Category: தலைமை கழகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை – காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்  இணைந்து நடத்தும், தொடர் அரசியல் பயிலரங்கம், அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் 31.07.2022 அன்று  காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘இந்துத்துவ அரசியலை’ப் பற்றி வகுப்பு எடுத்தார். இறுதியாக தோழர்கள் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். பெரியார் முழக்கம் 04082022 இதழ்

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

திருச்சியில் வருகிற ஜூலை 22,23,24,25 ஆகிய தேதிகளில் முதல் நாளில் இணையதள பயிற்சி வகுப்பும், மற்ற மூன்று நாள் களப்பணியாளர்கள் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அறிவித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருச்சி காருண்யா நகர் “டான் பாஸ்கோ மீடியா” என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். குறிப்பு : பேருந்து எண் 13, 45, 125 ஆகிய நகரப் பேருந்துகளில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை செல்லும் பேருந்துகள்) 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செல்லும் திசையின் வலதுபுறம் சுமார் 200,300 மீட்டரில் ‘டான் போஸ்கோ’ நிறுவனம் உள்ளது. பெரியார் முழக்கம் 14072022 இதழ்

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது. நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம். இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்) முன் பதிவிற்கு : பரிமளராசன் – 7871962024 சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விஜயகுமார் இணையதள பொறுப்பாளர்,...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில்  தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத்  தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் நடைபெற்ற கழக மண்டல மாநாட்டுக்கு வருகைப் புரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிற ஒரு அரசு ஊழியர் என்பது தான் இவரது தகுதி நிலை ஆகும். ஆளுநர் தன்னிச்சையாக எதிலும் செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் அரசியலமைப்பு அவருக்கு விதித்திருக்கிற கடமை ஆகும். ஆளுநர் உரை என்பது கூட அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பது தானே தவிர ஆளுநர் தனது கருத்தை சொல்வதற்கு உரிமை இல்லை. ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாடு ஆளுநர், ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அரசியலமைப்புச் சட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலவரையறை இல்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களைக் கூட முடக்கிப் போட்டிருக்கிறார்....

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

தலைமைக்குழு செயலவை நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னின்று ஒருங்கிணைத்தார். அவருடன் ஈரோடு மாவட்டத் தோழர்கள் இணைந்து பணியாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ரூ.10,000; ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி ரூ.5,000,  ஈரோடு சீனிவாசன் ரூ.5000, பொறியாளர் அன்பு செல்வன் ரூ.10,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். பிரியாணிபாளையம் ஓட்டல் உரிமையாளரும் கரூர் மாவட்ட கழக முன்னாள் மாவட்ட தலைவருமான பாபு, தலைமைக் குழுவுக்கு இடம் வழங்கி மிகக் குறைந்த விலைச் சலுகையில் இரு நாளும் பிரியாணி உணவு வாங்கினார். சென்னிமலை கழகத் தோழர் ஜோதி ரவி 15 கிலோ இறைச்சியையும், ‘அன்பு மிக்சர்’ உரிமையாளர் அனைவருக்கும் சிற்றுண்டிகளையும் தின்பண்டங் களையும் வழங்கினார். கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் செயலவைக் கூட்டம் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.  அனைவருக்கும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி தெரிவித்துக் கொள்கிறார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் :  400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் : 400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

தமிழ்நாட்டின் பறிக்கப்படும் உரிமைகள், ஒன்றிய ஆட்சியின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை; மறுக்கப்படும் ‘நீட்’ விலக்குச் சட்டம்; திணிக்கப்படும் மதவெறி; அதற்கு கருவிகளாகப் பயன்படும் மக்களின் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை விளக்கி ‘திராவிடன் மாடல்’ அதுவே நமக்கான அடையாளம் என்பதை விளக்கி, 11 மண்டல மாநாடுகளையும் மாவட்டத்துக்கு குறைந்தது 15 தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த திவிக செயலவை முடிவு செய்துள்ளது. பெரியார் முழக்கம் 07042022 இதழ்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

தி.வி.க. செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1000/- நன்கொடை வழங்குவது என்று செயலவையில் முடிவெடுக்கப்பட்டது. செயலவை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு மூன்று பேர் உடனடியாக நன்கொடையையும் வழங்கிவிட்டனர். இது தவிர கழகத்தின் முழு நேர செயல்பாட்டாளர்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான செலவை தோழர்கள் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர். அதன்படி தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஆசிரியர் சிவகாமி, இராம இளங்கோவன், நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் டேவிட் ஆகியோர் முழு நேரப் பணியாளர் நியமன திட்டத்துக்கு மாதம் ரூ.1000/- வீதம், வருடத்துக்கு ரூ.12,000/- வழங்குவதாக அறிவித்தனர். திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, காவை ஈசுவரன் முழுநேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000/- வழங்குவதாக அறிவித்தனர். நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் மூன்று செயலவை உறுப்பினர்கள், செயலவை உறுப்பினருக்கான கட்டணமாக ரூ.1000 செலுத்துவதாகவும், முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு...

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு தி.வி.க. செயலவை – மண்டல மாநாடுகளுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கழகத் தலைவர் செயலவையில் இதை அறிவித்தார். 30.04.2022 சனிக்கிழமை – சென்னை 02.05.2022 திங்கள் கிழமை – விழுப்புரம் 04.05.2022 புதன் கிழமை – மயிலாடுதுறை 06.05.2022 வெள்ளிகிழமை – தஞ்சாவூர் 06.05.2022 வெள்ளிக்கிழமை – சேலம் 07.05.2022 சனிக்கிழமை – திருச்சி 09.05.2022 திங்கள் கிழமை – ஈரோடு 10.05.2022 செவ்வாய் கிழமை – வேலூர் 11.05.2022 புதன் கிழமை – கோவை 13.05.2022 வெள்ளி கிழமை – மதுரை 14.05.2022 சனி கிழமை – தூத்துக்குடி மாநாட்டிற்கான பொறுப்பாளர்கள் : தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி : மாசிலாமணி, குறுப்பலாய்பேரி மதுரை, சிவகங்கை, தேனி :  மா.பா மணியமுதன் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் : மனோகரன், தாமோதரன் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை : சாக்கோட்டை இளங்கோ, பேராவூரணி திருவேங்கடம், பாரி மயிலாடுதுறை, நாகை, கடலூர் :...

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

எதிர்கால செயல் திட்டங்களை உருவாக்கிடவும் கடந்தகால செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் கழக அமைப்புகளின் செயல்பாடுகளை பரிசீலிக்கவும் திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 3.4.2022 ஞாயிறு காலை 10 மணியளவில் ஈரோட்டில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இடம் : கே.கே.எஸ்.கே. திருமண மகால், பவானி ரோடு. தோழமையுடன் கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் குறிப்பு: செயலவை உறுப்பினர்கள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா புத்தகங்களை பெயர், முகவரி மற்றும் உரிய தொகையோடு செயலவையில் மீதமுள்ள சந்தா புத்தகங்களை ஒப்படைக்க தயாராக வருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 24032022 இதழ்

மின்னூல் தொகுப்பு

மின்னூல் தொகுப்பு

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் அடங்கிய மின்னூல் தொகுப்பு. புத்தகத்தை பெரியார் முழக்கம் பிப் 10, 2022 இதழில் மொத்தமாக 52 புத்தக பட்டியல் வெளிவந்து கழகத் தோழர்களால் பெருவாரியாக பதிவிறக்கி படிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இணைய தளப் பிரிவின் முயற்சியால் மேலும் 45 புதிய தலைப்புகளில் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.   https://dvkperiyar.com/?page_id=17518 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: 1. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? சிற்றுரைகள் தொகுப்பு 1; 2. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு – விடுதலை இராசேந்திரன்; 3. கீதையின் வஞ்சகப் பின்னணி – விடுதலை இராசேந்திரன்; 4. சினிமா கண்டு வந்தவன் – விடுதலை இராசேந்திரன்; 5. மக்களைக் குழப்பும்...

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது...

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். மின்னூல்கள் தொகுப்பு திவிக வெளியீடுகள் பட்டியல் : அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?  – அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன – திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? –...

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில்  ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம். தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. பங்கேற்றவர்கள்: மதிமுக – மல்லை சத்தியா பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார் தபெதிக – கு.இராமகிருஷ்ணன் சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ். தமஜக – கே.எம்.சரீப் எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது பியூசிஎல் – கண.குறிஞ்சி ததேமமு – மீ.த.பாண்டியன் மே 17 – திருமுருகன் இளந்தமிழகம் – செந்தில் தமிழர் பாசறை – எழிலரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். #கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’   பெரியார் முழக்கம் 09122021 இதழ்

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து...

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். 01.12.2021 புதன்கிழமை : காலை 10.00 மணி: தர்மபுரி மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கிருட்டிணகிரி இரவு தங்கல் 02.12.2021 வியாழக்கிழமை : காலை 10.00 மணி வேலூர் மாவட்டம் மதிய உணவு மணல் 06.00 மணி: சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்.) 03.12.2021 – வெள்ளிக்கிழமை : காலை 10.00 மணி: விழுப்புரம் மாவட்டம். மூன்றாம் கட்ட பயணம் நிறைவு. நான்காம் கட்ட பயண விபரம். 12.12.2021 – ஞாயிறு : காலை 10.00 மணி ஈரோடு தெற்கு மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கரூர் மாவட்டம் தூத்துக்குடி. திருநெல்வேலி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் பெரியார் முழக்கம் 25112021...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

‘தமிழ் இந்து’- வின் ஊடக அறம் இது தானா ? கடந்த காலங்களில் அரசு நியமிக்கும் குழுக்கள், கட்சி காரர்களுக்கு பதவி தருவதற்கே பயன்படுத்தப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதில் பண்பு மாற்றங்களை செய்து வருகிறது. துறை சார்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது குறித்து தமிழ் இந்து நாளேடு (19.11.2021) எழுதியுள்ள தலையங்கம் ஊடக அறத்தை புறம் தள்ளி அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறது. ‘சென்னை பெருநகர வெள்ளச் சேத தணிப்பு மேலான்மைகள்’ மற்றும் மேலான்மைகளுக்கான அறிவுரை குழுமத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்புகழ் நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலான்மையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற இவர், குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரது நம்பிக்கைக்குரிய அதிகாரியாக செயல்பட்டார். மோடி பிரதமரானவுடன் அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள, டெல்லிக்கு அழைத்து பேரிடர்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு* தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும் *தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்* *18.11.2021* . *வியாழக்கிழமை*...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு : பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். —– பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம். —– “ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது, பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது, அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும். இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி...

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

*செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் நெறிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எமது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட மற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !* தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு ! – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !* இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம். தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி, விடுதலைப் போராட்டத்தின் தேவை, ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை...

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !  – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன. கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த...

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…*  *இட ஒதுக்கீடு மீறல்கள்…*  *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்*  *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்து ஐஐடியில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதிய தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கின்றது. தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் தவறாது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு தோழர்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொளத்துர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். *சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்* ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக...

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு ! நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021 நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com – திராவிடர் விடுதலைக் கழகம், 21.06.2021 ——————————————— நீட் தேர்வு ஏன் வேண்டாம்? 12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல. பள்ளிகளில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

தலைமைக் குழு – 20.06.2021. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் அறிமுக உரையாற்றினார். நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலைவாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப்பட்டது. கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய...

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை ! ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ; இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம்...

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

”தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை” ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல். (11.13.2016) (தினத்தந்தி செய்தி) சென்னை, மார்ச்.12 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு ! 06.03.2021 – திருச்சி கழகத் தோழர்களுக்கு, வணக்கம். எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. பொருள்: 1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு 2) இயக்க ஏடுகள் பரப்பல் 3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள் 4) மாவட்ட பயிற்சி வகுப்புகள் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் 01.03.2021

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும்...

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்.. தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார். இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர்...

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !* கிரிமினல் வழக்குகள் பதிவு ! *திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !* நூலின் மீதான தடையை நீக்கவும், தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !* தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல். வேதங்களின் காலம், வேதங்களின் உள்ளடக்கம், பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள், சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?, ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம்...

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியதாக தோழர் பொழிலன் உள்ளிட்ட 15 தோழர்களை சிறைப்படுத்திய தமிழ்நாடு அரசை கண்டிக்கின்றோம்! தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசு விழா எடுத்து கொண்டாடி வரும் வேளையில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ்நாட்டு கொடி ஏற்றியதற்காக தமிழக மக்கள் முன்னனியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன், தோழர் ஜான் மண்டேலா ஆகியோர் செங்கற்பட்டு சிறையிலும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் (ஏசு) ச.குமார், சு.நாகேந்திரன், சு.செல்வம் மற்றும் வட சென்னையை சேர்ந்த தோழர்கள் சேகர் (MRF), ஆ.பாரத்குமார், அ.லோகநாதன், கு.பார்த்திபன், மு.சதிஷ், சு.சுரேஷ், சு.முரளி, இரா.அண்ணாதுரை, பு.சந்தோஷ், சி.வீரன் ஆகியோரை 124-A உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக அரசுகளின் இந்த அடக்குமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருபக்கம் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழா என்று...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*  – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம்,...

தமிழ்நாடு விழா – கொடி

தமிழ் நாட்டுக் கொடி வென்றிருக்கிறது ! பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழ் நாட்டுக் கொடியை ஒட்டுமொத்த தமிழர்களும் அங்கீகரிப்பதற்கு முன் மத்திய உளவுத்துறையும், தமிழகக் காவல்துறையும் அங்கீகரித்து இருக்கின்றன. தமிழ்நாட்டுக் கொடி என இக் கொடியை ஏற்றுவது தமிழர்களுக்குத் தன்னுரிமை உணர்வையும், இனப் பற்றையும், ஓர்மையையும் கொடுத்துவிடும் என்று இந்த அரசுகள் அச்சப்படுகின்றன. அதனால் தான் நேற்று 30.10.2020 மாலை வரை அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை தனித் தனியாக இரவோடு இரவாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தோழர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொருவரின் பெயரிலேயே தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. அதில் அவர்கள் தேசத்துரோகச் சட்டம் ஆன 124 ஏ பாய்ச்சப்படும் என அச்சுறுத்தியும் இருக்கிறார்கள். இதிலிருந்து நாம் நன்கு உணர்ந்து கொள்வது தமிழ் நாட்டுக் கொடியை பெரியாரிய உணர்வாளர்கள், மக்கள் மத்தியில் எளிமையாய் கொண்டு போய் சேர்த்து விடும் வலிமை உடையவர்கள் என்று காவல்துறை நன்கு உணர்ந்திருக்கிறது...

தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம். தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம். பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும்...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...