Category: பெரியார் முழக்கம்

அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் சிந்தனை மேம்பாட்டுக்கு பெரியார் சிலைகள் அவசியமானவை நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு

அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் சிந்தனை மேம்பாட்டுக்கு பெரியார் சிலைகள் அவசியமானவை நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார். பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி...

நாகர்கோயிலில் மின்சுடுகாடு: குமரிமாவட்டக் கழகம் வலியுறுத்தல்

நாகர்கோயிலில் மின்சுடுகாடு: குமரிமாவட்டக் கழகம் வலியுறுத்தல்

குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2012 ஞாயிறு மாலை நாகர்கோவில் குமரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் குமரி மாவட்ட கழகத் தலைவர் சூசை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வே.சதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்வில் பேபி ஜெபக்குமார், அருட்செல்வர், குலசேகரம் சேவியர் நீதியரசர் ஆகியோர் உரைக்குப் பின் கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் வழக்கறிஞர்  அப்பாஜி, சஜித், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பகுத்தறிவுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமைதி வழியில் போராடும் போராட்டக் குழுவினர்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதோடு கைது செய்துள்ள விடுவிக்காத போராளிகளை விடுவிப்பதோடு காவல்துறையின் காவல் அரண் மற்றும் 144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நாகர்கோவிலில்...

89 வயது பெரியார் தொண்டரின் உணர்ச்சிமிகு கடிதம்

89 வயது பெரியார் தொண்டரின் உணர்ச்சிமிகு கடிதம்

திருவரங்கத்தைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஆ.பெரியசாமி எழுதியுள்ள கடிதம்: எனக்கு 89 வயதாகிவிட்டது. ‘பெரியார் முழக்கம்’ இதழை எனது முதுமை காரணமாக படிக்க இயலவில்லை. எனவே என் முகவரிக்கு இதழை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதழை படிக்க முடியவில்லையே என்று வருத்தம் மேலிடுகிறது. எங்கள் ஊர் செயலாளர் த.அசோக் வழியாக கழக நிகழ்ச்சிகளை நான் கேட்டு அறிந்து வருகிறேன். வயது 89 ஆகிவிட்டாலும், என்னால் முடிந்த அளவு இந்தக் கழகத்துக்கு உதவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.  உதவியும் வருகிறேன். பெரியார் திராவிடர் கழகத் தொண்டும், (பெரியார் முழக்க’த்தின் செய்திகளும் எனக்கு மிக மிக விருப்பமாக உள்ளது. பெரியார் அப்படியே நடந்து வருவதுபோலவே – நான் உணருகிறேன். பெரியாரின் உண்மையான தொண்டர் என்ற உணர்வோடு இதைக் கூறுகிறேன். – ஆ.பெரியசாமி, 154, சங்கிலி தோப்பு, அம்மா மண்டப சாலை, திருவரங்கம்-4. பெரியார் முழக்கம் 21062012 இதழ்

லண்டன் நாடாளுமன்றக் குழு முன் வகுப்புரிமைக்கு குரல்!

லண்டன் நாடாளுமன்றக் குழு முன் வகுப்புரிமைக்கு குரல்!

1919 –  லண்டனில் நாயர் முடிவு எய்தியதும், கே.வி.ரெட்டி நாயுடுவும், ஏ.ராமசாமி முதலியாரும் களத்தில் போராடும்போது, திடீர் என்று தளநாயகன் முடிவு எய்திவிட்ட நிலையில், கை பிசைந்து நின்றனர். நாடாளுமன்றக் குழுவின் முன் நீதிக்கட்சியின் சார்பாக, பார்ப் பனரல்லாதாருக்குப் பிரதிநிதித்துவம் கோரி வாதாடி வேண்டிய பெரும் பொறுப்பு தன் மீது விழுந்ததை  கே.வி. ரெட்டி உணர்ந்தார். நாயர் அவ்வப் போது சொன்ன கருத்துகளைத் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தார். அதன் துணை கொண்டு, மாறும் சில புள்ளி விவரங்களின் துணை கொண்டும், இரவு பகலாக 10 நாட்கள் உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை யைத் தயார் செய்தார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாயரின் நண்பர் களான வாட்னிஸ், லர்ட் சிடன்ஹாம் ஆகி யோர் உதவியினால், நாடாளுமன்றக் குழு வின் முன் சாட்சியம் சொல்ல வேண் டியதற்கான நடை முறைகள் மற்றும் தெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு, ஆகஸ்டு 12-ல்...

337 தலித் மக்களைக் கொன்று குவித்த பார்ப்பனர்களின் சேனை

337 தலித் மக்களைக் கொன்று குவித்த பார்ப்பனர்களின் சேனை

‘இஸ்லாமிய பயங்கரவாதம்’, ‘மாவோயிசப் பயங்கரவாதம்’, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்’ – என்று பார்ப்பன ஏடுகளும், பனியாக்களின் ஏடுகளும், ‘தேசிய’ ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி, ஏதோ, இந்த அமைப்புகள் எல்லாம் பயங்கர வாதத்துக்காகவே பிறப்பெடுத்து வந்ததைப்போல சித்தரிக்கின்றன. எந்த பயங்கரவாதமும் அடிப்படை வாதமும் ஏற்க முடியாதவைதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதற்கு நேர் மாறாக, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பன பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பது பற்றி எந்த ஏடும் எழுதுவதற்கு முன்வருவது இல்லை. பீகாரில் ‘ரன்வீன் சேனா’ என்ற பயங்கர வாத ஆயுதம் தாங்கிய அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்த பிரமேஷ்வர் சிங், கடந்த ஜூன் முதல் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மிக மோசமான கலவரத்தை நடத்தியுள்ளனர். அது என்ன ‘ரன்வீன் சேனா?’ இது பார்ப்பனர்களின் ஆயுதம் தாங்கிய ஒரு படை! ராஜபுத்திரர்களை...

மனித உரிமைச் சட்டங்கள் : அய்.நா.வை ஏமாற்றுகிறது இந்தியப் பார்ப்பன ஆட்சி

மனித உரிமைச் சட்டங்கள் : அய்.நா.வை ஏமாற்றுகிறது இந்தியப் பார்ப்பன ஆட்சி

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: அய்.நா. மனித உரிமைகளைக் காப்பாற்று தற்கும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கும் இனப் பாகு பாடுகளை ஒழிப்பதற்கும் சர்வதேச சட்டங்களை யும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. உலகின் பல நாடுகள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட் டுள்ளன. தொடர்ந்து இந்த உரிமை மீறல்களைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால், உலகிலே பெரிய நாடுகளில் ஒன்றாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் என்ன நிலை? மனித உரிமை மீறல் களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாகிறவர்கள் “சூத்திரர்களும்”, பஞ்சமர்களும்தானே தவிர, “பிராமணர்கள்” அல்ல. இந்த நாட்டில் பார்ப்பனர்கள் ‘பிராமணர்’களாகி விடுவதால், அவர்கள் மனிதர்களைவிட மேலானவர்கள். தங்களின் பிரதிநிதியாகவே கடவுளால் படைக்கப் பட்டதாக பார்ப்பனர்கள் கூறுவதை அரசாங்கமும் அங்கீகரித்துவிட்டது. அதனால்தான் ஆகமங்கள் தீண்டாமையை வலியுறுத்தியபோதும் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுகிறது. நீதிமன்றங் களும் இந்த ‘ஆகமத் தீண்டாமை’களை ஏற்று,...

28 ஆண்டுகளாக அகற்றப்படாத நச்சுக் கழிவுகள்

28 ஆண்டுகளாக அகற்றப்படாத நச்சுக் கழிவுகள்

“எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் துஜாதிகளில்லாமலும் (இரு பிறப்பாளர்கள்) இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமை நோய் இவைகளால் துன்பப்பட்டுச் சீக்கிரத்தில் அழிந்து விடும்.”                                            – மனு அத்.8 சுலோகம் 22 – கீழ்சாதிக்காரர்கள் மற்றும் ‘பிராமண’ தெய்வங்களை ஏற்காதவர்கள் வாழும் பகுதி, துன்பத்தில் மூழ்கி, அழிந்தே போய்விடும் என்ற பார்ப்பன மனுவின் புத்தியை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொண்டுதான் இந்திய ஆட்சியும் செயல்படுகிறது என்பதற்கு போபாலில் நடக்கும் சம்பவங்களே சான்று. போபாலில் யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க நிறுவனத்திலிருந்து நச்சு வாயு கழிவு கசிந்ததால் பல்லாயிரம் பேர் இறந்தனர். பெரும்பாலானவர்கள் ஏழை முஸ்லீம்கள், மனுதர்மப்படி புறக்கணிக்கப் பட்டவர்கள். வறுமையில் வாடி அழியப்பட வேண்டியவர்கள். நச்சு வாயுக் கசிவு நடந்து 28 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அந்த ஆலையைச் சுற்றி படிந்து கிடக்கும் ரசாயனக் கழிவுகள், இன்றும் அகற்றப்படாமல் 28 ஆண்டுகளாக அப்படியே அப்பகுதியில் பதிந்து கிடக்கின்றன. இந்த...

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு: திருச்சி மாவட்டக் கழக தீர்மானம்

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு: திருச்சி மாவட்டக் கழக தீர்மானம்

3.6.2012 அன்று காலை 11 மணியளவில் இளந்தாடி துரைராசன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாமோதரன், கருர் மாவட்ட செயலாளர் காமராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி சகிலா விடுதியில் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட இணை செயலாளர் புதியவன், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலர் அசோக், சிரிகாந்த், பழனிவேலு, பொன்னுசாமி, முருகானந்தம் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சியில் ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் சார்பாக மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 21062012 இதழ்

காவிரி நீருக்கு யாகமாம்!

காவிரி நீருக்கு யாகமாம்!

திருச்சி காவிரியாற்றில் ‘வேத பார்ப்பனர்கள்’ 25 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, தண்ணீரில் அமர்ந்துகொண்டு யாகம் நடத்தியிருக்கிறார்கள். கருநாடகத்தில் நல்ல  மழை பெய்ய வேண்டும் என்பதற்கு இந்த யாகமாம். கருநாடக அணையில் நீர் வழிந்தால், வேறு வழியின்றி தமிழகத்துக்கு திருப்பி விடப்படுமல்லவா? ‘பாரதிய கிசான் சங்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த யாகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.வி.இராமலிங்கம், சிவபதி ஆகியோரும் கலந்து கொண்டார்களாம். தமிழகத்துக்கு நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய நீரை, முறையாக வழங்க கருநாடக அரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அப்போதுதான் தீர்ப்பு சட்டப்படியான ஆவணமாகும் என்று தமிழக அரசும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.  அதற்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. அரசியல் ரீதியாகப் போராடுவதைவிட யாகங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்ற வேதகால பார்ப்பனியத்தை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதப் பார்ப்பனர்கள் ஓதும் வேதங்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என்று நம்பும்...

சிங்கள அமைச்சர் ஓட்டம்

சிங்கள அமைச்சர் ஓட்டம்

7.6.2012 அன்று காலை கோவையிலுள்ள இந்திய அரசின் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பங்கேற்க வந்த சிங்கள அமைச்சர் ரெஜினோல்ட் கூரே தங்கியிருந்த லீ மெரிடியன் ஓட்டலை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.தே.பொ.க., தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் கருப்புக் கொடி காட்டிய கழகத் தோழர்கள் 30 பேர் காவல்துறை கைது செய்தது. கழகமும் மற்ற அமைப்புகளும் போராட்டம் அறிவித்ததை அறிந்த சிங்கள அமைச்சர் உடனடியாக கோவையை விட்டு வெளியேறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர தலைவர் வே.கோபால், மாநில ஆலோசனை குழு உறுப்பினர் பிரகாசு, அலுவலக பொறுப்பாளர் சா.கதிரவன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், பெ.நா. பாளையம் கி.சீனிவாசன், கி.கடவு நிர்மல், பகுதி கழக செயலாளர் அர.ராசன், ஈசுவரன், மனோகரன், ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். முன்னதாக ம.தி.மு.க., த.தே.பொ.க., வி.சி. கட்சி...

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். “கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும். கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது.  கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது. கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது. கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார். சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை...

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரம்: 200 ஊர்களில் 5 கட்ட பரப்புரை இயக்கங்கள்

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரம்: 200 ஊர்களில் 5 கட்ட பரப்புரை இயக்கங்கள்

சேலம் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2012 மாலை 5 மணிக்கு மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் கூடியது. கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: சேலம் மேற்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் உள்ளடக்கி 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வாழ்வியல் எதிர்ப்பு மற்றும் நவம்பர் 26 மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக வருகிற 29.6.2012 மாலை நங்கவள்ளியில் பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்ட பிரச்சாரப் பயணம் சூன் 30, சூலை 1 ஆகிய...

நெல்லையில் கைதிகள் உரிமை கோரி விளக்கக் கூட்டம்

நெல்லையில் கைதிகள் உரிமை கோரி விளக்கக் கூட்டம்

சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் நெல்லை மேலப் பாளையத்தில் 10.6.2012 ஞாயிறு மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக் குரைஞர் உமர்கய்யாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எசு.ரிஃபாயி, கழகத் தலைவர் கொளத்தூர்மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சம்சுதீன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப் பாளர் மை. வீரர் அப்துல்லா, இந்திய தேசிய லீக் கொள்கை பரப்புச் செய லாளர் கம்பம் இப்ராகிம் ஆகியோர் உரையாற்றினர். மேலப்பாளையம் ஊர் மக்கள் இந்நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டனர்.   பெரியார் முழக்கம் 28062012 இதழ்

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பா.ஜ.க.வினர் அத்வானி பிறந்த நாள் சுவரொட் டிகளை சேத்துப்பட்டு பகுதியில் ஒட்டியிருந்தனர். அதில் இரண்டு சுவரொட்டியில் நீல மையினால் கோடிட்டு அத்வானி முகத்தை அசிங்கப்படுத்திவிட்டதாகவும் (?), இதைக் கேட்ட பா.ஜ.க.வினரை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டிய தாகவும், கொலை மிரட்டல் விடுத்த தாகவும், தென்சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் பா.இராசன் மற்றும் ம.க.இ.க.வை சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவுகள் 427, 294 (பி), 506 (ii) கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எழும்பூரில் வழக்கு நடந்தது. 6 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப் பட்டனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையான அளவில் சாட்சிகளால் கூற முடியவில்லை. அடையாளமும் காண முடியவில்லை. கடந்த 26.4.2012 அன்று குற்றவியல் நடுவர் திருமதி கீதாராணி,...

நன்கொடை

நன்கொடை

25.5.2012 மாலை 6 மணிக்கு பவானியில் நடந்தேறிய பவானி வழக்குரைஞர் ப.பா.மோகன் அவரது மகள் ஆர்த்தி-விஜயகுமார் ஆகியோரின் மணவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினார். ஈரோடு கருமாண்டப்பாளையம் சிவக்குமார்-கோகிலா, சாதி மறுப்புத் திருமண இணையர் தங்களது முதலாமாண்டு திருமண நாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளனர். மேட்டூர் அணை ஆர்.எஸ். கழகத் தோழர் அ.சக்திவேல் – அ. அனிதா இணையரின் மகள் அ.ச.அறிவுமதியின் 9 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்காக ரூ.1000/- வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆ-ர்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கருத்துரிமையை மறுக்கும் காவல்துறை சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருப்பதையும் அதற்கு எதிராக வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் விளக்கிடும் நூல். வெளியீடு: மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை, 95, அய்.ஆர்.எம்.பி. வளாகம், ஆட்சியர் அலுவலகம் எதிரில், பெருந்துறை சாலை, ஈரோடு. தொகுப்பு : நிழல் வண்ணன். விலை : ரூ. 20. தொடர்புக்கு: 98940 13138  

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு பெயரை மாவட்ட நிர்வாகம் திடீரென அகற்றியதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் திருச்சி தொடர் வண்டி சந்திப்பு – காதி விற்பனையகம் அருகே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பெரியார் பெருந்தொண்டரும் சட்ட எரிப்பு வீரருமான இளந்தாடி துரைராசன், மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் புதியவன், புதிய தமிழகம் மாநகர செயலாளர் கோ.சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு, ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. சோழன், மாவட்ட தலைவர் திராவிடன், மாவட்ட செயலாளர் இரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். குணா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொரு ளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், பழனி, பொன்னுசாமி...

கந்தர்வன் கோட்டையில்  அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கந்தர்வன் கோட்டையில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரியும், கல்பாக்கம் அணு உலையை இழுத்து மூடக் கோரியும், போராடுகிற மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பாக 14.6.2012 மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வன் கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் மீ.த. பாண்டியன், இப்பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் சைவப் பேரவை கலையரசி அம்மையார் உட்பட பலர் உரையாற்றினர். தோழர் பாரி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 28062012 இதழ்

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

நெதர்லாந்து நாhட்டின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றம் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் கேங்கே டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. லைபீரியாவுக்கு அருகே உள்ள சியாரா லியோன் பகுதி மக்கள் மீது, 2002 ஆம் ஆண்டில் அவர் நடத்திய உள்நாட்டு யுத்தத்தில் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், பயங்கரவாதம், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை அவர் செய்துள்ளதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 6 ஆண்டுகாலம் இந்த விசாரணை நடந்தது. 80 நாட்கள் அதிபர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்திருந்தார். விசாரணையை தள்ளிப் போடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் டெய்லர் செய்து பார்த்தார். ஆனாலும் குற்றத்தி லிருந்து தப்ப முடியவில்லை. இரண்டாவது உலகப் போரின் இறுதியில் போர்க் குற்றவாளிகள் நூரம்பர்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு  முதன்முதலாக சர்வதேச நீதிமன்றத் தில் தண்டனைக்குள்ளாகும் – ஒரு நாட்டின் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு முள்ளிவாய்க்கால்...

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கு ‘தமிழர்’ அடையாளத்தைப் பெற்றுத் தந்ததே திராவிடர் இயக்கம் தான்! 4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். இக் கூட்டத்திற்கு மன்னை நகர செயலாளர் காளிதாசு தலைமை உரையாற்றினார். திருச்சி புதியவன், சோலை மாரியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோரை தொடர்ந்து, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர்...

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிறது. சென்னையைச் சேர்ந்த இனியன் இளங்கோ என்ற வாசகர் இது குறித்து எழுதியுள்ள ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை ‘இந்து’ நாளேடு  ஜூன் 22 இதழில் வெளியிட்டுள்ளது. (அதாவது இந்த விளம்பரம் வெளி வந்த சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு) “சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல்...

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப் பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப் பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட் டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது. ‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக்...

கழக மாநில  செயற்குழு கூடுகிறது

கழக மாநில செயற்குழு கூடுகிறது

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் 7.7.2012 சனி காலை 10 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடுகிறது. செயற்குழு உறுப் பினர்கள் வருகை தர வேண்டு கிறோம். இடம்: முருகேசன்  திருமண மண்டபம்  (சென்னை இராயப்பேட்டை கழக  பெரியார் படிப்பகம் அருகில்) பொருள் : எதிர்காலத் திட்டங்கள் – கோவை இராமகிருட்டிணன், – விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்கள்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு – மனுதர்ம எரிப்புப் போராட்டம் விளக்கப் பரப்புரைப் பயணம் 23.6.2012 முதல் திருவள்ளூர் – வேலூர் – திரு வண்ணாமலை – விழுப்புரம்  காஞ்சி புரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 10 நாட்கள் எழுச்சி நடைபோட்டு வருகிறது. சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் இந்த பரப்புரையை ஒழுங்கு செய்துள்ளது. பயணத்தின் துவக்கப் பொதுக் கூட்டம் 22.6.2012 அன்று சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இரா சேந்திரன், பயணத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். சிற்பி ராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியும், சமர்பா எழுச்சி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக் கூட்டத்தை மயிலைப் பகுதி கழகத் தோழர்கள்   பா.ஜான், இராவணன், சுகுமாறன், மனோகரன், மாரிமுத்து, முருகன், வாகனராஜ், பார்த்திபன், நாத்திகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் 23.6.2012 அன்று காலை 10 மணியளவில் கு.அன்புதனசேகர், வழக்கறிஞர் சு.குமாரதேவன் ஆகி...

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கி, கொடுமுடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விநாயகன் கோயில் குடமுழுக்கை தடுத்து நிறுத்தினர். 14.6.2012 அன்று காலை 6 மணிக்கு கொடுமுடி சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் விநாயக னுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்துவதாக இருந்தது. இந்தச் செய்தி கழகத் தோழர்களுக்கு 13.6.2012 மதியம் கிடைத்தது. உடனே களமிறங்கிய தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தின சாமி தலைமையிலான தோழர்கள் சசிக்குமார், மோகன் மற்றும் பாண்டியன் ஆகியோர் அன்று மாலையே கொடுமுடி காவல் நிலையத்தில், அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிடும் சின்னங்களோ, கோவில்களோ, கடவுளர் பொம்மை களோ இருக்கக் கூடாது என்ற அரசாணையை சுட்டிக்காட்டி இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தக் கோரி புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்க மறுத்த காவல் துறையினர் இந்த மனுவை மாவட்ட காவல்துறைக்குத்தான் அனுப்ப வேண்டும். மேலும், இவ்வாறு கடைசி நேரத்தில் வந்து புகார் தருகிறீர்களே என்றனர்....

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யில் மே 5 ஆம் தேதியன்று நாத்திகர் விழா நடைபெற்றது. விழாவானது கொடியேற்று விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொதுக் கூட்டம் என மூன்று பெரும் விழாக்களாக மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவிற்கான சுவரெழுத்துப் பிரச் சாரம் மற்றும் விளம்பரப் பலகை களை மாவட்டம் முழுக்க பெரும் பாலான இடங்களில் அன்பு நாட்டுக் கோழி வளர்ச்சி மைய நிறுவனத்தார் செய்திருந்தனர். விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் இரவு வரை மோகன், பகுத்தறிவாளர் பேரவை சிவக்குமார் மற்றும் சென்னிமலை மாணவர் அணி இசைக்கதிர், கார்த்திகேயன், இனிய வன் ஆகியோர் வாகனப் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். செல்லுமிடங்களி லெல்லாம் பெரியார் தொண்டர் களுக்கு கிடைக்கும் வரவேற்பாகிய எதிர்ப்பும், ஆதரவும் கலந்த நிலை இருந்தது. விழாவன்று சென்னிமலை பேருந்து நிலையத்தில் இயக்கக் கொடியினை பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் வி.சு. விசு ஏற்றி...

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16.6.2012 சனிக் கிழமை மாலை 7 மணிக்கு மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் கழகத்தின் சார்பில் “திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா”ப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் நா.ப.கதிரவன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். புலவர் கடவுள் இல்லை அவர்கள் சாமியார்களின் மோசடிகளை விளக்கி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் கலந்து கொண்டு, திராவிடர் இயக்கத்தின் தோற்றம், திராவிடர் இயக்கம் நடத்திய போராட்டங்கள், அதனால் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த நன்மைகள், இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தின் தேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர். உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14.6.2012 வியாழனன்று மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி...

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரை: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய இந்திய வரலாற்று நூலில் சொல்லுகிறார்: 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளை நிறமுள்ள ஆரியர்கள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் நுழைந்து, காஷ்மீர் முதல் ராஜபுத்னா வரை ஆக்ரமித்துக் கொண்டனர். கருப்பு நிற திராவிடர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வம்சா வழியினர். ஆரிய திராவிட கலப்பில் ஏற்பட்டது வங்காளி மற்றும் ஒரியா இனம். மங்கோலியர் திராவிடர் இனக் கலப்பில் ஏற்பட்டது. பூட்டான், சிக்கிம் மற்றும் நேப்பாள் இனம் ஆரியர் மொழியான சமஸ்கிருதம் மேற்கத்திய மொழிகளோடு ஒத்துப் போவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திராவிட இனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சிந்துவெளி கலாச்சாரத்திற்கு முற்பட்டவர்கள். திராவிட  இனத்தைப் பற்றிய முழு ஆய்வு தனியாக...

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

18.5.2012 அன்று ‘சன்’ தொலைக்காட்சியில் ஒரு செய்தி – நித்தியானந்தாவை மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நியமித்திருப்பது பற்றி சங்கரமட ஜெயேந்திரரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது. அது சைவ மடம். அங்கு மடாதிபதிகள் மொட்டையடித்து தலையில் ருத்ராட்சம் அணிய வேண்டும். அதுவே நியதி. ஆனால், நித்தியானந்தா தலையில் முடி வைத்துக் கொண்டு, ரஞ்சிதாவுடன் சுற்றி வருகிறார். எனவே இது முறையற்ற செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டார். இந்தச் செய்தியை மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதரிடம் எடுத்துச் சொல்லி கருத்து கேட்டபோது, அருணகிரிநாதர், “கடந்த 1987 ஆம் ஆண்டு இந்த ஜெயேந்திரர் பெண்களுடன் ஓடிப் போன சமயத்தில், செத்துப் போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த ஆளை இழுத்து வரும்படி கூறினார். நானும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த ஜெயேந்திரனை திரும்ப மடத்துக்குள்...

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

அரியனாவில் ஹிகார் மாவட்டத்திலுள்ள இராக்கி ஷா, இராக்கி ஹாஸ் எனும் இரட்டை கிராமங்கள், வரலாற்று முக்கியத்துவமானவை. காரணம், இக்கிராமப் பகுதி சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கிய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கண்டறியப்பட்டவை. 12 ஆண்டுகளுக்குமுன் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது, ஏடுகளில் தலைப்பு செய்திகளாகவும் வந்தன.  சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவிலேயே கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த மிகப் பெரிய பகுதி. அமரேந்திரநாத் என்ற அகழ்வாராய்ச்சியாளர் தலைமையிலான குழு, 1997-1999 ஆண்டுகளில் 3 கோடை விடுமுறைகளில் இந்த ஆய்வுகளை மேற் கொண்டது. ஒரு சமூகததின் நாகரிகத்தைக் கண்டறிய முக்கிய ஆவணமாகக் கருதப்படும், இறந்தவர் உடல்கள் புதைக்கப்பட்ட குழிகளும் இங்கே கண்டறியப்பட்டது. தொண்மை மிக்க திராவிடர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட இந்தப் பகுதி, இப்போது மலைமலையாக மாட்டுச் சாணங்களை யும் குப்பைகளையும் கொட்டிக் கிடக்கும்...

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

மதுரை ஆதினம், நித்யானந்தாவை தனது வாரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்து மத கட்சிகளே நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும், தாக்குதல்களை யும் நடத்தி வருகின்றன. கருநாடக பா.ஜ.க. ஆட்சி நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் சைவ மடங்கள் 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. புத்த மதம், சமண மதம் வேகமாகப் பரவியதால் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்ளவே இந்த மடங்கள் உருவாயின. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சைவத் ‘திருமேனிகள்’ ஊர் தோறும் கோயில் கோயிலாகச் சென்று பதிகம் பாடினர். சைவத்திலும் மனுதர்மமான பார்ப்பனியம் புகுந்து சைவக் கடவுள்களை பார்ப்பனமாக்கியது. சைவக் கடவுளான சிவன், பார்ப்பன ஊடுருவலால் ‘உருத்திரன்’ ஆனான். பார்ப்பன யாகங்களை நடத்தி, ‘உருத்திரனை’ப் போற்றி ‘மகாதேவன்’ என்று மாற்றினார்கள். தமிழ்க் கடவுள் என்று கூறப்பட்ட முருகன், பார்ப்பன ‘மனுதர்ம’ ஊடுருவலால் கந்தனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றப்பட்டான். வீரத்தின் கடவுளாக...

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி தீண்டாமை எதிர்ப்பு; மனு சாஸ்திர எரிப்பு விளக்க 10 நாள் பரப்புரைப் பயணத்தில் பல்லா யிரக்கணக்கில் மக்களை சந்தித்து, ‘மனுதர்மம்’ இப் போதும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமைகளை தோழர்கள் விளக்கினர். கடந்த வாரம் முதல் மூன்று நாள் பயணம் குறித்த செய்திகள் வெளி வந்துள்ளன. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு: 26.6.2012 அன்று காலை 9 மணியளவில் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. காலை 10.30 மணியளவில் சேத்துப்பட்டு நான்கு முனை ரோட்டிலும், காலை 11.15 மணியளவில் தேவிகாபுரத்திலும், மதியம் 12.30 மணியளவில் போளூர் பேருந்து நிறுத்தத்திலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் நாயுடு மங்களம், மாலை 4.45 மணி வேங்கிக்கால், மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையம், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை பெரியார் சிலை...

சாதி மத மறுப்பு மண விழா

சாதி மத மறுப்பு மண விழா

சேலம் மாவட்டம் ஆவத்திப் பாளையம் முரு கேசன்-சின்னப்பா இணை யரின் மகன் கழகத் தோழர் சரவணன்; ஆவத்திப்பாளை யம் ஷாஜ கான்-மைதிலின் பீபி இணையரின் மகள் ஷஜீனா ஆகியோரின் மத மறுப்பு, தாலி சடங்குகள் தவிர்ப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 28.6.2012 அன்று பகல் 11 மணிக்கு பள்ளி பாளையத்தில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி, மாநில செயற்குழு  உறுப்பினர் இரத்தினசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி  மாணிக்கம், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். மணமக்கள் விழாவின் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.2000 அளித்தனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

275.2012 அன்று கொமாரபாளையம் கழகம் நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழா மனு சாஸ்திர எரிப்பு விளக்கக் கூட்டம் கொமாரபாளையம் நகரப் பகுதியில் நடைபெற்றது. அதையொட்டி புதிய கழகக் கொடிக் கம்பங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. காவேரி நகர் புதுப்பாலம் அருகில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நகராட்சி அலுவலகம் அருகில்  பொதுச் செய லாளர் இராமகிருட்டிணனும், மெயின்ரோடிலுள்ள ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகில் நகர தலைவர் இரா. திராவிடமணியும், பேருந்து நிலையம் அருகில் கேப்டன் அண்ணாதுரையும் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

22.6.2012 அன்று மாலை 6மணிக்கு மந்தைவெளி மார்க்கெட் அருகில் திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம், பரப்புரை பயணத் தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி.இராவணன் தலைமை வகிக்க, சு.அம்பிகா, இரா.குமார் முன்னிலை யில் ஜா.ஜெயந்தி வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சமர்பா இசை நிகழ்ச்சி நடந்தது. நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல்களை பாடினார். இரவு 7.30 மணிக்கு சிற்பி இராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் இரா. மாரி நன்றியுரையாற்றினார். கூட்டத்துக்குப் பிறகு, கழகத்தின் கொள்கை எழுத்துப் பலகையை மந்தைவெளியில் கழகத் தலைவர் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே...

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும்  படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு, ‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர். ‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது...

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் புரியாத மொழியான ‘சமஸ்கிருத மந்திரங் களால்’ – அதை நம்புவோர், ஏமாற்றப்படும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்: எனக்கு இளமையிலிருந்தே “இவ் வடமொழிச் சடங்கு முறை தமிழ் மக்களுக்கு எவ்வளவு புறம் பானது?” என்பது உள்ளத்தினை உறுத்தி வந்தது; “கண்ணற்ற கபோதிகளாய்த் தமிழ் மக்கள் ஏமாந்து, இச் சடங்குகளுக்கு அடிமைகளாகி  விட்டிருக் கின்றனரே!” என வருந்தலானேன். ஓசூரில் நான் குடியிருந்த வீட்டிற்கெதிரே புரோகிதர் ஒருவர் குடியிருந்தார்.  அவர் மனைவியின் தம்பி பன்னிரண்டு அகவைச் சிறுவன். கோடை விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அப்போதே தனியே சென்று, தமிழர் வீட்டுச் சடங்குகளை நடத்தி வைத்துவிட்டு, அரிசி, காய்கறி முதலியவற்றைச் சுமந்து வருவான். ஒருநாள் அவனை “எங்கிருந்து இவற்றைக் கொண்டு...

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

7.7.2012 அன்று காலை கழக மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 5.7.2012 அன்று காலை சமூக விரோதிகளால் சுடப்பட்டும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி (எ) மு. பழனிசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தில் நிலவும் கழகப் பணிகளிலுள்ள சுணக்கம், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தைப் பரப்புதல், தமிழக அரசியல் சூழல், கழகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், கழகத்தின் அமைப்பு முறையை...

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற  தோழர்  பழனி  கொடூரமாகக் கொல்லப்பட்டார்

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற தோழர் பழனி கொடூரமாகக் கொல்லப்பட்டார்

தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான கிருட்டிண கிரி மாவட்டத்தில் “தளி” சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தளி தொகுதியின் எல்லை ஓரமாக இருக்கும் கெலமங்களம் (வேப்பினப்பள்ளி தொகுதியின் எல்லையோரம்). கெலமங்களத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் இவர் சார்ந்திருக்கும் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இயங்கக் கூடாது என்ற கருத்துள்ள அராஜவாதியாக இருந்து வருகிறார். தி.மு.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், இந்தப் பகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வந்தபோது, இவரது ஆட்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கவும் பட்டார். தன்னை பொது வுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டிருந் தாலும், கடந்த பதினைந்து...

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளிப்படையாக விளம்பரங்களே வருவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அதை வெளியிட்ட ‘இந்து’ஏட்டின் மீது, பத்திரிகைக் குழுவுக்கு சென்னை மருத்துவர் இனியன் இளங்கோ புகார் கூறியதன் அடிப்படையில், ‘இந்து’ அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்து’ நாளேடு (ஜூலை8, 2012) டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாடகைக்கு வீடுகளை விடுவதில் ‘இனப் பாகுபாடு’ காட்டப்படுகிறது என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான டெல்லியில் முஸ்லீம்கள் என்றாலே, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரப்படுவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் முஸ்லீம்கள் வாழும் நெருக்கடியான பகுதிகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சென்னையில் முஸ்லீம்களுக்கும், ‘தலித்’களுக்கும் இதே நிலைதான். ‘சைவமா? அசைவமா?’, அசைவக்காரர்களுக்கு வீடு இல்லை என்று கூறிவிடுகிறார்கள். மாமிச உணவு சமைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாடகைக்கு விடப்படும் நிலையும் உண்டு. உணவு முறையில் புகுத்தப்பட்ட ‘மனுதர்மம்’ வாழ்க்கையில் மட்டுமல்ல; வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட விட்டு வைக்காமல், துரத்தி...

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: 1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன. கல்வி 1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம். கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர்...

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!  தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே! தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

வீரமரணம் அடைந்த பழனிச்சாமி வீர வணக்கப் பேரணி சென்னையில் 14.7.2012 மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் புறப்பட்டது.   கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் முன்னிலை வகித்தார். வீர வணக்க முழக்கங்களுடன் பேரணி மயிலாப்பூர் டாக்டர் நடேசன் சாலை – அய்ஸ் அவுஸ் – வி.எம். சாலை வழியாக இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை வீதியின் இருபுறமும் மக்கள் திரண்டு பார்த்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேரணியில் பங்கேற்றார். இராயப்பேட்டை கழக அலுவலகமான பெரியார் படிப்பகம் அருகில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ‘சேவ் தமிழ்’ அமைப்பைச் சார்ந்த செந்தில், திருமுருகன் (மே 17 இயக்கம்), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்...

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது. அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக...

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை அலுவலகம் தேடி வந்தார். தற்போது தமிழகம் வந்து, முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கியுள்ள தோழர் இராசா, தம்முடைய உயர்கல்வி பெறும் நிலை உயர்வுக்குக் காரணமான பெரியார் தொண்டினை நன்றியுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் நினைவு கூர்ந்தார். விரைவில் சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பதிவு செய்ய விருப்பதையும் தெரிவித்தார். தான் பொருளாதார நிலையில் இன்னும் வளரவில்லை. ஆனாலும் இந்த கழகத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறி, ரூ.1000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 26072012 இதழ்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சி கராத்தே கழகம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டி பொள்ளாச்சியில் பல்லடம் ரோடிலுள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் வந்தனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த 2 கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதை அறிந்த பொள்ளாச்சி நகர பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க.வினர் கராத்தே போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எக்காரணம் கொண்டும் இலங்கை வீரர்கள் இங்கு வரக்கூடாது. எங்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பொள்ளாச்சி வந்தால் மீண்டும் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள், ‘நீங்கள் பொள்ளாச்சி சென்று கராத்தே போட்டியில் பங்கேற்கக் கடும் எதிர்ப்புள்ளது. எனவே இங்கிருந்து திரும்பி விடுங்கள்’...

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையிலும் திருவரங்க நகர செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்றது. மா.பெ.பொ.கட்சி மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஆதித் தமிழர் பேரவை உறந்தை ரமணா, பெரியார் பாசறை அமைப்பாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாதன், சட்ட எரிப்புப் போராளி முத்துச் செழியன் (பெ.தி.க.),  பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்  ஆரோக்கியசாமி மற்றும் அகில இந்திய இளைஞர் இயக்கம் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட இணை செயலாளர் த. புதியவன் மற்றும் குணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட பொருளாளர் மு.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார் நன்றியுரையாற்றினார்....

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை கட்டாயமாக்கும் இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரிவைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெங்களூரிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. பெங்களூரில், ‘நந்தினி லே அவுட்’ பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளனர். வகுப்பறையிலும் அவர்களுக்கு கடைசி இடத்தில்தான் இடம். அவர்கள் கொண்டு வரப்படுகிற உணவு டப்பாக்கள், பள்ளி நுழைவு வாயிலில் சோதனையிடப்படுகின்றன. பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே இவர்களின் பெயர்கள்...

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஆதி திராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற பாராட்டத்தக்க ஆணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலித் பழங்குடி மாணவர்கள் நலன் கருதி அரசு ஆணையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே வெளியிடுகிறது. பெரியார் முழக்கம் 26072012 இதழ்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...