Category: பெரியார் முழக்கம்

‘ராஜாஜி’ பார்ப்பனராக இருந்தாலும் தென்னாட்டுக்காரர் என்று பார்த்தார், பெரியார்

‘ராஜாஜி’ பார்ப்பனராக இருந்தாலும் தென்னாட்டுக்காரர் என்று பார்த்தார், பெரியார்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்திகள், சென்னையில் நடைபெறுகிற தமிழக அரசின் குடியரசு நாள் விழாவில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் என்ற சரியான பதிலடியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் தோறும், இந்த தமிழ்நாட்டு போராட்ட வீரர்களின் ஊர்திகள் அணிவகுத்து மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். குடியரசு நாளை கொண்டாடுகிற டெல்லி, தமிழ்நாட்டை ஓரங்கட்டி, புறக்கணிக்க நினைத்தாலும் தமிழ்நாடு தனக்குள்ள இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியநாட்டுக் குடியரசில் தமிழகத்தில் போராடிய தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்ற செய்தியை நாட்டிற்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் பெரியாரின் கருத்து ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள் அமுலுக்கு வந்த நாளை பெரியார் அதைத் துக்க நாள் என்று கூறியதோடு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். “புதிய குடியரசுத்...

கோ.இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கோ.இளவரசன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கடந்த 05.01.2022 அன்று மறைந்த கழகத் தோழர் கோ. இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 20.01.2022 அன்று சென்னை சேத்துப்பட்டு கோ. இளவரசன் இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோ. இளவரசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இளவரசன் தனது மரணத்தின்போது எந்த சடங்குகளும் இடம் பெறக் கூடாது என்று தமது துணைவியாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 54 வயதில் துணைவரை இழந்த அவரது இணையர், உறவினர் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி எவ்வித சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகளை கழகத் தோழர்களின் ஆதரவுடன் நடத்திக் காட்டினார். மறைவுச் செய்தி அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர் களுடன் விரைந்து சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். துணைவர் படத் திறப்பு நிகழ்விலும்...

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

7.11.2021 அன்று குடியாத்தத்தில் ‘நான் இந்துவாக இறக்கப் போவதில்லை’ என்ற தலைப்பில் பெரியார் உரைகளின் தொகுப்பு குறித்து திறனாய்வுக் கூட்டம் நடந்தது. ‘தலித் முரசு – காட்டாறு’ இணைந்து வெளியிட்ட நூல் இது. இதில் பங்கேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து. “நான் இந்துவாக இறக்கப் போவதில்லை” என்ற தலைப்பின் மேல் சிலருக்கு முரண்பட்ட கருத்து உண்டு. வேறு தலைப்பை வைத்திருக்க லாமே என்று. “இந்து மதத்தை வேரறுப்போம்” என்று வைத்திருக்கலாமே என்றும் கூறினார்கள். புத்தகத்தில், “நான் இந்துவாக இறக்கப் போவ தில்லை” என்று 1926இல் கூறியதாகவும், அம்பேத்கர் 1935இல் கூறியதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் பெரியார் போகிற போக்கில் கூறிய கருத்து. ஆனால், அம்பேத்கர் திட்டவட்டமாக மாற வேண்டும் என்று அறிவித்த கருத்து. இரண்டையும் இணைத்துப் பார்ப்பதில் தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருவரையும் இணைத்து பார்ப்பதற்கு என்றே சேர்த்ததாக தெரிந்தது. சேஷாசலமாக பிறந்து, தமிழ்...

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

பாஸ் செய்த பின்பு ‘தகுதி, திறமை, தரம்’ எதற்காகப் பார்க்கப்படு கின்றது ? அது எதற்காக வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? அதன் பலன் என்ன? மந்திரிசபையில் பெரிய பதவியில் அதிகாரத்தில் தரமுள்ளவர் களால், திறமை உள்ளவர்களால்’ ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன ? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன ? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம், இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவதுதான் பலனா ? இதைக் கவனிக்க வேண்டும். கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும். இது என் சொந்த கருத்து. விடுதலை 18.07.1972 பெரியார் முழக்கம் 27012022 இதழ்

உ.பி. பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்

உ.பி. பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்

ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த ‘இந்து’ ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை தமிழ்நாட்டின் ‘திராவிடன் மாடல்’ உ.பி.யில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர். அடுத்த பிரதமர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படுதோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் குறிப்பாக இளைஞர்களும் தயாராக இல்லை. அவர்கள் சமூக நீதி கோட்பாட்டை பேசத் தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். உபி மாநிலம் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள். மண்டல் சமூக அரசியலிலிருந்து ‘கமண்டல்’ என்ற இந்துத்துவ அரசியலுக்கு உபியை மாற்ற முயன்றது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்...

சமூக வலைதளங்களில் பரவி வரும் பார்ப்பனிய பயங்கரவாதம்

சமூக வலைதளங்களில் பரவி வரும் பார்ப்பனிய பயங்கரவாதம்

இணையத்தில் இயங்கிவரும் Tride மற்றும் Raytas பற்றித் தெரியுமா? இந்தியாவில் தற்போது வலதுசாரி சிந்தனையுடன் தொடர்புடைய இரண்டு பெரிய குழுக்கள் ஆன்லைனில் இயங்கிவருகின்றன. ஒன்று ‘ட்ரைட்ஸ்’ மற்றொன்று ‘ராய்தா’. ‘ட்ரைட்ஸ்’ என்பது ‘Traditionalist’ (பாரம்பரியவாதி) என்பதன் சுருக்கமான வடிவம். அதாவது அவர்கள் இந்தியாவின் பழைய மரபுகளின்படி வாழ்வதே சரி என்று கருதுபவர்கள். சதி, குழந்தைத் திருமணம், முக்காடு போன்றவற்றை சரி என்று கருதுகிறார்கள். சாதி அமைப்பில் பிராமணர்கள் முதலிடத்தில் இருப்பதே சரி என்பவர்கள் இவர்கள். பெண்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் நரேந்திர மோதியின் ஆதரவாளராகவோ, பா.ஜ.கவினராகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இவர்கள் ஒன்றிரண்டு பேர் அல்ல. 20-23 வயதுக்குட்பட்ட இவர்கள், பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மத்தியில் ஒரு இரக்கமற்ற தலைவர் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர். சாதி அமைப்பை நம்புவதோடு, ஆணவக் கொலைகளையும் போற்றுகிறார்கள். இந்தியாவில முஸ்லிம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ யாரும் இருக்கக்கூடாது என்பார்கள்....

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

வாசகர்களுக்கு…

வாசகர்களுக்கு…

வரும் வாரத்திலிருந்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                  – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெரியார் முழக்கம் 20012022 இதழ்

இந்திய பணக்காரர்கள் 10 பேரின் சொத்தை வைத்து 25 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்

இந்திய பணக்காரர்கள் 10 பேரின் சொத்தை வைத்து 25 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்

இந்தியாவிலுள்ள வெறும் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு ஞாயிறன்று தொடங்கிய நிலையில் இந்தியாவில் அதி கரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ வெளி யிட்டுள்ளது. அதில் இதேபோல மேலும் பல விவரங்களை ஆக்ஸ்பாம் அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிகிதம் அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது. பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர் களில் 10 சதவிகிதம் பேருக்கு வெறும் ஒரு  சதவிதம் கூடுதல் வரி விதித்தால் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக  17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும். 98 சதவிகித பெரும்பணக்கார குடும்பங்களுக்கு சொத்துவரி விதித்தால்,...

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2022 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்க்கவும் இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார இயக்கமாக நடத்திட வேண்டும் என்றும் கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும் சூரங்குடியில் கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திடவும், தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களுக்கு இதழ் சந்தா சேர்ப்பு அவசியம் மற்றும் நடைமுறை சிக்கல்களை எப்படி கையாள்வது பற்றியும் பெரியார் இயக்க கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் சூரங்குடி...

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது. கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20012022 இதழ்

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

திராவிட இயக்கம் மற்றும் சோஷலிசக் கொள்கை களால் தமிழ்நாட்டிலிருந்து ‘பிராமணர்கள்’ துரத்தப் பட்டார்கள் என்று ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஏட்டில் துமா என்ற பார்ப்பனர் எழுதிய கட்டுரையை மறுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். சமூக நீதி இயக்கம், அனைவரையும் உள்ளடக் கியது. அதன் பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப் படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது! அமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது ஏன்?’ என்ற தலைப்பில் துமே என்பவர் எழுதியதே இப்படி ஒரு கட்டுரையை...

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

நான் சொல்கிறேன், இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பதாகும்; இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல; நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம் என்று. இந்த அரசியல் சட்டத்தை, யார் சம்மதத்தின் பேரில் யாரைக் கொண்டு செய்தாய்? வெள்ளைக்காரன் காலத்திலே அவன் நலனுக்காக, அவன் வகுத்த தேர்தல் விதிகளின்படி, படித்தவனுக்கும், பணக்காரனுக்கும் ஓட்டு என்கிற அடிப்படையில் நடத்திய தேர்தலில் வந்தவர்களை வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தை நிறைவேற்றி விட்டாய். வெள்ளையன் இந்தப் பிரதிநிதிகளைக் கொண்டு செய்த சட்டத்தை எதிர்த்து, நீயே சட்ட மறுப்புச் செய்திருக்கிறாய் என்பது, வடவனே உனக்கு ஞாபகமிருக்கட்டும் !                                        ‘விடுதலை’ 07.08.1952   பெரியார் முழக்கம் 20012022 இதழ்

‘இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம்’ என்ற புதிய கொள்ளை!

‘இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம்’ என்ற புதிய கொள்ளை!

இரயில்வே துறையை தனியார்மய மாக்குவதற்கு முன்னோட்டமாக இரயில் நிலையங்களை தனியார்மய மாக்குவது, ஒன்றிய அரசின் திட்டங்க ளில் ஒன்றாகும். அதாவது, விமான நிலையங் களை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு குத்தகை விட்டதுபோல, இந்தியாவின் முக்கியமான இரயில் நிலையங்களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையாகும். நாட்டிலேயே முதன்முதலாக போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர இரயில் நிலையம் இவ்வாறு தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் அரசு – தனியார் கூட்டுத் திட்டத் தின் (ஞஞஞ) அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இரயில் நிலையங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த இரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இரயில் நிலையங்களிலேயே ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங், சோலார் எனர்ஜி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவார்கள்; இதற்கு செலவிட்ட...

தேர்தல் நிதி திரட்டவே பொதுத்துறைகள் தனியார் மயம்

தேர்தல் நிதி திரட்டவே பொதுத்துறைகள் தனியார் மயம்

ரூ.1 லட்சம் கோடிக்கான சொத்து வெறும் ரூ. 800 கோடிக்கு குத்தகை ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் மூலம் தரமான, திறமையான, செயல்பாடு கொண்ட சண்டிகரின் லாபம் தரும் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, ரூ.800 கோடிக்கு விற்கப்பட உள்ளது. அதுவும் 90 ஆண்டுகளுக்கு! குத்தகைக்குத்தான் தருகிறோம் என்று கூறினாலும், உண்மையில் இது விற்பனை செய்வதற்கு சமமான ஒன்று. இந்த சொத் துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கையில், இவ்வளவு பெரிய சொத்திற்கு, ரூ.800 கோடி கொடுப்பதில் அந்த தனியார் நிறுவனத்துக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? இந்த 800 கோடி ரூபாய் முதலீடு நான்கு ஆண்டுகளில் அந்த புதிய தனியார் நிறுவனத்திற்கு கிடைத்துவிடும்.  இவ்வளவும் தெரிந்தும் எதற்காக பொதுத் துறை மின் நிறுவனங்களை விற்க வேண்டும்? ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு நிதி திரட்டு வதற்காகவா? இல்லை. பட்ஜெட்டுக்கு பணம் திரட்டுவது...

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

‘சுதந்திரம் பெற்ற நாளை மட்டுமல்ல, குடியரசு நாளையும் தமிழருக்கு துக்க நாள் தான் என்று பெரியார் அறிவித்தார். இந்திய அரசியலமைப்பு மாநிலங்களின் கூட்டமைப்பே ‘இந்தியா’ என்று கூறினாலும் நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. குடியரசு நாள் அணி வகுப்பில் நாட்டின் ஆயுத பலத்தை பிற நாடுகளுக்கு உணர்த்தும் நவீன ஆயுதங்களின் அணி வகுப்பு நடக்கிறது. ஆனால், ‘குடியரசு’ சட்டம் அங்கீகரித்துள்ள இறையாண்மை கொண்ட மாநிலங்கள் அவமதிக்கப் படுகின்றன. ‘இந்தியா’வின் சுதந்திரப்  போராட்டம் – 75’ என்ற தலைப்பில்  சுதந்திர இந்தியாவின் ‘சாதனைகளை’ முன் வைத்து பேரணி நடத்த முடிவு செய்தது ஒன்றிய ஆட்சி. தமிழ்நாடு அரசு குடியரசு நாள் பேரணிக்காக தமிழ்நாட்டில் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடியவர்களை அடையாளப் படுத்தும் ஊர்தியை வடிவமைத்தது. ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சார்ந்த வரலாறு தெரியாத நிபுணர்கள் குழு இதை பரிசீலித்தது.  அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது. கடந்த செப்டம்பரில் இருந்து...

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில்  வெளிவரும் ‘அணையா வெண்மணி’ காலாண்டிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை. உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள்; வாழ்வியல் மாற்றங்கள்; அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்துவதில் பாய்ச்சல்; வேகமான கல்வி வளர்ச்சி; அதிகார மிக்க பதவிகள்; அரசியல் அதிகாரங்கள் – இவ்வளவையும் கட்டுடைத்து, ஜாதி அடுக்கு இப்போதும் தன்னை தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. புதிய புதிய உருமாற்றங்களை எடுத்து மனித சமூகத்தைக் ‘கவ்வி’ நிற்கிறது. ஜாதியக் கட்டமைப்புக்கான சமூக வேர்கள் குறித்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட அளவுக்கு வேறு எங்கும் பேசப்பட்டதே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலேயே இது குறித்த விவாதங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. ‘சுயராஜ்யம்’ பேசுகிறவர்கள், சுயமரியாதையை மறுக்கும் ஜாதியத்தை பார்ப்பனியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அன்றைக்கே பெரியாரும் – அம்பேத்கரும் கேட்டனர். அயோத்திதாசரும் அவர்களுக்கு முன்பு இதே கேள்வியைத் தான் கேட்டார். வேத காலத்தில் உருவாக்கப்பட்டது. வர்ணாஸ்ரமம், அதுகூட அப்போது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று அம்பேத்கர் உள்ளிட்ட...

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

உ.பி. தேர்தல் களத்தில் இந்துத்துவா அரசியலை ஆளும் பா.ஜ.க.வும் எதிர்கட்சிகளும் பின்னுக்குத் தள்ளி விட்டு  ‘சமூகநீதி’ அரசியலையே முன்னிறுத்தி வருகின்றன. இந்துத்துவா அரசியலின் ‘சோதனைக் களமாக’ செயல்பட்டது உ.பி.யில் ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சி. ஆனால் படுதோல்வியை சந்தித்து வருகிறது -‘இந்துத்துவா’ அரசியல். இந்துக்களை மதத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்ட இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். தத்துவம். விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விருக்கும் மாநிலம் உ.பி. இஸ்லாமிய வெறுப்பை ஊதி விட்டாலும் இந்துக்களை அணி திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆதித்ய நாத் ஆட்சி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க.வி லிருந்து ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வருவது பா.ஜ.க.வையும் சங்பரிவாரங்களையும் அதிர்ச்சிக் குள்ளக்கியுள்ளது. ஆதித்யநாத் ஒரு பார்ப்பன ரல்லாத உயர்ஜாதியைச் சேர்ந்தவர். அம்மாநில பார்ப்பனர்களும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவே அணி திரண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி...

திருப்பூரில்  பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக...

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

மறைந்த சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா, மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 05.01.2022 புதன் காலை 10.00 மணியளவில், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடிக்கல் நாட்டும் நிகழ்சியில் பங்கேற்று நினைவு தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன் அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம் ஒருங்கிணைத்திருந்தது. பெரியார் முழக்கம் 13012022 இதழ்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலை அனந்தபுரம் இராமநாதன் -சத்யா ஆகியோர் கட்டிய புதிய இல்லம் திறப்பு விழா 02-01-2022 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தி.வி.க தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமை வகித்தார். திராவிடன் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கழக மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சேரன், விடாது கருப்பு நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் உரையாற்றினார். தொடர்ந்து, சிற்பி இராசன் இல்லத்தை திறந்து வைத்து சாமியார் களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் மந்திரமா? தந்திராமா? நடத்தி சிறப்புரை யாற்றினார்கள் இறுதியில் இராமநாதன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இல்லத்திறப்பு நிழகழ்சியையொட்டி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, எழுச்சி திராவிடர்கள் அமைப்பாளர் விஜயகுமார், அனந்தபுரம் திமுக நகர செயலாளர்...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர்  சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும்  கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும்  கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் டிசம். 24, 2021 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய தலைமை உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. அனைத்து மதத்தினருக்குமான பொதுவான பண்டிகையாக இருந்தும்கூட அரசு அலுவலகங் களில் கொண்டாட வேண்டாம்  என்ற  கேரளா  அரசு ஆணையை வரவேற்று எழுதுகிற போது பல செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கத்தில் பகிரப்படுகிறது. குஜராத்தில் ஒரு வழக்கிற்காக 2006இல் ஒரு தீர்ப்பு வருகிறது. பொது இடங்களில் இருக்கின்ற கோவில்களை பற்றிய தீர்ப்பு அது. இதுவரை கட்டியிருக்கும் கோவில்கள் இருக்கட்டும் இனிமேல் புதிய கோவில்கள் கட்டக் கூடாது. திரும்பவும் அதற்கு 2013இல் ஒரு தீர்ப்பு, 2018இல் ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபால கவுடா என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கின்ற ஒரு நீதிபதியாக இருந்தார். அவரோடு அருண் மிஸ்ரா இருவரும்...

தமிழர் விழா

தமிழர் விழா

தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harwest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”. ‘விடுதலை’ 30.01.1959 பெரியார் முழக்கம் 13012022 இதழ்

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழக அரசு பெற்றுத் தந்த 27 சதவீத ஒதுக்கீடு

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழக அரசு பெற்றுத் தந்த 27 சதவீத ஒதுக்கீடு

டி.ஒய். சந்திர சூட், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற இருவர் அமர்வு கடந்த 7ஆம் தேதி ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவம், மருத்துவ உயர் பட்டப் படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டப்படி செல்லும் என்பது தான் அந்தத் தீர்ப்பாகும். அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடியாது என்று மறுத்து வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்திலே இதற்கு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. கடந்த ஆண்டு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 4000 இடங்கள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்துள்ளது. இது திமுக ஆட்சி – அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்த சமூக நீதியாகும். உயர்ஜாதிகளுக்கான 10ரூ இட ஒதுக்கீடு அவசரஅவசரமாக ஜனவரி 2019,  14ஆம் தேதி கொண்டு வந்து மூன்றே நாட்களில்...

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

‘சுயமரியாதை; ஜாதி ஒழிப்பு’ என்ற சொல்லாடல்கள் பல்வேறு திக்குகளிலிருந்து கேட்கத் தொடங்கி இருக்கின்றன. ‘நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை முக்கியமானது; ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது’ என்று கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, பெங்களூரில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசி யிருக்கிறார். ‘சவிதா’ என்ற சமூகத்தின் சார்பில் ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா வில் சித்தராமய்யா இவ்வாறு பேசியிருக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தில் ஜாதி எதிர்ப்புக்காகப் போராடிய பசவண்ணாவை அவர் நினைவு கூர்ந்திருக் கிறார். “நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த ஜாதியைச் சார்ந்தவர் இரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்து விட்டால் மீண்டும் ஜாதியைப் பேசத் தொடங்கி விடுகிறோம். ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது. செய்யும் தொழிலையே ஜாதியாக மாற்றி மேல் ஜாதி – கீழ் ஜாதி என்று பிரிவை வைத்துள்ளனர். மூட...

நிதியமைச்சரின் வரவேற்கத்தக்க சட்டம் : இனி அரசு தேர்வாணையம் வழியாகவே அனைத்துப் பணி நியமனங்களும்!

நிதியமைச்சரின் வரவேற்கத்தக்க சட்டம் : இனி அரசு தேர்வாணையம் வழியாகவே அனைத்துப் பணி நியமனங்களும்!

குரூப் 4, வி.ஏ.ஓ போன்ற நான்காம் நிலை ஊழியர்கள் கிராம அதிகாரிகள் தேர்வுக்கு, பங்குபெறும் மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு மிகப்பெரும் தடையாக இருந்து வருகிறது. ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் கிராமங்களிலிருந்து வரக்கூடிய இளைஞர்கள் பின்னடைவை சந்திக்கின்ற சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வி.ஏ.ஓ குரூப் 4 தேர்வுகளுக்கு ஆங்கிலத் தேர்வு இரத்து செய்யப்பட்டது உண்மையிலேயே சமூக நீதிக்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாகும். தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்த அறிவிப்புப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்ட பூர்வமான வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாரியங்களின் பணியிடங்கள் ஆகிய அனைத்திலும் பணி இடங்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தின் வழியாகவே நிரப்பப்படும் என்ற சட்டத்தை, தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். இதன் மூலம் பல...

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

கடந்த சில மாதங்களாக பெரியாரை இஸ்லாமியருக்கு எதிரானவராக சித்தரிக்கும் ஒரு பரப்புரையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘அறிவு ஜீவி’யாக அறியப்படும் ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி பெரியாருக்கு எதிரான ஒரு இயக்கத்தைத்  தொடங்கும் முயற்சியில் இறங்கி, பிறகு தோல்வி யடைந்து  தனது குரலை மாற்றிக் கொண்டார். வேடிக்கை என்னவென்றால் அண்மையில்தான் சீமான் இஸ்லாமியர்களுக்கு ‘நீலிக் கண்ணீர்’ வடிக்கிறார். பெரியார் பேசிய ‘திராவிடர்’ என்ற கோட்பாட்டுக்கு அடிப்படையே பார்ப்பனரால் வஞ்சிக்கப்பட்ட சூத்திரர், ஆதி சூத்திரர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை ஒரே அணியாக அடையாளப்படுத்தி பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவதுதான். சீமான் பேசும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துக்குள் தமிழ்  பேசும் பார்ப்பனர்களும் நாங்களும் தமிழர் என்று ஊடுறுவுகிறார்கள். பார்ப்பன வர்ணாஸ்ரமக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் சுயமரியாதை வர்ணாஸ்ரம எதிர்ப்புப் போரில் ‘பிராமணர்’களும் ஊடுறுவி விட்டால் போராட்டத்தின் நோக்கமே சிதைந்து ஒழிக்கப்படும் என்பதால் பெரியார் திராவிடர் அடையாளத்தைத் தேர்வு செய்தார்....

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு. நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால்  தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு...

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளி நகரம் சார்பாக, 26.12.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டம் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆனந்த் குழுவினருடன் வீதி நாடகமும் நடைபெற்றது. நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஊஞஐ நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது ரயீஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உரையாற்றினார்கள். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர்,...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது. இந்த விசியத்தில் மானாபிமானமும் கிடையாது. மானாபிமானனான குடும்ப வாழ்க்கைக்காரனுக்கு அதாவது தனது சுயநலனுக்குத்தான் அது தேவை. மானம் போனால் எப்படி பிழைக்கிறது என்பவனுக்குத்தான் அது தேவை. எனக்கு, நான் பிழைக்க வேண்டுமே, என் வாழ்வு வளம்பெற வேண்டுமே, மக்களிடையில் எனக்கு மதிப்பு வேண்டுமே, என் அந்தஸ்து, எனது நிலை, எனது போக்கு வளம்பெற வேண்டுமே, என்னைப் பலர் மதிக்க வேண்டுமே, எனக்குப் பலரின் ஆதரவு வேண்டுமே என்பன போன்ற – என், எனக்கு என்கின்ற கவலையுள்ளவனுக்குத்தான் மானாபிமானம், அது போலவே தேசாபிமானம், மொழி அபிமானம், இலக்கிய அபிமானம், சமய அபிமானம், முதலிய அபிமானங்கள் வேண்டும். எனக்கு வெறும் மனிதாபிமானந்தான் ; அதிலும் வளர்ச்சி அபிமானந்தான் முக்கியம். ‘விடுதலை’ 15.10.1962 பெரியார் முழக்கம் 06012022 இதழ்

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை  கோவிந்தசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30.12.2021 அன்று, செஞ்சி அத்தியந்தல் சாக்ரடீஸ் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சாக்ரடீஸ் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்விற்கு வரவேற்புரை யாற்றினார். நிகழ்விற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் சு. மழைமேணி பாண்டியன் படத்தை திறந்து வைத்தார். நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் கலா நாராயணமூர்த்தி, பகுத்தறிவு பாடகர் காத்தவராயன், பெரியார் சிந்தனையாளர் நா. இராசநாயகம், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ இளையரசன், மருத்துவர் தன்மானம் ஆகியோரின் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து, கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் ந.அய்யனார் நிறைவுரையாற்றினார். கழகத் தோழர் பரிமளா நன்றி கூறினார். நினைவேந்தலில், பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, பெரியார் சாக்ரடீஸ் ரூ. 1000/-, அம்பேத்கர்...

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியாரிய பெரும் தொண்டர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி நிறுவனர் வே.ஆனைமுத்து நினைவலைகள் வெளியீடு, படத்திறப்பு, கருத்தரங்கம், 02.01.2021 அன்று சென்னை நிருபர் சங்கத்தில் மாலை 3:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் தலைமை வகித்தார். முதல் நிகழ்வாக, வே. ஆனைமுத்து உருவப் படத்தை, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் திறந்து வைத்து வே. ஆனைமுத்து அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா நினைவு மலர் வெளியிட, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றுக்கொண்டார். மலரை வெளியிட்டு உரையாற்றிய ஆ.இராசா, ‘காவியை வீழ்த்த அனைத்து கருப்புச் சட்டைகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று உரையாற்றினார். இரண்டாவது அமர்வில், வே.ஆனைமுத்துவின் நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் துரை...

தலையங்கம் இது ஆரிய தேசமா?

தலையங்கம் இது ஆரிய தேசமா?

‘அய்.அய்.டி.’ உயர்கல்வி நிறுவனங்கள் ‘ஆரியப் பெருமை’களைப் பறைசாற்றும் அமைப்புகளாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றன. மக்கள் வரிப் பணத்தில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் நோக்கமே இது தானா? ‘ஆரியர் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்’ என்றும், சமஸ்கிருதத்தில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களை வெளிக் கொணர வேண்டும் என்றும், இந்திய சிந்தனையின் அடிப்படை யிலான அறிவுக் கட்டமைப்பை மீண்டும் புதுப்பித்துப் பரப்ப வேண்டும் என்றும், கோரக்பூர்அய்.அய்.டி. நிறுவனம் ‘காலண்டர்’ வழியாக ஆரியக் கொள்கைப் பரப்புரையில் இறங்கியிருக்கிறது. கோரக்பூர்  அய்.அய்.டி. இயக்குனர் – ஒன்றிய நிதியமைச்சரின் முதன்மை ஆலோசகர், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் இணைந்து அந்தக் காலண்டரை உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதாரங்களாக இதில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் ‘தரம் தாழ்ந்த சிந்தனைகள்’ என்று பல ஆய்வாளர்கள் மானுடவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஆரியர்கள் தான். பாரத தேசத்தின் பூர்வீகக் குடிகள், அவர்களுக்கு தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஆரியர்களைத் தவிர மற்றவர்கள்...

ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கிடையே கழக செயல்பாடுகள் 2021இல் கழகம் கடந்து வந்த பாதை

ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கிடையே கழக செயல்பாடுகள் 2021இல் கழகம் கடந்து வந்த பாதை

2020ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் கொரானா பாதிப்புகளால் மக்கள் கூடுகை தடை செய்யப்பட்ட சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் சந்திப்பு இயக்கங்களையும் கருத்தரங்குகள் – பொதுக் கூட்டங்களையும் ஏனைய இயக்கங்களைபோல் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அவ்வப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட நிலையில் கழக நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனாலும் இணையம் வழியாகக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கூட்டமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் கழகம் தனியாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. கொரானா மோசமான நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையானதால் அச்சகங்கள் இயங்காத நிலையில் 2021, மே 6ஆம் தேதி முதல், ஜூலை 1, 2021 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏழு இதழ்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் தடைபட்டு நிற்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கழகம் தனது இயக்கத்தை இயன்ற அளவு முனைப்புடன் முன்னெடுத்தது. அந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு: ஜனவரி...

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் 15.12.2021 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. கலந்துரையாடலில் 20 உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்விற்கு முன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்களும், தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்களும் வரவேற்றனர். ராயக் கோட்டை வட்டம் காடு செட்டிபட்டி சோதனை சாவடிக்கு வந்தடைந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நின்ற மாவட்ட பொறுப்பாளர்கள் வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அவரை வரவேற்று ராயக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி கூட்டு ரோடு வழியாக பேரணியாக ஓசூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் நகர பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சரவண குமார், ஜேக்கப் ஜேரிமையா, பிரவீன் ஏற்பாட்டில் சிறப்பான இசை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்றனர். பின்பு அருகில் உள்ள...

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

வாரணாசியில் காசி விசுவநாதன் கோயில் வாசலில் பங்கேற்றுப் பேசிய மோடியின் பேச்சை ஈரோடு கொடுமுடி கோவிலுக்குள் திரையிட்டுக் காட்ட வற்புறுத்திய பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத பிரிவுகளின் கோரிக்கைக்கு இடம் கொடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் பா.ஜ.க.வினர் தடுத்து வந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர்...

மாணவர்கள் கவனத்துக்கு : அரசு தேர்வாணையம் அறிவிப்பு

மாணவர்கள் கவனத்துக்கு : அரசு தேர்வாணையம் அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (ஹnரேயட ஞடயnநேச) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது. தற்போதுதமிழக முதல்வரின் செயலராகபணிபுரியும் த.உதயசந்திரன், டிஎன்பிஎஸ்சி செயலராக...

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்பட வேண்டும்

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்பட வேண்டும்

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மக்கள்  ஏன் கருது கிறார்கள்? இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியதா என 1997இல் உச்சநீதி மன்றத்தில் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் பரிசீலித்து, இந்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியது என்றும், தன்னிச்சையாக செயல்படும் தன்மையிலிருந்தும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது. (சூயபய ஞநடியீடந’ள ஆடிஎநஅநவே டிக ழரஅயn சுiபாவள எ. ருniடிn டிக ஐனேயை, 1997). கோட்பாட்டின்படி இது சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் விதத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியாது என சந்தேகமறக் கூற முடியும். ஆயுதப் படையினருக்கு வங்கம், அஸ்ஸாம், கிழக்கு பஞ்சாப், தில்லி, நாடு பிரிவினையடைந்த போது அங்கேயிருந்த ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் எழும் நிலைமைகளைக் கையாள் வதற்காக அவசரச் சட்டங்கள் மூலமாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டங்கள் பின்னர் 1948ஆம் ஆண்டு ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தால்...

நீட் : கிடப்பில் போடும் ஆளுநர்; பா.ஜ.க.-அ.தி.மு.க. இரட்டை வேடம்

நீட் : கிடப்பில் போடும் ஆளுநர்; பா.ஜ.க.-அ.தி.மு.க. இரட்டை வேடம்

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை இரத்து செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஓடிய பிறகும் ஆளுநர் மாளிகை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. முதல்வர் நேரில் சென்றும் அழுத்தம் தந்தும், காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன், நீட் இரத்து கேட்டு தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு நேரிலும் வற்புறுத்தியுள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஏ.கே. ராஜன் குழு நியமன ஆணையை இரத்து செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அடுத்தகட்டமாக தமிழக அனைத்துக் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக டி.ஆர். பாலு இப்போது அறிவித்திருக்கிறார்....

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

தேடப்படும் நபரின் பெயர் : ராஜேந்திர பாலாஜி அடையாளம் :             நெற்றி முழுதும் விபூதி-குங்குமம்;  கைகளில் கலர் கலராகக் கயிறுகள்; கழுத்தில் பக்தியை பறைசாற்றும் சாமிக் கயிறு உடை : காவி சட்டை தொழில் : முன்னாள்அமைச்சர் சமூக சேவை : வேலை வாங்கித் தருவதாக பல கோடி வசூல் செய்தல் கொள்கை : கோட்சே காந்தியை சுட்டார் என்றெல்லாம் பேசக் கூடாது. கோட்சே தியாகி; கோட்சேவை அவமதிப்பது இந்து மதத்தை அவமதிப்பதாகும் என்று பேசுவார். ‘மோடி – எங்கள் டாடி’ என்று அவ்வப்போது சொந்தம் கொண் டாடுவார். பெரியார் – அண்ணா கொள்கைகள் எனக்குப் பிடிக்காது; நான் ‘இந்து’. ‘இந்து’ கடவுள்களை குறை கூறுகிறவனை விட மாட்டேன் என்பார். உருமாற்றம் : கடைசியாக தனது வெள்ளைச் சட்டையைக் கழற்றிவிட்டு காவிச் சட்டை அணிந்தார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வெள்ளை சட்டைக்கு மாறினார். பா.ஜ.க.வின் ‘தீயாக சீலர்’...

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம்  பாகுபாடு காட்டக் கூடாது

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது

அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உள்ள நியாயங்களை மறுத்துவிட முடியாது. அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, `முன் விடுதலை’ என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை...

இஸ்லாமிய இனப்படுகொலைக்கு தூண்டிவிடுகிறது ‘பஜ்ரங்தள்’

இஸ்லாமிய இனப்படுகொலைக்கு தூண்டிவிடுகிறது ‘பஜ்ரங்தள்’

ஹரித்துவாரில் இந்து வெறியர்கள் ஒன்று திரண்டு முஸ்லீம்களை இனப்படுகொலை செய் வேண்டும் என்று பேசிய வீடியோ பதிவுகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ன. ‘பஜ்ரங்தள்’ என்ற இந்து பயங்கரவாதிகள் வடக்கு உத்தரகாண்ட் பகுதியில் கடந்த வாரம் ஒன்று கூடி ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய உறுதி எடுங்கள் என்று பேசியுள்ளனர். இதற்காக சிறை செல்லவும் பயப்பட வேண்டாம் என்று ஒரு தலைவர் பேசியுள்ளார். நம்மில் 100 பேர் துப்பாக்கி ஏந்தினால் 2 மில்லியன் இஸ்லாமியர்களை அழித்து விடலாம் என்றும் அப்போதுதான் சனாதன தர்மத்தைக் காப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் ஒரு பெண் பயங்கரவாதி பேசினார். பா.ஜ.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதில் பங்கேற்றார். காந்தியை  சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு வணக்கம் செலுத்துங்கள் என்றும் இந்துப் பெண் பயங்கரவாதி கூச்சலிட்டுள்ளார். பிரபோதனார்ந்தா கிரி என்பவர், “கொலை செய்யத் தயாராகுங்கள்; வீரச் சாவுக்குத் தயாராகுங்கள்” என்று பேசியிருக்கிறார். பா.ஜ.க. தலைவர்கள்,...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

தலைமைக் கழக பொறுப்பாளர்களின் அய்ந்தாம் கட்ட பயணம்

தலைமைக் கழக பொறுப்பாளர்களின் அய்ந்தாம் கட்ட பயணம்

01.01.2022. சனிக்கிழமை மாலை 6.00 மணி – தூத்துக்குடி மாவட்டம் 02.01. 2022 ஞாயிறு காலை 10.00 மணி – குமரி மாவட்டம் 02.01.2022 ஞாயிறு மாலை 06.00 மணி –  பாவூர்சத்திரம். நெல்லை, தென்காசி (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) மாவட்டங்கள் பெரியார் முழக்கம் 23122021 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். தொடர்புக்கு : 7373684049 – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெரியார் முழக்கம் 23122021 இதழ்

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியான தோழர்கள் சந்திப்பின் நான்காம் கட்டமாக கரூர் மாவட்ட தோழர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 12.12.2021 மாலை 7.00 மணி அளவில் தெ.வெங்கிட்டாபுரம் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. தலைமைக் கழக பொறுப்பாளர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரையாற்றினார். தோழர்களை அறிமுகபடுத்தியும் கரூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாட்டையும் தொடர்ந்து நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்தும் சின்னதாராபுரம் தோழர் சண்முகம் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி பெரியார் முழக்கம் இதழின் அவசியம் குறித்தும் அதற்கு சந்தா சேகரிப்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிறைவாக கழக பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் இந்த இயக்கத்தில் தோழர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தோழர்கள் ஒவ்வொருவரும்...