Category: பெரியார் முழக்கம்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ஆண்டாள் – தேவதாசி மரபு என்று ஆய்வாளர் கூறிய கருத்தைக்கூட  பேசினால் அது இந்துமத அவமதிப்பு என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு அவாளின் வேதம் ஒன்றையே பதிலாக எடுத்துக் காட்டலாம். “வேஸ்யா தரிசனம் புண்யம் ஸ்பர்சனம் பாப நாஸம் சம்பனம் சர்வதீர்த்தா னாம் மைதுனம் மோஷ சாதனம்” – என்பது ஒரு சுலோகம். வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம் போய்விடும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி – இதுவே மேற்குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள். இந்த சுலோகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால்கூட...

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?

1989ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வடமாநிலங்களில் கடும்  கொந்தளிப்பை உருவாக்கியது. (இது குறித்து விரிவான கட்டுரை, கடந்த வாரம் வெளி வந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டுள்ளது.) தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் காவிரி நீர் உரிமை, நியுட்ரினோ, ‘ஸ்டெர்லைட்’ போராட்டங்களால் இப்பிரச்சினை தமிழகத்தில் இன்னும் தீவிரப்படவில்லை. 2016ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பட்டியலினப் பிரிவினர் தொடர்பாக 7.7 சதவீத வழக்குகளிலும், 11.1 சதவீதம் பழங்குடியினர் தொடர்பான வழக்குகளிலும் தண்டிக்கப்பட் டுள்ளனர். தென் மாநிலங்களிலே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டினாலும், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக நடத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் போன்ற ஜாதி சங்கங்கள் இந்தச் சட்டத்தையே நீக்கிட...

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் கூறியதாவது: இரண்டு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். முதலில், இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதால், இந்தியாவின் பிரதான ஆறுகள்  மேற்கு தொடர்ச்சி மலையில்தான் உற்பத்தியா கின்றன. இதில் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்ட உள்ளனர். அதற்கு 6 இலட்சம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்க்க உள்ளனர். இது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்துக்கு தேர்வு செய்துள்ள இடத்துக்கு அருகாமையில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட 12 அணைகள் உள்ளன. பாறைகள் தகர்க்கப்படும்போது, அணைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. இத்திட்டம் பற்றி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆய்வுக்கூடம் அமைக்க கட்டிட கட்டுமானம் என்ற பெயரில் விண்ணப்பித்து அனுமதி...

‘பக்தி’ எங்கே போகிறது?

‘பக்தி’ எங்கே போகிறது?

வடபழனி சிவன் கோயிலில் ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகப் பணியாற்றும் ஒரு ‘பிராமண’ இளைஞர் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பேர் மரணமடைந் தார்கள்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி கோயிலில் முருகன் நவபாஷாண சிலையை மறைத்து தங்கத்தால் செய்து வைக்கப்பட்ட சிலையில் தங்கத்தைத் திருடி யதாக சிலை செய்த ஸ்தபதியும் அற நிலையத் துறை அதிகாரியும் கைது செய்யப்பட் டுள்ளனர். திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 ஊர் களில் கோயில்களுக்கு தங்கத்தில் தேர் செய்ததில் மோசடிகள் நடந்தது அம்பலமாகி யுள்ளது. இவை இவ்வாராய்ச்சி செய்திகள். உண்மையில் கடவுள் என்பது சிலை தான் என்ற உண்மை அர்ச்சகருக்கும் சிலை செய் பவருக் கும் கோயிலை நிர்வகிப்பவர்களுக்கும் தெரிந் திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு மோசடிகள். பாவம்; அப்பாவி மக்களுக்குத்தான் புரிய வில்லை; தன் பெயரால் வழங்கப்படும் பிரசாதத்தில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பது அந்தக்...

சூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை சமூகநீதிக்கு சவால் விடுகிறார்கள்

சூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை சமூகநீதிக்கு சவால் விடுகிறார்கள்

தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரில் செயல் படும் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூர்ய நாராயண சாஸ்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழக ஆளுநர் இறக்குமதி செய்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. அதற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கருநாடகத்திலிருந்து சூரப்பா எனும் பேராசிரியரை துணைவேந்தராக ஆளுநர் இறக்குமதி செய்துள்ளார். தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத் துணைவேந்தராகக் கூடிய தகுதி பெற்றவர்களே இல்லை என்பதுபோல தமிழகத்தின் தனித்துவமான ‘சமூகநீதி’ தத்துவத்துக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது ஆளுநரின் இந்த நடவடிக்கை. தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவைச் சார்ந்த பரிமளாதேவி என்ற ஒரு  பெண் துணை வேந்தராக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமார், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று கூறி, ‘சரணாகதி’ அமைச்சரவையாகவே இருக்க விரும்புவதை வெளிப்படுத்திவிட்டார். இதற்கு மாறாக சட்ட அமைச்சராக இருக்கும் சி.வி. சண்முகம், இந்த நியமனங்கள் குறித்து...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டி வெளியானதில் ‘ஏ.பி.வி.பி.’யினர் கைது

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டி வெளியானதில் ‘ஏ.பி.வி.பி.’யினர் கைது

சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதைத் தொடர்ந்து 2 பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மறுதேர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். உச்சநீதிமன்றமும் மாணவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்திற்கும்,பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்திற்கும் முன்கூட்டியே வினாத் தாள்கள் வெளியாகின. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விவ காரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ‘ஏபிவிபி’யின் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டச் செயலாளரும், பயிற்சி நிலையம் நடத்தி வருபவருமான சதீஸ்குமார் பாண்டே, ஏபிவிபி-யின் மற்றொரு நிர்வாகியான பங்கத்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் வினாத்தாள் வெளியான தற்கு மத்திய பாஜக அரசே முழுக்காரணம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசு, தங்களின் தவறை மறைத்து, மறுதேர்வு நடத்துவதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்க முயற்சிக் கிறது. ஆனால், சிபிஎஸ்இ-யின் மறுதேர்வு முடிவுக்கு எதிராக...

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஈரோடு சி.எம்.  நகரில் 1 .4. 2018 ஞாயிறன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஸ்டெர்லைட் ஆலை , நியூட்ரினோத் திட்டம் வழியாக மோடி பயங்கரவாத அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதையும் மக்களிடையே தெளிவுபடுத்தும் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சி.எம். நகர் பிரபு தலைமையேற்க யாழ் எழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணிமேகலை, வீரா கார்த்தியைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரங்கம்பாளையம் கிருஷ்ணன், சித்தோடு கமலக்கண்ணன், சென்னிமலை செல்வராஜ், சௌந்தர், சத்தியராஜ், கோபி தங்கம் போன்றோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பெ.கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 05042018 இதழ்

மக்கள் இயக்கங்களை  முடக்கப் போகிறார்களாம்!

மக்கள் இயக்கங்களை முடக்கப் போகிறார்களாம்!

தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் விடுதலைக்கு மக்களோடு மக்களாக இணைந்து செயல்படும் இயக்கங்களைக் குறி வைக்கிறது – நடுவண் ஆட்சி. தமிர்நாட்டில் 11 இயக்கங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலிக்கிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல்களை உளவுத் துறை சேகரித்து வருகிறதாம். ‘தமிழ் இந்து’ நாளேடு இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து சுற்றுச் சூழலை – மண் வளத்தைப் பாழக்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பார்ப்பனர்களின்  அதிகாரக் கட்டுப்பாட்டில் செயல்படும் ஓ.என்.ஜி. நிறுவனம் ஆபத்தான திட்டங்களை அதிகாரத் திமிரோடு மக்களிடம் திணிக்கிறது. மீத்தேன், ஹைடிரோ கார்பன், ஸ்டெர்லைட், அணுமின் நிலையம் என்று பல்வேறு பெயர்களில் திணிக்கப்படும் இந்தத் திட்டங்களின் ஆபத்துகளை அறிவியல் பார்வையில் – அதன் சுரண்டல் மோசடிகளை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப் புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்கள்தான் – தங்களின் உண்மையான எதிரிகள் என்ற நினைக்கிறது. பார்பபன – பனியா – பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளைக்காக...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். ஒவ்வொரு 15 நிமிடத் துக்கும் ஒரு முறை ஒரு தலித் தாக்கப்படுகிறார்; நாள்தோறும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் 66ரூ அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் இரட்டிப்பாகியிருக் கிறது. இந்த நிலையில்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் ‘அப்பாவிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு அலைக்கழிக்கப் படுவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருப்பதை நீக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ‘தேசிய குற்றப்பதிவு ஆணையம்’ (என்சிஆர்பி) அளித்துள்ள தரவுகள் எள் முனையளவைப் போன்றது; பெரிய மலையளவுக்கு குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. காரணம், ஆதிக்க சாதியினர் பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் புகார் செய்வதே இல்லை. அப்படியே புகார் ஏற்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு...

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி...

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு பறித்துவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில்...

‘நிமிர்வோம்’ –  மார்ச் 2018 இதழ்

‘நிமிர்வோம்’ – மார்ச் 2018 இதழ்

தமிழர் பண்பாட்டில் – வைதிக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல். ‘நீட்’ தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது. போப்பிடம் கடவுளை மறுத்த ஸ்டீபன் ஹாக்கிங். ‘இராமன்’ நேர்மையின் உருவமா? – பெரியார் உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்; ‘காவிப் பிடியில் அதிகார மய்யங்கள். இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் வரலாறு. மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com

திருப்பூர் மாவட்ட வழக்கு நிதி ரூ.3600

திருப்பூர் மாவட்ட வழக்கு நிதி ரூ.3600

பெரியார் சிலை உடைக்கப் பட்டதையடுத்து, எச்.ராசா, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பார்ப்பனர் களின் பூணூல், உச்சிக்குடுமியை அறுத்தெறிந்து, சிறை சென்ற தோழர் களுக்கு வழக்கு நிதியாக திருப்பூரில் 12.3.18 அன்று நடைபெற்ற பெண்ணே எழு, விடுதலை முழக்கமிடு! மாவட்ட மாநாட்டில் பொது மக்களிடம் துண்டேந்தி தோழர்கள் ரூ.3600 வசூல் செய்து சென்னை மாவட்ட செய லாளர் உமாபதியிடம் அளித்தார்கள். பெரியார் முழக்கம் 29032018 இதழ்

இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

கடந்த 20ஆம் தேதி புதுக் கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித் தும், இராம ரதயாத்திரையைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்டம் சார்பில் பள்ளிப்பாளையத்தில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து   20.3.2018 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன ஆர்பாட்டத்திற்கு திவிக நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் முத்துப் பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட் டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார்.  மேலும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த,  குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, பள்ளிப்பாளை யம் சஜீனா, மீனா, தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆதவன் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோர் தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். இறுதியாக தோழர் கவுதமன் நன்றி யுரையாற்றினார். திருப்பூர் : பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து  திராவிடர்...

2000 துண்டறிக்கைகளை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

2000 துண்டறிக்கைகளை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

‘மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது நமது எதிர்காலம்’ என்ற தலைப்பில் தமிழக மாணவர்களின் பறிபோகும் கல்வி, வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னையில் பிப். 24 அன்று காலை விவேகானந்தர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி, எம்.ஜி.ஆர் ஜானகி, எஸ்.ஐ.வி.டி ஆகிய கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.  மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார், தோழர்கள் யுவராஜ், காவை கனி, ராஜேஷ், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். 2000 துண்டறிக்கைகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.   இராமராஜ்ய இரதயாத்திரை – பெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது! ‘‘இராமராஜ்ய இரதயாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைவதை எதிர்த்து, காவிப் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி, பல்லா யிரக்கணக்கில் கைதாகி, தமிழ் மண் மதக் கலவரத்துக்கு அனுமதிக்காது; இது பெரியார் மண் என்பதை இந்தியா முழுமைக்கும் உணர்த்தியது. எச்.ராஜா...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்? வரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள்...

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று ஹெச்.ராஜாவின் விரல் வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கர் என்றும் இரு தரப்புகள் கருத்து மோதல் நடத்துகின்றன. ஒரு வகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட் டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக் கிறார்கள். ‘அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?’ என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டு களாக… பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக் கொட்ட...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் மத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து!

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் மத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து!

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும் தமிழ்நாட்டின் அரசு மற்றும் ஆசிரியப் பணி நியமனங்களிலும் வடநாட்டுக்காரர்கள் குவிந்து வருவதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர் உரிமைகளைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில்  மார்ச் 22, 2018 காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர்  கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மல்லை சத்யா  (ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), சங்கர் (மேலாண்மை இயக்குனர், சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமி), அருண் முருகன் (மே 17 இயக்கம்), வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமை கட்சி), டைசன் (தமிழர் விடியல் கட்சி), எம்.எஸ். வெங்கடேசன் (பொதுச் செலயாளர், வருமானவரி ஊழியர் சங்கம்), ஜி. குணவதி (வருமானவரி பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் சங்கம்) ஆகியோர் உரை...

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா சென்னையில் பணியாற்றும் மயிலாடு துறை கழகத் தோழர் இரா. கார்த்திக் – மோ. திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மண விழா 18.2.2018 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடு துறை ‘ஆசிர்வாத்’ திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 22032018 இதழ்

கட்டமைப்பு நிதியாக  ரூ.10 ஆயிரம் வழங்கினார் மகேஷ் – இளவரசி இல்லத் திறப்பு விழா

கட்டமைப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார் மகேஷ் – இளவரசி இல்லத் திறப்பு விழா

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மகேஷ்-இளவரசி, புதிய இல்லத் திறப்பு விழா, மார்ச் 11ஆம் தேதி காலை மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அழகிரி (ம.தி.மு.க.), வழக்கறிஞர் குபேந்திரன், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்ட பலரும் விழாவில் உரையாற்றினர். முன்னதாக பெரம்பலூர் தாமோதரன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். அனைவருக்கும் பேராசிரியர் வெற்றியழகன் எழுதிய ‘வாஸ்து சாஸ்திர மோசடி’ நூல் விழா நினைவாக வழங்கப்பட்டது. கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.10,000/-மும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு ரூ.5000/-மும் மகேஷ் வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 22032018 இதழ்

இராம ரதயாத்திரையை நிறுத்து! பெரியார் மண் கொதித்தெழுந்தது!

இராம ரதயாத்திரையை நிறுத்து! பெரியார் மண் கொதித்தெழுந்தது!

இராமராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து இது பெரியார் மண் என்பதை மீண்டும் உறுதி செய்தது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டுதல்; இராமராஜ்யம் உருவாக்குதல்; அரசு விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமையாக்குதல்; இந்து தேசிய நாள் ஒன்றை அரசு நாளாக அறிவித்தல் என்ற கோரிக்கைகளோடு ‘இராமராஜ்ய ரதயாத்திரை’ உ.பி., ம.பி., மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக தமிழ்நாட்டின் எல்லையான செங்கோட்டையில் மார்ச் 21இல் நுழைந்தது. மதவெறியைத் தூண்டி விடும் நோக்கத்தோடு நடத்தப்படும் ரத யாத்திரையை எதிர்த்து மறியல் செய்வோம் என்று காவி பயங்கரவாத மக்கள் எதிர்ப்புக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்களும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், பாப்புலர் பிரன்ட் ஆப்இந்தியா, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து உருவாக்கிய...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (8.3.2018 இதழ் தொடர்ச்சி) திருப்பள்ளியெழுச்சிக்கு எதிராக வடமொழியில் சுப்ரபாதம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தோம். வேத மதம் சமஸ்கிருத மொழியை மட்டுமே ஏற்கிறது. தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளை வேத புரோகித மதம் ஏன் மறுக்கிறது என்பதற்கு வேதமே விளக்கம் தருகிறது. “தஸ் மாது ப்பிரா மணனே நம் பேச்சித வை நம அபபாஷித வை” இந்த சுக்ல யஜுர் வேதம் இதன் கருத்து என்ன? “தேவ-அசுரன் போராட்டத்தில் திராவிட-ஆரியருக்கான போரில் சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றார்கள். சமஸ்கிருதம் பேசாத மிலேச்சர்கள் தோற்றார்கள். எனவே சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகள் கெட்ட மொழி; மிலேச்ச பாஷை” என்பதே இந்த சுலோகத்தின்...

நன்கொடை

நன்கொடை

நன்கொடை திருச்சி சுப்பிரமணியபுரம், நட்சத்திரா மொபைல்ஸ் உரிமையாளர் எஸ்.இரவிச்சந்திரன், 10.3.2018 அன்று திருச்சியில் கழகத் தலைவரிடம் கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- அளித்தார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் – ஆர்) பெரியார் முழக்கம் 22032018 இதழ்

காவிக் கூட்டத்தின் புளுகுக்கு மறுப்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா?

காவிக் கூட்டத்தின் புளுகுக்கு மறுப்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா?

மணிப்பூர் பல்கலைக்கழகத்தில், அறிவியல் மாநாட்டின் தொடக்கவிழாவில் உரையாற்றிய மத்திய அறிவியல் – தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அண்மையில் காலமான உலகப்புகழ் பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பெருமையைப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இ=எம்சி ஸ்கொயர் என்ற சமன்பாட்டைக் காட்டிலும் உன்னதமான அறிவியல் கோட்பாடுகள் இந்திய வேதங்களில் இருந்திருக்கின்றன,” என்று சொல்லியிருப்பதாகக் கூறி, அரங்கில் கூடியிருந்த அறிவியலாளர்களை அசர வைத்தார். விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், அவர் பேசியதற்கு ஆதாரம் தர இயலுமா, ஸ்டீபன் ஹாக்கிங் எங்கே எப்போது அப்படிச் சொன்னார் என்று தெரிவிக்க முடியுமா என்று கேட்டார்கள். “அதைத் தேடுவது உங்கள் வேலை. தேடுங்கள், உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் பிறகு நான் ஆதாரம் தருகிறேன்,” என்று கூறி நழுவினார் அமைச்சர். ஊடகவியலாளர்கள் உடனே தேடலில் இறங்கினார்கள். அதில், ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் ஒரு சமூக ஊடகப் பக்கம் இருக்கிறது, அதிலே அவர் இப்படிச் சொன்னதாகப்...

‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!

‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!

‘இராம ராஜ்யம்’ என்று காந்தியே கூறினாரே; அதைத் தானே நாங்கள் கூறுகிறோம் என்று பா.ஜ.க.வினர் சிலர் கூறுகிறார்கள். பா.ஜ.க. பேசும் இராஜ்யம், இந்து புராண நாயகன் ‘இராமன்’ அமைத்ததாக புராணங் களில் கூறப்படும் ‘இராஜ்யம்’. ஆனால் காந்தி கூறியது புராண கடவுளான ‘இராமராஜ்யம்’ அல்ல. வழிபாடு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு காந்தியே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்: “டுநவ nடி டிநே உடிஅஅவை வாந அளைவயமந டிக வாiமேiபே வாயவ சுயஅய சுயதலய அநயளே ய சரடந டிக ழiனேரள.” (1947ஆம் ஆண்டு பிப். 6ஆம் நாளில் காந்தி கூறியது; காந்தியார் நூல் தொகுப்பு) தான் கூறும் இராமன் ஆட்சி ‘இந்துக்களின் ஆட்சி அல்ல’ என்று தெளிவுபடுத்துகிறார், காந்தி. சரி, ‘இராம இராஜ்யம்’ எப்படி நடந்தது? வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? ‘சம்பூகன்’ என்ற பழங்குடி ‘சூத்திரன்’, ‘வர்ணாஸ்ரமத்தை’ மீறுகிறான். கடவுளை நேரடியாக வணங்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மீறி,...

தமிழக அரசே பதில் சொல்!   மத யாத்திரையா? அரசியல் யாத்திரையா?

தமிழக அரசே பதில் சொல்! மத யாத்திரையா? அரசியல் யாத்திரையா?

‘இராமராஜ்யம் அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு உலாவரும் ‘இராமராஜ்ய யாத்திரை’யை மத ஊர்வலம் என்றும், அதை அரசியலாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வர் சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்: இராம பக்தி – இராம வழிபாட்டு பஜனை ஊர்வலம் என்று வந்தால், அது மத ஊர்வலம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகப் பாராளுமன்ற ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ‘இராமராஜ்யத்தை’ அதாவது இராமன் நடத்திய ‘அரசை’ அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு வருவது மத ஊர்வலமா? அரசியல் ஊர்வலமா? கடந்த 2017 டிசம்பர் 6ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட நாளில் உ.பி. மாநில அரசு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வெற்றி விழாவை நடத்தியதோடு அதில் மாநில முதல்வர் மாநில ஆளுநர் பங்கேற்று இராமர் கோயிலைக் கட்டுவோம் என்று சபதம் எடுத்தது தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வருக்கு தெரியுமா? அதே அயோத்தியிலிருந்து இப்போது இராமர் கோயிலைக் கட்டுவோம் என்ற...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி  வருகின்றன. தமிழ்நாட்டை தங்களது பிடியில் கொண்டு வரச் செய்யும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நடத்தினார்கள். இச் செயலுக்கு ஒத்துப்போன தமிழ்நாடு அரசு, மோடியின் பொம்மை அரசாகவே இருந்துவருகிறது. நிவேதிதா நூற்றைம்பதாவது ஆண்டு நினைவு இரதயாத்திரை மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் தொடங்கி வைக்க கோவையிலிருந்து சனவரி 22 முதல், பிப்ரவரி 22 சென்னை வரைநடந்து முடிந்துள்ளது.     27 மாவட்டங் களினூடாக 35 கல்லூரிகளுக்குள் நுழைந்து இரண்டு இலட்சம் மாணவர்களைச் சந்தித்து, 3000 கி.மீ பயணத்தை முடித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னே மட்டும் வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவை கல்வி நிறுவனங்களைக் காவி மயமாக்கும் முயற்சியின் பகுதியாகும். விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ய இரதயாத்திரை” என்ற பெயரில் கீழ்வரும் முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி...

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

கடந்த கால கலவர யாத்திரைகளை கட்டமைத்தவர் இன்றைய பிரதமர் மோடி மீண்டும் இராம ராஜ்ய யாத்திரையை பா.ஜ.க. பின்னால் இருந்து கொண்டு பரிவாரங்களை முன்னிறுத்தித் தொடங்கியிருப்பதன் பின்னணியை  அலசுகிறது, கட்டுரை. 2014 ஆம் ஆண்டில், “ஊழல்” காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் மூலம்தான் ஆட்சி அமைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதார உதவி செய்யக் கூடிய உலகளாவிய ஆதரவாளர்களின் உதவியோடு, “அச்சே தின் (ஹஉஉhந னin)”, “தூய்மை இந்தியா” போன்ற அலங்காரப் சொற்களால் மக்களைக் கவர்ந்தார் மோடி. கடந்த 3 ஆண்டுகளில், பொது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதன் விளைவுகளிலிருந்து மீள்வது மிகக் கடினம்! ஃபாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி காவிக் கும்பலை ஊக்குவிப்பதும், சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மதவாத நஞ்சைப் பரப்புவதும், ஜனநாயகத்தைத் திட்டமிட்டு சீரழிப்பதும், பாராளுமன்ற நல்லொழுக்கத்திற்குக் கேடு விளைவிப்பதும், நிறுவனங்களைக் காவி மயமாக்குவதும், பண மதிப்பிழப்பு (னுநஅடிnவைளையவiடிn) போன்ற பகுத்தறிவற்ற முடிவுகளை எடுப்பதும், ஜி.எஸ்.டி.யை அவசரமாக செயல்படுத்தியதும்,...

‘ஜென்னி-மார்க்ஸ்’ பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

‘ஜென்னி-மார்க்ஸ்’ பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்களின் மகன் வீரமணி-மேரி இணையருக்கு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு ஜென்னி மார்க்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இந்த இணையர், குழந்தைப் பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 15032018 இதழ்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 11-03-2018 அன்று தூத்துக்குடி முத்து மஹாலில் ஒரு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும், வகுப்புரிமை வரலாறு பற்றியும், தந்தை பெரியாரின் போராட்ட வரலாறு பற்றியும், தமிழர்- திராவிடர் பற்றிய விளக்கங்களையும், திராவிடர் இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு விளக்கங்களையும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்ட வரலாறு பற்றியும் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விரிவாக பயிற்சியளித்தார். பயிற்சி வகுப்புக்கு பின்னர் கலந்து கொண்ட பயிற்சி யாளர்கள் தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலை மாலை தேநீருடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது. இப்பயிற்ச்சி வகுப்புக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி திவிக மாவட்டச் செயலாளர் இரவி சங்கர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் முழக்கம் 15032018 இதழ்  

123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

உலக அளவில் சிலை என்று தேடினால், இணையத் தேடலில் இடம்பெறும் முதன்மை வார்த்தையாகப் ‘பெரியார் சிலை’ உள்ளது. 6 கண்டங்கள், 123 நாடுகளில் சிலை குறித்த தேடல் கடந்த 4 நாள்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது. தேடல் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சிலை குறித்து அதிகம் தேடிய நாடுகளாகச் சீனா, நேபாளம், இரான் ஆகிய நாடுகள் உள்ளன. சிலை குறித்த தேடலில், திரிபுரா லெனின் சிலை, பெரியார் சிலை, யார் லெனின் போன்றவை உலக அளவில் தேடப்பட்டுள்ளன. இந்திய அளவிலான தேடலிலும் இதே முடிவுகள்தான் பிரதிபலித்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பெரியார் குறித்துத் தேடியுள்ளன. பெரியார் முழக்கம் 15032018 இதழ்

சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் ‘வர்ணாஸ்ரம’ பெருமை

சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் ‘வர்ணாஸ்ரம’ பெருமை

நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதில் 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் பிரிவுக்கான வினாத்தாளில், பிஞ்சு உள்ளங்களில் ‘வர்ணாஸ்ரமத்தை’த் திணிக்கும் வினா ஒன்று கேட்கப்பட்டுள்ளது. “இந்து மத வர்ணாஸ்ரமத்தின்படி மிகக் கீழான ஜாதி எது? 1. பிராமணன், 2. சூத்திரர்கள், சத்திரியர்கள், 4. வனப்பிரஸ்தர்கள் என 4 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. இதில் எது சரி என்பதை 6ஆம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து ‘டிக்’ செய்ய வேண்டும். ‘சூத்திரன்’ தான் கீழான ஜாதி என்று கூறினால்தான் மதிப்பெண். வரலாற்று புத்தகத்தில் வர்ணாஸ்ரம ஜாதி அமைப்புப் பற்றி விரிவாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பின் பற்றக்கூடாது என்று கடைசியில் ஒரு வரியை மட்டும் பாதுகாப்பாக சேர்த்துள்ளனர். இளம் மாணவர்கள் பின்பற்றவே கூடாத ஒரு கருத்தை ஏன் பாடத் திட்டத்தில் சேர்த்து ‘சூத்திரன்’ தான் இழிவான ஜாதி என்று...

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தியும்,  அடுத்து தமிழ்நாட்டில் ஜாதி வெறியர் ஈ.வெ.ரா. சிலை உடைக்கப்படும் என்றும், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளராக உள்ள எச். ராஜாவின் முகநூல் பதிவு தமிழகத்தையே பெரியாருக்கு ஆதரவாக சிலிர்த்தெழச் செய்துவிட்டது.  ‘அப்படி ஒரு பதிவை நான் போடவில்லை; என்னுடைய வலைதளப் பொறுப்பை ஏற்றுள்ள ஊழியர் (அட்மின்) தவறாகப் பதிவேற்றி விட்டார்.’ என்று பதுங்கினார் எச். ராஜா. அவர் கக்கிய நஞ்சை அவரையே திரும்ப விழுங்க வைத்தது இந்த எழுச்சி. பிரதமர் மோடியும் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவும் மத்திய  அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் எச்.ராஜா வின் கருத்தை ஏற்க முடியாது என்று  அறிவிக்கும் நிலையை உருவாக்கியது – தமிழ்நாட்டின் சிலிர்ப்பு. பெரியாரை அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாக்கி வந்த சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் கலைத் துறையினரும் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து நின்ற ‘பெரியார்’ மீதான உணர்வுகளை வெளிப்படுத்தினர். கேரள முதல்வர்...

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி  12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை  அணிவித்தனர். பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேரணிக்கு கழகத் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். பேரணி முன் வரிசையில் பறை முழக்கமும், கழக மகளிரின் நடனத்துடன் சென்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளின் படங்களை தாங்கிப் பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் அணி வகுத்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் பேரணியை பார்வையிட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி பெரியார் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு...

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘ஆண்டாள்’, ‘தேவதாசி மரபு’ குறித்து ஆய்வுக் கட்டுரைகள் நேர்மையின் சிகரம் ஓமந்தூரார். தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி டார்வின் கோட்பாடு; மத்திய அமைச்சருக்கு அறிவியல் மறுப்பு. திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்? சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’. சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா. புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார். மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம் துணைவியார் ம.சுந்தராம்பாள் 7.10.2017 அன்று சனிக்கிழமை காலை 9 மணி யளவில்  முடிவெய்தினார். அவருடைய உடல் மறுநாள் 08.10.17 அன்று எந்த வித மூட சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது. தன்னுடைய கண்களை கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய படத்திறத்திறப்பு நிகழ்வில் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கழகத் தோழர்கள் நேரில் ஆய்வு விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?

கழகத் தோழர்கள் நேரில் ஆய்வு விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் திருகோயிலூர் போகும் வழியில் அரகண்டநல்லூரை அடுத்து உள்ள வலதுபுரத்தில் வெள்ளம் புத்தூர் கிராமம், விழுப்புரத்திலிருந்து 56 கிமீ தூரத்தில் உள்ளது .அங்கே தலித் மக்கள் 130 குடும்பங்கள் உள்ளனர்.  வன்னியர் சமூகம் நாயக்கர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் மலைவாழ் நரிக் குறவர்கள் 300 குடும்பங்கள்  வசிக் கிறார்கள். சம்பவம் 21-02-2018 அன்று ஏழுமலை (மறைவு) மனைவி ஆராயி அவர் மகன்கள்  பாண்டிதுரை வயது 26, சரத்குமார் வயது 22,  விஜி வயது 19, இவர்கள் மூவரும் பெங்களூரில் வேலை செய்து வந்தனர். அஞ்சலட்சி வயது 17 திருப்பூரில் வேலைசெய்து வந்தவருக்கு 23-02-18 அன்றுதான்  தகவல் தெரிவித்துள்ளனர். தனம் 13 எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமயன் வயது 9 நான்காம் வகுப்பு. அன்று இரவு ஆராயி தனம் சமயன் கடுமையாக தாக்கப்பட்டு வியாழன் விடியற்காலை  22-02-18 அன்று பக்கத்து வீட்டில் உள்ள தனம்  உடன்படித்த சிறுமி கதவை திறந்து...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) வைதீக மரபு என்ற பார்ப்பன மரபு தமிழை எப்படி ஊடுருவி அழித்தது என்பதற்கு ஒரு சான்றாக ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை’ சுட்டிக் காட்ட முடியும். தமிழ் ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. திவ்யம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். ப்ரபந்தம் என்றால் ‘திரட்டு’ என்பது பொருள். ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பதுதான் இந்த நூலுக்கான தமிழ்ப் பெயர். ஆனால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருதப் பெயருக்கு  மாற்றப்பட்டது. இன்று வரை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருத பெயரையே தமிழில் எழுதப்பட்ட நான்காயிரம் பாடல் தொகுப்பும் தாங்கி நிற்கிறது. இது...

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அதன் அமைப்பாளர் தீனதயாளன், 50 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கான சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் இயக்கம் சார்பில் அளித்தார். 24.2.2018 அன்று பெரியார்-அம்பேத்கர்-சிங்காரவேலனார் நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரணி புதுச்சேரியில் எழுச்சியுடன் நடந்தது. பேரணி முடிந்து ‘சதேசி மில் வாயில்’ (பேருந்து நிலையம் அருகே) பொதுக் கூட்டம், லெனின் சுப்பையா மற்றும் மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

16.03.2018 அன்று இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக் முதலாமாண்டு நிகழ்வுகள் 18.03.2018 அன்று நடைபெறு கிறது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலளார் விடுதலை இராசேந்திரன், முன்னிலை யிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. முதல் நிகழ்வாக மனிதநேயன்  பாரூக் குருதிக் கொடை முகாம் நிகழ்கிறது. முகாமை இரசீதா பாரூக் துவக்கி வைக்கிறார். அன்று மாலை 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்கிற கருத்தரங்கம் நடைபெறுகிறது. நம் இரத்ததில் ஜாதி மத பேதமில்லை; ஏற்ற தாழ்வு இழிவுமில்லை; உயர்தவன் தாழ்ந்தவன் எண்ணமில்லை. அனைவரும் வருக குருதிக் கொடை முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9677404315 முகாம் நடைபெறும் இடம்: அண்ணாமலை அரங்கம்; நாள் – 18.03.2018 காலை 8:30 மணி முதல்; அனைவருக்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,  கோவைமாவட்டம். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவல கத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இரா.உமாபதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத் தார். ‘நிமிர்வோம்’ ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரையை மய்யப் பொருளாக எடுத்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு தங்கள் கருத்துகளையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “திராவிடம் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

காஞ்சிபுரம் – திருவள்ளூரில் புதிய சட்டக் கல்லூரி திறப்பதை காரணம் காட்டி 126 ஆண்டு காலம் பாரம்பரிய மிக்க சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடுவதற்கு முயற்சிக்கும் அரசைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு 03.03.2018 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இராஉமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு கழக ஆதரவை தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் உலகத் தமிழ் அமைப்பு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் அமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் முனைவர் வை.க. தேவ்டென்னசி நீட் தேர்வு முறையினால் உருவாகும் பாதிப்புகளை விளக்கினார். நீதியரசர் அரி. பரந்தாமன் பேசுகையில், “ஆந்திராவில் நீட்டை நீக்கக் கோரி அம்மாநில அரசே முழு நாள் அடைப்பு நடத்தியதையும், அதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை மோடியும், அமீத்ஷாவும் பேச்சு நடத்த அழைத்துள்ளதையும் சுட்டிக் காட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சோம்பிக் கிடக்கிறார்கள்?அவையில் கொந்தளித்திருக்க வேண்டாமா” என்று கேட்டார். கழக சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி கலந்து கொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவவனர் வேல் முருகன், தியாகு, மருத்துவர் ரவிந்திரநாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை

பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் உஷா ஆனந்த சுப்ரமணியம் என்ற பார்ப்பனப் பெண் அதிகாரியும், அய்.சி.அய்.சி. வங்கி நிர்வாக இயக்குனர் என்.எஸ். கண்ணன் என்ற பார்ப்பனரும் இப்போது சி.பி.அய். விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட் டிருக்கிறார்கள். திருமதி உஷா அனந்த சுப்ரமணியம் இப்போது அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் தேசிய மய வங்கிகளின் தலைமைப் பொறுப் பிலுள்ள பார்ப்பன அதிகாரிகள், தொழிலதிபர் களுக்கு வழங்கிய கடன்கள் குறித்து ஆய்வு செய்ய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் பொது மேலாளர் – நிர்வாக இயக்குனர் போன்ற உயர்பதவிகளில் 99 சதவீதம் பேர் பார்ப்பனர்கள் ஒரு சதவீதம் பேர்கூட பிற்படுத்தப் பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை என்று 2017 ஜனவரியில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. மற்றொரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளிக் காணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும் கடந்த...