுய மரி யாதை மாநாட் டின் தனிச் சிறப்பு, மாநாட்டுப் பணி களை முழுமை யாக பெண்களே மேற் கொண்டது தான். பல்வேறு ஊர்களுக்குச் சென்று கழகத் தோழர்களை சந்தித்து, மாநாட்டுக்கு  அழைப்பு விடுத்தது; நன்கொடை திரட்டியது; விளம்பரப்பணி என அனைத்து பணிகளையும் பெண்களே முன்னின்று நடத்தியது இம்மாநாட் டின் தனிச் சிறப்பாகும். மாநாட்டில் உரையாற்றிய பலரும் இதை சுட்டிக் காட்டிப் பாராட்டினர். மாநாட்டுப் பணிக்காக உழைத்த தோழர்கள்: மணிமேகலை (ரங்கம்பாளையம்), முத்துலட்சுமி (திருப்பூர்), சுமதி (இராசிபுரம்), சபீனா (பள்ளிப் பாளையம்), மீனாட்சி (பள்ளிப்பாளையம்), கவிப்பிரியா (சென்னிமலை), ஜோதி மணி (சென்னி மலை), சங்கீதா (சென்னை), ராஜி (சென்னை), தேன்மொழி (திருப்பூர்), சரசுவதி (திருப்பூர்), மணிமொழி (கோபி), இனியா (மேட்டூர்), இரண்யா (சென்னை). பெரியார் முழக்கம் 21122017 இதழ்

குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்

ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரியார் பிறந்த மண்ணில் பெண்கள் சுயமரியாதை மாநாடு வெற்றியுடன் நடந்து கொண்டிருக் கிறது. நாங்கள் நிகழ்த்துகிற உரைகளை விட இந்த மாநாட்டின் வெற்றிக்கு காஞ்சி மக்கள் மன்றம் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறுவேன். அவ்வளவு சிறப்பாக கருத்துகளை இசையாக – கலை நிகழ்வுகளாக வழங்கினர். அவர்களைப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன். பெண்கள் மாநாடுகளை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்று உலக நாடுகளால் கவனிக்கப் பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களுக்கு போகும்போது சமூகநீதி என்றால் என்னவென்றே அம்மக்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் பெரியார் ஆற்றிய தொண்டு, சமூக நீதி பற்றி நான் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் எல்லாம் தொடர்ந்து பேசுவேன். ஆண், பெண் சமத்துவத்தை...

தீர்ப்புக்குப் பிறகு கவுசல்யா பேட்டி “வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”

உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மூவர் விடுதலை; ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தனி நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ‘சங்கரின் மரணத்துக்கு நீதி கிடைத்திருக்கிறது’ என்று கவுசல்யா தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். தீர்ப்புக்குப் பிறகு ‘இந்து’ ஆங்கில நாளேடு கவுசல்யா வின் பேட்டியை  (டிச.18) வெளியிட்டிருக்கிறது. பேட்டி விவரம்: கேள்வி : சமூகத்தில் ஜாதியின் செல்வாக்கு மறைந்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில வன்முறை சம்பவங்களை பெரிதுபடுத்துவது தேவை யில்லாதது என்ற கருத்துப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? கவுசல்யா: அது உண்மையல்ல. ஜாதியப் பாகுபாடுகளை நிலைநிறுத்தத் துடிப்பவர்கள் தான் இத்தகைய கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சில நேரங்களில் ஜாதிய பாகுபாடுகள் கொலை செய்யும் அளவுக்கு அவர்களைத் தூண்டி விடுகிறது. ஜாதியப் பாகுபாடு சமூகத்தில் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கேள்வி : ஜாதி வெறிக்குக் கணவரைப் பலி கொடுத்...

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு  சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

2012இல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப்படு கிறார்கள் என்று அதற்குக் காரணமும் சொன்னது. இது ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பணி நியமனம், ஊதியம் வழங்கல் போன்ற விஷயங்களில் ஏன் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுகிறது? இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலல்லவா? இந்த உரிமை பறிப்புக்கு ஏன் மாநில அரசு உடன்பட்டது என்று புரியவில்லை. பணியாளர் நியமனத்தில் மாநில உரிமை பறிக்கப்படுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. மாநிலங்களின்...

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்;  டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம்  ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்; டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூட்டம் டிசம்.16, 2017 காலை 11 மணியளவில் ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கழகப் பொறுப்பாளர்கள் கடந்த அக்டோபரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கழக செயல்பாடுகள் குறித்து கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் குழுவில் கருத்துகளை முன் வைத்தனர். செயல்பாடுகள் இல்லாத கழக அமைப்புகள் – செயல்படக் கூடிய கழக அமைப்புகள் – அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கழக செயல்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்தும் விவாதிக்கப் பட்டது. கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைமைக்குழு விவாதித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுவண் ஆட்சி தலையீட்டால், தமிழக இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கும் வேலை வாய்ப்புகள், தமிழக தேர்வாணையத்தின் அறிவிப்புகள், நீட் திணிப்பால் உருவாகியுள்ள நெருக்கடிகள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களாக பிற மாநிலத்தவர்களை தேர்வு...

கழகம் துணை நிற்கும்

ஈரோடு மாநாட்டு மேடையில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட ரவிக்குமார்-ஜோதி இணையரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத் திருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர்களான பாலசுப்பிரமணியன்-மீனாட்சி, திருமணத்தை அங்கீகரித்து இருவரையும் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் பெண்ணின் பெற்றோரை அவரது ஜாதியினர் (பிற்படுத்தப்பட்ட ஜாதி) சமூகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜாதி விலக்குக் குள்ளான பெற் றோர்களையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யர்களையும் மேடையில் ஏற்றி “இங்கே திரண் டிருக்கும் கழகக் குடும்பங்கள் இவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.  வேறு மிரட்டல்கள் வந்தாலும் அதை கழகம் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பி கூட்டத்தினர் ஆதரவை வெளிப்படுத்தினர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

வழமையாக கழக நிகழ்வுகளில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டு மேடையிலும் நடந்தது. திருமணத்தை உறுதிமொழி கூறி நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இந்தத் திருமணம் ஜாதி ஆணவம் பேசும் ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் திருமணம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்ணப்பட்டி கிராமம் தங்கவேலு-வெண்ணிலா இணை யரின்மகன் பிரபாகரன்,  ஓமலூர் வட்டம் பண்ணப்பட்டி கிராமம் குணசேரகன், இலட்சுமி இணையரின் மகள் நந்தினி ஆகியோர் மாலை மாற்றி இருவரும் இணைந்து வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது. அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன. பெரியார் படத்துடன்...

‘நிமிர்வோம்’ ஒரு வாசகரின் பகிர்வு

‘நிமிர்வோம்’ ஒரு வாசகரின் பகிர்வு

வணக்கம். நான் 10 மாதங்களாக “நிமிர்வோம்” இதழை படித்து வருகிறேன். அக்டோபர் மாத இதழ் என்னை மிகவும் கவர்ந்தது. திவிக நடத்திய “பெண் போராளிகளின் அறைகூவல்” நிகழ்வை பற்றிய குறிப்புகள் அருமை. இயல்பாகவே முற்போக்கு சிந்தனைகளோடு இருக்கும் இளைய தலைமுறையினரை ஜாதிசங்கங்களின் வெறியூட்டல்களில் இருந்து காக்க “சுயஜாதி மறுப்பும்”, “ஜாதி பெருமித மறுப்பும்” எவ்வளவு முக்கியமானது என்பதை, நிகழ்வின் குறிப்புகள் உணர்த்தின. “தி ஒயர்” என்ற ஆங்கில இணையதளத்தில் பெரியாருக்கு எதிராக பாபாசாஹேப் அம்பேத்கரை நிறுத்த, ஒரு கட்டுரையின் மூலம் பார்ப்பனர்கள் முயன்று பார்த்தனர். அதை முறியடிக்கும் விதமாக, பேராசிரியர் ஆனந்தி எழுதிய ஆங்கில கட்டுரையை, நிமிர்வோம் இதழ் தமிழில் வெளியிட்டிருந்தது. பெரியாரை கொச்சைப்படுத்தி பலரும் ஆங்கில கட்டுரைகளை எழுதுகின்றனர். இதை படிக்கும் வாசகர்கள் அவை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்புகின்றனர்.  காந்தி, பாபாசாஹேப் போன்ற தலைவர்களின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, யாரும் திரிக்கமுடியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது. ஆனால்,...

உண்மையின் மீது விழுந்த வெளிச்சம்

உண்மையின் மீது விழுந்த வெளிச்சம்

நடைமுறையில் இருக்கும் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட படமாக வெளியாகி அனைவரின் பாராட்டுதல்களையும்  வெற்றியையும் பெற்றுள்ளது கோபி நயினார் இயக்கியுள்ள ‘அறம்’ திரைப்படம். தமிழ்நாட்டின் வறண்ட நில அமைப்பில் போர்வெல்  தவிர்க்க முடியாதது .அதில் நீர் கிடைக்காத நிலை ஏற்படும்போது அதன் உரிமையாளர் அந்த ஏமாற்றத்தில் -பொருள் இழப்பில் அதை மூடாமல் போய் விடுவது இங்குள்ள வினோதமான உளவியல் ஆகும். சரியான  வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்பது மற்றுமொரு காரணம்.போர்வெல் போட்டவரின் குழந்தையே அதற்குள் விழுந்த சம்பவம் கூட இங்கு உண்டு .. அப்படி மூடாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்க முயலும் மக்கள் உணர்வுகளும்  அரசு இயந்திரமும் எப்படி இயங்குகின்றன என்பதே ‘அறம் ‘படத்தின் கதைக்களம். இந்த மையக் கதையினூடாக  உழைக்கும் மக்கள் வாழ்க்கையையும் அவர்களது கனவுகளையும் ஏமாற்றங்களையும் இப்படம் பதிவு செய்துள்ளது. போர்வெல்லுக்குள் விழுந்த சிறுமியைச் சுற்றி யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு பார்ப்பவரை படம் கட்டிப்போடுகிறது.....

‘கஜினி முகம்மதுவை’ கோயிலை கொள்ளையடிக்க அழைத்து வந்தது  யார்?

‘கஜினி முகம்மதுவை’ கோயிலை கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

சோமநாதபுரம் கோயிலை 18 முறை கொள்ளையடிக்கப் படையெடுத்து வந்த கஜினி முகம்மதுவுக்கு துணை செய்தது அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான். இந்தப் பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப் படுகிறது. யார் இவர்? என்ன செய்தார்? மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூர மனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு. அந்தக் கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக் கொண்டு வரலாம் என்று கணக்குப் போடுவதில் மட்டுமே குறியாய் இருப்பார்கள். படை யெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை. இருவகையினரின் நோக்கம் ஒரே வகை யானது தான் என்றாலும், அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை...

குழந்தை வேண்டாம் என்றொரு வாழ்க்கை! பெரியார் முன்மொழிந்த குடும்ப வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்கள்

குழந்தை வேண்டாம் என்றொரு வாழ்க்கை! பெரியார் முன்மொழிந்த குடும்ப வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்கள்

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை…. மனித வாழ்க்கையில் இந்த நான்கும் பிரதானம். இந்தப் படிநிலைகளைச் சரியாகக் கடந்து வருவதே நிறைவான வாழ்க்கையாக நம் நாட்டில் கருதப்படுகிறது. குழந்தை இல்லாத வாழ்க்கையைக் குறையான வாழ்க்கையாகவே பார்க்கிறது சமூகம். குழந்தை இல்லாதவர்களை, தனிப்பட்ட காரணங்களுக்காகக் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களை, இது தொடர்பாக மற்றவர்கள் கேட்கும் கேள்விகள் குத்திக் கிழிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ‘சைல்ட்ஃப்ரீ சொசைட்டி’ என்கிற பெயரில் ஒரு சமூக அமைப்பே உருவாகி, பிரபலமாகி வருகிறது. குழந்தை இல்லாதவர்களுக்காக அல்ல… குழந்தையே வேண்டாம் என்கிறவர்களுக்கான அமைப்பு அது! இப்போது இந்தியச் சமூகமும் மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தையைப் பற்றிக் கேட்கப்படுகிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதும், சமூக விமர்சனங்களை எதிர்கொள்வதும் தினசரி சவாலாக இருந்தபோதிலும், குழந்தை தவிர்த்த வாழ்க்கையில் இதையெல்லாம் மீறிய ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் இருப்பதாகவே சொல்கிறார்கள் ‘குழந்தை வேண்டாம்’ என முடிவெடுத்தவர்கள். அவர்களில் சிலரின் குரல்கள் இங்கே…. என்னோட முடிவெடுக்கும் உரிமைக்கு...

கொலைப்பட்டியலில் சமூக நீதி ஆய்வாளர்  காஞ்சா அய்லய்யா

கொலைப்பட்டியலில் சமூக நீதி ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா

‘தேச பக்தி பேசும் பார்ப்பனர்கள், இராணுவத்தில் சேராதது ஏன்?’ என்று கேட்கிறார் இந்தியாவின் தலைசிறந்த சமூகநீதி அறிஞர்களில் ஒருவரான காஞ்சா அய்லய்யா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். தலித் மக்களின் விடுதலைக்காகவும் ஜாதி ஒழிப்பு, பார்ப்பன-இந்துத்துவ எதிர்ப்புகளை முன் வைத்து சிறந்த ஆங்கில நூல்களை எழுதியவர். அய்தராபாத்தில் மவுலானா ஆசாத் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூகநீதித் துறைக்கான ஆய்வு மய்யத்தின் இயக்குனராக பணியாற்றிவரும் அவர், இந்துத்துவ சக்திகளின் கொலைப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொலை முயற்சிகளிலிருந்து பல முறை உயிர் தப்பியுள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் ஆங்கிலத்தில் எழுதி ‘இந்து இந்தியாவின் இன்றைய நிலை’ (ஞடிளவ ழiனேர ஐனேயை) என்ற நூல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ‘ஆரிய வைசியர் சங்கம்’ அவரது தலைக்கு விலை வைத்திருப்பதோடு, கொலை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவரது நூலை திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் என்பவர் கெடு நிர்ணயத்துள்ளார். பொது மக்கள் முன்...

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை  விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை விடுதலை இராசேந்திரன்

‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு எழுதிய கட்டுரையின் முழு வடிவம். கட்டுரையின் பல பகுதிகள் மலரில் இடம் பெறவில்லை. திராவிட இயக்கம் குறித்து ‘இந்து’ குடும்பத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ் இந்து’ சிறப்பு மலர் வெளியிட முன்வரும் ‘வரலாற்றுச் சூழல்’ நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நல்ல முயற்சிக்கு எனது பாராட்டு களோடு, சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடையாளங்களை மீட்கும் அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களை உலகம் சந்தித்திருக்கிறது. இனம் – மொழி – பண்பாட்டு அடையாளங்களோடு உருவான திராவிடர் இயக்கத்தின் ‘அடையாள அரசியல்’ அதிலிருந்து மாறுபட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவமான ஜாதியமைப்பு வழியாக கட்டமைத்து மக்கள் மீது திணித்த அடக்குமுறை அடையாளங் களிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் உரிமை களுக்கான அடையாளங்களை முன் வைத்தது தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய். ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான அடையாளமாக பெரியார் அதை வார்த்தெடுத்தார். பழமை மீட்புக்குள்...

இடஒதுக்கீடு சட்டங்களை குப்பைக் கூடையில்  வீசும் அய்.அய்.எம்.எஸ். நிறுவனங்கள்

இடஒதுக்கீடு சட்டங்களை குப்பைக் கூடையில் வீசும் அய்.அய்.எம்.எஸ். நிறுவனங்கள்

உயர்கல்வித் துறையில் சமூக நீதி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு அவை பார்ப்பன கோட்டையாகவே இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. அய்.அய்.டி. என்ற உயர் கல்வி நிறுவனம், இதற்கு சரியான உதாரணம். இந்த நிறுவனங்களில் தட்டுத்தடுமாறி இடம் பிடித்த வெகு சில தலித் மாணவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தொடங்கினால் தடை விதிக்கப்படுகிறது. மற்றொரு உயர் கல்வி நிறுவனம் இந்திய மேலாண்மை நிறுவனமான ‘அய்.அய்.எம்.எஸ்.’ என்பதாகும். சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் போதுதான் பல்வேறு நிறுவனங்களில் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு சமூகப் பிரிவினருக்கான வாய்ப்புகள் (ளுடிஉயைட னiஎநசளவைல) உருவாகும். முடிவெடுக்கக்கூடிய உயர் பதவிகளில் பார்ப்பனர் அல்லது விரல்விட்டு எண்ணக் கூடிய சில உயர் ஜாதி வகுப்பினர் மட்டுமே இப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அய்.அய்.எம்.எஸ். என்ற தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், இந்தூர் (1996), கோழிக்கோடு (1996), ரோதக் (2009),...

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

1917இல் நிகழ்ந்த சோவியத் அக்டோபர் புரட்சிக் குறித்து 1933இல் பெரியார் எழுதிய கட்டுரை ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர்அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக் கொண்டது.  சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச்செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பலசூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சிமுறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பிஅந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றன வென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வருகின்றனர்.  ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது...

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா?  வெளிச்சத்துக்கு  வராத  வரலாற்றுத்  தகவல்கள்

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? வெளிச்சத்துக்கு வராத வரலாற்றுத் தகவல்கள்

வர்ணாஸ்ரமத்தையும் ஜாதியமைப்பையும் நியாயப்படுத்தி எழுதிவர்தான் காந்தி. அவர் தீண்டாமையை மட்டும் எதிர்த்தார் என்பது உண்மைதான். ஆனால் ஜாதி அமைப்புக் குறித்து காந்தியின் கருத்துகளை அவரது எழுத்துகளின்அடிப்படையில் மட்டுமே தீர்மானித்து விட முடியுமா? மூன்று கண்ணோட்டங்களில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்கிறது இக்கட்டுரை. ஜாதி தொடர்பாக காந்தி பின்பற்றிய வாழ்க்கை நடைமுறை; காந்தியின் ஆசிரமங்களில் சமூக வாழ்க்கை எப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது? காந்தியின் செயல்பாடுகள், எழுத்துகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகள், இந்த மூன்று காரணிகளையும் முன் வைத்து காந்தியின் ஜாதியக் கொள்கைகளை அலசுகிறார் இக்கட்டுரையாளர் நிஷிகாந்த் கோல்கே. ஜாதி அமைப்பு இயற்கையானது. மதத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூகத்தில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பேணுவதற்காகவே உருவாக்கப் பட்டது என்று தனது எழுத்துகளில் பதிவு செய்துள்ள காந்தி, தனது எழுத்துக்களைப் பற்றி கூறும்போது, “என்னுடைய செயல்பாடுகளில் காண முடியாத எதையும் என் எழுத்துக்களில் தேட முடியாது” என்று கூறியதோடு, “நான் எதைக் கூற வருகிறேன் என்று புரிந்து...

மதவெறி மிரட்டலுக்கு பலியான படைப்பாளியின்  ‘உயிரோவியங்கள்’!

மதவெறி மிரட்டலுக்கு பலியான படைப்பாளியின் ‘உயிரோவியங்கள்’!

சென்னை எழும்பூரிலுள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த ‘தலித்’ மாணவர் பிரகாஷ். கடந்த 25.10.2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலுக்குள்ளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில், “இனி கல்லூரிக்கு என்னால் வர முடியாது; என்னை மிகவும் இழிவுபடுத்து கிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விட மாட்டார்கள். நான் சாகப் போகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரண வாக்குமூலத்தை வீடியோவாக தனது அலைப்பேசியில் பதிவிட்டிருக்கிறார். தற்கொலை செய்துகொணட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ், சுயமாக வரைந்த ஓவியங்களைத்தான் ‘நிமிர்வோம்’ அட்டை இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த இளைஞனின் ஓவியங்கள் அவரது அற்புதமான ஆற்றலுக்கு சான்று! வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப். பெங்களூருவில்...

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின்  ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின் ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

1957ஆம் ஆண்டு நவம்பர் 26, பெரியார் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாள். இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகள் 13, 25, 368, 372 ஆகிய பிரிவுகள் ஜாதி ஒழிப்புக்கு முழுதும் தடையாய் இருப்பதால், அப் பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை பெரியார், அறிவார்ந்த போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 3.11.1959 அன்று தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி அறிவிக்கப்பட்ட போராட்டம் அது. பெரியாரின் எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அம்மாநாட்டில் வழங்கி மகிழ்ந்தனர் பெரியார் தொண்டர்கள். சட்டத்தை எரித்தோம் என்று ஒப்புக்கொண்டு எதிராக வழக்கை நடத்தாமல் 6 மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை – பெரியார் தொண்டர்கள் சிறைத் தண்டனையை ஏற்றார்கள். பெண்கள், கைக் குழந்தைகளோடு கைதானவர்களும் உண்டு. கிரிமினல் கைதிகளாகவே அனைவரும் நடத்தப்பட்டு சிறையில் வேலை வாங்கப்பட்டனர். அடிப்படை வசதிகள், சுகாதாரமே இல்லாத அன்றைய சிறை, பல தோழர்களின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கச் செய்தது. சிறைக்குள்ளேயே பட்டுக்கோட்டை...

கருத்துரிமைக்கு தடை போட்டால்…

கருத்துரிமைக்கு தடை போட்டால்…

தேர்தல் அரசியல் கட்சிகளிலும் ஜனநாயக அமைப்பு முறைகளிலும் மக்கள் நம்பிக்கைகளை இழந்து விட்டார்கள் என்பதை ஆங்காங்கே மக்கள் நடத்தும் போராட்டங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களை முடக்குதல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பெரும் தொழில் நிறுவனங்கள்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் அலட்சியம் காட்டுதல் என்று நீண்ட பட்டியலிட முடியும். விரக்தி அடைந்த மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்து, அவர்களுக்காக மக்களைத் திரட்டும் போராட்டங்களை தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத இயக்கங்கள், உள்ளூர் அமைப்புகள், சுற்றுச் சூழலாளர்கள், ஜாதி ஒழிப்பு அமைப்புகள்தான் களமாடி வருகின்றன. குறிப்பாக சமுதாய அக்கறை கொண்ட இளைஞர்கள், இந்த இயக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது நம்பிக்கையூட்டும் செய்தி. இந்த இயக்கங்களை கடுமையாக ஒடுக்கிட ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்கள், மறியல், பட்டினிப் போராட்டம், முற்றுகைப் போராட்ட வடிவங்கள்தான்...

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் டிசம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்   தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017 திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017 தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017 பெண்கள் சுயமரியாதை மாநாடு ஈரோடு 16122017 பொறிஞர் அம்புரோசு படத்திறப்பு விழா தூத்துக்குடி 17122017 மாவோயிஸ்ட் தியாகிகள் தோழர் குப்புராஜ் – தோழர் அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரை 18122017  

தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தோழர்.தமிழ் மதி-பிறேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10-12-2017,ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00மணிக்கு பள்ளியாடி திரு இருதய அரங்கில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவில் தோழர் தமிழ் மதி-யின் உறவினர்கள்,கழகத் தோழர்கள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள்,சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர். தோழர்.தமிழ் மதி அவர்கள் பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ் பெயர் ஏன்சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே!எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்குச் அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், போன்ற மூடநம்பிக்கைகள் குறித்தும்,பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக்கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும்,கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார். நிகழ்வில் தமிழ் நவிலன் கேக் வெட்டி உறவுகளுக்கு ஊட்ட விழா...

திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். நடத்திய “திராவிடத்தால் எழுந்தோம்”விளக்கப் பொதுக்கூட்டம். குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017,சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைப் பெற்ற”திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழக தலைவர் தோழர்.நீதி அரசர் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கழகத் தோழர்கள்,தமிழ் அரசன்,தமிழ் மதி,மஞ்சு குமார்,ஜாண் மதி,சூசையப்பா,இரமேஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்;கேரளாபுரம் முருகன்,மேசியா,சத்தியதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல! தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். கழகப் பரப்புரைச்செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்; அவர்தனது உரையில் திராவிடர் இயக்கத்தினால் உழைக்கும் மக்களான பிற்படுத்தப் பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கும் நன்மைகள் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வையும், தமிழ்நாட்டிற்கு திராவிடர் இயக்கம் ஆற்றியப்...

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நவம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நவம்பர் 2017 மாத நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்     மக்கள் தளபதி  பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017  கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்தில் கழகத் தலைவர் 09112017 தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017 அம்பேத்கர் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017 நீடாமங்கலம் நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017 சட்ட எரிப்பு நாள் போராளிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் சூலூர் 26112017 சுகுமார் படத்திறப்பு விழா மேட்டூர் 27112017 மாவீரர் நாள் நினைவேந்தல் புதுச்சேரி 27112017 கொளத்தூர் மாவீரர் நாள் நிகழ்ச்சி புகைப்படம் 27112017 கல்வி நிறுவன படுகொலைகளை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வேலூர் 28112017   தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம்...

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017

07122017 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் (திவிக) தோழர் இரா. டேவிட் அவர்கள் முன்னிலை வகித்தார். கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்(சிபிஎம்)தோழர் பி. தங்கவேல் , மாவட்ட செயலாளர் (சிபிஐ) தோழர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தோழர் பி. யூனுhஸ் அகமத் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்(திவிக) சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். திவிக கிழக்கு மாவட்ட...

பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள்

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் டிசம்பர் 16 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ”பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள் !

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’ தமிழீழத் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த விடுதலைப் புலிகளுக்கான மாவீரர் நாள் புதுச்சேரி அரியாங்குப்பத்திலுள்ள கேப்டன் மில்லர் அரங்கத்தில் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சதுக்கத்திலிருந்து சுடர் ஏந்தி மில்லர் அரங்கத்திற்கு திவிக தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் பேரணியாக வந்தடைந்தனர். மாலை 6.05 மணிக்கு தியாகச் சுடரையும் அதன்பின் தமிழீழ தேசியக் கொடியையும் தோழர். கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றினார்கள். தோழர்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர்.லோகு.அய்யப்பன் அவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அதில் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக விடுதலைப் புலிகள் செய்த அளப்பரிய...

கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்

திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேராவூரணியில் பேராவூரணியில் தமிழக மக்கள்  புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.  நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன்,  சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில்  மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க  பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்...

டிசம்பர் 6 : கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 6 : கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு நாளாக  கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுதும் நடத்தின. திருப்பூரில் எஸ்.டி.பி.அய். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பங்கேற்றுப் பேசினார்கள். பெரியார் முழக்கம் 14122017 இதழ்

2018 – கழக நாள்காட்டி தயார்!

2018ஆம் ஆண்டுக் கான கழக நாள்காட்டி தயாராகி வருகின்றன. அழகிய வடிவமைப்பு; சமூகப் போராளிகளின் படங்களோடு… நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ.70 தோழர்கள் முன்பணம் செலுத்தி நாள்காட்டியைப் பெற்றுக் கொள்ளலாம். ஈரோடு கழக மாநாட்டில் கிடைக்கும். – தபசி குமரன், தலைமைக் கழகச் செயலாளர் பெரியார் முழக்கம் 14122017 இதழ்