Category: சிறப்பு கட்டுரை

காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை. தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது. இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. ஜுனாகட் சமஸ்தானம் ஹைதராபாத் சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) ஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால், நீங்கள்  ஒரு பள்ளியில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அவையனைத்தும் அனைத்துப் பள்ளியிலும் இருக்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, நீங்கள் எவையெல்லாம் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று கூறினீர்களோ அவை யனைத்தும் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்தால், நான் அதை தவிர்த்து விட்டு ஏன் வேறு பள்ளியில் சேர்க்கப் போகிறேன். உலகம் முழுக்க இருக்கக் கூடிய நடைமுறை, ஒரே சீரான பள்ளி அமைப்பு என்பதாகும் ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகாலம் அதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயாராக இல்லையென்பது எப்படி? சரி கோத்தாரி குழுவின் கல்விக் கொள்கை...

கடும் பொருளாதார சரிவு  நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

கடும் பொருளாதார சரிவு நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது. விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, சரிவை சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், இரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ.,...

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: தேசிய கல்வி வரைவு என்பதை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 2015லிருந்தே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக் கல்வியிலேயே ஒரு 20 தலைப்புகள், உயர் கல்விக்கு ஒரு 13 தலைப்புகள் என்று தலைப்புகள் கொடுத்து, இந்த தலைப்புகளின் மீது  கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று மனித வளத் துறை வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் இது சம்மந்தமாக கூட்டங்கள் நடத்தப்போகிறோம், அனைத்து உயர்கல்வி இடங்களிலும் கூட்டம் நடத்தப்போகிறோம், கிராமங்கள் அளவிற்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள் என்று ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாதி அளவான இலக்கை கூட அதாவது 50 சதவீதத்தை கூட அவர்களால் அடைய...

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக்...

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும்  ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடை யாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி – குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி  மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர்...

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

நாட்டில் “விதவைகள்” நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) தனி உறுப்பினர் தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நாளாகும். இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும். விதவைகள் நம் நாட்டில் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக,...

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம்  திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர். சி. இலக்குவனார், கா....

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காமராசர் அரங்கில் ஆக. 12 அன்று திருக்குறள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஆரியத்துக்கு எதிரான தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று மாநாடு முரசறைந்தது. ‘தமிழர் மதம் குறள் மதம்; தமிழர் நெறி குறள் நெறி’ என்று பெரியார் முன் வைத்த பண்பாட்டு முழக்கத்தை முன்னெடுப்போம் என்று மாநாடு சூளுரைத்தது. மாநாடு காலை 9.30 மணியளவில் மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையோடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அருகே கூட்டமைப்பின் செயல்பாட் டாளர்கள் அறச்சுடரை ஏற்றினர். கோவை இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் பொழிலன், சோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், இரா. வினோத்குமார் உரையாற்றினர். முனைவர் இளங்குமரனார் மிகச் சிறப்பான தொடக்க உரையாற்றினார். பாவேந்தன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் – பெண்களும் ஆண்களும் பெரியார் சிந்தனைகளை முன் வைத்து உணர்ச்சிபூர்வமாகப்...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை மோடி ஆட்சி நீக்கி விட்டது. பார்ப்பன பண்டிட்டுகளுக்காக தனிமாநிலம் உருவாக்கி, காஷ்மீரை  இரண்டாகப் பிரித்து விட்டது. இந்தப் பின்னணியில் ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்து விட்டன.  இணைய மறுத்த அய்தராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லா மியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலைநீடித்தது. பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கெனவே...

ராஜாதாலே நினைவுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து, இந்து “புனித” நூல்களுக்கு தீயிட்ட போராளி

ராஜாதாலே நினைவுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து, இந்து “புனித” நூல்களுக்கு தீயிட்ட போராளி

  அம்பேத்கர் பூலே கருத்துகளை அடிப்படையாகக் கெண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘தலித் பேந்தர்’ (தலித் சிறுத்தைககள்) என்ற புரட்சிகர இளைஞர் இயக்கத்தைத்  தொடங்கியவர் களில் ஒருவரான ராஜாதாலே, கடந்த ஜூலை 16ஆம் தேதி தனது 78ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றை தமிழ்நாடு குடியரசு கட்சி, ஜூலை 30, 2019 அன்று சென்னை ‘இக்ஷா’ அரங்கில் நடத்தியது. தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “ராஜாதாலே, பெரியார் திடலில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் ராஜாதாலே மறைந்த அன்று, என்னுடன் தொடர்பு கொண்டு அவரது புரட்சிகர செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவில்...

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட  2,461 மாணவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள்  1,171 பேர்

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் 1,171 பேர்

கடந்த 2 ஆண்டுகளில் அய்அய்டி கல்வி நிறுவனங் களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி யுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது அய்அய்டி நிறுவ னங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியா வது பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களி லிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மாநிலங்களவையில் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாய் ரெட்டி அய்அய்டியில் மாண வர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் அய்அய்டியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 2,461 மாண வர்கள் தங்களின் படிப்பை பாதியில்...

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

பா.ஜ.க. நடத்தும் ‘இராமராஜ்ய’ ஆட்சியில் பார்ப்பனர்கள் வெளிப்படை யாகவே வீதிக்கு வந்து ‘பிராமணர்களே’ உயர் பிறவிகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே ‘பிராமணர்கள்’ உயர் பிறவிகள் என்று பெருமைப் பேசி மார்தட்டக் கிளம்பி யிருக்கிறார்கள். கேரள மாநிலம் கொச்சி நகரில் ஜூலை 19 முதல் 21 வரை ‘தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு’ (Tamil Brahmins Global Meet) என்ற மாநாட்டை நடத்தி யுள்ளனர். ‘தமிழ் பிராமணர்கள்’ தமிழ்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தாமல் கேரளாவில் கொச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோரும், நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்ற பார்ப்பனரும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உலகம் முழுதும் உயர் பதவிகளைப் பெற்று சர்வதேச சக்திகளாக வலிமை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் டிரம்ப், அதிபரான பிறகு அந்த நாட்டில்...

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

‘வைகோ’ இராஜதுரோகி என்று குற்றம்சாட்டியிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஈழத் தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் ஆட்சி செய்த துரோகங்களை அவ்வப்போது கடிதங்களாக எழுதி, பிறகு அதைத் தொகுத்து ‘ஐ யஉஉரளந’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதையே தமிழில் மொழி பெயர்த்து, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா, சென்னை இராணி சீதை அரங்கில் நடந்தது (அந்த விழாவில் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்). அப்போது ஈழத் தமிழருக்கு இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கே கேடு ஏற்பட்டு விடும் என்று எச்சரித்தார். அந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ)வுக்கு எதிரான இராஜ துரோகம் என்று அன்றைய தி.மு.க. ஆட்சி வழக்கு தொடர்ந் தது. வழக்கில் ‘ஆம் இராஜ துரோகம் தான்’ என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து, ஓராண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. ‘ஈழத் தமிழருக்கு, ...

லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை நக்கீரன்

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin – 1809-1882) என்பவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக்  கோட்பாடு (Theory of Evolution) அதுவரை நம்பி வந்த  படைப்புப் பற்றிய கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது. படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். டார்வின்  தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கோட்பாடுகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினங்கள் பற்றி ஆராய்ந்தார். படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப் படவில்லை என்பதை...

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

இந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று! இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்ப வில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்து வதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின்...

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் – எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்: பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார். “நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண்...

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘ஹறயல குசடிஅ சுநயஉவடிச’ (ஹகுசு) என்று பெயர். இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல-னுழுசு) என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம்...

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு  ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது. நீட் தகுதியை உயர்த்துகிறதா? மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது. இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது. வேதியல்,...

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனத் தூய்மைப் பேசுகிறவன் – ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும்...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின்  வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும்  பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள்...

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி  – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங் களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25...

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்! பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் – போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்! பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து...

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்ய வில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு...

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள். இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது....

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. அதில் நீதிமன்றத் தீர்ப்புகளை ‘டைப்’ செய்யும் பணியில் இருந்த போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “மோசம், மிக மோசம்” என்று கூறிய வரிகளை அப்படியே “நல்லது மிகவும் நல்லது” என்று தலைகீழாக மாற்றம் செய்து பதிவு செய்வார். முக்கியமாக வங்கிக் கடன் தொடர்பாக பெரிய நிறுவனத்தினர் மீது வரும் தீர்ப்புகளில் முன்கூட்டியே இவரிடம் நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பேசி வைத்ததைப் போல் இவர் மாற்றிவிடுவார். இதன்மூலம் பல பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த விவகாரம் ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள குழுவில் இவர் எழுத்தராகச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில்...

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

மோடி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு – காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் – வங்கிப் பண பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு: மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று  சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை. இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது. அக்கிரசானர்  அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும். ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது...

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் – மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது. தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித...

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு துரோகம் செய்ததை மறக்க முடியுமா? 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த...

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

பகுதி 1   மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு  அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ! குஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய் குஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை? இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து...

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுத்தறிவு சிந்தனையற்றவர்களுக்கு எதிராக வும், சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக, மக்களைத் துண்டாட நினைப்பவர் களுக்கு எதிராகவும் வாக்களிப்போம் என்று நாடு முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பான இந்தியக் கலாச்சாரக் கழகம், இந்தியக் கல்வி அ றிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் புள்ளியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 154 விஞ்ஞானிகள் இணைந்து இந்த அறைகூவலை விடுத் துள்ளனர். அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்த ராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், வாழும் பகுதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் மக்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும்....

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. அறிவியல் – மோடி ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று  கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். நாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார். அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க...

அனிதாவின் உயிர்பறித்த ‘நீட்’

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித்  தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த  மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு. 2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம். ‘ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண்...

அன்னையார் வாழ்க்கைப் பாதை

1919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது. 1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது. 1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர். 1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ‘திராவிடர்...

ஊழலுக்கு அப்பாற்பட்டதா பா.ஜ.க.? அணிவகுக்கும் பட்டியல்கள்… ஆதாரங்களுடன்…

பா.ஜ.க., லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத உலக உத்தம கட்சி என உலகம் முழுக்க பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் கட்சியும், அவரும் ஊழலில் செய்தே திளைத்தவர்கள். பா.ஜ.க. செய்யும் ஊழலில் நாட்டின் பணம் மட்டுமல்ல, இந்த நாட்டின் சாமான்ய மக்களின் உயிரும் ஆயிரக்கணக்கில் பலியாயிருக்கிறது. அந்த ஊழல்களின் பட்டியல்களில் சில:   2003 – 40 ஏக்கர் நில மோசடி – மோடியின் குஜராத் ஊழல் : குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த போது வழங்கினார். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 2003ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பபட்டதோ அந்த பணியினை பத்தாண்டுகள் ஆகியும் தொடங்கக் கூடவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு 2008ஆம் ஆண்டில் 4.35 கோடி. ஆனால் இதில்...

தமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா? ஒ. சுந்தரம்

மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் (Central Institute of Classical Tamil) சார்பாக, தமிழறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுக்கானத் தேர்வுக் குழுவில், உறுப்பினராக தொல்லியல் துறை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட திரு. நாகசாமியை நியமித்து இருப்பதான அறிவிப்பிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.   திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப் படுத்தி, திரிபுவாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி விருதுத் தேர்வுக் கமிட்டியில் நியமித்திருப்பதைக் கண்டிப்பதாகவும், ஒரு ஆய்வல்ல, பல்வேறு ஆய்வுகளைக் கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும் வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிப் பாரபட்சமின்றி செம்மொழி விருதுகளைத் தேர்வு செய்ய முடியும் என்றும், செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை – பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை. பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர்...

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். பகுதி 10 1955 ஜூலை 17இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும், 1955 ஆகஸ்டு 1இல் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார். “இந்திய அரசாங்க தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகக் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.” “எங்களுக்கு – தமிழர்களுக்கு – தமிழ் நாட்டாருக்கு இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’  அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...