தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?
மதச்சார்பின்மை ‘சோசலிசம்’ என்ற சொற்கள் 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது இல்லவே இல்லை என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைச் செயலாளர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்மையில் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் கீழ் உறுதி மொழியேற்று – பதவிக்கு வந்தவர் ஆளுநர். அவர் மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும் என்று சட்ட மறுப்புப் பேசுகிறார். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை ஏன் அகற்ற வேண்டும்? அகற்றிவிட்டால் ’இந்துக்கள்’ நாடு என்றாகிவிடுமா? அதாவது அரசியல் சட்டக் குழு மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்கவில்லை, அதை இந்திரா காந்தி தான் திணித்தார் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடித்தளமே மதச்சார்பின்மை தான். சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் மதப் பாகுபாடு கூடாது; ஜாதிப் பாகுபாடு கூடாது; இனப் பாகுபாடு கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது....
