திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர போசு, மண்டல துணைச் செயலாளர் தி.ந.கோவேந்தன், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் ந.வேலு ஒன்றிய செயலாளர் தோழர் செயக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரங்கன், கா.ப.ராஜா, ஒன்றியப் பொருளாளர் கந்தன், குமரன், விசிக வழக்கறிஞர் தங்கப் பாண்டியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கொடி யுவராஜ், நகரத் துணைச் செயலாளர் விக்னேஷ், மாதேஷ், புல்லூர் முகாம் பொறுப்பாளர்கள் லாரண்ஸ், சங்கர், குமரேசன், ஆஞ்சி, அசோக், சம்பத் உள்ளிட்ட விசிக நிர்வாகிகளும், மக்கள் தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் செவ்வேள்,
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் இராஜேந்திர பிரசாத், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முல்லை, பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி மாவட்டத் தலைவர் மதனகவி, மாவட்டத் துணைச் செயலாளர் பகுத்தறிவாளன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி செந்தில் அகிலன், புரட்சிகர இளைஞர் முன்னணி கோபி, தொழிற்சங்க நடுவம் உரூபன், மக்கள் தமிழகம் கட்சி சரவணன், அரங்க சிவலிங்கம், நடுப்பட்டறை சசிக்குமார் சமூக செயற்பாட்டாளர் சரன்ராஜ், முருகன் பூங்காவனம், குமார், முரளி சந்திப், பாண்டியன் உள்ளிட்ட தோழமை இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருப்பத்தூர் மாவட்டக் கழக அமைப்பாளராக புல்லூர் சுரேஷை நியமித்தார்.

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

You may also like...