மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

சேலம் மேட்டூரில் ஏப்ரல் 27ஆம் தேதி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாத்திகர் விழா என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் சக்திவேல் மனு அளித்திருந்தார்.  தேர்தலைக் காரணம் காட்டி, மாவட்ட ஆட்சியரை அணுகக் கூறி, காவல்துறையினர் மனுவைத் திரும்ப அளித்தனர். தங்கள் மனுவைத் திரும்ப அளித்ததன் மூலம் நிகழ்ச்சியைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, விழாவுக்கு அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், கருமலைக்கூடல் காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிடக் கோரி சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு நாட்களில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். நாட்கள் கடந்தபின்னும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் தாமதம் செய்வதால் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக சக்திவேல் அறிவித்துள்ளார்.

விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று மூடநம்பிக்கைக்கு எதிரான நாத்திகர் விழா நடைபெறும்

பெரியார் முழக்கம் 02052019 இதழ்

You may also like...