Category: தலையங்கம்

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

உயர் ஜாதிப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட 2 நீதிபதிகள், “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்றத் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். “இது சமூகநீதிக்கு பின்னடைவு என்றும் இந்திய ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்கு ஆதரவான சக்திகள் ஒருங் கிணைந்து போராட முன் வர வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ் நாட்டின் உணர்வு களைப் பிரதிபலித்து இருக்கிறார். தீர்ப்பை ஆதரித்து வழங்கப்பட்ட கருத்துகள், அரசியல் சட்ட அமைப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கை அந்த சமூகத் திற்கான மக்கள் முன்னேற்றமடைய பயன்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது பச்சைப் பார்ப்பனியக் கருத்துகளை தீர்ப்புகளாக எழுதி வைத்துள்ளனர். பிராமணர் சங்க மாநாடுகளில் பேசப்படும் கருத்துக்கள், அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட...

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை  ஏன் தடுக்க வேண்டும்?

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை ஏன் தடுக்க வேண்டும்?

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. இரண்டுக்கும் அடிப்படையானது அறிவியல் பகுத்தறிவு சிந்தனை மறுப்பு தான். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தரப்பட்ட கொடுமையான செய்தி நாட்டில் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து நரபலிக் கொடுமை மாந்திரீக வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் ‘பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கையில் பல தலித் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ‘மந்திரவாதியை’ நாடிச் செல்கிறார்கள். அங்கே நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். ‘பேய் பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இந்த ஆபத்தான  மூடநம்பிக்கைகள் பற்றி அறிவியல் அடிப்படையில் மக்களுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்யக்கூடிய ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் தான். கேரளாவில் நரபலிக்குப் பிறகு தான் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பதே அறிவியலுக்கு...

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

1925ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக் காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்’ என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925க்குப் பிறகு இதுவே முதல் முறை. ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி அணி வகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள். அதில் ‘சுவயம் சேவக்காக’ ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்....

தலையங்கம் கருக் கலைப்பு:  உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

தலையங்கம் கருக் கலைப்பு: உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

கருக் கலைப்பை திருமணத்திலிருந்து துண்டித்து அது பெண்ணின் தனித்துவ உரிமை என்ற புரட்சிகரமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. திருமணமான பெண் மட்டுமே கருவை சுமக்க வேண்டும்; இல்லையேல் அவர் ‘கற்பு’ என்ற புனிதத்தை இழந்து விடுவார்; சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாக புறக்கணிக்கப்படுவார்கள் என்ற பார்ப்பனிய மனு சாஸ்திர பழமைவாதங்களுக்கு மரண அடி தரும் தீர்ப்பு இது. டெல்லியைச் சார்ந்த 25 வயது அய்ஸ்வர்யா, திருமணமின்றி தனக்கு மனமொத்தவரிடம் கொண்ட தொடர்பால் உருவான கருவை 23 வாரங்கள் கழித்து கலைக்க விரும்பினார். டெல்லி உயர்நீதிமன்றம் திருமணமாகாதவருக்கு கருக்கலைப்பு உரிமை இல்லை என்று சட்டத்தைக் காட்டி கோரிக்கையை நிராகரித்தது. உச்சநீதி மன்றம் போனார். கருக்கலைப்பு விதிமுறையில் பெண்ணின் உரிமையைப் பறிக்கும் இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. நியாயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின்...

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

கருத்துரிமைக்கு தடை போட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய ‘பார்ப்பனிய பாசிஸ்டுகள்’ அல்ல நாம். இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்ற ஆபத்தான மக்கள் விரோத அரசியலை கருத்தியல் தளத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று நம்புகிற பெரியாரிஸ்டுகள்; ஆனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் தனது பேரணியை நடத்துவதற்கு காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கு உயர்நிதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதும் கருத்துரிமை என்ற எல்லைகளைத் தகர்க்கக் கூடிய அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். காந்தி கொலையில் தங்களுக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். வாதாடலாம். ஆனால் அவர்களின் இந்துராஷ்டிர சித்தாந்தமே காந்தி கொலைக்கு அடிப்படை என்பதை அவர்களால் மறுக்க முடியாது. காந்தி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களில் ‘சட்ட விரோத அமைப்பு’ என்று அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அன்றைய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது (பிப்.4, 1948). காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டு...

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

இந்து மதத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா புண்படுத்தி விட்டதாக பா.ஜ.க. பார்ப்பனர்கள் – சங் பரிவாரங்கள் கடும் கண்டனங்களை எழுப்பு கிறார்கள். ‘சூத்திரர்’ என்று இந்து மதமான ‘வேதமதம்’ இழிவுபடுத்துவதை ஆ.இராசா சுட்டிக்காட்டிப் பேசியது தான் குற்றமாகிவிட்டது. சூத்திரர் இழிவை எங்கள் மதம் ஏற்காது என்று அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை – ஜாதி வெறியர்களால் இப்போதும் ‘மதத்தின் – கடவுளின்’ கொள்கையாகவே சட்டவிரோதமாகப் பின்பற்றப்படு கிறது. தென்காசி அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இனக் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் விற்பதற்குக்கூட தடை செய்து ஊர்க் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். தீண்டாமை வெறியை மறைப்பதற்குக்கூட தயாராக இல்லை. இறுமாப்புடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் வழியாகத்...

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா?  ‘ஆன்மீக’ மண்ணா?

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா? ‘ஆன்மீக’ மண்ணா?

பெரியார் தமிழ்நாட்டில் தோற்றுப் போய் விட்டார்; மக்கள் ஆன்மீகம் நோக்கி திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ‘பெரியார் மண்’, ‘ஆன்மீகம்’ என்பதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு வரையறுப்பது? இந்த கேள்விகளுக்கான விடையில் தான் தெளிவு பெற முடியும். ஆன்மீகம் என்பது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு சிந்தனைப் போக்கு.  அது வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இல்லை. ஆனால், ‘ஆன்மீகம்’ என்பதை பார்ப்பனியம் தனக்கான முகமூடிக் கவசமாக்கிக் கொண்டு தன்னை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. வைதீக வேத மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், யாகங்கள், சடங்குகளை, உயிர்ப் பலிகளைக் கேள்வி கேட்ட திராவிடர்களை அழித்தொழிக்க வரலாறு நெடுக சூழ்ச்சிகளை படுகொலைகளை நடத்தியதோடு அதற்கு அவதாரம், புராணம், இதிகாச கற்பனைகளை உருவாக்கி, வெகுமக்களை நம்ப வைத்தனர். உருவ வழிபாடு வழக்கம் இல்லாத அவர்கள் பிற்காலத்தில் கோயில் களையும் சிலை வழிபாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து...

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

“ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்; அனைத்து கல்வி வேலை வாய்ப்பிலும் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு வீட்டில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை இருந்தால் பெண் கல்விக்கே முன்னுரிமைத் தரப்பட வேண்டும்; பெண்களுக்கு சொத்து – வாரிசுரிமையில் சம பங்கு தர வேண்டும்” – இப்படி பெண்களின் விடுதலைக்ககாகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார். கலைஞர் முதல்வராக வந்த பிறகு, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார். இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த சாதனை சரித்திரத்தைத் தொடருகிறார். 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு அவர்களின் உயர்க் கல்வி வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ பெண் விடுதலைக்கான பாதையில் மற்றொரு மைல் கல். தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம். நாட்டில்...

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர்  போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர். வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான்....

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும்; அவர்கள் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு முன் (ஆக. 14, 2021) தமிழக அரசு உரியப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர் 27 பேருக்கு அர்ச்சகர் நியமன ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு, அர்ச்சகர் பதவிக்கு வயது வரம்பு, உரிய பயிற்சி தேவை என்ற அரசு பிறப்பித்த விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ஆகம முறை பின்பற்றப்படாத கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியதோடு ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த ஆகமம் கூறும் முறையில் தான் வழிபாடு, சடங்குகள் மட்டுமல்ல; அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. எந்தெந்த ஆகம கோயில்களில் எந்த வகை ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவும் அமைத்து அதில் இருவர் பெயரையும் நீதிமன்றமே பரிந்துரைத் துள்ளது....

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

ஊராட்சித் தவைர்களாக ‘தலித்’ பஞ்சாத்துகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜாதி வெறியர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இது குறித்து களஆய்வு நடத்தி, அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. ‘தலித்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது திணிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் குறித்து விரிவாக அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டு 20 தலித் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் ஜாதி வெறியர்களால் குடியரசு – சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், சுதந்திர நாள் அன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாhபில் கடிதம் எழுதினார். கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

75ஆவது சுதந்திர தினத்தை திருவிழாவாக்கி, அந்த விழாவையும் தங்கள் ஆட்சிக்கு பெருமை சேர்க்கத் துடிக்கும் ஆட்சி, உண்மையான ஒரு சுதந்திர நாட்டுக்கான ஆட்சியைத்தான் நடத்துகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. முதல் கேள்வி இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் மாநில உரிமைகளை ஒன்றிய ஆட்சி அங்கீகரிக்கிறதா? காஷ்மீர் என்ற மாநிலத்தையே அழித்து யூனியன் பிரதேசமாக்கிவிட்டது. மாநிலப் பட்டியலில் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களான கல்வி, வரிவிதிப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், மின்சாரம் போன்ற துறைகளை ஒன்றிய ஆட்சி பறித்துக் கொண்டு மாநிலங்கள் மீது தனது ‘ஒற்றை பாரதம்’ கொள்கையைத் திணிக்கிறது. மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களை ‘பாரதிய தேசியமாக்க’ சமஸ்கிருதப் பண்பாடுகள் கீதை, வேதம், ராமன் கோயில்களை குறியீடுகளாக்கி மாநில மொழி இன அடையாளங்களை ‘சனாதன தர்ம’ வட்டத்துக்குள் மூழ்கச் செய்கிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசித்து திட்டங்களையும் நிதியையும் ஒதுக்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் திட்டக் குழு. அதைக்...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

‘ஆன்மீகம்’ என்ற சொல் சனாதன வாதிகளால், மதவாதிகளால், மக்களை கூறுபோடுகின்ற ஜாதியவாதிகளால் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சொல்லாக மாறிப்போய் இருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பது பற்றி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார். “ஆன்மீகம் என்ற சொல்லை இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களைப் பிளவு படுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால் இப்படி மக்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு நாங்கள் எதிரிகள் என்று அவர் கூறியிருப்பதோடு ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அறநெறி என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். முதலில் ஆன்மீகம் என்பது தனிமனிதர் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா?  என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். உறுதியாக தனி மனிதன் சார்ந்தது தான். ஒரு மனிதர் (ஆணோ அல்லது பெண்ணோ) தன்னுடைய அறநெறி வாழ்க்கையை தனக்குள் உருவாக்கிக் கொள்ள...

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

நியூயார்க் நகரில் நிகழும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழியாக நிகழ்த்திய உரை மிகவும்  ஆழமானது; குறிப்பிடத் தக்கது. மொழி – மதம் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் உரை அது. மொழி – உலகம் முழுதும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரே கருவி என்று கூறியுள்ள முதலமைச்சர், தமிழர்கள் ஒற்றுமையை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது. அத்தகைய முயற்சிகள் தீவிரம் பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். மொழியின் பெருமை – இனப் பெருமை பேசுவது தவறு இல்லை. அத்தகைய வரலாறும் பெருமையும் நமக்கு இருக்கிறது. அந்த வரலாறு இல்லாதவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கம் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது. திராவிட மாடல் ஒரு கருத்தியல் கோட்பாடாக நாம் வளர்த்தெடுக்கிறோம். இதை எதிர்க்கிறவர்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவோர் தான்; அவர்கள் கற்பனைகளை வரலாறுகளாக எழுத முயலுகிறார்கள்...

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

குலக் கல்வித் திட்டத்தை தன்னிச்சையாகத் திணித்த இராஜ கோபாலாச்சாரி, இராமானுஜர் யாரைக் கேட்டு தனது சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று திமிரோடு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. மோடியின் அக்னி பாத் என்ற இராணுவத்துக்கு ஒப்பந்த  அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை இராஜாஜி, ஹிட்லர் பாணியில் கொண்டு வந்தார். இப்போது திரும்பிப் பெற முடியாது என்று திமிரோடு பேசுகிறது, ஒன்றிய ஆட்சி; நாடே பற்றி எரிகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளோடு (அதையும் முடிக்காத நிலையில்) கற்றலுக்கு மூடு விழா நடத்தும் வடநாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் நம்பி இருக்கும் ஒரே வேலை வாய்ப்பு இராணுவத்தில் அடிமட்ட சிப்பாய்கள் அல்லது சேவை செய்யும் பணியாட்கள் வேலை தான். அவர்களின் ஒற்றை வேலை வாய்ப்பையும் குலைக்கும்போது பதற்றமும் எதிர்ப்பும் பற்றிக் கொண்டு விட்டது. 2016-2019 நிலவரப்படி, இராணுவத்தில் சேருவதில் இந்தியா விலேயே முதலிடம் வகிப்பது உ.பி. (18,906 பேர்), தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மற்றும் நேபாளத்தைச் சேர்த்து...

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உலகின் இஸ்லாமிய நாடுகளோடு இந்திய உறவுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர் இருவர் மீதும் ஒன்றிய ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஏதோ அவர்கள் கட்சியோடு தொடர்பே இல்லாத சிறு குழு என்பது போல் நாடகமாடுகிறது. இந்தியா முழுதும் கொதித்து எழுந்து போராடும் இஸ்லாமியர்கள் மீது கடும் அடக்குமுறைகள், தடியடிகள், துப்பாக்கி சூடுகளை நடத்துவதோடு, உ.பி. பா.ஜ.க. ஆட்சி ஜனநாயக வழியில்  போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுகிறது. ஜார்கண்டில் அப்பாவியான 16 வயது முஸ்லீம் இளைஞனைப் பிடித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சம் பதை பதைக்கிறது. மதங்களை விமர்சிக்கவே கூடாதா என்று பகுத்தறிவு அறிவியல் வெளிச்சத்தில்  கேள்வி கேட்டால் விமர்சிக்கும் உரிமை உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. அதே நேரத்தில் இஸ்லாமிய வெறுப்புணர்வோடு ‘இந்துத்துவா’ அரசியல் பார்வையில்...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாநில உரிமைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருவது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கி வருவதை உணர முடிகிறது. அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய ஆட்சி முடக்கி வைத்துள்ளதை பட்டியலிட்டுப் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்  தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் பிற மாநிலங்களுக்கும் பரவிடக் கூடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. – பார்ப்பனிய சனாதன ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத், மதுரை ஆதீனம், ஜீயர்கள், சாமியார்களைக் கூட்டி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. தமிழக அரசை மிரட்டியுள்ளதோடு, திராவிடர்  இயக்கக் கோட்பாடுகளையும் கண்டித்து ‘துறவிகள்’ பேசியிருக்கிறார்கள்....

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

மதுரையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு, செஞ்சட்டைப் பேரணியை எழுச்சியுடன் நடத்தி முடித்திருக்கிறது. கருப்புச் சட்டை, நீலச் சட்டைப் பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூன்றாவது பேரணி இது. மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் கருத்தியல்கள் காலத்தின் தேவையாகியுள்ள சூழலில் நாட்டை பார்ப்பனப் பாசிசத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முப்பெரும் தலைவர்களின் பொதுவான கூறுகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பார்ப்பனப் பாசிசம், மாநில அடையாளங்களை அழித்து ஒற்றை இந்தியாவாக்கி பிறகு அதை பாரத தேசமாக்கி, பாரத தேசத்தை இந்து இராஷ்டிரமாக்கிட வேண்டும் என்பதையே தனது இயக்கமாக நிர்ணயித்திருக்கிறது. வேதகால பார்ப்பனியம் மனுசாஸ்திரத்தையும் வேதங்களையும் சமூகத்தின் அடையாளங்களாக்கி மக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மிக எளிதாக அதில் வெற்றியும் பெற்றிருந்தது. மாநில எழுச்சிகள் சமூகநீதிக் கொள்கைகள் மொழி பண்பாட்டு அடையாளங்கள் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதன் வழியாக பார்ப்பனியம் கேள்விக்குள்ளானது. அரசியல் சட்டம் மக்கள் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் உறுதி செய்தாலும் அதில் உடைப்புகளை உருவாக்கிட பார்ப்பனியம் தொடர்ந்து...

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

மருத்துவக் கல்லூரிக்கு மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க  வேண்டும் என்ற நடைமுறை, சென்னை மாகாணத்தில் நிலவியது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் அது ஒழிக்கப்பட்டது. மீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை மருத்துவத் துறையில் திணிக்க ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியிருக்கிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பத்திரப் பதிவு அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற விழாவில், இது வரை பின்பற்றப்பட்டு வந்த ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழியை மாற்றி ‘மகரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியை ஆங்கில மொழி வழியாக உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மருத்துவக் கல்லூரியில் புதிதாக மாணவர் சேர வரும்போது அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் (White Coat Ceremony) ‘ஹிப்போகிரட்டிக்’ என்ற உறுதிமொழிதான் உலகம் முழுதும் ஏற்கப்பட்டு வருகிறது. இந்த உறுதிமொழியை ஆங்கில மருத்துவத் தின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஹிப்போகிரட்டீஸ் உருவாக்கினார்....

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

‘படைப்புக் கடவுள்’ பிர்மா மனுசாஸ்திரத்தை உருவாக்கி, பிராமண-சத்ரிய – வைசிய – சூத்திரர்களுக்கு தகுதி, கடமைகளை வகுத்திருப்பதால் அதன்படி வாழ வேண்டியதே தர்மம் என்று பார்ப்பனியம் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தைத் திணித்தது. இதில் மக்கள் முடிவு செய்ய எந்த உரிமையும் இல்லை. அதேபோல் ஒன்றிய சாம்ராஜ்ய ‘பிரம்மாக்களால்’ – ‘மனுசாஸ்திரம்’ முறையாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர்கள் என்ற ‘தேவ தூதர்கள்’ – கல்வி, மொழி, பண்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்காக அவர்களே தீர்மானிப்பார்கள். இதில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சிகளோ மக்களோ தலையிட முடியாது. தலையிட்டால் எருமை வாகனத்தின் மீது ‘சித்திரபுத்திரர்கள்’ விரைந்து வந்து “நரக”த்துக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்கள். ‘மனுவாதிகள்’ இப்போதும் வேறு வடிவத்தில் ‘ராமராஜ்யம்’ நடத்துகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு ‘திராவிட மாடல்’ பணியாது என்பது மட்டுமல்ல; திருப்பித் தாக்கும் என்று தமிழ்நாடு அரசு போர்ச் சங்கைக் கையில் எடுத்து விட்டது. தமிழ்நாட்டில்...

தலையங்கம் இலங்கை நெருக்கடி: இந்தியாவுக்கும் எச்சரிக்கை தான்!

தலையங்கம் இலங்கை நெருக்கடி: இந்தியாவுக்கும் எச்சரிக்கை தான்!

ராஜபக்சே குடும்பம் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ‘மக்கள் புரட்சி’ கொழும்பில் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ‘புண்ணுக்கு புணுகு’ பூசுவதுபோல் அமைச்சரவை மாற்றம் என்று நாடகமாடுகிறார். மக்களுக்கு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்க அடுத்த 6 மாதத்துக்கு  அவசரமாக 3 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில் சர்வதேச நிதி நிறுவனத்திடம் ‘பிச்சைப் பாத்திரம்’ ஏந்தி நிற்கிறது, இலங்கை அரசு. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியில் இலங்கையின் மத்திய வங்கி, 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான நெருக்கடிக்கு பொருளாதாரம் உள்ளாகியுள்ளதை எச்சரித்துவிட்டது. சிக்கலிலிருந்து மீண்டு எழும் வழி தெரியாது, இலங்கையின் பொருளாதார ஆலோ சகர்கள் விழிபிதுங்கி நிற்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு நாடே ‘திவாலாகி’க் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி எதை உணர்த்தி நிற்கிறது? நாட்டின் மக்கள் வாழ்வதாரம் – பொருளாதாரம் – வளர்ச்சிக் கட்டமைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு மத வெறி மற்றும் இன வெறியைத் தூண்டி விடுவதில்...

தலையங்கம் அமித்ஷாவின் ‘அடாவடி’

தலையங்கம் அமித்ஷாவின் ‘அடாவடி’

மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர, இனி நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவை ஒன்றிய ஆட்சி எடுத்திருக்கிறது. இதற்குப் பெயர் CUTE என்பதாகும். இது விளிம்பு நிலை மக்களுக்கு எதிரானது, கோச்சிங் சென்டருக்குத் தான் வழி வகுக்கும். இது இரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 09.04.2022 அன்று ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். பாஜக என்ற கட்சியைத் தவிர, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து பேசியிருப்பது, தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறது. உண்மை யிலேயே இது மகிழ்ச்சிக்குரிய செய்தி. பாஜகவினுடைய இந்த இந்தி ஆதரவு, நீட் ஆதரவு நடவடிக்கைகளை தமிழ் மண் ஒருபோதும் ஏற்காது அவர்கள் சட்டமன்றத்தில் நடந்ததைப்போல தனிமைப்பட்டு நிற்கப் போகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நெருப்பை கொளுத்திப் போட்டு இருக்கிறார். “இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்தை அலுவல் மொழி நிலையிலிருந்து படிப்படியாக ஒழிக்க வேண்டும்” என்று...

தலையங்கம் செயலவை முடிவுகளை செயல்படுத்த, தயாராவோம்!

தலையங்கம் செயலவை முடிவுகளை செயல்படுத்த, தயாராவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு மற்றும் செயலவைக் கூட்டங்கள் ஏப். 2, 3, 2022 தேதிகளில் ஈரோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். தலைமைக் குழு கூட்டம் ஏப்.2ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு கொல்லம்பாளையம் ‘பிரியாணி பாளையம்’ அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. 16 தலைமைக் குழு உறுப்பினர்களில் 15 தோழர்கள் பங்கேற்றனர். கொரானா காலத்தில் இயக்கம் பொது வெளியில் செயல்பட முடியாத நிலையில் தொடர்ந்து இணையம் வழியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. கொரானா ஓரளவு விடுபட்ட நிலையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பது குறித்தும் தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகள் காலூன்ற தீவிரமான முயற்சிகளில் ஒன்றிய ஆட்சியின் பணபலம் அதிகார பலத்துடன் களமிறங்கி செயல்படுவதையும் தலைமைக்குழு ஆழமாக விவாதித்தது. குறிப்பாக இந்தியாவிலேயே ‘திராவிடன் மாடல்’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி...

தலையங்கம் ‘நீட்’ மசோதாவைக் கிடப்பில் போடும் ஆளுநரின் அரசியல் பின்னணி

தலையங்கம் ‘நீட்’ மசோதாவைக் கிடப்பில் போடும் ஆளுநரின் அரசியல் பின்னணி

தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என் இரவியை சந்தித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. நீட் விலக்கு மசோதாக்களைப் போல வேறு பல மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். முதலமைச்சர் “The Dravidian Model” என்ற ஆங்கில நூலை ஆளுநருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு இரண்டு செய்திகளைக் கூறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை உறுதி கூறியபடி அனுப்பி வைப்பாரா ? மாட்டாரா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். (இது நாள் வரை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை) இந்தப் பிண்ணனியில் தமிழ்நாட்டு ஆளுநரைப் பற்றிய ஒரு வரலாற்று...

தலையங்கம் எல்லை மீறுகிறார் தமிழக ஆளுநர்

தலையங்கம் எல்லை மீறுகிறார் தமிழக ஆளுநர்

பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று நடைபெற்று இருக்கிறது. 100 க்கும் மேற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த துணைவேந்தர்கள் அதில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக அதில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மிகச் சிறப்பான சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் இயங்கும் போது அவை தமிழ்நாடு பாடத்திட்டத்தைத் தான் நடத்த வேண்டும். அது அறிவியல் மனப்பான்மையில் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத் தனமான கருத்துக்களை திணித்துக் கொண்டு இருக்கிறது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றியாக வேண்டும்” என்ற கருத்தை அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என் ரவி கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு அல்ல. கூட்டமைப்புத்...

தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’

தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’

1967 மார்ச் 6, அண்ணா தலைமையில் பார்ப்பனரல்லாத அமைச்சரவை கடவுள் பெயரால் உறுதி ஏற்காமல், ‘உளமாற’ என்ற உச்சரிப்போடு தமிழ்நாட்டில் பதவி யேற்று திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்டது. 55 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றன. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கான கூட்டணி என்ற நடைமுறையை உருவாக்கிக் காட்டியவர் அண்ணா. காமராசரை வீழ்த்த அண்ணாவைப் பயன்படுத்திக் கொள்ள இராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தது. பெரியார் உறுதியாக காமராசரை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, “பெரியாரின் கொள்கையிலிருந்து அண்ணா விலகி வந்து விட்டார்; ‘பெருங்காய டப்பா’வாகத்தான் இருக்கிறார். பெரியார் கொள்கையான ‘பெருங்காயம்’ இப்போது அண்ணாவிடம் இல்லை” என்று தனது பார்ப்பன சமூகத்துக்கு உறுதியளித்தார். தேர்தலில் 137 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆச்சாரியாரை கைவிட்டு அண்ணா பெரியாரை சந்திக்க திருச்சிக்கு தனது முக்கிய அமைச்சர்களுடன் வந்து விட்டார்....

தலையங்கம் அறநிலையத் துறையில் தடுமாற்றம்

தலையங்கம் அறநிலையத் துறையில் தடுமாற்றம்

சிவன் கடவுளுக்காக இரவு முழுதும் கண் விழிக்கும் ‘மகா சிவராத்திரி’ என்ற இந்துமதம் தொடர்பான ஒரு சடங்கை அறநிலையத் துறை மக்கள் விழாவாக மாற்றி ஆன்மீகப் பிரச்சாரங்கள் கலை நிகழ்வுகள் நிகழ்த்தி விடிய விடிய நடத்தப் போவதாக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அறநிலையத் துறையின் வேலை, கோயில் பாதுகாப்பு மற்றும் கோயில் குடமுழுக்கு பூஜை சடங்குகளை நடத்துவதற்கு உதவுதல் தானே தவிர, மதத்தை மக்களிடம் பரப்புரை செய்வது அல்ல என்ற முதல் எதிர்ப்புக் குரலை திராவிடர் விடுதலைக் கழகம் எழுப்பியது. முகநூல்களில் கருத்துக்கு வலிமையான ஆதரவுகள் வெளிப்பட்டன. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை ‘ஆன்மீக சுற்றுலா மய்யமாக’ மாற்றப் போவதாக தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் தேர்தல் பரப்புரையில் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் அரங்கேற்றப்படவிருந்தது. தூய்மை நகரம், தொற்று நோய் இல்லாத நகரம், குற்றங்கள் குறைந்த நகரம் என்ற அறிவிப்புகளில் நியாயம் இருக்கிறது. ‘ஆன்மீக...

தலையங்கம் 7.5% உள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வின் பொய் முகம்

தலையங்கம் 7.5% உள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வின் பொய் முகம்

‘நீட்’ தேர்வை ஆதரிக்கும் பா.ஜ.க.வும் ‘சமூக ஆர்வலர்கள்’, ‘அரசியல் விமர்சகர்கள்’ என்ற முகமூடி களோடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் “பிரம்மா”வின் தலையில் பிறந்ததாகக் கூறும் பூணூல் செல்லக் குழந்தைகளும், திரும்ப திரும்ப ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிப்பதாகவும் அப்படி ஒரு யோசனையைக் கூறியதே பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தான் என்றும் கூறி வருகிறார்கள்; இது பச்சைப் பொய். 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியபோது அப்போதும் ஆளுநராக இருந்த பன்வரிலால் புரோகித் கிடப்பில் போட்டார். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தினால் ஒப்புதல் தரத் தயார் என்று நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. பிறகு தமிழ்நாடு அரசே சட்டத்துக்கு பதிலாக அரசாணை பிறப்பித்தால் ஆளுநரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்றும் கலைஞர் கிராமப்புற மாணவர் இடஒதுக்கீட்டுக்கு...

தலையங்கம் அன்று ‘சமஸ்கிருதம்’ இன்று ‘நீட்’

தலையங்கம் அன்று ‘சமஸ்கிருதம்’ இன்று ‘நீட்’

‘நீட்’ எனும் வடிகட்டும் நுழைவுத் தேர்வு முறை – மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்தும் என்ற வாதத்தை மறுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் சரியான விளக்கங்களை முன் வைத்துள்ளார். ஒரு மாணவர், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டாலே, அவர் மருத்துவர் ஆக முடியாது. தனது படிப்புக் காலம் முழுதும் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக முடியும். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மருத்துவர்கள் உலகம் புகழும் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதே  நேரத்தில் நீட் தேர்வு முறை வழியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பயிற்சி மய்யங்களுக்குப் போய் பெரும் பொருட் செலவில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு ஆண்டு பயிற்சியில் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகாலம் தேவைப்படுகிறது” என்று நீட் உருவாக்கும் சமூகத் தடைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார், தமிழக முதல்வர். இத்தகைய...

தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்

தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்

கோட்சேயின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் – என்று காந்தி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை – இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சமூக நீதியால் பக்குவம் பெற்றுள்ள தமிழ் மண்ணில் மதவெறியை விதைக்கும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று தி.மு.க. தோழர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். போபால் நாடாளுமன்ற உறுப்பினரான பா.ஜ.க.வைச் சார்ந்த பிரக்யாசிங், நாடாளுமன்றத்தில் கோட்சே தேச பக்தர் என்று பேசியதோடு காந்தி நினைவு நாளில் அவரைப் போல் உருவ பொம்மை செய்து துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தது, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. கடந்த ஜன. 30ஆம் தேதி இராஜஸ்தான் குவாலியரில் ‘இந்து மகாசபை’ எனும் அமைப்பு, காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ‘கோட்சே – நாராயணன் ஆப்தே’ இருவர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை...

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

‘சுதந்திரம் பெற்ற நாளை மட்டுமல்ல, குடியரசு நாளையும் தமிழருக்கு துக்க நாள் தான் என்று பெரியார் அறிவித்தார். இந்திய அரசியலமைப்பு மாநிலங்களின் கூட்டமைப்பே ‘இந்தியா’ என்று கூறினாலும் நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. குடியரசு நாள் அணி வகுப்பில் நாட்டின் ஆயுத பலத்தை பிற நாடுகளுக்கு உணர்த்தும் நவீன ஆயுதங்களின் அணி வகுப்பு நடக்கிறது. ஆனால், ‘குடியரசு’ சட்டம் அங்கீகரித்துள்ள இறையாண்மை கொண்ட மாநிலங்கள் அவமதிக்கப் படுகின்றன. ‘இந்தியா’வின் சுதந்திரப்  போராட்டம் – 75’ என்ற தலைப்பில்  சுதந்திர இந்தியாவின் ‘சாதனைகளை’ முன் வைத்து பேரணி நடத்த முடிவு செய்தது ஒன்றிய ஆட்சி. தமிழ்நாடு அரசு குடியரசு நாள் பேரணிக்காக தமிழ்நாட்டில் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடியவர்களை அடையாளப் படுத்தும் ஊர்தியை வடிவமைத்தது. ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சார்ந்த வரலாறு தெரியாத நிபுணர்கள் குழு இதை பரிசீலித்தது.  அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது. கடந்த செப்டம்பரில் இருந்து...

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

‘சுயமரியாதை; ஜாதி ஒழிப்பு’ என்ற சொல்லாடல்கள் பல்வேறு திக்குகளிலிருந்து கேட்கத் தொடங்கி இருக்கின்றன. ‘நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை முக்கியமானது; ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது’ என்று கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, பெங்களூரில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசி யிருக்கிறார். ‘சவிதா’ என்ற சமூகத்தின் சார்பில் ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா வில் சித்தராமய்யா இவ்வாறு பேசியிருக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தில் ஜாதி எதிர்ப்புக்காகப் போராடிய பசவண்ணாவை அவர் நினைவு கூர்ந்திருக் கிறார். “நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த ஜாதியைச் சார்ந்தவர் இரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்து விட்டால் மீண்டும் ஜாதியைப் பேசத் தொடங்கி விடுகிறோம். ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது. செய்யும் தொழிலையே ஜாதியாக மாற்றி மேல் ஜாதி – கீழ் ஜாதி என்று பிரிவை வைத்துள்ளனர். மூட...

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு. நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால்  தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு...

தலையங்கம் இது ஆரிய தேசமா?

தலையங்கம் இது ஆரிய தேசமா?

‘அய்.அய்.டி.’ உயர்கல்வி நிறுவனங்கள் ‘ஆரியப் பெருமை’களைப் பறைசாற்றும் அமைப்புகளாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றன. மக்கள் வரிப் பணத்தில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் நோக்கமே இது தானா? ‘ஆரியர் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்’ என்றும், சமஸ்கிருதத்தில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களை வெளிக் கொணர வேண்டும் என்றும், இந்திய சிந்தனையின் அடிப்படை யிலான அறிவுக் கட்டமைப்பை மீண்டும் புதுப்பித்துப் பரப்ப வேண்டும் என்றும், கோரக்பூர்அய்.அய்.டி. நிறுவனம் ‘காலண்டர்’ வழியாக ஆரியக் கொள்கைப் பரப்புரையில் இறங்கியிருக்கிறது. கோரக்பூர்  அய்.அய்.டி. இயக்குனர் – ஒன்றிய நிதியமைச்சரின் முதன்மை ஆலோசகர், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் இணைந்து அந்தக் காலண்டரை உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதாரங்களாக இதில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் ‘தரம் தாழ்ந்த சிந்தனைகள்’ என்று பல ஆய்வாளர்கள் மானுடவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஆரியர்கள் தான். பாரத தேசத்தின் பூர்வீகக் குடிகள், அவர்களுக்கு தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஆரியர்களைத் தவிர மற்றவர்கள்...

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம்  பாகுபாடு காட்டக் கூடாது

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது

அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உள்ள நியாயங்களை மறுத்துவிட முடியாது. அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, `முன் விடுதலை’ என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை...

தலையங்கம் மூவருக்கும் நன்றி

தலையங்கம் மூவருக்கும் நன்றி

மூன்று பேருக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவர் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர். மற்றொருவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். மூன்றாமவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த மூவருடைய முயற்சியின் காரணமாக இப்போது நல்ல பயன் ஒன்று கிடைத்திருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார். சுவாமி தியான நிலையில் இருந்தார் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் தான். அது தேசியகீதம் போல நாட்டு வணக்கப் பாடல் அல்ல. சங்கராச்சாரி போன்ற மிகப் பெரிய மகான்கள் அமர்ந்த நிலையில் இறை வாழ்த்து பாடுகிறபோது தியானத்தில் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கலாம். அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும்...

தலையங்கம் பாரதிதாசனும், பாரதியும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றனரா?

தலையங்கம் பாரதிதாசனும், பாரதியும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றனரா?

பாரதியும் பாரதிதாசனும் ஏற்றுக்கொண்டதே புதிய கல்வி கொள்கை என்று திருச்சியில் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பேசியிருக்கிறார். அதே மேடையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கு மறுப்பையும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை. விருப்பமுள்ளவர்கள் வேறு எந்த மொழியையும் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ள எந்த தடையும் கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசின் தனியான கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் அதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த நாளே அறிவித்திருக்கிறார். பாரதி, பாரதிதாசன் காலங்களில் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாகவும் 3,  5, 8, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முறை எங்கே இருந்தது? ஆளுநருக்கு உரை எழுதித் தரும் அதிமேதாவிகள் பாரதிதாசன் ஏற்றுக் கொண்டதுதான் புதிய கல்விக் கொள்கை என்று எழுதித் தருகிறார்கள்....

தலையங்கம் அய்.அய்.டி.களில் தொடரும் ‘மனு தர்மம்’

தலையங்கம் அய்.அய்.டி.களில் தொடரும் ‘மனு தர்மம்’

நாட்டின் உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனமான ‘அய்.அய்.டி.’கள், பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி, ‘மனு தர்மத்தை’ அறிவிக்கப்படாத சட்டமாக பின்பற்றி வருகிறது. கடும் போராட்டத்துக்குப் பிறகு மாணவர், ஆசிரியர் தேர்வுகளில் 27 சதவீதம், 22.5 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற சட்டம் இயற்றிய பிறகும், பார்ப்பன நிர்வாகம் இடஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்றாததோடு, நிறுவனம் நடத்தும் ‘தகுதி’க்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அற்பக் காரணங்களுக்காக படிப்பைத் தொடர விடாமல் தடுத்து விடுகிறது. 1996 முதல் 2000 வரை சென்னை அய்.அய்.டி.யின் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர் போராட்டங்களை நடத்தி, அங்கே நடக்கும் ‘பாகுபாடு’களை  பார்ப்பனி யத்தை பொது வெளிக்கு வெளிச்சப்படுத்தியது. கடந்த நவம்பர் 24, 2021 அன்று உச்சநீதிமன்றம் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றப் படாததை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. குறிப்பாக ஆய்வுப் படிப்புகளில் பட்டியல் இனப் பழங்குடி மாணவர் களுக்கான ஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்றன....

தலையங்கம் அதிகார ஆணவத்தை தகர்த்தது, மக்கள் சக்தி

தலையங்கம் அதிகார ஆணவத்தை தகர்த்தது, மக்கள் சக்தி

விவசாயிகளின் சக்தி, அரசு அதிகாரத்தைப் பணிய வைத்துவிட்டது. ஓராண்டு காலமாக கொட்டும் பனியில் இரவு பகலாக அமைதி வழியில் போராடிய விவசாயி களின் கோரிக்கை மூன்று வேளாண் சட்டங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான். விவசாயம் – மனு சாஸ்திரத்தால் பிராமணர்களுக்கு தடை செய்யப்பட்ட சூத்திரர்களுக்கான தொழில். எனவே விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கத் துடிக்கிறது ‘இந்துத்துவா’ ஆட்சி. டெல்லியில் தொடங்கிய போராட்டம், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்திர பிரதேசம் என்று விரிவடைந்து நாடு தழுவிய போராட் டமாகி உலக அளவில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ஆணவத்தை வெளிச்சப்படுத்தியது என்றே கூறலாம். இந்த சட்டம் நல்ல சட்டம் என்றும், இதன் பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு புரிய வைக்க முடியாத நிலையில் திரும்பப் பெறுவதாகவும் மோடி அறிவித்திருப்பது, விவசாயிகளை புரியும் திறனற்றவர்கள் என்று அவமதிப்பதாகும். ஆனாலும் விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதிப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டு, விவசாயத்தோடு தொடர்புடைய மின்சார...

தலையங்கம் “சூத்திரர்களை” இழிவுபடுத்திய ஆதி சங்கரரை பிரதமர் புகழ்வதா?

தலையங்கம் “சூத்திரர்களை” இழிவுபடுத்திய ஆதி சங்கரரை பிரதமர் புகழ்வதா?

உத்தரகாண்ட் மாநிலம் கேதார் நாத்தில், ஆதி சங்கரரின் 12 அடி உயர சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “சமுதாய நன்மைக்காக ஆதி சங்கரர், புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரைகள் வழியாக நமது கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது” என்று பேசி இருக்கிறார். பல்வேறு – மொழி – இனம் – மதங்களைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர், இப்படி கலாச்சாரத்தை ‘ஓர்மைப்படுத்தி’ பார்ப்பனிய சமஸ்கிருதப் பண்பாடு தான் இந்தியாவின் பண்பாடு என்று பேசுவது, அவர் அனைத்து பிரிவினருக்குமான பிரதமர் அல்ல என்பதையே வெளிப்படுத்துகிறது. ஆதி சங்கரர் யார்? அவர் உருவாக்கிய அத்வைத சித்தாந்தத்தின் நோக்கம் என்ன? இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் போராட்டம் நடத்திய திலகர், ஆதிசங்கரர் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நாட்டில் எங்கும் பரவி இருந்த சமண பவுத்த...

தலையங்கம் நாட்டார் வழிபாடும் வைதீக எதிர்ப்பும்!

தலையங்கம் நாட்டார் வழிபாடும் வைதீக எதிர்ப்பும்!

நாட்டார் தெய்வ வழிபாடுகள், தமிழர் மரபின் அடை யாளங்கள் என்றும் வைதீக பார்ப்பனியத்துக்கு எதிரானவை என்றும் பெருமை கொண்டாடுகிறவர்கள் இருக்கிறார்கள். வைதீகப் பண்பாட்டுக்கு எதிரானவை இந்த நாட்டார் வழிபாடுகள் என்றால், வைதீகத்திடமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்க வேண்டுமே! அப்படி எந்த எதிர்ப்புகளும் அவர்களிடமிருந்து வரவில்லை என்பதோடு, இந்த வழிபாட்டு முறைகள் மீதான மக்கள் நம்பிக்கை தொடர்ந்து நீடித்தால் தான், தங்களின் வைதீக பார்ப்பனிய மரபுக்கு வலிமை சேர்க்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதேபோன்று, ‘நாட்டார் மரபு’ வழிபாடுகளைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத தமிழர்களும் தங்களது வழிபாடு வைதீகத்துக்கு எதிரானது என்று கருதுவதும் இல்லை. மாறாக, ‘வைதீக’ வழிபாட்டு முறைகளோடு பார்ப்பனியம் கட்டமைத்த சமஸ்கிருதப் பண்பாட்டு சடங்குகளையும் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள். நாட்டார் சடங்கு வழிபாடுகள் பெரும்பாலும் கிராமங்களில் ஜாதியக் கட்டமைப்புக்குட்பட்டே நிகழ்த்தப்படுகின்றன.  ஒடுக்கப்பட்ட ஜாதியினரை உள்ளூர் வழிபாடுகளில் ஒதுக்கி வைக்கிறார்கள். பல நாட்டார் வழி பாடுகளில் பெண்கள் பங்கேற்பதும் தடை செய்யப்படுகிறது....

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை. இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்வி கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்வி கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியை கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஊடுருவி கல்வியை தங்கள் வசப்படுத்திக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற காரணத்தினால், கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தார்கள், நாமும்...

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு – மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் முதல் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக பின்பற்ற வேண்டும் என்று முடிவு ஏற்கனவே செய்து, அந்த நாளில் தமிழ் நாட்டுக்கான கொடி ஒன்றை ஏற்ற கடந்த ஆண்டு முடிவு செய்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான ஆட்சி, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவித்தது. விழா நடத்தியது. ஆனாலும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்தது எடப்பாடி. பழனிச்சாமி ஆட்சி. இந்த ஆண்டு இதே போன்று நவம்பர் முதல் நாளை ‘தமிழ்நாடு’ நாளாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தது. இந்த நிலையில் நவம்பர் 1, மொழி வழி மாநிலம் பிரிந்தபோது தமிழ்நாட்டுக்கு ‘சென்னை மாகாணம்’ என்கிற பெயர் இருந்தது. பெரியார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும்...

தலையங்கம் ‘உள் ஒதுக்கீடு’ அறிவிப்புகள் உணர்த்துவது என்ன?

தலையங்கம் ‘உள் ஒதுக்கீடு’ அறிவிப்புகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் களத்தில் கூட்டணி பேரத்துக்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளோடு பிணைந்து நிற்கும் இடஒதுக்கீடு கொள்கை பகடைக்காயாக்கப்படுகிறது. தமிழகத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து விவாதங்கள் ஏதுமின்றி (எதிர் கட்சிகள் அவையில் இடம் பெறவில்லை) நிறைவேற்றியிருக்கிறார்.  அடுத்த நாளே பா.ம.க.வுடன் இழுபறியாக இருந்து வந்த அ.தி.மு.க. கூட்டணி பேரம் முடிவுக்கு வந்து விட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்; சீர் மரபினருக்கு 7 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என்று பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடு எண்ணிக்கைகளுக்கு பின்பற்றப்பட்ட அளவுகோல் என்ன என்பது அடிப்படையான கேள்வி. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; கல்வி, அரசுப் பணிகளில் குறிப்பிட்ட ஜாதி பெற்றுள்ள பிரதிநிதித்துவம் குறித்த விவரங்கள் ஏதுமின்றி அவசர கோலத்தில்...

தலையங்கம் ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?

தலையங்கம் ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?

ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டு நடுங்குகிறது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. தங்களிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், முகநூல் பதிவாளர்களைக் கைது செய்யும் ‘இட்லரிச’ அடக்குமுறைகளைக் கொடூரமாகக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதற்காக தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்ற அறவுணர்வு இல்லாத நபர்களை ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் பீமாகோரேகானில் உள்ள தலித் மக்களின் நினைவிடத்துக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். பீமாகோரேகான் பகுதியில் பேஷ்வா பார்ப்பனர் ஆட்சி நடந்த போது கொடூரமான ஜாதி அடக்குமுறைகளை சட்டமாக்கியிருந்தனர். அப்போது பிரிட்டிஷார் படையில் இணைந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ‘பேஷ்வா’ படையினருடன் போரிட்டு அவர்களை வீழ்த்தியதன் நினைவாக அங்கே நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. 2018 ஜனவரி முதல் நாள் அங்கே வீர வணக்கம் செலுத்த வந்தவர்கள் மீது...

தலையங்கம் தமிழக அரசியல் அவலங்கள்

தலையங்கம் தமிழக அரசியல் அவலங்கள்

‘பொது மக்களிடம் பெரிதும் புத்தியும் இல்லை; ஒழுக்கமும் இல்லை; மானமும் இல்லை என்ற நிலை இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆளும் கட்சியும் வயிற்றுப் பிழைப்புக்கும் பொது நல வேடம் போட்டுக் கொண்டு திரியும் எந்த அரசியல் கட்சியும் திருந்துவதற்கு வகையே இல்லாமல் போய்விட்டது.” – இது 1959ஆம் ஆண்டு பெரியார் ‘விடுதலை’யில் எழுதிய அரசியல் குறித்த மதிப்பீடு. சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் கட்சி அரசியல் –  தேர்தல்அரசியல் – மாண்புகள் மேலும் மேலும் சீரழிந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போது எம்.ஜி.ஆர். தொடங்கிய ‘அ.இ.அ.தி.மு.க.’வில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளன என்ற உண்மையை மறுக்கவே முடியாது. இந்தியாவிலேயே முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர் – முடிவெய்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. சிறைத் தண்டனையோடு 100 கோடி அபராதமும்...

தலையங்கம் தமிழ்ப் புத்தாண்டை ஏற்க மறுக்கும் குழப்பவாதிகள்

தலையங்கம் தமிழ்ப் புத்தாண்டை ஏற்க மறுக்கும் குழப்பவாதிகள்

தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செய்த மகத்தான பண்பாட்டுப் புரட்சியாகக் குறிப்பிட வேண்டும் என்றால் அது தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததுதான். இதனால் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டுக்கணக்காக மாற்றப்பட்டது. ஒரு வார காலம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டை அரசு அலுவலகங்களில் விழாவாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தார். ஜெயலலிதா முதல்வரான பிறகு இதை அகற்றி மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து, ‘சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு’ உயிர் கொடுத்தார். இந்த நிலையில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது என்று இந்துத்துவம் பேசுவோர் கூறுகிறார்கள். பா.ஜ.க. அண்மையில்  கொண்டாடிய பொங்கல் விழாவில்கூட ‘தமிழ்ப் புத்தாண்டை’ கொண்டாடவில்லை. பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கு மகா ஷங்கராந்தியில் உத்ராயண வாழ்த்து” என்று குறிப்பிட்டிருந்தார். இதே குரலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், “தை...

தலையங்கம் கோத்தபயே மிரட்டுகிறார்!

தலையங்கம் கோத்தபயே மிரட்டுகிறார்!

இந்திய பிரதமர் ஒருவருக்கும் (ராஜீவ் காந்தி) இலங்கை அதிபருக்கும் (ஜெயவர்த்தனா) இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு பதின் மூன்றாவது சட்டத்திருத்தத்தை ஒப்புக் கொண்டது. மிகக் குறைந்த  அதிகாரங்களை மட்டுமே வழங்கக் கூடிய அந்த ஒப்பந்தத்தைக்கூட நிறைவேற்ற இப்போது கோத்தபயே தலைமையிலான இலங்கை அரசு தயாராக இல்லை. குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்று சொல்வதைப் போல, ‘மாகாண சுயாட்சி’ என்ற அதிகாரத்தைப் பகிர முன் வராத இலங்கை அரசு, இப்போது அந்தத் தீவில் மாகாணங்களையே முற்றாக ஒழித்து ஒற்றை ஆட்சியை உருவாக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினார். அவர் பேசி விட்டு இந்தியா திரும்பிய உடனேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குள்ளான மக்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னத்தை இடித்துத் தள்ள இலங்கை அரசு உத்தரவிட்டது. கடும்...