பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10.04.2019 புதன் கிழமை மாலை 4.00க்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத வெறியர்கள் பெரியார் சிலையை உடைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ் தலைமையேற்றார். அதில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும், பார்ப்பன மதவாதத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட், கல்லை சங்கர், செ.வே ராஜேஷ், பெரியார் பாரதி, கார்மேகம், ஜெ.க. வேலாயுதம், துளசி உள்ளிட்ட 30 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 25042019 இதழ்

You may also like...