Category: பெரியார் முழக்கம்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்....

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

நடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர். அம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட் டுள்ளார்....

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி...

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘ஹறயல குசடிஅ சுநயஉவடிச’ (ஹகுசு) என்று பெயர். இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல-னுழுசு) என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம்...

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச்சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட் டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன்...

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம். மருத்துவக் கவுன்சில் (ஆஊஐ) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835 இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (ஹயமயளா குடிரனேயவiடிளே) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649 அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்… ஓராண்டுக்கு கட்டணம்  – ரூ. 1,36,526 இரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு – ரூ. 3,33,350 குறுகிய கால பயிற்சி – ரூ. 32,804 நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள். +2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

மலேசியாவில் இயங்கும் ஜாதி சங்கங் களின் பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர் தன்மான இயக்கம், மலேசிய பிரதமரிடம் நேரில் மனு அளித்துள்ளது. இது குறித்து அமைப்பு சார்பில் செயலாளர் விந்தைக் குமரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழர்கள் சாதியெனும் கொடிய உணர்வால் பிரிந்து கிடக்கிறோம். சாதி அடையாளத்தை வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படும் இந்த காலத்தில்…. சாதியின் பெயரால் சங்கங்கள் அமைத்து செயல்படுவோரும் உண்டு. இது தமிழர்களை மேலும் பிரிப்பது மட்டுமல்லாது இழிவுப்படுத்தும் செயலே… சாதியற்ற தமிழராக ஒற்றுமை நிறைந்த இனமாக நாம் வாழ வேண்டும். அரசு வழியாக சாதியை ஒழிப்பதற்கு… இந்நாட்டில் இயங்குகின்ற சாதி சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு ஒன்று மலேசிய நாட்டுப் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் முன்னெடுப்பில், தமிழர் ஒற்றுமை பேணும் இயக்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த மனு அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

“இராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி இராமாயணத்தை அல்லது வேறெந்த இராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வரலாற்றைத் திரித்திடக்கூடாது” என்று வரலாற்று அறிஞர் பேரா. ரொமிலா தாப்பர் கூறினார். “அயோத்தி: நம்பிக்கையாளர்களின் நகரம், நம்பிக்கையற்றவர்களின் நகரம்” (ஹலடினாலய:ஊவைல டிக குயiவா, ஊவைல டிக னுளைஉடிசன) என்ற தலைப்பில் அயோத்தி நகரத்தின் வரலாறு, வலைசிங் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, இந்தியக் கலாச்சார மன்றத்தின் (ஐனேயைn ஊரடவரசயட குடிசரஅ) சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழ மையன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேரா.ரொமிலா தாப்பர் பேசியதாவது: அயோத்தி கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் பலவிதமான கடவுள் நம்பிக்கையாளர்கள் வணங்கும் இடமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இடமாகவும் இருந்து வந்திருக்கிறது. வலைசிங் தன்னுடைய இந்நூலில் சுமார் 3,300 ஆண்டு கால அயோத்தியின் வரலாற்றை விவரித்திருக்கிறார். இந்த 3,300 ஆண்டுகளில் எண்ணற்ற...

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை. கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. ‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ –  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’...

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, 2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல்...

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு  ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது. நீட் தகுதியை உயர்த்துகிறதா? மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது. இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது. வேதியல்,...

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள். பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த்  தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை...

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள்...

மேட்டூர் படிப்பகத்தில்  தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் செந்தில்

மேட்டூர் படிப்பகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில், எம்.பி., கழகத் தலைவர் கொளத்தூர் மணியை 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார். பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-   பெரியார் முழக்கம் 13062019 இதழ்

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

“நடுவண் ஆட்சியின் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி வரைவுக் கொள்கை” 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அபாரமாக இருக்கிறது என்றும் பல்வேறு ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறது. (அறிக்கை பகுதி 4.5) உண்மையில் உலக நாடுகளில் குழந்தைகளுக்கானக் கல்வி முறை – கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்கள் மூளை வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது. மேலை நாட்டுக் குழந்தைகளோடு இந்தியா போன்ற வறுமையின் பிடியில் கல்வி கற்க வரும் கிராமத்துக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் கூடாது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கைகளின் அறிவிப்புகள் அவ்வப்போது வந்தாலும் அது வெற்றுக் காகிதங்களாகி விடுகிறதே தவிர, கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. இது தொடர்பாக ‘இந்து’ ஆங்கில நாளேடு ஜூன் 7ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது: மத்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையை வெளியிட்டு ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது....

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 10ஆம் கருத்தரங்கம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 10ஆம் கருத்தரங்கம்

‘நிமிர்வோம்’ மாத இதழின் பத்தாவது வாசகர் வட்ட சந்திப்பு 18.05.2019 அன்று சனிக்கிழமை, சென்னை மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலை யில் அமைந்துள்ள அப்துல் கலாம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. நிகழ்விற்கு ந. தமிழரசன் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், மயிலை மனோகர் ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’ குறித்து பெரியார் யுவராஜ் உரையாற்றினார். ‘இந்தியாவில் ஜாதிகள்’ என்ற புத்தகம் குறித்து துரையும், ‘நாடார் வரலாறு கருப்பா? காவியா?’ என்ற புத்தகம் குறித்து எட்வின் பிரபாகரனும் உரையாற்றினர். ‘இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை’ குறித்து திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர் கருத்துரையாற்றினார். மேலும், சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த, திராவிட இயக்கச் சிந்தனையாளர் எழுத்தாளர் டான் அசோக், ‘இன்றைய இளைஞர்கள் திராவிட இயக்கம் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இறுதியாக பிரவீன்குமார்...

தமிழ் பாட நூல்களின் இறை வாழ்த்து வேண்டும் என்று கேட்போருக்கு – சில கேள்விகள்

தமிழ் பாட நூல்களின் இறை வாழ்த்து வேண்டும் என்று கேட்போருக்கு – சில கேள்விகள்

தமிழ்நாடு அரசு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிப் பாடத் திட்டத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இப்போதைய கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் – இதில் முழு ஆர்வம் காட்டி, பாடத் திட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்து ஒப்புதல் வழங்கினார். தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளரான அனந்தகிருட்டிணன் தலைமையில் 30 கல்வியாளர்கள் குழு இந்தப் பாடத் திட்டங்களை தயாரித்தது. முதற்கட்டமான 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பாட நூல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்று நிற்கிறது. இந்த நிலையில், புதிய பாடத் திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் ‘இறை வாழ்த்து’ நீக்கப்பட்டுள்ளது என்றும், மொழி வாழ்த்து மட்டுமே இடம் பெற்றுள்ளது என்றும் ‘இறை பக்தர்கள்’ சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாரதிய...

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய  ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வை எழுதிய 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம். ஆனாலும் அகில இந்திய சராசரி தேர்வு விகிதமான 56.5 சதவீதத்தைவிட தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் குறைவு. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 17,630 மாணவர்களில் 2,567 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்னர். இந்தப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் 4.27 சதவீதம் மட்டுமே. அரசு மற்றம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களில் 300லிருந்து 400 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். தமிழ் வழிப் பள்ளியில் பயின்றவர்கள் 5 பேர் மட்டும். இந்தியாவிலேயே 25 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மொத்தம் 3250 மருத்துவக் கல்லூரிக்கான இடங்களோடு மருத்துவ சேவையில் முன்னிலையில் நிற்கும் மாநிலம் நீட் தேர்வில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தொகுப்பு: ‘ இரா’ பெரியார்...

பெண்ணுரிமையை செயல்படுத்திய  ஒரிசா முதல்வர்

பெண்ணுரிமையை செயல்படுத்திய ஒரிசா முதல்வர்

பா.ஜ.க.வின் மிரட்டல்களை முறியடித்து, ஒரிசாவில் அய்ந்தாவது முறையாக வென்றிருக்கிறார் நவீன் பட்நாய்க். அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களின் மகத்தான ஆதரவுதான். கடும்புயல் சேதத்தை அண்மையில் சந்தித்த மாநிலம் ஒரிசா. பெண்களுக்கான சுயஉதவிக் குழு ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சக்தி மிஷன்’ என்று பெயரிட்ட நவீன், அந்த விழாவில் பங்கேற்கும்போதுதான் தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததை அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள். அமைதியாக அந்த செய்தியைக் கேட்டு தலையசைத்த நவீன், நிகழ்வின் இறுதியிலேயே தேர்தல் அறிவிப்பு செய்தியை அறிவித்ததோடு நிற்கவில்லை. 33 சதவீத இடங்களை பெண்களுக்கு தனது கட்சி ஒதுக்கும் என்று அறிவித்தபோது, பெண்கள் முழக்கமிட்டு இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்தார்கள். இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் நவீன் சொன்னதைச் செய்பவர் என்று எழுதினார்கள். 21 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார். அவர்களில் பெரும் பாலோர் வசதியற்றவர்கள். அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றிருப்பவர். ஒரிசாவின்...

தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில்  ‘குடுமிபிடி’

தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில் ‘குடுமிபிடி’

‘பிராமணர்கள்’ தனியே சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கியவர் இராஜகோபாலாச்சாரி. அனைத்துக் கட்சி அமைப்புகள் அதிகார மய்யங்களில் ஊடுருவி, ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பது அவரது கருத்து. அண்மைக்காலமாக ‘பிராமணர்கள்’ சங்கம் அமைத்துக் கொண்டார்கள். நடந்து முடிந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். ‘பிராமணர்’ சங்கம் என்பது ஜாதி சங்கம்அல்ல; அது ‘வர்ணாஸ்ரம’ சங்கம். அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்ற பல்வேறு ‘பிராமண’ வர்ணப் பிரிவினர் இதில் உறுப்பினராக முடியும். இப்போது ‘அவாள்’ சங்கத்துக்குள்ளே மோதல் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பழனியில் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மாநிலத் தலைவைராக செயல்பட்ட திருவொற்றியூர் நாராயணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது இந்தக் குழு. தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பவர் இதை ...

ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

தமிழ்நாட்டில் பெரியார் தொடங்கி வைத்த வகுப்புகளுக்கு சமநீதி வழங்கும் சமூகநீதிக் கொள்கையை ஆந்திராவின் முதல்வராகியுள்ள ஒய்.எஸ். ஜெகன்மோகன் (ரெட்டி) பின்பற்றியிருக் கிறார். அவரது சமூகம், முன்னேறிய சமூகம். ஆனால், 5 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, அவற்றை சமூகரீதியாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். பமுலா புஷ்பா சிறிவேணி (பழங்குடி), டில்லி சுபாஷ் சந்திரபோஸ் (பிற்படுத்தப்பட்டோர்) அல்ல கலி கிருஷ்ணசிறினிவாஸ் (கப்பு சமூகம்), கே. நாராயண சாமி (பட்டியல் இனப் பிரிவு), அம்சத் பாஷா (முஸ்லிம்) ஆகியோர் துணை முதல்வர்கள். அனைவருக்கும் வருவாய்த் துறை, மருத்துவக் கல்வி, பழங்குடி நலன், வரிவிதிப்பு என்று முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி உள்துறை அமைச்சர் எனும் அதிகாரமிக்க பதவிக்கு சுச்சரிதா என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். துவக்கம் நன்றாகவே இருக்கிறது. பெரியார் முழக்கம் 13062019 இதழ்

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம் தமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம் தமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்

தமிழ்நாட்டை ‘காவி’ மண்ணாக்கிட பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தீவிரத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கட்சி மேலிடமும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச பெருமளவு பணத்தை வாரி இறைக்கத் தயாராகி விட்டது. இது குறித்தும் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஓர் தொகுப்பு: தமிழகத்தில் வலிமை பெற ஆர்.எஸ்.எஸ். தயாராகிறது சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி எனும் பகுதியில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரியில் வட தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. அதேபோல் தென் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அமைப்புகளில் ஆர்வம் காட்டி செயல்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டி, இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தரமான உணவோடு 3 பேர் பயிற்சி அளிக்கிறார்கள். முதற்கட்டமாக ஆன்மீகம், யோகா, இந்து, இந்துத்துவம், தேசியம் என்று மென்மையாக மூளைச் சலவை நடக்கிறது. ‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய தேசத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டெடுக்க நமக்கு நாமே...

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

12.5.2019 அன்று மாலை 6 மணியளவில் குடியாத்தத்தில் கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா – இணையேற்பு விழா  சிறப்புடன் நடந்தது கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், மருத்துவர் எழிலன் மற்றும் கழக முன்னோடிகள், அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பறை இசை கலை நிகழ்ச்சிகளும் மண விழா மேடையில் அரங்கேறியது. பெரியார் முழக்கம் 06062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?

மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?

தமிழ்நாட்டில் உதவி மின் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 325 பேரில் 36 பேர் வடமாநிலங்களையும் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 80,000 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்தே பொறியாளர்கள் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் வேலை இல்லாத் திண்டாட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வட மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புகளைப் பறிப்பதற்கான காரணம் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தவறான கொள்கைதான். 2013ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாக வேண்டுமெனில் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் மொழிக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதியை 2016ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி திருத்தி தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். தமிழக அலுவல் மொழியான தமிழை வேலைக்குச் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம்...

அமைச்சரவையிலும் ‘அவாள்’ ஆதிக்கம்

அமைச்சரவையிலும் ‘அவாள்’ ஆதிக்கம்

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக நேற்று பதவியேற்ற நிலையில் அவரோடு புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி. ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட உயர் சாதியினரே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.  அதன்படி பதவியேற்ற 58 அமைச்சர்களில் உயர் சாதியினர் – 32;  பிற்பட்ட வகுப்பினர் -13; பட்டியல் இனத்தவர் – 6; பழங்குடியினர் – 4; சீக்கியர் – 2; இஸ்லாமியர் – 1. மக்கள் தொகையில் சுமார் 50-60ரூ உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15ரூ உள்ள உயர்சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்களான தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்!), சுமார் 14ரூ உள்ள இஸ்லாமியருக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் கிடைத்திருக்கிறது. நிதித்...

பார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்

பார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்

17ஆவது நாடாளுமன்றத்தில் பார்ப்பன உயர்ஜாதியைச் சார்ந்தவர்கள் 232பேர். மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் 120 பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் சட்டப்படி பட்டியல் இன / பழங்குடிப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பட்டியல் இனப் பிரிவில் 86 உறுப்பினர்களும் பழங்குடிப் பிரிவில் 52 பேரும் இடம் பெற்றுள்ளனர். மத அடிப்படையில் மைனாரிட்டிகள் 52 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 இடங்களில் வெற்றி பெற்றவர்களில் 30 பேர் பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட் டவர், தாழ்த்தப்பட்டவர் 7 பேர், பார்ப்பனர் ஒருவர் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்). ஆனால் மற்ற மற்ற மாநிலங்களின் நிலை என்ன? மொத்தம் 542 உறுப்பினர்களில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரின் எண்ணிக்கை 232, பிற்படுத்தப்பட்டவர் 120, தாழ்த்தப்பட்டவர் 86, மலைவாழ்மக்கள் 52 பேர், சிறுபான்மையினர் 52 பேர். தெலுங்கானாவை எடுத்துக்கொண்டால் மொத்தம் 17 பேர்களில் பார்ப்பனர்...

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு  சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில்...

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனத் தூய்மைப் பேசுகிறவன் – ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும்...

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி

அகில இந்திய அடிப்படையில் மருத்துவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை இரத்து செய்தது பா.ஜ.க. ஆட்சி. அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பது சரியல்ல. அவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தி. அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4600 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி  பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும், மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது. மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4...

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள். கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா...

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது  காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

தான் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய சொந்த தம்பி இராமகிருஷ்ணனையும் மடத்தின் காரியதரிசியாக இருந்த காலடி விஸ்வநாதனையும் பல்வேறு காரணங்களால் ஜெயேந்திரர் வெளியேற்றினார். இந்த இருவரும் தற்போது மீண்டும் மடத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர். பார்ப்பன அதிகார மய்யமான காஞ்சி சங்கர மடத்தின் சொத்துக்களை சுருட்டுவதில் ‘அவாள்’களுக்குள் கடும் போர் நடக்கும் செய்திகள் அம்பலமாகியுள்ளன. இது குறித்து ‘ஜூனியர் விகடன் (22.5.2019) வெளியிட் டுள்ள விரிவான கட்டுரை ஆன்மிகம்… அரசியல்… அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது. “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட் டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச்...

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின்  வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும்  பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள்...

தலைமைக் கழக நிதி

தலைமைக் கழக நிதி

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திவிக சார்பில் கழக கட்டமைப்புநிதி ரூ20000  கழகத் தலைவரிடம் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், அறிவுச்செல்வன் பெரியசாமி, அரும்புச்செல்வன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். பெரியார் முழக்கம் 23052019 இதழ்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி  – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங் களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25...

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

 “காந்தியாரை  இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்” என்று, சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப்பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங்களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. 1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலியான...

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

சார்லஸ் டார்வின் தன்னுடைய முதுமையில் ஒரு நாயை வளர்த்தார். அது எப்போதுமே டார்வினுடனேயே இருக்குமாம். டார்வின் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறையின் கர்ட்டன் (திரை) காற்றில் அசைந்ததாம். நாய் குடுகுடுவென்று ஓடிப்போய், யாரது, கர்ட்டனை அசைக்கிறது?!” என்று ஆராய போயிற்றாம். டார்வின் நினைத்தார், “நாய்களுக்குத் தெரியாது, கர்ட்டன் காற்றில் இயல்பாகவே அசையும்” என்று. அதன் அறிவிற்கு எட்டியதெல்லாம் “ஏதாவது நிகழ்ந்தால், நிகழ்த்துபவர் யாரோ ஒருவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்” என்பது மட்டுமே. யாருமே இல்லாமல், இயற்கையின் சக்திகளால் மட்டுமே பலதும் நடக்கும் என்று புரிந்து கொள்ளும் நுணுக்கமான அறிவு நாய்களுக்கு வாய்க்கவில்லை. சிலர் டார்வின் மாதிரி யோசிப்பார்கள், வேறு சிலரோ… மருத்துவர் சாலினி டுவிட்டரில் பதிவு பெரியார் முழக்கம் 23052019 இதழ்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்! பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் – போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்! பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து...

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4.2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பரந்தாமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரை...

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை அறிக்கையாக மனித உரிமைக் கவுன்சில் அய்.நா.விடம் சமர்ப்பித்துள்ளதால் ஆத்திரமடைந்த நடுவண் ஆட்சி, இனி அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்துடன் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளி வந்த அதே நாளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு அரசு சாராத அமைப்புகள், இந்திய இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய சித்திரவதை படுகொலைகளை விளக்கும் அறிக்கையையும் வெளியிட்டது. 4 குழந்தைகளை இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு சாரா அமைப்பின் அறிக்கையை அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து மனித உரிமை மீறல் தொடர்பாக இந்த அறிக்கை வெளி வந்த அதே நாளில் அய்.நா. மனித உரிமை ஆணையமும் அறிக்கை வெளியிட்டது. இது நடுவண் ஆட்சிக்கு கடும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. ...