புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர்.

பெரியார் முழக்கம் 20062019 இதழ்

You may also like...