திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர்.
இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் தோழர்கள் எடுத்துரைத்தனர். தோழர்களை வரவேற்று, தமிழச்சி தங்கபாண்டியனோடு MP மகிழ்ச்சியோடு உரையாடினார்.
உடன் விஜய் குமார், ம.கி.எட்வின் பிரபாகரன், இரண்யா, சைதை சிவா, ஸ்ரீ விக்னேஷ், அட்டி அருண், வேளச்சேரி இமானுவேல் துரை ஆகியோர்.
பொள்ளாச்சி : இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை 24.03.2024 அன்று பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

You may also like...