சூலூரில் தாலி நீக்கம்; மாட்டுக்கறி விருந்து

‘சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்’ நடத்துகிறது

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் சூலூரில் ஏப்.3ஆம் தேதி தாலி நீக்குதல் மற்றும் மாட்டுக் கறி உணவு விருந்து நடைபெறுகிறது. சூலூர் எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் (கலங்கல் பாதை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் நிகழ்வில் சுயமரியாதை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி தொடங்குகிறது. தாலியில்லாமல் வாழும் இணையர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தாலி வந்ததா? வரவழைக்கப்பட்டதா? என்ற கருத்தரங்கில் புலவர் செந்தலை கவுதமன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகிறார்கள். தாலி நீக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பெரியார் முழக்கம் 02042015 இதழ்

You may also like...

Leave a Reply