குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00மணிக்கு அமைப்பாளர் தமிழ் அரசன் தலைமையுரையுடன் துவங்கியது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஸ்ணு ‘சாதியால் அம்பேத்கர் சந்தித்த பாதிப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் டி.மத்தியாஸ், ‘அம்பேத்கரின் இன்றையத் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்மதி ‘அம்பேத்கரை விழுங்கும் இந்துத்துவா’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு கேள்வி பதில் நிகழ்வுகள் நடைப்பெற்றது. மஞ்சுகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தோழர்கள் ரமேஸ்பாபு, இராஜேஸ்குமார், சஜிகுமார், முத்து, இரவி, சங்கர், இராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 25042019 இதழ்

You may also like...