Category: திவிக

0

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2015 அன்று காலை 09.30 மணிக்கு தக்கலை,ஜோஸ் அரங்கில் நடைபெற்றது. தோழர் நீதிஅரசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் தோழர் ஜா.சூசையப்பா தலைமை உரை நிகழ்த்த,மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்திப் பேசினார். மாநில அமைப்புசெயலாலர் தோழர் ரத்தினசாமி அவர்கள் பெரியாரியல் எனும் தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றினார்.பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் நிகழ்வாக மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதீயம்,நாத்தீகம்’ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார். புதிய பொறுப்பாளர்களாக, மாவட்ட தலைவர் : தோழர் சதா, மாவட்ட செயலாளர் : தோழர் தமிழ்மதி, மாவட்ட பொருளாளர் : தோழர் மஞ்சு குமார், பெரியார் தொழிலாளர்கழக மாவட்ட தலைவர் தோழர் நீதிஅரசர், குழித்துறை நகர தலைவர் கே.எஸ்.தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கலந்துயாடல் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பெரியார் படம் அச்சிட்ட குறிப்பேடும் வழங்கப்பட்டது.

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – சேலம் கிழக்கு தொடர் பரப்புரைக் கூட்டங்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொறுப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மனுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள...

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது. கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள்...

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு 0

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு

திருச்செங்கோட்டில்  கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களிடமும், இளைஞர் களிடமும் பெரியாரியலை சரியான புரிதலோடு எடுத்துச் செல்லும் நோக்குடன் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த மாதம்  06.08.2015 அன்று நடை பெற்ற நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருச்செங்கொடு பெரியார் மன்றத்தில் 13.09.2015, ஞாயிறன்று “தமிழ்நாடு-திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முன்பும் பின்பும்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் – திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலையையும், திராவிடர் இயக்க தோற்றத்தற்கு பின் தமிழகம் பெற்ற நலனையும் மிகவும் சிறப்பான முறையில் விளக்கி பயிற்சியளித்தார், இறுதியில் தோழர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட அமைப் பாளர் மா.வைரவேல், திருச்செங்கோடு நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் 0

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார். மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில்...

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு 0

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு

ஏற்காடு ஒன்றிய கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; வேலை வேண்டும் என்கின்ற பரப் புரை பயணம், ஏற்காட்டின் கிராமப் பகுதியான செம்மனத்தம் மற்றும் நாகலூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வு காலை 11 மணிக்கு அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் தொடங்கியது. பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து மா. தேவதாஸ், பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். அந்த கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்திருந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் நாம் இதுவரை கேட்டிராத பார்ப்பன எதிர்ப்புப் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நிகழ்வாக, நாகலூர் என்ற கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சந்தோஷ் தலைமையில் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியிலுள்ள சுய உதவிக் குழுவின் சுபம் அடார்னஸை சேர்ந்த நண்பர்கள் கழகத் தோழர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியும்,...

0

விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்

விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். “மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத்...

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது 0

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது

நாகை மாவட்டம் குத்தாலம், வழுவூர் ஊராட்சி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயில் குளத்தில் நீர் எடுத்து கோயில் விழா நடத்த முயன்ற திருநாள்கொண்டச்சேரி தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சில ஆதிக்கசாதியினர் மீது சட்ட நடவடிக்கையும், தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், அனைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் 14.9.2015 அன்று மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் அன்பரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, நாஞ்சில் சங்கர், தமிழ் வேலன், இராஜராஜன், நடராஜ், ரமேஷ், இயற்கை, ஜாகிர், விஜய ராகவன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைதாயினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் உரிமை இயக்கம், சி.பி.ஐ.எம்.எல். விடுதலை,...

0

மதக் கலவரத்தைத் தூண்டும் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலம்

செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை அய்ஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலிருந்து பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலம் புறப்படும். தலைமை : ஈரோடு இரத்தினசாமி (கழகப் பொருளாளர்) முன்னிலை: தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்)   ‘விநாயகன்’ ஊர்வலத்தை ஏன் எதிர்க்கிறோம்? ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா? விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் – மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் – மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா? ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

0

குக்கிராமங்களை குலுக்கிய பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி

தந்தை பெரியாரின் 137 -வது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அழங்கரித்துக்கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகணப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் (மாவட்ட கழக ஏற்பாட்டில்) கலந்துகொண்டு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, கொல்லப்பட்டி வழியாக சுமார் 10-00 மணியளவில் இரும்பாலை சென்றடைந்தது வாகணப் பேரணி. அங்கு மூத்த பெரியார் தொண்டர் இரும்பாலை பழனிச்சாமி அய்யா அவர்கள் தோழர்களை...

0

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொருப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மணுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மணுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள வேண்டினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள்...

0

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணோஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் பெயர்பலகை யைமாநில பொருளாளர் தோழர்துரைசாமிஅவர்கள்திறந்துவைத்தர் ,அறிவியல் மன்றம் பொருப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழ்க கொடி யேற்றி வைத்தார்கள் கிளை திறப்பு விழா நடை பெற்றது இன்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சார்பில் திருப்பூர் மாவட்ட சொயளாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணனசமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள் ராசாமணி , லோகு அன்னூர் முருகேசன் , பிரபாகரன் விவேக் ராஜசேகர் மற்றும்...

0

நாமக்கலில் பெரியார் பிறந்த நாள் விழா

நாமக்கல் – பெரியார் பிறந்த நாள் விழா ! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் நகரின் இரு பகுதிகளில் கழக கொடியேற்றப்பட்டது, இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,திருச்செங்கோடு நகர தலைவர் சோமசுந்தரம்,நகர செயலாளர் நித்தியானந்தம்,ஒன்றிய அமைப்பாளர் சதிசு,பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு,மல்லை பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

0

நாகை மாவட்டத்தில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

நாகை மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா படங்கள்

0

சென்னையில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..

0

ஈரோடில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

ஈரோடு வடக்கு மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா தோழர் பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா, ஈரோடு வடக்கு மாவட்டத் தோழர்களால் மிகச் சிறப்பாகக் கொ ண்டாடப் பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , பின்னர் பெரியாரின் இல்லத்திற்குச் சென்று பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மரப்பாலத்தில் கழகக் கொடியேற்றினர். அதன் தொடர்சியாக ரங்கம்பாளையத்திலும் கழகக் கொடியேற்றி கேக் வெட்டி யும் பொங்கல் வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சூரம்பட்டி வலசிலும், சத்யாநகரிலும், மரவபாளையத்திலும் கழகக் கொடியேற்றப்பட்டது். இறுதியாக சித்தோடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கங்கினர் . மேலும் சித்தோடு நான்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

பெரியார் 137 பிறந்தநாள் விழா செப்டம்பர் 17

  சங்குகள் நிறமும் மாறி சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி தெங்குநீர் குளிரும் மாறி திங்கள்தன் நிலையும் மாறி தெவிட்டமுது இனிப்பும் மாறி சங்கமும் மாறினாலும் தந்தைசொல் வாழும் நாளும். – பாவலர் பாலசுந்தரம்

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

0

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...

0

கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர்  சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள் 28-8-2015

காஞ்சி மக்கள் மன்றத்தில் 28-8-2015 அன்று மூவர் உயிர் காக்க தன்னை அழித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காலை 8-00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றினார். அடுத்து செங்கொடியின் நினைவிடத்தில் முத ல் மலர்வளையத்தை திருநங்கையர் சார்பாக அவ்வமைப்பின் மூத்த உறுப்பினர் வைத்தார். பல்வேறு அமைப்பினர் தங்கள் அமைப்புகளின் சார்பாக வீரவணக்கம் செய்தனர். மாலை 4-00 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் பறையிசையோடு வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் முன்னணித் தோழர்களும் வீரவணக்கவுரை யாற்றினர்.  

0

தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஈரோடு 25-8-2015

25-8-2015 அன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில், ’இனப்படுகொலைக்கு ஈழம் ஒன்றே தீர்வு’ என்ற தலைப்பில் ’ தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ’ சார்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மூர்த்தி வரவேற்புரையாற்ற கழகத் தோழர் வெங்கிட்டு தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண.குறிஞ்சி, மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்  

0

செங்கொடி நினைவு நாள் 27-8-2015 பாலவாக்கம்

27-8-2015 அன்று சென்னை, பாலவாக்கத்தில் ‘மூன்று தமிழர் உயிர் காக்க’ தன்னையே எரித்துக் கொண்ட  தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள், 27-8-2015 அன்று, சென்னை, பாலவாக்கத்தில், மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கே.ஆர்.இரவீந்திரன் தலைமையில்  நடைபெற்றது. நிகழ்வில், நடிகர் சத்தியராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, அற்புதம் அம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர் தொடக்கத்திலும் , இடையிடையேயும் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி 0

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி

மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது! 0

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது!

விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அப்போது முதலமைச்சராக...

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கூண்டு – கழக முயற்சியால் நீக்கம் 0

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கூண்டு – கழக முயற்சியால் நீக்கம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16 செப்டம்பர் 1996ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். 2 ஆண்டுகள் கழித்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் புதிதாக முழு உருவ பெரியார் சிலை அமைக்கப்பட்டு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ திறந்து வைத்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் இந்துத்துவா சக்திகளின் தொடர் சதி செயல்களால் பல்வேறு மத கலவரங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. வருடா வருடம் இந்து முன்னணி பா.ஜ.க. சார்பில் வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். தந்தை பெரியார் சிலையை எப்படியேனும் அகற்ற பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வந்தனர்....

0

பவானி பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலைக் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்; எங்கள் சந்திக்கு வேலை வேண்டும் பிரச்சார பயண துவக்க விழா பொதுக்கூட்டம் 26082015 பவானியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பவானி வேனுகோபால் தலைமையேற்க, முன்னிலை பொறுப்பை மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் ஏற்க, கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். கூட்டத்தில் சிறப்புரை வழங்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைநர் தோழர் ப.பா. மோகன் அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக மேட்டூர் மவுசு பன்னீர் இசை குழவினரின் ஜாதி ஒழிப்பு பாடல் நிகழ்வுகளும்,தோழர் கோவிந்தராஜ் அவர்களின் மந்திரமல்ல! தந்திரம் என்கிற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை தோழர் வேல்முருகன் அவர்கள் வரவேற்று பேசினார்....

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 0

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே...

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே! 0

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே!

வேளாண் பல்கலையின் விவசாயக் கையேட்டில் பஞ்சாங்கங்களை திணித்திருப்பதை நீக்கக் கோரி கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று காரணம் சொல்லி மழை முன்னறிவிப்பு கையேடு ஒன்றினை தயாரித்து 2013ம்ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேலான மழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை துறையிலிருந்து பெற்று, அறிவியல் முறையில் ஆய்வு செய்து மாத வாரியாக ஒவ்வொரு மாவட்டங்களில் எதிர்பார்க்கப் படும் மழை அளவினை வெளியிட்டு அதற்கேற்றாற் போல் விவசாயப் பணிகளை செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு கையேட்டில் வானிலை துறை விவரங்கள் அடிப் படையில் ஒரு பகுதியாகவும், 14 பஞ்சாங்கங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழை குறிப்புகளை ஒரு பகுதியாகவும் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த...

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 0

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா

தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது. விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை...

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா 0

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்

திருச்செங்கோட்டில் களமிறங்குகிறது கழகம் 0

திருச்செங்கோட்டில் களமிறங்குகிறது கழகம்

‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் வேத, புராண, சாஸ்திரங்களைத் தடைசெய்! பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சா°திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை: சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள்...

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் 0

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்

பெங்களூர், சிவாஜி நகர், வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது. நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர். நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக்...

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது! 0

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது!

ஆக. 29ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் விசுவ இந்து பரிஷத். ஆனால், அதை காந்தி நினைவு நாளில் தொடங்கப்பட்டதாக மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள், சாமியார்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு விசுவ இந்து பரிஷத். பாரதிய ஜனதா கட்சி உருவாவதற்கு முன்பே 1964ஆம் ஆண்டிலே ஆர்.எ°.எ°. தலைவர் கோல்வாக்கர் ஆலோசனை பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அயோத்தியில் ‘இராமன்’, மதுராவில் ‘கிருஷ்ணன்’, காசியில் ‘விசுவநாதன்’ ஆகிய மூன்று மதக் கடவுள்களுக்கும் அங்கே அமைந்துள்ள மசூதிகளைத் தகர்த்துவிட்டு கோயில்கள் கட்டவேண்டும் என்று அறிவித்தது. பிற மதத்தினரை ‘இந்து’ மதத்துக்கு மாற்றுவதற்காகவே ‘தர்ம பிரச்சார்’ என்ற தனிப் பிரிவை, விசுவ இந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. 1966ஆம் ஆண்டு பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்து, சங் பரிவாரங்களோடு சேர்ந்து விசுவ இந்து பரிஷத்தும் வெறியாட்டம் நடத்தியது. இந்த விசுவ இந்து பரிஷத்,...

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு! 0

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்”, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த “காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள்”, தஞ்சை பசு கௌதமன் தொகுத்த “ஏஜிகேவின் நினைவுகளும். நிகழ்வுகளும்”, புதுச்சேரி இராவணன் பதிப்பகம் தொகுத்த “பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் (போர்களத்தின் வெற்றிகள்)” ஆகிய நூல்களின் அறிமுக விழா ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பொள்ளாச்சி விஜயராகவன் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் துரைசாமி, கோபி இராம இளங்கோவன், தமிழ் உணர்வாளர், பகீரதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். பின்னர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குருவரெட்டியூர் நாத்திக ஜோதி, நாமக்கல்...

நீதிபதிகள் நியமனத்தில்  சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம் 0

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி...

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது! 0

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளுக்கான நியமனங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட் டம் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சித்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களுடன் தொடர்பு கொண்டு பேசி ஒருங்கிணைத்தார். வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), திருமாவளவன் (வி.சி.), பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாத்), அப்துல் சமது (தமிழக மு°லிம் முன்னேற்றக் கழகம்), வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப் படை), மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), செந்தில் (இளந்தமிழகம் இயக்கம்) ஆகிய அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீனவ மக்கள் முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய கிறி°தவ மக்கள் கழகம்,...

திருப்பூரில் மகளிர் நாள் விழா ! 0

திருப்பூரில் மகளிர் நாள் விழா !

திருப்பூரில், தமிழ் நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் தின விழா 08.03.2015 அன்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், மங்கலம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ”மாதவிடாய்” மற்றும் ”தீவரைவு” ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. பின்பு நடை பெற்ற கருத்தரங்கத்தில் ”மாத விடாய் காலத்தில் உணவு” எனும் தலைப்பில் இயற்கை மருத்துவர் பெரியார் செல்வி, ”மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் ரஞ்சிதா கருத்துரை வழங்கினர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிய மணியரசி, கபடி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் இடம் பெற்ற மைதிலி ஆகியோருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கும்...

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம் 0

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம்

15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு! 0

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு!

அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சியால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர். இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர். பெரியார் முழக்கம் 02042015 இதழ்