ஏற்காட்டில் கழகப் பயிற்சி முகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காடு ஒன்றியத்தின் சார்பாக ஒரு நாள் பயிற்சி முகாம் திலகம் தங்கும் விடுதியில் 1.3.2015 ஞாயிறன்று நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமில் ஏற்காடு பகுதித் தோழர்கள் மற்றும் சேலம் பகுதித் தோழர்கள் உள்பட நாற்பதிற்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தப் பயிற்சி வகுப்பின் முதல் அமர்வாக தூத்துக்குடி பால் பிரபாகரன், ‘பெரியாரியல்’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடம்’, ‘தமிழ் தேசியம்’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். பின்பு தோழர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
மாவட்டப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏற்காடு ஒன்றிய புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிமுகப்படுத்தினார்.
ஏற்காடு ஒன்றியத் தலைவர் –
கு. சரவணன், முண்டகம்பாடி.
ஏற்காடு ஒன்றியச் செயலாளர் – இரா. கார்த்திகேயன், ஏற்காடு.
ஏற்காடு ஒன்றியத் துணைத் தலைவர் – இரா. ஞானசேகரன், முண்டகம்பாடி.
ஏற்காடு ஒன்றியச் செயலாளர் – பொ. இராதாகிருஷ்ணன், முண்டகம் பாடி.
ஏற்காடு ஒன்றியப் பொருளாளர் – இரா. உலகநாதன், முண்டகம்பாடி.
பயிற்சி வகுப்பின் இறுதியில் ஏற்காடு இரா. கார்த்திகேயன் இயக்கிய ‘முரண்’ எனும் குறும்படம் திரை யிடப்பட்டது. கழகத் தலைவர் வெளியிட, சேலம் மாவட்ட சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தலைவர் பிரபு பெற்றுக் கொண்டார்.

பெரியார் முழக்கம் 12032015 இதழ்

You may also like...

Leave a Reply