Tagged: சென்னை திவிக

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர். அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள்...

சென்னை விழாவில் கொளத்தூர் மணி பேச்சு பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது. காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம்...

கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார். “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: நாம் எந்த மொழிக்கும்  எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை...

மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...

17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா சென்னை 12012017

தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு … திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடத்தும் … 17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா … வாருங்கள் தமிழர்களாய் இணைந்து மனிதர்களாய் கொண்டாடி மகிழ்வோம் … நாள் : 12 : 01 : 2017 இடம் : வி . எம் . தெரு, இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு – FASR நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து 19 : 11 :2016 சனிக்கிழமையன்று காலை 10 : 00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ” கண்டன ஆர்ப்பாட்டம் ” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றுகிறார். சென்னை மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 03112016

முன்னாள் IAS அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் தன் கருத்தினை பதித்ததற்காக … பார்ப்பன இந்துத்துவ ஊடகம் தினமலர் அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தைகளாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச்சார்ப்பின்மை இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 03 11 2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது . அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை 05112016

வட சென்னை மாவட்டம் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க் கில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 05112016 அன்று நடைபெற்றது. கழக பாடகர் தோழர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார் . தொடர்ந்து தோழர் காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் .சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள் , கொள்கைகள் , இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மார்க் உதவியுடன் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும், நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து பேசிய முனைவர் அந்த அண்ணனுக்காகவும்...

அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016

இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார். கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது. இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.  

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சென்னை 05112016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் வடசென்னை மாவட்ட தோழர்கள் கழக பாடகர் தோழர் அருள்தாஸ் தலைமையில், தோழர் விஜயன் வரவேற்புரையில், தோழர் பாஸ்கர் தோழர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் 5:11:2016 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . நிகழ்காலத்திலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் பல்வேறு தலைப்புகளில் பொதுச்செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன், முனைவர். சுந்தரவள்ளி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை அருண், சிறப்புரையாற்றுகிறார்கள். தோழர் காவை. இளவரசன் வழங்கும் அறிவியல் நிகழ்ச்சி மந்திரமா – தந்திரமா மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தோழர் வேலு நன்றியுரையுடன்நிகழ்ச்சியை முடித்து வைப்பார் . அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். செய்தி : தோழர் உமாபதி, மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

இலங்கை துணை தூதரக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 26102016

யாழ் பல்கலை மாணவர்கள்  சிங்களக் காவல்துறையால் சுட்டுக் கொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகை – 400 பேர் கைது. கடந்த 2016 அக்டோபர் 21அதிகாலை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு...

தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் சுவரொட்டி

உண்மையை உரக்க சொன்ன தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து, அவருக்கு மிரட்டல் விடுக்கும் பார்ப்பனீய சக்திகளை எச்சரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

பாஜக தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 07102016

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மதவாத பா.ஜ.க வை கண்டித்து முற்றுகையிட்ட கழக தோழர்கள் 54 பேர் கைது ! 07.10.2016 காலை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தலைமையில் பாஜகவை கண்டித்து முழக்கமிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார்,காஞ்சீபுரம் ரவிபாரதி,மாவட்ட பொறுப்பாளர்கள் வேழவேந்தன்,ஏசுகுமார், பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கால் பந்தாட்டப் போட்டி – தெருமுனைக் கூட்டங்களுடன் மயிலையில் 4 நாள் பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

சென்னையில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை கால்பந்து போட்டிகளோடு இணைத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். கடந்த செப். 26ஆம் தேதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா, அறிவியல் பரப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளுடன் விழா எழுச்சியுடன் நடந்தது. இது குறித்த செய்தி: சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் , துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, கழகப் போராட்டங்களிலும், களப்பணிகளிலும் முன்னணியில் நிற்கும் தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி பார்ப்பனரல்லாத இளைஞர்களின் விளையாட்டாகத் திகழும் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த செப்.25ஆம் தேதி இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன கிருட்டிணன் தொடங்கி வைத்தார். 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. அம்பேத்கர் பெயரில் இயங்கும் அணி...

பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை போராட்டம் ! சென்னை 07102016

தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு

அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...

மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்

பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும்...

ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாள் 09092016 வெள்ளி மாலை 3 மணி இடம் சேப்பாக்கம் சென்னை தோழர் கொளத்தூர் மணி உரை தொடர்புக்கு 7200439952

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

”தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பாக நடைபெறும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் துவங்கியது.. இந்திய அரசு, இந்தியாவில் உள்ள தமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தோழர் கோவை இராமகிருட்டிணன்,தோழர் வன்னியரசு, ஓவியர் தோழர் வீரசந்தானம்,தோழர் செந்தில்,தோழர் அருணபாரதி,தோழர் களஞ்சியம்,தோழர் பாரதி மற்றும் இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , கழக தோழர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களும் ஏராளமானவர்கள் முன்வந்து கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.

மத விழாவின் பெயரால் நடைபெறும் அத்துமீறல்கள் … சென்னை திவிக மனு

விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல் நீரை அசுத்தப்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிபொருள் கலவையை கொண்டு தயார் செய்வது மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது . ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்பே தடைச்செய்ய வேண்டும் . சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து சட்டப்படி குற்றமாகும் . பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை நீக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19082016

தோழர்களே … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் நடத்தும் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 19 : 08 : 2016 அன்று மாலை 5 :30 மணியளவில் தி.வி.க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 28, 29, 30, 31 : 08 : 16 தேதிகளில் நடைபெறவுள்ள பிரச்சார பயணம் , விநாயகர் ஊர்வல எதிர்ப்பு பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வளைதளங்களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்படும். ஆகையால் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் …

“நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை …துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை 06082016

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது. சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள் தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது செய்தி தோழர் குகநந்தன்

அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை … நம்பாதீங்க சாமியர்களை … அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை … மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது … அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

சென்னை மயிலாப்பூர் ஒரு வழிப்பாதையாக உள்ள லஸ் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையில் ஏற்கனவே, இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மார்ச் 6ஆத் தேதி, மண்டல உதவி ஆய்வாளரிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்ச் 8ஆம் தேதியும் சந்தித்து மனு அளித்தனர். கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி நடைபாதை பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி விட்டது. கழகத்தின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 24032016 இதழ்

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

சென்னை மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் (மயிலாப்பூர் பகுதி) மற்றும் அனைத்து இயக்கங்கள் – பொது மக்கள் ஒருங்கிணைந்து 3.7.2016 பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை மயிலாப்பூர் செயின்மேரீஸ் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை (மதுபான) அகற்றக்கோரி, முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மயிலை பகுதி தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை பொருப்பாளர்கள் ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, முனுசாமி, நாகேந்திரன், தென் சென்னை மாவட்ட பொருப்பாளர்கள் வேழவேந்தன், சு. பிரகாசு, ஜான் மண்டேலா, எப்.டி.எல். செந்தில், வேலு, பகுதி பொருப்பாளர்கள் மாரி, மனோகர், சிவா, விழுப்புரம்அய்யனார்,  குமரன், நந்தா உள்பட இப்பகுதியை சார்ந்த முகிலன், சுரேஷ், கமலேஷ், பிரவின், பார்த்தா, பாஸ்கர், $தர், ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … சென்னை திவிக சுவர் விளம்பரங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … ” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை ” பயணத்திற்கு சென்னை மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதும் பணி துவங்கியது … மாவட்ட செயலாளர் இரா .உமாபதி தலைமையில் தோழர். விழுப்புரம் அய்யனார், தோழர். இருதயராஜ், தோழர். தமிழரசன், தோழர். இராவணன், தோழர். வேலு, தோழர் .ஆட்டோ தர்மா ,தோழர் இரா.செந்தில குமார், தோழர் பா.அருண், தோழர். இலட்சுமனன், தோழர். க.ஜெயபிரகாசு, தோழர். நாத்திகன் மற்றும் பல தோழர்கள் களப்பணியில் இரவு முழுவதும் …

சென்னை மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன்(மா.பெ.பொ.க), தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கரு அண்ணாமலை,தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன்,அன்பு தனசேகர்,மாவட்ட செயலாளட் இரா உமாபதி,வழக்கறிஞர் துரை அருண் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் செயின்ட் மேரீஸ் பாலத்திலுள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுதி பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தியது. தோழர்களுடன் பொது மக்களையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. தொடர்ந்து ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக பெரும் முற்றுகை போராட்டத்தை மயிலை பகுதி தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியுள்ளது. அரசு செவிசாய்த்து கடையை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. மாவட்ட செயலாளர் தோழர் இரா.உமாபதி பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கையை செய்தியாக வைத்தார். பகுதி பொதுமக்களும் தன் மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர். பெண்களும் கைதாகியது தோழர்க ளை மேலும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வழிசெய்தது… தற்போது கைதாகி மண்டபத்தில் … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30062016

30062016 வியாழன் கிழமையன்று மாலை 5:30 மணியளவில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது . பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் … சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் குறித்தும், ஆகஸ்டில் நடைபெறும் பகுத்தறிவு பிரச்சார பயணம் குறித்தும், புரட்சி பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு குறித்தும், மாவட்ட கழகத்தின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும். தோழர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் … இரா. உமாபதி சென்னை மாவட்ட கழக செயலாளர்

சென்னையில் பெரியாரியல் பயிலரங்கம் 30042016

‘பெரியாரியல் பயிலரங்கம்’ கழக செயல்வீரர் தோழர் செ.பத்ரிநாராயணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒருநால் பெரியாரியல் பயிலரங்கம் ! நாள் : 30.04.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு. இடம் : முருகேசன் திருமண மண்டபம்,இராயப்பேட்டை. துவக்கவுரை : தோழர்.பால் பிரபாகரன். பரப்புரை செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம் தலைப்பு : ‘இந்துத்துவா’ தோழர். விடுதலை இராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தலைப்பு : ”பெரியாரியல் – ஒரு பார்வை” தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தமிழக உரிமை மீட்பு கருத்தரங்கம் சென்னை 16042016

நாள் : 16.04.2016 சனிக்கிழமை.மாலை 4 மணி. இடம் : இக்சா அரங்கம்,எழும்பூர் சென்னை. பல்வேறு தலைப்புகளில் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் இக்கருத்தரங்கில் ”உயர்கல்வி பல்கலைக் கழகங்கள் மீது காவிமயம்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மக்கள் கட்சி.

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

சென்னை காதல் தின கொண்டாட்டத்தில் மதவாத கும்பலுக்கு பதில் அடி கொடுத்த கருப்பு சட்டைகள்

காதல் தினத்திற்கு தோழர்களுடன் ஏதோ பல நிகழ்ச்சிகள்லாம் திட்டமிட்டோம் ஆனால் நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது இந்து மக்கள் கட்சி. மெரினா உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடி காதலர் தினத்திற்காக தயார் செய்த பேனரை புடித்து கொண்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டும் வாழ்த்து தெரிவித்தும் நடந்து சென்றோம். எதிரே தவ்ஹித் ஜமாத் யை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் துண்டறிக்கை கொடுக்க அவர்களுக்கும் இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்து தெரிவித்தோம். கொஞ்ச தூரம் சென்ற பிறகு தோழர் நாத்திகன் எங்களிடம் வந்து கண்ணகி சிலை அருகே இந்து மக்கள் கட்சி ஏதோ ஆர்ப்பாட்டம் பன்றாங்களாம் கண்டிப்பா அங்கே இருக்கும் காதலர்க்கு தொந்தரவு கொடுப்பார்கள் நம்ப அங்கே போயிடலாம் திராவிடர் விடுதலை கழக தோழர்களும் இருப்பாங்கனு சொன்ன வுடனே நாங்க அங்க போயிட்டோம். அங்கே ஏற்கனவே தோழர் உமாபதி தலைமையில் திவிக...

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...

பூணூல் அறுப்பு வழக்கு: தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக கூறி, 20.04.2015 அன்று இராவணன், கோபி, திவாகர், நந்தகுமார், பிரதீப், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 9.10.2015 காலை தோழர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைச் சென்ற தோழர்கள் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தபசி குமரன், அன்பு தனசேகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண், மாக்ஸ், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள்...

பூணூல் அறுப்பு வழக்கு,தோழர்கள் பிணையில் விடுதலை !

சென்னை மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்பனர்களின் பூணூல்களை அறுத்தாக கூறி 20.04.2015 அன்று ராவணன்,கோபி என்கிற கோபிநாத்,திவாகர்,நந்த குமார்,பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று (08.10.2015) அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இன்று(09.10.2015) காலை தோழர்கள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை.அருண் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.