பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்
“பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி.” காங்கிரசில் கதர்போர்டு தலைவராக பெரியார் இருந்த காலத்தில் அது தொடர்பான பதவிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து சமூகத்தினருக்கும் பகிர்ந் தளிக்க முயற்சித்தார். போர்டு செயலாளராக இருந்த சி.ஆர். சந்தானம் ஒரு பார்ப்பனர். கதர் போர்டு முழுவதையும் பார்ப்பனர்களையேக் கொண்டு குவித்தார். இதற்கு ராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியும் உடந்தை. கருநாடக மாநிலத்திலுள்ள பெல்காமில் காங்கிரஸ் மாநாட்டின்போது இது குறித்து காந்தியாரிடம் புகார் போனது. 1924ஆம் ஆண்டு டிசம்பர் 24, 27 தேதிகளில் இந்திய தேசிய காங்கிரசின் 39ஆவது மாநாடு பெல்காமில் நடந்தது. மாநாட்டின் தலைவர் காந்தி. காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடும் இதுதான். பெரியாரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பெரியாருக்கும் சந்தானத்துக்கும் பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினையில் உருவான மோதலில், சந்தானம் பதவியிலிருந்து விலக முன் வந்தார். அப்போது பெல்காமில் நடந்த சந்திப்பு இது. இது குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் (6.9.1927)...