சமூக நீதி நாள் உறுதிமொழி

*செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி*

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் நெறிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எமது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட மற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்

You may also like...