வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர், ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ், ‘புக்கர்’ விருதுபெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், ஜெர்ரி பிரின்டோ, ஆனந்த் டெல்டும்டே, நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், பி. சிவகாமி, விஜயலட்சுமி, விஜய்பிரசாத் முதலான 200 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு, இந்தி, ஆங்கிலம், தமிழ், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளில் தங்களின் வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின்குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. தாங்கள் விரும்பியபடி சாப்பிடுவதற்கான உரிமை, வழிபடுவதற்கான உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமையை அனைவருக்கும் சமமாக வழங்கியிருக்கிறது. அதேபோன்று ஆட்சியிலிருப்போரின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான பேச்சுரிமையையும் வழங்கியிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பேராலும், சாதியின் பேராலும், வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று பாகுபாடு ஏற்படுத்தியும், குடிமக்கள் தாக்கப்படும் மற்றும் கொல்லப்படும்...