Author: admin

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்:  சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 65ஆம் பிறந்த நாள் நவம்பர் 26ஆம் தேதி பகல் 11 மணியளவில் அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நடிகர் சத்திய ராஜ், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ‘கற்க’ அறக்கட்டளை சார்பில் கழகப் பொறுப்பாளர் அண்ணாமலை பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகப் பை, நோட்டுகளை வழங்கினார். மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று மாலை 6 மணிக்கு  நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக முடிவெய்திய தோழர் இராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். கலைக் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி, பிரசாந்த், தேன்மொழி, சந்தோஷ் ஆகியோரும் சட்ட எரிப்பு நாளைப் பற்றி பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய...

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது. இந்திய விடுதலை போராட்டம் என்பதே...

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்பரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்.  மத்திய அரசு எதிர் கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப் பதற்காகத் தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத்  தனியாருக்கு விற்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும். வளர்ச்சியின் அடித்தளம் பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள்,  ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையானவை என்பதே.  இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக...

‘நள்ளிரவு நாடகங்கள்’

‘நள்ளிரவு நாடகங்கள்’

குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர் பதவிகளுக்கான அதிகாரங்களை அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறது, நடுவண் ஆட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சிவசேனையிடம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு முதல்வர் பதவியைத் தன் வசமே வைத்துக் கொள்ள பா.ஜ.க. செய்த முயற்சியை சிவசேனை ஏற்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்கள். சிவசேனை தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி  அமைக்கும் முயற்சிகள் நடந்தன. திடீரென்று தேசியவாத காங்கிரசிலிருந்த சரத்பவார் அண்ணன் மகன் அஜித் பவாருடன் பேரம் பேசி அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் முயற்சித்தது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்க தயாரான நிலையில் நள்ளிரவில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைத் தட்டி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி...

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...

கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு இலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு இலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

இலங்கை அதிபராகியுள்ள ‘போர்க் குற்றவாளி’ கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது இலங்கை அரசின் இராணுவ செயலாளராக செயல்பட்டவர் கோத்தபய ராஜபக்சே. அவர் இப்போது சிங்கள பெரும்பான்மையினரின் ஓட்டுகளைப் பெற்று அதிபராகி விட்டார். இனப் படுகொலை நடந்தபோது அதிபராக இருந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு வந்து விட்டார். ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசின் வரவேற்பையேற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இந்தியா அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ஜந்தர் மந்தர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையில் நவம்பர் 29...

தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08122019

தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08122019

தென்காசி மாவட்ட திராவிடர்விடுதலைக்கழக கலந்துரையாடல்கூட்டம் தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 08.12 2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் கீழப்பாவூர் தோழர் மாசிலாமணி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக் கழக பணிகள் குறித்தும் மாவட்ட கழக தோழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் – 1 கழக இதழ்களான . “புரட்சி பெரியார் முழக்கம் ” – வார இதழ் மற்றும் “நிமிர்வோம்” – மாத இதழ்களுக்கான சந்தாகளை அதிகமாக சேர்ப்பது எனவும் தோழர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகம், படிப்பகங்களில் இதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கான தொகையை அந்தந்த பகுதி தோழர்கள் ஏற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் –...

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் ! மேட்டுப்பாளையத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளதில் ஆபத்தான நிலையில் இருந்த சுவரை பராமரிக்காத உரிமையாளரை கைது செய்யாமல், கொல்லப்பட்ட ஏழை எளிய தலித் மக்களுக்காக போராடிய தோழர்களை காவல்துறை அநாகரீகமான முறையில் கைது செய்யப்ட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், சுவரை பராமரிக்காமல் தலித் மக்களின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக இழப்பீடும்,வீடிழந்த மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகளும் கட்டித்தரவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலணியில் 2.12.2019 அன்று அதிகாலை...

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. —————————————- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவாகவும்  காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு  எதிராகவும் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு யிடுதலைப்புலிகளுக்கும்,  ஈழத்தமிழர்களுக்கும் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை  விளக்கி காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை விளக்கும்  துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்ததாக கூறி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்படுதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை எதிர்த்து லோகு அய்யப்பன் உட்பட மூவரும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்கிளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்...

இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் நீலம் பண்பாட்டு மையம் கருத்தரங்கு 26112019

இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் நீலம் பண்பாட்டு மையம் கருத்தரங்கு 26112019

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த நவம்பர் 26 இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் நிகழ்வில் இன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இடம்: உலக பல்கலைக் கழக சேவை மய்யம், சேத்துப்பட்டு, சென்னை

பெரியாரை ஏன் எதிர்க்கிறார்கள்? பொதுக்கூட்டம் இரத்து

பெரியாரை ஏன் எதிர்க்கிறார்கள்? பொதுக்கூட்டம் இரத்து

தொடர் மழையின் காரணமாக 28.11.19 (வியாழக்கிழமை) அன்று சென்னை மயிலாப்பூரில் பெரியாரை ஏன் எதிர்க்கிறார்கள்? என்கிற தலைப்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் சென்னை மயிலை பகுதி திவிக

சென்னையில் தோழர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு ! சென்னை 30112019

சென்னையில் தோழர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு ! சென்னை 30112019

நாள் : 30 11 2019 சனிக்கிழமை நேரம் : மாலை 6 மணி இடம் : தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக் கழகம், மயிலாப்பூர், சென்னை. தலைமை : தோழர் அய்யனார், தலைமைக்குழு உறுப்பினர் முன்னிலை : தோழர் :உமாபதி, சென்னை மாவட்ட செயலாளர். படத்தை திறந்து வைத்து உரையாற்றுபவர்கள் : தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26112019  திருப்பூர்

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26112019 திருப்பூர்

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – 26.11.2019 – திருப்பூர் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர்,15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று நடைபெற்றது. தோழர் சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக சமீபத்தில் முடிவெய்திய தோழர் ராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.தோழர் ராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணைய தளப் பொறுப்பாளர் விஜய்குமார் தலைமை வகித்தார்.மேட்டூர் TKR இசை குழுவினர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள். அதனை தொடர்ந்து நடந்த பொதுக் கூட்ட நிகழ்வில் கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி,பிரசாந்த், தேன்மொழி,சந்தோஷ் ஆகியோரும் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்க...

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அய் திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 30012019

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அய் திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 30012019

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அய் திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 30.11.2019 சனிக்கிழமை நேரம் : மாலை 3 மணி இடம் : அரசினர் விருந்தினர் மாளிகை, சேப்பாக்கம்,சென்னை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள்,தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கல்விப் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு.

இலங்கை தூதரகம் முற்றுகை !  29112019 சென்னை

இலங்கை தூதரகம் முற்றுகை ! 29112019 சென்னை

இலங்கை தூதரகம் முற்றுகை ! தோழர்கள் கைது ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இனப்படுகொலை குற்றவாளியே கோத்தபய ராஜபக்சேவே திரும்பிப் போ ! என்கிற முழக்கத்துடன் இன்று 29.11.2019 – வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா உமாபதி தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இம் முற்றுகைப் போராட்டத்தில் மே 17, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழ் இனப்படுகொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் நேற்று (28.11.2019 ) இந்தியா வந்திருக்கிறார்.

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்… மனுஷ்யபுத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் நான் எப்போதும் ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் இணக்கமாக வாழும் பொறுப்பு எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் எப்போதும் நிபந்தனையற்று விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம் மௌனமாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் என் தேசபக்தியை நிரூபிக்க எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து காட்டி வந்திருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால் முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன் ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே இருக்க விரும்புகிறேன் என் நெஞ்சில் நீங்கள் கடைசியாகப் பாய்ச்சப்போகும் ஈட்டியின் கூர்மையை நான் காண விரும்புகிறேன் உங்களை முகம் சுழிக்க வைக்கும் அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு ஒரு இஸ்லாமிய கதகதப்போடு...

சுற்றுச் சூழலில் ஜாதியம் – பார்ப்பனியம் – நக்கீரன்

பார்ப்பனியம் என்பது ஒரு சமூகக் கோட்பாடு. எப்படி முதலாளியம், மார்க்சியம், சூழலியம் போன்றவை ஒரு கோட்பாடோ, அதுபோன்றே இதுவும் ஒரு கோட்பாடு. சிலர் திரிப்பது போல இது இனவெறுப்பு சொல்லல்ல. பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னது போல எதிரி ‘பார்ப்பனர்’ அல்ல, ‘பார்ப்பனியம்’ என்கிற கோட்பாடு மட்டுமே. ஏனெனில் இந்தக் கோட்பாடுதான் ‘சாதியம்’ என்கிற அறமற்ற சிந்தனையை இம்மண்ணில் விதைத்தது. இந்தப் புரிதலோடு ‘சூழலியலில் சாதியம்’ என்கிற இக்கட்டுரைக்குள் நுழைய வேண்டுகிறேன். இந்த கருத்தரங்கிற்கு முதலில் இடப்பட்டிருந்த பெயர் ‘பெரியாரின் வேர்களைத் தேடி…’ என்பதாகும். அதனை முகநூலில் பதிவிட்டவுடன் ஓர் இயற்கை அன்பர் என்னிடம், ‘பெரியாருக்கும் சூழலியலுக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டார். பெரியாருக்கும் சூழலியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான். ஏனெனில் அவருடைய காலத்தில் தற்காலத்தைப் போல சூழலியல் சீரழிவு எதுவும் ஏற்படவில்லை. அதனால் அதைப் பேசவேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. சூழலியல் குறித்து பெரியார் எதையும் சிறப்பாக பேசிவிடவில்லை என்றாலும்...

பெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும் – முனைவர் இந்திரா

அனைத்து சமயங்களுமே பெண்களுக்கு எக்காலத்திலும் எதிரானவையே என்பது தெளிவான ஒன்று. சமயங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப் பட்டதோ அதைச் செய்யாமல் பெண்களை அடிமை செய்வதையும் அடக்குதலையுமே காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன. பெண்களை மையமாகக் கொண்டே அனைத்து அடிமைச் சடங்கு களையும் சமயம் என்ற ஆணாதிக்க உணர்வு ஏற்படுத்தி இதன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதோடு இன்றளவும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. எனவேதான் பெரியார் சமயம் என்பது மிகப் பொய் கற்பனை என்றும், முழுப்பொய் என்றும் மக்களை குறிப்பாக பெண்களை ஏமாற்றுவதற்காவே ஏற்படுத்தப்பட்டதென்றும் கூறுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் என்றாலே மென்மை யானவள் என்ற கருத்து நிலவுகின்றது.  அவள் இயல்பாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களை உடையவள் என்று கூறப்படுகிறது. ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’                 – (களவு 8) என்று தொல்காப்பியார் கூறுகின்றார். இவ்வியல்புகளை உடையவராக பெண்கள் இருப்பதால்தான் தலைவி தன் காதலைத்...

கற்பின் பெயரால் …- ஓவியா அன்புமொழி

பொதுதளத்தில் பெண் உரிமை பேசும் ஆண்கள் கூட அவர்கள் ஒருவரை இழிவு செய்யப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண்ணின் உடல் சார்ந்துதான் இருக்கும். இன்றைக்கும்  இந்த  சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்த  இங்கு பயன்படுத்தும் வார்த்தை கற்பு. இந்த வார்த்தை  ஒன்று தான் பெண்களின் உடல் மீதான வன்முறையை காலம் காலமாக நிகழ்த்தி கொண்டுவருகிறது. கற்பு  என்ற ஒன்றை வைத்து சங்க கால  இலக்கியம் முதல்  இன்றுள்ள  ஊடகம் வரை பெண்களை ஒரு புனித பிம்பமாக சித்தரித்து வருகிறது. இந்த புனித பிம்பத்தையும் , அடிமைத் தனத்தையும் முதலில் எதிர்த்து அதில் எந்த புனிதமும் இல்லை புடலங்காயும் இல்லை என்று போட்டு உடைத்த, உலகில்  ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. இன்னும் ஒரு படி மேலே சென்று கற்பு  என்ற வார்தையை பகுபதமா பகாபதமா என்று அதன் இலக்கணத்தையே ஆராய்ந்து  கற்பு என்ற ஒன்று இருக்குமேயானால் அது ஒழுக்கம்  சார்ந்தது ...

பெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள் – பேராசிரியர் ந. முத்துமோகன்

வரலாறு என்றால் என்ன? என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸ், வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று பதில் கூறினார். வரலாறெங்கும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, மோதல் தொழில்படுகிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். பெரியார் வருணங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் போராட்டங்களும் தான் வரலாறு என்றார். பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் தழுவி நிற்கும் அரசியல் செயல்பாட்டுப் பரப்பைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கிலும் கிழக்கிலும் அறியப்பட்ட கொள்கைப் போக்குகளை சராசரித் தேவைகளுக்கு மேலான அளவுக்கு அவர் அறிந்திருந்தார். சனநாயகம், குடியரசுக் கொள்கை, சோசலிசம், மார்க்சியம், அராஜகம் போன்ற அரசியல் கொள்கைகளை அவர் அறிந்திருந்தார். மேற்கில் பிரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்ற மிகப் பெரும் சம்பவங்களின் கொள்கைப் பின்புலங்களை அவர் அறிந்திருந்தார். மேற்கு நாடுகளில் விஞ்ஞானத் தொழில் புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தத்துவங்களிலும் உலகப்பார்வைகளிலும் புரட்சி நடக்கத் தொடங்கி...

பெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும் – க. காமராசன்

பெரியார் கம்யூனிஸ்டுகளுடனான முரணுறவைப் பெரும்பாலும் நட்பானதாகப் பார்த்தார். எண்ணற்ற கம்யூனிஸ்ட்களுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவைப் பேணினார் என்பதற்கு அக்கம்யூனிஸ்ட்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் சான்றுகளாக உள்ளன. தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி (1879-1973) நீண்ட நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழகச் சிந்தனையாளர்; தத்துவவாதி; அரசியல் வாணர்; சாதிமுறை ஒழிப்புப் போராளி. அவர் இந்தியத் தேசிய காங்கிரசில் அரசியல் பொது வாழ்வைத் தொடங்கினார்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை உருவாக்கி தமிழக அரசியல் உலகில் சுமார் அய்ம்பது ஆண்டுகள் (1925-1973) ஒளி குன்றா நட்சத்திரமாகத் திகழ்ந் தார். பெரியார் எப்போதும் தன்னை ‘சமதர்மி’ என்றே அழைத்துக் கொண்டார். பெரியாருடைய ‘சமதர்ம’த்தை ‘சுயமரியாதை சமதர்மம்’ என்று ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை சுட்டுவார். பெரியார் அரசியல் வானில் உலாவிய காலத்தில் தான் தமிழகத்தில் பொது வுடைமை இயக்கமும் உரு பெற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி, வளர்ந்து, பிளவுபட்டது. 1938ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

பெரியார் பார்வையில் ‘காதல்’ – கனல்மதி

“அன்பு நட்பு ஆசை ஆகியவற்றைத் தாண்டி காதல் என்பது புனிதமானது என்று உலகில் நிலவும் கருத்து ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்கிறது.” பெரியாரின்  பெண்ணுரிமைச் சிந்தனை மற்ற சீர்திருத்தவாதிகள் கொண்டிருந்த பெண்ணுரிமை மீதான பார்வையை விட மிக ஆழமானதாகவும் நுணுக்கமானதாகவும் இருக்கிறது. அன்றைய பார்ப்பனிய ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் பார்ப்பனர்களின் வேத சட்டங்களின்படி பெண்களை இச்சமூகம் வீட்டுப் பிராணிகளாய், அதை விடவும் அடிமைத் தன்மையுடன் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறது. இன்றும் மனுநூல் கூறும் விதிகள் வரிகள் மாறாமல் நம் சமூகத்தில் மிகச் சாதாரணமாக நடைமுறையில் இருப்பதும் பல இடங்களில் தொடர்ந்து மனுநூல் வரிகளையே மக்கள் பேசிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. காதல் என்பதைப் பற்றியோ, அல்லது ஆண்களும் பெண்களும் தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பது பற்றியோ மனுதர்மம் சிந்திக்கக் கூட இடமளிக்கவில்லை. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து, பின் கணவன் உயிருடன் இல்லை எனில் காலம்...

பெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம் – செந்தில், இளந்தமிழகம்

ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் ஓர் அற அடிப்படை என்று உண்டு. வள்ளுவரைப் பொருத்தவரை அவரது அற அடிப்படை என்பது வாய்மை, பொய்யாமை ஆகும். மார்க்சைப் பொருத்தவரை உழைப்பு, அறம். சுரண்டல் அறமற்றது. பெரியாரைப் பொருத்தவரை மாந்த நிகர்மை என்பதே அறம். தமிழர்களின் புதுமைக் கால வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத பெரியார் மீது குற்றாய்வுகள் மட்டுமின்றி அவதூறுகளும், வெறுப்புரைகளும் அதிகம் பரப்பப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்திய, தமிழக வரலாற்றுப் போக்கில் பெரியாரை நாம் புரிந்து கொள்வது எப்படி? இதனை உள்ளூர் வரலாறு மட்டுமின்றி உலகளாவிய வரலாற்றுப் போக்கின் ஊடாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. வரலாற்றுத் திருப்பம்: பெரியார் என்றால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்பதில் இருந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அன்றைய தமிழக அரசியல் வெளி, இந்திய அரசியல் வெளி எப்படி இருந்தது? ஆங்கிலேயக் குடியேற்றத்திற்கு எதிரான இந்திய தேசிய இயக்கமே இந்தியா முழுவதும் மைய நீரோட்ட...

பெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’ – கொளத்தூர் மணி

பெரியாரை மூலத்தில் படிப்போம் என்பது தான் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தி, எனவேதான், குடிஅரசு என்ற இதழை தொகுத்துத் தர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம். பெரியாரைப் பற்றி விளக்க வருபவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே பிரம்மச் சூத்திரத்திற்கு வெவ்வேறு உரையெழுதினார்கள். உரை எழுதப்பட்டதெல்லாம் தனித்தனி மதமாக மாறியது. சங்கரர் எழுதிய உரை, இராமானுஜர் எழுதிய உரை போன்றவை தனித்தனி மதங் களாகிப் போனது அது போன்று ஆகிவிடக் கூடாது. பெரியார் தன் நீண்ட வாழ்நாளில் அறிஞர்களை நோக்கி பார்த்து எழுதியவராக இருந்தது இல்லை. பாமரர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய மொழியில், அவர்களின் அளவுக்கு இறங்கிச் சென்று, பேசிய உரைகள் தான் அவர்களுடையச் சிந்தனைகளாக அதிகம்  நாம் பெறுகிறோம்.எழுதியதை விட பேசியது தான் அதிகம்.  பெரியார், கோட்பாட்டு ரீதியாக, கோட்பாடு களுக்கு உள்ளடக்கி தனியாக எதையும் எழுதவில்லை. எனவே அதைப் புரிந்து கொள் பவர்கள் அதற்கு ஆளுக்கொரு விளக்கும் கொடுத்...

பெரியாரியம் : வேர்களைத் தேடி…

இந்த இதழில் –  பெரியாரியலின் பன்முகப் பார்வைகளை அலசும் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2019 ஆகஸ்ட் 22 முதல் 25 வரை தஞ்சையில் “வேளாங்கன்னி கலை அறிவியல் கல்லூரி” காட்சி ஊடகத் துறை மற்றும் ‘ரிவோல்ட்’ அமைப்பு இணைந்து ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் ஆய்வரங்கம் ஒன்றை நடத்தின. அதில் பங்கேற்று ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், பெரியாரியம் குறித்து விரிவான ஆய்வுக் கருத்துகளை முன் வைத்தனர். பெரியாரியம் பற்றிய பல தொகுப்பு நூல்களை உருவாக்கிய பசு. கவுதமன் முயற்சியில் இந்த ஆய்வரங்கம் நடந்தது. அரங்கில் உரையாற்றிய தோழர்கள், எழுத்து வடிவில் வழங்கிய கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இனி வரும் இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வரும். கடவுள் – மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்ற எல்லையோடு பெரியாரியம் சுருக்கப்பட்டு விடுகிறது. மாறாக பெரியார் ஏன் இந்த...

இராவணன் முடிவெய்தினார்

இராவணன் முடிவெய்தினார்

பெரியாரியலையே முழு நேரப் பணியாக ஏற்றுத் தொண்டாற்றிய பெரியாரியல்  போராளி இராவணன் (45) முடிவெய்தி விட்டார். திருப்பூரிலிருந்து அவரது பெரியாரியல் பயணம் தொடங்கியது. தமிழ்நாடு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்று தொடர்ந்து செயல்பட்டவர். மதுரைக்கு அருகே உள்ள அதிகாரப்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இராவணன், திருப்பூருக்குப் பணிக்கு வந்தபோது, ‘பெரியாரிஸ்டாக’ மாறினார். 15 ஆண்டுகாலம் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு இயக்கத்தோடு இணைந்து முழு நேர ஊழியராக பெரியாரியக்கங்களில் களப்பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு தஞ்சையில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம், ஜாதி ஒழிப்பு மாநாடு-பேரணி ஒன்றை நடத்தி சட்ட எரிப்பில் சிறைச் சென்ற போராளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அப்போது திருப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு, முழு நேரப் பணியாற்ற கழகத்துக்கு வந்து மாநாட்டு அலுவலகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அது முதல் எந்தப் பயனையும் எதிர்பார்க்காது முழு நேரப் பணியாற்றி வந்தார்....

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ… வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ…. சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ… அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது… காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் – என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்… இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்… பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்… இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன...

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர்  அகிலன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர் அகிலன் தாயார் முடிவெய்தினார்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப் பாளர் தோழர் அகிலன்  தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்று குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழகப் பொருளாளர்  திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், உள்ளிட்ட தோழர்கள் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 28112019 இதழ்

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி  – கீற்று நந்தன்

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி – கீற்று நந்தன்

அய்.அய்.டி. நிறுவனங்களில் நடந்தேறி வரும் பார்ப்பனியக் கொடூரங்கள் குறித்து திராவிடர் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தொடர்ச்சியாகப் பேசியும், போராடியும் வந்துள்ளனர். ஆனால், அவற்றின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் துணிந்ததில்லை.  அய்.அய்.டி. என்றில்லை, நடுவண் அரசு நிறுவனங்கள், கோயில்கள், நீதிமன்றங்களில் பார்ப்பனிய மேலாண்மையை மறைமுகமாக அங்கீகரித்தே நடுவண் அரசுகள் சுதந்திர காலம் தொட்டு இயங்கி வந்திருக் கின்றன. பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனியம் தொடுக்கும் கொடுமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தான் ஃபாத்திமாவின் தற்கொலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நந்தன், வள்ளலாரைக் கொன்றுவிட்டு, ‘ஜோதியில் அய்க்கியமானார்கள்’ என்று பொய்யுரைத்த பார்ப்பனியம்தான், இன்று மாணவர்களின் தற்கொலையை ‘பாடத் திட்டங்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என நாக்கூசாமல் கூறுகிறது. கடந்த 2019, நவம்பர் 9ஆம் தேதி சென்னை அய்.அய்.டி.யில் விடுதியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் என்ற...

இணையர் தேவை

இணையர் தேவை

இரா. மூர்த்தி; வயது : 50; மணமாகாதவர்; பத்தாம் வகுப்பு; மாத வருமானம் – ரூ. 20,000/-. பனியன் நிறுவனத்தில் தொழிலாளி; சொந்த வீடு; தனிநபர்; பெரியார் பணியில் ஆர்வமுடையவர். விரும்புவது : 40 வயதுக்கு மேற்பட்ட இணையர்.  குழந்தைகள் இருப்பது விரும்பத் தக்கது. இயக்கப் பணிக்கு குழந்தைகளுடன் வர ஈடுபாடு உடையவராக இருத்தல் நலம். தொடர்புக்கு : மூர்த்தி – 9843604153 (வி-எம்.) பெரியார் முழக்கம் 28112019 இதழ்

இதற்குப் பெயர்தான் காவிப் புனிதமா?

இதற்குப் பெயர்தான் காவிப் புனிதமா?

‘காவி’ப் புனிதம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளுவருக்கும் ‘காவி’ உடை போர்த்தி ‘இந்து மதக் காவலர்’ என்கின்றன, சங்பரிவாரங்கள். இந்து மதம், பார்ப்பனரல்லாத மக்களை வேத அதிகாரத்துக்கு அடிமைப்படுத்தி ‘சூத்திரா’ என்ற இழிவைத் திணித்து, ‘கடவுள் – மதம்’ என்ற நம்பிக்கை மாயைக்குள் நமது மக்களை மூழ்கச் செய்திருக்கிறது. உள்ளே மறைந்து கிடப்பது பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு. இந்த உண்மைகளைப் பேசினால் இந்து மத எதிர்ப்பாளர்கள் என்று ஓலமிடுகிறார்கள். வீதிகளில் இறங்கி இவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார், எச். ராஜா என்ற பார்ப்பனர். ‘காவிப் புனிதம்’ பேசும் கூட்டங்கள், அந்தப் புனிதங்களுக்குள் பதுங்கிக் கொண் டிருக்கும் மோசடிக்காரர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? நித்தியானந்தா காவி உடை ‘ஆன்மீக’க்காரர். இளம் பெண்களைக் கடத்தி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறார். புகார் தந்த இளம் பெண்களின் பெற்றோர், எச். ராஜா ‘குல’ வம்சமான பார்ப்பனர்கள் தான். குஜராத் காவல்துறை, காவி நித்தியானந்தா...

இஸ்லாமியர் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு

இஸ்லாமியர் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு

மொழிக்கு மதம், ஜாதி அடையாளங்கள் கிடையாது. அது மக்களுக்கானது. ஆனால் மொழியையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. இந்திய மொழிகளுக்கு எல்லாம் ‘தாய்மொழி’ கடவுளுக்கான மொழி என்று இவர்கள் கூறும் ‘சமஸ்கிருதம்’, மக்களுக்கான மொழியல்ல. அது ‘தேவபாஷை’. எனவே “பிராமணர்”களுக்கான மொழி என்று வர்ணாஸ்ரமத் திமிர் பேசுகிறார்கள். உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் ஃபெரோஸ்கான் என்ற இஸ்லாமியர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இளம் வயது முதலே சமஸ்கிருதம் படித்து, அந்த மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். உரிய கல்வித் தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வானார். ஆனால் பல்கலைக்கழகப் பார்ப்பன மாணவர்கள் பார்ப்பன பேராசிரியர்கள் இஸ்லாமியர் சமஸ்கிருதத் துறையில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டு வாரம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. உ.பி. முதல்வர் காவி உடை சாமியார் ஆதித்யநாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான வினய் பாண்டியா, போராடிய...

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ஆம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை… நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்டமேற் படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50 சதவீதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு OBC மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும்,...

அயோத்தித் தீர்ப்பை மறு ஆய்வு செய்க: தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்

அயோத்தித் தீர்ப்பை மறு ஆய்வு செய்க: தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்

பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அயோத்திப் பிரச் சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 21.11.2019 அன்று மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), தெஹலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), தனியரசு (சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். அயோத்திப் பிரச்சினையில் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, என்றும் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், கழக மாவட்ட செயலாளர் இரா....

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடு இரு பிரிவினருக்கு மிடையே மோதலையும் பதற்றத்தையும் உருவாக்கிடும் கருத்துகளைத் தெரிவித்த பார்ப்பனர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் 22.11.2019 அன்று நடந்த சென்னை செய்தியாளர் சந்திப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். புகார்கள் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்த பிறகும் கைது செய்யப்படாததோடு, புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் பேட்டியில் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்: “கேரளாவில் நடந்த பிராமணர் உலக மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பேராசிரியர் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை நாயுடன் ஒப்பிட்டும் பேசினார். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில்  அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகை திருவள்ளுவன் நேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 153ஏ, 153பி, 5.5ஏ, 5.5பி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல்...

பழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி

பழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி

2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி. யில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி-தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற பழங்குடி பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, மாநில அரசின் விருது பெற்றவர். மாதம் ரூ.17,500 உதவித் தொகை பெற்று, 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க முடியும். ஆந்திராவிலே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அழைப்பு விடுத்தும்கூட, அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலேயே படிக்க விரும்பினார். (பொதுவாக அய்.அய்.டி.களில் மாணவர்கள் சேர்க்கை தான் அதிகம் இருக்கும். மாணவிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதிலும்கூட மனுதர்மக் கொள்கைதான்) தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப் பயிற்சி கட்டாயம். இயற்பியல் (ஞாலளiஉள) மிகச் சிறந்த அறிவு பெற்றவர் சுஜி....

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட் டிருந்தது. சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன. இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து)  தனியார் நடத்துபவை. ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக்...

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா? இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப்...

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடு களை எதிர்த்து 1998இல்...

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம் வயது பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவின் மீது அளித்த தீர்ப்பில்  நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஏற்கனவே அளித்த தீர்ப்பு வழியாகப் பெண்கள் கோயிலுக்குப் போக உரிமை கிடைத்தது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை இப்போது மாற்றியுள்ளனர். இறுதி விசாரணையின் தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை என்றும் இப்போதும் உச்சநீதிமன்றம் (பெரும்பான்மை தீர்ப்பு) தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால்  கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதித்ததுதான் என்று கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி நடத்திய உயர்மட்டக் குழு கூட்டத்தில் பெண்ணுரிமை கண்ணோட்டத்தோடு கோயிலுக்கு வந்த பெண்களுக்கு அரசு...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தியில் இராமன் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக் குறித்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி எழுப்பி உள்ள கேள்விகள் ‘தி டெலிகிராப்’ ஏட்டில் வெளி வந்துள்ளது. “அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததைச் சிறுபான்மை யினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும். 1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும்,  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவரவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காக்கும் உரிமை உண்டு. அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை...

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு டிசம்பர் 22இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணிக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தி பெரும் வெற்றி பெற்றோம். தொடர்ந்து தமிழ்நாடு ‘காவி’கள் மண் அல்ல என்பதை  உணர்த்தவே நீலச்சட்டைப் பேரணி! திருச்சிப் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததைப் போல் – அந்த எண்ணிக்கையையும் மிஞ்சக் கூடிய அளவில் நீல சட்டைப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும்! ஜாதி எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்புக்கு அம்பேத்கரும்-பெரியாரும் நமக்கு இரு கண்கள்; அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கர், தனது அறிவு ஆற்றல் சட்டப் புலமையால் சமூக நீதி என்ற இடஒதுக்கீடு தத்துவத்தை சட்டத்தின் வழியாக நிலைநிறுத்தினார். பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்து விட்டவரும்...

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

இலங்கை தேர்தலில் சிங்கள பெரும் பான்மையே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சேயின் சகோதரர் இவர். இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக அவரது தம்பி நிறுத்தப்பட்டார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய இராணுவம் அங்கே அமைதிப் படை என்ற பெயரில் சென்றபோது இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டவர் அப்போது ஜெயவர்த்தனேயைத் தொடர்ந்து அதிபரான பிரேமதாசா. பிரேமதாசா விடுதலைப் புலிகள் ஒப்பந்தம் ஒன்றும் அப்போது உருவானது. சில மாதங்களில் பிரேமதாசா குண்டு வெடிப்பில் பலியானார். இலங்கையில் இப்போது ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து,...

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 17.11.2019.ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம் : நாவலர் ந.மு.வேங்கட்டசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர். கருத்துரை : சமூக விடுதலை எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், ஊடக அறம் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு.ஜென்ராம் அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள்.  

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் தோழர் அகிலன் அவர்களின் தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வந்திருந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அப்போது கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் உடன் இருந்தனர்.

இயக்குநர் அருண்மொழி காலமானார்

இயக்குநர் அருண்மொழி காலமானார்

நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி (49) மாரடைப்பால் 9.11.2019 அன்று முடிவெய்தினார். பூனாவில் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர் அருண்மொழி. சென்னை திரும்பியவுடன் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் ருத்ரய்யாவிடம் இணை இயக்குநராகப் பணி யாற்றினார். பின்னர் ‘ஏழாவது மனிதன்’ (1982) படத்தில் இயக்குநர் ஹரிஹரனிடம் பணி யாற்றினார். அப்படத்துக்கு வசனமும் எழுதினார். அதன் பின்னர் அவரே, நாசர், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ‘காணிநிலம்’ (1987) ‘ஏர்முனை’ (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் அருண்மொழியின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் அயல்நாடுகளில் திரையிடப்பட்டன. அருண்மொழி, நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிகத் திரைப்பட இயக்குநராக செயல்பட மனமின்றி இயங்கி வந்தார். எனினும் திரைப்படத் துறைக்கு ஆர்வத்தோடு வரும் இளைஞர்கள் பலருக்கும் திரைப்படத்தைச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார். தாமிரபரணி மாஞ்சோலை...

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தியது ஆகிய பணிகளில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் டெல்லியில் முடிவெய்தினார். அவருக்கு வயது 86. கேரளாவில் 1932 டிசம்பர் 30ஆம் தேதி பிறந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். 1956இல் அய்.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வான அவர், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். எஸ்.சி. பிரிவினருக்கு சிறப்புக்கூறு திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர். 1990இல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மத்திய அரசின் கொள்கை உருவாக்க குழுக்களில் பொறுப்பாளராக பணியாற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். ‘நீதிபதி கிருஷ்ணய்யர் விருது’ உள்ளிட்ட பல...

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில்  பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார்....