நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

சென்னை மயிலாப்பூர் ஒரு வழிப்பாதையாக உள்ள லஸ் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையில் ஏற்கனவே, இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மார்ச் 6ஆத் தேதி, மண்டல உதவி ஆய்வாளரிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்ச் 8ஆம் தேதியும் சந்தித்து மனு அளித்தனர். கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி நடைபாதை பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி விட்டது. கழகத்தின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 24032016 இதழ்

You may also like...