கல்வி – வேலை குறித்து பேச மறுக்கும் ஊடகங்கள்!

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் சில முன்னணி தேசிய ஊடகங்களில் இப்போதும் எதிர்க்கட்சிகளே கடும் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டி ருக்கின்றன. இந்தியாவில் இரவு 8 மணிமுதல் 10.30 மணிவரை அதிகமானோர் செய்திகளை பார்க்கின்றனர். அதனால் இந்த நேரத்தை பிரைம் டைம் என்பார்கள். பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை இந்த நேரத்தில் பல முக்கிய ஊடகங்கள் விவாதித்த தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து நியூஸ் லாண்டரி ஊடகம் பகுப்பாய்வு செய்துள்ளது. ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18, டைம்ஸ் நவ், சி.என்.என்.- நியூஸ் 18, ஆஜ் தக் உள்ளிட்ட 6 தொலைக்காட்சிகளில், 6 நெறியாளர்களின் 429 நிகழ்ச்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவே 52% விவாதங்கள் நடைபெற்றுள்ளன. வெளிப் படையாக பாஜகவுக்கு ஆதரவாக 27% விவாதங்கள் நடந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிரான விவாதங்கள் மிகச் சொற்பமாக 1.4% அளவில் மட்டுமே நடந்திருக்கிறது. 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் கல்வி- வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து 1.1% மட்டுமே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடுநிலையற்ற ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளும் நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன. எதார்த்த கள நிலவரத்தை மறைத்து, கருத்துருவாக்கம் செய்ய முயற்சிப்பதாகவுமே இருக்கின்றன.

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

You may also like...