மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் 18102018

18/10/2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழகத்தினுடைய மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் தோழர் சி.சாமிதுரை அவர்களின் வீட்டில் நிகழ்வு நடந்தது , இந்த கலந்தாய்வுக் கூட்டதிற்க்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை செயற்க்குழு உறுப்பினர் தோழர் நா.அய்யனார் அவர்கள் தலைமையேற்றார்,

இந்த கலந்தாய்வுக் கூட்டதில் பெரியார் போராட்டமும் ,தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும் ,பி.ஜே.பி.யினால் மக்கள் படுகின்ற அவல நிலை , பெரியாரியல் பற்றிய தமிழ் தேசியவாதிகளின் குழப்பமான குற்றம் பற்றியும்,அமைப்பின் கட்டுப்பாடு ,தனிநபர் ஒழுக்கம் ,புரட்சிப் பெரியார் முழக்கத்திற்க்கு சந்தா சேர்த்தல் , இறுதியாக தோழர்களின் கேள்வியான பற்றிய விளக்கம் ஆகியவற்றை குறித்து தோழர்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கலந்தாய்வுக் கூட்டதில் மாவட்ட தலைவர் தோழர் .மதியழகன் , மாவட்ட அமைப்பாளர் தோழர் சி.சாமிதுரை , அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் .நாகராஜ் , தமிழ் நாடு மாணவர் ஒருங்கினிப்பாளர் தோழர் வீ.வினோத் ,சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தோழர் செ.வே.ராஜேஷ் , மா.குமார், ரா.துளசி , பிரபு, நீதிபதி, ராஜீவ்காந்தி ,ராமச்சந்திரன் தோழர்களில் உட்பட 36 தோழர்கள் கலந்தக்கொண்டனர் .

You may also like...