பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றிருப்பது நாட்டிற்கும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். ஆனால், தனது வெற்றிக்கு காரணம் பகவத் கீதை தான், நான் பகவத்கீதையை ஆழமாகப் படித்தேன். பலனை எதிர்பார்க்காதே கடமையை செய்! உன்னுடைய தலைவிதி உன் கையில் இல்லை. இலக்கு நோக்கி முன்னேறிச் செல் என்ற இந்த மூன்று கருத்துக்களும் தான் என்னை ஊக்கப்படுத்தியது. எனவே பகவத்கீதை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் பகவத்கீதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததை போல ஊடகங்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த கருத்து நியாயம் தானா என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதை எப்போது உருவானது. புத்த மதம் செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில் அதனுடைய சாக்கிய தத்துவம் மக்களால்...