Author: admin

தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’

தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’

1967 மார்ச் 6, அண்ணா தலைமையில் பார்ப்பனரல்லாத அமைச்சரவை கடவுள் பெயரால் உறுதி ஏற்காமல், ‘உளமாற’ என்ற உச்சரிப்போடு தமிழ்நாட்டில் பதவி யேற்று திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்டது. 55 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றன. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கான கூட்டணி என்ற நடைமுறையை உருவாக்கிக் காட்டியவர் அண்ணா. காமராசரை வீழ்த்த அண்ணாவைப் பயன்படுத்திக் கொள்ள இராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தது. பெரியார் உறுதியாக காமராசரை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, “பெரியாரின் கொள்கையிலிருந்து அண்ணா விலகி வந்து விட்டார்; ‘பெருங்காய டப்பா’வாகத்தான் இருக்கிறார். பெரியார் கொள்கையான ‘பெருங்காயம்’ இப்போது அண்ணாவிடம் இல்லை” என்று தனது பார்ப்பன சமூகத்துக்கு உறுதியளித்தார். தேர்தலில் 137 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆச்சாரியாரை கைவிட்டு அண்ணா பெரியாரை சந்திக்க திருச்சிக்கு தனது முக்கிய அமைச்சர்களுடன் வந்து விட்டார்....

இது உண்மையா? : தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். பேராசிரியர்கள்

இது உண்மையா? : தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். பேராசிரியர்கள்

பாரதிய சிக்ஷா மண்டல் எனும் வலதுசாரி இந்து அமைப்பு கல்லூரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. 1969இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் கிளைகளை தொடங்கி இருக்கிறார்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விஜயபாரதம் இதழின் சந்தாதாரர் ஆக்கப்பட்டு மாதந்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படுகிறது. பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இந்த உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு நம்மிடையே உள்ளது கவர்னர் அலுவலகம் நமது கையில் உள்ளது ஆகவே உயர்கல்வித் துறையில் உயர் பதவிகளை நம்மால் மட்டுமே அடைய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் சங்க அனுபவம் கொண்டவர்களோ சமூக நீதிக்காக பாடுபடுபவர்களோ கிடையாது அவர்கள் தங்களுக்கு பதவி வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இவர்கள் ஆர்எஸ்எஸ்சின் கிளைகளான விஎச்பி, ஏபிவிபி...

கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்

கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்

தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ‘கவுண்டர்’ சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த சில ஜாதி வெறியர்கள் கோகுல்ராஜ் தலையைத் துண்டித்து, பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் வீசி ‘தற்கொலை’ என்று ஏமாற்ற முயன்றனர். திராவிடர் விடுதலைக் கழகம் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. ஜாதிவெறிக் கும்பலை உடனே கைது செய்து வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்தார். (‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 2, 2015) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர், தலைமறைவாகி காவல்துறைக்கு சவால் விடும் ‘வாட்ஸ்அப்’ பதிவுகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 19.7.2015இல் தர்மபுரியில் கூடிய கழகச் செயலவைக் கூட்டத்தில், காவல் துறையில் ஊடுறுவியுள்ள ஜாதிய மனநிலையைக் கண்டித்தும் அவர்களின் அலட்சியப் போக்கால் தான் தேடப்படும் குற்றவாளிகள், காவல்துறைக்கு சவால் விடுகின்றனர்...

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ்  ஜாதிவெறிக் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியானது

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஜாதிவெறிக் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியானது

சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது. இந்த வழக்கில் தண்டனை  மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி நீண்ட நெடிய காலம் நடந்து வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த கொலையில் தற்போதுதான் தீர்ப்பு  வந்துள்ளது. சாதி ஆணவப் படுகொலையான இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா உயரதிகாரி களின் நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதுகுறித்த விசாரணையும் கூட நடை பெறவில்லை. கோகுல்ராஜ் கொலைக்கு நீதி  கிடைத்துள்ளதுபோல விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அவரது தற்கொலைக்குக் காரணமான உயரதிகாரிகள் தண்டிக்கப்பட...

Editorial – ‘Dravidan Model’ started by Anna

Editorial – ‘Dravidan Model’ started by Anna

On March 6, 1967, the non-brahmin cabinet headed by Anna swearing in Tamil Nadu with the accent ‘Ulamara’ (Solemly affirmed) without taking oath in the name of God has laid the foundation for Dravidian rule. For 55 years the DMK and the AIADMK have alternately shared power in Tamil Nadu. Anna was the one who created the practice of electoral alliance in the political history of Indian elections. Rajagopalachari’s Suthandra Party, trying to use Anna of DMK to overthrow Kamarasar rule took place in the alliance. Periyar firmly supported Kamarasar. Rajagopalachari said, “Anna has strayed from Periyar’s policy; He is...

நல்ல நடவடிக்கை: பார்ப்பன பயங்கரவாதி கைது

நல்ல நடவடிக்கை: பார்ப்பன பயங்கரவாதி கைது

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், சென்னை 134 ஆவது வார்டில் (மேற்கு மாம்பலம்) ஒரே ஒரு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதை ஒட்டி, யு டியூப்(லிபர்டி) சேனல் அந்த வார்டு மக்களிடம் கருத்து கேட்டது. அதில் பேசிய ‘ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன்’ “பெரியார், அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொன்றிருக்க வேண்டும். அதற்குப் பிறகு காந்தியைக் கொன்றிருக்க வேண்டும். நான் ஒரு இந்து தீவிரவாதி” என்று பேசியிருந்தார். வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியவரை சைபர் கிரைம் போலீசார், 28.02.2022 அன்று கைது செய்தனர். வழக்கம் போல், இவர் மனநலம் குன்றியவர் என்ற புரளியை கிளப்பி விட்டார்கள். பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

காஷ்மீர் உரிமைக்கு குரல் கொடுத்த தமிழ்நாடு

காஷ்மீர் உரிமைக்கு குரல் கொடுத்த தமிழ்நாடு

துன்பமான நேரங்களில் தான் உண்மையான நண்பர்கள் யாரென்பதை அறிய முடியும். நண்பர்களாக நாங்கள் யாரை நினைத்தோமோ அவர்கள் ஆகஸ்ட் 05,2019ல் (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள்) எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு வாய் திறக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எழுப்பிய குரல் காஷ்மீர் வரை எதிரொலித்தது. இதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். (ஒமர் அப்துல்லா – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில்) பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 28.02.2022 அன்று காலை 11:30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டம் திராவிடர் தமிழர்கட்சி சார்பில் நடைபெற்றது. திராவிடர் தமிழர்கட்சித் தலைவர் வெண்மனி முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார். விடுதலை இராசேந்திரன் “ஆளுநர் எவ்வளவு நாள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாள் வரை இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆளுநராக இருந்தவர், அதிமுக அனுப்பிய நீட்விலக்கு மசோதாவை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்திருந்தார். பின், நீதிமன்றம் தலையிட்டது. அதற்குப் பிறகு, இந்த மசோதாவிற்கு...

உ.பி. தேர்தலில் பாஜகவை மிரட்டும் ‘கோமாதா’க்கள்

உ.பி. தேர்தலில் பாஜகவை மிரட்டும் ‘கோமாதா’க்கள்

“உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 7 கட்ட தேர்தலில் 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பசுக்கள் விவகாரம் கிளம்பியுள்ளது. பசுவை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பசுப் பாதுகாப்பை பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்தியில் பாஜக ஆட்சி 2014 இல் அமைந்தது முதல் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் கொலைகளும் நிகழ்ந்தன. அதேசமயம், கைவிடப்படும் பசுக்களும் பிற மாடுகளும் தங்கள் பயிர்களை மேய்ந்து இழப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே புகார்களும் கிளம்பின. உ.பி.யில் ஆளும் பாஜக அரசு, இப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியது. இதனால் விவசாயிகள் அந்த மாடுகளைப் பிடித்து பள்ளி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் அடைத்தனர். மாடுகள் முட்டி உயிர்கள் பலியாகும் செய்திகளும் ஆங்காங்கே வெளியாகின. இதனால் முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 4-ஆம் கட்ட வாக்குப் பதிவை,...

பெரியாரை விமர்சிக்கும் தமிழ்த் தேசியர்கள் வாதங்களுக்கு ஆணித்தரமாக மறுக்கும் நூல் (3) விடுதலை இராசேந்திரன்

பெரியாரை விமர்சிக்கும் தமிழ்த் தேசியர்கள் வாதங்களுக்கு ஆணித்தரமாக மறுக்கும் நூல் (3) விடுதலை இராசேந்திரன்

ம.பொ.சி.யின் ஆர்.எஸ்.எஸ். குரல். பெரியார் பேசிய பெண்ணுரிமை உதிரி வாதமா? ஈழத் தமிழர் விடுதலைக்கும் திராவிட இயக்கத்துக்கும் இடையே வரலாற்றுப்பூர்வ உறவுகள் என்ன? ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. ப. திருமாவேலனின், “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூலின் இரண்டாம் தொகுதி மொழி, மொழி வழி மாகாணப் பிரிவினையின் வரலாறுகளை விளக்குகிறது. ம.பொ.சி. முன்மொழிந்தது – இந்துத்துவத் தமிழ்த் தேசியம், குணா முன் மொழிந்தது – இறையியல் தமிழ்த் தேசியம், பெ. மணியரசன் முன் மொழிந்தது – நிலப்பிரபுத்துவ தமிழ்த் தேசியம் என்று சான்று களுடன் நிறுவுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் திருவிதாங்கூர், கொச்சி என்ற இரண்டு பகுதிகளும் மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமஸ்தானங்களாக இருந்தன. மொழி வழி மாகாணப் பிரிவினையின் போது, திருவிதாங்கூர் இணைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக பெரியார் எழுதிய ஏராளமான அறிக்கைகளை தேதி வாரியாகப்...

பொது நன்மைக்குப் பாடுபடுபவர்கள் யார்?

பொது நன்மைக்குப் பாடுபடுபவர்கள் யார்?

நான் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். பொதுவாழ்வில் எந்தவிதமான இலாபத்தையும் கருதாமல், எந்தப் பெருமையும், சட்டசபை, ஜில்லாபோர்டு என்பதாக எதையும் கருதாமல் கை நட்டப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு உள்ளதையும் விட்டுவிட்டு, உள்ளபடி, பொதுநன்மை என்கிறதையே இலட்சியமாக கொண்ட யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகத்தார் என்கிற இந்த ஒரு கழகத்தாரைத் தவிர வேறு யாருமேயில்லை. மற்றவர்களெல்லாம் பாடுபடுகிறார்களென்றால் அந்தப் பாட்டை எலெக்ஷனுக்கும் மற்ற வாழ்வுக்கும் கொண்டுபோய் விற்று விடுகிறார்கள்; பலர் அதனாலேயே வயிறு வளர்க்கிறார்கள். மற்றும் எடுத்துப்பாருங்கள், ஒவ்வொருவரும் பொதுவாழ்வுக்கு வந்த போது அவர்களுக்கிருந்த யோக்கியதை, அந்தஸ்து, செல்வம் முதலியவைகளை அவர்கள் இன்றைக்கு இந்த பொதுவாழ்வின் பெயரால் எல்லாத் துறைகளிலும் எத்தகைய பெருமையான வாழ்வு நடத்துகிறார்கள் என்பவைகளை ! – பெரியார் – புரட்சிக்கு அழைப்பு 1954   பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

‘மூவாயிரம் ஆண்டுகளாக எந்தத் திணிப்புகளும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதில்லை’

‘மூவாயிரம் ஆண்டுகளாக எந்தத் திணிப்புகளும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதில்லை’

நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகின்ற பொழுது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நான் மாநிலங்கள் என்று சொல்கிறேன் என்றால், அந்தச் சொல் எங்கிருந்து வந்தது ? ஒரு மாநிலம் என்றால் என்ன ? மண்ணைப் பற்றியது மட்டுமல்ல; மக்களிடமிருந்து அந்த மண்ணினுடைய தன்மையை அறிவது – மக்களிடமிருந்து அவர்களுடைய குரல் வெளிவருவது – அவர்களுடைய குரலிலிருந்து அவர்களுடைய மொழி வெளிவருகின்றது- மொழியிலிருந்து கலாச்சாரம் வருகின்றது – கலாச்சாரத்திலுருந்து சரித்திரம் வருகின்றது – பின்னர் வரலாற்றிலிருந்து மாநிலம் உருவாகுகிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கின்றபொழுது, மாநிலங்களிலிருந்துதான் இந்தியா என்பதே வருகின்றது என்பதை நான் அழுத்தமாகச் சொன்னேன். எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாக மாறுகின்றது; வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது; வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகின்றன. எழுத்துக்களை மதிக்கவில்லை என்றால், சொற்களை மதிக்கவில்லை என்றால், வாக்கியத்தை மதிக்கவில்லையென்றால் வேறு எதையும் மதிக்க முடியாது. ட பிரதமர் இங்கு...

தீட்சதர்கள் அத்துமீறல்களைக் கண்டித்து தில்லையில் ஆர்ப்பாட்டம்

தீட்சதர்கள் அத்துமீறல்களைக் கண்டித்து தில்லையில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராசர் கோவிலில், சிற்றம்பல மேடையில் நின்று வழிபாடு நடத்திய பெண்ணை தீட்சிதர்கள் தாக்கினார்கள். தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பர நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் அனைத்து சாதியினரையும் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக சிதம்பரம், காந்தி சிலை அருகில் பிப்.28ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். கழகத் தலைவர் செய்தியாளர்களிடத்தில், “தமிழ்நாட்டில், அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத, அரசுக்கு கட்டுப்படாத எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத இடமாக இந்த சிதம்பரம் நடராசர் கோவில் இருந்து வருகிறது. இங்கு மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல சமய உரிமைகளும் இங்கு மீறப்பட்டிருக்கிறது. வழிபாட்டுக்குச் சென்றவர்கள் தாக்கப்படுகிறார்கள், தேவாரம் பாட சென்றவர் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்....

தலையங்கம் அறநிலையத் துறையில் தடுமாற்றம்

தலையங்கம் அறநிலையத் துறையில் தடுமாற்றம்

சிவன் கடவுளுக்காக இரவு முழுதும் கண் விழிக்கும் ‘மகா சிவராத்திரி’ என்ற இந்துமதம் தொடர்பான ஒரு சடங்கை அறநிலையத் துறை மக்கள் விழாவாக மாற்றி ஆன்மீகப் பிரச்சாரங்கள் கலை நிகழ்வுகள் நிகழ்த்தி விடிய விடிய நடத்தப் போவதாக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அறநிலையத் துறையின் வேலை, கோயில் பாதுகாப்பு மற்றும் கோயில் குடமுழுக்கு பூஜை சடங்குகளை நடத்துவதற்கு உதவுதல் தானே தவிர, மதத்தை மக்களிடம் பரப்புரை செய்வது அல்ல என்ற முதல் எதிர்ப்புக் குரலை திராவிடர் விடுதலைக் கழகம் எழுப்பியது. முகநூல்களில் கருத்துக்கு வலிமையான ஆதரவுகள் வெளிப்பட்டன. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை ‘ஆன்மீக சுற்றுலா மய்யமாக’ மாற்றப் போவதாக தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் தேர்தல் பரப்புரையில் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் அரங்கேற்றப்படவிருந்தது. தூய்மை நகரம், தொற்று நோய் இல்லாத நகரம், குற்றங்கள் குறைந்த நகரம் என்ற அறிவிப்புகளில் நியாயம் இருக்கிறது. ‘ஆன்மீக...

Stumbling block in the Hindu charitable sector

Stumbling block in the Hindu charitable sector

Tamil Nadu Charitable Trusts Minister Sekarbabu has announced that the charitable department will turn a Hindu-related ritual called ‘Maha Shivaratri’, a night-time vigil for Lord Shiva, into a people’s festival and conduct spiritual campaigns and art events. Dravidar Viduthalai Kazhagam raised the first objection to Charitable Department work is that religion was not to be propagated to the people except for the protection of the temple and to assist in the conduct of the temple rites. Strong support for the idea emerged on social media including Facebook. During the election campaign candidate announced that Mylapore Assembly constituency to be turned...

Muthuvel Karunanidhi Stalin makes others to look back Tamil Nadu!

History is making leaders; The Tamil Nadu political arena has met many leaders. If we want to list the leaders in Tamil Nadu who have won the hearts and minds of the people in the face of the challenges of the times, we have to start from the Kamarajar. Next Anna; Next Kalainjar; Next is MGR, next is Jayalalithaa. Political leadership of Tamil Nadu from Kalainjar M.G.R., after the demise of MGR, came to the Kalaijar – Jayalalithaa. As the two completed their journey, the Sanathana forces deliberately moved to end the Dravidian era of the ‘Periyar-Anna-Kalainjar’ who changed the...

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது...

நீட் : ஆளுநர் கூறும் வாதங்கள் சரியா?

நீட் : ஆளுநர் கூறும் வாதங்கள் சரியா?

ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிட குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்கள், ஒன்று – மசோதா மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது; இரண்டு – ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த காரணங்களுமே நகைப்புக்குரியது மட்டுமல்ல, ‘நீட்’ தேர்வு குறித்த புரிதல் இன்மையை வெளிக் காட்டுகிறது சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத் துக்கும் உண்டு. மாணவி அனிதா முதல் ‘நீட்’ தேர்வு காரணமாக தங்களை மாய்த்துக் கொண்ட பலரும் சமூகத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தாம். அவர்கள் பன்னி ரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியாமல் வாய்ப்பை இழந்துள்ளனர். இதைத்தான் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது. ஏன், தற்போது வெளிவந்துள்ள மருத்துவ இளங்கலை படிப்பு முடித்து (எம்.பி.பி.எஸ்.)க்கான கலந்தாய்வு...

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

‘மாட்டிக்கிட்டாரு, அய்யரு மாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலை காஞ்சி ஜெயேந்திரன், சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதையொட்டி தலித் சுப்பையா எழுதினார். இந்தப் பாடல் பிறந்த வரலாற்றை அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கார்த்திக் சென்னையில் நடந்த படத்திறப்பு நிகழ்வில் விளக்கினார். “2004ஆம் ஆண்டு எங்கள் குழு டெல்லிக்குப் பயணமானது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது டெல்லியில் இரட்டை வாக்குரிமை, தனியார் துறை இடஒதுக்கீடு சுய நிர்ணய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்தப் போனோம். பயணத்தில் சங்கராச்சாரி கைது பற்றிய செய்தி கிடைத்தது. உடனே இந்த ஜெயேந்திரனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமே என்று சுப்பையா கூறினார். அது குறித்து சிந்தனையில் மூழ்கினார். டெல்லிக்குப் போனவுடன் ஓர் இரவு முழுதும் கண் விழித்து, ‘மாட்டிகிட்டாரு; அய்யர் மாட்டிகிட்டாரு’ என்ற பாடலை எழுதி மெட்டும் போட்டார். அடுத்த நாள்...

தமிழை இலக்கியத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக தாங்கிப் பிடித்தவர் பெரியார் (2) – விடுதலை இராசேந்திரன்

தமிழை இலக்கியத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக தாங்கிப் பிடித்தவர் பெரியார் (2) – விடுதலை இராசேந்திரன்

தன்னுடன் கருத்து முரண்பட்ட சகஜானந்தா, டி.கே. சிதம்பரனார் போன்ற அறிஞர்களுடன் நட்பு பாராட்டி உரையாடினார் பெரியார். தீவிர சிவபக்தர் ‘கா.சு.’ பிள்ளை இறுதிக் காலத்தில் மாதந்தோறும் பணம் அனுப்பி உதவினார் பெரியார். தேவநேயப் பாவாணரின் நூலை சுமந்து சென்று கூட்டங்களில் விற்றார். திராவிட மொழி ஞாயிறு என்ற பட்டத்தை வழங்கி யவர் பெரியார். சில தமிழ் தேசியர்கள் திராவிடம் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி ‘மொழி ஞாயிறு’ என்று சுருக்கி விட்டனர்.   ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. நான்காவது அத்தியாயம் – பெரியாருடன் இணைந்து பணியாற்றிய 50 புலவர்களுடன் பெரியாருக்கு இருந்த நெருக்கமான உறவுகளை விரிவாக அலசுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) மிகச் சிறந்த தமிழ் அறிஞர்; சட்டம் படித்தவர். நீதிபதி பதவிக்கு தகுதியிருந்தும் நீதிக்கட்சியில் ஈடுபாடு காட்டியதால் பதவி...

தமிழில் பெயர்கள்

தமிழில் பெயர்கள்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்ப்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அதுபோலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தால் அதிலே மதக் கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர சோழ பாண்டியர்கள் என்பவர்களான முற்ப்பட்ட மூவேந்தர் களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை. நாளாக ஆக மத ஆதிக்கம் குறைந்துவிட்டது. மேல்சாதியினர் இராமன், கிருஷ்ணன், இலட்சுமி, பார்வதி என்று வைத்துக் கொண்டனர். கீழ்சாதியினர் கருப்பன், மூக்கன், வீரன், கருப்பாயி, காட்டேரி, பாவாயி, என வைத்துக் கொண்டனர். கீழ் சாதியினர் சாமி, அப்பன் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. சாமி, அப்பன் என்று கீழ் சாதியினர் பெயர் சூட்டினால், அவரை உயர்சாதியினர் சாமி என்று அழைக்க வேண்டி வரும், அதனால் அப்படிச் சென்னார்கள். அதை மீறி இராமசாமி, கந்தசாமி என்று யாராவது பெயர் வைத்திருந்தால் அவரை ராமா, கந்தா என்று அழைத்தார்கள். விடுதலை 24.03.1953...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி பிறந்தநாள் நிகழ்வில், 17.2.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு 50 சந்தாக்களுக்கான தொகை ரூ.12500/-ஐ கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம், திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 24022022 இதழ்

தில்லை தீட்சதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

தில்லை தீட்சதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20 தீட்சதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை. நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடை மீது ஜெயசீலா என்ற 37 வயது பெண் பக்தை – அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவரை சிற்றம்பல மேடையில் ஏறக்கூடாது என்று தடுத்து கொடூரமாக தீட்சதர்கள் தாக்கியிருக்கிறார்கள். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீட்சிதர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக் கிறார்கள். தில்லை நடராஜர் கோவில் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஆனால் தீட்சிதர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பக்தர்கள் காணிக்கைகளை கொள்ளையடிப்பதிலும் பங்கு போடுவதற்கும் ஒருவரை ஒருவர்...

பங்கு சந்தையில் பார்ப்பனர்கள் கொட்டம் : ‘ரிக்-யஜுர்-சாம@அவுட்லுக்.டாட்.காம்’

பங்கு சந்தையில் பார்ப்பனர்கள் கொட்டம் : ‘ரிக்-யஜுர்-சாம@அவுட்லுக்.டாட்.காம்’

பங்கு சந்தையில் பார்ப்பனர்கள் அடித்த கொட்டம் – வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன், சாமியாரின் வழிகாட்டல்களை பெற்று செயல்பட்டதில் புதிய திருப்பமாக சித்ரா ராமகிருஷ்ணனை ஆட்டுவித்தது சாமியாரா? அல்லது அவரைப் பற்றி நன்கு அறிந்த ஆசாமியா? என்று கேள்வி எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணனின் கூந்தல் அழகை வர்ணித்தும், அவரை சிசெல்ஸ் தீவுக்கு செல்லலாம் என்றும் அழைப்பு விடுத்தும் சாமியாரின் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வடிவேலுவின் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தையில் அரங்கேறிய காமெடி கலந்த மோசடியே பொருளாதார வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. சபைலயலரசளயஅய@டிரவடடிடிம.உடிஅ  (ரிக்யஜுர்சாம@அவுட்லுக்.காம்)  என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து சிரோன்மணி என்ற சாமியார் அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் பரிந்துரைகளை நம்பி தேசிய பங்குச்சந்தையில், பங்குச் சந்தை அனுபவமே இல்லாத ஒருவருக்கு பதவிகளையும், பணத்தையும் வாரியிறைத்துள்ளார் அந்த பங்குச்சந்தையின்...

“வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்”

“வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்”

திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் அக்.2, 2005 அன்று காலை-மாலை நிகழ்ச்சிகளில் தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கிடையே தோழர் தலித் சுப்பையா, அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைத்தார். அவர் பேசியவைகளிலிருந்து ஒரு தொகுப்பு. தோழர்களே! பெரியார் மரணமடைந்தபோது அதற்கு, தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கர மடம்; மற்றொன்று அகில இந்திய பார்வர்டு பிளாக். சங்கரமடம், நமது இன எதிரி. எனவே அது இரங்கல் தெரிவிக்காதது வியப்பு அல்ல. ஆனால் நமது மண்ணின் மைந்தர்களான கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? இதற்கான வரலாற்றுக் காரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 1957இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் எரிக்கப்பட்டன. அது ஒரு சாதிப் போர். அப்போது முதல்வராக இருந்தவர் பெரியவர் காமராசர். மாபெரும் மனிதர். எங்களுடைய கல்விக்கு அவர்தான் அடித்தளமிட்டவர். சாதிக் கலவரத்தை...

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

மக்களிடம் ஜாதி, மதம் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் தனது ‘விடுதலைக் குரல்’ கலைக்குழு வழியாக போரிசைப் பாடல்களை பாடி வந்த தலித் சுப்பையா, பிப். 16, 2022 அன்று புதுச்சேரியில் முடிவெய்தினார். இறுதி காலத்தில் தலித் சுப்பையா எனும் பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார். ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் ஏழைக் குடும்பத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், தடைகளைத் தகர்த்து, கல்வி பயின்று, 1980களில் புதுச்சேரிக்கு குடியேறினார். தொடக்கக் காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளோடு புரட்சிப் பாடகரானார். பல நூறு பாடல்களை எழுதி, அவரே இசை அமைத்தார். தலித் சுப்பையா என்று தன்னை அடையாளப்படுத்தினார். பாடல் வரிகளில் அலங்காரங்கள் அழகுச் சொற்களைத் தவிர்த்து, வரலாறு களையும் சிந்தனைகளையும் பொதித்து வைத்தார். தனது இசை நிகழ்ச்சி மேடைகளை சிந்தனை மேடைகளாக்கினார்.  பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர்...

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

.கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது அவதூறுகளை பரப்பி முகநூல், யூ டியூப் போன்றவைகளில் நேரலையாக பதிவிட்ட தமிழச்சி, சாரதா, தாமரை தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் மீது இந்திய தண்டனைச் சட்டம் 190 (i) (a) மற்றும் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கை, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி பதிவு செய்துள்ளார். வழக்கை வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெருநகர நீதிபதி முன்பு பதிவு செய்துள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம்,சில தனி நபர்கள் மீதான பாலியல் முறைகேடு குறித்து தான் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரை கொளத்தூர் மணி விசாரிக்கவில்லை என்று கூறி அவர் குற்றவாளியை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக தமிழச்சி என்பவர் எழும்பூர் நீதிமன்ற வாயிலில்...

Editorial – 7.5% internal allocation: The false face of the BJP

Editorial – 7.5% internal allocation: The false face of the BJP

The BJP that supports the ‘NEET’ examinations, along with so called Sacred thread wearing ones who claim to be born in the head of “Brahma” who takes part in televised debates under the guise of “social activists” and “political critics” has repeatedly put forward an argument that they supports the quota for 7.5 percent of government school students. They also claim that their National leader ,Natta is the one who come up with Quota for Government School Students. This is a green lie. The AIADMK rules has passed 7.5 percent internal allocation. When the bill was passed in the Assembly...

எட்வின் வழங்கிய 40 சந்தாக்கள்

எட்வின் வழங்கிய 40 சந்தாக்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு 40 சந்தாக்களுக்கான ரூ.10 ஆயிரம் தொகையை சென்னை கழகத் தோழர் எட்வின், ஜாதி மறுப்பு இணையர் விருது வழங்கும் விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 17022022 இதழ்

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் கூறுகிறது

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் கூறுகிறது

தமிழ்நாட்டை திராவிட ஆட்சி சீர்குலைத்துவிட்டது என்று சில தமிழ்த் தேசிய அமைப்புகளும், கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பாஜகவினரும் பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி தருகின்ற வகையில் ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் என்ற அமைப்பு, இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பிலும், வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்று நிற்கிறது என்று அண்மையில் வெளியிட்ட மூன்றாவது அறிக்கையில் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரையை நிதி ஆயோக் அமைப்பு தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்து இருக்கிறது. இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் பிப்ரவரி 11,2022 இது குறித்து வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான கருத்துக்களை கீழே தருகிறோம். நிதி ஆயோக் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள். 1)         வறுமை ஒழிப்பில் கேரளா, ஆந்திரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தில் நிற்கிறது. கேரளா 83, தமிழ்நாடு 86 புள்ளிகள்....

பெரியாரியலுக்கு – ஒரு வரலாற்று ஆவணம் (1) – விடுதலை இராசேந்திரன்

பெரியாரியலுக்கு – ஒரு வரலாற்று ஆவணம் (1) – விடுதலை இராசேந்திரன்

பெரியார் தமிழ்ப் புலவர்களை இனம் சார்ந்து அரவணைத்தார். அவர்கள் இருட்டடிப்புக்குள்ளாக்கப் படுவதைக் கண்டு வருந்தினார். தமிழறிஞர்களின் அறிவாற்றலை மனந்திறந்து பாராட்டினார். தமிழ் நூல்களை தனது ‘குடிஅரசு’ ஏட்டில் அறிமுகப்படுத்தினார்.   ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. ப. திருமாவேலன் இரண்டு தொகுதிகளாக 1579 பக்கங்களுடன் வெளி வந்திருக்கிற நூல் “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற ஆவணம், பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுவோர்க்கு பதில் தருவதே இந்த நூலின் நோக்கம் என்று நூலாசிரியர் ப. திருமாவேலன் கூறினாலும் நூலின் உள்ளடக்கத்தை அப்படிச் சுருக்கி விடக் கூடாது. பெரியார் சிந்தனை மற்றும் தத்துவங் களுக்கான ஒரு வரலாற்று ஆவணமாக இது வெளி வந்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் படைக்கும் நூல்களைவிட பத்திரிகையாளர் எழுதும் நூல்கள் மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில்...

அறிவை அலட்சியப்படுத்தும் காதல் போதாது..

அறிவை அலட்சியப்படுத்தும் காதல் போதாது..

வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். அது மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம் தான் பெரிதும் காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது. ஆகையால் அறிவையும் நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். – குடி அரசு – 10.01.1948 பெரியார் முழக்கம் 17022022 இதழ்

சங்கிகளின் தேசபக்தி அரசியலை கிழித்தெறிந்த முதலமைச்சர்

சங்கிகளின் தேசபக்தி அரசியலை கிழித்தெறிந்த முதலமைச்சர்

தூத்துக்குடி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் (காணொளி), பிரதமர் மோடிக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மிக மிக நுட்பமான, ஆழ்ந்த சிந்தனைக்கும், பரிசீலனைக்கும் உரியது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கு முன்னால் சிறு விளக்கத்தை கூற விரும்புகிறோம். தேசம், தேசபக்தி என்ற சொல்லாடல்களை மதவாதத்திற்கு பாஜகவும், சங் பரிவாரங்களும் பயன்படுத்துகின்றன. இந்திய தேசபக்தியை இந்துவிலிருந்து பிரிக்க முடியாது. இந்துவாக இருப்பது தான் இந்தியன் என்பதற்கான அடையாளம். இந்து என்று தங்களை அடையாளபடுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவிற்கு அந்நியர்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தம், பாஜகவின் கொள்கை. அதனால் தான் அவர்கள் அகண்ட பாரதத்தை ஒரு காலத்தில் பேசினார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா, ஆப்கானிஸ்தான், இலங்கை என்று அத்தனை நாடுகளைக் கொண்ட அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும் என்று எல்லையை வரையறுத்து இந்து மதத்தை அவர்கள் எல்லைக்குள் திணித்தார்கள். இப்போது நாடுகள் பிரிந்த பிறகு அந்த முழக்கத்தை அப்படியே ஒதுக்கி...

நீட் ; ஓ.பி.எஸ் புரட்டுக்கு மறுப்பு

நீட் ; ஓ.பி.எஸ் புரட்டுக்கு மறுப்பு

காங்கிரஸ் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சார்ந்த காந்தி செல்வன் என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும் இதையே கூறி வருகிறார். இதன் வரலாற்றுப் பின்புலத்தை நாம் பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி ஏன் நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் 2009 இல் ஒரு வழக்கு வந்தது. 412 கல்லூரிகளில் 35 வகையான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு வர வேண்டும் என்று சிம்ரன் ஜெயின் என்பவரும் அவருடன் வேறு சிலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலுக்கு ஒரே தேர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நீட் தேர்வு முறையைக் கொண்டு வர...

தலையங்கம் 7.5% உள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வின் பொய் முகம்

தலையங்கம் 7.5% உள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வின் பொய் முகம்

‘நீட்’ தேர்வை ஆதரிக்கும் பா.ஜ.க.வும் ‘சமூக ஆர்வலர்கள்’, ‘அரசியல் விமர்சகர்கள்’ என்ற முகமூடி களோடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் “பிரம்மா”வின் தலையில் பிறந்ததாகக் கூறும் பூணூல் செல்லக் குழந்தைகளும், திரும்ப திரும்ப ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிப்பதாகவும் அப்படி ஒரு யோசனையைக் கூறியதே பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தான் என்றும் கூறி வருகிறார்கள்; இது பச்சைப் பொய். 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியபோது அப்போதும் ஆளுநராக இருந்த பன்வரிலால் புரோகித் கிடப்பில் போட்டார். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தினால் ஒப்புதல் தரத் தயார் என்று நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. பிறகு தமிழ்நாடு அரசே சட்டத்துக்கு பதிலாக அரசாணை பிறப்பித்தால் ஆளுநரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்றும் கலைஞர் கிராமப்புற மாணவர் இடஒதுக்கீட்டுக்கு...

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்காதே; ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் கண்டனம்

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்காதே; ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் கண்டனம்

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக் கும் மையம் அமைக்கும் பணியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; தமிழ் நாட்டு அரசு ஒன்றிய அரசின் இந்த நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கூடங்குளம் மக்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மாபெரும் போராட் டத்தையும் மதிக்காமல் கூடங் குளத்தில் இரண்டு அணு உலைகளை நிறுவி இயக்கிக் கொண்டு இருக்கிறது.அது மட்டும் அல்லாமல் மேலும் நான்கு உலைகளை நிறுவும் பணிகளை ஒன்றிய அரசு செய்து கொண்டு வருகிறது. அணு உலைகளே மிகவும் ஆபத்தானவை என உலகின் அறிவியல் தொழில் நுட்ப விஞ்ஞானத்தில் உச்சங்களைத் தொட்ட ரஷ்யா ஜெர்மன் ஜப்பான் போன்ற நாடுகளே அத்திட்டங்களைக் கைவிட்டு விட்டன. ஆனால் அணு உலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல்...

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளை ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள் வழங்கி குடும்ப விழாவாகக் கொண்டாடியது திராவிடர் விடுதலைக் கழகம். பிப். 14, காதலர் நாளையொட்டி ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த 14 இணையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சி குதூகலமாக நடத்தியது. மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் காதலைப் போற்றும் திரையிசைப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புத்தக வாசிப்பு கவிதை அரங்கேற்ற நிகழ்வுகள் நடந்தன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கழகத் தோழர் ஜெயப் பிரகாஷ் ‘ஜாதியை மறுத்துப் பார்’ என்ற  அவரது கவிதையை வாசித்தார். தோழர் இரண்யா, “எது கலாச்சாரம்?” என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளையும் தேன்மொழி, பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலிருந்து பெரியார் தனது உறவுப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததை விவரித்து பெண்களின் மறுமண...

வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்

(திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் அக்.2, 2015 ஆம் தேதி காலை-மாலை நிகழ்ச்சிகளில் தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கிடையே தோழர் தலித் சுப்பையா, அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைத்தார். அவர் பேசியவைகளிலிருந்து ஒரு தொகுப்பு.) தோழர்களே! பெரியார் மரணமடைந்தபோது அதற்கு, தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கர மடம்; மற்றொன்று அகில இந்திய பார்வர்டு பிளாக். சங்கரமடம், நமது இன எதிரி. எனவே அது இரங்கல் தெரிவிக்காதது வியப்பு அல்ல. ஆனால் நமது மண்ணின் மைந்தர்களான கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? இதற்கான வரலாற்றுக் காரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 1957-ல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் எரிக்கப்பட்டன. அது ஒரு சாதிப் போர். அப்போது முதல்வராக இருந்தவர் பெரியவர் காமராசர். மாபெரும் மனிதர். எங்களுடைய கல்விக்கு அவர்தான் அடித்தளமிட்டவர். சாதிக்...

இஸ்லாம் மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு…

இஸ்லாம் மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு…

நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவை எல்லாம் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், ‘இஸ்லாம்’ சமூகத்திலும் ‘அல்லாசாமி பண்டிகை ‘ நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல’ விஷேசங்களும், சந்தனக்கூடு, தீ மிதி முதலிய உற்சவங்களும் நடை பெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால், இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ் வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்துக்கு அடிமைப்பட்டது என்பதை மறவாதீர்கள்....

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். மின்னூல்கள் தொகுப்பு திவிக வெளியீடுகள் பட்டியல் : அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?  – அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன – திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? –...

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, 01.02.2022 செவ்வாய் மாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி  தற்கொலையை காரணம் காட்டி தமிழகத்தில் பொது அமைதியைக் குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் மதவாத பா.ஜ.கவினரைக் கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்யக் கோரியும் கண்டன ஆர்ப் பாட்டம் நங்கவள்ளி நகரத் தலைவர் த.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். உரையில், “தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற ஊரில் படித்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புவதும், அதை சமூக நல்லிணக் கத்திற்கு எதிராகப் பரப்புவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற நோக்கத் தோடும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

ஜாதி இழிவு ஒழிய மதமாற்றம் குறித்துப் பேசினாலும் பெரியார் விரும்பியது மதம் அற்ற ஒரு சமுதாயத்தைத்தான் என்று கழகத் தலைவர் குடியாத்தம் நவம். 07, 2021இல் நடந்த நூல் ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அவரது உரையின் தொடர்ச்சி. காந்தியுடன் பெரியார் உரையாடலை நடத்தினார். “இந்து மதத்தை திருத்தலாம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை பின் வருபவர்களும் செய்வார்களே, நீங்கள் அவர்களுக்கு (பார்ப்பனர்கள்) ஆதரவாக இருக்கும் வரை விட்டு வைத்திருக் கிறார்கள். கொஞ்சம் எதிராக திரும்பினாலும்கூட விட்டு வைக்க மாட்டார்கள்” என்று பெரியார் 1927இல் கூறினார். பின் அதுதான் நடந்தது. அப்படிப்பட்ட இந்து மதத்தின் மீது வருகிற கோபம், அதன் பின் வரும் காலங்களில் இந்து மதத்தின் தீமைகளை, சூழ்ச்சிகளை பதிவு செய்து வருகிறார். அரசியல் சட்டத்திலும் புகுந்து கொண்டதே என்றெல்லாம் கோபித்துக் கொண்டார். அதை யொட்டித்தான் சட்ட எரிப்புப் போராட்டத்தையே நடத்துகிறார். இதை காரணமாக வைத்து சிலர் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடைவெளி...

சிலை சீன நாட்டின் தயாரிப்பு : விலை ரூ.1000 கோடி ‘இராமானுஜர்’ சிலையும்  வேத – புரோகித ஆதீக்கமும்

சிலை சீன நாட்டின் தயாரிப்பு : விலை ரூ.1000 கோடி ‘இராமானுஜர்’ சிலையும் வேத – புரோகித ஆதீக்கமும்

இராமானுஜர் சிலையை பிரதமர் மோடி தெலுங்கானாவில் திறந்து வைத்திருக்கிறார். ஜீயர் மடம் ஒன்று இந்த சிலையை நிறுவியிருக்கிறது. சிலையின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். நெற்றியில் வைணவ தென்கலை நாமத்தோடு தோன்றி சிலையைத் திறந்து வைத்துப் பேசியிருக்கிறார் மோடி. இராமானுஜர் தேச ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் என்று பேசியிருக்கிறார். இராமானுஜர் காலத்தில் இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. பிறகு எப்படி அவர் தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்திருக்க முடியும்?  இராமானுஜர் சமூக ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்திருக்கிறார் என்றால் அதில் நியாயம் இருக்க முடியும். வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும், பிராமணர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று இருந்த நிலையை கட்டுடைத்து அனைவருக்கும் வேதம் படிக்க, கேட்க உரிமையுண்டு என்று கலகம் செய்தவர் இராமானுஜர். திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி வேதத்தை ஓதி அனைத்துப் பொதுமக்களும் இதைக் கேளுங்கள் என்று வேதத்தை ஓதியதாக வரலாற்றுப் பதிவுகள் உண்டு. ஆனால் இந்த சிலை...

தலையங்கம் அன்று ‘சமஸ்கிருதம்’ இன்று ‘நீட்’

தலையங்கம் அன்று ‘சமஸ்கிருதம்’ இன்று ‘நீட்’

‘நீட்’ எனும் வடிகட்டும் நுழைவுத் தேர்வு முறை – மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்தும் என்ற வாதத்தை மறுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் சரியான விளக்கங்களை முன் வைத்துள்ளார். ஒரு மாணவர், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டாலே, அவர் மருத்துவர் ஆக முடியாது. தனது படிப்புக் காலம் முழுதும் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக முடியும். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மருத்துவர்கள் உலகம் புகழும் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதே  நேரத்தில் நீட் தேர்வு முறை வழியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பயிற்சி மய்யங்களுக்குப் போய் பெரும் பொருட் செலவில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு ஆண்டு பயிற்சியில் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகாலம் தேவைப்படுகிறது” என்று நீட் உருவாக்கும் சமூகத் தடைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார், தமிழக முதல்வர். இத்தகைய...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...

‘Sanskrit’ then ‘NEET’ today

‘Sanskrit’ then ‘NEET’ today

The Chief Minister of Tamil Nadu, M.K. Stalin has put forward the right explanations to the people in the local body election campaign that by rejecting the argument of NEET – Filtered Entrance Examination System for Improving the Quality of Medical Studies,. Once a student gets a place in medical college, he cannot become a doctor. He can become a doctor only if he passes the examinations conducted throughout his studies. Tamil Nadu doctors who have passed these exams are working as world renowned doctors. At the same time if you want to join medical colleges through NEET selection system...

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ் நாடு ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 04.02.2022 வெள்ளி மாலை 4.00 மணிக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் ‘நீட்’ விலக்கு மசோதாவை ஏற்காத ஆளுனரின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து உரையாற்றினார். இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் வேழவேந்தன் மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில்  கழகத் தோழர் மதன் இல்லத் திறப்பு விழா  20.01.2022 வியாழன் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலையில்  நடைபெற்ற இத்திறப்பு விழா எந்தவிதமான பார்ப்பனப் பண்பாட்டுச் சடங்குகள், மூட நம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளும் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. குடும்பத்தின் குழந்தைகள் பெரியார் பிஞ்சுகள் மேகன் பிரபு, அஸ்வின் ஆகியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இல்லத் திறப்பின் மகிழ்வாக  மதன் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ1000/= (ரூபாய் ஆயிரம் மட்டும்) மாவட்டத் தலைவர் முகில்ராசுவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர அமைப்பாளர் முத்து , பரந்தாமன், விசய் – வீரலட்சுமி, மாரிமுத்து, அய்யப்பன், சந்தோஷ், சிரீசா, பிரபு-சுபாஷினி, கிஷோர், ஜெகன்-காயத்ரி, ராஜா, துரை, கௌரிசங்கர், திருமூர்த்தி, வினோத், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.  ...

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

சேலம் (மேற்கு) மாவட்ட மேட்டூர் கழகம் சார்பாக கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு முதல் தவணையாக 400 சந்தாக்களையும் அதற்குரிய கட்டணம் ரூபாய் ஒரு இலட்சத்தையும் மேற்கு மாவட்ட செயலாளர் கழகச் செயல் வீரர் ஜி. கோவிந்தராஜ் அனுப்பியுள்ளார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். மேட்டூரைப் பின்பற்றி, தோழர்களே, முழக்கம் சந்தா சேர்ப்பு இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்! பெரியார் முழக்கம் 03022022 இதழ்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகம் தொடர்ந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள புதிய வெளியீடுகள்: ஆதிப் பெண்ணின் அடிதடி – ஓவியா குறளும் கீதையும் –  அருள்மொழி மற்றும் சுப. வீரபாண்டியன் திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு – வெற்றிச் செல்வன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் – பெரியார் சரவணன் ஏன், பெரியார் மதங்களின் விரோதி? – வெற்றிச் செல்வன் – உதய குமார் இடைவேளை – சுப. வீரபாண்டியன் (நாவல்) ஆளுமைகள் சாரதாதேவி, குண. சந்திரசேகர், இக்லாஸ் உசேன்.   தொடர்புக்கு : 9840336688 பெரியார் முழக்கம் 03022022 இதழ்