‘ராஜாஜி’ பார்ப்பனராக இருந்தாலும் தென்னாட்டுக்காரர் என்று பார்த்தார், பெரியார்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்திகள், சென்னையில் நடைபெறுகிற தமிழக அரசின் குடியரசு நாள் விழாவில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் என்ற சரியான பதிலடியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் தோறும், இந்த தமிழ்நாட்டு போராட்ட வீரர்களின் ஊர்திகள் அணிவகுத்து மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். குடியரசு நாளை கொண்டாடுகிற டெல்லி, தமிழ்நாட்டை ஓரங்கட்டி, புறக்கணிக்க நினைத்தாலும் தமிழ்நாடு தனக்குள்ள இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியநாட்டுக் குடியரசில் தமிழகத்தில் போராடிய தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்ற செய்தியை நாட்டிற்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் பெரியாரின் கருத்து ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள் அமுலுக்கு வந்த நாளை பெரியார் அதைத் துக்க நாள் என்று கூறியதோடு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். “புதிய குடியரசுத்...