பூணூல் அறுப்பு வழக்கு,தோழர்கள் பிணையில் விடுதலை !

சென்னை மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்பனர்களின் பூணூல்களை அறுத்தாக கூறி 20.04.2015 அன்று ராவணன்,கோபி என்கிற கோபிநாத்,திவாகர்,நந்த குமார்,பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று (08.10.2015) அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இன்று(09.10.2015) காலை தோழர்கள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை.அருண் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.

image

You may also like...