Category: பெரியார் முழக்கம் 2015

‘இந்து தாழ்த்தப்பட்டவர்’: வரையறுத்தது யார்? 0

‘இந்து தாழ்த்தப்பட்டவர்’: வரையறுத்தது யார்?

இமயம் தொலைக்காட்சி ஊடகவியலாளர்: அம்பேத்கர், இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் 18 சதவீத இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார்; சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இந்துக்கள் மட்டும் போட்டியிடக் கூடிய தொகுதி, தாழ்த்தப்பட்டவர்கள் தனித் தொகுதி தான். தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அம்பேத்கர் திட்டமிட்டே ரிசர்வ் தொகுதி கொடுத்திருக்கிறார் – இந்து எஸ்.சி என்று வரையறுத்துள்ளார். ஆனால் மதம் இல்லை என்று சொல்லும் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் போன்றவர்கள் மத மாற்ற உரிமை என்ற பெயரில் கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள். மதம் மாறக் கூடாது என்ற எங்கள் கருத்துதான் அம்பேத்கர் கருத்து; பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் மாற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்வதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்? கொளத்தூர் மணி: இது தவறான பொய்யான செய்தி. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பட்டியல் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான பட்டியல் 1935 ஆம் ஆண்டு சட்டத்திலேயே...

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி 0

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி

“தனித் தமிழ்நாடு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகிய திராவிட இயக்க இலட்சியங்களை பாடங்களில் பதிவு செய்வதில்லை; ஊடகங்களும் இருட்டடிக் கின்றன; அதுவே இளைஞர்களிடையே கொள்கைகள் முழுமையாக சென்றடைய வில்லை” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். பிப். 7 அன்று, ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு ஊடகவியலாளர் ஜீவ சகாப்தனுக்கு அளித்த நேர்முகம்: ஊடகவியலாளர்: இன்றைய நேர்முகம் நிகழ்ச்சியில் உங்களுடைய இயக்க செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகளை நீங்கள் பார்க்கும் விதம், தமிழகத்தில் – தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு இருக்கும் நிர்பந்தங்கள் போன்ற பரவலான தளத்தில்தான் இன்றைய விவாதம் செல்லவிருக் கிறது. முதல் கேள்வியாக… ஈழம், தமிழ்த் தேசியம், ஜாதி ஒழிப்பு போன்ற தளங்களில் நீங்கள் இயங்கி வருகிறீர்கள்; சமீபத்தில் இலங்கை அதிபர் மாற்றம் குறித்து, அது ஒரு மாற்றமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்; அதை ஒரு நிகழ்வாகவே பார்க்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்; இராஜபக்சே என்கிற ஆளுமை மாறியதே...

நீதிபதிகள் நியமனத்தில்  சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம் 0

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி...

வங்கிகள்-கார்ப்பரேட் கூட்டுக் கொள்ளை 0

வங்கிகள்-கார்ப்பரேட் கூட்டுக் கொள்ளை

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தகுதி திறமைக்கு உரிமை கொண்டாடும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினராக இருப்பார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவரும் ஒரு பார்ப்பனர்தான். ஏழை எளிய மக்கள், வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், தொழில் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை வாரி வழங்குவதும், பிறகு அதை திரும்பி வராத கடன் என்று தள்ளுபடி செய்வதும் – எந்தத் தடையும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி இப்போது அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன. 2008 மார்ச் நிலவரப்படி ரூ.455 கோடியாக இருந்த திரும்பி வராத கடன் தொகை, 2014இல் ரூ. 2.17 இலட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. 6 ஆண்டுகளில் ‘திரும்பி வராத’ கடன் தொகை 500 மடங்கு அதிகரித்துள்ளது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேதண்திரோட்கர் என்ற ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற தகவல். பெரும் தொழில் நிறுவனங்கள், அரசியல்புள்ளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

அன்னை தெரசா – சமூகத் தொண்டுக்கு காரணம் மதம் மாற்றம் செய்வதுதான். – ஆர்.எஸ்.எஸ்.தலைவர்மோகன் பகவத் அவராவது மதம் மாற்றுவதற்காகவாவது சமூகத் தொண்டு செய்தார்; நீங்கள் செய்யும் ஒரே சமூகத் தொண்டு மதம் மாற்றுவது மட்டும்தான்! அஷ்டலட்சுமி கோயில் அர்ச்சகர் கராத்தேயில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கியவர். – செய்தி அதுக்காக ‘கிராஸ் பெல்ட்டை’ கழற்றி வீசிடவாப் போறாரு? இந்தியாதான் எனது மதம். – மோடி அப்படியா! இதைப்போய் ஒரு நாடுன்னு நினைச்சு நாங்க முட்டாள்தனமா நினைச்சு கிட்டே இத்தனை காலமா, ஏமாந்துட்டோங்க…. இராஜபக்சேயின் ஆஸ்தான சோதிடர் கமனதாசா, தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். – செய்தி குருநானக் கல்லூரியில் நடந்த மாநாட்டுக்கு வந்தாலும் வந்திருப்பார்; நல்லா தேடிப் பாருங்க! ராகுல் காங்கிரசிலிருந்து விடுமுறை எடுத் துள்ளார். – செய்தி காங்கிரசே நீண்ட விடுமுறையில தானே இருக்கு? இவுருக்கு மட்டும் எப்படி விடுமுறை கிடைச்சுது? தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்க வில்லை. –...

பொது சிவில் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள் 0

பொது சிவில் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்று சங்பரிவாரங்கள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. பொது சிவில் சட்டம் குறித்த சில வரலாற்றுத் தகவல்கள்: (19.2.2015 இதழ் தொடர்ச்சி) சுதந்திரம் பெற்றபின் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் அரசியல் சட்டம் வழிகாட்டும் கோட்பாடு எண்.37 ஆக இடம் பெற்றிருந்த பொது சிவில் சட்டம், அரசியல் நிர்ணய சட்டம் நிறைவேறியபின் கோட்பாடு எண்.44 ஆக இடம் பெற்றது. அதன்படி குடிமக்கள் அனைவரும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமுல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். இதனால் தாங்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் ஆபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களான முகமது இ°மாயில் சாகேப், நசிருத்தீன் அகமது, மகபூப் அலி பெய்க் மற்றும் பாக்கர் சாகேப் பகதூர் போன்றவர்கள் திருத்தங்கள் கொண்டு வந்து, தங்கள்...

சோதிட மாநாட்டில் அரசு அதிகாரிகளா? மாநாட்டு அரங்க வாயிலில் கழகம் போர்க்கொடி: கைது 0

சோதிட மாநாட்டில் அரசு அதிகாரிகளா? மாநாட்டு அரங்க வாயிலில் கழகம் போர்க்கொடி: கைது

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மய்யமும் மலாய் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து, சோதிட மூடத்தனத்தைப் பரப்பும் மாநாட்டை அனைத்துலக மாநாடாக சென்னையில் நடத்தியது. இம் மா நாட்டுக்கு தமிழ்நாடு மற்றும் அயல்நாடுகளிலிருந்து சோதிடர்கள் வந்திருந்தார்கள். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மய்யத்தின் நிறுவனர் முனைவர் தி. மகாலட்சுமி, மலாய் பல்கலைக்கழக பேரா சிரியர் கோவி. சிவராமன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாடு மார்ச் முதல் தேதி சென்னை குருநானக் கல்லூரில் நடந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கா.மு. சேகர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், சோதிடர் மாடசாமி, உதவி பேராசிரியர் கை. சங்கர் , முன்னாள் மாவட்ட நீதிபதி கோ.சு. ஆறுமுகம், எச். வசந்த் குமார் (வசந்த் தொலைக் காட்சி குழுமம்), முனைவர் அய்யம் பெருமாள் (தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்ய செயல் இயக்குனர்), திரைப்பட நடிகர் ராஜேஷ், மருத்துவர் இராமசாமிப் பிள்ளை உரையாற்றுவதாகவும்,...

பறி போகிறது எங்கள் நிலம்,கொள்ளை போகிறது கனிம வளம், ஒழிகிறது வேலை வாய்ப்பு, ஓங்கி வளருது ஜாதி வெறி – ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ 0

பறி போகிறது எங்கள் நிலம்,கொள்ளை போகிறது கனிம வளம், ஒழிகிறது வேலை வாய்ப்பு, ஓங்கி வளருது ஜாதி வெறி – ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’

இளைஞர்கள், கல்வி வேலை வாய்ப்புகளை தனியார் மய கொள்கைகளால் பறித்து வரும் ஆட்சியாளர்கள், நாட்டின் கனிம வளத்தையும், விவசாய நிலங்களையும் சூறையாடிக் கொண்டு மதத்தையும், ஜாதி வெறியையும் திணிக்கிறார்கள். ஜாதி, மத வெறி சக்திகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சமூகத்தின் ஒற்றுமையையும் தமிழின ஓர்மையையும் சிதைக்கின்றன. இந்த நிலையில் இளைஞர்கள், சுயமரியாதைக்கு தடையாக நிற்கும் ஜாதி வெறியையும் வாழ்வியலுக்கு தடையாக உள்ள அரசின் சுரண்டல் கொள்ளை களையும் எதிர்த்து நிற்க தயாராகி வருகிறார்கள். இந்த ஆபத்துகளை எடுத்துரைத்து, தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. 28-02-2015 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம், சென்னை, மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை நிலையத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன. 1....

ஏற்காட்டில் கழகப் பயிற்சி முகாம் 0

ஏற்காட்டில் கழகப் பயிற்சி முகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காடு ஒன்றியத்தின் சார்பாக ஒரு நாள் பயிற்சி முகாம் திலகம் தங்கும் விடுதியில் 1.3.2015 ஞாயிறன்று நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமில் ஏற்காடு பகுதித் தோழர்கள் மற்றும் சேலம் பகுதித் தோழர்கள் உள்பட நாற்பதிற்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தப் பயிற்சி வகுப்பின் முதல் அமர்வாக தூத்துக்குடி பால் பிரபாகரன், ‘பெரியாரியல்’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடம்’, ‘தமிழ் தேசியம்’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். பின்பு தோழர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். மாவட்டப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏற்காடு ஒன்றிய புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிமுகப்படுத்தினார். ஏற்காடு ஒன்றியத் தலைவர் – கு. சரவணன், முண்டகம்பாடி. ஏற்காடு ஒன்றியச் செயலாளர் – இரா. கார்த்திகேயன், ஏற்காடு. ஏற்காடு ஒன்றியத் துணைத் தலைவர் – இரா. ஞானசேகரன், முண்டகம்பாடி. ஏற்காடு ஒன்றியச்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

வாஜ்பாய் ஆட்சித் திட்டங்களையே காங்கிரஸ் பின்பற்றியது என்று மோடியும் மன்மோகன் ஆட்சித் திட்டங்களையே மோடி அமுல்படுத்துகிறார் என்று காங்கிரசாரும் குற்றம் சாட்டு கிறார்கள். – செய்தி எல்லா ஆட்சிகளுமே மக்களுக்கு எதிராகத் திட்டம் போடுவதில் ஒன்றாக நிக்குறோம்னு சொல்றீங்க… மாட்டுக்கறி சாப்பிட்டாலோ விற்றாலோ 5 ஆண்டு சிறை. – மராட்டிய அமைச்சரவைஉத்தரவு இனிமே, செத்த மாட்டை தூக்கிக்கிட்டுப் போய் அடக்கம் பண்ணும் வேலையையும் அமைச்சர்களே எடுத்துக்குங்க. பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் 1,158 பேர் பலி. – செய்தி உலக ‘ஷேமத்துக்கு’ யாகம் நடத்தும் சங்கராச்சாரிகளே! இதுக்கெல்லாம் யாகம் நடத்த மாட்டேளா? விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. – மத்திய அமைச்சர் குந்தாரியா மனிதர்கள் சாவுக்குக்கூட சதவீதக் கணக்குப் போட்டு, அப்புறம் சதவீதத்தைக் கட்டுப்படுத்த நிபுணர் குழுவைப் போடுவீங்க போலிருக்கு! விளங்கிடுவீங்க…! அதிக அளவில் வரி செலுத்துகிறவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களுக்கு மான்யம் எதுவும் வேண்டாம் என்று கூற வேண்டும்...

1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டின் புரட்சி 0

1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டின் புரட்சி

1929 டிசம்பர் 17, 18 தேதிகளில் செங்கல் பட்டில் நடந்த “முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு” குறித்து ‘குடிஅரசு’ வெளியிட்ட தகவல்களின் தொகுப்பை இளைய தலைமுறையினர் பார்வைக்கு முன் வைக்கி றோம். • சுயமரியாதை மாநாடு – பார்ப்பன வெறுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதாகவும், அரசாங்க ஆதரவோடு நடத்தப்படுவதாகவும் – ‘போல்விஷம்’ எனும் மார்க்சிய சிந்தனையை பரப்புவதற்கான மாநாடு என்றும், ஆளுநருக்கு எதிரிகள் புகார் கடிதங்களை அனுப்பினார்கள். ஆனாலும், இது குறித்து கவலை இல்லை என்றும், உயிரையும் கொடுத்து பெறவேண்டியதே ‘சுயமரியாதை’ அது விலை மதிப்பற்றது என்றும் பெரியார் எழுதினார். • எதிரிகள் நினைப்பதுபோல் சுயமரியாதை இயக் கம் தளர்ந்துவிடாது என்று எழுதிய ‘குடிஅரசு’ (13.1.1929) – “இப்போது எந்தவிதமான மாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று சுட்டிக் காட்டியது. • சுயமரியாதை இயக்கத்துக்கு ருஷ்யா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கானி°தானம் போன்ற...

‘பால் சொசைட்டி’யில் நிலவும் தீண்டாமையை தட்டிகேட்ட கழகத் தோழர் மீது கொலை வெறி தாக்குதல் 0

‘பால் சொசைட்டி’யில் நிலவும் தீண்டாமையை தட்டிகேட்ட கழகத் தோழர் மீது கொலை வெறி தாக்குதல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கூதாம்பி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நமது கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பொறுப்பாளராக உள்ளார். இவர் ஊருக்கு அருகில் உள்ள கூதாம்பி என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிக்க சாதியினைச் சார்ந்த மக்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால்சொசைட்டி உள்ளது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பால் ஊற்றுவது இல்லை. அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதுமில்லை. பால் கொள்முதல் செய்யும் போது தாழ்த்தப்பட்டோரிடம் உங்களது பாலில் புரத அளவு குறைவாக உள்ளது. டெ°ட் சரியாக வருவதில்லை என்று ஏதேனும் காரணம் சொல்லி அவர்களது பாலை வாங்குவதில்லை. அதே சமயம் அவர்களிடம் பாலை வாங்க செல்லும் பொழுது உங்களுக்கு பால் ஊற்ற முடியாது; அப்படியே பால் வாங்க வேண்டுமென்றால் வெளியிலிருந்துதான் வாங்க வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அதனைப் பற்றி அரசு அதிகாரியிடம்...

தலையங்கம் – பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்! 0

தலையங்கம் – பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்!

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி முன் சங் பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி ஊழியர் மீது கடும் தாக்குதல் நடத்தி காமிராவையும் உடைத்திருக்கிறார்கள். காரணம் இதுதான்: மகளிர் நாளை முன்னிட்டு, ‘பெண்களுக்கு தாலி தேவையா?’ என்ற சிறப்பு விவாதம் ஒன்றை இந்த நிறுவனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. விவாதம் ஒளிபரப்புவதற்கு முன்பே தடை செய்யவேண்டும் என்பதே சங்பரிவாரங்களின் கோரிக்கை. மிரட்டலுக்கு அஞ்சி தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டது. ஏற்கெனவே பண்பாடு குறித்த ஒரு விவாத அரங்கமும், எதிர்ப்பின் காரணமாக இந்தத் தொலைக்காட்சி நிறுத்திவிட்டது. ஒரு ஊடகம் – எதை ஒளிபரப்ப வேண்டும், எதை ஒளிபரப்பக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமை, தங்களுக்கே உண்டு என புறப்பட்டிருக்கிறது, சங்பரிவாரம். இந்தத் தாக்குதலை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பது மற்றொரு தலைகுனிவான செய்தி. தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் சின்னம் என்று பெரியார் இயக்கம், பெண்ணுரிமை பார்வையில் முன் வைத்து வரும்...

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு – நினைவு பொதுக் கூட்டம் 0

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு – நினைவு பொதுக் கூட்டம்

1929ஆம் ஆண்டு பிப். 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு, தமிழக சமூக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமும், திருப்புமுனையும் கொண்ட மாநாடு ஆகும். மாநாட்டின் தலைப்பே, “தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு” (திராவிட என்ற பெயரில் அல்ல) என்பதாகும். பெரியார் முன்னின்று ஏற்பாடு செய்த இந்த மாநாட்டின் தலைவர் டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியன். மாநாட்டை திறந்து வைத்தவர் டாக்டர் சுப்பராயன். கொடி ஏற்றியவர் பி.டி.இராசன். மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முதல் தீர்மானமாக மாகாணங்களுக்கு உரிமைகள் வழங்குவது பற்றி கருத்து கேட்க வந்த பிரிட்டிஷ் தூதுக் குழுவான சைமன் கமிஷனை வரவேற்க வேண்டும் என்றும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தீண்டாமை ஒழிப்பு; வர்ணாஸ்ரம ஒழிப்பு; பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடுவது ஒழிப்பு; மதக் குறியீடுகளை புறக்கணித்தல்; விவாகரத்து உரிமை; பெண்ணின் திருமணத்துக்கு...

அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு நடந்த இலுப்பநத்தம் பயிற்சி முகாம்-கூட்டம் 0

அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு நடந்த இலுப்பநத்தம் பயிற்சி முகாம்-கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் தலைவாசல் அருகே உள்ள இலுப்ப நத்தம் எனும் கிராமத்தில் 22.2.2015 அன்று சிறப்புடன் நடந்தது. கழகப் பொறுப்பாளர்கள் மகேந்திரன், காளிதாசு ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து ஒரு வார காலம் கிராமம் கிராமமாகச் சென்று, இளைஞர்களை சந்தித்து, பயிற்சி முகாம் குறித்து எடுத்துக் கூறி முகாமுக்கு வரச் செய்தனர். 11.30 மணியளவில் இலுப்பநத்தம் சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பயிற்சி முகாம் தொடங்கியது. 70 மாணவர் மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மகேந்திரன் தொடக்க உரையைத் தொடர்ந்து, மூத்த பெரியார் தொண்டர் சதாசிவம் 30 நிமிடம் மாணவர் களிடம் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கடவுள்’ என்ற தலைப்பில் எளிமையாக கருத்துகளை எடுத்துரைத்தார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணியளவில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் வலியுறுத்திய ‘ஜாதி...

கூடங்குளத்தில் “அணு உலைப் பூங்கா” அமைக்காதே! சென்னையில் நடந்த முழு நாள் கருத்தரங்கு 0

கூடங்குளத்தில் “அணு உலைப் பூங்கா” அமைக்காதே! சென்னையில் நடந்த முழு நாள் கருத்தரங்கு

இந்திய அரசே! கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப் பந்தத்தை ரத்து செய், கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய், தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்காதே ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14-03-2015 சனிக்கிழமை அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடந்த முழு நாள் கருத்தரங்கத்தின் செய்திச் சுருக்கம். காலை அமர்வு சுமார் 11 மணி அளவில் தொடங்கியது. அமர்வுக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் கண. குறிஞ்சி தலைமை தாங்கினார். இவ்வரங்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீஃப், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் அண்ணாமலை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிற்பி செல்வராஜ், ஆதித் தமிழர் பேரவை ஆனந்தன், தமிழ்த் தேச...

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்:  நீதிபதி சந்துருவுக்கு பதில் 0

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்: நீதிபதி சந்துருவுக்கு பதில்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம் அர்த்தமில்லாதது என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தமிழ், ஆங்கில ‘இந்து’ நாளேடுகளில் எழுதிய கட்டுரைகள், அதற்கான வலிமையான மறுப்புகளை முன் வைக்கவில்லை. காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே – இப்போது நடக்கும் போராட்டத்தின் நோக்கம்; தமிழ் ‘இந்து’ கட்டுரையில் அதை நீதிபதி சந்துருவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த பிப். 19ஆம் தேதி தலைமை நீதிபதியை சந்தித்த ‘சமூக நீதிக்கான போராட்டக் குழு’வின் அமைப்பாளர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது. முதல் கோரிக்கை என்னவென்றால், இனி உயர்நீதிமன்ற பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில் பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெறக் கூடாது என்பதே. அவர்களின் இரண்டாவது கோரிக்கை பிரதிநிதித்துவம் பெறாத ஜாதியைச் சார்ந்தவர்கள் இனி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது” – இப்படி கோரிக்கையை தெளிவாக...

உயர்நிதிமன்ற முற்றுகைப் போராட்டம் ஏன்? 0

உயர்நிதிமன்ற முற்றுகைப் போராட்டம் ஏன்?

• சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மூத்த மூன்று நீதிபதிகள் (கொலிஜியம்) தேர்ந்தெடுக்கும் முறையே உள்ளது. அதில் மூத்த நீதிபதிகள் இருவர் எப்போதும் பார்ப்பனர்களாகவும், பிற மாநிலத்தவர்களாகவுமே உள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மாவட்ட நீதிபதி பதவி வரை உள்ளது போல எழுத்துத் தேர்வோ, மூத்த வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உள்ளதுபோல தகுதி வரையறைகளோ ஏதும் இல்லை. அதனால் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நீதிபதிகள் தேர்வில் தோல்வி அடைந்த ஒருவர் அதே ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடிந்தது. • தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தமுள்ள 60 நீதிபதி பணி இடங்களில் காலியாக வுள்ள 18 பணி இடங்களுக்கு நடை பெறும் தேர்வில், பார்ப்பனர் களுக்கும் ஏற்கெனவே பிரதிநிதித் துவம் பெற்றுள்ள உயர்பிரி வினருக்குமே மீண்டும் வாய்ப் பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 பணியிடங்களை ஒரே முறையில் நிரப்பாமல், இரண்டு கட்டங்களாக நிரப்பி, மேலும் பார்ப்பனர்களை நியமனம் செய்ய வழிவகை...

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது! 0

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளுக்கான நியமனங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட் டம் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சித்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களுடன் தொடர்பு கொண்டு பேசி ஒருங்கிணைத்தார். வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), திருமாவளவன் (வி.சி.), பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாத்), அப்துல் சமது (தமிழக மு°லிம் முன்னேற்றக் கழகம்), வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப் படை), மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), செந்தில் (இளந்தமிழகம் இயக்கம்) ஆகிய அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீனவ மக்கள் முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய கிறி°தவ மக்கள் கழகம்,...

திருப்பூரில் மகளிர் நாள் விழா ! 0

திருப்பூரில் மகளிர் நாள் விழா !

திருப்பூரில், தமிழ் நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் தின விழா 08.03.2015 அன்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், மங்கலம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ”மாதவிடாய்” மற்றும் ”தீவரைவு” ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. பின்பு நடை பெற்ற கருத்தரங்கத்தில் ”மாத விடாய் காலத்தில் உணவு” எனும் தலைப்பில் இயற்கை மருத்துவர் பெரியார் செல்வி, ”மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் ரஞ்சிதா கருத்துரை வழங்கினர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிய மணியரசி, கபடி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் இடம் பெற்ற மைதிலி ஆகியோருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

விவசாயிகளுக்கு நன்மை செய்யவே நிலத்தைக் கைப்பற்றும் சட்டம். – பிரதமர் மோடி விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணம் போல! திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க பெண்கள் நியமனம். – தேவஸ்தானம் அறிவிப்பு மொட்டை போட மட்டும் பெண்களுக்கு உரிமை தருவீங்க… ஆனால், லட்டு தயாரிப்புகோ ‘பிராமண ஆண்களுக்கு’ மட்டும். நன்னா, இருக்கு! கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை போட மாட்டோம். – கோவா பா.ஜ.க. முதல்வர் எதுக்கும், குடியரசுத் தலைவர் உங்க ஆட்சியைக் கலைச்சிடாம பாத்துக்குங்க! மோடி ஆட்சியில் 300 நாள்களில் 600 மதக் கலவரங்கள்; 49 பேர் மரணம். – செய்தி 600 மதக்கலவரங்கள் நடந்தும் இறப்பு விகிதத்தை 49 ஆக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே மிகப் பெரும் சாதனைன்னு சொல்வீங்களே! நாகர்கோயில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட விநாயகன் சிலை இரவோடு இரவாக மறைந்தது. – செய்தி மீண்டும் காவல்துறை தேடிப்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை 0

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை படிவம் 4 (8வது விதி காண்க) 1. வெளியாகும் இடம் : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 2. வெளியாகும் காலம் : வாரம் ஒரு முறை 3. அச்சடிப்பவர் பெயர் : எஸ். தீமாஸ் இனம் : தமிழர் முகவரி லில்லி சூசை ஆப்செட், 8 முகமது உசேன் சந்து, சென்னை-14. 4. பதிப்பாளர் பெயர் : க. இராசேந்திரன் இனம் : தமிழர் முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 5. ஆசிரியர் பெயர் : க. இராசேந்திரன் இனம் : தமிழர் முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 6. ஒரு விழுக்காட்டிற்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள பத்திரிகை உரிமையாளரும் கூட்டாளிகளும் பெயரும் முகவரியும் : இல்லை நான் இதன் மூலம் மேலே காணப்படும் விவரங்கள் யாவும் எனக்குத் தெரிந்த வரை முற்றிலும் உண்மையென நம்பகமாக அறிவிக்கிறேன். நாள்: 26-03-2015...

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!’-ஏன்? – துண்டறிக்கை 0

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!’-ஏன்? – துண்டறிக்கை

இதைத்தான் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தமிழர் சமுதாய இளைஞர்களிடம் எடுத்துக் கூற உரிமையுடன் வந்திருக்கிறோம். பரம்பரை பரம்பரையாக நமது பாட்டன், பாட்டி காலங்களிலிருந்து நமக்கு ஜாதியைத்தான் சொல்லி சொல்லி வளர்த்தார்கள். ஜாதிப் பெருமையெல்லாம் பேசினோம்; என்ன பயன் கண்டோம்? இப்போதும் – தமிழர்கள் ஒன்று திரள விடாமல் நம்மைத் தடுப்பது எது? ஜாதிதான்! சொந்த ஜாதிகளுக்குள்ளேயே பங்காளிகளுக்குள் சண்டை; சொத்து சண்டை; ஊருக்குள் ஜாதிச் சண்டை; தாழ்த்தப்பட்டோர் மீது பிற்படுத்தப்பட்டவர்கள் நடத்தும் ஜாதிய ஒடுக்குமுறை; “கைகட்டி நின்ற பயல் நிமிர்ந்து போகிறானே, என்ன திமிர்?” என்ற ஜாதி ஆதிக்க சிந்தனை, சக மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்க வைக்கிறது ஜாதி. கீழ் ஜாதி, படிக்கக் கூடாத ஜாதி, கூலிக்கார ஜாதி, எடுபிடி ஜாதி, அப்பன் தொழிலைச் செய்ய வேண்டிய ஜாதிகளாகக் கிடந்ததுதானே. நமது சமுதாயம். நமது சகோதரிகள் – வீட்டில் அடிமைகளாக்கப்பட்டு, பெண்கள் என்றால் வீட்டுக்கான வேலையாள் என்று தானே...

வழக்கறிஞர்கள் சமூக நீதி போராட்டத்தை ஒடுக்க பார்ப்பனர்கள் திரைமறைவு சதி! 0

வழக்கறிஞர்கள் சமூக நீதி போராட்டத்தை ஒடுக்க பார்ப்பனர்கள் திரைமறைவு சதி!

உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 7 பார்ப்பனர் நீதிபதிகளாக தங்கள் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக உள்ள நிலையில் தலைமை நீதிபதியாக வந்துள்ள காஷ்மீர் பார்ப்பனர் – மேலும் பார்ப்பனர், முதலியார், கவுண்டர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கி, முதல் பட்டியலை அனுப்பியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூகநீதிக்குப் போராடும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக நீதி அமைப்புகளின் கோரிக்கைகளை திசை திருப்பிட பார்ப்பன ஆதிக்க சக்திகள் தீவிரம் காட்டி வருகின்றன. முற்றுகைப் போராட்டம் நடக்கவிருந்த 16ஆம் தேதி அன்று ‘தமிழ் இந்து’, ‘ஆங்கில இந்து’ நாளேடுகளில் போராட்டத்துக்கு எதிரான கட்டுரைகளை முன்னாள் நீதிபதி சந்துரு எழுதியிருந்தார். வழமைக்கு மாறாக ஆங்கிலம், தமிழ் என்ற தனது இரண்டு இதழ் களிலும் ஒருவரே எழுதிய கட்டுரையை ஒரே நாளில் வெளியிட்டு சமூக நீதிப் போராட்டத்துக்கு ‘இந்து’ தனது எதிர்ப்பைக் காட்டியது. நீதிபதிகள் தேர்வு பட்டியலுக்கு எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி...

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்! 0

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்!

ஜாதி எதிர்ப்புக் கருத்துகளை மக்களிடையே பரப்ப திராவிடர் விடுதலைக் கழகம், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பரப்புரை இயக்கங்களைத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மய்யமாக ஜாதியமைப்பே இருக்கிறது. அதற்குள் வெடித்துக் கிளம்பும் முரண்பாடுகளே ஜாதியக் கலவரங்களுக்குக் காரணம். இந்த ஜாதியமைப்புக்கான கருத்தியலை வழங்கி, ‘புனித’ப்படுத்துவது பார்ப்பனியம். மதவாதம் – மதவெறியாக ஜாதியம் – ஜாதி வெறியாக மிக எளிதாக ‘உருமாற்றம்’ பெற்றுவிடுகிறது. பெரியார் இயக்கம் நடத்திய மண்ணில் – ஜாதி மதவெறி சீர்குலைவு சக்திகள் தலைதூக்குகிறதே என்று உண்மையில் வேதனைப்படுவோர் உண்டு. பெரியார் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று முத்திரை குத்தத் துடிப்போரும் உண்டு. ஆனால், பெரியாரைப் பேசும் அரசியல் கட்சிகளானாலும் பெரியாரை குறை கூறத் துடிக்கும் இயக்கங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் தலைதூக்கிட முயற்சிக்கும் ஜாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக ஏன், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முன் வரவில்லையே என்று வேதனையுடன்...

சென்னை-ஈரோடு-தாரமங்கலம்-மயிலாடுதுறையிலிருந்து பரப்புரைப் பயணங்கள் தொடங்கின 0

சென்னை-ஈரோடு-தாரமங்கலம்-மயிலாடுதுறையிலிருந்து பரப்புரைப் பயணங்கள் தொடங்கின

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘பறி போகிறது எங்கள் நிலம்; கொள்ளை போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு; ஓங்கி வளர்கிறது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்று 20.3.2015 முதல் 31.3.2015 வரை 11 நாள் பரப்புரைப் பயணம் தொடங்கியுள்ளது. பயண தொடக்கக் கூட்டம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.3.2015 மாலை 5 மணியளவில் சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட், காந்தி சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நா. பாஸ்கர் தலைமை வகிக்க, தோழர்கள் ஏசு குமார், துரை முனுசாமி, நாகேந்திரன் முன்னிலை வகித்தனர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் உமாபதி, எழுத்தாளர் வே. மதிமாறன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்து, சிறப்புரை யாற்றினார். முன்னதாக, சம்பூகன் கலைக் குழுவினர் நாத்திகன்,...

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம் 0

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம்

15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

வரலாற்று ஆய்வு மய்யத்தில் ‘ஆரிய’ ஆதரவுக் குரல் 0

வரலாற்று ஆய்வு மய்யத்தில் ‘ஆரிய’ ஆதரவுக் குரல்

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் புதுடில்லியில் மார்ச் 27ஆம் தேதி ‘நிறுவனர் நாள்’ கூட்டம் நடந்தது. அமெரிக்காவில் ‘வேதம்’ கற்றுத் தரும் டேவிட் ஃபிராலெ என்பவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘சங்பரிவார்’ அமைப்பினர் கூடியிருந்தனர். ஃபிராலெ தனது உரையில், “ஆரியர் படை எடுத்து வந்தார்கள்” என்ற கருத்தே தவறானது என்று கூறினார். புராதன இந்தியப் பெருமைகள் இந்தியாவில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படாததையும் அவர் குறை கூறினார். “பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும்தான் ‘ஆரிய படை எடுப்பு’ என்ற தவறான கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் கல்வியாளர்களே பழம் பெருமைகளை மறந்துவிட்டு, ‘ஆரிய படை எடுப்பு’ என்றெல்லாம் நடக்காததைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வரலாற்று ஆய்வு மய்யத்தின் உறுப்பினரும் செயலாளருமான கோபிநாத் இரவீந்திரன், இந்த பார்ப்பனிய அமெரிக்கரின் உரையிலிருந்து சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஆரிய படையெடுப்பு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பல்வேறு...

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு! 0

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு!

அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சியால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர். இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர். பெரியார் முழக்கம் 02042015 இதழ்

பெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள் 0

பெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள்

பார்ப்பன சனாதன மத சக்திகள், இஸ்லாமி யர்களை எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்களை தேச விரோதிகளைப்போல சித்தரிக்கிறார்கள். தங்களின் மதவாத அரசியலைக் கட்டமைக்க ஏதேனும் ஒரு எதிரியை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இவைகள் அரங்கேற்றப் படுகின்றன. ஆனால், பெண்கள் பிரச்சினையில் இவர்களின் குரல் பல நேரங்களில் ஒன்றாகவே ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. சென்னையில் காதலர் தின எதிர்ப்பில் இந்து மகாசபைக்காரர்களோடு சில இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து கொண்டன. அவர்கள் காதலர் நாளுக்கு எதிராக ஒட்டிய சுவரொட்டிகளைக் காண முடிந்தது. இஸ்லாமிய மக்கள் கல்வி, வேலை, பொருளாதார வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக, அவர்கள் வாழ்நிலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு நியாயமான குரல் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில் மதம் சார்ந்த பல பிற்போக்கு கொள்கைகளை நாம் சுட்டிக்காட்டி எதிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது. இது தொடர்பாக ஒரு செய்தியை சுட்டிக்காட்டியாக வேண்டும். பம்பாயிலிருந்து வெளிவரும் ‘அவதான்மா’ என்ற உருது நாளிதழின் ஆசிரியர் சிரின்தால்வி. இந்தியா வில்...

தி.க. தலைவரின் பேட்டியும் நேர்மையற்ற ‘பாண்டேக்களும்’! 0

தி.க. தலைவரின் பேட்டியும் நேர்மையற்ற ‘பாண்டேக்களும்’!

திராவிடர் கழகத் தலைவர் – தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கி.வீரமணி அவர்களின் நேர்முக பேட்டியை (மார்ச் 21, இரவு 10 மணி) ‘தந்தி’ தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் பலரும், அத்தொலைக்காட்சி பேட்டியாளரின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பவே செய்வார்கள். பாண்டே என்ற பெயரில் ‘தந்தி’ தொலைக்காட்சியில் விவாதங்களையும் நேர்முகப் பேட்டிகளையும் நடத்தி வரும் அவரது முதிர்ச்சியற்ற அரைவேக்காட்டுத்தனமான கேள்விகள், விவரமறிந்தவர்களை முகம் சுளிக்கவே வைக்கிறது. ‘பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை’ என்று இரண்டே சொற்றொடர்களில் அறிஞர் அண்ணா படம் பிடித்தார். பெரியார் கொள்கைகளோடு முரண்பட்ட தலைவர்கள்கூட பெரியார் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் அவரது உண்மையான பங்களிப்பில் நேர்மையில் சந்தேகம் எழுப்பியது கிடையாது. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகராக’ ஏற்றுக் கொண்ட மறைந்த இராஜகோபலாச்சாரியாரையே இதற்கு உதாரணமாகக் கூற முடியும். பார்ப்பனரல்லாத வெகு மக்களின் மானத்துக்கும் உரிமைக்கும் களமாடியவர் பெரியார். மாறுபட்ட பல்வேறு அரசியல் சூழல்களில் தனது சமுதாய இலக்கை முன்னெடுப்பதை மட்டுமே...

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக  ஒரு தீர்ப்பு! 0

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு!

சமூக வலைத் தளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வதை முடக்கி சிறையில் தள்ளும் கொடூரமான கருத்துரிமையை பறிக்கும் தகவல் தொழில்நுட்ப 66(ஏ) சட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்து விட்டது. 2008 ஆம் ஆண்டு அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்த சட்டம் இது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாகவே வாதாடியது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்களது ஊழல் முறைகேடுகள் அம்பலமாகிடக் கூடாது என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்; அதற்காக எந்த அடக்குமுறை சட்டங்களையும் அவர்கள் கையில் எடுப்பார்கள். சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழு அடைப்பு திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து வலைதளத்தில் கருத்து தெரிவித்த கல்லூரி மாணவி ஷாகின் மீது இச்சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்கு விருப்பம் தெரிவித்ததற்காக மற்றொரு மாணவி கைது செய்யப்பட்டார். இதேபோல் உ.பி. ஆளும் கட்சியான...

தாலி – கட்டுவது தமிழர் பண்பாடா? 0

தாலி – கட்டுவது தமிழர் பண்பாடா?

சர்வதேச மகளிர் தினத்தன்று “தாலி பெண்களை பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப் பில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தை சேர்ந்தவர்கள் அந்த தொலைக் காட்சி நிலையத்திற்கு படையெடுத்தனர். வாசலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளரை அடித்து நொறுக்கியதோடு, விலை உயர்ந்த ஒளிப்பதிவு சாதனத்தையும் நாசம் செய்தனர். தாலி இந்துக்களின் அடை யாளம் என்று கூறி இந்த விவாதத்தை நடத்தக் கூடாது என்று காலித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதான் இவர்களின் அடையாளம். அந்த விவாதம் ஒளிபரப்பாவதற்கு முன்பே மதவெறி, சாதிவெறி தலைக்கேறி ருத்ரதாண்டவம் ஆடி முடித்துள்ளனர். கருத்துரிமைக்கு எதிராக இந்த வலதுசாரி பிற்போக்கு கும்பல் தொடர்ந்து கட்டாரி வீசி வருகிறது. அதன் தொடர்ச்சியே இது. அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில்...

சூலூரில் தாலி நீக்கம்; மாட்டுக்கறி விருந்து 0

சூலூரில் தாலி நீக்கம்; மாட்டுக்கறி விருந்து

‘சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்’ நடத்துகிறது சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் சூலூரில் ஏப்.3ஆம் தேதி தாலி நீக்குதல் மற்றும் மாட்டுக் கறி உணவு விருந்து நடைபெறுகிறது. சூலூர் எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் (கலங்கல் பாதை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் நிகழ்வில் சுயமரியாதை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி தொடங்குகிறது. தாலியில்லாமல் வாழும் இணையர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தாலி வந்ததா? வரவழைக்கப்பட்டதா? என்ற கருத்தரங்கில் புலவர் செந்தலை கவுதமன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகிறார்கள். தாலி நீக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில்  9 நாள் எழுச்சிப் பரப்புரை 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில் 9 நாள் எழுச்சிப் பரப்புரை

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார். மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

திருவெண்ணெய் நல்லூர் அருகே முருகன் கோயில் ‘வேல்’ மீது குத்தியிருந்த எலுமிச்சம் பழம் ரூ. 24 ஆயிரத்துக்கு ஏலம் போனது. – செய்தி அப்படியா! இந்த செய்தி, முருகனை முப்பாட்டனாக ஏற்றுள்ள கட்சிக்கு தெரியுமா? தெரிஞ்சிருந்தா அவுக ரூ. 24 இலட்சத்துகே ஏலம் எடுத்திருப்பாக! ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை கோயில்களில் யானைகள், குதிரைகள், பசுக்களுடன் கலெக்டர் முன்னிலையில் புரோகிதர்கள் ‘கஜபூஜை’ யாகம். – செய்தி அப்படியே அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் அதுல சேர்த்துக்குங்க… எதுக்கு அவருக்காக ஒரு தனிச் செலவு! இந்திய ரூபாய் நோட்டுக்களை இனி இந்திய காகிதங்களிலேயே அச்சிட வேண்டும். – பிரதமர் மோடி ஏற்கெனவே நிறைய பேர் அப்படித்தான் அச்சிட்டுகிட்டு இருக்காங்க… நீங்கதான் அவர்களை ‘கள்ள நோட்டு பேர்வழிகள்’ன்னு ஏத்துக்க மாட்டேங்குறீங்க! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக நிதியமைச்சகத்திலிருந்து வெளியான ஆணையை நம்பவேண்டாம்; அது போலி ஆணை. – நிதியமைச்சகம் அறிவிப்பு அப்ப, நிதியமைச்சகத்தை...

ஈரோடு, ஏற்காட்டில் பரப்புரைப் பயண எழுச்சி 0

ஈரோடு, ஏற்காட்டில் பரப்புரைப் பயண எழுச்சி

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்னும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 20.03.2015 அன்று பரப்புரைப் பயணம் தொடங்கி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டத்தில் கடந்த 25.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு பவானி அந்தியூர் பிரிவு, மதியம் 12 மணிக்கு சித்தார், மாலை 3 மணிக்கு அம்மாபேட்டை என பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரைக்கு ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் நாத்திகஜோதி தலைமையில், ஈரோடு மாவட்ட செயலாளர் அருச்சுணன், பவானி கோட்ட பொறுப்பாளர் வேணுகோபால், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, குமாரபாளையம் வெங்கட், பவானி வினோத், தோழியர்கள் மைவிழி, கமலம் ஆகியோர் பயணத்தில் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் “ஜாதியை ஒழிக்கும் வழிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பயணத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு ஈரோடு...

வறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு 0

வறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு

இந்தியாவில் ஜாதிய கட்டமைப்பு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ, இயக்கங் களோ விவாதிக்கக்கூட தயாராக இல்லை. சமூகத்தில் ஆழமாக புரையோடிப் போயிருக்கும் ஜாதியத்தை தகர்க்காமல், எத்தனை பொருளாதாரத் திட்டங் களையும் அறிமுகப்படுத்தினாலும் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற கருத்தை பெரியார் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பல்வேறு ஆய்வுகளும் இதே கருத்தை உறுதி செய்து வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அப்போது சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை தீட்டுவது குறித்து, தொடர்புடைய பல்வேறு சமூகப் பிரச் சினைகள் குறித்து ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வு நடத்திய நார்வே நாட்டைச் சார்ந்த குன்னர்மிர்தால் என்ற சமூக ஆய்வாளர் ‘ஏசியன் டிராமா’ என்ற ஆய்வு நூலை 1968இல் எழுதினார். வறுமைக்கான பிரச்சினையை வறுமை என்ற எல்லைக்கோட்டுக்குள் நின்று பார்க்க முடியாது. இந்திய சமூகத்தில் இறுகிப் போய் நிற்கும் ‘ஜாதிய கட்டமைப்புடன்’ அதை இணைத்துப் பார்க்க...

மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்! 0

மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்!

மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ.க. ஆட்சிகள், மாட்டுக்கறி விற்பதோ சாப்பிடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா முழுமையும் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். மகாராஷ்டிராவில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, பசுக்களை காளைகளை மட்டும் வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. எருமைகளுக்கு இது பொருந்தாது. ‘எருமை’ சூத்திர, பஞ்சமப் பிரிவைச் சார்ந்தது. ‘பசு’, பிராமண, சத்திரியப் பிரிவு. பார்ப் பனர்கள் எப்போதும் எருமை மாடுகளை வளர்ப்பது இல்லை. பசு மாட்டைத்தான் வளர்ப்பார்கள். பார்ப் பனர்கள் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை, ஏராளமான சுலோகங்கள் வழியாக வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. யாகங்கள் என்ற பெயரால் ஆரியர்கள் ஆடு மாடுகளை தீயில் போட்டுக் கொளுத்தியதாலும், அந்த உணவை விரும்பி சாப்பிட்டதாலும் விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகள் கிடைக்காமல் போயின. இந்த நிலையில்தான் புத்தர், யாகங்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும்...

சென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி 6 மாவட்டங்கள்; 10 நாள்கள்; 40 கூட்டங்கள் 0

சென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி 6 மாவட்டங்கள்; 10 நாள்கள்; 40 கூட்டங்கள்

“பறிபோகிறது எங்கள் நிலம்; கொள்ளைப் போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு ஓங்கி வளருது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற பரப்புரைப் பயணம், சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இது சென்னை மண்டலம் நடத்தும் இரண்டாம் கட்டப் பரப்புரையாகும். பயணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்ச் 20ஆம் தேதி சென்னை பெரம்பூர் பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைத்தார். பயணம் குறித்த செய்தி தொகுப்பு: பொன்னேரி : 21.3.2015 காலை 10 மணியளவில் பொன்னேரி பெரியார் சிலை அருகிலும், பிற்பகல் 12 மணியளவில் மீஞ்சூர் மார்க்கெட் அருகிலும், மாலை 4 மணியளவில் மணலி அண்ணா சிலை அருகிலும், மாலை 5.30 மணியளவில் திருவொற்றியூர் பெரியார் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. பொன்னேரியில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம்,...

தாலியைப் பற்றி அம்பேத்கர் 0

தாலியைப் பற்றி அம்பேத்கர்

சென்னைஅரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்: மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை, “தாலி கட்டுத் திருமணம்” என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது; புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் ‘சம்பந்தம்’ என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் ‘தாலி கட்டும்...

பசுவதை: காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு 0

பசுவதை: காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு

பா.ஜ.க. ஆட்சிகள் பசுவை வெட்டுவதற்கு தடைச் சட்டங்கள் போட்டு வருகின்றன. பசு இந்துக்களின் புனித தெய்வம் என்கிறார்கள். இதுகுறித்து விரிவான கட்டுரையை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளியிடப்பட் டிருந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் யாகங்களில் பசுவை பலி கொடுத்ததை வேதங்கள் கூறுகின்றன. இப்போதும் யாகங்களில் பசுக்கள் கொண்டு வந்து நிறுத்தப்படு கின்றன. ஆனால், பலியிடப்படுவது இல்லை. அண்மையில் ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் 108 பார்ப்பனர்களைக் கொண்டு நடத்திய யாகத்தில் ‘பசு மாடுகள்’ கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியே பசுக்களை பலியிடுவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார். ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அவரது கருத்துகளடங்கிய நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்...

ஜெயகாந்தனின் புதுமையும் – குழப்பமும் 0

ஜெயகாந்தனின் புதுமையும் – குழப்பமும்

நவீன தமிழ் இலக்கிய ஆளுமை யாக, வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தன் முடிவெய்தி விட்டார். வாழ்க்கையின் நுட்பமான மனித உணர்வுகளை தனது எழுத்து வன்மையால் கதாபாத்திரங் களாக உலவவிட்ட பெருமை அவருக்கு உண்டு. இன்றைக்கு 50 வயதைக் கடந்தவர்களில் இலக்கிய ஈடுபாடு கொண்ட பெரும்பான்மை யோர் அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப் பார்கள் என்று கூற முடியும். தனது கதாபாத்திரங்களை உரத்தக் குரலில் விவாதிக்க வைத்தார். ‘ஆனந்த விகடனில்’ அவர் 1968இல் எழுதிய ‘அக்னி பரீட்சை’ கதை பலத்த விவா தங்களை எழுப்பியது. அப்பாவிப் பெண், ஒரு பணக்கார இளைஞனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தலையில் தண்ணீரைத் தெளித்து எல்லாம் சரியாகப் போய் விட்டது என்று கூறுகிறார், அவள் தாய். இது நிகழ்வது ஒரு பார்ப்பனக் குடும்பத்தில். ‘கற்பு’ என்ற ‘புனித’த்தை கட்டுடைத்த கதை அது. கணவன், மனைவி மனப் போராட்டத்தை விவாதிக்கும், “கோகிலா என்ன செய்து...

பெரியார் பெயருடன் ஜாதியை இணைப்பதா? கொளத்தூர் மணி கடும் கண்டனம் 0

பெரியார் பெயருடன் ஜாதியை இணைப்பதா? கொளத்தூர் மணி கடும் கண்டனம்

“10ம் வகுப்பு தேர்வு வினாத் தாளில் பெரியார் பெயருடன் ஜாதிப் பெயரை இணைத்ததற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்.” இது குறித்து கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: 10-04-2015 அன்று நடந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் சமூக அறிவியல் பாட வினாத் தாளில் 4 ஆவது கேள்வி, தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி பற்றியதாக உள்ளது. அதில் நான்கு தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தலைவர்களில் ஒருவராய் உள்ள பெரியாரைக் குறிப்பிடும்போது, “ஈ.வே.ராமசாமி நாயக்கர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜாதிப்பெயரை விகுதியாகப் போடும் போக்கு இருந்த 1927ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஜாதி விகுதியை நீக்கி, தன் பெயரை ஈ.வெ. இராமசாமி என தனது ஏட்டில் வெளியிட்டவர். தான் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் ஜாதிப் பின்னொட்டை அகற்றுமாறு தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர். அதனால்தான் இன்றைய தமிழ்நாட்டின் ஜாதிச் சங்கத்...

தென் மாவட்டங்களில் ஜாதிவெறி: துணைபோகும் காவல்துறை 0

தென் மாவட்டங்களில் ஜாதிவெறி: துணைபோகும் காவல்துறை

தென் மாவட்டங்களில் ஜாதி வெறி தலைதூக்கி ஆடுகிறது; கொலைகள் தொடர் கதையாகின்றன. காவல்துறையில் அந்தந்த பகுதி ஆதிக்க ஜாதியினரை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத்தின் கருத்தை உறுதி செய்து, காவல்துறையே ஜாதி உணர்வோடு செயல்படுவதை விளக்குகிறது இக்கட்டுரை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மறுபடியும் இரத்தச் சகதியில் மிதக்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நடந்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை 100; தூத்துக்குடியில் 70. ஒவ்வொரு நாளும் கொலையோடு தான் விடிகிறது. தென் தமிழக மாவட்டங்களில் பதற்ற நிலை பரவிக் கொண்டிருக்கிறது. நடந்திருக்கும் கொலைகளில் சரி பாதிக்குக் காரணம்… ஜாதி. ஆனால், அந்தக் காரணங்கள் அனைத்தும் மிக அற்பமானவை. நாங்குநேரி அருகே இருக்கிறது பானாங்குளம், கரந்தநேரி ஆகிய இரு கிராமங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பானாங்குளத்தைச் சேர்ந்த இரண்டு பேர் டி.வி. பழுதுபார்க்க கரந்தநேரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் இரு சக்கர...

கோல்வாக்கர் கருத்தை நகல் எடுத்து வழங்குவார்களா? 0

கோல்வாக்கர் கருத்தை நகல் எடுத்து வழங்குவார்களா?

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல், திருச் செங்கோடு பெண்களின் ‘ஒழுக்கத் துக்கே’ சவால் விடுகிறது என்று கோவை ஈ°வரன் போன்ற கொங்கு வேளாள கவுண்டர் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, நாவலை முடக்கி, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரையும் முடக்கி, மன்னிப்புக் கேட்கச் செய்தனர். குழந்தை இல்லாத மனைவி, திருச் செங்கோடு தேர்த் திருவிழாவில் வேறு இளைஞருடன் உறவு கொண்டு குழந்தைப் பெறும் வழக்கம் இருந்தது என்ற தொன்மக் கதையை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் இது. ஜாதி வெறியர்களின் இந்த மிரட்டலுக்கு இராம கோபாலன் போன்ற ‘சங்பரிவார்’ பார்ப்பனர்களும் சேர்ந்து கொண்டு இப்பிரச்சினையை ஊதிவிட்டனர். கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர் களோடு உறவு கொண்டு ஏனைய ஜாதியினர் குழந்தைப் பெற்றுக் கொள்வதை பெருமையாகவே கருதினர். அப்படி ஒரு பழக்கம் – அங்கே நடைமுறையில் இருந்ததை அம்பேத்கரே எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறார். ஆர்.எ°.எ°. அமைப்புக்கு தலை வராகவும் தத்துவ வழிகாட்டியாக...

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை 0

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை

பார்ப்பனர்களின் ஒடுக்குமுறை பண்பாடுகளை தமிழர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் பார்ப்பனப் பாசிசம். மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, சட்டத்தையும் அதிகாரத்தையும் காட்டி அச்சுறுத்தி, பார்ப்பன பண்பாடுகளை திணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி ஆட்சி மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அதன் காவல்துறை செயல்பாடுகளும் மோடி ஆட்சியைவிட தீவிரமான மதவாத ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது. திராவிடர் கழகம் அவர்களுக்கு சொந்தமான பெரியார் திடலில் விரும்பியவர்கள் தாலியகற்றும், பெண்ணடிமைக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்புதலை நடத்துவதற்கு முன் வந்தால் அதை தமிழக அரசும் காவல்துறையும் ஏன் தடுக்க வேண்டும்? இந்த நிகழ்வைக்கூட இப்போது நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘சர்வதேச மகளிர் நாளில்’, ‘பெண்களுக்கு தாலி வேண்டுமா?’ என்ற ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருந்தது. அதை ஒளிபரப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்து ‘வெடிகுண்டு’களை வீசக் கிளம்பியது ஒரு கூட்டம். அதன் காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது. கணவனுக்கு அடங்கிப்போய் ‘கல்லானாலும்...

பாடு கண்ணே பாடு – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் 0

பாடு கண்ணே பாடு – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பிறந்தநாள்

பாடு கண்ணே பாடு – பாவேந்தர் பாரதி தாசனார் பைந்தமிழ் பாட்டினைப் பாடு கண்ணே பாடு யாழோடும் குழலோடும் பறைமுழங்க ஊரோடும் இசையோடும் பாடு. அயர்வினை உன்னில் நீக்கும் – மின் ஆற்றலை உடலில் சேர்க்கும் துயருனை அண்டாது காக்கும் – வாழ்வில் தூயநல் இன்பமே தேக்கும் தீயதாம் அச்சத்தை ஓட்டும் – அஞ்சா துணிவெனும் ஆயுதம் நீட்டும் மாயையாம் மூடத்தைத் தீய்க்கும் – உன்னை மாசற்ற மனிதனா யாக்கும் மானுட அறிவினை பெருக்கும் – இன மானமே குருதியில் கலக்கும் ஊனினில் தமிழையே நாட்டும் – உரிமை விடுதலை புரட்சியை மூட்டும் கன்னல் பாகாய் வார்ப்பாய் – அமிழ்தாம் கருத்தை மீட்டியே ஆர்ப்பாய் அன்னைத் தமிழில் தீட்டிய – பாட்டை ஆருயிர் ஊறிட பாடு! – குயில்தாசன் பெரியார் முழக்கம் 16042015 இதழ்

தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை 0

தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை

மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட்டால் கைது செய்வோம்! பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் கடந்த மார்ச் 30ஆம் தேதி நடக்க விருந்தது. கடைசி நேரத்தில் கூட் டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் செங்குட்டுவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் நேர்நின்று வாதாடி, கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றனர். ஏப்.14 ஆம் தேதி கூட்டம் நடத்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கூட்டம் நடந்தது. காவல்துறை கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க கடும் நெருக்கடிகளை உருவாக்கியது. 22 நிபந்தனைகளை எழுத்துபூர்வமாக காவல்துறை விதித்தது. அதில் ஒன்று, கூட்டத்தின் இறுதியில் மாட்டு இறைச்சியோ அல்லது வேறு எந்த இறைச்சி உணவோ பிரியாணியாக வழங்கக்கூடாது என்பதாகும். தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு சட்டப்படி தடை இல்லை. ஆனால், மாட்டிறைச்சிக்கு மட்டுமல்ல, கோழி, ஆடு உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும்...

பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் பரப்புரை நிறைவு விழா எழுச்சி 0

பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் பரப்புரை நிறைவு விழா எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 14 நாள் பரப்புரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில், பெரியாரியலுக்கு எதிரான மிரட்டல்களை சந்திக்க, பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் என்று தோழர்கள் சூளுரைத்தனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, 14 நாள்கள் பரப்புரைப் பயணம் நடத்தியது. பரப்புரைப் பயணத் தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவாக தாம்பரத்தில் 14.4.2015 அன்று நடைபெற்றது. காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடந்த இப் பொதுக் கூட்டத்துக்கு மு.தினேஷ் குமார் தலைமை தாங்கினார். சு.செங் குட்டுவன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக சம்பூகன் இசைக் குழு வினரின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, விஜயகுமார், வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்...