Category: பெரியார் முழக்கம்

நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

பெரம்பூர் கூட்ட மேடையில் பெண் போராளிகள் கீழ்க்கண்ட உறுதி மொழியை எடுத் தனர். கூட்டத் தினரும் எழுந்து நின்று உறுதி எடுத்தனர். “மனிதர்கள் – மனிதர்களாகவே பிறக்கிறார்கள். ஜாதி – அடை யாளம் பின்னர் திணிக்கப்படுகிறது. ஆணுக்குப் பெண் அடிமை என்பதும், சூழ்ச்சியால் கட்டமைக்கப்பட்டது. பெண்களாகிய நாங்கள், இளைய தலைமைக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான். ஜாதி – பெண்ணடிமை ஒழிப்பை நமது தலைமுறையில் முடித்து வைப்போம். இளைஞர்களே! ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்! சுய ஜாதி மறுப்பாளர்களாக சுய பாலின உணர்வை விட்டவர்களாக மாறுங்கள்! ஜாதி ஒழிப்பு களம் நோக்கி வாருங்கள்! வெற்றி நமதே!” பெரியார் முழக்கம் 12102017 இதழ்

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

“இளைஞர்களே; ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்; சுய ஜாதி எதிர்ப் பாளர்களாக மாறுங்கள்; ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி வாருங்கள்; நமது தலைமுறையிலேயே ஜாதி அமைப்பை முடித்து வைப்போம்!” என்று பெண் போராளிகள் அறைகூவல் விடுத்தார்கள். சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி பெண் போராளிகள் அறைகூவல் விடுக்கும் பொது மேடை ஒன்றை உருவாக்கித் தந்தது. பெரம்பூர்  பெரவள்ளூர் சதுக்கத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த எழுச்சி நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நெடிய வீதி முழுதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. 6 மணி யளவில் மக்கள் மன்றத்தின் பறை இசை; புரட்சிகரப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுக் கொண்டே இருந்தன. இருக்கைகளுக்குப் பின்னாலும் வீதியின் ஓரங்களிலும் அடர்த்தியாக இளைஞர்களும் பொது மக்களும்...

‘தேசத் தந்தை’க்கு அவமானம் : காந்தி சிலைக்கு மாலை போட வந்தவர்கள் கைது!

‘தேசத் தந்தை’க்கு அவமானம் : காந்தி சிலைக்கு மாலை போட வந்தவர்கள் கைது!

தேசத் தந்தை காந்தி பிறந்த நாள் விழாவில் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதித்திருக்கிறது தமிழக காவல்துறை. ‘கவுரி லங்கேஷ் கொலையும் காந்தி கொலையும் ஒன்றே’ என முழக்கமிட்டது சட்ட விரோதமாம்! கூறுகிறது காவல் துறை. மாலையிட வந்த திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிய லெனினிய மக்கள் விடுதலை,மாணவர் மன்றம், காஞ்சி மக்கள் மன்றம், பாப்புலர் பிரண்ட் அமைப்பினர், எழுத்தாளர்கள், பேராசிரியர்களை காந்தி சிலைக்கு மாலையிடாமல் தடுத்து கைது செய்துள்ளது காவல்துறை! ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகு காந்தி பிறந்த நாளில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கத் தடை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற கின்னஸ் சாதனையை செய்து முடித்திருக்கிறது எடப்பாடி ஆட்சியும் அதன் காவல்துறையும். பெரியார் முழக்கம் 05102017 இதழ்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் எழுச்சி

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் எழுச்சி

தந்தை பெரியார் 139-வது பிறந்த நாளையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 17.09.2017 ஞாயிறு காலை 9.00 மணிக்கு பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் மணிமொழி மாலை அணிவித் தார். தோழர்கள் அனைவரும் பெரியாரியியல் உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் படம் அலங்கரிங்கப்பட்ட வண்டி முன்செல்ல இரு சக்கர வாகனத்தில் அனைவரும் காசி பாளையம் சென்றனர். அங்கு கழகக் கொடி கம்பத்தில் பெரியார் பிஞ்சு யாழ் பிரபாகரன் கொடியேற்றியபின் பொதுமக்கள் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அடுத்து அக்கரைக்கொடிவேரி பகுதியில் செல்வி மா.ஈஸ்வரி கழக கொடியினை ஏற்றினார். சத்தியமங்கலத்தில் அனைத்து அமைப்பினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மற்றும் சமூக ஆர்வலர் கருப்புசாமி துவக்கி வைத்தனர். ஊர்வலம் சத்தி பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (14.9.2017 இதழ் தொடர்ச்சி) “கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி புத்தர் கவலைப்படாதவராக அது பயனற்ற வாதம் என்ற கருத்துடையவராக இருந்தாலும் அனைத்தையும் உருவாக்கி ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை புத்தரிடம் இருந்திருக்குமானால், அவர் போதித்த கருத்துகள் எல்லாம் தலைகீழாக வேறு திசையில் சென்றிருக்கும்” என்கிறார், தலைசிறந்த இந்திய தத்துவ ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா. “அப்படி ஒரு ‘சக்தி’ இருக்கிறது என்ற நம்பிக்கையி லிருந்துதான் அந்தக் கடவுளை மகிழ்வித்தால் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது; அந்த நம்பிக்கையில்தான் கடவுளை வேண்டுதல்; காணிக்கை செலுத்துதல்; பலியிடுதல் என்ற சடங்குகள் வந்தன. இறைவனை இவற்றின் வழியாக மகிழ்வித்து கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை, புத்தர் காலத்திலும்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுத பூஜை கொண்டாடுவதைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.வி.க. கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைது செய்து சத்திரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர். கைதான தோழர்கள் : ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்), குமார் (மாவட்ட அமைப்பாளர்), திருமுருகன் (மாநகரத் தலைவர்), சத்தியராஜ் சித்தோடு, கிருஷ்ணன் ரங்கம்பாளையம், எழிலன் சித்தோடு. பெரியார் முழக்கம் 05102017 இதழ்

கோவை, திருப்பூரில் கொடியேற்று விழா, தெருமுனை, பொதுக் கூட்டங்கள்

கோவை, திருப்பூரில் கொடியேற்று விழா, தெருமுனை, பொதுக் கூட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் படத்திறப்பு- கொடியேற்று விழா, தெருமுனைக் கூட்டங்கள் – பொதுக் கூட்டங்கள்  நடைபெற்றது. இழந்த உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் என்ற திருச்செங்கோடு மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் செப்-16, சனி காலை 10 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொடங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கோவை வரை இரண்டு நாள் பரப்புரை பயணம் எழுச்சியோடு நடைபெற்றது. செப்-16 காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காரைத் தெழுவில் தொடங்கி கடத்தூர், கடத்தூர்புத்தூர், கணியூர் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கணியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தோழர்கள் கோவை கிருஷ்ணன், சங்கீதா, யாழ் மொழி, யாழ் இசை ஆகியோர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தொடர்ந்து, தோழர் முகில் ராசு உரையாற்றினார். இறுதி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். மடத்துக்குளம் பகுதியில் சோழன் மாதேவி, மடத்துக்குளம் பெரியவட்டாரம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. ...

தபோல்கரிலிருந்து கவுரி இராவணன் வரை… தொடரும் ‘ராமலீலா’க்கள்

ஆண்டுதோறும் விஜயதசமி யன்று புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ‘இராவணன்’, ‘மேகநாதன்’, ‘கும்பகர்ணன்’ – என்று இராமாயணத்தில் ‘அசுரர்’களாக சித்தரிக்கப்படும் திராவிடர்களை வடநாட்டுக்காரர்கள் எரித்து ‘ராமலீலா’ கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் ‘பிரதமர், குடியரசுத் தலைவர்’கள் எல்லாம் இந்த ‘எரிப்பு’ விழாவில் பங்கெடுப்பது வாடிக்கை. பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவரான அன்னை மணியம்மையார் இதை எதிர்த்து 1974 டிசம்பர் 25இல் இராமன், சீதை, இலட்சுமணன் உருவப் படங்களை எரிக்கும் ‘இராவண லீலா’வை நடத்தினார். 1995இல் பெரியார் திராவிடர் கழகம் உருவான பிறகு 1996, 1997ஆம் ஆண்டுகளில் இதேபோல் இராவண லீலாவை நடத்தியது. இப்போது உ.பி. மாநிலத்தைச் சார்ந்த ஓம்வீர் சரஸ்வத் என்ற வழக்கறிஞர் ‘இராவணன் உருவ  பொம்மைகளை எரிக்கக் கூடாது’ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக ‘தினமணி’ நாளேடு (செப்.27) ஒரு செய்தி வெளியிட் டுள்ளது. அதில், “இராவணனை எரிப்பது அவனை தெய்வமாக வணங்கி வரும் சமூகத்தினரை இழிவுப்படுத்துகிறது. மத்திய பிரதேச...

பெண் போராளிகள் – ஒரே மேடையில் ஜாதி ஒழிப்புக்கு போர் முரசு கொட்டுகிறார்கள்

ஜெயராணி – திவ்ய பாரதி – உடுமலை கவுல்யா – வளர்மதி – சிவகாமி – இரோன் சர்மிளா எழுத்துப் பேராளிகள்; களப் போராளிகள்; சுய ஜாதி எதிர்ப்புப் போராளிகள்; இராணுவ ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராளிகள் – இவர்கள் அனைவருமே பெண் போராளிகள். “பெண்கள் வருவதன் மூலமும் அவர்கள் வளர்ச்சி பெருகுவதன் மூலமும் தான் நமது கொள்கைகள் வீறிட்டெழ முடியுமே தவிர, “ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம்” காரியங்கள் சாத்தியமாகி விடாது”. –  இது 1931இல் ஈரோடு சுயமரியாதை மாநாட்டுக்கு பெரியார் விடுத்த அழைப்பு. பெரியார் அன்று தந்த அழைப்பை ஏற்று, இதோ, களம் நோக்கி வருகிறார்கள், பெண்கள். ஜாதி ஒழிப்புக் களம் கூர்மை பெறுகிறது; இயக்கங்கள், அமைப்புகள், தோழர்கள் அனைவரும் ஓரணியாய் திரளுவோம்! பெண்களை கட்டாயம் அழைத்து வாருங்கள்! அக். 7 – மாலை 5.00 மணிக்கு சென்னை பெரம்பூர் பாரதி திடல் நோக்கி திரளுவீர்! பெரியார் முழக்கம் 05102017...

உச்சநீதிமன்றத்தின் இரட்டை அணுகுமுறை ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிக்க முடியாது’-முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேச்சு

பேரறிவாளனை விடுதலை செய்க! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி அரி பரந்தாமன் தனது உரையில் வலியுறுத்தினார். காந்தி கொலையில் ஆயுள் தண்டனைக்கு உள்ளான கோபால் கோட்சேயை 15 வருடங்களில் விடுதலை செய்யும்போது பேரறிவாளனை 26 வருடங்களுக்குப் பிறகும் விடுதலை செய்ய மறுப்பது என்ன நியாயம்? என்று கேட்டார் நீதிபதி அரி பரந்தாமன். ‘சட்டம் ஒழுங்கும் பொது ஒழுங்கும் வெவ்வேறானது’ என்று கூறிய முன்னாள் நீதிபதி அரி. பரந்தாமன், ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்றார். மயிலாப்பூரில் செப்.26 அன்று நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, சுயமரியாதை கால்பந்து கழக சார்பில் நடத்திய கால் பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆற்றிய உரை: “நீட் தேர்வு – அனிதாவை எப்படி சாகடித்தது...

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...

சுயமரியாதை வரலாற்றுச் சுவடுகளின் கண்காட்சி

சுயமரியாதை வரலாற்றுச் சுவடுகளின் கண்காட்சி

விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சி யில் வைக்கப்பட்டிருந்தன. விருதுநகர் அண்ணா சிலை சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்தது இந்த கண்காட்சி. சுயமரியாதைச் சுடர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களால் 1974ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அண்ணா சிலை. சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். விருதுநகரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் பதிவுகளை மா. பாரத் (தி.மு.க. மாணவரணி), அல்லம்பட்டி நாத்திக பாண்டி (மாவட்ட கழகத் தலைவர்) திறந்து வைத்தனர். சாத்தூரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவை செல்வம் (தி.மு.க.), அருப்புக்கோட்டை பதிவுகளை இரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்), கவிஞர் கண்மணி ராசா (தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம்), ஃபிரண்ட்ஸ் செராக்ஸ் மோகன் (தி.வி.க. ஆதரவாளர்), சிவகாசி நகரில்பெரியார் நிகழ்வுகளின் பதிவுகளை மா.பா. மணிகண்டன் (மதுரை மாவட்ட கழக செயலாளர்), திருவில்லிபுத்தூர் வரலாற்றில் பதிவுகளை திருப்பூர் கழகத் தோழர்கள் முத்துலட்சுமி, ராஜபாளையம் பதிவுகளை...

‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகள் 1931 – விருதுநகர் சுயமரியாதை மாநாடும் தீர்மானங்களும்

ஈரோட்டில் 1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் மாநாட்டுக்கு முழு பொறுப்பு ஏற்று நடத்தினார். மாநாட்டுக்கு பொருளாதார மேதையும் சுயமரியாதைக்காரருமான ஆர்.கே. சண்முகம் தலைமை தாங்கினார். இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாடும், மூன்றாவது சுயமரியாதை , வாலிபர் மாநாடும் இதே மாநாட்டில் நடந்தன. மாநாடு குறித்து ‘குடிஅரசு’ விரிவாக செய்திகளை பதிவு செய்திருக்கிறது. ஊர்வலத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் 5000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெண்கள் மாநாட்டில் 3000 பெண்களும், வாலிபர் மாநாட்டில் 2000 வாலிபர்களும் பங்கேற்றனர். இரண்டு யானைகள் ஊர்வலத்தில் வந்தன. 6 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தலைவர்கள் ஊர்வலமாக வந்தனர். பெரிய மைதானத்தில் 5 ஏக்கர் சுற்றளவில் அடைப்பு தட்டிகள் போட்டு மாநாட்டு பந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைகளும் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டு பந்தலில் 200 கம்பங்களில் சுயமரியாதை கொள்கைகள், புராண மரியாதைக்...

தடி உயர்த்தித் தட்டிக் கேட்க பெரியார் நிச்சயம் வேண்டும்! பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தொலைக்காட்சி பேட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பற்றி கூறும்போது அந்த ‘பொம்பள’ய நான் பார்த்ததே இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் பெண்கள் மலரில் (செப்.17) பாலபாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி யில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன் வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ண சாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும்...

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்.17 தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியைச் சார்ந்த அபிராமிக்கும், சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக் கொண்டனர். எளிமையாக நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

மேட்டூரில் வாகனப் பேரணி, பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டம் முழுவதும் கொடியேற்று விழா- இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. காலையில் சமத்துவபுரத்தில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அனிதா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில தலைமைக் குழு உறுப்பினர் அ. சக்திவேல் உரைக்குப் பின், மல்லிகுந்தம், ஜீவா நகரில் சந்திரா கழகக் கொடி யேற்றினார். மல்லிகுந்தம் பேருந்து நிலையத்தில் தேன்மொழி கழகக் கொடி ஏற்றினார். சக்திவேல் உரைக்குப் பின் மேச்சேரி பேருந்து நிலையத்தில் அன்புக்கரசி கழகக் கொடியை ஏற்றினார். மேச்சேரியிலுள்ள அன்னை தெரசா கருணை இல்லத்திற்கு கோ. தமிழ் இளஞ்செழியன் ரூ.2000 நன்கொடை வழங்கினார். குழந்தைகள் அனைவரும் கழகத்திற்கு நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில் பகுதியில் யசோதாவும், பனங்காடு பகுதியில் மாதம்மாளும் கழகக் கொடி ஏற்றினர். நங்கவள்ளி இராஜேந்திரன், ‘சுடர் மின்கல பணி மையம்’...

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு

“இடஒதுக்கீடு எங்கள் உரிமை: அதை இழக்க முடியாது” தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநிலக் குழுவின் ஏற்பாட்டில் ‘தேவேந்திர குல வேளாளர் சமூக உரிமைப் பாதுகாப்பு மாநாடு” 24.9.2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருநெல்வேலி வானவில் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடந்தது. ‘தேவேந்திர குல வேளாளர்’ எஸ்.சி. இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றிருப்பது இழிவு என்று பேசி வரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று கூறி பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசி வருகிறார். இதற்கு எதிராக தேவேந்திரகுல வேளாளர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு, மாநாட்டின் வழியாக டாக்டர் கிருஷ்ணசாமிக்கு  கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இடஒதுக்கீடு போராடிப் பெற்ற உரிமை, அதை இழக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். மாநாட்டுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன்...

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு ‘கணபதி ஹோமம்’ :  கழகம் நடவடிக்கை

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு ‘கணபதி ஹோமம்’ : கழகம் நடவடிக்கை

கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை மங்கையர்க்கரசி அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நிகழ்வில், இரத்தினசாமி, இராம. இளங்கோவன், சண்முகப்பிரியன், சிவக்குமார், வேணுகோபால், குமார்,  சத்தியராசு, சி.என்.சி  சிவக்குமார்,  விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் பெரியார் முழக்கம் 28092017 இதழ்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? நிறுத்தக் கோரி மனு

அரசு அலுவலகங் களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசு ஆணைக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்’ கொண்டாடப் படுகின்றன. இத்தகைய விழாக்களை அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டுச்செயலாளர்), ஆசிரியர் சிவக்குமார், சண்முகப்பிரியன் (தெற்கு மாவட்டச் செயலாளர்), வேணுகோபால் (வடக்கு மாவட்டச் செயலாளர்), தோழர்கள் சத்தியராசு, கோபி விஜயசங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

பெரியார் பெருந்தொண்டர்  சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் (பொள்ளாச்சி) 8.9.2017 முடிவெய்தினார். இவர் நீண்ட காலம் பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் இயக்கத்தில் பணியாற்றியவர். பொள்ளாச்சி தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அலுவலராகவும் அஞ்சல் பணியாளர் சங்கத்தில் பொருளாளராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வாசகராகவும் ஆதரவாளராகவும் இருந்தவர். தோழர் சோமசுந்தரம், அஞ்சல் துறையில் அவருடைய பணிகாலத்தில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாருக்கு ஒரு பாராட்டு விழாவும் பெரியாரின் உருவப்பட திறப்பு விழாவும் இவருடைய பெரு முயற்சியால் தந்தி அலுவலகத்தில் நடந்தது. நெருக்கடி நிலை பிரகடனத்தின்போதும் அது அமுலில் இருந்த காலத்திலும் அறிஞர் அண்ணாவின் பாணியில் உடை அணிந்து கொள்வதிலும், ‘விடுதலை’ நாளிதழை அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது அஞ்சாமையை காட்டியவர். வலுவான திராவிட இயக்கப் பற்றுக் கொண்டவர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து: “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது”...

துணைவர் தேவை

துணைவர் தேவை

எம்.எஸ்.சி., பி.எட்., படித்து ஆசிரியர் பணியில் உள்ள பெண்ணுக்குத் துணைவர் தேவை. வயது 32. மணமுறிவு பெற்றவர். 8 வயதுப் பெண் குழந்தைக்குத் தாய். சாதி, மதம் தடையில்லை. தொடர்புக்கு தோழர் சரவணன்: 98949 25226 பெரியார் முழக்கம் 21092017 இதழ்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல்,  நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05.09.2017 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் நடைப்பெற்றது. நீதி அரசர் (மாவட்டத் தலைவர்-பெ.தொ.க) முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார். தோழர்கள் விஷ்ணு, சூசையப்பா, மஞ்சுகுமார், சஜீவ், போஸ், ரசல் இராஜ், சுகுமார், குமரேசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக, ஜாதி ஒழிப்பு போராளி  இமானுவேல் சேகரின் நினைவு நாள் பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் ஜா.உமாபதி தலைமையில் 11.09.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தோழர்கள் நாத்திகன் மற்றும் கீர்த்தி ஜாதி ஒழிப்பு பாடல் களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினர். இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும்  இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்),  வழக்கறிஞர் துரை அருண் (சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) சிறப்புரை யாற்றினார்கள். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

மயிலைப் பகுதி கழகம் நடத்தும் கால்பந்து போட்டி – பெரியார் விழா

மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சென்னையில் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் வழியாக 5 ஆண்டுகளாக கால்பந்து போட்டியையும் பெரியார் பிறந்த நாள் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறார்கள். இவ்வாண்டு செப்.26ஆம் தேதி பெரியார் பிறந்த நாள்விழா பொதுக் கூட்டம், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழாவை மந்தைவெளி இரயில் நிலையம் அருகே செயின்ட் மேரீஸ் பாலம் பகுதியில் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளரோடு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் வீதி நாடகம், பறையிசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக தலைமையகத்தில் கவுரி லங்கேஷ் படத் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக 17.09.2017 மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் பெரியார் யுவராஜ் தலைமையில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் படத்திறப்பு உணர்ச்சி மயமாக நடந்தது. எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வை இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைத்தார்.  கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கவுரி லங்கேஷ் படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்வில் ஜெயநேசன் (அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு), மனிதி இயக்கத்தின் செல்வி,  இளந்தமிழகத்தின் செந்தில், மே17 இயக்கத்தின் பிரவீன்  சிறப்புரையாற்றினார்கள். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

‘திருமணங்களையே கிரிமினல் குற்றமாக்கிட வேண்டும்’ என்று பெரியார் கூறியபோது சமூகமே அதிர்ச்சி அடைந்தது. இப்போது விடுதலையை கோரி நிற்கும் பெண்கள், திருமணஅமைப்புகளிலிருந்து விலகி நிற்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் கரிசல் மண் எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், தனது 95ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வில் புதுவையில் பேசியபோது, “சொந்த ஜாதி திருமணமே ஜாதியை காப்பாற்றுகிறது; திருமணம் செய்வதையே ஒழிப்பதுதான் இதற்கு தீர்வு” என்று பேசியிருக்கிறார். கரிசல் இலக்கியத்தின் தந்தையும் ‘கி.ரா.’ என்று அழைக்கப்படுபவருமான கி. ராஜ நாராயணனின் 95-வது பிறந்த நாளையொட்டி, ‘எழுத்தாளர் கி.ரா. 95 விழா’ புதுச்சேரியில் சனிக்கிழமையன்று துவங்கியது. 2017ஆம் ஆண்டுக்கான கி. ராஜநாராயணனின் ‘கரிசல் இலக்கிய விருதுகளும்’ வழங்கப் பட்டன. இதில், ‘தளம்’ இலக்கியக் காலாண்டிதழுக்கு, சிறந்த சிற்றிதழுக்கான விருதையும், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு, சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் வழங்கிய கி. ராஜநாராயணன், ‘வாகை முற்றம்’ என்ற தலைப்பில் வாசகர் களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “உயர்...

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

பெங்களூருவிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு, தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா, தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டதலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசினார். அப்போது ராமலிங்க ரெட்டி கூறியதாவது:“சமூக நீதிக்காகவும், திராவிடக் கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்; அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கான பலனை தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்; அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்; அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்; அவரின் போராட்டங்களால்...

அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...

என்னை விடுதலைப் பெண்ணாக்கியவர் -பெரியார்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண் டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடைய வராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன்....

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ நாளேட்டின் பவள விழா கண்காட்சி, சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ளது. அதில் திராவிடர் இயக்க இதழ்கள் பட்டியலில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் இடம் பெற்றுள்ளன. பெரியார் முழக்கம் 14092017 இதழ்

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன் மகன் தமிழ்ப் பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “முகமது தாஜ்“, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன்,  இந்தியப் பிரியன் ஆகியோர் வாழ்த்துரை...

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

மருத்துவ சேவையைக் குலைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடும் சர்வதேச அரசியல் ‘நீட்’ தேர்வு முறையில் பின்னணியாக செயல்படுகிறது என்கிறார் கல்வியாளர் அனில் சடகோபால். அவரது பேட்டி: இது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம் கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர் காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படு கிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்தி வழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப் படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா… சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச்செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில் ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா?...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள்

பார்க்காத கடவுளையே பார்ப்பனர்கள் எப்படி கடவுளை அடைய வழி காட்ட முடியும்  என கேட்டார்  புத்தர் புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி) புத்தரின் சாக்கிய குலத்துக்கும் மற்றொரு குலமான கோலியர் என்ற குலத்துக்கும் இடையே எல்லையாக ரோகினி என்ற ஆறு இருந்தது. இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை யாருக்கு என்பதில் இரண்டு இனக் குழுக்களுக்கிடையே சண்டை. சாக்கியர்கள் ஒன்று கூடி கோலியர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு எடுத்த போது – சித்தார்த்த புத்தர் போர் கூடாது என்று தனது சாக்கிய குலம் எடுத்த முடிவையே எதிர்க்கிறார். சாக்கியர் சங்கம் புத்தரை புறந்தள்ளுகிறது. புத்தரும் கபிலவஸ்துவை விட்டு வெளியேறினார். ஆனால், இந்த மேலோட்டமான நிகழ்வுகளையும் கடந்து நிற்கிறது புத்தரின் துறவு. இனக்...

அசுவிதா – நாகராசு மண விழா !

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அசுவிதா – நாகராசு ஜாதி மறுப்பு இணையர் வாழ்க்கை ஒப்பந்த விழா 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலையில் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி,  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

‘நிமிர்வு’ இதழ் குறித்து திருப்பூரில் வாசகர் வட்டம் ஆய்வு

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 3:00 மணிக்கு நிமிர்வோம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவகாமி தலைமையில் 2ஆவது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்கு பெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  16.9.2017 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் நூல்களைப் பற்றி முன்கூட்டியே பதிவிட்டு...

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செய லாளர் இளங்கோவன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் செப். 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது; கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார்பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூ. 750/-ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபாலிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை கண்டித்தும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப் பட்டு கிராமத்தில் 04.09.2017  அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சி.சாமிதுரை  தலைமை வகித்தார். க. மதியழகன்  தொடக்க உரையாற்றினார்.  வேதகாலக் கல்வி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி கல்வி, நீதிக்கட்சி காலக் கல்வி, இராசாசியின் குலக் கல்வி, காமராசர் ஆட்சி கல்வி, மோடியின் இந்தி திணிப்பு – நீட் தேர்வு பற்றி உரையாற்றினார். அழகு முருகன், இராஜேஷ், இளையரசன், தீனா, பெரியார் வெங்கட் ஆகியோர்  நீட் தேர்வினால் ஏழை எளிய பிள்ளைகள் பாதிக் கப்படுவதைப் பேசினார்கள். இறுதியாக க. இராமர்  கண்டன உரையாற்றினார். உரையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, தமிழக  கல்வியின் சிறப்பு மருத்துவ சிறப்பு, வெளி மாநிலத்தில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றி விரிவாகப் பேசினார். கண்டன...

தலையங்கம் காவிரி புஷ்கரமாம்!

வேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள். காவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது.  டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள். அது என்ன ‘காவிரி புஷ்கரம்’? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும்...

மதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’

மதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் – வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு. “கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்” பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் – மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 – இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர். கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்தி களுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாhய்டு’...

விநாயகர் ஊர்வலத்தைத் எதிர்த்து பெரியார் கைத்தடி ஆர்ப்பாட்டம்: கைது!

“மதத்தை அரசியலாக்காதே; சுற்றுச் சூழலை சீரழிக்காதே; மக்கள் உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க.வின் பரிவாரங்கள் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலங்களை புறக்கணிப்பீர்” என்ற முழக்கங்களோடு பெரியார் கைத்தடிகளை ஏந்தி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி ‘அய்ஸ் அவுஸ்’ பகுதியில் ஆக.31, பிற்பகல் 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலம் நடந்த அதே நாளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு 9 மணி வரை திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டனர். 110 தோழர்கள் கைதானார்கள்.  விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள், புதுவையிலிருந்து பெரியார் சிந்தனை முன்னணியைச் சார்ந்த தீனா உள்ளிட்ட தோழர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் பார்த்திபன், ஜாதி ஒழிப்பு முன்னணி ஜெயநேசன், தமிழக மக்கள் முன்னணி அரங்க. குணசேகரன்  காஞ்சி மாவட்டத்திலிருந்து ரவி பாரதி, கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, வேழ...

கைதான தோழர்களிடம் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி

குழந்தைகளுக்கு சித்தார்த்தன், புத்தன், கவுதமன், அசோகன், கவுதமி இப்படிப்பட்ட பெயர்களைத் தான் பெரியார் ஏராளமாக சூட்டியிருக்கிறார். புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார். ஆக. 31 மாலை 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலங்களை நிறுத்தக் கோரி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் கழகத்தினர் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது தோழர் களிடையே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். அவரது உரை: விநாயகன் சதுர்த்தி பக்தர்கள் கொண்டாடும் மதப் பண்டிகை. அது நடந்து முடிந்து விட்டது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர் என்று பரப்புரை செய்கிறோம். கொண்டாடுவோரை எதிர்த்துப் போராடுவது இல்லை. இன்று நடப்பது மதத்தை அரசியலாக்கும் ஊர்வலம். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அரசியல் ஊர்வலம், மதச் சார்பின்மைக்கு எதிராக நாட்டை இந்துக்களின் நாடு...

எது மெரிட்?

எது மெரிட்?

வீட்டில் தனி அறை இல்லை! குளிர்சாதன வசதி, மின் விசிறி இல்லை! கைபேசி இல்லை! பத்து நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித் தரும் தகுதியும் வசதியும் பெற்ற அம்மா அப்பா இல்லை! கண்விழித்துப் படிக்கும்போது பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை! ‘அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும் போது யூ நோ’ என்று சொல்லும் தாத்தா இல்லை! அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே-பான் கண்ணாடி மாமா இல்லை! ஒரு மணி நேரத்துக்கு 500, 1,000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை! வார இறுதி சினிமா, ஹோட்டல் இல்லை! விடுமுறைக்குச் செல்ல ஊர் இல்லை! இருந்தாலும் 1176! இதுதாண்டா மெரிட்டு! – விஜயசங்கர் ராமச்சந்திரன், முகநூலிலிருந்து பெரியார் முழக்கம் 07092017 இதழ்

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

வடமாநிலங்கள் முழுவதுமே இந்தி பேசினால் பிழைத்துக்கொள்ளலாம் என நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் நிலையில்,  இந்தி மாநிலம் எனப்படும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரில், இந்தியின் மூலம் பொறியியல் பட்டம் படிக்க ஒருவருமே முன்வரவில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ‘அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’ செயல்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் தொடங்கப்பட்டது. மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டும்தான். முதல் ஆண்டில்தான் அப்படி என்றால், இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் தற்போதைக்கு நான்கு தற்காலிகப் பேராசிரியர்கள்...

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

தங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கர்நாடகத்திலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு அமைப்பு களிடமிருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. இதுபோன்ற முயற்சி களுக்கும் தமிழகம் முன்னோடி என்று சொல்லவேண்டும். அரசியலமைப்பு அவையில் அன்றைக்கு உறுப்பினராக இருந்த ஜெயபால் சிங் முண்டா தேசியக் கொடியோடு பழங்குடிகளுக்குத் தனியாகக் கொடி வழங்க வேண்டும் என்று கோரினார். அவர் முன்வைத்த கோரிக்கை விவாத அளவிலேயே முடிவடைந்துவிட்டது. 1947 ஜூன் 22இல் பிரதமர் நேரு இந்திய தேசியக் கொடியை அரசியலமைப்பு அவையில் முதன்முதலாக அர்ப்பணித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தபோது காஷ்மீருக்கு அரசியல் சாசனப் பிரிவு 370இன் படி சிறப்பு அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. அத்தோடு, விவசாயிகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கலப்பை படத்தோடு கூடிய தனிக் கொடியும் காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டது. திராவிட நாடு கேட்டுப் போராடிய திமுக, பிற்காலத்தில்...

தலையங்கம் ‘அனிதாவின் 1176’

தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176. ‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது. மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’....

அனிதாவுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை

குழுமூரில் அனிதாவின் உடலுக்கு கழக சார்பில் கழகத்  தலைவர் கொளத்தூர்  மணி, செப்டம்பர் 2ஆம் தேதி காலை மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 07092017 இதழ்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை

அனிதாவின் மரணம் தமிழகத்தை கொதிப்படையச்செய்துள்ளது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தடையால் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி சமூக நீதிக்காக உயிர்ப்பலி தந்தார். மத்திய மாநில அரசுகளின் படுகொலையாகியிருக்கிறது அவரது மரணம். தமிழகம் முழுதும் போராட்டக் களமாகி வருகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து உயிர்பலி தந்தருவமான அனிதா அவர்களுக்கு நீதிக் கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 2.09.2017 மாலை 3 மணி யளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய ஆட்சிகளுக்கு எதிராக வும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக...

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர். ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள்,...