Author: admin

பெங்களூரில் கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழா மாட்சி

கருநாடக மாநில திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூர் சித்தார்த்த நகரில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 17.1.2015 அன்று நடந்த விழாவில் தோழர் வே.மதி மாறன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று உரையாற்றினார். விழாவுக்கு சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தோழர்கள் சரவணன், இராமநாதன், சிவக்குமார், இலட்சுமணன், ‘கற்பி-ஒன்றுசேர்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வே. மதிமாறன் தனது உரையில், தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்; சித்திரை அல்ல என்பதை ஆதாரங்களோடு எடுத்து விளக்கி, பெரியார்-அம்பேத்கர், ஜாதி இந்து மத பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை விரிவாக விளக்கி உரையாற்றினார். கழகத் தோழர் இல. பழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 21012016 இதழ்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

ஓம் சிவாய நம!

ஓம் சிவாய நம!

அது, 15,000 விஞ்ஞானிகள் கூடியிருந்த மாநாடு. நடந்த இடம் மைசூரு பல்கலைக்கழகம். உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூடியிருந்தார்கள். பல ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. அதிலே ஒன்று விஞ்ஞானிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு ‘புண்’பட்டு விட்டது என்றுகூட சொல்லலாம், போங்க! “உலகத்திலேயே தலைசிறந்த சுற்றுச்சூழல்வாதி யார் தெரியுமா? எங்கள் சிவபெருமான்தான்” – இப்படி ஒரு ‘ஆராய்ச்சி’யை அள்ளிவிட்டு அகிலத்தையே குலுங்க வைத்திருப்பவர் அகிலேஷ் பாண்டே என்ற பார்ப்பனர். மத்திய பிரதேசத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியரான அவர் தனது கடுமையான ஆராய்ச்சியின் வழியாக கண்டறிந்த அரிய தகவல்கள் இதோ! “சிவபெருமான் தலையில் கங்கை இருக்கிறது; அந்த கங்கை நீரை சுத்தப்படுத்தும் வேலையை சிவபெருமானே செய்கிறார். சுத்தப்படுத்தியதோடு நிற்கவில்லை; அந்த நீரை மக்களுக்கும் உயிரினங்களுக்கும் விநியோகம் செய்தவரும் அவர்தான். இவரைவிட சிறந்த ஒரு சுற்றுச் சூழல்வாதி யார் இருக்க முடியும்?” 15,000 விஞ்ஞானிகள் நிறைந்த சபையில் இப்படியெல்...

எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான் – இளவேனில்  

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன ‘மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? ‘இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா? ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான்...

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார் வாழ்வின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து காட்டிய ”தாதம்பட்டி இராஜூ”, தனது 94ஆவது வயதில் சென்னையில் 19.01.2016 அன்று காலை முடிவெய்தினார்.. தாதம்பட்டி இராஜூ, தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மருமகன் ஆவார். ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் செல்லா என்ற நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். செல்லா,மறைந்த ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி ஆவார். இளம் வயதில் கப்பற்படையில் பணியாற்றிய அவர், 1946இல் நடந்த கப்பற் படை எழுச்சிப் போராட்டத்தில்பங்கேற்றார். பிறகு, பெரியார் வாழ்ந்த காலத்தில் ‘விடுதலை’ நாளேட்டின் அலுவலக மேலாளராக 10 ஆண்டு காலம் பணிபுரிந்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வடமாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிட தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், வடமாநிலங்களுக்கு சென்றபோது, அவருடன் சென்றவர்களில் ஒருவர் தாதம்பட்டி இராஜு.ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வயதுமுதிர்ந்த நிலையிலும் இளைஞரைப்போல் தமிழகம் முழுதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது வழக்கம். 2003ஆம்...

பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு, தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர்...

பெரியாரியல் பேரொளி தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் முடிவெய்தினார்

கழகத் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் ”பட்டுக்கோட்டை சதாசிவம் !” பெரியார் கொள்கைக்காகவே வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் எனும் சதாசிவம் (76), ஜனவரி 19, 2016 பிற்பகல் 3 மணியளவில் தஞ்சை மருத்துவமனையில் கழகத் தோழர்களிட மிருந்து விடைபெற்றுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களோடு நெருக்கமாக வாழ்ந்து வந்தார் சதாசிவம். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் தங்கி, அவ்வப்போது கழக நிகழ்ச்சிகளுக்கும் ஊருக்கும் சென்று வருவார். கழகத் தோழர்கள் உடல்நலிவுற்ற அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தனர். தஞ்சை நகராட்சியில் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த செலவில் திராவிடர் கழகம் சார்பாக கிராமப் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்திய பெருமைக்குரியவர். இந்தப் பயணத்தின் வழியாக பல பேச்சாளர்களை உருவாக்கியவர். பரப்புரைத் திட்டங்களையும் மக்களிடம் சென்றடையத்தக்க வகையில் கருத்துகளை வடிவமைத்துத் தருவதிலும் ஆற்றல் மிக்கவர். கடும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கொள்கை மீதான உள்ள...

”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!

‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் ! (சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்) ‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’ இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை. நேரம் : மாலை 6 மணி. தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.

வினா… விடை…!

வினா… விடை…!

பழனி கோயிலில் பக்தர் தூக்கு போட்டு தற்கொலை; 2 ஊழியர்கள் பணி நீக்கம். – செய்தி என்னுடைய சாவுக்கு பழனி முருகன் தான் முழு காரணம்னு அந்த பக்தர் கடிதம் எழுதி வச்சிருந்தாருன்னா, அப்ப யாரை பணி நீக்கம் செய்வீங்க… சென்னை அயனாவரத்தில் உள்ள கோயிலுக்குள் வழிபட வந்த இந்து முன்னணி பிரமுகரின் தங்க சங்கிலி திருட்டு. – செய்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் தங்க நகை அணியக் கூடாது; பாதுகாப்புக்காக கவரிங் நகைகள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தீர்ப்பை பெற்று விடலாமே! யோசிங்க…. ‘இராமாயணம்’ ஒரு புனித நூல்; அந்தப் பெயரை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு ஆனால், அரசியல் மற்றும் தொலைக்காட்சி வர்த்தகங்களுக்கு இராமாயணத்தைப் பயன்படுத்தலாம். இது ‘பழக்க வழக்கம்’ என்பதால் நீதிமன்றம் தலையிடவே முடியாது. இராமரின் தயவினால் ஆட்சிக்கு வந்த மோடி, உடனே இராமன் கோயில் கட்ட தேதி அறிவிக்க...

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்

திருச்சியில் கழக செயலவை கூடுகிறது

திருச்சியில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 24.1.2016 ஞாயிறு காலை 10 மணிக்கு திருச்சியில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்கக் கோருகிறோம். இடம்: இரவி மினி ஹால், கரூர் புறவழிச் சாலை, திருச்சி. (கலைஞர் அறிவாலயம் அருகில்) பொருள் : கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் – கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல், புரட்சிப் பெரியார் முழக்கம் உறுப்பினர் சேர்க்கை. தோழமையுடன் கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 14012016 இதழ்

பம்மல் பொன். இராமச்சந்திரன் நன்கொடை

பம்மல் பொன். இராமச்சந்திரன் நன்கொடை

பெரியார் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மாநாடுகளைப் பாராட்டி, உணர்வாளர் பம்மல் பொன். இராமச்சந்திரன் கழகத்துக்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 14012016 இதழ்

சென்னையில்  கழக தலைமைக் குழு கூடியது

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக்கழக தலைமைக் குழு 7.1.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை கழக தலைமையகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை, கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் குறித்த மீளாய்வு, 27 சதவீத பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாத நிலை, அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரறிவாளன் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 24.1.2016 அன்று திருச்சியில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 2. ஏப்ரல் மாதம் அறிவியல் மன்றம் சார்பில் மதுரையில் 5 நாள் குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் நடத்தவும், கழகக் குடும்பப் பெண்களோடு சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் மகளிர் சந்திப்பு களையும், மாவட்டந்தோறும் குழந்தை களுக்கு ஒரு நாள் பயிற்சிகளையும்...

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின கருத்தரங்கம் மற்றும் முதலாம் ஆண்டு உரிமை முழக்க விழா 9.1.2016 காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் புத்தன் கலைக் குழுவினர் பறை இசையுடன் தொடங்கியது. முதல் நிகழ்வாக, ‘சுயமரியாதை பார்வையில் மாற்றுத் திறனாளிகள் – மானம் – மாண்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுயமரி யாதைக்கான விளக்கங்களை முன் வைத்து உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “உலகிலேயே சுயமரியாதை என்ற சொல் இந்த மண்ணில்தான் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தி, சுயமரியாதைக்காக மக்களை திரட்டியவர் பெரியார். உலகம் முழுதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சமத்துவத்துக்கும் உரிமைக்கும் போராடின. அதற்கான நியாயங்களை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் இந்த நாட்டில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதிக் காரனாகவும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக வும் உயிர் வாழ்வதை ‘தர்மமாக’ ஏற்றுக்...

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார். வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது. (தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள – 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில்...

காவல்துறையில் நுழையும் பிரித்திகாவுக்கு பாராட்டு

காவல்துறையில் நுழையும் பிரித்திகாவுக்கு பாராட்டு

திருநங்கை உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 1-1-2016 அன்று மாலை 6-00 மணியளவில், கோபி இராமாயம்மாள் திருமண மண்டபத்தில் மருத்துவர் எம். இராசேந்திரன் தலைமையில், தமிழர் உரிமை இயக்கத் தின் சார்பாக – பல தடைகளைத் தாண்டி காவல்துறையில் உதவி ஆய்வாளராகத் தேர்வு பெற்றிருக்கிற திருநங்கை பிரித்திகா யாஷினிக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் பாமரன், இயக்குநர் வ.கவுதமன், மாநில மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர். இராமாத்தாள், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழ்நாடு பி.யூ.சி.எல். பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன், தமிழினப் பாதுகாப்பு இயக்கத்தின் கி.வே.பொன்னையன், கொடிவேரிப் பாசனதாரர்கள் சங்கத் துணைத்தலைவர் அ.இரா.பிரதாபன், கோவை பொறியாளர் கு.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டுரை யாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமது உரையில், “திருநங்கையரில் சிலர்...

பிழையான தீர்ப்பு : உச்சநீதிமன்றம் ஒப்புதல்

பிழையான தீர்ப்பு : உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் – மத்திய அரசின் ஏ, பி போன்ற உயர் பதவிப் பிரிவுகளில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை என்ற உண்மைகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளில் குரூப்-ஏ பதவிக்கான பதவி உயர்வில் உச்சநீதி மன்றம் வழங்கிய பிழையான தீர்ப்பு – இப்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உச்சநீதிமன்றம், குரூப்-ஏ பிரிவுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. அதில் ரூ.5,700க்கு அதிகமாக ஊதியம் பெறுவோருக்கு இந்த பதவி உயர்வுக்கான விதி பொருந்தும் என்று கூறியது. இப்படி, ஒரு ஊதிய வரம்பை நிர்ண யித்தால், பதவி உயர்வுக்கான கதவுகள் அடைக்கப் பட்டுவிடும். இந்த தவறான தீர்ப்பால் கடந்த ஒராண்டு காலமாக பதவி உயர்வு பெற முடியாமல், பட்டியலினப் பிரிவினர் முடக்கப்பட்டனர். இப்போது மத்திய வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு...

வினா… விடை…!

வினா… விடை…!

இனி நவீன உடையணிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர உயர்நீதிமன்றம் விதித்த தடை அமுலுக்கு வந்தது. – செய்தி ஏதோ பழக்கத்தின் காரணமா அப்பப்போ கோயிலுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களையும் வரவிடாம தடுத்திட்டாங்க… இதுவும் நல்லதுக்குத்தான். இந்திய சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை. – மோகன் பகவத் ‘இந்து’ சமூகம்னு உண்மையை சொல்றதுக்கு இவருக்கே வெட்கம்; அதனால திடீர்னு இந்திய சமூகத்துக்கு தாவிட்டாரு… கோயில் வழிபாடு என்பதே ஆகமம்தான்; சிலைகள் அல்ல. – ‘இந்து’ ஏட்டில் பார்ப்பனர் கடிதம் ஆக, ஆகமம் பின்பற்றப்படாத கோயில்கள், அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் கோயில்களே இல்லை. அப்படித்தானே? வேதங்கள், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன. – திருப்பதியில் பிரணாப் முகர்ஜி பேச்சு அட, வேத காலத்திலேயே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி நாடுகள் எல்லாம் வந்துருச்சா? சொல்லவே இல்ல! அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. – இல. கணேசன் அரசியலமைப்பு...

கழகத் தோழர் மல்லை கண்ணன் முடிவெய்தினார்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர், ந.கண்ணன் உடல்நலக் குறைவால் 01.01.2016 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வு 02.01.2016 அன்று நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி மற்றும் மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர், தமிழ்ப் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இறுதியாக நண்பகல் 12.30 மணியளவில் மல்லசமுத்திரம் பொதுமயானத்தில் கண்ணனின் உடல் எரியூட்டப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறந்த களப்பணியாளராக செயல்பட்டு வந்த கண்ணன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கு மட்டுமின்றி திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் மிகுந்த இழப்பு. கடைசியாக நடந்த சேலம் கழக மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தோழர்களிடம் உரையாடினார். அதுவே...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவைச் சென்னை சட்ட மேலவை யில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வர விடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மவுனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று ‘நம்நாடு’ நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளை யும் அழைத்துக் கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர் களின் உரைகள் ‘நம்நாடு’ நாளிதழில் தொடராக...

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

இந்து அறநிலையத் துறை, பல ‘புரட்சி’களை நடத்தி வருகிறது. “அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் மிஞ்சி நிற்பது கடவுள் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அம்மா நம்பிக்கையா?” என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. கேரள நம்பூதிரிப் பார்ப்பன சோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி அறநிலையத் துறை தொன்மையான கோயில்களை இடித்து வருகிறதாம். நாமக்கல் மாவட்டம் திருமான்குறிச்சியில் உள்ள 100 ஆண்டுகால பழமையான மருதகாளி அம்மன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள 330 ஆண்டு பழமையான பெரிய நாயகி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்திலுள்ள மாரியம்மன் கோயில் என்று கோயில்களை அறநிலையத்துறையே இடித்துத் தள்ளுகிறது. இந்தக் கோயில்கள் ‘அபசகுணமாக’ இருப்பதாக கேரள பார்ப்பன ஜோதிடர் கூறிய ஆலோசனைப்படி இந்த இடிப்பு நடக்கிறதாம். ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் இப்படி இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் ‘அபசகுணம்’ என்ற காரணத்தைக்...

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். இந்து தமிழ் நாளேட்டில் (3.1.06) இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி. 1970-ல் இந்தச் சட்டப்பிரிவு திருத்தப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையிலான நியமனம் இரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (சேஷம்மாள் வழக்கு) அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதசார்புத் தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்தது. ஆனால் எந்த சைவ மற்றும் வைணவக் கோயில் களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. அதே சமயத்தில் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும்...

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது. ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். 1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை...

தமிழக அரசின் பொய் வழக்கில் கொளத்தூர் மணி விடுதலை

தமிழக அரசின் பொய் வழக்கில் கொளத்தூர் மணி விடுதலை

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு காட்டுக்குள் கடத்தி சென்று வைத்திருந்தார். அப்போது ராஜ்குமாரை மீட்க ‘தமிழக அரசின் தூதுவர்களாக’ அந்த ஆண்டு நவம்பர் மாதம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், பேரா.கல்யாணி முதலியோர் காட்டுக்குள் சென்று ராஜ்குமார் குழுவினரைப் பத்திரமாக மீட்டு வந்தனர். ‘நடிகர் ராஜ்குமார் மீட்புக்கு செல்லவேண்டாம்’ என்ற தனது அறிவுரையை மீறி சென்றதால், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, கொளத்தூர் மணியிடம் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதுவரைத் தனித் தனியாக செயல்பட்டு வந்த, ஆனூர் ஜெகதீசன் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்து இயங்கிவந்த பெரியார் திராவிடர்க் கழகம், திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் நடத்திவந்த தமிழ்நாடு திராவிடர்க் கழகம், புதுவையில் லோகு. அய்யப்பன் தலைமையில் இயங்கிவந்த இராவணன் படிப்பகம், தூத்துக்குடியில் பால் பிரபாகரன் வழி நடத்தி வந்த...

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சி இயக்கங்களைச் சார்ந்த ‘தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம்’ வேண்டுகோள் வைத்துள்ளது. 7 தமிழர்கள் மட்டுமல்லாது சிறையில் நீண்டகாலம் வாடும் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியது. அண்மையில் வெளி வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தப் பிரிவை பயன்படுத்தும் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது என்றும், கூட்டியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் ஜன.4ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டியக்கம் சார்பில் தோழர்கள் வேல் முருகன், தியாகு செய்தியாளர்களிடம் முன் வைத்த அறிக்கை : இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக் குமார் ஆகிய...

ஆடைக் கட்டுப்பாடு

ஆடைக் கட்டுப்பாடு

கோயில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்திருக் கிறது மதுரை உயர்நீதிமன்றம். இனி கோயிலுக்கு வரும்போது வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தா, புடவை போன்ற உடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். நவீன உடைகளில் அதாவது ஜீன்ஸ், டீ சட்டை, அரைக் கால் டிரவுசர், ‘லெக்கின்ஸ்’ போன்ற உடைகளில் கோயிலுக்குள் வரக் கூடாது என்று தடை வந்து விட்டது. ‘பக்தர்களுக்கு ஆடைகள் கட்டுப்பாடு பற்றி ஆகமங்களில் ஏதேனும் விதி இருக்கிறதா?’ என்று கேட்டார் ஒரு தோழர். அதற்கு ‘ஆகமங்கள் அர்ச்சகர் களுக்கும் கோயில்களுக்கும் தான்’ என்றார் சிவாச்சாரி. “சட்டை இல்லாமல் திறந்த மேனி யோடு பூணூல் வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். அதுவும் ஆண்களாக ஒரே ‘குலத்தவராக’ இருக்க வேண்டும்; அப்படித்தானே” என்று எதிர் கேள்வி போட்டார் தோழர். அதாவது பக்தர்களுக்கு மட்டும் ஆடை அணிவதில் கட்டுப்பாடு; அர்ச்சகர்களுக்கு ஆடை இல்லாத கட்டுப்பாடு; அதேபோல் கடவுள் சிலைகளுக்கும் ஆடை இல்லாத கட்டுப்பாடுதான்; நிர்வாணமாக நிற்கும்...

மக்கள் பேராதரவுடன் சித்தூரில் கழகக் கூட்டம்

10-1-2016 ஞாயிறு அன்று மாலை சேலம் மாவட்டம் சித்தூர் சந்தைத் திடலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் (மேற்கு ) மாவட்டத் தலைவர் கு.சூரியக் குமார் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுத் தோழர்களின் பறைமுழக்கம், தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்தூர் தோழர் இரா.ரகு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செய்லாளர் ஆதிமுரசு, ஆதித் தமிழர்ப் பேரவை மாவட்டச் செயலாளர் க.இராதாகிருட்டிணன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் உரையைத் தொடர்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவ்வூரில் கழகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். பெரும் திரளாகக் கூடிய பொதுமக்கள் கூட்டத்தின் இறுதிவரை இருந்து கூட்டத்தை, உற்சாகமாகக் கைதட்டியும், ஆதரவு குரல் எழுப்பியும் கவனித்தனர்....

கழக நாள்காட்டி தயார்!

2016ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டிகள் அழகிய வடிவில் தயாராகி விட்டன. காலண்டர் ஒன்றின் விலை: ரூ.60 தொடர்புக்கு: இராம. இளங்கோ, (வெளியீட்டு செயலாளர்) 9894962333 தபசி. குமரன்,  (தலைமை நிலைய செயலாளர்) 9941759641 பெரியார் முழக்கம் 31122015 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்டமன்ற உறுப்பினர்கள் இரு ந்தார்கள். அதில் காங்கிரஸ்கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக உறுதி கொடுத்த கட்சியை யும், வேட்பாளர்களையும் ஆதரித்தது. ஆந்திர காங்கிரஸ்தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி, என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி (K.M.P.P) விவசாயிகள் தொழி லாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலுக்கு...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி) கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530) 1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். 2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன். 3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான். 4) படையினால்...

2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!

2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பார்ப்பன கொத்தடிமையாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். முதல்வரானவுடன் வாஸ்து பண்டிதர் ஒருவரை முதல்வரின் ஆலோசகராகவே நியமித்துக் கொண்டார். முதல்வர் அலுவலகத்தை பல கோடி அரசுப் பணத்தைப் பாழடித்து வாஸ்து அடிப்படையில் மாற்றினார். இப்போது தனது சொந்த கிராமமான ஏரவெல்லி கிராமத்தில் 5 நாள் யாகம் நடத்தியிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000 பார்ப்பனர்கள் ஒன்றுகூடி, இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். உலக நன்மைக்காகவும் எதிரிகளை வீழ்த்தவும் நடத்தப்படும் இந்த யாகத்தின் பெயர் ‘ஆயுத சண்டி மகாயாகம்’. இதற்கு தனது சொந்தப் பணத்தையே செலவிடுவதாக முதல்வர் கூறுகிறார். யாகத்துக்கான செலவு ரூ.20 கோடி என்று ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ‘அக்னி குண்டத்தில்’ ஒவ்வொரு நாளும் பட்டுப் புடவைகள், அய்ம்பொன் ஆபரணங்கள், உணவு தானியங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆந்திர ஆளுநர் மற்றும் சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லாம் ‘யாக சாலை’க்கு வந்து பார்ப்பனர்களிடம் ‘ஆசி’ பெற்றார்களாம்....

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

இடஒதுக்கீடு, இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்குத்தான் நீடிப்பது என்று பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், மண்டல் பரிந்துரை அமுலாகி 20 ஆண்டுகள் ஓடிய பிறகும், மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக் கூட எட்ட முடியவில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டுமோ என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது. சென்னை அய்.அய்.டி.யில் படித்து வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல பட்டங்கள் வாங்கிக் குவித்து வைத்திருப்பவர் முரளிதரன் என்ற விஞ்ஞானி, அய்.அய்.டி. பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்வி கேட்டவர். அதன் காரணமாக சென்னை அய்.அய்.டி.யில் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நிர்வாகம் மறுத்துவிட்டது. அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே இந்த விஞ்ஞானி நுழையக் கூடாது என்று அய்.அய்.டி. இயக்குனராக இருந்த பார்ப்பன வெறியர் நடராஜன், நீதிமன்றத்தின் வழியாக தடையாணை வாங்கியிருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த விஞ்ஞானி, அவ்வப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக பிற்படுத்தப்பட்டோருக்கான...

ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்… பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் 2015இல் கழகம் கடந்து வந்த பாதை

ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு, எதிராக களம் கண்ட திராவிடர் விடுதலைக் கழகம், இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜாதியை எதிர்த்து, 2015ஆம் ஆண்டு முழுதும் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி முடித்திருக்கிறது. ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை இயக்கங்களைத் தொடர்ந்து ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அடுத்தகட்ட பரப்புரை நடத்தியது. பல்லாயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான மாநாடுகள்; மதவெறிக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் 2015இல் நிகழ்த்திய களப்பணிகளின் தொகுப்பு. ஜனவரி: ஜன.12இல் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கழகம் முன்னின்று நடத்தியது. காந்தியை கொலை செய்த கோட்சே பார்ப்பனருக்கு சங்பரிவாரங்கள் சிலை வைத்து பெருமை சேர்க்கக் கிளம்பின. இதை எதிர்த்து கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டை கழகம் ஈரோட்டில் நடத்தியது...

குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தை காரணம் காட்டி சென்னையில் குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலர் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை நேரம் காலை 10 மணி நாள் 30122015

ஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்

ஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரி அரசில் அரசுச் செய லாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அரசுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை...

இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை. கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம். தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும்,...

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது. 2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது. 3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது.. 4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர்...

ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும்

ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும்

மனிதக் கழிவுகளும் செத்த உயிரினங்களும் நிறைந்த குப்பைகளை அள்ளும் பணியை துப்புரவுப் பணியாளர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் பொது சமூகத்துக்கு மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்குத் தெரியும் தானே! 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, மனிதக் கழிவோடு நேரடித் தொடர்புள்ள எந்த வேலையிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம்தான். ‘இந்தக் குப்பைகள் மனிதக் கழிவு அல்ல’ என அரசு வாதிடலாம். ஆனால், சாக்கடைகள், மலக்குழிகள், கழிவறைகள் எல்லாம் வெள்ள நீரில் கலந்து குப்பைகளில் தேங்கிவிட்ட நிலையில், எல்லாமே மனிதக் கழிவாகத்தான் மாறுகிறது. துப்புரவுப் பணி யாளர்கள் பலரும், மனிதக் கழிவையும் செத்த உயிரினங்களையும் கைகளால் அப்புறப் படுத்தியதாக உறுதியளிக்கிறார்கள் எனும்போது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு அரசு தண்டிக்கப்படுமா? சரி, இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்டது. யார் இதைச் சுத்தம் செய்வார்கள்?...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி) 8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்) 9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான...