சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?
‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ஆண்டாள் – தேவதாசி மரபு என்று ஆய்வாளர் கூறிய கருத்தைக்கூட பேசினால் அது இந்துமத அவமதிப்பு என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு அவாளின் வேதம் ஒன்றையே பதிலாக எடுத்துக் காட்டலாம். “வேஸ்யா தரிசனம் புண்யம் ஸ்பர்சனம் பாப நாஸம் சம்பனம் சர்வதீர்த்தா னாம் மைதுனம் மோஷ சாதனம்” – என்பது ஒரு சுலோகம். வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம் போய்விடும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி – இதுவே மேற்குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள். இந்த சுலோகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால்கூட...