தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’
குலக் கல்வித் திட்டத்தை தன்னிச்சையாகத் திணித்த இராஜ கோபாலாச்சாரி, இராமானுஜர் யாரைக் கேட்டு தனது சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று திமிரோடு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. மோடியின் அக்னி பாத் என்ற இராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை இராஜாஜி, ஹிட்லர் பாணியில் கொண்டு வந்தார். இப்போது திரும்பிப் பெற முடியாது என்று திமிரோடு பேசுகிறது, ஒன்றிய ஆட்சி; நாடே பற்றி எரிகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளோடு (அதையும் முடிக்காத நிலையில்) கற்றலுக்கு மூடு விழா நடத்தும் வடநாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் நம்பி இருக்கும் ஒரே வேலை வாய்ப்பு இராணுவத்தில் அடிமட்ட சிப்பாய்கள் அல்லது சேவை செய்யும் பணியாட்கள் வேலை தான். அவர்களின் ஒற்றை வேலை வாய்ப்பையும் குலைக்கும்போது பதற்றமும் எதிர்ப்பும் பற்றிக் கொண்டு விட்டது. 2016-2019 நிலவரப்படி, இராணுவத்தில் சேருவதில் இந்தியா விலேயே முதலிடம் வகிப்பது உ.பி. (18,906 பேர்), தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மற்றும் நேபாளத்தைச் சேர்த்து...