Author: admin

ரோகிங்யா முஸ்லிம்கள் உரிமை கோரி  காஞ்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ரோகிங்யா முஸ்லிம்கள் உரிமை கோரி காஞ்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் அம்மக்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை கழகத் தோழர் ரவி பாரதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் டி.கன்னிவேல், பிரகாஷ், இராமசெயம், காஞ்சி அமுதன் (பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம்), மேகலா (மக்கள் மன்றம்), ஷாஜகான் (மனிதநேய மக்கள் கட்சி), செந்தமிழ்குமரன் (தமிழ்தேச மக்கள் கட்சி) ஆகிய தோழமை அமைப்பு தோழர்கள் உரையாற்றினர். ஏழுமலை நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 02112017 இதழ்

‘வந்தே மாதரம்’ சந்தித்த வழக்குகள்!

‘வந்தே மாதரம்’ சந்தித்த வழக்குகள்!

தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டிருக் கிறது, சென்னை உயர் நீதிமன்றம். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். 2013-ல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவு இது. வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது எந்த மொழியில் என்ற கேள்விக்கு வங்காளம், உருது, மராத்தி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு விடைகளில் வங்காள மொழியைத் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் சம்ஸ்கிருதம்தான் சரியான விடை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியதாகவும், அந்தக் கேள்விக்கு ஒரு மதிப்பெண் அளித்தால், தான் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் ஆகிவிட வாய்ப்புள்ளதாகவும் தனது மனுவில் வீரமணி குறிப்பிட்டிருந்தார். தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. ஆனால், இந்த வழக்கில்...

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இல்லை; அதற்கான சான்றுகளும் இல்லை என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் சாதிக்கிறார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரரா? அதில் உறுப்பினரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோட்சே ஒரு ‘சித்பவன்’ பார்ப்பனர்; அவரை காந்திக்கு எதிராக துப்பாக்கி தூக்க வைத்தது. அவரிடமிருந்த ‘இந்துத்துவம்’ என்ற அரசியல் மதவெறி என்பதை அவர்கள் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே இருவருமே பார்ப்பனர்கள். “சங்பரிவார் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள்” என்று இந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையில் 15 ஆண்டுகாலம் கழித்து பிறகு விடுதலை செய்யப்பட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வெளிப்படையாகவே கூறுகிறார். இப்போது உச்சநீதிமன்றத்தில் காந்தி கொலை குறித்து ஒரு வழக்கு – காந்தி கொலை நடந்து முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது. மும்பையைச் சார்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் இந்த வழக்கை...

பெட்ரோலியக் கொள்ளையில்  பா.ஜ.க. அரசின் பங்கு!  பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன்

பெட்ரோலியக் கொள்ளையில் பா.ஜ.க. அரசின் பங்கு! பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன்

பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியச் சந்தையில் உயர்ந்து காணப்படுவதுடன் தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை முன்பு இருந்ததை விடக் குறைவாக இருந்தாலும் இங்கு அதீத விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மிக அதிக அளவில் அவற்றின் மீது விதிக்கும் பல்வேறு வரிகளே. ரூ.21.50 அடக்க மாகும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வரி விதித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.70-80 வரை விலையை வசூலித்து அரசுகள் ஒரு மாபெரும் வரிக் கொள்ளையில் ஈடுபடுகின்றன என நாம் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தோம். பல ஊடகங்களும், ஊடக விவாதங்களும் இதனை எடுத்துக் கூறின. வலைத் தளங்களிலும் ஆளும் பா.ஜ.க. அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளப் பா.ஜ.க.வினரும் அதன் ஆதரவாளர்களும் பல தந்திர வேலை களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அப்படி ஈடுபடாவிட்டால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். அந்தத் தந்திரங்களில் ஒன்று...

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து! தலைமைச் செயலகம் முற்றுகை! 150 பேர் கைது!

தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய சமயத் தலைவர்களிடம் தீட்சையையும் பெற்ற 206 பேர் கடந்த பல ஆண்டுகளாக பணி அமர்த்தப்படாமல் காத்துக் கிடக்கின்றனர். அவர்களது நியமனத்துக்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரிகள் நல சங்கம் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2015 டிசம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. அந்த தீர்ப்புக்குப் பின்னர்தான், கேரள அரசு 6 தாழ்த்தப் பட்டோர் உள்பட 36 பார்ப்பனர் அல்லாதாரை தேவஸ்வம்போர்டு கோயில்களில் நியமித்து, அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். கேரள அரசைத் தொடர்ந்து கர்நாடக அரசும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப் போவதாக அறிவித்து விட்டது. இந்த நிலையில், தமிழகம்தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 90 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் வலியுறுத்தும் மாநிலமாக இருந்து வருகிறது. இனியும் தமிழக அரசு எவ்வித சலனமும் இன்றி அமைதி காக்கக்...

வெளி வந்துவிட்டது!   ‘நிமிர்வோம்’  அக்டோபர் இதழ்

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ அக்டோபர் இதழ்

பெரியார் காந்தியுடன் நடத்திய நேரடி விவாதம்= நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்தாது பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! கடும் சரிவில் இந்திய பொருளாதாரம் முதலீட்டாளர்கள் ஓட்டம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…             தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 பெரியார் முழக்கம் 26102017 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம்: 26.10.2017 –       காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு  – கோபி 27.10.2017  – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017  – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017  – காலை 10.00 – நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர் –...

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில் நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது 02.10.2017 அன்று காலை 10 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியையும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவையும் கழகக் கொடியசைத்து தலைவர் கொளத்தூர் மணி வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பறை முழக்கங் களோடு விளம்பர பதாகைகள், கழக...

நெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்!

நெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்!

‘ஆனந்தவிகடன்’ ஏட்டுக்கு வளர்மதி அளித்த பேட்டியி லிருந்து சில பகுதிகள்: 2014-ம் ஆண்டு… சிதம்பரம் அண்ண hமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான போராட்டம். மாணவர்களை அடித்து விரட்ட போலீஸைக் கல்லூரிக்குள் இறக்குகிறது நிர்வாகம். தடியடி நடத்துவதற்குக் கையிலிருந்த பிரம்பை இறுக்கிப் பிடித்தபடி, மாணவர்களை நோக்கி ஆயிரம் பூட்ஸ் கால்கள் நடந்துவர அவர்களுக்கு எதிரே நின்று ஒரே ஒரு மாணவி உரத்த குரலில் பேசுகிறார்; அவர்தான் வளர்மதி. “அது எப்போ இருந்து ஆரம்பிச்சதுன்னு கேட்டீங்கன்னா, ஜே.என்.யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் அடைஞ்ச சமயத்துலதான். ரோஹித் வெமூலாவோட மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடினவர் முத்துக்கிருஷ்ணன். மாணவர்கள் சமூக நீதியை நோக்கி எழுச்சி அடையணும்னு தொடர்ந்து பேசிட்டு வந்தவர். அவர் தற்கொலை செஞ்சிருக்கவே மாட்டார்னு நாங்க நம்புறோம். அவர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது ஊர்த்தலைவர்கள், போலீஸ்காரர்கள் எல்லாம் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு நிறைய அழுத்தம் கொடுத்து அவர் உடலை எரிக்கிற...

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி வீர உரை

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி வீர உரை

அடக்குமுறை சட்டங்களால் எங்கள் இலட்சியத்தை ஒழித்து விட முடியாது! நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு எடுத்து நிலத்தையும் நீரையும் பாழ்படுத்துவதை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக துண்டறிக்கை வழங்கியதற்காக கைது செய்யப் பட்டவர் வளர்மதி. சென்னையில் ஜாதி ஒழிப்புக்கான பெண் போராளிகள் அறைகூவல் நிகழ்வில் பங்கேற்று தனது உரையில் குறிப்பிட்டதாவது: பெண் போராளிகளின் அறைகூவல் என்று இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் போராளிகள் யார்? அவர்களும் இந்த சமூகத்தி லிருந்து வந்தவர்களே. குடும்ப – ஜாதி கட்டமைப்புக்குள் ‘அடங்கிப் போ; பணிந்து வாழ்; அதுவே பெண்ணிற்குப் பெருமை’ என்கிற சூழலில் வளர்ந்த பெண்கள் அதை உடைத்துக்  கொண்டு எப்படி வெளியே வந்தார்கள்? இந்தப் போராளிப் பெண்களுக்கு உரிமைகளை எவரும் கொடுத்துப் பெறவில்லை  அவர்களாகவே தங்கள் உரிமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள். ‘நான் எனது மகளுக்கு எனது மனைவிக்கு எல்லா உரிமைகளை யும் வழங்கியிருக்கிறேன்’ என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள்....

அரசுத் துறைகளைப் பயன்படுத்தி அமித் ஷா மகன் ஊழல்

அரசுத் துறைகளைப் பயன்படுத்தி அமித் ஷா மகன் ஊழல்

ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக் கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில் துறை யினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது. இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜக தலைவராக அமித் ஷா பதவியேற்ற பிறகு, இந்த மூன்று ஆண்டுகளில் அவரது மகன் ஜெய் அமித் ஷாவின் நிறுவன வணிக விற்று வரவு 16,000 மடங்கு எகிறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இந்தச் செய்தியை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்ற ஜெய் அமித்ஷாவின் வழக்குரைஞரின் மிரட்டலை மீறி வெளியிடப்பட்டுள்ள...

‘அதானியே வெளியேறு’; ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைப்புகள் போர்க் கொடி

‘அதானியே வெளியேறு’; ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைப்புகள் போர்க் கொடி

பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், அவரது ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நாட்டின் பெரும்பணக்காரராக உருவெடுத்து இருப்பவருமான கௌதம் அதானியின், ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள்  போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களில் சுமார் 40 இடங்களில் ஆயிரக்கணக்கில் திரண்ட அந்நாட்டு மக்கள், ளுகூடீஞ ஹனுஹசூஐ, ஹனுஹசூஐ ழுடீ ழடீஆநு (அதானியே நிறுத்து ; உன் நாட்டிற்கே திரும்பு) என்ற பதாகைகளை உயர்த்தியும், முழக்கங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்தை தலைமையகமாக கொண்ட அதானி நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளது. மோடியின் ஆசியுடன், பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து ரூ. 6 ஆயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்ற அதானி, கடந்தாண்டு மோடி ஆஸ்திரேலியா சென்றபோது, கூடவே சென்று நிலக்கரி சுரங்கத்தை ஏலத்தில் எடுத்தார். 16.5 பில்லியன் டாலர்கள்...

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

அரசுகளின் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ மக்கள் முன்னேற்றத்துக்கு அவர்களின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பது இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. 1990இல் ‘உலக மயமாக்கல்’ என்ற கோட்பாட்டின் கீழ் உலக வர்த்தக நிறுவனத்துடன் இந்திய பார்ப்பன ஆட்சி உடன்பாடு செய்து கொள்வதற்கு முன் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களினால் மக்கள் பயன் பெற்றார்கள் என்பது உண்மை.  பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக வேலை வாய்ப்புகள் பொருளியல் வளர்ச்சிகள் வந்தன. ஆனால் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங் களின் சுரண்டல்களுக்கு முன்னுரிமை தரப்படும் நிலை உருவானது. உள்ளூர் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு விவசாயத் துறை வஞ்சிக்கப் பட்டு இயற்கை வளங்களை சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதே அதன் நோக்கமாகி விட்டன. எனவே வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வாழ்வதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் அந்த மாநில மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுவதாக இருக்க  வேண்டும். உலகின் பல்வேறு...

தமிழக அரசே! பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 அர்ச்சகர்களையும் அறநிலையத் துறை கோவில்களில் உடனே பணியமர்த்து!

தமிழக அரசே! பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 அர்ச்சகர்களையும் அறநிலையத் துறை கோவில்களில் உடனே பணியமர்த்து!

தோழமை இயக்கங்களின் ஆதரவோடு – தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம் – முற்றுகை போராட்டம்! தலைமை       :                 கொளத்தூர் மணி கழகத் தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் நாள்     :                 அக்டோபர் 30, 2017   – காலை 10 மணி செய்து விட்டது கேரளம்! அறிவித்து விட்டது கர்நாடகம்! விதைத்த தமிழகம் சோம்பிக் கிடப்பதா? தோழர்களே, அணி திரள்வீர்! – திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் பெரியார் முழக்கம் 26102017 இதழ்

ஜாதியமைப்பை ஒழிக்காமல் ‘தூய்மை பாரதம்’ பேசுவது  மோசடியே!

ஜாதியமைப்பை ஒழிக்காமல் ‘தூய்மை பாரதம்’ பேசுவது மோசடியே!

மோடியின் தூய்மை இந்தியா திட்டம் வெற்று முழக்கமாக நிற்கிறது. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. உண்மையில் தூய்மை இந்தியா ஒன்றை உருவாக்க வேண்டுமானால் அடிப்படையாக செய்யப்பட வேண்டியது என்ன? ஜாதிக்கும் ஜாதி அடிப்படையிலேயே பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு உறுதி செய்திருக்கும் ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு தொழிலை தர்மமாக்கிக் கொண்டிருக்கிற பார்ப்பன இந்தியாவில் ஒரு போதும் ‘தூய்மை இந்தியா’ உருவாகவே முடியாது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் – கையில் மலம் எடுக்கும் துப்புறவுத் தொழி லாளர்களின் விடுதலைக்கான ‘சஃபாய்கரம் சாரி அந்தோலன்’ அமைப்பின் நிறுவனர் பெஸ்வாடா வில்சன். உலகின் தலைசிறந்த ‘மகாசாய் விருதை’ 2016ஆம் ஆண்டில் பெற்றவர். செப். 29, ஆங்கில ‘இந்து’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். தூய்மை இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டத்தை மோடி அறிவித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டில், தெருக்களை சுத்தப்படுத்தி, கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் ஜாதிப் பிரிவினர் பற்றி...

அம்பேத்கர் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6-00 மணியளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர் பெரியார் நினவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியத் தோழர் அருணிடம் பயிற்சிபெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குறைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் ”இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க’” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத்தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரக்கசின் படத்தை, பள்ளீகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன் ஜீ அவர்களல் திறந்துவைக்கப் பட்டது. ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர்...

தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம்,சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், ஏற்காடு தோழர் பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழா முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ.இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண்டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். மேலும் படங்களுக்கு  

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

கருத்தரங்கம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் ! ஜோயல் பிரகாஷ் நினைவரங்கில்……….. நாள் : 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4.30 மணி. இடம் : அம்பேத்கர் திருமண மண்டபம், (S.B.I..வங்கி அருகில்), குடியாத்தம். ”அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி’அவர்களும், ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘பேராசியர் புரட்சிமணி’ (தலைவர்,நீலப்புலிகள் இயக்கம்) அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள். கழக நிர்வாகிகளும்,தோழமை அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் – சுயமாக வரைந்த ஓவியம். வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில்...

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம் மதுரை 10112017

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம். நாளை மதுரையில்.. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்கள். நாள் : 10.11.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

தோழர் பாரூக் குடும்ப நிதி

தோழர் பாரூக் குடும்ப நிதி

சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு பெருமாள்பிரபாகரன் அவர்கள் பாரூக் குடும்ப நிதியாக 10.000 பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்கள்

தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017

#செய்துவிட்டது_கேரளம் #அறிவித்து_விட்டது_கர்நாடகம் #தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா? ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி. அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத...

வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

திவிக தலைவர் தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் முன்னாள் உதவியாளர், அன்பிற்கினிய தோழர்.கோகுலின் வாழ்க்கை இணையேற்பு அழைப்பிதழ்

திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில்நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவும் 02/10/2017 அன்று காலை 10 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில்நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் பின் கழக கொடியசைத்து தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வாகன ஊர்வலத்தை தொடங்கி...

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ஈரோடு 18102017

  ஆதித்தமிழர் பேரவை சார்பாக 18102017 மாலை 5 மணி அளவில்  ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில்  “தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்தில்” திவிக தலைவர் தோழர் கொளத்தூர்மணி பங்கேற்றார். அதில் பேசியவைகளில் இருந்து சில துளிகள் மராட்டியத்தில் எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே ஏன் கொல்லப்பட்டார்?? பன்சாரே தன்னுடைய நூலில், மராட்டிய சிவாஜி இந்து மதத்திற்கு மட்டும் உரியவர் அல்ல.. இந்துக்களுக்காக மட்டும் போராடியவர் அல்ல.. அவர் தன்னுடைய படையில் மெய்க்காவலர்களாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இஸ்லாமியர்களையும் வைத்திருந்தார் என்று தொடர்ந்து ஆதாரத்துடன் ஆய்வு நூல்களை எழுதி வந்தார்.. இந்தக் கருத்துக்கு எதிரானவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்..   தலைவன் என்பவன் தன் பின்னால் மக்களை அழைத்துச் செல்பவனாக இருக்க வேண்டும்; அடுத்தவர் பின்னால் செல்லக் கூடியவராக இருக்கக் கூடாது -பெரியார்   பள்ளிக்கூடம் நடத்த நிதியில்லை என்று கூறி, 6000 கிராமப்புற பள்ளிகளை மூடிய ராஜாஜி, வேதபாடசாலைகள் அமைக்க 15 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார்  ...

கேரளாவில் சமூகப் புரட்சி: தலைமை அர்ச்சகரானார் தலித் இளைஞர்

கேரளாவில் சமூகப் புரட்சி: தலைமை அர்ச்சகரானார் தலித் இளைஞர்

150 ஆண்டுகால பழமை வாய்ந்த மணப்புரம் சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகராக (மேல் சாந்தி) 22 வயது புலையர் சமூகத்தைச் சார்ந்த யாது கிருஷ்ணா என்ற தலித் பதவி ஏற்றுக் கொண்டார். சமஸ்கிருதத்தில் மேல் பட்டப் படிப்பு படித்த இந்த இளைஞர் 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களுக்கான பயிற்சி – பூஜை முறைகளைக் கற்றுத் தேறியவர். ‘தேவஸ்வம் போர்டு’ நடத்திய தேர்வில் 4ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார் இந்த இளைஞர். 150 ஆண்டுகாலமாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக இருந்த இந்த கோயிலில் ‘தலித்’ ஒருவர் தலைமை அர்ச்சகராகியுள்ளார். பெரியார் முழக்கம் 19102017 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், ‘நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம்: 26.10.2017 –       காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு  – கோபி 27.10.2017  – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017  – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017  – காலை 10.00 – நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00...

அன்னையே வாழ்க!

அன்னையே வாழ்க!

அன்பே அருளே அறிவே எமையே ஆட்கொண் டியக்கு கின்ற ஆற்றலே! பண்பே பரிவே திருவே மனிதன் பகுத்துணரக் கற்பித்த எந்தன் பகவனே! மாண்பே மருவிலா வித்தே வியப்பே மனிதப் பரிணாம வார்ப்பின் ஆதியே! மனித மாண்பின் மின்னோட்ட விசையே மானவாழ்வை மீட்டளித்த எந்தையே வாழி! என் சொல்வேனையா! என் செய்வேனையகோ எம்மக்கள் இன்னும் தூங்குகின் றாரே! கொடிய பகைவரிட மெல்லா மிழந்தே கையேந்தி இறைஞ்சி வாழுகின் றாரே! அடிமைதாமென் றாரியர் காலைத் தொழக்கண்டு அகிலம் நகைத்திடல் அறியா துள்ளாரே! விடிவிலையோ எம்மின இழிவிற்கே விந்தையோ! விடுதலை உணர்வினை இழந்தார் அந்தோ! துணைசெய்யப் போராடித் தடுத்தாட் கொள்ள துணிந்தா ரில்லை உமைப்போல் எவருமே! ஓற்றுமையு மில்லையே பதவி இரைகாட்டி கண்ணி வைத்தே பார்ப்பான் காத்துள்ளானே! குடியும் தமிழும் அழியுமோ அய்யகோ! உனைமறந்தார் உயிரை மறந்தது போலே! பிணமென்றே எண்ணி நாயும் நரியும் பிய்த்திழுத்துத் தின்னக் காத்துள் ளனவே! தூண்டிலை மறந்தே தண்ணீரைப் பழிக்கும்...

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

அக்டோபர் 7ஆம் தேதி பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உடுமலை கவுசல்யாவின் எழுச்சி உரை இந்த மேடை நமக்கெல்லாம்  கற்றுத்தரும் அரசியல் பாடம் ஈடிணையற்றது என்று நான் இந்த அழைப்பிதழ் பார்த்ததிலிருந்தே உணர்கிறேன். நான் அறிந்து மேடையில் உள்ள ஒவ்வொரு வரும் சமூகத்தில் ஒவ்வொரு அடையாளங்களைப் பெற்றிருக்கிறார்கள். அது ஒடுக்கப்பட்டோரின் குரலாகவே தம் குரலை ஆக்கிக் கொண்டவர்கள், சாதி ஒழிப்பில் எவ்வகையிலும் சமரசமற்றவர்கள், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் அழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் அஞ்சாது நிற்கும் போராளிகள், அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையில் ஊன்றி நிற்பவர்கள் என எல்லாப் பெண்களும் பெண் விடுதலையின் அடையாளமாகவே தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். இன்னொரு வகையில் சமூகத்தின் விலங்குகளையும் பண்பாட்டுச் சிறைகளையும் உடைத்து விடுதலைப் பெண்ணாகவே வாழாமல் இப்படிப்பட்ட அடையாளங்களோடு பெண்கள் நிலைபெற்று வெற்றி பெற முடியாது. விடுதலை வாழ்வை பெண்கள் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதன் மூலம்தான், மக்களுக்கான போராட்ட வாழ்வை மேற்கொள்ள...

பெரியாருக்கு முதல் பெருமை சேர்த்த தாம்பரம்

பெரியாருக்கு முதல் பெருமை சேர்த்த தாம்பரம்

பெரியாருக்கு முதலில் பெருமை சேர்த்த நகரம் என்ற பெருமையைக் கொண்டது தாம்பரம். சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையம் எதிரில் அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகளை 39 ஏக்கர் 51 சென்ட் பரப்பளவில் அரசு உருவாக்கியது. அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு பெரியார் பெயர் சூட்ட அப்போதைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முடிவு செய்தனர். 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டக் குழு தலைவர் டி. சண்முகம் தலைமையில் தாம்பரத்தில் நடந்த விழாவில் பெரியார் நகர் என்ற பெயரில் நகரம் உருவாக்கப்பட்டது. அத்துடன் பெரியார் பெயர் கொண்ட வளைவும் திறக்கப்பட்டது. இதை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த திவான் பகதூர் என்.சிவராஜ் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஒரு பார்வை யாளராக அண்ணா பங்கேற்றார். பெரியார் பெயர் கொண்ட வளைவு திறக்கப்பட்ட தால் தாம்பரம் நகரத்தின் பெயர் பட்டி தொட்டி எங்கும் தெரியவந்தது. தாம்பரம் தேசிய நெடுஞ்சாலை, முடிச்சூர் சாலை,...

நரகாசுரன் எதன் மீது நின்று பூமியை பாயாக சுருட்டினான்? – பெரியார் –

நரகாசுரன் எதன் மீது நின்று பூமியை பாயாக சுருட்டினான்? – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை.  அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

வடமாநிலத்துக்கு போகிறதாம்  கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

வடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது. சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி...

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை தீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா?

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை தீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக்கின்றன. தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் அக்டோபர் இறுதிவரை தடை விதித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளு படிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலை யில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை...

மயிலைப் பகுதி தோழர்கள் சிறப்புடன் நடத்திய பெரியார் விழா

சென்னை மாவட்ட மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதைக் கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா, செப்.26 அன்று மாலை செயின் மேரிஸ் பாலம் அருகே சிறப்புடன் நடந்தது. விழாவின் மேடை ‘பெரியார் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்டு, மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அனிதா, கவுரி லங்கேஷ் படங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்தன. விரட்டுக் கலைக் குழுவினரின் பறை இசை, நாடகங்கள், பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நிகழ்ச்சிக்கு பிரவீன் தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரையைத் தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். போட்டி களில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நீதிபதி அரிபரந்தாமன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் திருமூர்த்தி பரிசுகளையும் விருதினையும் வழங்கினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.  கடந்த ஒரு மாத காலமாக...

திவ்யபாரதி ஆவேச உரை  இரயில் நிலையங்களில் கையால் மலம் எடுக்கிறார்கள்; இதை ஒழிக்க வக்கில்லாமல் புல்லட் இரயில் விடுகிறார் மோடி

திவ்யபாரதி ஆவேச உரை இரயில் நிலையங்களில் கையால் மலம் எடுக்கிறார்கள்; இதை ஒழிக்க வக்கில்லாமல் புல்லட் இரயில் விடுகிறார் மோடி

சென்னையில் ஜாதி எதிர்ப்புக்கான பெண் போராளிகளின் அறைகூவல் பொதுக் கூட்டத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குனர் திவ்யபாரதி உரையில் குறிப்பிட்டதாவது: சமுதாயப் பிரச்சினைக்காகப் போராடுகிறவர்கள் மீது ‘தேச விரோதிகள்’ என்று குற்றம்சாட்டு கிறார்கள். இங்கே இவ்வளவு பெரிய அளவில் திரண்டிருக்கிற நாம் எல்லோரும் ‘சங்பரிவார்’ பார்வை யில் தேச விரோதிகள். சாவர்க்கார் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட் டிருந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானவர். அவரை ‘வீர சாவர்க்கார்’ என்று கூறுகிற கூட்டம், நம்மைப் பார்த்து தேச விரோதி என்கிறது. நான் எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப் படத்துக்காக கடும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது. 25 இடங்களை மய்யமாக வைத்து அங்கே மனித மலத்தை மனிதர் அள்ளும் இழிவு தொடர்வதைப் படம் பிடித்தோம். நகரங்களிலுமா இப்படி நடக்கிறது என்று கேட்டார்கள். ஜாதி இழிவு கிராமத்தில் தான் இருக்கிறது, நகரங்களில் இல்லை என்பது ஒரு மூட...

நன்கொடை

நன்கொடை

10.9.2017 திருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற அசுவிதா-நாகராசு ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா மகிழ்வாக ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது. கோபி கழகத் தோழர் அருள்-யசோதா இணையரின் மகன் யாழ் திலீபன் எட்டாம் பிறந்த நாள் மகிழ்வாக ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்டோம் (ஆர்) பெரியார் முழக்கம் 12102017 இதழ்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

25.09.2017 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரியும் கடவுள் படங்களை அகற்றக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இராஜேஷ் குமார், சுதாகர் முன்னிலையில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தேவராஜ், சி.பி.அய்.எம். விவசாய அணி செயலாளர் என். செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர், மாநில வழக்கறிஞர் பேராசிரியர் முருகையன், வி.சி.க. வழக்கறிஞர் ஸ்டாலின், திராவிடர் கழகத்தைச் சார்ந்த அக்ரி ஆறுமுகம், தி.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் காமராசு, முற்போக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் சீனிவாசன், பெரியார் தொண்டர் சிற்பிராசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த கலைஞர் சங்கர், பேராசிரியர்...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (4) பவுத்தத்தை – பார்ப்பனியம் அழித்த வரலாறு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (4) பவுத்தத்தை – பார்ப்பனியம் அழித்த வரலாறு

புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி) புத்த மார்க்கம் பார்ப்பனர்களையும் ஏற்றுக் கொண்டதால் அதற்கான கடும் விலையை அது தர வேண்டியிருந்தது. புத்த மார்க்கப் புரட்சியால் யாகம், சடங்குகளின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வருமானமில்லாத நிலையில் பல பார்ப்பனர்கள், பார்ப்பன உணர்வுகளைவிட்டு விடாமலேயே புத்த மார்க்கத்தில் இணைந்துக் கொண்டனர். புத்த பிட்சுக்களாக உருவாக்கப்பட்ட ‘ஆஸ்ரமங்களில்’ அவர்கள் சுகவாழ்வு வாழத் தொடங்கினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களைப் பார்ப்பனர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்ட அதே கதைதான்.  புத்த பிட்சுவாக மாறிய பிறகும் பார்ப்பனர்கள் தங்கள் ‘தீண்டாமை’யை விட்டு விடவில்லை என்பதை சீனப் பயணியாக இந்தியாவுக்கு வந்த ஃபாஹியான் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். “புத்த மார்க்கத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஒரு பார்ப்பன...

கழகம் – தோழமை அமைப்புகள் எதிர்ப்பு: மதுரை ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு

மதுரையில் அக். 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப் பதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. உடனே மதுரை மாவட்ட கழகச் செயலாளர் மணி கண்டன்,  மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, த.பெ.தி.க., இளந் தமிழகம், புரட்சிகர இளைஞர் கழகம், சி.பி.எம்.எல். ஆகிய அமைப்புத் தோழர்கள், மாநகர காவல்துறை அதிகாரியை சந்திந்து, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகும் வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கவேண்டும் என்று கோரி இருந்தனர். மதுரை மாவட்ட செயலாளர் மணி கண்டன் தனது முகநூலில், “60 தோழர்கள் கைதாகி ரிமாண்ட் ஆவதற்கு தயாராகி விட்டோம். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை எதிர்த்து கருப்புக் கொடி காட்டவும் தயாராகி விட்டோம். எங்கள் தோழர்களை கட்டுப்படுத்த முடியாது” – என்று பதிவிட்டிருந்தார். எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஊர்வல அனுமதியை காவல்துறை மறுத்தது....

தலையங்கம் கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி

தலையங்கம் கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி

 ‘திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு’ 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக்கி சாதனைப் படைத்திருக்கிறது. இதில் 6 அர்ச்சகர்கள் ‘தலித்’துகள் என்பது கூடுதல் சிறப்பு. ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அர்ச்சகராக முடியும்; வேறு ‘பிரிவினர்’ அர்ச்சகராவது ஆகமங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிரானது என்று தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் ஜாதித் திமிரோடு கூறி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி 1970ஆம் ஆண்டே தந்தை பெரியார் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று சட்டத்தை முடக்கினார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இது குறித்து ஆராய நீதிபதி மகாராஜன் தலைமையில் 1979ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை 1982இல் வெளியிடப்பட்டது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக் காட்டி, அந்தக் குழுப் பரிந்துரை வழங்கியது. 2003ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம், இப்பிரச்சினைக்கு மீண்டும்...

நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

பெரம்பூர் கூட்ட மேடையில் பெண் போராளிகள் கீழ்க்கண்ட உறுதி மொழியை எடுத் தனர். கூட்டத் தினரும் எழுந்து நின்று உறுதி எடுத்தனர். “மனிதர்கள் – மனிதர்களாகவே பிறக்கிறார்கள். ஜாதி – அடை யாளம் பின்னர் திணிக்கப்படுகிறது. ஆணுக்குப் பெண் அடிமை என்பதும், சூழ்ச்சியால் கட்டமைக்கப்பட்டது. பெண்களாகிய நாங்கள், இளைய தலைமைக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான். ஜாதி – பெண்ணடிமை ஒழிப்பை நமது தலைமுறையில் முடித்து வைப்போம். இளைஞர்களே! ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்! சுய ஜாதி மறுப்பாளர்களாக சுய பாலின உணர்வை விட்டவர்களாக மாறுங்கள்! ஜாதி ஒழிப்பு களம் நோக்கி வாருங்கள்! வெற்றி நமதே!” பெரியார் முழக்கம் 12102017 இதழ்

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

“இளைஞர்களே; ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்; சுய ஜாதி எதிர்ப் பாளர்களாக மாறுங்கள்; ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி வாருங்கள்; நமது தலைமுறையிலேயே ஜாதி அமைப்பை முடித்து வைப்போம்!” என்று பெண் போராளிகள் அறைகூவல் விடுத்தார்கள். சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி பெண் போராளிகள் அறைகூவல் விடுக்கும் பொது மேடை ஒன்றை உருவாக்கித் தந்தது. பெரம்பூர்  பெரவள்ளூர் சதுக்கத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த எழுச்சி நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நெடிய வீதி முழுதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. 6 மணி யளவில் மக்கள் மன்றத்தின் பறை இசை; புரட்சிகரப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுக் கொண்டே இருந்தன. இருக்கைகளுக்குப் பின்னாலும் வீதியின் ஓரங்களிலும் அடர்த்தியாக இளைஞர்களும் பொது மக்களும்...

‘தேசத் தந்தை’க்கு அவமானம் : காந்தி சிலைக்கு மாலை போட வந்தவர்கள் கைது!

‘தேசத் தந்தை’க்கு அவமானம் : காந்தி சிலைக்கு மாலை போட வந்தவர்கள் கைது!

தேசத் தந்தை காந்தி பிறந்த நாள் விழாவில் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதித்திருக்கிறது தமிழக காவல்துறை. ‘கவுரி லங்கேஷ் கொலையும் காந்தி கொலையும் ஒன்றே’ என முழக்கமிட்டது சட்ட விரோதமாம்! கூறுகிறது காவல் துறை. மாலையிட வந்த திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிய லெனினிய மக்கள் விடுதலை,மாணவர் மன்றம், காஞ்சி மக்கள் மன்றம், பாப்புலர் பிரண்ட் அமைப்பினர், எழுத்தாளர்கள், பேராசிரியர்களை காந்தி சிலைக்கு மாலையிடாமல் தடுத்து கைது செய்துள்ளது காவல்துறை! ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகு காந்தி பிறந்த நாளில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கத் தடை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற கின்னஸ் சாதனையை செய்து முடித்திருக்கிறது எடப்பாடி ஆட்சியும் அதன் காவல்துறையும். பெரியார் முழக்கம் 05102017 இதழ்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் எழுச்சி

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் எழுச்சி

தந்தை பெரியார் 139-வது பிறந்த நாளையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 17.09.2017 ஞாயிறு காலை 9.00 மணிக்கு பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் மணிமொழி மாலை அணிவித் தார். தோழர்கள் அனைவரும் பெரியாரியியல் உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் படம் அலங்கரிங்கப்பட்ட வண்டி முன்செல்ல இரு சக்கர வாகனத்தில் அனைவரும் காசி பாளையம் சென்றனர். அங்கு கழகக் கொடி கம்பத்தில் பெரியார் பிஞ்சு யாழ் பிரபாகரன் கொடியேற்றியபின் பொதுமக்கள் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அடுத்து அக்கரைக்கொடிவேரி பகுதியில் செல்வி மா.ஈஸ்வரி கழக கொடியினை ஏற்றினார். சத்தியமங்கலத்தில் அனைத்து அமைப்பினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மற்றும் சமூக ஆர்வலர் கருப்புசாமி துவக்கி வைத்தனர். ஊர்வலம் சத்தி பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (14.9.2017 இதழ் தொடர்ச்சி) “கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி புத்தர் கவலைப்படாதவராக அது பயனற்ற வாதம் என்ற கருத்துடையவராக இருந்தாலும் அனைத்தையும் உருவாக்கி ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை புத்தரிடம் இருந்திருக்குமானால், அவர் போதித்த கருத்துகள் எல்லாம் தலைகீழாக வேறு திசையில் சென்றிருக்கும்” என்கிறார், தலைசிறந்த இந்திய தத்துவ ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா. “அப்படி ஒரு ‘சக்தி’ இருக்கிறது என்ற நம்பிக்கையி லிருந்துதான் அந்தக் கடவுளை மகிழ்வித்தால் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது; அந்த நம்பிக்கையில்தான் கடவுளை வேண்டுதல்; காணிக்கை செலுத்துதல்; பலியிடுதல் என்ற சடங்குகள் வந்தன. இறைவனை இவற்றின் வழியாக மகிழ்வித்து கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை, புத்தர் காலத்திலும்...