Category: நிமிர்-கட்டுரைகள்

எனக்குப் பெருமை வேண்டாம்

எனக்குப் பெருமை வேண்டாம்

காங்கரஸில் சேருவதற்கு முந்தியும், சேர்ந்த பிறகும், இப்போதும், நாளைக்கும் சரிதான் பொதுவாழ்வினால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமெனக்கில்லை. அப்படி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமிருந்தால் இம்மாதிரி அதாவது நீங்கள் உயர்வாகவும், மிகவும் விசேஷமாகவும், உயிராகவும் கருதியிருப்பவைகளை யெல்லாம் அது தப்பு, சூழ்ச்சி, இது கொடுமை என்றெல்லாம் சொல்வதைப் போன்ற ஒரு எதிர்நீச்சு வேலையிலே இறங்கியிருப்பேனா? என்று யோசித்துப் பாருங்கள். சுலபமாக “தென்னாட்டு மகாத்மா” ஆக, எனக்கு வழி தெரியுமே. “வந்தே மாதரம்! அல்லாஹ¨ அக்பர்!! பாரதத்தாய் அலறுகிறாள்!!! வெள்ளைக்காரன் சுரண்டுகின்றான். சுயராஜ்யம் வேண்டாமா?” என்றெல்லாம் சொன்னால், நான் பெரிய தேசீயவாதியாக ஆகிவிடுவேன். நீங்களும் எனக்கு காணிக்கை கொடுத்து, ஓட் கூட போடுவீர்களே. ஆனால் அந்த மாதிரி தேசீய வேலையில் நாங்கள் பட்டபாடு பார்த்துவிட்டோம். எவ்வளவோ கஷ்ட நஷ்டமடைந்தும் பார்த்தோம். அதில் எனக்கு மாத்திரம் பெருமை ஏற்பட்டு விட்டது. பயன் ஒன்றும் ஏற்படவில்லை. எதிரிகள் ஆதிக்கம் செலுத்த இடமேற்பட்டது. குடி அரசு /...

நான் படித்த சில பக்கங்கள் மட்டும்  -சாக்கோட்டைஇளங்கோவன்.

நான் படித்த சில பக்கங்கள் மட்டும் -சாக்கோட்டைஇளங்கோவன்.

(நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் நிகழ்த்திய சிறப்புமிக்க பேருரையிலிருந்து சில பகுதிகள்)   கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித் தம் வஞ்சக சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரியர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித் தாம் உயர்ந்தவர் என்றும், திராவிடர்களின் கருப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் தான் ‘பார்ப்பனர்’ என்றும் கடவுளின் தோளிலிருந்து பிளந்து கொண்டு வெளிவந்தவன் தான் ‘சத்திரியன்’ என்றும் கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளிவந்தவன் தான் ‘வைசியன்’ என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன் தான் சூத்திரன் என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்பவைத்தனர். ”நான் 30 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணிசெய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியாக உடலின் பல பகுதிகளில் பிள்ளைப் பேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. (சிரிப்பு) ஆனால் ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத்...

ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.) 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின்...

ஆதாரங்களுடன் அம்பலமாகிறது அதானி குழுமத்தின் கொள்ளைக்குத் துணைபோகும் மோடி ஆட்சி!

2017ஜூன் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளம் உறுப்பினர் பவன் வர்மா முக்கியமான கேள்வியை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 72,000 கோடி ரூபாய் என்றும் இந்த தொகை நாட்டின் உள்ள மொத்த விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிக ளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதுமட்டுமல்ல. விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையை போன்று இது எட்டு மடங்கு அதிகம் ஆகும். பெரும் தொழிலதிபர்கள் கடன் கேட்கும் பொழுது உடனடியாக கொடுக்க அரசு வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த தகவலை கூறி விட்டு, பவன் வர்மா, இந்த அரசுக்கு இந்த விவரங்கள் தெரியுமா...

இராமன் சுவைத்த மாட்டுக்கறி

இவர் பிறப்பால் வேதியர்; ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்தவர். இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி. அயோத்தியா கண்டம் அதில் தசரதர் ராமருக்கு முடி சூட்ட நினைத்தது; கைகேயி அதனை மறுத்தது; வரம் கேட்டது; இராமன் காடு சென்றது; அங்கு சித்திரக் கூடத்தில் தங்கியிருந்தது; பாரத்து வாசமுனிவரிடம் விருந்துண்டது போன்ற விவரங்களைத் தருவது அயோத்தியா கண்டமாகும். முல்லக்குடி எம்.ஆர். ஸ¨ந்தரேச சாஸ்திரி பிரபல – ராமாயண பிரச்சாரர் முல்லக் குடி எம்.ஆர்.! ஸ¨ந்தரேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் நூல் தரும் செய்தி இதோ: ‘அஸ்தமனஸமயத்தில்கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் பரத்வாஜருடைய ஆசிரமத்திற்குச் சென்றார்கள். வேற்று மனிதர்களைக் கண்டு ஆசிரம மிருகங்களும் பசஷிகளும் (பறவைகளும்) ஓடின. மஹரிஷியை தரிசிக்க விரும்பி, ஸாயங்காலம் (மாலைநேரம்) அக்னிஹோத்ர வேளையானதால் அது முடியும் வரையில் ஆசிரமத்திற்குச் சற்று தூரத்தில் நின்றார்கள். பிறகு ஆசிரமத்திலிருந்து ஓர் சிஷ்யன் தீடீரென வெளியில் வர,...

10000 ஆயிரம் கோடியில் பாஜகவுடன் பதஞ்சலி நடத்தும் வணிகம்

10000 ஆயிரம் கோடியில் பாஜகவுடன் பதஞ்சலி நடத்தும் வணிகம்

(பா.ஜ.க– ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு வர்த்தகம் நடத்துகிறது. பாபாராம் தேவ் நடத்திவரும் “பதஞ்சலி” நிறுவனம் “ஆன்மீகம்” “சுதேசி” என்ற போர்வையில் “பதஞ்சலி” அடிக்கும் கொள்ளைகள் மூடிமறைக்கப் படுகின்றன.) “பதஞ்சலி பொருட்களை பயன்படுத் தாதவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியை தடுக்கிறார்கள்.’’ இப்படியான பத்திரிகை விளம்பரங்களையோ, செய்திகளையோ மிக விரைவில் எதிர்பார்க்கலாம். அந்த அளவுக்கு பதஞ்சலியின் விளம்பரங்கள் மிக சமீபகாலமாக வரத் தொடங்கி உள்ளன. விளம்பரம் மாத்திரமல்ல, அதன் விற்பனை தந்திரங்களும் அதை நோக்கியே உள்ளன. இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சிறியதும், பெரியதுமாக இயங்கினாலும் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை மட்டுமே நம்பி அவை வியாபார உத்திகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பதஞ்சாலியின் பாதையோ தேசபக்தி, சுதேசிஎண்ணம் கொண்டவர்கள் பதஞ்சலியை வாங்குவார்கள் என்கிற நூதனமான உத்தியை கையாளுவதாக உள்ளது. 2008-ம் ஆண்டு யோகக் கலை குரு பாபா ராம்தேவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை ரூ.10,000கோடி. நிறுவனத்தின்விற்பனைஆண்டுக்கு 150சதவீதம்...

தமிழ்நாடு கண்ட இந்தி எதிர்ப்புக் களங்கள் – புலவர் செந்தாழை ந கவுதமன்

தேளுக்கு அதிகாரம் சேர்ந்து விட்டால் தன் கொடுக்கால் வேளைக்கு வேளை விளையாடும் என் தமிழா!  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரிமைத் தொடக்கம்: மொழி உரிமைப் போராட்டத்தில் முன்னோடி யாகத் திகழ்வது தமிழ்நாடு! பிற மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டும் நிலை இப்போது வந்துவிட்டது. பள்ளிக் கல்வியில் கூட, தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருகிறது தமிழகம். கேரளமும், மேற்குவங்கமும் பள்ளிக்கல்வியில் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக்கி விட்டன. அதற்கான சட்டத்தையும் அண்மையில் பிறப்பித்து விட்டன. இதற்கு எதிரான திசையில் இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது நடுவண் அரசு! பள்ளிகளில் இனி இந்தி கட்டாயப் பாடமாம். அரசுத்துறைச் செயல்பாடுகள் அனைத்தும் இனி இந்தியிலேயே இருக்குமாம். நாடாளுமன்ற நடை முறைகளிலும் இனி இந்திக்குத் தான் முதல் இடமாம். வெறி பிடித்ததுபோல் இந்தித் திணிப்பு அறிவிப்புகளை வீசியபடி உள்ளது நடுவண் (பா.ச.க)அரசு!ஆதிக்கம் கிடைத்து விட்ட மமதை உள்ளவர்கள் திணிப்பார்கள். உரிமையை ஒப் படைக்காத மானம் உள்ளவர்கள் எதிர்ப்பார்கள். திணிக்கப்படும்...

மோடி ஆட்சியில் பறிபோகும் உரிமைகள்

“நாடாளுமன்ற ஜனநாயகத்தை தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக் கட்டினர் பாசிஸ்டுகள்” என்றார் ஜெர்மானிய சிந்தனையாளர் ஹன்னா அரெண்ட். உலகம் முழுவதும்உள்ளபாசிஸ்டுகள்ஆட்சிஅதிகாரம் என்ற வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம் ஜனநாயகத்தை ஒழிப்பதில் முனைப்பாகஉள்ளனர்என்பதற்குதற்போதைய இந்திய அரசாங்கம் மற்றுமொரு சாட்சி. ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களில் மக்களை மயக்கி, கார்பரேட்களின் உதவியுடன் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி இந்திய ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கி வருகிறது. கார்பரேட்களுக்கான தங்குதடையற்ற உதவிகள், மக்கள் விரோத கொள்கைகள், அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், வளர்ந்து வரும் வகுப்புவாதம் , அறிவிப்புடன் நின்றுவிடும் திட்டங்கள், அதிகரிக்கும் உள்நாட்டு குழப்பங்கள் என முதல் இரண்டு வருட ஆட்சியில் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இவர்களின் மூன்றாவது ஆண்டு ஆட்சியில் அதிகரித்தன. அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வும் ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா வேகமாக மாறி வருவதை தெளிவாக உணர்த்துகின்றன. நவம்பர் 8...

நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்

நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்

பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட மக்களை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் “தேசம்“ என்ற ஒன்றே இன்னும் முழுமையாக முகிழ்த்திடவில்லை. குவித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற அதிகாரங்கள் மக்கள் வரிப் பணத்தில் பெரும் தொகையை விழுங்கிக் கொண்டிருக்கிற ‘ராணுவக்’ கட்டமைப்புகளைக் கொண்டு “இந்தியா” என்ற நாடு – உலக அரங்கில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. இதுவே உண்மை. தங்களது சமூக, பண்பாடாக பார்ப்பனர்களின் பாரம்பரியப் பண்பாட்டை திணிக்கவும், அவர்கள் மேலாதிக்கத்துக்கான பொருளியல், அரசியல், கொள்கைகளை உருவாக்குவதற்கும்தான். “இந்தியா” என்ற கட்டமைக்கப்பட்ட தேசம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் வாழ்வுரிமை, தனித்துவம், சமூக சமத்துவங்களை அங்கீகரிப்பதற்காக அல்ல. குறிப்பாக -பார்ப்பனிய ஒடுக்கு முறை பண்பாட்டிலிருந்து முற்றிலும் முரண்பட்ட தமிழ்நாடு “சுதந்திரம்’’ பெற்றதாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது. கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் “சூத்திரர்கள்” என்ற மனுதர்மம் திணிக்கும் இழிவை அசைக்கவே முடியவில்லை. இந்திமொழித் திணிப்பு ஒரு பக்கம். தமிழகத்தில் தனித்துவ மான சமூகநீதிக் கொள்கைகளை அழித்தொழிக்கும்...

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்!  வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று  பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்! வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது.  இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஜாதிய கலாச்சாரம் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

(தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பார்ப்பனியம் கட்டமைத்த ‘கீழ்மை- மேன்மை’ ஜாதி கலாச்சாரம் குறித்த விரிவான அலசல்) 1930களில் தமிழில் பேசும்படம் வந்த தருணம், தமிழ் அடிவர்க்க/கீழ்சாதி திரைப் பட பார்வையாளர்களுக்கு மாபெரும் உற் சாகத்தை எற்படுத்திய தருணமாகும். இந்தப் புதிய பொழுதுபோக்கு பற்றி அடித்தள மக்கள் உற்சாகமடைந்த அதே வேளையில் உயர்வர்க்க / மேல்சாதி மேட்டுக்குடியினர் பெரும் கவலைக் குள்ளானார்கள்.தொடக்கத்தில்இந்தகவலைக்கு அடித்தள மக்களின் ரசனைக் குறைவைக் காரணமாக்கி,உயர்கலாச்சாரம்,கீழ்கலாச்சாரம் என்ற போர்வையில் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மேட்டுக்குடியினர் முற்பட்டபோது, புதிய சிக்கல்கள் தோன்றின. உயர் கலாச்சாரம், கீழ்கலாச்சாரம் எனும் பிரிவைப் பாதுகாக்கும் கலாச்சார வரம்புகளையெல்லாம் ஆட்டி அசைத்து, மாற்றியமைக்கும் வலிமை திரைப் பட சாதனத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஏற்கெனவே நிலவிய கலாச்சார வரம்புகளை தகர்க்கவும், தனிமைப்படுத்தப் பட்டுக் காப்பாற்றப் பட்ட மேட்டுக்குடி சாமானிய கலாச்சார வழக்கங்களை மாற்றியமைக்கவும் சினிமாவுக்கு இருந்த ஆற்றலுக்குக் காரணம் அது இதுவரை அறிந்திராத, எதிர்பார்க்காத, விதங்களில் மேட்டுக்குடியையும்...

தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு சங்க இலக்கியத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வரை முனைவர் க.நெடுஞ்செழியன்

நாத்திகம் என்பது வடசொல், இச்சொல்லிற்கு மறுப்பது என்பது பொருள். ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்காத போது அல்லது அதனை மறுக்கின்ற போது அப்படி மறுக்கின்றவர் அக் கொள்கையைப் பொருத்த மட்டில் நாத்திகராவார். மாணிக்கவாசகர். ஆத்திகர் மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் எனக் குறிப்பதில், நாத்திகம் எனும் சொல், சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்காத தன்மையைச் சுட்டக் காணலாம். ஆயினும் நாத்திகர் எனும் சொல் கடவுள் கோட்பாட்டை – வைதிகப்பண்பாட்டைமறுத்தவர்களைகுறித்தே வழங்கப்பட்டுள்ளது. வடமொழி அறநூல்களில் நாத்திகர்களாகக் குறிக்கப் பெறுபவர்கள் பேச்சுக் கலையிலும் தருக்கவியலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இதனை, உலகத்துப் பொருள்களின் தோற்றக் கோடுகள், இயற்கையாக நிகழ்வனவெனவும், அவற்றிற்கு ஒரு கருத்தா வேண்டாமையின் கடவுள் இல்லை எனவும் அக்கடவுள் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறும் வேதனங்கள் (வேதங்கள்) பிரமாணமாகாவெனவும் துணிந்து, யுக்தி வன்மையைக் கடைப்பிடித்து நிகழ்வது நாத்திகமாகும். என சுக்கிர நீதி குறிக்கும். இந் நூற்பாவிற்கு விளக்கம் அளிக்கும் தேவிபிரசாத்...

ஹோமக் குண்ட புகை உடலுக்கு நல்லதா? நக்கீரன்

ஓர் ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் தான் அழைத்திருந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே, “ஹோமக் குண்டத்தில் வரும் புகை நல்லதா, கெட்டதா?” என்று கேட்டார்.  புகையில் ஏது நல்ல புகை, கெட்ட புகை? இக்கேள்விக்குப் பின்னால் ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிருபர் புகையின் தீமைகளைப் பற்றி எழுதி ஒரு கட்டுரையை அளித்திருக்கிறார். அக்கட்டுரையில் ஹோமத்தில் எழும் புகையும் தீமை தருவதுதான் என்று எழுதியிருக்கிறார். அவருடைய உயர் அதிகாரி அழைத்து அவ்வரியை நீக்க சொல்லியிருக்கிறார். காரணம் கேட்டபோது ஹோமத்தில் வரும் புகை புனிதமானது. ஒருவேளை அதில் தீமைகள் இருந்தாலும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது அத்தீமைகள் விலகி அது புனிதமடைகிறது என ஒரு புதிய அறிவியல் விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார். புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை தான். அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட...

இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது. சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது. அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில்...

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை தென்னாட்டவரை இந்திபேசும் மாநிலங்கள் அடக்கி ஆளும் ஆபத்து!

வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியாவில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் மொழிவழிமாநிலங்கள் குறித்த சிந்தனை என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது : மாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங்களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வடக்கு தெற்கு மோதலை உருவாக்கியிருக்கிறது. வடக்கு இந்தி பேசும் மாநிலங்கள், தெற்கு இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசும் மாநிலங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அளவே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 48 சதவீதம். இந்த உண்மையை உற்று கவனித்து ஆராளிணிந்தால் ஒரு உண்மை நிச்சயமாக புரியும். இந்தி...

ராமானுஜர் ஆயிரம் ஆண்டுவிழா

ராமானுஜர் ஆயிரம் ஆண்டுவிழா

இராமானுஜரின் ஜாதி எதிர்ப்பு சில கேள்விகள்! பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ். எஸ். -சங் பரிவாரங்கள் -வைணவப் பார்ப்பனர்கள் -இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப் போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார்....

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

பசுப் பாதுகாவலர்களே, பதில் சொல்லுங்கள்!

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி -உலகம் முழுவதும் மக்களின் உணவுப் பழக்கமாகியிருக்கிறது; இஸ்லாமிய மதம் -பன்றி இறைச்சியை மறுக்கிறது; ஆனாலும் – துபாய், அபுதாபி உள்ளிட்ட இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி நடக்கும் அமீரகத்தில் அதன் விற்பனைக்கு தடையில்லை; பாஜக அதிகாரத்துக்கு வந்த மாநிலங்களிலோ, மாட்டிறைச்சி உண்பதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்து, கண்காணிப்பு குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்; மாட்டை வளர்த்தவரே கொலை செய்யப்படுகிறார்; பசுப் பாதுகாப்புப் படை சட்டத்தை தனது கரங்களில் எடுத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் அனுமதிக்கிறார்கள் புரதச் சத்துள்ள மாட்டிறைச்சி குறைந்த செலவில் உழைக்கும் மக்களுக்கான உணவாக இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டுக்கறி மக்களின் உணவுக் கலாச்சாரமாகும் இந்து மதம் ஒரு மதம் அல்ல என்றும் அது ஓர் வாழ்க்கை நெறி என்றும் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்காரர்களும் பேசிவருகிறார்கள் -அந்த வாழ்க்கை நெறி உழைக்கும் மக்களுக்கானதா ? அல்லது வேத பார்பனர்களின் வாழ்க்கை நெறியா என்பதே இப்போது கேள்வி. உழைக்கும் மக்கள்...

புத்தர் அறிவு ஆராய்ச்சிக்கு குரு

தினம் ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட புத்தர்தான் கடவுள் இல்லை என்று தைரியமாக சொன்னார். அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்று சிலர் வாதம் பேசுவதானாலும் அதை உறுதிப்படுத்தும் தன்மையில் அவர் எதற்கும் அஞ்சாமல் அடுத்த படியாக -“ஆத்மா என்பதாக ஒன்று கிடையவே கிடையாது, ஆத்மா ஒன்றுஇல்லவேஇல்லை”என்றுகூறிஇருக்கிறார். அதனால்அவருக்கு ‘அனாத்மன்’ என்றும் பெயர். ஆத்மா இல்லை என்பதை இலகுவில் யாரும் ஆதரிப்பவர்கள் இருக்க முடியாது. ஒரு கால் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுமானால் ஆதரிப்பதாய் இருந்தாலுங்கூட மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். விடுதலை : 21 – 02 -1952 புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ, இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக் கொண்டவர் அல்லர், அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து! விடுதலை : 7 – 5 – 1953 சரித்திர சம்பந்தமாக எவராவது மனிதனில் கீழ்ஜாதி, மேல்ஜாதி ஏன் என்பது பற்றி கேட்டாரா என்றால், புத்தர் ஒருவர்தான்...

பசுவதைத் தடையின் அரசியல் ஓர் வரலாற்றுப் பார்வை

உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தப் பிறகு, பசுவதைத் தடைச் சட்டத்தை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடுமையாக்கி, உண்ணும் உரிமைகளைப் பறித்து வருகின்றன. பசுவதை தடைச் சட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் பின்னணியை விளக்குகிறது, இக்கட்டுரை. பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ஆக. 21,2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதாஅறிமுகம்செய்யமுயன்றார்.கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. 1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே...

சீரடி சாய்பாபா! பின்னணி என்ன? உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்திஉயிருடன்வாழ்ந்தகாலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்பு கிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போதுசிலமனிதர்களைப்பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பல மான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக்...

துருக்கியில் கெமால் செய்த புரட்சி – மே.கா.கிட்டு

[துருக்கியில் கெமால்பாட்சா இஸ்லாமியராக இருந்தும் மதம் விதித்த பல கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை மதப்பிடியிலிருந்து விடுவித்தார் அரபு மொழியில் இருந்த இஸ்லாமிய நூல்களை சொந்த நாட்டு மொழியான துருக்கியில் மாற்றினார். துருக்கியின் முதல் குடியரசுத்தலைவராக 1923 முதல் 1938 வரை இருந்தவர் இஸ்லாமியராக பிறந்தாலும் ‘இறைமறுப்பே’ தனது மதம் என்று அறிவித்தவர் இராணுவ படைத்தளபதியாக இருந்தவர். பெரியார் கெமால் பாட்சா சீர்திருந்ங்களை வரவேற்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார் கெமால் பாட்சா செய்த நன்மைகள் என்ற தலைப்பில் 30.11.1938 இல் சென்னை கடற்கரையில் பேசியதும் துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் தலையங்கமும் முறையே 30.11.1938, 11.12.1938 குடிஅரசு இதழ்களில் வெளிவந்தது] இசுலாமிய மதத்தில் பற்றில்லாத கெமால் உலக இசுலாமியக் கூட்டமைப்புக் கொள்கையை முற்றிலும் வெறுத்தார். மதம் விளைவிக்கும் கொடுமைகளுக்கே அவர் முற்றுப் புள்ளி வைக்க விரும்பினார். துருக்கி மக்களை மத மயக்கத் திலிருந்து நீக்கி மெய்யான தேசியப்பற்றை அவர்களிடம் உருவாக்குவதில் நாட்டம்...

புத்த தம்மம் X வர்ண தர்மம்

புத்த தம்மம் X வர்ண தர்மம்

‘‘இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக்கொண்டாடுவதன்மூலம்தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும்.’’ இந்திய மக்கள் திருவிழாக்களை விரும் புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை. அவர்கள் ஆண்டின் பாதி நாட்களை திருவிழா கொண்டாட்டங்களுக்கும் மதச் சடங்குகளுக்குமே செலவிடுகின்றனர். மாமனிதர் களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதிகளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமி, ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தி ஆகிய கொண்டாட்டங்கள் இந்துக்களின் மனநிலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும் புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே...

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலையை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களை, பாராளுமன்றம் மூலம் 2016 – ஜூலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். எனவே, வரும் 07.05.2017ஆம் தேதி நீட் தீர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்காக விண்ணப் பித்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் மூலம் மட்டுமே, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். அகில இந்திய தொகுப்பு இடங்கள் (All India Quota) . ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்கள். வெளிநாடு...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச்சார்ந்தவராகஇருத்தல் வேண்டும் என்றுசட்டம் கூறினாலும் சட்டம்...

இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை

[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்] மதம் வாழ்க்கைக்கு தேவையா? மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில்...

பெரியாரிஸ்ட் ஃபாரூக் படுகொலை

கோவை திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் கடவுள் மதமறுப்பாளராக செயல்பட்டார் என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களையும் உருவாக்கிஇருக்கிறது; பெரியார் இயக்கத்துக்கும் -இஸ்லாமிய சமூகத்துக்கும் வரலாற்று ரீதியான உறவு தொடர்ந்து வருகிறது ; கடவுள் – மதமறுப்பாளர்களான பெரியார் இயக்க மேடைகளில்பேச அழைக்கப்படும் இஸ்லாமியர்கள்“ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ” கடவுள் மறுப்பாளர்களுக்கும் சேர்த்து வணங்கித்தான் பேச்சைத் தொடங்கு வார்கள்; கருத்துச் சுதந்திரத்தை பெரியார் மேடைகள் அங்கீகரிக்கவே செய்கின்றன. பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்புக்குள் இயங்கும் வேதமதமான இந்து மதம் -ஜாதி, தீண்டாமை அடையாளங்களை பிரிக்கமுடியாமல் -சதையும் நகமுமாக தன்னிடம் இணைத்துக் கொண்டிருக்கும், நிலையில் தீண்டாமையை மறுக்கும் மதமாக இஸ்லாம் மட்டுமே இருந்தது ; எனவேதான்பெரியார்ஒடுக்கப்பட்டசமூகத்தை தீண்டாமைக் கொடுமையிலிருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாக இஸ்லாமை பரிந்துரைத்தார் ; தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரு காரணத்தைத் தவிர , இஸ்லாம்...

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்!

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்!

‘திராவிட இயக்கம்’ என்ற பொது அடையாளத்தின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளையும் கொண்டு வந்து, ‘திராவிட’ என்ற சொல் ஆராய்ச்சியில் இறங்கி இது ‘தேவையற்ற பெயர்’, ‘காலாவதியான தத்துவம்’ என்ற வாதங்களை முன் வைப்பது வழக்கமாகிவிட்டது. 1944இல் திராவிடர் கழகத்தை பெரியார் உருவாக்கினார். இது ஓர் இயக்கம். 1949இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். அது இயக்கமல்ல; அரசியல் கட்சி; 1972இல் எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வை உருவாக்கினார். 1994இல் தி.மு.க.விலிருந்து -வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கி செயல்படுகின்றன. பெரியார் இயக்கங்கள் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணுரிமை இதற்கு தடையாக நிற்கும் பார்ப்பனியம், வேத மதத்தை ‘இந்து’ என்ற பெயரில் வெகு மக்கள் மீது திணிக்கும். கோட்பாடுகளை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றன. பெரியார் பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்துக்காகவும், பார்ப்பனியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான...

மனிதன் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவையா?

மனிதன் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவையா?

ஒரு மனிதன் அறிவுடையவனாகி, உண்மையுடையவனாகி, மக்களிடம் அன்பு காட்டி, மனம், வாக்கு, காயங்களால் தொண்டு செய்து அவைகளின்படி நடப்பானேயானால், அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? அன்பு, அறிவு, உண்மை, இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலுங்கூட, அக்கடவுள் – தன்னை இல்லை என்று சொன்னதற்கும் தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனைத் தண்டிப்பாரா? உண்மையில் யாரும் அறியமுடியாத ஒரு கடவுள் இருந்தால் – அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட, கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல், கடவுளுக்கு பக்தி செய்யாமல் அன்பு, அறிவு, உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கேதான் கருணை காட்டுவார். இந்த உணர்ச்சியினாலேயேதான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங் கழிக்காமல், நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்துவருகிறேன். நான் கூறின மேற்கண்ட தத்துவங்கள் – மதத் தலைவர்கள், அதிலே நிபுணர்கள் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும். மற்றும் சித்தர்களும்...

ஜக்கி அவர்களே… பதில் சொல்லுங்கள்!

ஜக்கிவாசுதேவ் -தொலைக்காட்சிகளுக்கு பேட்டிஅளித்துவருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் -கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன் மேய்ச்சல் பகுதியில்தானே இந்த மய்யம் கட்டப்பட்டிருக்கிறது....

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, , துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள்  குறித்த தகவல்களை மனிதவளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார்.  இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மகாசிவராத்திரியன்று அரித்துவாரைச் சார்ந்த அச்சுயதானந்தா என்ற பார்ப்பன சாமியார், தன்னை துவாரகபீட சங்கராச்சாரியாக அறிவித்துக் கொண்டார். ஏற்கெனவே சுவாமி சுவரூபானந்தா என்பவர் உள்ளிட்ட இரண்டு சங்கராச்சாரிகள், இந்த மடத்தில் இருக்கிறார்கள். புதிதாக...

பறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்!

பார்ப்பனர்களின் இந்து மத, சாதிய, பார்ப் பனிய ஆதிக்கம் பெரும்பான்மை மக்கள் மீது மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செயல்பட்டுள்ள ‘பறவைகளின் மீதான பார்ப்பனியத்தின் நுண் அரசியல்’ இக்கட்டுரையின் பேசு பொருளாக அமைந்துள்ளது. பறவைகள், விலங்குகள், புழுப் பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்குரிய, புறச் சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல் பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமானபெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். கால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின் காலடித் தடங்களில் இருந்து வெளிவரும் புழுப்பூச்சிகளை பிடித்துண்ணும் பறவையை கண்டவுடன், ‘மாடு மேய்ச்சான்’, மாடு விரட்டி’, ‘உண்ணி கொக்கு’ என பொருத்தமான பெயர்களை தமிழர்கள் வட்டாரத்திற்கேற்ப சூட்டி மகிழ்ந்தனர். அதுபோலவே, இன்றைய தலைமுறை வியக்கும் விதமாக பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருந்தனர். அதில் பல பெயர்கள் சாதிய மேலாதிக்கத்திற்குள்ளாகியுள்ளது. தமிழில் பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்கள் அமைந்திருக்க, தட்டான்கள்(Dragonfly),...

கைதாகும் தலைவர்கள் அன்றும் இன்றும்..

தமிழ்நாட்டில் முதல்வர்கள், முதல்வராக வருவதற்கு துடிப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிறைக்குப் போகிறார்கள். அதற்காக வெட்கப் படுவது இல்லை, இது ஒருபுறம் ஆனால் கொள்கைக்காக, அடக்குமுறைகளை எதிர்த்து சிறை சென்ற தலைவர்கள் தமிழகத்தில் உண்டு. அதிலும் பெரியார் சிறை சென்ற வரலாறுகள் கைகால்விலங்குகளோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளே கடும் வேலை வாங்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஏனைய தலைவர்களோடு பெரியார், இதிலும் தனித்துவமாக நிற்கிறார், கொள்கைக்காக சிறைக்கு போவது கூட தியாகம் அல்ல என்கிறார் பெரியார். 1932ம்ஆண்டுசோவியத்ரஷ்யாவுக்குபயணம் சென்று திரும்பிய பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் ‘இன்றைய ஆட்சி’ ஏன் ஒழியவேண்டும் என்று எழுதியகட்டுரைக்காக,அவர்மீதுஅடக்குமுறை சட்டம் பாய்ந்தது. அந்தக் கட்டுரை ஏழை எளிய மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கும், பார்ப்பன மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும், மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது என்ற கருத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பெரியாரும் குடிஅரசு பதிப்பாளர் என்ற முறையில் அவரது சகோதரி கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அடக்குமுறைகள்...

போராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம் – முனைவர் ச. ஆனந்தி

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் – அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் – மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன, கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் – சுயமரியாதைஇயக்கத்தின்கொள்கைளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் – பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள். பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும், பெண்களை பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது மாநாட்டில் சைமன் கமிஷன் சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது...

பெரியாரின் விடுதலைப் பெண்ணியம்

தாராளப் பெண்ணியம் சமதர்மப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் என்னும் வகைகளையெல்லாம் மீறிப் பெரியாரியப் பெண்ணியம் அமைந்துள்ளது. மகளிர் பற்றிய பெரியாரின் கருத்ததுக்களும் இலட்சியங்களும் சீர்திருத்தக் கருத்துக்கள், கொள்கைகள்என்னும்அளவில்குறுக்கிநிறுத்திவிட முடியாதவை. உரிமை கேட்டுப் போராடும் பெண்களே திகைக்கக்கூடிய சிந்தனைதான் பெரியாருடையது. அதாவது பெண்ணியத்திலும் பெரியார் அழிவு வேலைக்காரரே! பெண்ணைத் திருத்துவதன்று –மாறாகப் பெண்ணை மாற்றவது பெண்களைப் புதுமையாக்குவதுதான்பெரியாரின்இலட்சியம். சம்பிரதாயப் பெண்ணை (அடிமைப் பெண்) அழித்து உரிமைப் பெண்ணை வளர்த்து புது உலக விடுதலைப் பெண்ணை உருவாக்குவதே பெரியாரின் முயற்சி. பெண்ணே! உன்னை மூடி இருக்கும் திரையை நீக்கு! உன்னைத் தடுத்து நிறுத்தும் தடைச் சுவரினை உடைத்து எறி! உன்னைப் பூட்டியிருக்கும் விலங்கினை நொறுக்கித் தூள் தூளாக்கு! உன் மூளையில் படிந்திருக்கும் பாசியை வழித்தெறி! என் நெஞ்சத்தில் கால மெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போய் கிடக்கின்ற உணர்வுகளையெல்லாம் பொசுக்கு! உன்னைச் சுற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருப்பன அனைத்தையும் சுக்கு நூறாக்கு! அழி! அனைத்தையும்...

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு – மயிலை பாலு

அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள். புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங் களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார், “உலகாயதம்” துவேகம் ஆகியவற்றின் பொருண்மைநாத்திகவாதமேஆகும்.இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாய வைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மையக் கருத்துக்களாக கொண்டிருந்தன. வேத வேள்விகளையும் வருணா சிரமங் களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன. உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன் படவில்லை. வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்தி களுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரை யறுத்தன. இயற்கை இறந்த...

ஆன்மீகமா? வணிகமா? ஈஷா மய்யத்தில் என்ன நடக்கிறது?

ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ? பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள். உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த...

தேசபக்தி எனும் ஆயுதம்

கருத்துரிமையை எதிர்ப்பவர்களின் பதுங்கு குழியாகிவிட்டது ‘தேசபக்தி’ ‘தேசம்’ சூறையாடப்படுவதை எதிர்த்தாலோ, தேசத்தின் மக்கள் தங்களுக்கான உரிமை அடையாளங்களை வலியுறுத்தினாலோ -தேசத்துக்கு போர் வேண்டாம் என்று பேசினாலே) ‘தேசவிரோதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில் -மதவெறியை எதிர்த்தாலே ‘தேசவிரோதிகள்’ என்று அகில பாரதிய வித்யார்ந்தி பரிஷத் மாணவர் அமைப்பு வன்முறைகளில் இறங்கி வருகிறது. டெல்லி ராம்ஜஸ் கல்லூரியில் கலாச்சார மாற்றம் என்ற கருத்தரங்கில் பேச அழைக்கப்பட்டிருந்தார் ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சார்ந்த உமர்காபீத், அநீதியாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு அவரது நினைவு நாளில் இரங்கல் தெரிவித்ததற்காக -அதே பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்யாகுமாருடன் சேர்த்து – தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், இப்போது பிணையில் வெளிவந்திருக்கிறார். இந்தியாவில் எத்தனையோ பேர் மீது தேசவிரோத சட்டம் பாய்ந்திருக்கிறது, அதற்காக அவர்கள் பேச்சுரிமையையே தடைப் படுத்த வேண்டும் என்பது தான் தேசப்பக்தியின் அடையாளமா? ஆர். எஸ். எஸ் மாணவர்...

புல்பூண்டுக்கு ‘ஆன்மா’ உண்டா? – பெரியார்

ஆத்மா என்பதில்…. மனித ஆத்மா மாத்திரம்தான் மத சம்பந்தங்களுக்கு- அதாவது கடவுளுக்கும் ஆத்மாவுக்குமுள்ள சம்பந்தத்திற்காக ஏற்பட்ட மதங்களுக்குச் சேர்ந்ததா? அல்லது புல், பூண்டு, அμ, ஜந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன , நீர் வாழ்வன முதலிய ஜந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா? இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா? மனித ஆத்மா, மனித சரீரத்தில் இருக்கும் போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை, சரீரத்தை விட்டுப் பிரிந்தபிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே மற்ற புல், பூண்டு, ஊர்வன, பறப்பன , நகர்வன, நீர் வாழ்வன, அனு ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விலகிய பிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா? இந்த ஆத்மாக்களில், மேற்கண்ட ஜந்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சிறிது சிறிது வித்தியாசங்கள் குணங்கள் தன்மைகள் முதலியவைகள் – அதாவது புலன் வித்தியாசங்கள் அறிவு வித்தியாசங்கள் உள்ளது போலவே,...

மகனைப் போலவே நானும் மனுதர்மத்துக்கு தலைவணங்க மாட்டேன் – ராதிகா வெமுலா

அய்தராபாத் பலகலைக்கழகத்தின் தலித் மாணவர் ரோகித் வெமுலா-விசுவ இந்து பரிஷத் மதவாதத்தை எதிர்த்த காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தற்கொலைசெய்து கொண்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையட்டி ரோகித்தின் தாயார் ராதிகா வெமுலா அளித்த பேட்டியிலிருந்து… ‘‘ரோஹித் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு பத்துமணி அளவில் உப்பாலில் நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் வந்தார். போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஓரிரு பேராசிரியர்களும் ‘வி.சி.வெளியே காத்திருக்கிறார். அவர் உங்களோடு பேச விரும்புகிறார்’ என்று சொன் னார்கள். அவருக்கு எங்களுடன் ஏதாவது பேச வேண்டுமென்றால் அதைப் பொது இடத்தில் பேசட்டும் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். அவர் அதற்குப் பின்னர் இரண்டு மாதத்துக்கும் மேலே வெளிநாட்டில் இருந்தார். துணைவேந்தர் பதவிக்கே அருகதையில்லாதவர். ஓர் ஆசிரியராக இருக்கக் கூடத் தகுதி இல்லாதவர். அவருக்குப் பைத்தியம். தலித் மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பைத்தியம் முற்றிவிடும் அவரை நீக்க வேண்டும். தண்டிக்க...

பஞ்சாங்கம் அறிவியலா?

உலகம் போற்றும் வானியல் விஞ்ஞானி மேக்நாட்சாகா இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார். என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ‘அயனியாக்கக் கோட்பாடு சமன்பாடு’ எனற அவரது கண்டுபிடிப்புதான் பேரண்டம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. 1893இல் வங்கதேசத்தில் உள்ள  டாக்கா எனும் கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் வாழ்ந்தவர். ‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர். பிரதமர் நேரு – இவரின் அறிவியல் கருத் துகளால் ஈர்க்கப்பட்டார். வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார். அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார். மேக்நாட் சாகா-பார்ப்பன-இந்துமத எதிர்ப்பாளர்; பகுத்தறிவாளர்; 1951ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் – புரட்சிகர சோசலிச கட்சியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக கல்கத்தாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்து காலண்டரான...

அய்.நா. என்ன செய்யப் போகிறது? – பூங்குழலி போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் புதிய சதி

எதிர்வரும் மார்ச் மாதம் அய்.நா.வில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை விவாததக்கு வரவிருக்கிறது. இலங்கை அரங்கேற்றி வரும் சூழ்ச்சிகளையும், தமிழர்கள் நிகழ்த்த வேண்டிய எதிர்விளைவுகளையும் அலசுகிறது இந்த ஆய்வு. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. 28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை கொல்வதற்காக முன்னாள் போராளிகள் போட்டசதித் திட்டம் அம்பலமாகியிருப்பதாககூறுகிறார்.இதேநாளில் இதே செய்தி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் இதழிலிலும் கட்டுரையாக வெளிவருகிறது. ஏற்கெனவே இது தொடர்பில் 4 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். திடீரென தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருவதும் அதற்காக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நால்வரை கைது செய்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. ஜோசப்பரராஜசிங்கத்தைஅவர்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சர்ச்சுக்குள் வைத்தே...

எம்.ஜி.ஆர். – நிறையும் குறையும்

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு. பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் – அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கைவரலாற்றை விளக்கிடும் கலைநிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.   பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதல்அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார வரம்பை அமுலாக்க...

உலகையே கூறுபோடும் அக்ரகாரங்கள் – சுப. உதயகுமாரன்

இன ஒதுக்கல் என்ற மனித விரோதக் கொள்கையின் குறியீடுகளே ‘அக்கிரகாரங்கள்’.  அந்த ‘அக்கிரகார’ சிந்தனை உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. நாம் வாழும் உலகின் புறத்தோற்றத்தை மனக் கண்ணால் காண்பதும், அதன் உள்கட்டமைப்புக்கள், செயல்பாடுகள் பற்றி யெல்லாம் ஓர் அனுமானம் கொண்டிருப்பதும் ஒவ்வொரு சிந்திக்கும், செயல்படும் மனிதனுக்கும் அத்தியாவசியமானத் தேவையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடைபிடிக்கப்பட்ட “அபார்தைட்” எனும் இனவெறிக் கொள்கையை பயன்படுத்தி கெர்னாட் கோலர் என்கிற ஜெர்மானிய அறிஞர் 1978-ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார். “அபார்தைட்” என்பது தென் ஆப்பிரிக்காவின் பெரும்பான்மை கறுப்பின மக்களை., சிறுபான்மை வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட ஆட்சி முறை. உலக அளவிலும் வெறும் 22 விழுக்காடு மக்களாக இருக்கும் வெள்ளையர்கள் 78 விழுக்காடு பிற இனங்களைச் சார்ந்த  பெரும்பான்மையினரை கட்டுக்குள் வைத்து, கசக்கிப் பிழிவதை “உலக அபார்தைட்” என்று அவர் விவரித்தார். வெள்ளையினத்தவரின் அடக்குமுறையையும், கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தையும் உருவகப்படுத்தும் “உலக அபார்தைட்” உவமை இனவெறி...

டிரம்ப்பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார்.இந்த ‘மதவெறி’‘வகுப்புவாத’செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர் டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை துணிவுடன் வெளிப் படுத்தினார்....

இளைஞர்களின் எழுச்சி…

வெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்! ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது. “எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும்? “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது. ஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள்...

‘தோழர்’

1932 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டுகாலம் வெளிநாட்டு பயணத்தை முடித்து தமிழ் நாடு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிக்கை தோழர்கள் என்று அழையுங்கள் என்பதுதான். பெரியாரின் அறிக்கை: “இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர்அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, “தோழர்” என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும்,  மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். ‘குடிஅரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”. -ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932) நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

மனித வாழ்வு இலட்சியமற்றது!

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பலவகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏது£வது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்களின் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இது முக்கியமானதாகும். இதுவே அவசியமும் பொருத்தமும் ஆனதுமன்றி மனித வாழ்க்கை என்பதன் தகுதியான இலட்சியம்...

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிப்பு – கு. அன்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வேபயணச்சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக்காப்பீடு மற்றும் பொதுத்துறை வங்கிகளில்பணியாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர்கொள்கிறார்கள். டெல்லி அரசுகளின் கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில்இயங்கும்மத்தியஅரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புரிமை தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. இது சேவைத்துறைகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises) என்.எல்.சி (NLC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற் சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகிய தொழிற் சாலைகளில் இந்த நிலைதான். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின்...

மோடியின் செல்லாத அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

தலைமை அமைச்சர் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆன பின்பும் நிலைமை சீராகாமல் சாமானியர்கள் திண்டாடி தெருவில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இந்த நடவடிக்கையால் சாமானியர்கள் படும்பாடு வீணாகாதாம். அவர்களது தியாகங்களுக்கு பயன் இருக்குமாம். பெரும் நிலப் பிரபுக்களும் செல்வந்தர்களும் தலைமை அமைச்சர் மீது கோபமாகஇருக்கிறார்களாம்.நாட்டின்வளர்ச்சி பெருகுமாம். கள்ளப் பணம் / கறுப்புப் பணம் ஒழிவதால் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறுமாம். இவை யாவும் இந்த ‘செல்லாத’ அறிவிப்பினை வெளியிட்ட தலைமை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் விவாதங்கள். இந்த விவாதங்களில் உண்மை உள்ளதா? ஏழைகள் பயன் பெறுவார்களா? பெரும் செல்வந்தர்கள் துயரப்படுவார்களா? உண்மை நிலவரம் என்ன? இன்று வெளிவந்துள்ள ஒரு அறிக்கை இந்த வாதங்களின் அடிப்படையில்லா பொய்மையை நிறுவுகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஒரு விழுக்காட்டினரிடம்தான் நாட்டின் 58.4% செல்வம் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு கண்டடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின்...