ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?
ஜம்முவில் நடக்கும் இராணுவ ஆட்சி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வீடுகளில் முடக்கி வைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது. பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட் டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப் பட்டவர்களாக இருந்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. செய்தித்தாள்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட் டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை...
