Author: admin

மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை

அன்பு தோழர்களே, வணக்கம். சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில்...

ஜாதி ஒழிப்பு போராளி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் பெரம்பூர் 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்… கருத்துரை : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எழுத்தாளர். வே.மதிமாறன் ‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’ நாள் : 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் : தாய் ராம்பாய் பவன், 37, சடையப்ப தாஸ் தெரு, பெரம்பூர் பெரம்பூர் மேம்பாலம் அருகில். அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்…… ஆழமான புரிதலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்……. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதுச்சேரி 26042017

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 125 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சார்பில்.. நாள் : 26.04.2017. புதன் கிழமை. நேரம் : மாலை 6.00 மணி. இடம் : கடலூர் சாலை,தவளகுப்பம், நல்லவாடு சாலை சந்திப்பு,புதுவை. தலைமை : தோழர் ஆ.பாவாடை ராயன், மாநில தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை. கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள்.

தொட்டியபட்டி ஜாதி வெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் விருதுநகர் 20042017

தொட்டியபட்டியில் நாயக்கர் சாதி வெறியர்களால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மக்களை திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 20042017 அன்று சந்திந்து ஆறுதல் கூறினார் மாலை விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது  

தோழர் ஃபாரூக் நிதியளிப்பு புதுச்சேரி 08042017

08042017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர். நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்றவற்றை விளக்கிப் பேசினார். அந்நிகழ்வில் ரூ.1,84,100-00 வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900-00 அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000-00மாக முழுமைப் படுத்தினர்.

சாக்கடைக் குழிக்குள் சாவு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சாக்கடைக் குழிக்குள் சாவு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாப்பூரில் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் ஜனார்த் (மாநகராட்சி ஊழியர்). இவர் 27.8.2013 அன்று காலை 10.30 மணியளவில் மயிலாப்பூரில் சாய்பாபா கோவில் அருகே உள்ள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பு எடுக்கும்போது விஷவாயு தாக்கி உயிர் இழந்தார். “மனிதனை மரணக் குழிக்குள் தள்ளும் இந்த இழி தொழிலை நிறுத்த வேண்டும்; எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று மாநகராட்சியை வலியுறுத்தி 28.8.2013 அன்று காலை 10.30 மணிக்கு நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பா.ஜான் (மாவட்டகழகத் தலைவர்) தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மயிலைப் பகுதி செயலாளர் மாரிமுத்து, அமைப்பாளர் மனோகரன், திருவல்லிக்கேணி செயலாளர் அருண்குமார், அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து, அருகிலுள்ள சமூகநலக் கூடத்தில் வைத்தது. பின்னர் மாலை 4 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 05092013 இதழ்

செங்கொடி நினைவு நாளில் மரணதண்டனைக்கு எதிராக கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

செங்கொடி நினைவு நாளில் மரணதண்டனைக்கு எதிராக கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தோழர்  செங்கொடி நினைவு நாளான ஆகஸ்டு 28 அன்று தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசன் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், மாநகர தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கழகப் பொறுப்பாளர்கள் து. ஜெய்ந்த் கிருஷ்ணன், பாலமுரளி, ஆன்ட்ரூஸ், நாகராஜ், பிரதாப், சிலம்பரசன், நேரு தாஸ், பிரசன்னா, சதீஸ், இராஜாமணி, இரத்னபுரி சதீஸ், விக்கி, மகேசு, பிரசாந்த், திருப்பூர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 05092013 இதழ்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தக் கோரி செப்.13 இல் கழகம் ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு முடிவுகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தக் கோரி செப்.13 இல் கழகம் ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழுக் கூட்டம், செப். 2 ஆம் தேதி பகல் 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சங்க கருத்தரங்க மண்டபத்தில் செய லவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் அடுத்த செயல் திட்டங்கள், பரப்புரைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மராட்டியத்தில் மத வெறியர் களால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் வீரமரணத்துக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நாத்திகர் விழா, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொ டர்ந்து தெளி வான தீர்ப்பு கிடைக்காத நிலை யில் அதே நாளில் மேல் முறையீடு செய்து விடுமுறை நாள் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கான முயற்சிகளில் இறங்கி அதில் வெற்றி பெற்று...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           திருநாவலூர் காவல் நிலைய போலீஸ்காரர் ரமேஷ் பாபு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேகுவேரா படத்தை ஒட்டி வைத்ததற்காக காவல் நிலைய ஆய்வாளரால் தண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.          – செய்தி சேகுவேரா படத்துக்கு பதிலாக இவர் ஏதாவது கடவுள் படத்தை ஒட்டியிருந்தால் எந்த நடவடிக்கையும் வந்திருக்காது. அந்தக் கடவுள் படத்தை அகற்றச் சொன்ன ஆய்வாளர் மீது தான் நடவடிக்கை பாய்ந்திருக்கும். இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற நாடாம்! ட           சமூக சீர்திருத்தமும் அறிவியல் விழிப்புணர்வும் சமூகத் தில் நடந்தால் தான் மராட்டியத்தில் நிறைவேற்றப் பட்ட மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் வெற்றி பெற முடியும்.                – ‘இந்து’ ஏடு தலையங்கம் மிக்க மகிழ்ச்சி. இதே கருத்தை தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களுக்கு அரசு தடை போடும்போது ‘இந்து’ ஏடு எழுதாமல் மவுனம் காப்பது தான் நமது பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருக்கிறது! ட           தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான...

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும் உரிமை, நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு உண்டு என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணி சமூகப் பதட்டத்தையும் மத மோதல்களையும் உருவாக்கும் என்று அரசு முன் வைத்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. திராவிடர் விடுதலைக் கழகம் செப்டம்பர் முதல் தேதி மாலை மயிலை அம்பேத்கர் பாலத்திலிருந்து வி.எம். சாலை வரை நாத்திகர் விழாவையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்த காவல்துறையிடம் கேட்டது. மாநகர காவல்துறை ஆணையர் மறுத்து விட்டார். கழக சார்பில் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.கே. சசீதரன் முன் ஆகஸ்டு 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதாடினார். அரசியல் சட்டத்தில் ஒரு குடிமகனுக்கு அடிப்படை கடமையாக அறிவியல் மனப் பான்மையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக்...

தலையங்கம் கோயிலில் முடங்கும்  ‘கல் முதலாளி’களின் தங்கம்!

தலையங்கம் கோயிலில் முடங்கும் ‘கல் முதலாளி’களின் தங்கம்!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிகட்டுவதற்கு கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன் வைப்பதற்கே பலரும் அஞ்சுகிறார்கள். பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணக்கார ‘கல் முதலாளி’களின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தில் கை வைத்தால் பார்ப்பன ஆதிக்கத்தில் கை வைத்ததாகவே பார்ப்பனர்கள் மிரட்டுகிறார்கள். பெட்ரோலியப் பொருட்களுக்கும் தங்கத்துக்கும் இறக்குமதி செய்ய பெருமளவில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் டாலர் பற்றாக்குறையை சமாளிக்க கோயில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை முன் வைக்கப்படுகிறது. முடங்கிக் கிடக்கும் தங்க நகைகளை ரிசர்வ் வங்கி வாங்கி, தங்கக் கட்டிகளாக உருக்கி, இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த யோசனை. உலகிலேயே அதிகமான தங்கக் கட்டிகளை வைத்துள்ள நாடு அமெரிக்கா. இரண்டாவது இந்தியா. அமெரிக்காவின் தங்கம் அரசுக் காப்பகத்தில் அரசு சொத்தாக உள்ளது....

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

திராவிடர் விடுதலை கழக நாத்திகர் விழா- மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணி எழுச்சியோடு பறை இசை முழங்க, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து செப். 1, மாலை 4.30 மணியளவில் பகுத்தறிவு முழக்கங்களுடன் புறப் பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையேற்க, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரணியின் நோக்கத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார். “பகுத்தறிவுப் பரப்புரை நடத்துவதற்கும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்துவதற்கும் சட்டப்படியே உரிமை உண்டு என்பதை நிலை நாட்டி நடத்தப்படுகிறது  இப்பேரணி. மராட்டிய அரசு கொண்டு வந்ததைப்போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கோயிலில் குவிந்து கிடக்கும் தங்கத்தை அரசு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். 500க்கும் மேற்பட்ட பெண், ஆண், இளைஞர்கள்  பகுத்தறிவு...

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

செப்.1 அன்று நடந்த சென்னை நாத்திகர்  பேரணியில் எழுப்பிய முழக்கங்கள். நம்பாதீங்க! நம்பாதீங்க! சாமியார்  கூட்டத்தை நம்பாதீங்க! நாட்டு நடப்ப பாருங்க! ஏமாத்துறான் பாருங்க! நம்பி வந்த பெண்களை கெடுக்கிறானுக பாருங்க! ஏமாத்துறதைப் பாருங்க! ஜெயிலுக்குள்ளே பெயில் கேட்டு கம்பி எண்ணுறான் பாருங்க! நம்பாதீங்க! நம்பாதீங்க! சோதிடத்தை நம்பாதீங்க! நல்ல நேரம் பார்த்து சோதிடத்தை பார்த்து நடத்தி வச்ச கல்லாணம் ரத்து கேட்குது பாருங்க! பொய்யுங்க! பொய்யுங்க! சோதிடம் எல்லாம்  பொய்யுங்க! நல்ல நேரம் கெட்ட நேரம் நல்லவனுக்கு வேணாங்க! ராகு காலம், எமகண்டம் எந்த நாட்டில் இருக்குங்க! பொய்யப்பா! பொய்யப்பா! வாஸ்து சாஸ்திரம் பொய்யப்பா! புயலடிச்சி பூகம்பம் வந்தா வாஸ்து வீடு இடியாதா? வங்கிக் கடன் கட்டாட்டி வாஸ்து வீடு ஏலம் போகாதா? தமிழக அரசே! தமிழக அரசே! தடை செய்! தடை செய்! மூடநம்பிக்கைகளை தடை செய்! சட்டமியற்று சட்டமியற்று! மூடதனத்தை ஒழித்திடவே! சட்டம் இயற்று! சட்டம் இயற்று!...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, டீசல் விலையை கடுமையாக உயர்த்தி எண்ணெய் நிறு வனங்களின் வருவாய் இழப்பை குறைக்க வேண்டும்.                            – பிரதமரின் பொருளாதார ஆலோசகர்              கி. ரெங்கராஜன் எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடியி லிருந்து மீண்டுவிடும். ஆனால், எண்ணெயைப் பயன்படுத்த மக்கள் தான் இருக்க மாட்டார்கள். அதனாலென்ன? பொருளாதாரம், முக்கியம் பிரதமரே! ட           நிலக்கரி சுரங்க ஒதுக்கிடு கோப்புகள் திருடப் பட்டுள்ளன. இது தொடர்பாக எப்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறீர்கள்?  – சுஷ்மா சுவராஜ் கேள்வி! முதல் தகவல் அறிக்கையும் காணாமல் போகும் என்பது உறுதியானால், இப்போதே தாக்கல் செய்ய தயார்! ட           7 வயதில் பள்ளிப் படிப்பையும் 13 வயதிலேயே பட்டப் படிப்பையும் முடித்து சாதனைப் புரிந்த உ.பி. மாநில சிறுமி சுஷ்மா வர்மா மேல் படிப்புக்கு உதவிட பல்கலைக் கழகங்கள்  போட்டிப் போட்டு ஆர்வம்.                           ...

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.  அதன்படி இனி வரும் காலங்களில் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கோயிலை சுற்றி யுள்ள வளாகத்தில் நாத்திகர்களுக்கும், இந்து சமய வளர்ச்சிக்கு தொடர்பில்லாத கொள்கை உடையவர்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும், மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும், கோயில் மண்ட பங்கள், பக்தி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறதாம். வேதத்தை எதிர்ப்பவர்கள்தான் நாத்தி கர்களே தவிர, கடவுளை எதிர்ப்பவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார், இறந்து போன மூத்த காஞ்சி சங்கராச்சாரி. சார் வாகம், சமணம் என்கிற கடவுள் மறுப்பு சிந்தனைகளும் இந்து மரபில் இருந்திருக் கிறது. வேதத்தை யும் வடமொழியையும் மறுத்த மறைமலையடிகள் போன்ற சைவர்களும் சங்கராச்சாரி கூற்றுப்படி நாத்திகர்கள் தான். அதேபோல் ‘இந்து’க்களில் பெரும் பாலோர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள். பல கிராமக்...

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம்: பகுத்தறிவு கொள்கைகளுக்காக மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர், மதத் தீவிரவாதி களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த இரண்டு வாரங் களுக்குள்ளேயே அசாம் மாநிலத்தில் கோச்ராஜ்கர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் அக்கிராம மக்கள் பேய், பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகித்து இரண்டு பேரை கொலை செய்து விட்டனர். தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டதால், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரும் கட்டா யத்துக்கு மகாராஷ்டிர அரசு உள்ளானது. அதுபோலவே அசாம் முதல்வர் தருண் கோகோயும் பேய்-பில்லி சூன்யத்தை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும், இதுபோன்ற குற்றம் அசாம் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை. சமு தாயத்தில் பரவியுள்ள இந்த மூடநம்பிக்கை நோயை ஒழிக்க, மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசே, ஒரு மாதிரி சட்டத்தை தயாரிக்க வேண்டும். ‘பேய் பில்லி சூன்யம்’ வைத்தவர்கள் என்று முத்திரை குத்தி,...

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும்  பார்ப்பன அலறலும்!

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும் பார்ப்பன அலறலும்!

கேரளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன், பத்மநாபசாமி உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான தங்கம் முடங்கிக் கிடக்கிறது. நாட்டின் அன்னிய செலாவணிக்கு பதிலாக தங்கத்தின் கையிருப்பைக் காட்டினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீறும் வாய்ப்புகள் உண்டு என்ற நிலையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கியின் கணக்கில்  கொண்டு வர முடியும். அந்தத் தங்கத்தை ஒரு சில வருடங்களில் மீண்டும் கோயிலுக்கு எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தைவிட கோயில்களில் ‘கடவுள்களிடம்’ முடங்கிக் கிடக்கும் தங்கத்தில் கை வைக்கக் கூடாது என்று பார்ப்பன சக்திகள் அலறுகின்றன. அண்மையில் இந்தியன் ரிசர்வ் வங்கி கேரளாவிலுள்ள கோயில்களில் தங்கத்தின் இருப்பு குறித்த விவரத்தைக் கேட்டு கடிதம் எழுதியது. உடனே பார்ப்பன அமைப்புகள் அலறத் தொடங்கிவிட்டன. ஒரு கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கும் உரிமைகூட இல்லை என்கிறார்கள்.  கடிதத்துக்கு பதிலே எழுதக் கூடாது என்று குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தை சில இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாம். திருவாங்கூர் தேவஸ்தானமும்,...

செப். 17 – தமிழினத்தின்  மான மீட்பு நாள்!

செப். 17 – தமிழினத்தின் மான மீட்பு நாள்!

நாடாளுமன்றத்துக்கே போகாமல் அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்த வைத்து, கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்த தலைவர் – பெரியார் 10 வயது பார்ப்பன சிறுவன் – 60 வயது, 70 வயது பார்ப்பனரல்லாத மக்களை ‘அவன்’, ‘இவன்’, ‘அவள்-இவள்’ என்று நாக் கூசாமல் அழைத்து வந்த அவமானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் – பெரியார் தமிழ்நாட்டில் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதில்லை. வேறு மாநிலங்களில் ஜாதி ஒழிப்புப் பேசும் புரட்சி இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் போடுவதையே வழக்கமாக்கியிருந்த தமிழகத்தில் ஜாதிப் பெயரை வெட்டி எறிய வைத்தது – பெரியார் பார்ப்பான் மந்திரம் ஓதி, பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தி வந்த புரோகித திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி அதை சட்டமாக்கச் செய்தவர் – பெரியார் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எழுத்து...

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திவாலாகிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதார சீர்கேடுகளைக் கண்டித்தும் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி யும் திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டங்களை செப்.13 ஆம் தேதி நடத்துகிறது. இது குறித்து கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கை: நோயைப் பரப்பியவர்களே, இப்போது நோய்க்கு சிகிச்சை தேடுகிறார்கள்! உலகமயமாக்கல் – புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்தது யார்? நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளின் நிலைக்கு உயர்த்தப் போகிறோம் என்று ‘டமாரம்’ அடித்தது யார்? காங்கிரஸ் ஆட்சிதான். ஆமாம்; ஆமாம்; நாங்களும் அதைத்தான் ஆதரிக்கிறோம் என்று பின் தொடர்ந்ததும் பா.ஜ.க. ஆட்சிதான்! என்ன நடந்தது? உள்நாட்டு தொழில் வளர்ச்சி முடங்கியது. விவசாயம் நசிந்துப் போனது. பெட்ரோல், டீசல் விலை – வாரந்தோறும் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. அரசுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அடி மாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவச்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான். வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!  குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?  குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது...

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

மக்கள் பிரதிகளின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டு பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கம் கொள்கைகளை நிர்ணயித்து அமுல்படுத்தி வருகிறது என்று மயிலாடுதுறையில் ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்மப் பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். அவரது உரை: சுயமரியாதை, அந்த சொற்களுக்குள் அடங்கி இருக்கிற பொருள் ஒரு சமூகம், அந்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதன் தன்மானம் உள்ள மனிதனாக, சுயமரியாதை உள்ள மனிதனாக, வாழ்ந்தால் அவன் ஒரு மனிதன் என்பதற்கான அடையாளம். அந்த சுயமரியாதை அடையாளத்தை இந்த சமூகத்திற்கு குறிப்பாக இந்த பார்ப்பனர் அல்லாத சமூகத்திற்கு மீட்டு தருவதற்காக வந்த இயக்கம் தான் பெரியார் இயக்கம்.  1932ம் ஆண்டு பெரியார் தன்னுடைய சுயமரியாதை கொள்கைகளோடு சமதர்ம கொள்கை களையும், இணைத்து சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை ஈரோடு நகரத்திலே வகுத்தார்கள். அதாவது சுயமரியாதை கொள்கை களோடு பொதுவுடமை கொள்கைகளையும், இணைக்கின்ற சமூக அரசியல்...

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

15.9.2013 ஞாயிறு அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சுற்றுச் சூழலை நதி நீரை மாசுபடுத்தும், இரசாயன வினாயகன் சிலை ஊர்வலங்களை தடை செய், கோயிலில் இருக்க வேண்டிய சிலையை வீதிகளில் அனுமதிக்காதே, தமிழகத்தை மதக்கலவர பூமியாக்காதே என்ற முழக்கங்களுடன் வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் காவல் நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட பொருப்பாளர்கள் பா.ஜான், வேழவேந்தன், ஆ.வேலு, ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, சுனில், அருள்தாசு, காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் டேவிட் பெரியார், தினேஷ், சேகர், திருவல்லிக்கேணி பொருப்பாளர்கள் பிரகாசு, அருண், செந்தில், விழுப்புரம் அய்யனார், தமிழ்ச் செல்வி, ஜெயந்தி, அம்பிகா, புனிதா, உஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி திருவல்லிக்கேணி சமுக நலக்...

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

“கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்; உள்நாட்டு தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஈரோட்டில் கைது ஈரோடு மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பு 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங் கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஏற்கனவே காவல்துறையினரிடம் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் விநாயகன் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின் பரிசீலிப்பதாக காவல்துறையினர் கூறி யிருந்தனர். ஆனால், விநாயகன் ஊர்வலம் முடிந்த பின்பும் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “கோவில்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆத்தூர் 14042017

புரட்சியாளர் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களின் 126 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழர்.மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது… பின்பு அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில்  பெரியார் – அம்பேத்கர்  வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப்பட்டது….படிப்பகத்தை(வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரியர் தோழர் முருகேசன் அவர்களும், பேராசிரியர் தோழர் அம்பேத்கர் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர்….மேலும் அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும் படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது… செய்தி திவிக ஆத்தூர்.

இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

நாளொன்றுக்கு இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் ஏழுமலையான் ‘சமையலறையில்’ நுழைந்து லட்டு தயாரிக்கும் உரிமை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் உரிமை கோருகிறார்கள். ஏனைய பார்ப்பனரல்லாத ஜாதி – அவர் தேவஸ்தான தலைவராகவோ அமைச்சராகவோ இருந்தால்கூட, ‘மடப்பள்ளி’க்குள் (சமையலறை) நுழைய முடியாது. அண்மையில் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம்’ என்ற மத்திய அரசு நிறுவனம், சென்னையில் உள்ள உணவு தயாரிப்புக்கான உரிமம் வழங்கும் ஆணையகத்துக்கு ஒரு தாக்கீது அனுப்பியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாகிய ‘லட்டு’ ஒரு உணவுப் பொருள் என்பதால் அது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த உணவுப் பொருளை தயாரிக்கும் சமையலறை உணவுப் பாதுகாப்புக்கான விதிகளின் கீழ் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது சட்டப்படியான நடைமுறை. எனவே பொது சமையலறைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளதா? உணவுப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியது. ஆனால், திருப்பதி...

கவுசல்யா – திவ்யாவின் உருக்கமான சந்திப்பு

தர்மபுரியில் திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண், இளவரசன் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து, இளவரசனின் குடும்பத்தோடு வாழ்ந்தபோது, ஜாதி வெறி சக்திகள் கலவரம் செய்து கட்டாயப்படுத்தி இந்த இணையர்களைப் பிரித்தனர். இறுதியில் தலித் இளைஞர் இளவரசன், இரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண், வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்துவிட்டு கடும் மன அழுத்தத்தில் சமுக – ஜாதியப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார். இதே கொடுமைதான் உடுமலை சவுசல்யா என்ற பொறியியல் பட்டத்தாரிப் பெண்ணுக்கும் நிகழ்ந்தது. தன்னுடன் படித்த சங்கர் என்ற தலித் பொறியாளர் மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதால், சங்கரை உடுமலைப்பேட்டையில் கவுசல்யா கண் முன்பே வெட்டி சாய்த்தார்கள். கவுசல்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்ணின் பெற்றோர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஜாதி வெறி பிடித்த தனது பெற்றோர்களை...

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து பயிலரங்கம்: பகுதி மக்கள் பேராதரவு 15.4.2017 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மந்தைவெளி செயின்ட்மேரீஸ் சாலையில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமுதாய நலக் கூடத்தில் மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முயற்சியால் சுயமரியாதைக் கல்விக் கழகம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கி, 10, ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பு களுக்கான  பயிலரங்கம் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் மாணவ மாணவியர் 70 பேர், அவர்களுடைய பெற்றோர் மற்றும் கழகத் தோழர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் வகுப்புகள் நடத்த ம. வீரபாகு, (வருமான வரித் துறை அதிகாரி, தலைவர், கூட்டுறவு சங்கம்), கோ. குணவதி (தலைவர், வருமானவரி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்கம்), கு. தனசேகர் (வருமானவரி ஆய்வாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர் ஆ. சிவக்குமார் தலைமை தாங்கினார். கோ. குணவதி,...

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை  மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது. காவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை...

ஃபாரூக் நினைவேந்தல்: உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்

மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளர் என்பதற்காக மார்ச் 16 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக். ஃபாரூக் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 16.4.2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் திரண் டிருந்தனர். 4.30 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பிய நிலையில் பலரும் நின்றுகொண்டே கருத்துகளைக் கேட்டனர். நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் செய்தி யாளர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார். பேட்டியில் – “இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நாங்கள் போராடினோம். இப்போது அந்தக் கோரிக்கையை காவல் துறை ஏற்று காவல்துறை இயக்குனர் ‘சி.பி.சி.ஐ.டி.’ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற் கிறோம். அதே  நேரத்தில் இந்த வழக்கின் பின்னணி –...

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

ஆத்தூரில் அம்பேத்கர் 126 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார்-அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில்  பெரியார் – அம்பேத்கர்  வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப் பட்டது. படிப்பகத்தை (வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரி யர் முருகேசன், பேராசிரியர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர். அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் விழா காலை 8 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை...

‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்

4.4.2017 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தோழர் பாரூக் படுகொலை கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும், இஸ்லாமிய...

கண்டனப் பொதுக்கூட்டம் ! தூத்துக்குடி 22042017

தொட்டியபட்டி அருந்ததியின மக்கள் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதி ஆதிக்க வெறியர்களைக் கண்டித்து நாள் : 22.04.2017 சனி. நேரம்: மாலை 5 மணி இடம்: வடக்கு சோட்டையன் தோப்பு, தருவைக்குளம் மெயின் ரோடு, தூத்துக்குடி. சிறப்புரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். சொ.சு.தமிழினியன், தென்மண்டலச் செயலாளர்ர், வி.சி.க. தொடர்புக்கு: 90036 95465 – 96268 61581

இப்படிக்கு ஃபாரூக் – தோழர் கண்மணி கவிதை

எரிபொருளு இல்லாம எங்கேயோ தவிக்கறன்னு, என்வீட்டப் பாக்காம, ஒன்னப்பாக்க வந்தேனே. பகுத்தறிவு அப்பாவோட பாசமாக வளர்ந்தபுள்ள, பாதியில தவிச்சுநிக்க என்னநீயும் கொன்னுபுட்ட. மதமெல்லாம் பொய்யுன்னு, மனிதம் மட்டும் மெய்யுன்னு, பகுத்தறிவு ஊட்டத்தானே பெரியாரின் பிள்ளையாக பூமியிலே வாழ்ந்தேனே. என் கழுத்த அறுக்கையிலே எங்கே என் அப்பான்னு, ஏங்கியழுமே புள்ளைங்கன்னு, ஏன்டா நீயும் மறந்துபுட்ட. கடவுள்தானே இல்லையின்ன, காதல் உண்டு எப்போதும். காவியமாய் வாழ்வதற்குள் காதல்செய்த துணைவியாளை., தவிக்கவிட்டு போறேனே. கடவுளிருக்குனு சொன்ன நீ, கருணைகூட இல்லாம., வயிற்றில்குத்தி துளையிட்டு கழுத்தறுத்து உயிரெடுத்த எந்தன் உயிர்நண்பனே!! இப்போதும் சொல்கிறேனே. மாண்டுபோய்விட்டாலும், மண்ணாகிச் சொல்கிறேனே. கடவுள் எங்கும் இல்லையே! மதத்தாலே நீயும்தா மிருகமாகிப்போனாயே, கடவுள்தா எல்லான்னு கருணையற்று கொன்னாயே. உனக்கும்இனி தோன்றுமே, உந்தன் சிறை வாழ்விலே, கடவுள் எங்கும் இல்லையே. சாவைக்கண்டு அஞ்சாமல், சாகநானும் தயாரானேன். தோள் கொடுக்க கூட்டம் உண்டு. தோழமை என்னும் உறவுண்டு. பகுத்தறிவு பால்குடுக்க, எம்புள்ளைக்கொரு பள்ளியுண்டு. தி.வி.க என்னுமொரு...

தோழர் ஃபாரூக் படுகொலை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

தோழர் ஃபாரூக் படுகொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை ! அதனால் கொலைக்கு “காரணமானவர்களை” கண்டறிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தோழர் ஃபாரூக்கை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த முஸ்லீம்கள், இசுலாமிய மதவெறி ஏற்றப்பட்ட வெறும் கருவிகளே. ஆக விரைவில், * ஃபாரூக் படுகொலைக்கு திட்டமிட்டு பின்னிருந்து இயக்கிய இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கம் கண்டறியப்பட வேண்டும். * அந்த இசுலாமிய மதவெறி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப் பட வேண்டும். * ஃபாரூக் கொலையை பின்னிருந்து செய்த இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பு “இசுலாமிய மத பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். செய்தி பரிமளராசன்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தூத்துக்குடி 14042017

அண்ணல் அம்பேத்கர் 126வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் தலைமையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை 14042017

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை சார்பாக அண்ணல் அம்பேத்கர் 126 ஆம் பிறந்தநாள் விழா அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கழகத் தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் டாக்டர்.அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் சென்னை மாவட்ட இயக்க தோழர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த கழக தோழர்கள் வாகன ஊர்வலமாக டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்….. டாக்டர்.அம்பேத்கருக்கு திராவிடர் விடுதலைக் கழக மயிலாப்பூர் பகுதி தோழர்கள் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி…..அந்த பகுதி மக்களுக்கு கேக் வழங்கப்பட்டது…. இறுதியாக ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் டாக்டர்.அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை 15042017

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக….. “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்…. மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்து சைதாப்பேட்டை T.K. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்…. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 செய்தி ஜான் மண்டேலா      

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருச்செங்கோடு 14042017

திருச்செங்கோட்டில்திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா… செய்தி தோழர் வைரவேல்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மேட்டூர் 14042017

மேட்டூர் மற்றும் நங்கவள்ளி பகுதிகளில் கழகத்தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்… சிறப்பு விருந்தினராக ஜோக்கர் திரைப்பட இயக்குநர் இராஜு முருகன் அவர்கள். மிதிவண்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கலைகட்டியது.

மாட்டுக்கறி உண்ணும் விழா – இந்துமகா சபாவின் அறிக்கைக்கு ஈரோடு மாவட்ட கழகம் பதிலடி

அன்பார்ந்த தமிழர்களே ! கீழ்கண்ட அழைப்பை பாருங்கள். _____ அகில பாரத இந்து மகாசபாவின் அறிக்கை : வரும் 23:04:2017 அன்று சேலத்தில் கொளத்தூர் மணியின் பெரியார் திராவிடர் விடுதலை கழகம் நடத்த இருக்கின்ற மாட்டுக்கறி உண்ணும் விழாவைக் கண்டித்து அன்றைய தினமே பெரியாரின் சிலைக்கு அவர் பிறந்த மண்ணில் (ஈரோடு) செருப்பு மாலை அணிவிக்கும் விழா…. அழைக்கிறோம்.. உணர்வுள்ள இந்துக்களே பெரியார் திராவிடர் கழகத்தை விரட்டியடிக்க ஒன்று கூடுவோம்…. இடம் : ஈரோடு நாள் : 2⃣3⃣–0⃣4⃣–2⃣0⃣1⃣7⃣ தலைமை: காவிப்படைத் தளபதி திரு.தொல்காப்பியன் ஜி மாநிலத் துணைத்தலைவர், அகில பாரத இந்து மகாசபா. அழைக்கின்றார் அகில பாரத இந்து மகாசபாவின் தமிழ் மாநிலத் தலைவர் காவித்தளபதி கலியுலக கல்கி K.இராஜசேகர் ஜி அவர்கள்…. அழைப்பில் மகிழ்வது; அ.விஜயகுமார். மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர், மாவட்டத்தலைவர், திருப்பூர் மாவட்டம் @@@@ வாருங்கள் தமிழர்களே !! அய்யா தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கிறார்களாம்… கடும்...

மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா,...