Author: admin

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

“பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி.” காங்கிரசில் கதர்போர்டு தலைவராக பெரியார் இருந்த காலத்தில் அது தொடர்பான பதவிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து சமூகத்தினருக்கும் பகிர்ந் தளிக்க முயற்சித்தார். போர்டு செயலாளராக இருந்த சி.ஆர். சந்தானம் ஒரு பார்ப்பனர். கதர் போர்டு முழுவதையும் பார்ப்பனர்களையேக் கொண்டு குவித்தார். இதற்கு ராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியும் உடந்தை. கருநாடக மாநிலத்திலுள்ள பெல்காமில் காங்கிரஸ் மாநாட்டின்போது இது குறித்து காந்தியாரிடம் புகார் போனது. 1924ஆம் ஆண்டு டிசம்பர் 24, 27 தேதிகளில் இந்திய தேசிய காங்கிரசின் 39ஆவது மாநாடு பெல்காமில் நடந்தது. மாநாட்டின் தலைவர் காந்தி. காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடும் இதுதான். பெரியாரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பெரியாருக்கும் சந்தானத்துக்கும் பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினையில் உருவான மோதலில், சந்தானம் பதவியிலிருந்து விலக முன் வந்தார். அப்போது பெல்காமில் நடந்த சந்திப்பு இது. இது குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் (6.9.1927)...

பெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்

பெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்

பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதி அமைப்பை வாழ்வியல் போக்காக நிலைநிறுத்தி வரும் இரண்டு முக்கிய நிறுவனங்களாக ‘குடும்பம்’, ‘திருமணம்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு நிறுவனங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கும் எதார்த்தத்துக்கும் சாத்தியமானதல்ல என்றாலும், இந்த நிறுவனங்களின் ‘இறுக்கம்’ தளர்த்தப்பட்டாக வேண்டும் என்பதில் முற்போக்கு சிந்தனையாளருக்கு கருத்து மாறுபாடு இருக்க முடியாது. வேறு மொழியில் கூற வேண்டுமானால் ‘குடும்ப – உறவுகள்’ – திருமண உறவுகளிடையே நிலவும் ‘ஜாதியம்’ நீக்கம் பெற்று இந்த அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். பெண் விடுதலைக்கான தத்துவத்தை ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழியாக அறிவுப் பெட்டகமாக சமூகத்துக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியார், பெண்ணடிமையைக் காப்பாற்றும் இந்த நிறுவனங்கள் மீது கேள்வி எழுப்புகிறார். இந்த திசை வழியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த காலாவதியாகிப் போன 377ஆவது பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கியிருப்பதாகும். இதன் மூலம்...

எட்டு வழிச் சாலை வே.ராமசாமி

எட்டு வழிச் சாலை வே.ராமசாமி

எவ்வளவோ சூறையாடி விட்டீர்கள் எவ்வளவோ கொள்ளையிட்டு  விட்டீர்கள்   விதைகள் முளைப்பாரி வரும் -எமது நிலத்தை மட்டுமாவது  விட்டுவிடுங்கள்   நிலத்தை விட்டுத்  தூரச்செல்லுங்கள் வரப்பில் கூட நிற்கக் கூடாது   ஆளில்லாத களத்து மேட்டில் தானியங்களை அள்ளிச் செல்லும் உங்களை விட்டுவிட மாட்டோம்   நாங்கள் வந்து விட்டோம் நாங்கள் வழி மறிப்போம்   எங்கள் மலைகளைத் துளையிட வேண்டாம்   அளவு கருவிகளை சுருட்டிக் கொள்ளுங்கள் எல்லைக் கற்களை எடுத்துச் சென்று விடுங்கள்   எங்கள் ஈரக்குலையை தோண்டியெடுத்து யாருக்குக் கொண்டு செல்கிறீர்கள் ?   இலைகளின் இதயம் படபடக்க பச்சை மரத்தை அறுக்காதே   அன்னையைப் போன்ற தென்னையை வெட்டிக் கொன்றுவிட்டு என்ன தரப்போகிறாய் இழப்பீடு ?   தென்னஞ் சில்லாடைக்குக் கூட தேறாது உன் நிவாரணத் தொகை   உழுது கொண்டு போகும்போது மண்ணுக்குள் செல்லும் மரத்தின் வேர் தட்டி விழுந்த நிலத்தின் பிள்ளைகள் நாங்கள்...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘தலித் வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்’ கட்டுரை மிகவும் சிறப்பு. “பூனா கிரிக்கெட் சங்கத்தில் 100 மணி நேரம் பந்து வீசியும், ஒரு முறைகூட மட்டை வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தண்ணீர் அருந்துவதற்கும் தனிக் குவளை தந்தார்கள்” என்று தலித் கிரிக்கெட் வீரர் பல்வன்கர் பாலூ, தன் மகனிடம் கூறியிருந்த செய்தியைப் படித்தபோது கண்ணீர் வந்தது. தென்னாப்பிரிக்காவில் கறுப்பின வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது போல் ஏன் இந்தியாவிலும் ‘தலித்’ வீரர்களுக்கு வழங்கக் கூடாது? இதே கருத்தை வலியுறுத்தி ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் ஞாயிறு மலரில் (ஆகஸ்ட் 12, 2018) ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார். “கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இந்தியாவில் 27 சதவீத மக்கள் இப்போதும் தீண்டாமையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘மனித வளமேம்பாட்டுத்’ துறை நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு...

இசையிலும் ‘இந்துத்துவா’ வெறி

இசையிலும் ‘இந்துத்துவா’ வெறி

ஓ.எஸ். அருண் என்ற கர்னாடக இசைக் கலைஞர் ஏசுவின் புகழ் பாடும் கிறிஸ்தவப் பாடலைப் பாட முயன்றதற்கு பார்ப்பனர்கள் மிரட்ட – பாடகர் நிகழ்ச்சியையே இரத்து செய்து விட்டார் ஆரம்பப் புள்ளி, பாடகர் ஓ.எஸ்.அருண். ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற பெயரில் ஆகஸ்ட் 25-ம் தேதி  ‘பல நூற்றாண்டுகளைக் கடந்த காலத்தால் அழியாத கிறிஸ்துவ கீர்த்தனைகள் ஓ.எஸ்.அருணின் உள்ளம் உருக்கும் குரலில்’ என்ற போஸ்டர், சமூக ஊடகங்களில் வெளியானது. உடனே கொதித் தெழுந்தார்கள் இந்துமதப் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் ‘கலாச்சார தாதாக்கள்’. ‘கிறித்துவ அமைப்புக்காக என்னமா பாடப்போச்சு’ என்று அருணை வசை பாடினார்கள். ‘பணத்துக்காக எது வேண்டு மானாலும் செய்யறதா?’ என்று தூற்றினார்கள். நமக்கேன் வம்பு என்று குடும்ப நிர்ப்பந்தங்களைக் காரணமாகச் சொல்லி கச்சேரியை ரத்துசெய்வதாக அறிவித்தார் ஓ.எஸ்.அருண். நியாயமாக அத்துடன் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை, மேலும் விஸ்வரூபம் எடுத்தது. ‘இப்போது ரத்துசெய்வது இருக்கட்டும்.. அந்தக் கச்சேரியை முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?’...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

அறிவியல் வளராத காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதைப் பெருமைப்படுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்புவதோடு உ.வே.சாமிநாதய்யரின் உரைகளில் திணிக்கப்பட்ட பார்ப்பனியத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை. வானில் தோன்றும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை மனிதகுல வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனும் நம்பிக்கை தமிழரிடையே நிறையவே உண்டு. தீய நிமித்தங்களுக்கும் வானில் ஏற்படும் நிலைகள் தாம் காரணிகள் என்று தமிழர் அஞ்சினர். இதனைக் கணித்துக் கூறும் ஆண்கள் கணியன் என்றழைக்கப்பட்டனர். அக்கலை அய்ந்திரம் எனப்பட்டது. அதுவே பஞ்சாங்கம் என இன்று அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் அது ALMANAC எனப்படுகிறது. ஆனால், மேலை நாடுகளுக்கும் இந்திய நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மேலை நாட்டுப் பஞ்சாங்கம் ஒன்றே ஒன்று. இந்திய நாட்டில் பஞ்சாங்கங்கள் மொத்தம் எட்டு. தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் இரண்டு. சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என இரண்டு உள்ளன. அதிலும் தனித்து...

தண்டனைக் குறைப்புக்கு, செய்த குற்றங்களைப் பார்க்கக் கூடாது தியாகு

தண்டனைக் குறைப்புக்கு, செய்த குற்றங்களைப் பார்க்கக் கூடாது தியாகு

நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தை யும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப் பட்ட நடைமுறைகள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி தியாகு பேசுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறை வாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப் படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. கேள்வி: எந்த மாநிலத்தில் சிறைச் சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?...

அணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் சுந்தர்ராஜன்

அணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் சுந்தர்ராஜன்

அணுவைக்கூட செயலிழக்க வைத்துவிடலாம். ஆனால் அணுக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் உலகத்தின்  எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இந்திய அரசு அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, எந்தெந்த தொழில்நுட்பங்களை உலக நாடுகளில் சோதனை செய்யவில்லையோ அந்த அணு உலைகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. 2000 வருடங்களாக மனிதர்களுக்குள், நாடுகளுக்குள் ஏன் போர் வருகிறது என்றால் அடிப்படையில் அவை எல்லாமே வளங்களுக்கான போர்தான். பெட்ரோலியப் பொருட்களின் தேவைக்காகத்தான் அமெரிக்கா ஈராக் மீது குண்டு வீசியது. கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தண்ணீருக்கானப் பிரச்சினை. இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் கங்கை நதியில் பிரச்சினை.  ஆக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்களுக்கு வளங்கள்தான் சண்டைக்கான காரணமாகவுள்ளது. அது பெட்ரோல், தண்ணீர், தாதுக்கள் என்று எந்த வளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதேபோல, புவிசார் அரசியலும் சண்டைக் குரிய காரணியாக மாறும். அதுதான் ஈழத்தில் நடந்தது. அங்கே தமிழர்களின் பகுதியில் திரிகோணமலையில் இருக்கிற வளங்களை சுரண்டத்தான்...

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்

“விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். அதில் நான், கட்சி, தமிழினம், நாடு, உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழ்வதைக் கண்டேன். காலத்தின் மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்தே தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க. ஸ்டாலின் ஆகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். தி.மு.க.வின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். எதிர்காலத்தில் தி.மு.க.வினர் என்பவர் யாராக இருப்பர் என்றால், தன் ஜாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன்பிறப்பாக நினைப்போரும், எளியோருக்குக் கரம் கொடுப்போரும் தான். நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. நாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிப்போர். யார் தவறு செய்தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர்...

ஜாதி சங்க மாநாடுகளில்  ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டுள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. ஆதி திராவிடர் மகாநாடுகள், நாடார் சங்க மகாநாடுகளுக்குப் பிறகு பெரியார் அதிகமாகப் பங்கேற்றது செங்குந்தர் மகாநாடுகளில்தான். இந்தத் தொகுப்பில் உள்ள உரைகளில் காலத்தால் முந்தியது அவிநாசியில்...

பெண்களின் ‘தீட்டும்’அய்யப்பன் ‘புனிதமும்’ செ.கார்கி

பெண்களின் ‘தீட்டும்’அய்யப்பன் ‘புனிதமும்’ செ.கார்கி

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கேரள அரசு எடுத்த முடிவுதான் அய்யப்பன் கோபத்துக்கு உள்ளாகி, அதன் காரணமாக கேரளம் வெள்ளத்தால் தவிக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு எதிரான தீண்டாமைக்கு எதிராகப் போராடும் பெண்கள், அய்யப்பன் பக்திமயக்கத்திலிருந்தும் வெளியேற வேண்டாமா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் “ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமை உள்ளது” என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் “மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் புனிதம் பாதிக்கப்படும் எனவே அவர்களை அனுமதிக்க முடியாது” என்று மறுத்துள்ளது. அதே போல நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன்  “நன்கு...

பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

புனித நூல்களாகக் கருதும் சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப், இஸ்லாமியர்களின் குரான், இந்து பார்ப்பனர்களின் ‘பகவத்கீதை’ ஆகியவற்றை சேதப்படுத்துவோர், களங்கப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த தண்டனைச் சட்டப்படி உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது ஆயுள் தண்டனையாக மாற்றி திருத்தம் செய்திருக்கிறது பஞ்சாப் மாநில அரசு. ‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற சட்டம் ஏற்கனவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத நூல்களை பகுத்தறிவு அடிப்படையில் கேள்விக்குட்படுத்தினாலே மத உணர்வைப் புண்படுத்துவதாக மதவாதிகள் கூச்சல் போட்டு பகுத்தறிவு சிந்தனைகளை முடக்கத் துடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம் மிகவும் கண்டிக்கத்தக்கது. “நான்கு வர்ணத்தை நான் தான் படைத்தேன் என்று பகவான் கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையை நியாயமாக தடை...

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்? செந்தில்

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்? செந்தில்

ஒன்றுக்கு ஒன்று தொடர் புடைய இரண்டு நிகழ்ச்சிகள் ஆக. 13, 2018 அன்று நடந்தன. முதலாவது ஆக. 13, 2018 மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தார். பின்புறமாக இருந்து அவரைத் தாக்க முயல உமர் நிலைதடுமாறிப் போனார். அந்த ஆள் உமர் காலித்தைச் சுடக் குறி வைத்து அவர் வயிற்றில் துப்பாக்கியை வைத்தார். உமர் காலித் இதை உணர்ந்து கொண்டு அவரைத் தள்ளினார். அக் கணத்தில் அவருடன் இருந்த தோழர்கள் காலித் சயிஃபி, சாரிக் உசைன், பனோஜ் யோட்சனா லாஹிரி அவரைத் தள்ளி விட்டனர். அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அவரை சாரிக் உசைன் விரட்டிப் பிடிக்கப் பார்த்தார். அந்நேரம் அவர் குறியின்றி ஒருமுறை சுடவும் செய்தார். ஆனால் சாரிக்...

மக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை

‘கல்வி – நமது உரிமை; வேலை வாய்ப்பு – நமது வாழ்வு; சுயமரியாதை – நமது அடையாளம்’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் 7 நாட்கள் நடத்திய பரப்புரை இயக்கத்துக்கு (2018 ஆக.20 முதல் 26 வரை) மக்கள் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக. 26, 2018இல் பெரம்பலூரில் நடந்த நிறைவு விழா மாநாட்டில் பயணக் குழு பொறுப்பாளர்கள் பரப்புரைக்குக் கிடைத்த ஆதரவையும் ‘நீட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் காட்டிய உறுதியையும் பகிர்ந்து  கொண்டார்கள். மனுசாஸ்திரத்தைக் காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’களாக்கி அதன் வழியாக கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறித்து வந்ததை எதிர்த்து சமூகநீதிக்கான போராட்டம் வலிமையாக நடந்தது தமிழ்நாட்டில்தான். நீதிக்கட்சி ஆட்சி காலங்களிலே ‘சுதந்திரத்துக்கு’ முன்பே தொடங்கிய இந்தப் போராட்டம், பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் வழியாக தடைபட்டாலும், தடைகளைத் தகர்த்து முன்னேறியது. கடவுள்-மத நம்பிக்கையாளர்களும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தனர். விளிம்பு நிலை மக்களும் தங்கள் பிள்ளைகளின்...

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்   பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:   நாள்:  10-11-2018, சனிக்கிழமை இடம்:  சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம் டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு“தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.       ஒன்பது மண்டலங்கள்   1.சென்னை – தோழர் பொழிலன்(தமிழக...

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம்! _____________________ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் விஞ்ஞான யுகத்திலே மலக்குழி கழிவுகளை மனிதன் அள்ளுவது அவமானம்! ஆலயத்தில் மணி அடிக்க எந்திரம் உள்ள நாட்டிலே அடைப்பை நீக்க கருவியில்லை ஆளும் அரசுகளுக்கு வெக்கமில்லை! வெக்கக்கேடு மானக்கேடு காரித் துப்புது உலகநாடு. __________________ தூய்மை இந்தியா நாடகங்கள் தொலைகாட்சி விளம்பரங்கள் தெருவைப் கூட்டும் புகைப்படங்கள்! தேடிக்கொள்ளும் விளம்பரங்கள் மோடி அரசின் மோசடிகள் காலியாகுது வரிப்பணங்கள் ஏமாற்றாதே! ஏமாற்றாதே! எளியவர்களை ஏமாற்றாதே! வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தூய்மைத் தொழிலாளரை வஞ்சிக்காதே! ___________________ தமிழக அரசே! தமிழக அரசே! அருந்ததியர்களின் வாக்குகளால் ஆட்சியை பிடித்த அதிமுக அரசே! அண்டை மாநிலம் கேரள அரசு அறிமுகம் செய்து உள்ள கழிவகற்றும் எந்திரமாம் பேண்டிக்கூட் ரோபோவை தமிழகத்தில் கொண்டுவர தயக்கம் ஏன்? தயக்கம் ஏன்? கொண்டு வா!...

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

வீரவணக்கம் வீரவணக்கம் எங்கள் தோழர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்…. வீரவணக்கம் வீரவணக்கம்! பெரியாரின் மாணவன் அண்ணாவின் ஆசைத்தம்பி! தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அக்கி அழகு பார்த்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷா முறையை ஒழித்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! இறந்தும் போராடிய போராடி வெற்றிகண்ட போராளி தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! 69சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்த சமூகநீதி நாயகனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! திராவிடத்தின் அடையாளம் அரக்கர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! சமத்துவபுர நாயகனுக்கு சமூகநீதி காவலனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மானமிகு சுயமரியாதைகாரர் டாக்டர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ஹிந்தியை அடித்துவிரட்டிய ஹிந்து எதிர்ப்பு போராளி தமிழின தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்….. பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! எங்கள் தோழர் கலைஞருக்கு அசுரர் குல தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ராமன் என்ன இஞ்சினியரா என்று கேட்ட தலைவனுக்கு...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

வாழ்க! வாழ்க! வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்வைத் தந்தார் நம்பெரியார்! வழியைத் தொடர்ந்தார் நம்அண்ணா! இழிவைத் தடுத்த தலைவர்களை இழிவு செய்ய விடமாட்டோம்! எங்கள் தலைவர் பெரியாரை இழிவு செய்தால் மிதிபடுவாய்! எங்கள் தந்தை சிலைமீது எச்சில் துப்ப தெருநாயா? எச்சில் துப்பும் தெருநாய்கள் இனத்தைக் கெடுக்க விடமாட்டோம்! கைது செய் கைது செய் எச்ச ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய் விடமாட்டோம் விடமாட்டோம் வடமொழி திணிக்க விடமாட்டோம் வாலை ஆட்ட விடமாட்டோம் தமிழைத் தாழ்த்த விடமாட்டோம்! தந்தையைப் பழிக்க விடமாட்டோம்! மதவெறி பரப்ப விடமாட்டோம்! மடமையைத் திணிக்க விடமாட்டோம்! பெரியார் நாடு தமிழ்நாடு! பிளவை வளர்ப்பது வடநாடு! இந்தி திணிக்கத் துடிக்கின்றார் இளைய தமிழரை அழிக்கின்றார் ‘நீட்’டால் இறந்த அனிதாவை நினைத்தால் பெரியார் வழிதெரியும்! தமிழர் தந்தை நம்பெரியார் தடியைக் காப்போம் இனம்காப்போம்! பொறுமை காக்க வழியில்லை பொங்கி எழாமல் விடிவில்லை பறிபோ கிறது தமிழ்நாடு பாதை...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்டம் – கைது – 25.10.2018 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழம்மை அமைப்புகளுடன் இணைந்து 25.10.2018 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் 63 பேர் கைதாகினர். அப்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் : * திணிக்காதே திணிக்காதே பள்ளிக்கூட பாடத்திலே மூடநம்பிக்கை திணிக்காதே விதைக்காதே விதைக்காதே பிஞ்சுகளின் நெஞ்சிலே காவி நஞ்சை விதைக்காதே ஊரூராய் பறக்குற நாடு நாடாய் சுத்துற அதானி விமானத்துல ஏர் இந்தியா விமானத்துல எங்க போச்சி எங்க போச்சி புஷ்பக விமானம் எங்க போச்சி எங்க போச்சி நாகாஸ்திரம் இருக்குதாம் பிரம்மாஸ்திரம் இருக்குதாம் வஜ்ராயுதம் இருக்குதாம் இன்னும் பல ஆயுதம் இருக்குதாம் வேதத்துல கதைகதையா புராணத்துல இருக்குதாம் இருக்குதாம் எதுக்கு...

பெங்கரூருவில்  பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! 28102018

பெங்கரூருவில் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! 28102018

பெங்கரூருவில் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 28.10.2018 ஞாயிறு நேரம் : மாலை 4.00 மணி இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம் திராவிட இயக்க பண்பாடுப் புரட்சி எனும் தலைப்பில் கழகத் தலைவர் ” தோழர் கொளத்தூர் மணி ” அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூரு, கர்நாடக மாநிலம்

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! 28102018

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! 28102018

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைக்கிறார் நாள் : 28.10.2018 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம: எஸ்.ஆர்.நகர் மெயின் ரோடு, அண்ணல் அம்பேத்கர் சாலை, பெங்களூரு

மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் 18102018

மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் 18102018

18/10/2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழகத்தினுடைய மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் தோழர் சி.சாமிதுரை அவர்களின் வீட்டில் நிகழ்வு நடந்தது , இந்த கலந்தாய்வுக் கூட்டதிற்க்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை செயற்க்குழு உறுப்பினர் தோழர் நா.அய்யனார் அவர்கள் தலைமையேற்றார், இந்த கலந்தாய்வுக் கூட்டதில் பெரியார் போராட்டமும் ,தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும் ,பி.ஜே.பி.யினால் மக்கள் படுகின்ற அவல நிலை , பெரியாரியல் பற்றிய தமிழ் தேசியவாதிகளின் குழப்பமான குற்றம் பற்றியும்,அமைப்பின் கட்டுப்பாடு ,தனிநபர் ஒழுக்கம் ,புரட்சிப் பெரியார் முழக்கத்திற்க்கு சந்தா சேர்த்தல் , இறுதியாக தோழர்களின் கேள்வியான பற்றிய விளக்கம் ஆகியவற்றை குறித்து தோழர்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டதில் மாவட்ட தலைவர் தோழர் .மதியழகன் , மாவட்ட அமைப்பாளர் தோழர் சி.சாமிதுரை , அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் .நாகராஜ் , தமிழ் நாடு மாணவர் ஒருங்கினிப்பாளர் தோழர் வீ.வினோத் ,சங்கராபுரம்...

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

திராவிடர் இயக்க எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இணையர் செ.தாமரைச் செல்வி 17.10.2018 மாலை முடிவெய்தினார்.  இராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்திற்கு 18.09.2018 கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் இல்லம் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினர். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

17.09.2018 அன்று காலை 9 மணிக்கு 20 இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கொள்கை பாடல்களை ஒலிக்கச் செய்து ஊர்வலமாகச்  சென்று குருவ ரெட்டியூர் பகுதியிலுள்ள பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தி.க மற்றும் காவலாண்டியூர் பகுதி தி.வி.க. தோழர்கள் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறகு காலை சிற்றுண்டி குருவைப் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். காவலாண்டியூர் பகுதி தோழர்கள் சுமார் 50 பேர் ஊர்வலமாகச் சென்று மிளகாய் பொதை, கண்ணாமூச்சி, பாலமலை பிரிவு, செ.செ. காட்டுவளவு , செட்டியூர், மூலக்கடை பகுதிகளில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரைப் பற்றி  காவை ஈஸ்வரன் உரையாற்றினார். பிறகு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிமிர்வோம் மற்றும் கழக வெளியீடுகள் அடங்கிய தொகுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்ணாமூச்சி, செ.செ. காட்டுவளவு, காவலாண்டியூர், செட்டியூர்,...

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 7ஆவது சந்திப்பு தலைமை அலுவலகத்தில் 21.10.2018 மாலை 6 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கடந்த மார்ச், ஏப்ரல் மாத இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்கர் ‘டார்வினின் பரிணாமக் கோட்பாடு’ என்ற தலைப்பிலும், செந்தில்குமார் (குனுடு) ‘ஆர்.எஸ்.எஸ். பிடியில் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பிலும், ஜெயபிரகாஷ் ‘தமிழ் சினிமாவில் சாதிய ஊடுறுவல்கள்’ என்ற தலைப்பிலும் தங்களது பார்வையையும், கருத்துகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இமானுவேல் துரை ‘நிமிர்வோம் இதழைக் குறித்தும் அதன் தேவையை குறித்தும்’ பேசினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இதழ்களைக் குறித்து தோழர்களின் கருத்துகளுக்கும், வெளியிடப்படும் கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும் சிறப்பாக கருத்துரையாற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற “சீரடி சாய்பாபாவின் பின்னணி என்ன?” என்ற கட்டுரையைக் விளக்கியும் உரையாற்றினார்.  வாசகர் வட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திராவிட நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறவில்லை; பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய கூட்டாட்சியை பேசினார். அம்பேத்கரும் இதே கருத்தைத்தான் கூறினார் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உருவான பிறகுதான் வங்காளத்தில் இந்தி எதிர்ப்பு பேசப்பட்டது. மராட்டியத்தில் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒற்றுமையில் ஒரே இந்தியா பேசிய பல தலைவர்கள் இந்தியை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். அம்பேத்கர் கூட இதைத்தான் பேசி யிருக்கிறார். தென்னிந்தியாவும், வட இந்தியாவும் வேறு என்று அம்பேத்கர் பேசுகிறார். ஆரம்பத்தில் அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது ஒன்றுபட்ட இந்தியாவைப் பற்றி அவர் பேசியிருக்கலாம். அந்த அரசியல் சட்டம் அவர் மட்டுமே எழுதியதல்ல. எல்லோரும் இணைந்து எழுதியது. அதை சட்ட சொற்களால்...

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

03.10.2018 அன்று மாலை 4.30 மணியளவில் செங்குன்றம் மார்கெட், முசாபர் பங்களா பகுதியில் பெரியார் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சுந்தரவள்ளி, பெரியார் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னுரை வழங்கிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி, “பெரியார் அவர்களோடு இசுலாமிய சமுதாய தலைவர்களும் மக்களும் முன்பு மிகவும் இணக்கமாக பயணித்ததை குறிப்பிட்டு தற்போது இசுலாமிய சமுதாயம் பெரியாரிடம் இருந்து சற்று விலகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடவுள் மறுப்பை மட்டுமே காரணம் காட்டி பெரியாரிடம் இருந்து இசுலாமிய சமுதாயம் தள்ளி இருக்கவேண்டியதில்லை பெரியாரிடம் கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் தங்கள் சமுதாயத்திற்கு நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “இன்றைய காலகட்டத்திற்கு பெரியாரின் மிக அவசியத் தேவையை தங்கள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும்” தோழர் அலீம் அல்புகாரி குறிப்பிட்டார். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ‘இராவணனை’ எரிக்கும் தசரா விழா கொண்டாட்டத்தின்போது இரயில் தண்டவாளத்தில் நின்று விழாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் மீது இரயில் மோதி 61 பேர் பலியாகி விட்டார்கள். விழாவில் பட்டாசு வெடிப்பு சத்தத்தில் இரயில் வந்த சத்தம்  கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது ‘தசரா விழா’ கொண்டாட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் ஆவேசமாகப் போராடி வருகிறார்கள். தொடர்வண்டி ஓட்டுனரையும் கைது செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் படை வந்தபோது போலீசார் மீது மக்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினர். 61 பேரை சாகடித்த இந்த கொண்டாட்டத்தில் தொடர்வண்டி காவல்துறை எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளது. விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள். மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் விஜய் மதன் அவரது மகன் சவுராப் மதன்...

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

வைணவக் கோயிலான காஞ்சிபுரம் தேவ ராஜசாமி கோயிலில் தென்கலை அய்யங்கார் களுக்கும் வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. வடகலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘தமிழ் பிரபந்தங்களை’ பாடக் கூடாது என்கிறார்கள். தென்கலை அய்யங்கார்கள், ‘ஆச்சாரியா வேதாந்த தேசிகரின்’ தமிழ் பிரபந்தங்களைப் பாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ் பிரபந்தம் பாட அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ் பிரபந்தத்தைப் பாடலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்.22ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவர் தமிழ் பிரபந்தத்தை ஒரு நாள் மட்டும் பாடாமல், தொடர்ந்து பாடுவதால் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சரசுவதி பூஜை’ நாளன்று நீதிமன்றம் விடுமுறை. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் வீட்டிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

நாங்களும்கூட’ (Metoo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது. இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது.  பொதுப் புத்தியில் திணித்து வைத்தது – மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் – பெண்கள் குறித்த பார்வைகள் தான். எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா?  கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு என்பது எந்த விதமான ஜாதி,மதம்,இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுளின் படங்களோ அதற்கு வழிபாடோ நடத்தப்படக் கூடாது என்பது அரசாணை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி 17.10.2018 காலை கொளத்தூர் ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் காவல்நிலையம், கண்ணாமூச்சி தொடக்க கூட்டுறவு வங்கி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அரசு அலுவலகங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று அதற்கான அரசாணையை கொடுத்தனர். அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மீறி 17.10.2018 மாலை கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரான காவலாண்டியூர் சசிகுமார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தோழர்கள் சென்று கேட்டதற்கு அது அவரவர் விருப்பம் , யார்...

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட  வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

நக்கீரன் எழுதிய கட்டுரைக்காக தமிழக ஆளுநர்மாளிகை, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது காவல்துறையில் நேரடியாக புகார் தந்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 124அய் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இந்த சட்டத்தில் பிணை கிடைக்காமல் தடுப்பதற்கும் பிடிவாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், ஆளுநர் இந்தக் கொடூர சட்டத்தைக் கையில் எடுத்தார். எழும்பூர் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டம் வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி சிறையிலடைக்க மறுத்து விட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பலரும் சட்ட வரம்புகளை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க...

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – திராவிட விழுதுகள் ஒட்டஞ்சத்திரம் 18112018   திவிக மாநில செயலவை திருப்பூர் 14102018 முப்பெரும் விழா பொதுக்கூட்டம் குமாரபாளையம் 13102018 தோழர் செல்வராஜ் தாயார் இறுதி ஊர்வலம் சென்னிமலை 06102018 எழுவர் விடுதலை- அஞ்சல் அட்டை ஈரோடு 06102018 இந்திய டேசிய லீக் – பெரியார் யார்? கருத்தரங்கம் திருவண்ணாமலை 03102018 கல்வி கற்க – முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் 02102018  தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாக்கம் விழுப்புரம் 01102018    கருஞ்சட்டை கலைஞர் கருத்தரங்கம் திருச்செங்கோடு 30092018 வாழ்க்கை இணையேற்பு விழா திருவண்ணாமலை 22092018 பெரியார் சிலை திறப்பு ஆண்டிமடம் 16092018  

”போலி சுவரொட்டிகளுக்கு மறுப்பு !” – மயிலாடுதுறை 19102018

”போலி சுவரொட்டிகளுக்கு மறுப்பு !” – மயிலாடுதுறை 19102018

  இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலை தளங்களில் சமூக விரோதிகளால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில் பரப்பப்டுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும் வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று 19.10.2018 அன்று காலை கழக வழக்கறிஞரும் நாகை மாவட்ட பொறுப்பாளருமான தோழர் இளையராஜா,கழக பொறுப்பாளர்கள் தோழர் மகேஸ்,செந்தில் குமார், நடராஜ்,தில்லை நாதன்,விஜயராகவன்,நாஞ்சில் சங்கர் ஆகியோர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.இன்று மாவட்ட காவல்துறை காண்காளிப்பாளரிடமும் புகார்...

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

கண்டன ஆர்ப்பாட்டம் ! அக்.25 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிகாட்டும் இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கெதிராக கல்விக்கூடங்களில் மதமூட நம்பிக்கைகளை வளர்க்க மதவாதிகளுக்கு துணைபோய் தன் கடமையிலிருந்து தவறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 25.10.2018 வியாழக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர். கண்டன உரை : தோழர் துரைவளவன்,மாநில துணைசெயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் அபுதாஹிர்,மாவட்டத்தலைவர்,SDPI கட்சி, தோழர் சம்சீர் அஹமது,மாவட்டச்செயலாளர்,SFI. தோழர் தேன் மொழி,மாவட்டச்செயலாளர்,...

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற SDPI அமைப்பின் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் காலை அமர்வில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் ‘நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்...

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று...

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வரு கின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக் கின்றன.  இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. பண்டிகைக் கொண்டாடும் நம்பிக்கை யாளர்களில் 60 சதவீதம்...

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான். இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.  144 வருடங்களுக்கு...

பார்ப்பனிய பா.ஜ.க.  நடத்தும் ‘புஷ்கரம்’

பார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’

வேதகால பார்ப்பன ஒடுக்குமுறை கலாச் சாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பார்ப் பனர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக் கிறார்கள். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் தாமிரபரணி மகா புஷ்கரம். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி, பிறகு விடுதலையான இறந்துபோன காஞ்சிபுரம் ஜெயேந்திரன், காவிரி புஷ்கரத்தை நடத்தினார். இப்போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே கடலில் கலக்கும் ஒரே நதியான தமிழர் பண்பாட்டோடு இணைந்து நிற்கும் தாமிர பரணிக்கு வேத முலாம் பூசி புஷ்கரம் நடத்துகிறார்கள். அது என்ன புஷ்கரம்? குருபகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசியான விருச்சிக இராசிக்கு ‘வீடு’ மாற்றுகிறானாம். முன்பணம் வாடகை இல்லாமல் வீடுகளை மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த இராசி பகவான்களுக்கு மட்டுமே உண்டு. தாமிரபரணி விருச்சிகராசிக்கான நதியாம். 144 ஆண்டு களுக்குப் பிறது இந்த விழா கொண்டாடப் படுவதால் இது மகாபுஷ்கரமாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது புஷ்கரமாம்.இந்த ‘மகா புஷ்கரத்’துக்கு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது. முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு...

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு....

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது. அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம்  சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம்  கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது. கீழ்வானி பகுதியில்  வீரா கார்த்திக்,  இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் ...

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

மத்திய அரசு உயர்கல்வி தொடர்பாக விவாதத்திற்கு முன்வைத்துள்ள மசோதா முன்வரைவு முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழுவை அழித்தொழிக் கிறது. உயர்கல்விக்கு மானியம் வழங்கும் அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கையில் கொடுக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பதிலாக உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற புதிய அமைப்பை முன் மொழிகிறது. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்று கூறும் மசோதா இந்நிறுவனங்கள் எந்த ஒழுங்காற்று முறையுமின்றி தம் விருப்பப்படி செயல்பட வழி வகுக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் அம்சங்களை கண்காணிக்கவும் பொதுவாக உயர்கல்வி பற்றியப் பரிந்துரைகளை அவ்வப்பொழுது தேவை கருதி உருவாக்கி அரசுக்கு அளிக்கவும் புதிதாக அமைக்கப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn) தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைவரையும் துணைத் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறை மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது....