Category: பெரியார் முழக்கம்

காவல்துறைக்கு என்ன தண்டனை?

மதுரை மாநகர காவல்துறை மகேஷ்குமார் அகர்வால், ‘‘சாதி மறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு ஆணையர் அலுவலக வளாகத்தில் குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி வரும் புகாரை விசாரிக்க தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெறவும் 0452 2346302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்று அறிவித்திருக்கிறார்.  இந்தத் தனிப்பிரிவு குறித்து ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கவுசல்யாவிடம் கேட்டபோது: “இந்தப் புதுபிரிவினால் ஆணவக் கொலை குறைந்துவிடுமா என்ன? நாங்கள் கேட்பது பாதுகாப்பு. அவர்களால் அந்தப் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் பெண்ணிடம் பெற்றோருடன் சென்றுவிடும்படி கவுன்சலிங் செய்யப்படுகிறது அல்லது அவளிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து நல்லவர்களாக நடிக்கும் போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோர் வந்ததும் அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார்கள். சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் காட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை? என்னைப் பொறுத்தவரை, இந்தத்...

பூணூல் ரோபோக்கள்

பூணூல் ரோபோக்கள்

ஜப்பானில் டோக்கியோ நகரில் ‘இடுகாடு – இடுகாட்டில் நடக்கும் இறுதிச் சடங்குகள்’ குறித்து சர்வதேச கண்காட்சி நடந்திருக்கிறது. அப்படி ஒரு கண் காட்சி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. இந்த முறை நடந்தது டோக்கியோ நகரில். கண்காட்சியில் பங்கேற்கும் பார்வையாளர் களுக்கு இறுதிச் சடங்கு குறித்த தொழில்முறை பயிற்சிகள் தரப்படுகிறது. இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது புத்தமதச் சடங்கு முறையில் ஜப்பானில் நடக்கும் இறந்தவர்களுக்கான சடங்குகளை ஒரு ‘ரோபோ’ எந்திரம் செய்து காட்டியதுதான். ஜப்பானில் இளைஞர்களைவிட முதியோர் எண்ணிக்கை அதிகம். எனவே இறுதிச் சடங்குகள் நடத்த “அதில் பயிற்சிப் பெற்றவர்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அந்நாட்டின் ‘சாப்ட் பேங்க்’ எனும் நிறுவனம், ‘பெப்பர் ரோபோட்’ என்ற இந்த மனித எந்திரத்தை உருவாக்கியிருக்கிறதாம். நமது நாட்டில் கோயிலில் ‘அர்ச்சனை’, ‘கும்பாபிஷேகம்’, வீட்டில் ‘விவாக சுபமுகூர்த்தம்’, ‘கிரகப் பிரவேசங்களை’ நடத்த பிறப்பால் ‘பிராமணன்’ என்ற பிறப்புச் சான்றிதழ் கொண்ட ‘பூணூல் ரோபோக்கள்’ மட்டுமே செய்ய...

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதி தத்துவத்துக்கு சாவுமணி அடித்துவிட்டது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. ஓராண்டுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தருவதாகக் கூறி முன் வந்து, தமிழக அரசிடம் அவசரச் சட்டத்தை தயாரிக்கச் சொல்லி விட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதி விலக்கு தர முடியாது என்று கூறும் துணிச்சல்  மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எப்படி வந்தது? தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று கருதி விட்டார்கள். மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த 85 சதவீத மாணவர்களில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் 2224 பேர். 15 சதவீதம் பேர் மட்டுமே படித்த சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 1310 பேர். நீட் தேர்வு நடத்தாமல் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்ற சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 30 மட்டும்தான். சுமார் 45 சதவீதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த அநீதியை முறைப்படுத்துவதற்கு மாநில அரசு பிறப்பித்த 85...

ஜாதி ஒழிப்பாளர்கள் ஓர் ஆயுதமாக்கிப் போராட என்னை, நான் ஒப்படைத்துவிட்டேன் உடுமலை கவுசல்யா போர் முழக்கம்

ஜாதிய ஆதிக்கக் குடும்பத்தில் வளர்த் தெடுக்கப்பட்ட நான், அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புப் போராளியாகி விட்டேன் என்றார், ஜாதி வெறிக்கு தன் துணைவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா. ஆக.20ஆம் தேதி சிதம்பரத்தில்; விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய ‘திருமா-55’ நிகழ்வில் பங்கேற்று அவர் நிகழ்த்திய உரை. நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்த மில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது. திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல் தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான். என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின்...

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்களில் பெரியார் இயக்கம் உருவாக்கிய பண்பாட்டுப் புரட்சி – வாழ்க்கை நெறியாகியிருப்பதைக் காண முடிகிறது. புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமணங்களை மாலை நேரத்தில் நடத்துவது பல கிராமங் களில் வழக்கமாக மாறியிருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்த, வாழும் பெரியார் தொண்டர்கள் இதை வாழ்க்கை நடைமுறையாக மாற்றி யிருக்கிறார்கள். இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேடு (ஜூலை 19) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை. ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடக்கும் 99 சதவிகித திருமணங்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30-க்குள் தான் நேரம் குறிக்கிறார்கள். நாம் போயிருந்த போதும் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் தனது அண்ணன் மகளின் (மாலை நேர) திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சநதிக்குளம் கிழக்கைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கட். “காலையில் திருமணம் செய்யுறது தானே உலக வழக்கம், நீங்க மட்டும் ஏன் உல்டாவா மாலையில் திருமணம் செய்கிறீர்கள்?” என்று...

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

20-8-2017 காலை 11-00 மணியளவில் சிவ.விஜய பாரதி – பேரா. சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யேற்றார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலன் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம், நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம், கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட திருவான்மியூர் பகுதி கலந்துரையாடல் கூட்டம் நா.விவேக் (தென் சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்) தலைமையில் 20.08.2017 மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைத்துக் கொள்ள முன் வந்த இளைஞர்களுக்கு இயக்கக் கொள்கை, நடைமுறைகள் குறித்து விளக்கிட பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த சந்திப்பை தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.  முதல் முறையாக திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுதி சார்ந்த தோழர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தோழர்களிடம்  பெரியாரிய கொள்கைகளை எடுத்துரைத்து தோழர்களின் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கமளித்தனர். செயற்பாடுகள், களப்பணிகள் போன்றவைகளை குறித்தும் கலந்துரையாடினார்கள். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

பிறந்த நாள் அன்பளிப்பு

பிறந்த நாள் அன்பளிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் இரா. சண்முகசுந்தரம் – பேராசிரியர் ருக்மணி ஆகியோர் மகன் ச. இராமலிங்கம் வால்டர்ஸ் – நி. சியாமணி இணையரின் மகன்கள் கவின் 18.6.2017 அன்று 5ஆவது பிறந்த நாளும், நவின் 6.3.2017 அன்று முதல் பிறந்த நாளும் ஆஸ்திரேலியா சிட்னியில் வைத்து கொண்டாடினர். பேரன்கள் பிறந்த நாள் மகிழ்வாக பேராசிரியர் சண்முக சுந்தரம் – பேரா. ருக்மணி ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.2500/- கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம்...

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 24082017 இதழ்

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் சதுரங்காடி பெரியார் திடலில் 22.7.2017 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாரூக் நினைவு மேடையில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘மாற்றம்’ நாடகக் குழுவினர் நாடகம், தற்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியது. அதனைத் தொடர்ந்து மழலையர்களின் நடனம் நடைபெற்றது. அவர்களுக்கு மேடையில் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மேட்டூர் நகர செயலாளர் அ.சுரேசு குமார் தலைமை தாங்க, நங்கவள்ளி அன்பு உரைக்குப் பின் வே மதிமாறன், காமராசரைப் பற்றி சிறப்புரையாற்றினார். காவேரிகிராஸ் பகுதி காளியப்பன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது. மேட்டூரின் முக்கியப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கழகக் கொடிகள் நகரமெங்கும் நடப்பட்டிருந்தன. கூட்டத்தில் அதிகளவு மக்கள் உரைக் கேட்டு...

வாஞ்சிநாதன் மனைவிக்கு முத்துராமலிங்க தேவர் அடைக்கலம் தந்தாரா?

பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தீவிர ஆதரவாளரான முத்து ராமலிங்க தேவர், தென் மாவட்டங் களில் தலித் மக்களின் உரிமை களுக்காகப் போராடிய இமானுவேல் சேகர், படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர். ‘தேசியம் – தெய்வீகம்’ என்பதே தனது இரு கண்கள் – என்று கூறி செயல்பட்டவர்.  தென் மாவட்டங்களில் ஜாதியக் கட்டமைப்பும் ஜாதிய உணர்வும் ஆழமாக புரையோடியிருப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். அவர் வரலாறு குறித்து செவி வழி செய்திகள் ஆதாரங்களின்றி ஏராளமாக பரப்பப் பட்டு வருகின்றன. அண்மையில் ‘தமிழ் இந்து’ நாளேடு (ஆக. 16) இதே போல் ஒரு ‘கற்பனை’யை வரலாறாக பதிவு செய்தது. நெல்லை மாவட்டம் மணி யாச்சியில் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான் வாஞ்சிநாதன் அய்யர். ஆஷ் ‘சனாதன தர்மத்துக்கு’ எதிராக செயல்படுவதால் அவரை சுட்டுக் கொன்றதாக ஒரு...

வினாயகன் கதை அன்றும், இன்றும்! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள்...

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

திராவிடர் கழகத்தில் துடிப்புடன் பணியாற்றியவரும் அந்தக் கழகம் நடத்தும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்ட பெரியார் குடும்பத்தைச் சார்ந்த ‘பெரியார் சாக்ரடீஸ்’ விபத்தில் இளம் வயதில் மரணமடைந்தார். அவரது பெயரால் நினைவு விருதுகளை அவரது நெருக்கமான தோழர்கள் அஜயன் பாலா, நாச்சிமுத்து மற்றும் தோழர்கள் வழங்கி வருகின்றனர். இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்டு 6ஆம் தேதி மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. ‘மஞ்சள்’ நாடகத்துக்கு சிறப்பாக உரையாடல் எழுதியவரும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியருமான ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன. ஜாதி வெறியர்களின் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் காரணமாக தலை மறைவாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட் டிருந்த திவ்ய பாரதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. இந்த இரு இளம் தோழியர்களின் ஜாதி ஒழிப்பு செயல்பாடு களையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,...

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியுள்ளது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங் களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி களுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது. கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy Admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில்...

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது. அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை. பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள். இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட்...

விநாயகர்  சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

14.10.1956 அன்று நாக்பூரில் புத்தமார்க்கம் தழுவிய அம்பேத்கர், மதமாற்றத்துக்குத் திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களிடம் 22 உறுதி மொழிகளைக் கூறி ஏற்கச் செய்தார். விநாயகன்,  இலட்சுமி, இராமன், கிருஷ்ணன் மற்றும் இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் என்பதே அந்த உறுதி! புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்த அம்பேத்கரிஸ்டும் ஒருபோதும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டார்கள்; பங்கேற்கவும் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பது அம்பேத்கர் உழைத்த இலட்சியத்துக்கு செய்யும் துரோகம். அம்பேத்கர் – நாக்பூரில் எடுத்த உறுதிமொழிகளை இங்கு வெளியிடுகிறோம்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்க மாட்டேன். இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்க மாட்டேன். விநாயகன், லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்க மாட்டேன். கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்ப மாட்டேன். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான...

காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழகம் மனு விநாயகன் ஊர்வல சட்ட மீறல்களை தடுத்து நிறுத்துக!

மதவாத சக்திகள் விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஊர்வலங்கள் நாட்டில் பதட்டத்தை யும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றன. மத அரசியலை மதங்களுக்கான பண்டிகைபோல மாற்றிக் காட்டி ஊர்வலம் நடத்துவதும்; அடிப்படை மத உரிமை என்றும் இந்து முன்னணியைச் சார்ந்த இராம கோபாலனும் மதவாத அமைப்புகளும் கூறி வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் இந்த ஊர்வலங்களில் நடக்கும் விதி மீறல்களைத் தடுக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்ற பார்ப்பனரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பதட்டம் நிறைந்த பகுதிகளில் விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை இதற்கான இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும் என்று வரையறுத்தாலும் அவைகள் மீறப்படுகின்றன. காவல்துறை அனுமதித்த சிலைகளைவிட கூடுதலாக சிலைகள் வைக்கப்படுகின்றன. கடல் நீரை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்தி சிலைகளை செய்யக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சித்...

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

மாநாட்டின் தீர்மானங்கள் ‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: காவல்துறையில் தனிப் பிரிவு :  தீர்மானம் : 1 – ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும்...

தலையங்கம் திருச்செங்கோடு தீர்மானங்கள்

2012 ஆகஸ்டு 12ஆம் தேதி ஈரோட்டில் உருவானது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. தடம் மாறாத பெரியாரியல் பயணத்தை முன்னெடுக்க உறுதி ஏற்று இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து  களமாட முன் வந்தனர். மாறி வரும் அரசியல் சமூக சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். பொய்யான வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பலவீனங் களையும் மூலதனமாக்கி இந்தியாவின் அதிகாரத்தைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரம் தங்களிடம் வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையுடன் ‘பார்ப்பனிய–மதவாதத்’ திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்கள் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்காக எத்தகைய ‘ஜனநாயக’ படுகொலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறை அரசியலுக்கும் நேர் முரணாக மக்கள் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கும் வலிமையான கருத்தியல் பெரியாரியம்; அம்பேத்கரியம். இந்த உண்மை,...

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

ஒற்றைக் கலாச்சாரத்தை வலிந்து திணிப்பது இந்தியாவை அழித்து விடும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி.ஷா). ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு (ஆக.9, 2017) அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார். ‘தேசியம்’ என்பது குறித்து அவர் கூறுகையில், ‘தேச பக்தி, தேசியம்’ என்பவை வரையறைகளுக் குட்பட்டதே ஆகும். நைஜிரிய நாட்டின் எழுத்தாளர் சிம்மானந்தா நாகோசி அடிச்சே தேசியம் – தேசபக்தியை “ஒற்றைக் கதையாடலின் ஆபத்து” என்று கூறுகிறார். ஒரே கண்ணோட்டத்தில் தேசியத்தைப் பார்க்க முடியாது. ‘தேசியம்’ என்பது பன்முகத் தன்மையானது என்ற புரிதல் அவசியம். பல்வேறு இனங்கள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதே ‘தேசியம்’ என்ற புரிதலுக்கு வராமல் ஒற்றைப் பண்பாடு கொண்டதே  தேசியம் என்று செயல்பட்டால் அது ‘பாசிசம் –நாசிசம்’ என்ற இட்லர், முசோலினியின் கோர முகமாகிவிடும். தேசியத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைப்பது ஆபத்தானது. சட்டத்தின் அதிகார முனையில் திணிக்கப்படும் கலாச்சார தேசியம் வெறுப்பையும்...

பரப்புரைக்குப் புறப்பட்டார்கள் கழகத் தோழர்கள் கருத்துகளுக்கு மக்கள் பேராதரவு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழ் நாட்டில் தனித்தன்மை காப்போம்; பரப்புரைக்கு பொது மக்கள் பேராதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத் தின் தனிச் சிறப்பைக் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 நாள் பரப்பரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து புறப்படும் பரப்புரைக் குழு  மட்டும் 7 நாட்கள் பரப்புரை நடத்துகிறது. சென்னை பரப்புரைக் குழுவின் தொடக்கப் பொதுக் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி மாலை சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோயில் அருகே சிறப்புடன் நடந்தது. ‘விரட்டு’ பண்பாட்டுக் கலைக் குழுவினர் கலை நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தன. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், இந்தித் திணிப்பு, கதிராமங்கலம், புதுக்கோட்டை மக்கள் பாசனப் பகுதியை மலடாக்கும் ஓ.என்.ஜி.க்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட பயணத்தின் நோக்கங்களை விளக்கும் நிகழ்வுகளை இசையாக வும் வீதிநாடகங்களாகவும் நடத்தினர்....

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது. அதன் முக்கிய பகுதிகள் : மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக்...

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

மோடியின் நடுவண் ஆட்சி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சி முறையாக மாற்றியமைத்திடும் சட்டபூர்வ முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. மொழி வழியிலமைக்கப்பட்ட மாநிலங்களும் மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இறையாண்மையும் இந்தியாவை ‘இந்துத்துவா’ நாடாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலோடு இந்த ஆபத்தான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர். பொதுப் பட்டியலில் கல்வி உரிமை இருப்பதைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையும் நீட் தேர்வுகளும் வந்து விட்டன. உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் உணவு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டம் திணிக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் கீழ் வரும் கால்நடைத் துறையிலும் தலையிட்டு மாட்டு விற்பனையை ஒழுங்குப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்.  மருத்துவ சுகாதார சேவைகளையும் முடக்குகிறார்கள். இப்போது மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனையின் சில பகுதிகளை தனியே பிரித்து, தனியாருக்கு குத்தகைக்கு விடும் ஒரு ஆபத்தான யோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். ‘நிதி அயோக்’...

அர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்

அர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி அதற்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்காதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவெற்றியூரை சேர்ந்த சபரி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. இதன்படிஅனைத்துபிரிவினருக்கும்அர்ச்சகர்பயிற்சிஅளிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் நான்கு மையங்கள் சைவத்திற்கும், இரண்டு வைணவத்திற்கும் ஒதுக்கப்பட்டன. இந்த மையங்களில் 2007- 2008 ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்தனர். அதில் நானும் ஒருவன். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு எனக்கு ஜூனியர் சைவ அர்ச்சகருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை கோவில்களில் பணியமர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 208 பேரில் ஒருவருக்குக் கூட இதுவரை பணி வழங்கப் படவில்லை....

மலேசிய மாநாடு எதிர்ப்பாளர்களுக்கு பதில் சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்

மலேசிய மாநாடு எதிர்ப்பாளர்களுக்கு பதில் சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்

“சேரசோழபாண்டியர்கள்தங்களுக்குள்சண்டைபோட்டுக்கொண்டதைவிட பார்ப்பனியத்தைவளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்” இனத்தால் “திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” என்ற தலைப்பில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஜூன் 24, 25 தேதிகளில் உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதையொட்டி “இனியும் வேண்டுமா திராவிடம்?” என்ற தலைப்பில் மலேசியாவின் ‘தமிழ் மலர்’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. எழுத்து வித்தகர் விவேகானந்தன் என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து அந்நாளேட்டுக்கு மறுப்புக் கட்டுரை ஒன்று அனுப்பப்பட்டது. மறுப்பை அந்த ஏடு வெளியிடவில்லை. அக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது. ‘தமிழ்மலர்’ நாளேட்டில் (02.07.2017) ‘இனியும் வேண்டுமா திராவிடம்?’ என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்களை வரச்செய்வதற்காக ‘தமிழ் உணர்வாளர்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு ஏமாற்று வேலை செய்துள்ளனர்...

கதிராமங்கலம் மக்களுக்காக மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலம் மக்களுக்காக மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24.7.2017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பாளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீ.த.பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர்), வெ.கனியமுதன் (துணைப் பொது செயலாளர்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன் (பொதுச் செயலாளர்), தமிழ் புலிகள் கட்சி பெரியார். சரவணன், (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்). தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு. நாகராசு. ஒருங்கிணைப்பாளர். பெரியார் திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி தலித் .ராஜா ஆதித்தமிழர் பேரவை , தாஹா. ளுனுஞஐ கட்சி மேலூர் தொகுதி தலைவர் இரணியன்,  பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பரமக்குடி கர்ணன், ரமேஷ் , சகாயராஜ் , கோபால் உள்ளிட்ட...

பெரியார் பிஞ்சு இளம்பரிதி இயக்கத்திற்கு நன்கொடை

பெரியார் பிஞ்சு இளம்பரிதி இயக்கத்திற்கு நன்கொடை

30.07.2017 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் மகன் இளம்பரிதிக்கு நான்கு வயது நிறைவடைந்து அய்ந்தாவது வயதில் அடி எடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா ரூ.1000 மற்றும் கோவை அணி சமூக நீதி சமத்துவ பயண பரப்புரை நிதியாக ரூ. 1000 ஆகிய இரண்டையும் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் இராசுவிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 10082017 இதழ்

மழை கொட்டிய நிலையிலும் இடம் மாற்றி நடந்தது கழகக் கூட்டம்

மழை கொட்டிய நிலையிலும் இடம் மாற்றி நடந்தது கழகக் கூட்டம்

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 28 அன்று திருவேற்காடு வேலப்பன் சாவடியில் ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒருவார காலமாகவே வடசென்னை கழகத் தோழர்கள் ஏசுகுமார், செந்தில், சங்கீதா, ராஜி மற்றும் தென்சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கடை கடையாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி நிதி திரட்டினர். ஏ. தினேஷ் குமார் தலைமையில் கூட்டம் தொடங்கி காவை இளவரசு ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தி முடிக்கும்போது மழை கொட்டத் தொடங்கிவிட்டது. உடனே கழகத் தோழர்கள் மேடைக்கு அருகே இருந்த வர்த்தக நிறுவனங்களின் மேற்கூரையிடப்பட்ட வராண்டாவில் இருக்கைகள் ஒலிபெருக்கிகளை மாற்றி கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். ஒரு கருத்தரங்கம்போல் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். தோழியர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். ரமேஷ் பிரசாந்த் முன்னிலை வகித்தார்....

இந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா!

இந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா!

மனிதகுல முன்னேற்றத்தின் வரலாறு என்பது மாற்றுக் கருத்துகளின் வரலாறு என்பதில் தீவிர நம்பிக்கை கொண் டிருந்தவர் விஞ்ஞானி புஷ்ப பார்கவா (1928- 2017). அறிவியல் சிந்தனைக்கு (சைன்டிஃபிக் டெம்பர்) எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வந்த இந்தப் புரட்சிக் குரல், கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி ஓய்ந்து விட்டது. உயிரி வேதியியலாளராகப் பணியைத் தொடங்கிய பார்கவா, இந்தியாவில் உலகத் தரத்திலான உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பினார். அவரின் முயற்சியால்தான் 1977ஆம் ஆண்டு ஹைதராபாதில் ‘உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்’ தொடங்கப்பட்டது. ‘ஆர்ட்டிஸ்ட் இன் ரெஸிடென்ஸ்’ எனும் திட்டத்தைத் தொடங்கிய முதல் அறிவியல் மையம் இதுவாகத்தான் இருக்கும். மேலும், ஓவியர் எம்.எஃப்.ஹுசைனை அழைத்து, இந்த மையத்தில் சுவர் சித்திரத்தை வரையச் செய்தார். அதேபோல 1986ஆம் ஆண்டு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பத் துறை ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்த அமைப்புகள் மூலம், மக்களுக்குப் பயன்படும்...

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

தமிழக மருத்துவ சேவையை  முடக்கும் ‘நீட்’

தமிழக மருத்துவ சேவையை முடக்கும் ‘நீட்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் உருவாக்கிய கல்வி அமைப்பு. அந்த அமைப்பை நாம் பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து பறித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்தளித்தோம். பிரிட்டிஷ்காரர் நாட்டை ஆண்டபோது பிரிட்டிஷார் வழங்கிய நமக்கான சொற்ப அதிகாரங்களோடு மாகாண சபையை நமது முன்னோர்களான நீதிக் கட்சியினர் வழியாக ஆட்சி செய்தோம். 1928ஆம் ஆண்டிலேயே நாம் இந்த கல்வி வேலைவாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். “சுதந்திர”த்துக்குப் பிறகு காமராசர் ஆட்சி யில் சமூகநீதி இலவசக் கல்வி மடை திறந்த வெள்ளம்போல் பரவியது. தொடர்ந்து அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சி யிலும் நாம் நமக்கான இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையைக் கொண்டே முன்னேறினோம். அதனால்தான் மண்டல் பரிந்துரையை அமுலாக்கி, மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதன் காரணமாகவே பிரதமர்...

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் கனிமவளங்கள் மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக காவிரி பாசனப் பகுதி, பாலாற்றுப் பகுதிகள் குறிவைக்கப்படு கிறது. இந்தப் பகுதிகளில் 500 அடி ஆழத்தில் நிலக்கரி பெருமளவில் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீதேன் எரிவாயு இருக்கிறது. இந்த எரிவாயுவை எடுக்க ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத் துக்கு 2010ஆம் ஆண்டு  அனுமதி அளித்தது இந்திய  அரசு. 32 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுப்பதும் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி, பாசனப் பகுதி நிச்சயமாக பாலைவன மாகிவிடும். பூமியின் சராசரி வெப்ப நிலையை கடுமையாக உயர்த்துவது மீத்தேன் வாயு. இதை எடுக்கும் முறைக்கு ‘நீரியல் விரிசல்’ என்று பெயர். பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை உடைத்து நொறுக்கி ‘மீத்தேன்’...

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுதும் 2000 விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 200 விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்து விட்டனர். பெரும் தொழில் நிறுவனங்கள் அரசு பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்வதற்கு ‘வராக் கடன்கள்; செயல்படாத சொத்துக்கள்’ என்று பெயர்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது பார்ப்பன அதிகாரவர்க்கம். கல்லூரி படிப்புக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத மாணவர்களின் படத்தை வங்கி விளம்பரப் பலகையில் ஒட்டி அவமானப்படுத்தும் பார்ப்பன வங்கி அதிகாரக் கும்பல், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பண முதலைகளின் பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வெளியிட மறுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கிகளில் ‘பெரும் பணத் திமிங்கிலங்கள்’ கடனாக வாங்கி, பட்டை நாமம் போட்ட தொகை...

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்  மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை போடுகிறது பா.ஜ.க.  ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடம். • கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சி 1850 கிலோ மெட்ரிக் டன். • 2015-2016இல் இந்தியாவுக்கு மாட்டிறைச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,802 கோடி. • கடந்த ஆண்டு இந்தியாவும் பிரேசிலும் தலா 19.60 சதவீதம் தனித்தனியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் சரிசமமாக நிற்கின்றன. ஆனால் பிரேசில் நாட்டில் ‘பசு தெய்வம்’ என்ற கூப்பாடுகள் ஏதும் இல்லை. • ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டிறைச்சி. • வேத கால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிட்டார்கள். ‘இந்திரன்’ என்ற கடவுளுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை பார்ப்பனர்கள் ‘அக்னி’ யாகத்தில் பலியிட்டதை ரிக்வேதம் கூறுகிறது. • பலியிடப்பட வேண்டிய பசு உள்ளிட்ட மிருகங்களை எப்படி...

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் மோடியின் பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் திணித்து வரும் இந்தி – இந்துத்துவா எதிர்ப்பை, தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் பா.ஜ.க.விடம் அடங்கிப் போய் சரணாகதி நிலையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர். மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மோடி ஆட்சியின் சட்டத்தை புறந்தள்ளிய கேரள அரசு, அந்த சட்டத்தை நீக்கி மாநிலத்துக்கு தனி சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. வீடுதோறும் மக்களை சந்தித்து இந்த சடங்கு கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். ‘குடும்ப பிரபோதன்’ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பிரணாய் விஜயன், இது மனுதர்ம திட்டம் என்று அறிவித்தார். மீண்டும் ‘திராவிட நாடு கோரிக்கை எழும்’ என்று கேரளாவில் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். இப்போது கருநாடக முதல்வர் சித்தராமய்யாவும் இந்திக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். கருநாடக அரசு மும்மொழித்...

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் 1966ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் தொடங்கப் பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை, பொதுத் துறை நிறுவனம். இந்திரா காந்தி திறந்து வைத்தார். இந்திய இராணுவத்துக்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கப் போகிறது, மோடி ஆட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 72,500 கோடி நிதி திரட்டு வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மோடி ஆட்சி. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிற் சாலையைச் சார்ந்து வாழும் அய்ந்து கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளையும் செயலிழக்கச் செய்கிறது. யூத மத வெறி இஸ்ரேலிடம் அதிகமான இராணுவத் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. பார்ப்பனியமும் ஜியோனிசமும்...

அடிபணியும் தமிழக அரசு

அடிபணியும் தமிழக அரசு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக களமிறங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களை கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது தமிழக அரசு. அவர்களை பிணையில் விடுவிக்கவும் கூடாது என்று ‘ஓ.என்.ஜி.சி.’ பார்ப்பன அதிகாரவர்க்கம் தனது முழு அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது. நெடுவாசல் – கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கையின் நியாயங்களை விளக்கி சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதியை காவல்துறை ஜூலை 16ஆம் தேதி கைது செய்து குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. 23 வயது வளர்மதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு இதழியல் படிக்கிறார். ‘ஓ.என்.ஜி.சி.’யை எதிர்ப்போர் எல்லோருமே தேச விரோதிகளாம். மத்திய அரசிடம், ‘ஓ.என்.ஜி.சி.’க்கு அவ்வளவு செல்வாக்கு! தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் அவ்வளவு குலை நடுக்கம்! தமிழ் மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளா?...

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் சிவகங்கை அருக உள்ள கீழடியில் தமிழர் சங்ககால வாழ்வியல் குறித்து சான்றாதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டறிந்திருக்கிறது. ஜாதி, மதங்கள் இல்லாத ஒரு வாழ்வே சங்ககாலத் தமிழர்கள் வாழ்வு என்று இந்தத் தடயங்கள் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்துத்துவா திணிப்புக்கு இது எதிரானது என்பதால் தொல்பொருள் தடயங்களை ஒரு மூட்டையில் கட்டி பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வீசி விட்டனர். நீதிமன்ற வழக்குகள், பொது மக்கள் எதிர்ப்பு வந்த பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடங்கின. நேர்மையான ஒரு அதிகாரி முறையாக தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கினார். அவரை திடீரென்று இடமாற்றம் செய்தது மோடி ஆட்சி. மக்கள் கொதித்தெழுந்தார்கள். கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், நிர்மலா சீத்தாராமனை முற்றுகையிட்டார்கள். தமிழர்கள் பண்பாடு பார்ப்பனிய இந்துத்துவா பண்பாடு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை முடக்க முயலுகிறது மோடி ஆட்சி....

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?  தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்ட பிறகு ‘செம்மொழி தமிழ் ஆய்வு மய்யம்’ சென்னையில் அமைக்கப்பட்டது. தனித்து இயங்கிய இந்த ஆய்வு மய்யத்தை இழுத்து மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்ற மோடி ஆட்சி முடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியைத் தவிர்த்து பிறமொழி நிறுவனங்கள் அனைத்தையும் ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு துறையாக இணைக்க மோடியின் மனித வள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகளை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் என்பதை மோடி ஆட்சி ஏற்கத் தயாராக இல்லை. தேசிய இனங்களை இந்த பார்ப்பனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, தேசிய இனங்களின் மொழிகளை சமஸ்கிருத, இந்தி ஆளுகைக்குக் கீழே அடக்க முயலும் பார்ப்பன சதியை தமிழர்களே! தமிழ் மொழிப் பற்றாளர்களே புரிந்து கொள்ளுங்கள்! பெரியார் முழக்கம் 03082017 இதழ்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் – இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம். 2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு...

சென்னை விழாவில் கொளத்தூர் மணி பேச்சு பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது. காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம்...

சீனா – இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”

சீனா – இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”

‘அண்டை நாடுகளுடன் இந்தியா போர் தொடுக்குமானால் இந்தியாவால் 10 நாள்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாது’ – இப்படி ஒரு கருத்தை ஏதேனும் ஒரு இயக்கத்தின் தலைவர் கூறியிருந்தால், ‘தேச விரோதி’ என்ற கூச்சல் காதைத் துளைத்திருக்கும். “தேச விரோதிகளைக் கைது செய்”, “குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளு” என்று பார்ப்பன பா.ஜ.க. “ராஜாக்கள்” பாய்ந்து குதறியிருப்பார்கள். இந்து முன்னணிகள் முற்றுகைப் போராட்டம் என்று கிளம்பியிருக்கும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது – மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கைக் குழு. அதன் பரிந்துரையில்தான் இந்த அபாயச் சங்கு ஊதப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல; இராணுவ தொழிற்சாலை வாரியத்தின் செயல்திறனில் குறைகள் மலிந்திருப்பதை சுட்டிக்காட்டியும் அரசின் நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை மோடி ஆட்சி நாடாளுமன்றத்திலும் கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது. எந்த நேரத்திலும் சீனாவோடு போர் வெடிக்கலாம் என்ற செய்திகள்...

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்துப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக, பள்ளிப்பாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.07.2017 அன்று  மாலை 5:00 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனே வெளியேற்று, ஓ.என்.ஜி.சி. க்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெறு, பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட செயலாளர்  மு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர் பெரியார் முழக்கம் 27072017 இதழ்

மயிலைப் பகுதி கழகத் தோழர்களின் சீரிய மக்கள் பணி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மயிலாப்பூர் பகுதி தோழர்கள் 21.07.2017 அன்று  விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி கழகத் தலைவர் இராவணன் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். அதைத் தொடர்ந்து,  மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப் படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்கக் கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர்...

சமூக நீதிப் பயணம் – சென்னை மாவட்டம் தயாராகிறது

23.07.2017 மாலை 6 மணிக்கு சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக யுவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் ஆகஸ்ட் 05, 2017 தொடக்க பொதுக்கூட்டம் முதல் ஆகஸ்ட் 12, 2017 மாலை திருசெங்கோட்டில் நடைபெறவிருக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் “சமூக நீதிப் பரப்புரை பயணம்” குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 28.07.2017 வடசென்னை, திருவேற்காடு பகுதியில் “வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், கடந்த 15.07.2017ல் நடைபெற்று முடிந்த காமராசர் விழா பற்றியும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்....

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் – திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை : காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற...