புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

லோகுஅய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாண்டிசேரி திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் உ ள்ளிட்ட 91 பேர் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு, போலீசாரை தாக்கியதான வழக்கினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று 22.08.2019 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் வை. இளங்கோவன், ராஜவேலாயுதம் ஆகியோர் ஆஜராயினர். வழக்கறிஞர் துரைசாமியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்திரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

You may also like...