Category: திவிக

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

1. 11. 2021 இரவு 8 மணி அளவில் கோவை மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஊடிகேநசநnஉந உயடட மூலம் நடைபெற்றது. இந்த கலந்துரை யாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: 2. 1957 நவம்பர் 26இல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்திய போராளிகளின் நினைவை போற்றும் வகையில் வண்ண சுவரொட்டி அடித்து கோவை மாவட்டம் முழுதும் பரவலாக ஒட்டுதல். 3. நவம்பர் 26 2021 அன்று கோவை மாவட்ட கழகத் தோழர்கள் ஒன்றுகூடி ஜாதி ஒழிப்பு போராளிகளை நினைவு கூர்ந்து உறுதிமொழி ஏற்று வீர வணக்கம் செலுத்துவது. 4. வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 250 சந்தாவை தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேர்த்து அதற்கான தொகையையும் முகவரி பட்டியலையும் 2021 டிசம்பர் இறுதிக்குள் தலைமையிடம் ஒப்படைப்பது. பெரியார் முழக்கம் 25112021 இதழ்

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

மறைந்த திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் பெரியார் தொண்டர் ப.பிர கலாதன் நினைவேந்தல் கூட்டம், 21.11.2021 அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு குருவரெட்டி யூர், தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் நாத்திகஜோதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கு.வேல் முருகன் (அம்மா பேட்டை ஒன்றிய செய லாளர்), காவை ஈஸ்வரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ப. ரத்தின சாமி (மாநில அமைப்பு செயலாளர்), சு. துரைசாமி (மாநில பொருளாளர்), ப. சத்தியமூர்த்தி (திராவிடர் கழகம்), வேணுகோபால் (மாவட்ட செயலாளர்), அரங்க-இராசகோபால் (வழக்குரைஞர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்ட தலைவர்), பெரியநாயகம் (அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் திமுக.), வெ.கிருஷ்ணமூர்த்தி (வழக்குரைஞர்- பாமக), வேங்கை பொன்னுசாமி (தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்), விஸ்வநாதன் (முன்னாள் ராணுவ வீரர் குருவை) ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

‘தமிழ் இந்து’- வின் ஊடக அறம் இது தானா ? கடந்த காலங்களில் அரசு நியமிக்கும் குழுக்கள், கட்சி காரர்களுக்கு பதவி தருவதற்கே பயன்படுத்தப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதில் பண்பு மாற்றங்களை செய்து வருகிறது. துறை சார்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது குறித்து தமிழ் இந்து நாளேடு (19.11.2021) எழுதியுள்ள தலையங்கம் ஊடக அறத்தை புறம் தள்ளி அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறது. ‘சென்னை பெருநகர வெள்ளச் சேத தணிப்பு மேலான்மைகள்’ மற்றும் மேலான்மைகளுக்கான அறிவுரை குழுமத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்புகழ் நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலான்மையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற இவர், குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரது நம்பிக்கைக்குரிய அதிகாரியாக செயல்பட்டார். மோடி பிரதமரானவுடன் அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள, டெல்லிக்கு அழைத்து பேரிடர்...

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் -லதா இணையரின் மூத்த மகள் தமிழ்செல்வி – சிறீராம்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்வு 9.11.2021 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி,  தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேராசிரியர் சரஸ்வதி, மாணவர் நகலகம் உரிமையாளர் சவுரிராசன், மணிமேகலை, பொள்ளாச்சி மா. உமாபதி, தடா ஓ. சுந்தரம், வருமான வரித் துறை முதன்மை ஆணையர், செல்வகணேஷ், இணை ஆணையர் பி. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.50,000/-மும், குழுமூர் அனிதா அறக்கட்டளைக்கு ரூ.10,000/- அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18112021...

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர் ! திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார். இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது...

தமிழ்நாடு கொடியை  கொளத்தூர் மணி ஏற்றினார்

தமிழ்நாடு கொடியை கொளத்தூர் மணி ஏற்றினார்

நவ. 1 தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 1 காலை 8 மணியளவில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வெளிடப்பட்ட தமிழ்நாடு கொடியை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  கொளத்தூர் செக்போஸ்ட்டில் ஏற்றி வைத்தார். மேட்டூர் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் 01.11.2021 திங்கள் காலை 10.30 அளவில் தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற பொழுது அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடுத்தது. காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் நாட்டுக் கொடியை ஏற்ற முயன்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட தோழர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், சந்திரசேகரன், பிரபாகரன், தீனதயாளன், அருண்குமார், கோகிலா ஆகிய 8 பேரும் நங்கவள்ளி ஆசூஏ மஹால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். மாலை 6.00 மணிக்கு...

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 7.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தலித்முரசு மற்றும் காட்டாறு பதிப்பகம் வெளியிட்ட பெரியாரின் கட்டுரைத் தொகுப்புகள் “நான் இந்துவாக இருக்கப் போவதில்லை” இன்னும் நூல் குறித்த அறிமுக நிகழ்வும் சமூகநீதி தளத்தில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்ற தோழர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித்முரசு ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன், எழுத்தாளர் அழகிய பெரியவன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன், இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்டத் தலைவர் தலித் குமார் ஆகியோர் பங்கேற்று நூல் குறித்து மிக விரிவாகப் பேசினர். இந்நிகழ்விற்கு   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார் கழகத்தினுடைய...

‘நீட்’ மற்றொரு உயிர் பலி: தமிழ்நாடு மாணவர் கழகம்  மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

‘நீட்’ மற்றொரு உயிர் பலி: தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதி நெம்பர் 10, முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்த நிலையில் 30.10.2021 அன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த உடன் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் தொடர்ந்து நான்காவது முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்தச் சந்திப்பில் தோழர்கள் சபரிகிரி, விஷ்ணு, திருப்பூர் சந்தோஷ், பிரசாந்த், ராமகிருஷ்ணன் மற்றும் மகேந்திர குமார் உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 04112021 இதழ்

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

கழகத் தோழர் யாழ் இரவி- திராவிடச்செல்வி இணையரின், மகள் யாழ் பிரபா- மணிகண்டன் ஆகியோரின் இணையேற்பு ஒப்பந்த விழா 2.09.2021  மாலை 6 மணியளவில், மேடவாக்கம் ஆ’ள பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. திராவிடச் செல்வி மறைந்த கழகப் பேச்சாளர் கீசகனின் மகள் வயிற்றுப்  பேத்தி ஆவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதிய குரல் ஓவியா, தமிழக மக்கள் முன்னணி பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டிற்கு நன்கொடையாக ரூ. 2000/- வழங்கினர். பெரியார் முழக்கம் 04112021 இதழ்

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்களின் இல்ல சந்திப்பு 26.09.2021 காலை 9:30 மணிக்கு ஆரம்பமானது. முதல் சந்திப்பு  ஆசிரியர் சிவக்குமார்  இல்லத்தில் தொடங்கியது. காலை உணவு அருந்தியபடியே தோழர்கள் உரையாடினர். பிறகு சி.எம். நகர் பிரபு இல்லம், சித்தோடு கமலக்கண்ணன் இல்லம், முன்னாள் மாவட்டச் செய லாளர் கு. சண்முகப்பிரியன் இல்லத்தில் தோழரின் உடல் நலம் குறித்த விசாரிப்பும் , உரையாடலுமாக சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு பெருமாள் மலை ராசண்ணன் இல்லத்திலும், கொங்கம்பாளையம் அருள் இல்லத்திலும், நசியனூர் குமார் இல்லத்திலும் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து செம்மாம்பாளையம்  கணேஷ் இல்லத்திலும், ரங்கம்பாளையம் கிருஷ்ணன்-மணிமேகலை இல்லத்திலும், அதே பகுதியில் வசிக்கும் விஜயரத்தினம்  கடையில் தோழர்களின் முதல் கட்ட சந்திப்பும், உரையாடலும் இனிதே நிறைவு பெற்றது. ஒவ்வொரு தோழர்களின் இல்லத்திலும் இனிப்புகளும், பலகாரமும், பழங்கள், பழச்சாறு, தேநீரென தோழமையும் அன்புமான உபசரிப்பிலும் கழகத்தின் அடுத்த கட்ட பணிகளுக்கான திட்டமிடலும் என பயனுள்ள சந்திப்பாகவும், கழகப்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு* தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும் *தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்* *18.11.2021* . *வியாழக்கிழமை*...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு : பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். —– பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம். —– “ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது, பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது, அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும். இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி...

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

*செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் நெறிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எமது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட மற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !* தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு ! – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !* இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம். தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி, விடுதலைப் போராட்டத்தின் தேவை, ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை...

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு… பள்ளிபாளையம் ஐந்து பனையில் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த மனோகரன் அவரது மகன் இருவரும் சேர்ந்து இரண்டு நாட்கள் முன்பு சக்திவேல் என்ற அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞரை ஜாதியை இழிவுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. உடனடியாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் முத்து பாண்டி மற்றும் தமிழ் புலிகள் கட்சி தோழர்கள் தாக்கப்பட்ட தோழரை சந்தித்து உண்மையறிந்து காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தனர்.. தற்போது ஜாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !  – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன. கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த...

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…*  *இட ஒதுக்கீடு மீறல்கள்…*  *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்*  *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்து ஐஐடியில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதிய தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கின்றது. தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் தவறாது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு தோழர்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொளத்துர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். *சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்* ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக...

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு ! நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021 நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com – திராவிடர் விடுதலைக் கழகம், 21.06.2021 ——————————————— நீட் தேர்வு ஏன் வேண்டாம்? 12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல. பள்ளிகளில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

தலைமைக் குழு – 20.06.2021. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் அறிமுக உரையாற்றினார். நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலைவாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப்பட்டது. கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கடந்த 10.01.2021 அன்று திருமணமான புதிய இணையர்கள் அறிவுமதி-தமிழன்பன், கழக வார ஏடான, ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ 5000-யை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் அண்ணா நினைவு நாள் கருத்தரங்கில் (பிப்.27) வழங்கினர். அதைத் தொடர்ந்து, சென்னை கழகத் தோழர் விஜயனும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக ரூ 1000 அளித்தார். 17.2.2021 அன்று தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பிறந்த நாளன்று விரட்டுக் கலைக் குழு ஆனந்த் கழக ஏட்டிற்கு ரூ.2000 நன்கொடை அளித்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தாயார் உடல்நலமின்றி இருக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் 7.2.2021 அன்று பிரபாகரன் இல்லம் சென்று தாயாரின் உடல்நலம் விசாரித் தனர். முன்னதாக மதுரை மாவட்ட கழகத் தோழர் காமாட்சி பாண்டியையும் (பிப்.6),  பிப்.7 அன்று நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கழகத் தோழர் மாசிலாமணி இல்லத்தில் கழகத் தோழர் களையும் சந்தித்து கழக செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். மார்ச் 7ஆம் தேதி மகளிர் தினவிழாவை குடும்பத் துடன் குற்றாலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட...

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தா. பாண்டியன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு தி.வி.க. தலைமை அலுவலகத்தில் 27.2.2021 அன்று நடைபெற்றது. படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட...

‘அண்ணாவை பேசுவோம்; வாசிப்போம்’ – கழகம் நடத்திய கருத்தரங்கம்

‘அண்ணாவை பேசுவோம்; வாசிப்போம்’ – கழகம் நடத்திய கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் நினைவு தின கருத்தரங்கம், ‘அண்ணாவை பேசுவோம், வாசிப்போம்’ என்ற தலைப்பில், 27.02.2021 சனிக்கிழமை, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை தலைமை அலுவலகத்தில், மாலை 6 மணியள வில் தொடங்கி நடைபெற்றது. கழகத்தின் தலைமைக் குழு உறுப் பினர் அன்பு தனசேகர் வரவேற்பு கூறி னார். அறிவுமதி தலைமை வகித்தார். ‘திராவிடம் பேசிய சிறுகதைகள்’, ‘அண்ணாவின் ஆரிய மாயை’, ‘அண்ணா – திராவிட நாடு’ ஆகிய தலைப்புகளில் தேன்மொழி, மதிவதினி, சந்தோஷ் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கருத்துரையாற்றினர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அண்ணாவை ஏன் பேச வேண்டும், தற்போதைய பாஜக ஆட்சியில் பறிபோன உரிமைகள் மீட்க எப்படி அண்ணா தேவைப்படு கிறார், பார்ப்பனியம் அண்ணாவிடம் எப்படி தோற்றது’ போன்றவற்றை தெளிவாக விளக்கி சிறப்புரை யாற்றினார். கருத்துரையாற்றிய தோழர்களுக்கு, சரவணக்குமார் எழுதிய ‘தம்பிக்கு’ என்ற புத்தகத்தை, பேராசிரியர் சரஸ்வதி...

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன்,   19.2.2021 மாலை 7 மணியளவில் சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை இராயப்பேட்டை, வி.எம் தெரு, பெரியார் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி வரவேற்று உரையாற்றினார். நாத்திகன் வரவேற்பில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரூதர்புரம் கார்த்தி, தோழர்கள் அரங்க குணசேகரன், பார்த்திபன், வளர்மதி ஆகியோரும் உடனிருந்தனர். நாத்திகன் வழக்கை கழக வழக்கறிஞர் துரை அருண் நடத்தினார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு ! 06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல. தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள். தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும், தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ? மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல்...

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை ! ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ; இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம்...

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

”தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை” ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல். (11.13.2016) (தினத்தந்தி செய்தி) சென்னை, மார்ச்.12 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு ! 06.03.2021 – திருச்சி கழகத் தோழர்களுக்கு, வணக்கம். எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. பொருள்: 1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு 2) இயக்க ஏடுகள் பரப்பல் 3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள் 4) மாவட்ட பயிற்சி வகுப்புகள் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் 01.03.2021

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு ! 07.02.2021 – ஞாயிறு – மதியம் 2.00 மணி ஆர்.கே.மண்டபம் – ஒத்தக்கடை – மதுரை. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் MP, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் தோழர் பேரா சுபவீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும்...

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்.. தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார். இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர்...

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா! நாள் :07.03.2021, ஞாயிறுகாலை நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம். தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், தென்காசி மாவட்டம். முன்னிலை : தோழர். கோமதி, நெல்லை தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி தோழர். அனிதா, கபாலிபாறை வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர். சிறப்புரை : “திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) மகளிர் தின விழா உரை தோழர். சங்கீதா, (அமைப்பாளர், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர். அ. மாசிலாமணி தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க. தோழர். பா.பால்வண்ணன் நெல்லை...

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கருத்தரங்கம் !

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கருத்தரங்கம் !

பேரறிஞா அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் #கருத்தரங்கம் ! தலைப்பு : “அண்ணாவைப் பேசுவோம் வாசிப்போம்” நாள் : 27.02.2021 சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : திவிக தலைமை அலுவலகம், மைலாப்பூர்,சென்னை. தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் கருத்துரையாற்றுகின்றனர். சென்னை அறிவுமதி நிகழ்விற்கு தலைமை ஏற்கிறார். கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றவுள்ளார். அண்ணாவைப் பற்றி அறிவோம், உரையாடுவோம் !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் அவர்களும் மற்றும் தோழமை இயக்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். நாள் : 28.02.2021 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம் : வாடிப்பட்டி,மதுரை. மாநாடு ஒருங்கிணைப்பு : RMPl தமிழ்நாடு மாநிலக் குழு

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் ! வருகிற ஞாயிறு 28/02 மாலை 4 மணிக்கு, துடியலூர், அண்ணா (காலனியில்)குடியிருப்பு … படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுபவர் : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்)

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்டத் தோழர் கார்த்தி என்கிற அறிவரசு (36) கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக முடிவெய்தினார். துடியலூரில் உள்ள அண்ணா குடியிருப்பில் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டது. தோழர் அறிவரசு கொள்கைப்படியே இறுதி நிகழ்வு எந்தவித, ஜாதி, மத சடங்குகள் இல்லாமல் கருப்புத் துணியும், கழகக் கொடியும் போர்த்தி, கழகப் பெண் தோழர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை மெஹந்தி ஆகியோர் அவரது உடலை தூக்கினர். துடியலூர் மின் மயானத்தில் அறிவரசு உடல் மாலை 5:30 மணியளவில் எரியூட்டப்பட்டது. இல்லத்தில் இருந்து மின் மயானம் வரை கழகத் தோழர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வந்தனர். கடந்த 09.02.2020 அன்று கோவையில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் குடும்பத்துடன் தன்னை கழகத்தில் அறிவரசு இணைத்துக்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பெரியாரியல் பயிலரங்கில் குடும்பத்துடன் பங்கேற்றார். பெரியாரியலை தேர்வு செய்து...

சென்னையில் ‘ஊபா’ எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னையில் ‘ஊபா’ எதிர்ப்பு கருத்தரங்கம்

‘‘ஊபா’வை நீக்கிட என்.அய்.ஏ வை கலைத்திட குரலெழுப்புவோம்’ கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 20.02.2021 அன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, “பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களே பிரிட்டிஷ் அரசாங்கமே கலைத்துவிட்டது. அதன் மாற்றே இந்த ஊபா சட்டம். அது தேச விரோதி களுக்கு எதிராக பயன்படுத்துவதாக பாஜக அரசு கூறி வருகிறது, மக்களுக்காக சிந்திப்பவர்கள் தான் தேச விரோதி களென்றால், நாம் தேச விரோதிகளா கவே இருப்போம்” என்று கருத்துரை யாற்றினார். கருத்தரங்கில் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி, மயிலை இராவணன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25022021 இதழ்

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கழக வெளியீட்டு செயலாளர் கோபி இராம. இளங்கோவன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு தலா 108 சந்தாக்களை சேர்த்து முகவரிப் பட்டியலுடன் உரிய தொகை ரூ.54,000/-த்தை அனுப்பியுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மாவட்டம் தோறும் நன்கொடை வழங்க தலைமைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதைத்  தொடர்ந்து இதுவரை சேலம் (மேற்கு), சென்னை மாவட்டம் தலா ரூ.10,000/- வழங்கியுள்ளது. பெரியார் முழக்கம் 25022021 இதழ்

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஆத்துப் பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மதனின் ‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு விழா 18.02.2021, வியாழன் காலை 11.30 மணியளவில் நடை பெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக பகுத்தறிவுப் பாடல்களை து. சோ. பிரபாகர், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோர் பாடினர். கழகப் பொருளாளர் துரைசாமி அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்  விற்பனையை தொடங்கி வைத்தார்.  கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இயற்கை ஆர்வலர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திகழ்வில், திவிக கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், திராவிடர் இயக்கத்...

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.02.2021 அன்று ஞாயிறு மாலை 4 மணியளவில் கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வெளியீட்டு செய லாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும், வீரப்பன் வழக்கில் பெரும் சிக்கலுக்கு ஆளாகி சிறையில் வாடுபவர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டக்...

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

சர்வதேச சமூக நீதி நாளான பிப்ரவரி 20 – முன்னிட்டு 20.02.2021 அன்று 25க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய தேசிய பிற்படுத்தப்படட ஊழியர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஓய்வறியா இட ஒதுக்கீட்டு போராளி, மண்டல் குழு அமைக்கக் காரணமான முன்னோடிகளில் ஒருவருமான, சீரிய பெரியார் கொள்கை செயல்பாட்டாளர், 96 வயதாகும் அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு வாழ்நாள் சமூக நீதி சாதனையாளர் விருது வழங்கியும், அவருடைய சீரிய பணியினை பாராட்டும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது. நிகழ்வில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் ஆச்சாரி தல்லொஜு, பெல் ராணிப் பேட்டை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பேரமைப்பின் நிர்வாகிகளான கு.தனசேகர், சி.சேதுபதி , ஆர்.அப்சல், ஆர்.செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர். பெல் இராணிப்பேட்டை கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பெல் தொழிலாளர்களும் சமூக நீதி ஆதரவாளர்களும் பங்கேற்றனர். முன்னதாக பெல் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட...

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தில்...

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது. ‘புரட்சிப்...