Category: பெரியார் முழக்கம்

வினா… விடை…!

வினா… விடை…!

இனி நவீன உடையணிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர உயர்நீதிமன்றம் விதித்த தடை அமுலுக்கு வந்தது. – செய்தி ஏதோ பழக்கத்தின் காரணமா அப்பப்போ கோயிலுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களையும் வரவிடாம தடுத்திட்டாங்க… இதுவும் நல்லதுக்குத்தான். இந்திய சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை. – மோகன் பகவத் ‘இந்து’ சமூகம்னு உண்மையை சொல்றதுக்கு இவருக்கே வெட்கம்; அதனால திடீர்னு இந்திய சமூகத்துக்கு தாவிட்டாரு… கோயில் வழிபாடு என்பதே ஆகமம்தான்; சிலைகள் அல்ல. – ‘இந்து’ ஏட்டில் பார்ப்பனர் கடிதம் ஆக, ஆகமம் பின்பற்றப்படாத கோயில்கள், அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் கோயில்களே இல்லை. அப்படித்தானே? வேதங்கள், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன. – திருப்பதியில் பிரணாப் முகர்ஜி பேச்சு அட, வேத காலத்திலேயே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி நாடுகள் எல்லாம் வந்துருச்சா? சொல்லவே இல்ல! அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. – இல. கணேசன் அரசியலமைப்பு...

கழகத் தோழர் மல்லை கண்ணன் முடிவெய்தினார்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர், ந.கண்ணன் உடல்நலக் குறைவால் 01.01.2016 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வு 02.01.2016 அன்று நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி மற்றும் மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர், தமிழ்ப் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இறுதியாக நண்பகல் 12.30 மணியளவில் மல்லசமுத்திரம் பொதுமயானத்தில் கண்ணனின் உடல் எரியூட்டப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறந்த களப்பணியாளராக செயல்பட்டு வந்த கண்ணன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கு மட்டுமின்றி திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் மிகுந்த இழப்பு. கடைசியாக நடந்த சேலம் கழக மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தோழர்களிடம் உரையாடினார். அதுவே...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவைச் சென்னை சட்ட மேலவை யில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வர விடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மவுனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று ‘நம்நாடு’ நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளை யும் அழைத்துக் கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர் களின் உரைகள் ‘நம்நாடு’ நாளிதழில் தொடராக...

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

இந்து அறநிலையத் துறை, பல ‘புரட்சி’களை நடத்தி வருகிறது. “அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் மிஞ்சி நிற்பது கடவுள் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அம்மா நம்பிக்கையா?” என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. கேரள நம்பூதிரிப் பார்ப்பன சோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி அறநிலையத் துறை தொன்மையான கோயில்களை இடித்து வருகிறதாம். நாமக்கல் மாவட்டம் திருமான்குறிச்சியில் உள்ள 100 ஆண்டுகால பழமையான மருதகாளி அம்மன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள 330 ஆண்டு பழமையான பெரிய நாயகி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்திலுள்ள மாரியம்மன் கோயில் என்று கோயில்களை அறநிலையத்துறையே இடித்துத் தள்ளுகிறது. இந்தக் கோயில்கள் ‘அபசகுணமாக’ இருப்பதாக கேரள பார்ப்பன ஜோதிடர் கூறிய ஆலோசனைப்படி இந்த இடிப்பு நடக்கிறதாம். ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் இப்படி இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் ‘அபசகுணம்’ என்ற காரணத்தைக்...

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். இந்து தமிழ் நாளேட்டில் (3.1.06) இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி. 1970-ல் இந்தச் சட்டப்பிரிவு திருத்தப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையிலான நியமனம் இரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (சேஷம்மாள் வழக்கு) அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதசார்புத் தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்தது. ஆனால் எந்த சைவ மற்றும் வைணவக் கோயில் களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. அதே சமயத்தில் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும்...

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது. ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். 1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை...

தமிழக அரசின் பொய் வழக்கில் கொளத்தூர் மணி விடுதலை

தமிழக அரசின் பொய் வழக்கில் கொளத்தூர் மணி விடுதலை

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு காட்டுக்குள் கடத்தி சென்று வைத்திருந்தார். அப்போது ராஜ்குமாரை மீட்க ‘தமிழக அரசின் தூதுவர்களாக’ அந்த ஆண்டு நவம்பர் மாதம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், பேரா.கல்யாணி முதலியோர் காட்டுக்குள் சென்று ராஜ்குமார் குழுவினரைப் பத்திரமாக மீட்டு வந்தனர். ‘நடிகர் ராஜ்குமார் மீட்புக்கு செல்லவேண்டாம்’ என்ற தனது அறிவுரையை மீறி சென்றதால், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, கொளத்தூர் மணியிடம் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதுவரைத் தனித் தனியாக செயல்பட்டு வந்த, ஆனூர் ஜெகதீசன் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்து இயங்கிவந்த பெரியார் திராவிடர்க் கழகம், திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் நடத்திவந்த தமிழ்நாடு திராவிடர்க் கழகம், புதுவையில் லோகு. அய்யப்பன் தலைமையில் இயங்கிவந்த இராவணன் படிப்பகம், தூத்துக்குடியில் பால் பிரபாகரன் வழி நடத்தி வந்த...

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சி இயக்கங்களைச் சார்ந்த ‘தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம்’ வேண்டுகோள் வைத்துள்ளது. 7 தமிழர்கள் மட்டுமல்லாது சிறையில் நீண்டகாலம் வாடும் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியது. அண்மையில் வெளி வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தப் பிரிவை பயன்படுத்தும் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது என்றும், கூட்டியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் ஜன.4ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டியக்கம் சார்பில் தோழர்கள் வேல் முருகன், தியாகு செய்தியாளர்களிடம் முன் வைத்த அறிக்கை : இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக் குமார் ஆகிய...

ஆடைக் கட்டுப்பாடு

ஆடைக் கட்டுப்பாடு

கோயில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்திருக் கிறது மதுரை உயர்நீதிமன்றம். இனி கோயிலுக்கு வரும்போது வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தா, புடவை போன்ற உடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். நவீன உடைகளில் அதாவது ஜீன்ஸ், டீ சட்டை, அரைக் கால் டிரவுசர், ‘லெக்கின்ஸ்’ போன்ற உடைகளில் கோயிலுக்குள் வரக் கூடாது என்று தடை வந்து விட்டது. ‘பக்தர்களுக்கு ஆடைகள் கட்டுப்பாடு பற்றி ஆகமங்களில் ஏதேனும் விதி இருக்கிறதா?’ என்று கேட்டார் ஒரு தோழர். அதற்கு ‘ஆகமங்கள் அர்ச்சகர் களுக்கும் கோயில்களுக்கும் தான்’ என்றார் சிவாச்சாரி. “சட்டை இல்லாமல் திறந்த மேனி யோடு பூணூல் வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். அதுவும் ஆண்களாக ஒரே ‘குலத்தவராக’ இருக்க வேண்டும்; அப்படித்தானே” என்று எதிர் கேள்வி போட்டார் தோழர். அதாவது பக்தர்களுக்கு மட்டும் ஆடை அணிவதில் கட்டுப்பாடு; அர்ச்சகர்களுக்கு ஆடை இல்லாத கட்டுப்பாடு; அதேபோல் கடவுள் சிலைகளுக்கும் ஆடை இல்லாத கட்டுப்பாடுதான்; நிர்வாணமாக நிற்கும்...

மக்கள் பேராதரவுடன் சித்தூரில் கழகக் கூட்டம்

10-1-2016 ஞாயிறு அன்று மாலை சேலம் மாவட்டம் சித்தூர் சந்தைத் திடலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் (மேற்கு ) மாவட்டத் தலைவர் கு.சூரியக் குமார் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுத் தோழர்களின் பறைமுழக்கம், தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்தூர் தோழர் இரா.ரகு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செய்லாளர் ஆதிமுரசு, ஆதித் தமிழர்ப் பேரவை மாவட்டச் செயலாளர் க.இராதாகிருட்டிணன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் உரையைத் தொடர்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவ்வூரில் கழகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். பெரும் திரளாகக் கூடிய பொதுமக்கள் கூட்டத்தின் இறுதிவரை இருந்து கூட்டத்தை, உற்சாகமாகக் கைதட்டியும், ஆதரவு குரல் எழுப்பியும் கவனித்தனர்....

0

அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அணு ஒப்பந்தங்களை இரத்து செய்!

Visual Text Visual</button><br /> <button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”>Text</button><br /> </div><br /> </div><br /> <div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”><div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”></div><textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”>Visual&lt;/button&gt;<br /> &lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&gt;Text&lt;/button&gt;<br /> &lt;/div&gt;<br /> &lt;/div&gt;<br /> &lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&gt;&lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&gt;&lt;/div&gt;&lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&gt;Visual&amp;lt;/button&amp;gt;<br /> &amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;gt;Text&amp;lt;/button&amp;gt;<br /> &amp;lt;/div&amp;gt;<br /> &amp;lt;/div&amp;gt;<br /> &amp;lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&amp;gt;&amp;lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&amp;gt;Visual&amp;amp;lt;/button&amp;amp;gt;<br /> &amp;amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;amp;gt;Text&amp;amp;lt;/button&amp;amp;gt;<br /> &amp;amp;lt;/div&amp;amp;gt;<br /> &amp;amp;lt;/div&amp;amp;gt;<br /> &amp;amp;lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&amp;amp;gt;&amp;amp;lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&amp;amp;gt;&amp;amp;lt;/div&amp;amp;gt;&amp;amp;lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&amp;amp;gt;Visual&amp;amp;amp;lt;/button&amp;amp;amp;gt;<br /> &amp;amp;amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;amp;amp;gt;Text&amp;amp;amp;lt;/button&amp;amp;amp;gt;<br /> &amp;amp;amp;lt;/div&amp;amp;amp;gt;<br />...

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்! மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி...

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...

நம்மாழ்வார் முடிவெய்தினார்

நம்மாழ்வார் முடிவெய்தினார்

வேளாண் துறையில் பன்னாட்டு ஊடுருவலை எதிர்த்தும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் அரசுப் பதவிகளை உதறிவிட்டு, மக்களோடு மக்களாக இணைந்து போராடிய நம்மாழ்வார் (75) 30.12.2013 திங்கள் கிழமை அன்று முடிவெய்தினார். செயற்கை உரங்களற்ற இயற்கை விவசாயத்தை மக்களிடையே பரவச் செய்வதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். கிராமப் புத்துருவாக்கம், கிராம வாழ்க்கை போன்ற கருத்துகளில் நமக்கு மாறுபாடு உண்டு என்றாலும்,  அவரது எளிமையும், அர்ப்பணிப்பு உணர்வும் போற்றத் தகுந்தது. வேளாண் துறைகளையும் கடந்து ஈழத் தமிழர்களுக்கும் மனித உரிமைக்கும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார். திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது பெரியார் முழக்கம் 02012014 இதழ்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

பெரியார் தனது எதிர்நீச்சல் பயணம் குறித்து செய்துள்ள சுயமதிப்பீடு இது. வாழப்போவது இன்னும் சிலகாலம்தான் என்று எழுதும் பெரியார், அதற்குப் பிறகு 45 ஆண்டுகாலம் சமுதாயத் துக்காகவே உழைத்திருக்கிறார். “பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடி அரசி’னாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித் தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலவர்கள் என்பவரைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். கோவில் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாமி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாத்திரம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். வேதம் என்று சொல்வதைக்  கண்டித் திருக்கிறேன்.  பார்ப்பனீயம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். சாதி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதி ஸ்தலம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக் கிறேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். தேர்தல்...

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார். டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆவணப்...

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் முனைப்போடு மக்களை சந்தித்து, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, 10 ரூபாய் நன்கொடை திரட்டும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் தோழர் சிவானந்தம்  600க்கும் அதிகமான மக்களை சந்தித்துள்ளார். மக்கள் ஆதரவு தருவதாகவும், கொடுக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக மக்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.5000, பொருளாளரிடம் கொடுத்துள்ளார். பவானியில் தோழர் வேல்முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தி.க. தலைவர் வீரமணி தாக்கப்பட்டபோது, கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறையை பாராட்டியதோடு உண்மையான பெரியாரியக்கம் என தெரிவித்து தோழர்கள் நன்கொடை அளித்தனர். கோபி கோட்டாம்பாளைய தோழர் கார்த்திக்,  திருப்பூர் பேருந்து நிலையத்தில் 1 மணி நேரத்தில் 100 பேரை சந்தித்து முடித்தார். மேலும் நன்கொடை ரசீது புத்தகம் கேட்டு பொறுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார். திருவாரூரில் காளிதாஸ், செந்தமிழன், முருகன் ஆகிய தோழர்கள்...

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை கைது செய்து, இரண்டு மாதங்கள் உருண் டோடி விட்டன. சேலம் சிறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் கிருஷ்ணன், அருண் குமார், அம்பிகாபதி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலை தோழர் கொளத்தூர் மணி, அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30 ஆம் தேதி மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் தோழர்கள் உமாபதி, இராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்களாகவும் தீர்மானங்களாகவும் வலியுறுத்திய கோரிக்கையை கழகத் தோழர்கள் வலியுறுத்தினால் அது தேசப் பாதுகாப்பு என்ற குற்றமாகி விடுகிறது. இது ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!...

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

தில்லை தீட்சதர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது.  – உச்சநீதிமன்றம் சரி; அப்படியானால், அரசு நிறுவனமான நீதிமன்றம் தலையிடு வதும், வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்குவதும் நியாயமா? திருநாவுக்கரசர், திருஞானசம் பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சைவக் குரவர்கள் பாடல் பெற்ற திருத்தலம் தில்லை.  – செய்தி அது அந்தக் காலம். இப்போது தீட்சதர்கள் மட்டுமே பாடலாம்; ஓதுவார்கள் நுழைந்தால் அடி, உதை! பொது தீட்சதர்கள் சபைக்கு தலைவரே, தில்லை நடராசன் தான்.  – தீட்சதர்கள் வாதம் தலைவர் பதவி வேண்டாம்; பொரு ளாளர் பதவியைக் கொடுத்து விடுங்கள்; உண்டியல் பணம், நகைகள் திருட்டுப் போனால் தீட்சதர்களை நோக்கி எவனும் கேள்வி கேட்க முடியாது? அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் தில்லை நடராஜன் கோயில் வராது.  – உச்சநீதிமன்றம் அதேபோல், இந்திய அரசியல் சட்டம், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் தீட்சதர்களும் வர மாட்டார்கள் என்பதையும் இப்போதே உறுதி செய்து விடுங்கள். ஒரு வேளை...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

12 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.   – செய்தி அப்படியா? 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி எல்லாம் விரிவாக அலசியிருப்பாங்க. திருப்பதி, திருமலையில் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு ஏற்படுவதால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி இதை ‘ஏழுமலையான்’ கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்கும் ‘மின்னஞ்சல்’ வேலை செய்ய வேண்டுமே! என்னதான் செய்வது? உ.பி.யில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும்.   – மோடி அமைக்கலாம்! தேர்தல் ஆணையத்தில் ‘ஸ்ரீராமன்’ கட்சியை பதிவு செய்து விட்டீர்களா? எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் உடனே அகற்றச் சொல்லி விட்டேன்.  – அதிகாரிகள் கூட்டத்தில் ஜெயலலிதா சரிங்க மேடம். இதையும் ஒரு பேனரில் எழுதி, பேனர்களோடு பேனர்களாக வைத்து விடலாம். ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேத்ரிவால் என்ற சாதாரண மனிதரை முதல் வராக்கியது காங்கிரஸ்.  – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெருமிதம் காங்கிரஸ் தனிமைப்பட்டு...

தமிழக அரசை கண்டிக்கிறோம்

தமிழக அரசை கண்டிக்கிறோம்

ஆசிரியர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக சமூக நீதியை புதை குழிக்கு அனுப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இப்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அமைக்க விருக்கும் உயர்தர மருத்துவமனை யின் மருத்துவருக்கான தேர்விலும் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித் துள்ளது வன்மையான கண்டனத் துக்கு உரியது. இதற்காக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில் மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடு முறை மறுக்கப்பட் டுள்ளது. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கப்படுவதால் இடஒதுக் கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் இதற்கு தகுதியானவர் களாக மாட்டார்கள் என்று அரசு கருதுவது பார்ப்பனியக் கண் ணோட்டமேயாகும். இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஜெயலலிதா ஆட்சியும் வழி மொழிகிறது. ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற விருது பெற்ற முதல்வர் ஜெயலலிதா, இப்போது சமூக நீதியைப் புறக்கணிக்கும் வீராங்கனையாகி வருகிறாரா என்று கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டுக் கொள்கையை படிப்படியாகக் கைவிடுவதற்கான முயற்சியின் தொடக்கப் புள்ளி...

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....

இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!

இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!

தமிழக அரசே! ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் நியமனங்களை ரத்து செய்! ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தி, இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்காதே! ஓமந்தூர் ராமசாமி தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசு மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீட்டை அமுலாக்க முடியாது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா! ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்துவிட்டு பிறகு நிரந்தர மாக்கப்படுவதே இதில் அடங்கியுள்ள சதி. எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக  தமிழ்நாடு முழுதும் – மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை இந்த மருத்துவமனையில் பணியமர்த்தம் செய்ய முடியும். ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்கிறார், முதல்வர் ஜெயலலிதா. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி வேறு பெயரை ஏன்...

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ் மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு ‘அமுது’ செய்தனர். அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே? ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன்...

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

தில்லை நடராசன் கோயில் நிர்வாக உரிமையை தீட்சதப் பார்ப்பனர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டது உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக் கோயில் களும் கொண்டு வரப்பட்டாலும், தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடு இரண்டையும் பார்ப்பனர்களிடமிருந்து பறி போய்விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், கடந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனர்களின் ‘கோரத் தாண்டவம்’ எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த நிலையில் தில்லை நடராசன் கோயில், பெண்ணடிமை – வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டையாகவும், சைவ வைணவ மோதல் களமாகவும் இருந்து வந்துள்ளதற்கான வரலாற்றுத் தகவல்களை இங்கு வெளியிடுகிறோம். சைவத்தின் பெருமை பேசும் தில்லை நடராசன், தன்னுடன் போட்டிக்கு வந்த பெண் தெய்வத்தை எப்படி சூழ்ச்சியில் வெற்றி பெற்றான் என்பதைக் கூறுகிறார் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி. சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில...

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா. நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது? ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய...

சன் தொலைக்காட்சி வீரபாண்டியனுக்கு பா.ஜ.க. மிரட்டல்

சன் தொலைக்காட்சி வீரபாண்டியனுக்கு பா.ஜ.க. மிரட்டல்

மதவாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடகவியலாளர் சன் தொலைக்காட்சி வீர பாண்டியன் மீது பா.ஜ.க. தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவிய லாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கண்டித்து ஜன. 7 அன்று வெளியிட்ட கூட்டறிக்கை: மதவாதத்திற்கு எதிராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீரபாண்டியனை பணியிலிருந்து நீக்க வேண்டு மென மதவாத சக்திகள் வலியுறுத்தியுள்ளதை மதச் சார்பின்னைம மீது நம்பிக்கைக் கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் ஈட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளி யிட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரபாண்டியன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. வின் மாநில அலுவலகச் செயலாளர் கி.சர்வோத்தமன், சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்குநருக்கு டிசம்பர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரசை அப்படி எழுப்பிவிடத்தான் முடியுமா?   – அமர்த்தியாசென் இதற்கு நீங்களே விடை கூறிவிட்டால், மற்றொரு நோபல் பரிசை தட்டிக்கொண்டு போய் விடலாம், சார். பிணையில் விடுதலையான லாலுபிரசாத், சாமி தரிசனத்துக்குப் போனபோது,  ஒரு போலீஸ் அதிகாரி, லாலு கால்களைக் கழுவினார். ஜார்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவு.   – செய்தி அதெல்லாம் சுத்தமாகத்தான் கழுவி இருப்பார். நம்புங்கள். இதற்கெல்லாம் விசாரணையா? நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற வேண்டும்.  – மன்மோகன்சிங் “பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான்; விரைவில் சரியாகி விடும்” என்ற நம்மால் செய்ய முடிந்த கொள்கையை அப்படியே சரியாகச் சொல்லணும்! ஆமாம். இறை நம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!  – ஜெயலலிதா பேச்சு அதனால என்னங்க பயன்? இறை நம்பிக்கை எதிர்க்கட்சிகளையே இல்லாமல் ஒழிக்குமா? அதைச் சொல்லுங்க. மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சி வீட்டுவசதி வாரிய ஊழல் விசாரணை...

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 14 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-தைப் புத்தாண்டு விழா, ஜனவரி 12 ஆம் தேதி காவல்துறை தடையைத் தகர்த்து எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களையும் கொண்டுள்ள பொங்கல் விழாக் குழு, இந்த விழாவை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் பெரியார் திராவிடர் கழகமும், கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் முன்னின்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்த போது, கடந்த 10 ஆம் தேதி காலை காவல் துறை உதவி ஆணையர் (மயிலைப் பகுதி) விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அன்று நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள். அதற்குப் பிறகு பொங்கல் விடுமுறை. எனவே, விழாவை நடத்த விடாமல் தடுத்து விடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது. உடனே கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் அவசர அவசரமாக மனுக்களை தயாரித்து, அவசர...

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

தமிழ்த் திரைப்பட உலகில் ஏராளமான திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்ற ஆரூர் தாஸ், ‘தினத்தந்தி’ நாளேட்டில் தனது கலை உலக அனுபவங்களை தொடராக எழுதி வருகிறார். அதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை (4.1.2014) பதிவு செய்துள்ளார். பெரியார் மீது நடிகவேள் எவ்வளவு உறுதியான பற்றுக் கொண்டிருந்தார் என்பதை  நடிகவேளே விளக்கும் பகுதி இது. ஒரு காலத்துல நடிகர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா, தான் இருந்தோம். இடையில இந்த அரசியல் – கட்சி – அது இதுன்னு வந்து நடிகன்களைப் பிரிச்சி ஒற்றுமை இல்லாமல் ஆக்கித் தனித்தனியா பண்ணிடுச்சி. எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாவுல ஓகோன்னு இருந்த அந்தக் காலத்துல அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலையை பாத்தாங்க. நாட்டை அரசியல்வாதிங்க கவனிச்சிட்டாங்க. கலையை நடிகருங்க, மத்தக் கலைஞருங்க பார்த்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்போ எந்தப் பிரச்சினையும்...

உச்சநீதிமன்றத்தின் மீது பழி போட்டு தப்பிக்கும், ஜெயலலிதா

உச்சநீதிமன்றத்தின் மீது பழி போட்டு தப்பிக்கும், ஜெயலலிதா

‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான மருத்துவர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத்  தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது. எனவே, தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல. உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும்,...

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’...

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். “சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம். தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல. பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8,...

அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல், அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. உயிருக்கு உறுதியில்லாமல் ஈழத் தமிழர்கள் அச்சத்தால் பரிதவிக்கிறார்கள். அடைக் கலம் தேடி ஆஸ்திரேலியா வந்த 46 தமிழர்களை சிறையிலடைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்திய அரசு, இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த ஈழத் தமிழர்கள் 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். சிலர் மனைவி, குழந்தைகளுடன் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்துப் பேசிவர் ஆஸ்திரேலிய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சூழ்நிலைகளில்...

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

வறட்டுத்தன மாய்இங்கே நாத்தி கத்தை வளர்த்திட்டாய் என்றுசிலர் குற்றம் சொல்வார் முரட்டுத்தன மாய்க்கடவுள் மறுத்தாய் என்றும் முணுமுணுப்பார் உள்ளுக்குள்; ஆனால் நீயோ திருட்டுத்தனம் மிக்க பார்ப்ப னீயத் தீமைகளை, சாதியத்தை எதிர்த்தாய் என்றே அருட்தந்தை போல்உன்னைத் தமிழகத்தின் அடித்தட்டு மக்களெலாம் வணக்கம் செய்தார். ‘புதிதாக நீஎதையும் சொல்ல வில்லை புரட்சிகர செயல்எதுவும் செய்ய வில்லை இதற்கு முன்பே இருந்தவைதாம்; உன்பங் கென்றே எதுவுமில்லை’ என்பர்சிலர்! எல்லாம் இங்கே விதிவசந்தான் எனக்கிடந்த மக்கள் நெஞ்சில் விசையூட்டித் தன்மான வீரம் ஊட்டி நதிப்பெருக்காய், கடல்ஆர்ப்பாய் ஓர் இயக்கம் நடத்தியவன் வரலாற்றில் நீயே அன்றோ? ‘தமிழ்மொழியைச் சனியனென்றாய், தமிழைக் காட்டு மிராண்டிமொழி எனச்சொன்னாய்’ என்றே உன்னைத் தமிழ்மொழிக்குப் பகைவனெனக் குற்றம் சாட்டிச் சலிக்காமல் பழிஉரைப்பார்; இந்தி யாலே தமிழ்மொழிக்(கு) உற்றகேட்டைத் தடுத்த துண்டு தமிழ்உணர்ச்சி உன்இயக்கம் வளர்த்த துண்டு தமிழ்மொழிக்குள் ‘நன்றி’என்ற சொல்லும் உண்டு தமிழர்அதன் ‘பொருள்’அறியும் பண்பும் உண்டு ‘ஆடுமாடா மேய்த்திருப்பான் தமிழன்? இல்லை...

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது! பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது! என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்; அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது.    -மோடிக்கு அத்வானி அறிவுரை ஆமாம்! ‘ராமபிரான்’ அனுமார் படையுடன் வெற்றியை காலடியில் கொண்டுவந்து சேர்த்து விடுவான் என்று அதீதமாய் நம்பி ஏமாறக் கூடாது; சரிதானே! மோடி – பிரதமராகவே முடியாது. தேனீர் வேண்டு மானால் விற்கலாம்.  – மணி சங்கர் அய்யர் அவர் தேனீர் விற்கட்டும்; நாட்டை நாங்கள்தான் விற்கவேண்டும் என்கிறீர்களா? “என்னை தீவிரவாதிகள் கடத்தப் போகிறார்கள் என்றும், ஊடகங்களுக்கு இதைக் கூற வேண்டாம்” என்றும் கூறிவிட்டு, உளவுத் துறையே ஊடகங் களுக்கு செய்தி கொடுத்துவிட்டது.   – கெஜ்ரிவால் ஆமாம்! தீவிரவாதிகள் உளவுத் துறைக்கு தகவல் தருவார்கள். உளவுத் துறை பத்திரிகைகளுக்கு தகவல் தரும். உறவு முறையில் திருமணம் செய்வதால்தான் காது கோளாறுகள் ஏற்படுகின்றன.    – ‘தினமணி’ செய்தி ஜாதி வெறி பேசும்  தலைவர்களே, காதில் விழுகிறதா? மத்திய  அரசைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி முன் விவசாயிகள் சட்டை அணியாமல் ‘நாமம்’...

125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர். இந்தியா வுக்கான பிரிட்டிஷ் அமைச்சரின் செயலாளராக தேர்வு பெற்று லண்டன் பயணமானபோது தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளைத் தொடங்கி விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், நடந்ததோ வேறு. சர். ஏ.டி. பன்னீர் செல்வத்தின் 125 ஆவது பிறந்த நாள் நினைவாக அவரது வரலாற்றுச் சுருக்கம் வெளியிடப்படுகிறது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அய்ம்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தென்னகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றவர். கடைசியாக இவருக்குக் கிடைத்த இந்தியா மந்திரியின் ஆலோசனையாளர் பதவியினை இவர் ஏற்றுத் தாயகம் திரும்பியிருப்பாரேயானால் தென்னகத்தின் – திராவிடத்தின் – தமிழகத்தின் அரசியலே வெகுவாக மாறியிருக்கும். ஆனால், என்ன செய்வது? இயற்கையும் தமிழர்க்குப் பகையாயிற்று. ஆம்! தமிழர்களை வஞ்சித்துவிட்டது! யார் – இந்த பன்னீர்செல்வம்? திருவாரூர் – நன்னிலம் பாதையில் செல்வபுரம் என்ற ஊர்,...

125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)

125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)

சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் கடலில் வீழ்ந்தது! 125 ஆவது பிறந்த நாள் நினைவாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம் குறித்த வாழ்க்கைக் குறிப்பின் கடந்த வாரத் தொடர்ச்சி. திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே கற்றுத் தரப்பட்டதை மாற்றி தமிழ்க் கற்பிக்கவும் ஏற்பாடு செய்த சர். செல்வத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு எதனையும் சர்.செல்வம் பொருட் படுத்தவில்லை. விடுதியிலும் தமிழ் படிப்பவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வழி வகைகள் செய்யப் பட்டன. ‘சமஸ்கிருத காலேஜ்’ எனும் பெயர் ‘ராஜாஸ் காலேஜ்‘ என்றும், ‘அரசர் கல்லூரி’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி சர். செல்வம் எல்லா வகுப்பினருக்கும் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தார். சர். செல்வம், மாவட்டக் கழகக் கல்வித் துறையை நன்றாக முடுக்கி...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

மனிதர்களைக் கொன்ற புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.    – செய்தி அப்பாடா! தமிழ்நாட்டில் உண்மையான ஒரு ‘என்கவுண்டர்’ இப்போதுதான் நடந்திருக்குது. தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கம்; தி.க. தலைவர் கி.வீரமணி சதி; அழகிரி தாக்கு. – செய்தி இது அபாண்டம்! உண்மையில் கி.வீரமணிக்கு இதில் தொடர்பிருந்தால் “அழகிரியுடன் – கழத்தினரோ, கழகக் குடும்பத்தினரோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்ற வாசகம் – அறிக்கையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்! காஞ்சி ஜெயேந்திரன், தில்லை நடராசன் கோயிலின் உள் பிரகாரத்துக்குள்ளே காரில் வந்து தரிசனம்; கோயில் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.    – ‘தமிழ் இந்து’ செய்தி அடுத்த முறை தரிசனத்துக்கு ‘நட ராஜனையே’ காரில் ஏற்றி காஞ்சி புரத்திற்கு அனுப்புவாங்க பாருங்க! நிர்வாக அதிகாரம் முழுமை யாக தீட்சதர்களிடமே வந்துடுச்சே! போக்குவரத்துக்கு இடையூறு! சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.        – செய்தி அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, அதில்...

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்...

தமிழக அரசைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்: இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்காதே!

தமிழக அரசைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்: இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்காதே!

‘தமிழக அரசே; இடஒதுக்கீட்டைப் புறந் தள்ளாதே!’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஜன.25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கான மருத்துவர்கள் தேர்வுக்கான அரசு அறிவிப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட் டிருந்தது. மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது என்றும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனையில் இடஒதுக்கீடு பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி, இடஒதுக்கீட்டைப் பின்பற்றக் கோரியும் கழகம் ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தியது. தமிழ்நாட்டில் ஆசிரியர் காலியிடங்களுக்கான தேர்வில் மத்திய ஆசிரியர் தேர்வாணையம் நிர்ணயித்த தகுதி மதிப்பெண் அளவை தமிழக...

பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.

பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜன.30 அன்று சென்னையில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாசிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்யப்பட்டவர். மோடி-ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து, பிறகு பா.ஜ.க.வுக்குள் திணிக்கப்பட்டவர். மோடியை பிரதமர் வேட்பாளராக அத்வானி ஏற்க மறுத்தார். உடனே ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமரசம் செய்தது. அத்வானி விருப்பம் இல்லாவிடிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தார். இப்போது ‘தேசம் – தேச முன்னேற்றம் – வல்லரசு – இந்திய குடிமகன்’ என்ற சொல்லாடல்களை முன் வைத்து பா.ஜ.க.வும் மோடியும் தேர்தலை அணுகுகிறது. தங்களின் ‘மதவாதம் – இந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையான கொள்கைகளை தற்காலிகமாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து இந்துக்களின் ராஷ்டிரத்தை வேத புராண சாஸ்திரங்களின்...

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே! ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே! ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

2013 டிசம்பர் 7, 8, 9, 10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது. சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக் கொண்டு, இலட்சக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர். இனக் கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்து களையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இது குறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று...

தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு

தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்த  60 சதவீத மதிப்பெண் நிர்ணயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தபோதும், அதை மதிக்காமல் ‘கேளாக் காதுடன்’ இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசும் தகுதித் தேர்வு மதிப்பெண் நிர்ணயிப்பை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு குறைத்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூறியிருந்தாலும்கூட, முதலமைச்சர் அந்த உண்மையை மறைக்கவே துடித்தார்; பழியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மீது தூக்கிப் போட்டார். அந்த அமைப்பு நிர்ணயித்த மதிப்பெண்ணைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றார். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை தமது ஆட்சி பின்பற்றி வருவதாக – ஏதோ, தமிழ்நாட்டு மக்கள் விவரம் தெரியாதவர்களாகக் கருதிக் கொண்டு...

பா.ஜ.க.வால் பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள்

பா.ஜ.க.வால் பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள்

ஊடகங்கள் பா.ஜ.க.வின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. – மதவெறிக் கொள்கைகளை தனிப்பட்ட முறையில் ஏற்க விரும்பாத ஊடகவியலாளர்களை பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க.வினர் மிரட்டி வருகிறார்கள். 17 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தும் வீரபாண்டியன் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்கள் உரிமைகள் – மதவெறி சக்திகளின் ஆபத்து பற்றி கருத்து தெரிவித்தார். அதன் காரணமாக அவர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று. தமிழ்நாடு பா.ஜ.க. ‘சன்’ தொலைக்காட்சி நிறு வனத்துக்கு கடிதம் எழுதியது; சன் தொலைக் காட்சியும் பணிந்தது; வீரபாண்டியன் நிறுத்தப்பட்டு விட்டார். ‘இந்து’ ஏட்டின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சித்தார்த்த வரதராஜன். கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகிவிட்டார். “கொள்கை ரீதியாக மோடியை ‘இந்து’ எதிர்க்கிறது. ஆனால், தேசிய அரசியலில் வளர்ந்து வரும் மோடிக்கு உரிய முக்கியத்துவம் ‘இந்து’வில் தரப்படவில்லை. இதற்கு சித்தார்த் வரதராஜன் பின்பற்றிய நெறிமுறைகளே காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்...

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான வழக்கு: பிப்.12இல் இறுதி விசாரணை

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான வழக்கு: பிப்.12இல் இறுதி விசாரணை

சிறைப்படுத்தப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் அம்பிகாபதி, அருண்குமார், கிருட்டிணன் ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் (4.2.2014) அன்று நீதிபதிகள் எஸ்.இராஜேசுவரன், பி.என்.பிரகாசு அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை நேர் நின்றார். அரசு வழக்கறிஞர் வராததால் வழக்கை பிப்.28 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் கேட்டார். இதற்கு மூத்த வழக்கறிஞர் வைகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் வரவில்லை என்று கூறி அரசு வழக்கைத் தள்ளிப் போட விரும்புவதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது. இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியதாகும். 90 நாட்களாக ஒரு இயக்கத்தின் தலைவர் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். அவர், இன்றைக்கே விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் நிலை....