சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?

கொரோனாவுக்கான முதல் மருந்து என்று பொய்யான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவை கடுமையாகக் கண்டித்த உச்சநீதிமன்றம், செய்தித்தாள்களில் பொது மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு மிகச் சிறிய அளவில் விளம்பரம் வெளியிடப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக பொது மன்னிப்பு வெளியிடப்படும் அளவில், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன், பொய் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பிரிவு 170 ஏன் திடீரென்று நீக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

You may also like...