தபோல்கர் கொலை: மதவெறியர் கைது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது
2013ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கரை சுட்டிக் கொன்ற ‘சிவசேனை’ முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா வில் நடப்பது இந்துத்துவ பாசிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சிவசேனை ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து கருநாடக அரசு மேற்கொண்ட தீவிரப் புலனாய்வு காரணமாக இதுவரை சிக்காமல் பதுங்கி நின்ற ‘சங்பரிவார்’ குடும்பங்கள் சிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய படுகொலைகளை நடத்தும் ‘சங்பரிவார்’ கொள்கையாளர்கள் ஒவ்வொரு வன்முறை நிகழ்த்தும் போதும் ஏதேனும் ஒரு புதிய இந்துத்துவா பெயரை சூட்டிக் கொள்வது வழக்கம். காந்தி கொலையில் கோட்சே கும்பல் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது. அவரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சார்ந்த கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரியில் கோலாம்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்துத்துவா எதிர்ப்பாளர். மாவீரன் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் நூலாக எழுதியவர். 2015 ஆகஸ்ட்டில் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் துணைவேந்தரும் சிறந்த இலக்கியவாதி யுமான முனைவர் கல்புர்கி...