Author: admin

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வு மனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா? இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய  1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர். நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக...

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

பார்ப்பனர்கள் விளையாட்டாக மாறிவிட்ட ‘கிரிக்கெட்’ மட்டுமே இங்கு பிரபலமாக்கப்பட்டதால் கடும் உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரை ஒருவர் தொட்டு முட்டி மோதி விளையாடக் கூடிய ‘கால்பந்து’ விளையாட்டுகள் ‘புண்ணிய பூமி’யில் ‘சூத்திரர்’ விளையாட்டாகிவிட்டன. இரஷ்யாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் ஒரு மாவட்டத்தைவிட சிறிய பரப்பளவு கொண்ட அய்ஸ்லாந்து, துனிஷியா, பனாமா, செனகல் போன்ற நாடுகள் எல்லாம் பங்கேற்கும்போது இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது. 2002இல் உலகப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்றார்கள். 2010இல் உலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டி சர்ட்டுகள்’ மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது 2026இல் பங்கேற்கும் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புகள் ஏதேனும் நடக்கிறதா? எதுவுமே இல்லை. உள் நாட்டில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது இல்லை. ‘கால்பந்து’ கிளப் ஏதும் கிடையாது. பார்ப்பன உயர்ஜாதியினர் கடுமையாக உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய இந்த விளையாட்டைவிட ஒருவருக்கொருவர் தொட வேண்டிய தேவை இல்லாமல்...

கோவையில் இரயில் மறியல்

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர்.  கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரி சேலம் இரயில்வே சந்திப்பு முன்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் வைத்த வேண்டுகோள் சரியா தவறா என்று தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்றம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக் குள்ளேயே நுழைந்து அதை நீர்த்துப் போகச் செய்தது.  அக்கறை இல்லாமல் வழக்கை நடத்துவதாலும், சாட்சிகள் மிரட்டப்படுவதாரும் இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடிய வில்லை என்கிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமை சட்டத்தைக்...

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

‘நிதி ஆயோக்’ (Ammyy admin) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 05072018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும்.  அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை  இழிவு செய்கிறார்

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை இழிவு செய்கிறார்

இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி’. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது. ‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின. ஆமை...

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பக்தி நம்பிக்கையில் மூழ்கிப் போன அந்தக் குடும்பம் வீட்டுக்குள் கோயில் கட்டி, இறப்பின் வழியாக ‘மோட்சம்’ போக முடியும் என்ற நம்பிக்கை யில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. உடலிலிருந்து பிரிந்த ‘ஆவி’ நேரடியாக ‘சொர்க்கம்’ போக வீட்டுச் சுவற்றில் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் 11 குழாய் களைப் பதித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார்கள். ‘மூடநம்பிக்கையால் குடும்பமே தற்கொலை’ என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் இவைகளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பயன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று பெரியார் இயக்கம் கூறினால், இந்து மதத்தைப் புண் படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறார்கள். ‘மனித ஆத்மாவுக்கு மரணமில்லை; அது மறுபடியும் பிறவி எடுக்கும்’ எனவே ‘மோட்சம்’ போகலாம்; ‘மரணம் இல்லை’ என்று ‘கீதை’யில் ‘கிருஷ்ண பகவான்’ கூறும்...

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தின் 5வது சந்திப்பு 23.06.2018 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடு தலைக் கழகத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலை வர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ‘நிமிர்வோம்’ அக்டோபர் மாத இதழ்க் குறித்து ராஜீ மற்றும் இமானுவேல் துரை தங்களது பார்வையை எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து, சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்தை மதிமாறன் (எழுத்தாளர்) திறந்து வைத்து “இட ஒதுக்கீடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்....

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக் கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டு மொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அத்துடன், சிலமுறையே மோடி நாடாளு மன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க.வின் 800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 28062018 இதழ்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

பேஷ்வா பார்ப்பனர்கள் ‘மகர்’ மக்களுக்கு இழைத்த கொடுமைகள் குறித்து அம்பேத்கர் தரும் தகவல்கள்: அன்றைய மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒரு தெருவில் எதிரில் வரும் இந்துவின் மீது தீண்டத்தகாதோரின் நிழல் பட்டால்கூட தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டி – தீண்டத்தகாதவர்களை தெருவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்துக்கள் தவறி தீண்டத்தகாதவர்களைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தடுக்க, தீண்டத்தகாதவர் தன் கழுத்திலோ மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பேஷ்வாவின் தலைநகரான பூனாவில் தீண்டத்தகாதவர், தன்னுடைய இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தான் போகும் பாதையில் – தன் காலடித் தடத்தின் புழுதியைப் பின்புறமாகக் கூட்டியபடி சென்றாக வேண்டும் என்ற ஆணை இருந்தது. இல்லாவிட்டால், அதே தெருவில் நடக்கும் இந்து தீட்டாகி விடுவானாம். பூனாவில் தீண்டத்தகாதவர் எங்கு போனாலும் தன் கழுத்தில் மண்கலயம் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையும் இருந்தது....

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’ ஆவணப் படமாகியுள்ளது ‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது…1927இல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை! அந்த வரலாறுதான் பீமா கோரேகாவ் யுத்தம்! மகாராஷ்டிர மாநிலத்தை பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியில், மஹார் இனத்தவர்கள் சாதியரீதியான கொடுமைகள் பலவற்றைச் சந்தித்தனர். அப்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்களின் ராணுவத்தில், மஹார் இன மக்கள் சேர, அவர்களுக்குச் சமூகத்தில் கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. ஆனால், அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமேயான மரியாதையாக இருந்தது. இந்நிலையில், ஆங்கிலேயர்களுடன் இணைந்து, பேஷ்வாக்களை (மராட்டியப் பார்ப்பனர்) எதிர்த்தார்கள் மஹார் மக்கள். 1818-ம் ஆண்டில் பீமா கோரேகாவ் எனும் இடத்தில் தோராயமாக 25 ஆயிரம் பேஷ்வா வீரர்களை வெறுமனே 500 மஹார் இன...

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

பட்டியல் இன பழங்குடி மக்களுக்குப்  பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நமது திராவிடர் விடுதலைக் கழகமும் இணைந்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு...

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

பார்ப்பனியம், இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஊடாக மனித உணர்வுகளில்  நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜாதிய வேர்களை எதிர்க்க வேண்டும். ஆதித் தமிழ்ச்சமூகம் சாதி, மத அடையாளமற்றதாக இருந்தது. இடையில் புகுந்த ஆரியப் பண்பாட்டை தமிழ்ச் சமூகம் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் தமிழகத்தில் நான்கு வருணமுறை முழுமையாக இல்லை. சத்திரியர், வைசியப் பிரிவு தமிழகத்தில் கிடையாது. வேதத்திலும் சாதிகள் இல்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் இருந்த வருணாசிரமத்தை பார்ப்பனியம் சூழ்ச்சியால் கெட்டிப்படுத்தியது. வர்ணா சிரமத்தில் 4 பிரிவுகளுக்குள் ஏற்பட்ட இனக்கலப்பு, வாழ்ந்த இடம், தொழில் அடிப்படையில் சாதி முறை உருவானது. தமிழகத்தில் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்கள். தெலுங்கு, கன்னடம் பேசுகிறவர்கள் தமிழர்கள் இல்லை என்று சில அமைப்புகள் பிளவை ஏற்படுத்துகின்றன. பேசுகிற மொழியைவிட சாதி அடையாளமற்ற அல்லது சாதியற்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களையே தமிழன் என்பதற்கான அடையாளமாக முற்போக்குவாதிகள் பார்க்கிறோம். சாதியற்ற தமிழரையும், சமூகத்தையும் உருவாக்க முடியுமா? சாதி அற்ற...

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர் பூசிய விபூதியை அழித்து விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன். மத அடையாளங்களை தரித்துக் கொள்வது தனி உரிமை; அதைக் கட்டாயப் படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் நெற்றியில் விபூதி பூச மாட்டார் என்பது தெரிந்தும், அர்ச்சகர் பூசியபோது அதை மறுக்காமல் பண்பாடோடு எதிர்க் கட்சித் தலைவர் தடுக்கா மல் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, அதை அகற்றிக் கொண்டிருக்கிறார். அர்ச்சகர் விபூதி பூசி விட்டார் என்ப தற்காக அதை அழிக்கவே கூடாது என்கிறாரா அமைச்சர்? விபூதி, குங்குமம் வைக்கும் பழக்கமுள்ள அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், வைணவக் கோயிலுக்குப் போகும்போது அய்யங்கார் அர்ச்சகர் அவரது நெற்றியில் நாமத்தைப் போட்டு விட்டால், அதுவும் இந்துமத புனித சின்னம்தான் என்று அமைச்சர் அதை அழிக்காமல் அதே நாமத்தோடு பவனி வருவாரா? வடகலை நாமம், தென்கலை நாமத்தை மறுக்கிறது;...

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு  ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை  முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

நாள் :  30.6.2018, 1.7.2018 (சனி, ஞாயிறு) இடம் :  மக்கள் மன்றம், காஞ்சிபுரம் முதல் நாள் 30.06.2018 சனிக் கிழமை காலை 9.30 மணி     :     தோழர்கள் அறிமுகம் காலை 10 – 1 மணி   :     பிரின்ஸ் கசேந்திர பாபு  (கல்வி -நம்முன் உள்ள சவால்கள்) மதியம் 1 – 2 மணி    :     உணவு இடைவேளை மதியம் 2- 3.30 மணி  :     தேவா  (மாணவர்களின் திறன் மேம்பாடு) மாலை 4- 5.30 மணி   :     விடுதலை இராசேந்திரன் (தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை) மாலை 5.30 – 6.30 மணி     :     இன்றைய பயிற்சி வகுப்பு குறித்து தோழர்கள் கலந்துரையாடல் இரண்டாம் நாள் : 01.07.2018 ஞாயிறு காலை 10 – 1.00 மணி      :     மருத்துவர் எழிலன்  (மூட நம்பிக்கை) மதியம்  1...

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல; விடுதலை இயக்கம் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜூன் 16, 2018இல் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இந்த அமைப்புக்கு நிதி திரட்டிய தாகவும், அதில் உறுப்பினர்களாக இருந்து சுவிஸ் நாட்டில் செயல்பட்ட தாகவும், திரட்டிய நிதியில் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டி 13 ஈழத் தமிழர்கள் மீது கடந்த ஜனவரி 2018இல் சுவிஸ் நாட்டில் வழக்குப் பதிவு செய்தது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் போர் நடவடிக்கை களை மேலும் தீவிரமாக்கவும், நீண்ட காலம் போர் நடப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் குற்றப் பத்திரிகை கூறியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் பெரும் பொருட் செலவில்...

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முடிவெய்திய ‘கலை இலக்கிய ஆளுமைகள்’ கே.பி.பாலச்சந்தர், டி.ஏ. விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவு, ஜூன் 15ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கே.வி.பி. அரங்கில் மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமையில் நடந்தது. க.மலர்விழி வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் நினைவு சொற்பொழிவாற்றினார். மாவட்ட தலைவர் சந்தானம், முடிவெய்திய கே.பி. பாலச்சந்தர், டி.ஏ.விசுவநாதன் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். முன்னதாக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை பொருளாளர் வெ. கண்ணன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21062018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

நாள் :  23, 24 ஜூன் 2018 இடம் :  ஏற்காடு, சேலம் மாவட்டம். 23.06.2018 சனிக் கிழமை காலை 10.00 மணி    :     தோழர்கள் அறிமுகம் காலை 11.00 மணி    :     விடுதலை இராசேந்திரன் (பெரியார்- அன்றும்’ இன்றும்) மதியம் 1.00 மணி     :     உணவு இடைவேளை மதியம் 2.00 மணி     :     வீரா கார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவமும் – பெரியாரும்) மாலை 3.30 மணி     :     தேனீர் இடைவேளை மாலை 3.45 மணி     :     கொளத்தூர் மணி (இந்துத்துவம் – பெரியார் – அம்பேத்கர்) மாலை 6.00 மணி     :     தனித் திறமை (பேச்சு பயிற்சி, வீதி நாடகம்) இரவு 8.30 மணி  :     இரவு உணவு இரவு 9.15 மணி :     கலந்துரையாடல் 24.06.2018 ஞாயிறு காலை 7.00 மணி     :     பால்.பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை...

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை குறைந்துவிட்டது என்று கூறப்படும் நிலையில், 55 சதவிகித வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டதே இதற்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.2017-18 நிதியாண்டின் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 960 கோடி குறைந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிதிக் குழுவுக்கு வழங்கியுள்ள விவரங்களின் படி, பொதுத்துறை வங்கிகளின் மேற்கூறிய செயற்படா சொத்து மதிப்பில் வெறும் 27 சதவிகித மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் எனவும் சுமார் 55 சதவிகித அளவுக்கான கடன்கள், வங்கிகளே பார்த்து தள்ளுபடி செய்து விட்டால் ஏற்பட்ட மதிப்பு குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது. வராக் கடன் மீட்பு நடவடிக்கை மூலமாக ரூ. 41 ஆயிரத்து...

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,...

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும் சட்டசபையில் அறிவித் துள்ளார். இதன் பின்னணி உள்நோக்கம் குறித்த ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து அந்த பதிவில், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா? அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலை யானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.  ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது, ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம்...

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல;  இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத் தமிழர் களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்...

பெரியாரியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

பெரியாரியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

பெரியாரியல்_பயிலரங்கம் #பெரியார்_அம்பேத்கர்_இன்றும்_தேவை_ஏன்? – தோழர்கொளத்தூர்மணி #திராவிடர்_இயக்க_வரலாறு– தோழர்விடுதலைஇராசேந்திரன் #பெரியாரும்_பகுத்தறிவும் – தோழர் மடத்துக்குளம் மோகன் #பெரியாரியல்_பயிலரங்கம்_ஏன்..? – தோழர் வெள்ளிங்கிரி வருங்கள் தோழர்களே……… நாள்:15-07-2018,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம்:அருள்ஜோதி உணவக அரங்கம் நஞ்சேகவுண்டன் புதூர் பொள்ளாச்சி #அம்பேத்கர்_பெரியாரை கற்போம் …… பரப்புவோம்…….. பேச :9842487766,9976086033

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

“முக்கிய வேண்டுகோள் !” – கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி. வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் ! Pபட்டியல் இன பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க...

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

மதுரை முருகேசன் – வாசுகி இல்லத் திறப்பு – 27052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  28052018 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது – ஆர்ப்பாட்டம்  சென்னை 29052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்  30052018 மணப்பாறை பொதுக்கூட்டம் பெரியார் சிலை திறப்பு வெங்கடசமுத்திரம் 02062018 ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016 கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018  

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக்காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது.பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். தோழர்.சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் , கிருஷ்ணன், மனோஜ்,ராஜேந்திரன் ஆகியோருக்கு கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி பயணாடை அனிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக்கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,சரஸ்வதி,சித்ரா ஆகியோரை வாழ்த்தி...

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு ஆர்வத்தைத் தூண்டிய பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு பதிப்பு: 2018 ஜூன் 11 10:16 தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009...

வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 02062018

வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 02062018

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை, 2-6-2018 சனிக்கிழமை காலை 10-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்துவைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் அவர்களின் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுவந்த நிலையிலும் (வழக்குரைஞர் திருமூர்த்தி அவர்கள்  உயர்நீதி மன்றத்தில் வழக்காடி இருமுறையும் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார்) மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் திருமதி.மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ...

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி படுகொலை – தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில்  சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தரும் செய்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  வைரவேல், பள்ளிபாளையம்  முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர்  காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர்  முத்துக்குமார், காரைக்குடி  பெரியார் முத்து, வினோத் ராஜா, ...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

ந.பிரகாசு எழுதிய ‘அய்.பி. எல்.லுக்கு தமிழ் நாட்டில் தடை கேட்டது அவமானமா’ கட்டுரை அரிய தகவல்களைத் தந்தது. யாரையும் தொடாமல் விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதுதான் பார்ப் பனர்கள், இந்த விளையாட்டை அதிகம் நேசிக்கக் காரணம் என்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது. கிரிக்கெட்டையும் அரசியலையும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட் போருக்கு, சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு விளையாட்டை தமிழ்நாட்டில் விளையாட அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கே அவமானமில்லையா என்று கட்டுரையாளர் அளித்த பதில் மிகவும் சிறப்பு. – மணிவண்ணன், திருச்சி உச்சநீதிமன்ற தலைமை பார்ப்பன நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ‘நிமிர்வோம்’ இதழில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது. அருணாசலப் பிரதேச ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது முதல்வராக இருந்த காலிக் கோ புல்லின் 60 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை  செய்து கொண்டதும், அந்தக் கடிதத்தில் ஆட்சிக்கு ஆதரவாக...

பதாகைகளோடு வருகிறார்கள், பாலச்சந்திரர்கள் – அறிவுமதி

பதாகைகளோடு வருகிறார்கள், பாலச்சந்திரர்கள் – அறிவுமதி

அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும்   இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்!   அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ… இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது… உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது!   ஆம்… அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான ‘ஆண் தாய்’ அப்பா! அதனால்தான் சொல்கிறேன்… நான் மாணவனாக இருந்திருந்தால் என் மார்பில் மதிப்பெண்களுக்கான பதக்கங்கள் பார்த்திருப்பாய்! நான் மானமுள்ள மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள் பார்க்கிறாய்!...

புராணங்களிலும் வேதங்களிலும் அறிவியல் இருந்தது என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்க்காமல் அறிவியலாளர்கள் மவுனம் சாதிக்கலாமா? புராணப் புரட்டுகளுக்கு அறிவியல் முலாம்

புராணங்களிலும் வேதங்களிலும் அறிவியல் இருந்தது என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்க்காமல் அறிவியலாளர்கள் மவுனம் சாதிக்கலாமா? புராணப் புரட்டுகளுக்கு அறிவியல் முலாம்

“கோட்சேயும் சாவர்க்கரும் இந்தியா வில் ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள்!” “ஐன்ஸ்டீனின் சார்பு நிலை கோட்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.” “ஆரியர்களின் தாயகமான வட துருவம் பீகாருக்கும் ஒரிசாவுக்கும் நடுவில் இருந்தது.” “பசுவை வழிபடுவதும், கோமாதா வழிபாடும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஆகப்பெரிய பங்களிப்பை செய்யும் சக்தியுடையது” – இது போன்ற பிதற்றல்களை, பாரத வரலாறு என்றும், உலக வரலாறு என்றும் நமது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மதவாதத் திட்டம். இவற்றின் அடிப்படையில் பள்ளி வரலாற்றுப் பாடங்களைத் திருத்துவதற்கு முன் தயாரிப்பாக, மோடியின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, 14 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். இந்த கமிட்டியின் தலைவரான கே.என். தீட்சித் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர். ராய்ட்டர்ஸ் அம்பலபடுத்தியது 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி பற்றிய...

அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் ட ம.கி. எட்வின் பிரபாகரன்

அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் ட ம.கி. எட்வின் பிரபாகரன்

உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து, துப்பாக்கி, தடி, கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பல கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை போராட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது “ஹிந்து யுவவாஹினி” என்ற சங்பரிவார் அமைப்பாகும் தாக்குதலின் பின்னணி ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் என்பது, ஹிந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதற்கு நடத்தப்படும் பயிற்சிகளாகும். இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகின்றன. ஷாகா பயிற்சிகளால், பல வன்முறைகள் நாட்டில் நடந்துள்ளன. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், 1976– ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அடித்து நொறுக்கப்பட்டது. இத்தகைய மதவெறி யூட்டும் ஷாகாக்களை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடத்த, பல்கலைக் கழக துணைவேந்தர் தாரிக் மன்சூரிடம் அனுமதி கோரப்பட்டது....

பார்ப்பன மரபை எதிர்த்த –  உலகம் கொண்டாடும் நாட்டியக் கலைஞர்

பார்ப்பன மரபை எதிர்த்த – உலகம் கொண்டாடும் நாட்டியக் கலைஞர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நடன-இசைக் கலைஞர் பாலசரஸ்வதி. பார்ப்பனரல்லாத சமுதாயத்தில் பிறந்தவர். வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை எதிர்த்தவர். இன்று அவரது மாணவர்கள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, பாலசரஸ்வதியின் புகழை உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாலசரஸ்வதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ நூலாக எழுதியவரும் அவருடைய மருமகனும் (மகளை மணந்தவர்) மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட்டுடன் ஒரு பேட்டி.   பாலசரஸ்வதி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? 1968-ல் அமெரிக்காவின் வெஸ்லீயன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந் தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு நாடகத்தின் மீது ஆர்வம். கூடவே, மற்ற கலை வடிவங்கள் மீதும் மற்ற கலாச்சாரங்களின் இசை வடிவங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்தது. எனது ஆசிரியர்களில் தஞ்சாவூர் ரங்கநாதனும் ஒருவர். பாலாம்மாவின் தம்பி அவர். ஒருமுறை ரங்கநாதனைப் பார்க்க அமெரிக்காவுக்கு பாலாம்மா வந்திருந்தார். அப்போதுதான் அவரைச்...

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சமதர்ம அறிக்கையை 1931லேயே ‘குடிஅரசு’ வெளியீடாக பெரியார் வெளியிட்டார். அதற்கு பெரியார் எழுதிய முன்னுரையில் வேறு நாடுகளில் இல்லாத இந்தியாவில்   கூடுதலாக ஜாதி என்ற அமைப்பு இருப்பதை எடுத்துக்காட்டி ஜாதி முதன்மையானதாகவும் பணக்கார – ஏழை தத்துவத்துக்குக் கோட்டையாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளார். பெரியார் தீட்டிய முன்னுரை: தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு  உண்மையாகும். இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டு களுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும்...

தேர்தலைப் புறக்கணித்தார்; இயக்கத்தால் சாதித்தார்!

தேர்தலைப் புறக்கணித்தார்; இயக்கத்தால் சாதித்தார்!

‘பொதுவுடைமையரின் வருங்காலம்?’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் ஏன் வளராமல் போயிற்று என்ற விரிவான ஆய்வை விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது அந்நூல். கம்யூனிஸ்ட் கட்சி என்பது தேர்தல் வெற்றி தோல்விக்கானது அல்ல; அது ஒரு இயக்கம் என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார், தோழர் தா. பாண்டியன். “கம்யூனிஸ்ட் கட்சி எந்த வழியிலும் எவருடன் சேர்ந்தாவது விரைவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடும் கட்சி அல்ல என்பதை உணர்த்த வேண்டும். அதாவது இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்வது விரிவானது. அதற்குப் பெயர்தான் இயக்கம்” என்று வலியுறுத்தும் தோழர் தா. பாண்டியன், இதற்கு உதாரணமாக பெரியாரைக் குறிப்பிடுகிறார்: “திராவிடர் கழகத்தை அமைத்த தந்தை பெரியார், தன் இயக்கம் தேர்தலில் போட்டியிடாது என அறிவித்தவர். மூட நம்பிக்கை ஒழிப்பு உயர் ஆதிக்க சாதி எதிர்ப்பு...

ஜாதி – மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது – ஜெயராணி

ஜாதி – மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது – ஜெயராணி

கல்வி, பொருளாதார, அரசியல் தளங்களில் பெண்கள் தமக்கான இடத்தைச் சம அளவில் பெறுவதென்பது அவர்களுக்குச் சுதந்திரத்தை உறுதி செய்து தரும். அவ்வாறே தந்து  கொண்டிருக்கிறது. ஆனால் சமத்துவத்தை? இம்மூன்று நிலைகளிலும் அடைந்த விழிப் புணர்வும் முன்னேற்றமும் பெண் களுக்குச் சமத்துவத்iதை உறுதி செய்து தர முடியவில்லை. அது சமூகப் புரட்சியால் மட்டுமே சாத்தியப்படும். நவீன இந்தியாவின் பெண்கள், முன்னேற்றத்தின் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கும் காலமிது. கடந்த தலைமுறைகளைவிட பெண்கள் அதிக அளவில் கற்றறிந்தவர்களாக இருக்கின்றனர். தம் தாய், தாயின் தாயைவிடப் பரவலாகப் பொருளாதார சுதந்திரம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அன்றிருந்ததைப்போல வீடுகளுக்குள் முடங்கி இல்லாமல் சுதந்திரமாக வலம்வர முடிகிறது. தம் தேவைகளை, பிரச்னைகளை, கருத்துக்களை உரக்கச் சொல்லும் உரிமைகள் சாத்தியப்பட் டிருக்கின்றன. ஆனால் பண்பாட்டு ரீதியாகப் பெண் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் மாறியிருக்கிறதா என்றால் இல்லவே இல்லை என்பதே கசப்பான பதில். இத்தனை முன்னேறிய காலத்திலும் பெண் என்பவர், அச்சம், மடம்,...

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்   பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் அருணன்

ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவரது இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு தலைமை தாங்கும் பால பிரஜாதிபதி அடிகளார் ‘அய்யா’ வைகுண்டசாமி வழி வந்தவர்களை தனி மதமாக  அறிவிக்க வேண்டும்; அவர்கள் ‘இந்துக்கள்’ அல்லர் என்று வலியுறுத்தி வருகிறார் கருநாடகத்தில் ‘லிங்காயத்து’க்களை தனி மதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன் வைத்த கோரிக்கைக்காக ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். வைகுண்ட சாமிகளின் வரலாற்றை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறது இக்கட்டுரை. கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பூவண்டன் தோப்பு (சாஸ்தான் கோவில்விளை என்றும் சாமிதோப்பு என்றும் கூறுவர்) எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டில் பிறந்தவர் வைகுண்ட சுவாமிகள். இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது உயர்சாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை தாழ்ந்த சாதியினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றிருந்தது. எனவே இப்படிப் பெயர்...

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும்  காவி பயங்கரவாதிகள் –  செ.கார்கி

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள் – செ.கார்கி

இந்திய நீதித்துறைக்கு இது இருண்ட காலம். குஜராத் கலவரத்தில் இருந்து தொடங்கி கொலை வெறியாட்டம் நடத்திய காவி பயங்கரவாதிகள் அனைவருக்கும், மோடி பதவியேற்றதில் இருந்து, விடுதலை அளிக்கும் பணி வெகு விரைவாக நீதிமன்றத்தின் துணையுடன் நடந்து வருகின்றது. முன்னதாக குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மை வெளியே கசியவே மோடி சோராபுதீனை போலி மோதல் மூலம் கொல்ல வன்சாரா என்ற அதிகாரியை நியமித்தார். வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் கொன்றது மட்டும் அல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டுக் கொன்றார். இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி...

சுயமரியாதையும்-பொதுவுடைமையும்

சுயமரியாதையும்-பொதுவுடைமையும்

காரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே சமதர்ம கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை அவரது பேச்சு, எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியவுடன், பொதுவுடைமை – சுயமரியாதைக் கொள்கை களில் உறுதியுடன் இருந்த தோழர் சிங்காரவேலர் தயாரித்து, பிறகு விவாதங்கள், திருத்தங்கள் செய்யப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை 1933இல் பெரியார் வெளியிட்டதோடு சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப்’ பிரிவு ஒன்றைத் தொடங்கி நாடு முழுதும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களை தோற்றுவித்தார். ‘சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க பெரியார் முடிவெடுத்தபோது...

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து  கழகம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம்  23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில்  : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

பெங்களூரில் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துத்துவ எதிர்ப்பாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் – அவரது இந்து எதிர்ப்பு கருத்து களுக்காகவே சுடப்பட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக நவீன் குமார் மற்றும் அவரது மத்தூரைச் சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. நீதிபதி முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டு கோள்படி வெளியிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டால் தேடப் படும் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடும் என்பதுதான் காரணம். கைது செய்யப்பட்ட நவீன்குமார் என்பவர் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட வில்லை. ஆனாலும் அவரது மனைவி சி.என்.ரூப்பா, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தந்த வாக்குமூலத்தில் தனது கணவர் ‘சந்தான் தர்ம சன்ஸ்தா’ என்ற அமைப்போடு தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார். “2017ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய...

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு – நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.: நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட் டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண...

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்