Author: admin

முகிலன் எங்கே?  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, “தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!” என்ற முழக்கத்தோடு 27.2.2019 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆ.சா.உமர் பாருக், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித்...

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக கூட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள மாயவரம் பகுதியில் 24.2.2019 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சி.எம்.  நகர் பிரபு தலைமையேற்க, சீ.ரா .சௌந்தர், பி. கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு வீரா கார்த்தி சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும், மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெய பாண்டி, விஜயகுமார், பிடல் சேகுவேரா, சத்யராஜ், குமார், கமலக்கண்ணன், கிருஷ்ணன், பிரபு, விஜயரத்தினம், எழிலன். கூட்டத்தின் முடிவில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டு செல்லும் விதத்தில் தொடர்...

கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

மோடி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று மருத்துவர் இராமதாசிடம் ‘நியூஸ் 18’ தொலைக் காட்சி பேட்டியில் கேட்டபோது ‘சைபர்’ மார்க்குக்கும் கீழே போடுவேன் என்றார், மருத்துவர் இராமதாஸ். ‘கழகங்களின் கதை’ என்று எடப்பாடி ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து நூலாக்கி, ஆளுநரிடம் தந்து ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியதும் அதே பா.ம.க.தான்! இவையெல்லாம் 5 ஆண்டுகள் முன்போ, 2 ஆண்டு களுக்கு முன்போ நடந்தவை அல்ல; சில மாதங்களுக்கு முன்னால்! இப்போது மீண்டும் மோடி ஆட்சியே வரவேண்டும் என்று வாக்கு கேட்க வருகிறது பா.ம.க. மோடி எடப்பாடி ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்று கூட்டணியில் ஒன்று சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறது. இதை நியாயப் படுத்த அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள்…. அப்பப்பா… காதில் புகை வருகிறது! “அதே பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் நாங்கள் கைகோர்த் திருப்பது இழந்த உரிமைகளை மீட்பதற்குத்தான். வெளியி லிருந்து கொடுத்தக் குரலை கூட்டணியில் இணைந்து வலியுறுத்தவிருக்கிறோம்” என்கிறார்...

வடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா!

வடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா!

தமிழகமே மோடியின் பக்கம் திரண்டு நிற்கிறது, என்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அந்தக் கட்சிக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கிற சீட்டுகள் 5 மட்டும் தான். “இதுவே எங்கள் கட்சிக்கு ரொம்ப ரொம்ப அதிகம்” என்று மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம். ஜி.எஸ்.டி. வரியானாலும், புயல், இயற்கை சீற்றப் பேரிடர் நிவாரண நிதியானாலும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை நடுவண் ஆட்சி தரவில்லை என்று பட்ஜெட் உரையில் பட்டியலிட்டார் முதல்வர் எடப்பாடி! அரசுகளுக்கிடையிலான உறவுகளைத் தவிர, அ.இ.அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் கட்சி ரீதியாக உறவுகள் கிடையாது என்று நேற்று வரை பேசினார்கள்; பேட்டி அளித்தார்கள். பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்று கேட்டவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் அ.இ.அ.தி.மு.க. எம்.பி. தம்பித் துரை! இப்போது அதே கட்சியைத் தலையில் தூக்கிச் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் தலையில் மோடியைத் தூக்கிக் கொண்டு வரப் போகிறார்கள். காவிரிப் பிரச்னையில், நீட்...

அதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி: கேரள அரசு எதிர்ப்பு

அதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி: கேரள அரசு எதிர்ப்பு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ‘தாரை’ வார்த்துவிட்டது மோடி ஆட்சி. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்குவதை எதிர்த்து மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். “இந்த விமான நிலையம் கட்டுவதற்காக 635 ஏக்கர் நிலத்தை கேரள அரசு இலவசமாக வழங்கியிருக்கிறது. 2005ஆம் ஆண்டும் விமான நிலையத்தை விரிவாக்க மேலும் 23.57 ஏக்கர் நிலத்தை அளித்தோம். விமான நிலையத்தை அரசு தனியாருக்குத் தர முடிவெடுத்தால் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். மாநில அரசு இலவசமாக வழங்கிய நிலத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று மாநில அரசு ‘இந்திய விமான நிலையத்துக்கான குழுமத்துடன்’ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் துறையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை கையளிப்பதை ஏற்க முடியாது. அப்படி விமான நிலையத்தை கை கழுவ...

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

அய்ந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு மாநில உரிமைகளை நசுக்கி விட்டு போர் வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி ! இந்த தேசிய வெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது…. எதை? எதை? *     ரஃபேல் விமான பேர ஊழல். *     செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள். *     பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள். *     ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில் துறை. *     வேலை வாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்று விட்ட இந்தியா. *     நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர் களின் மருத்துவ கனவு. *     அனிதாவின் உயிர். *     ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.அய்., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி...

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

திருமண மந்திரங்கள் :  மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

திருமண மந்திரங்கள் : மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ  ப்ரதமோவி  வித   கந்தர்வ  விவிதே   உத்ரஹ த்ருதியோ  அக்னிஷ்டே  பதிஷ்   துரியஷ்தே  மனுஷ்ய   ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...

‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ் தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363

7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே,  குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!

7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, மார்ச் 9 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. தமிழக அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஒப்புதல் தர வேண்டிய தமிழக ஆளுனர் நெறிமுறைகளுக்கு மாறாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நசுக்கி வருவதைக் கண்டித்து நடக்கும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

தமிழக அரசே ..! பொள்ளாச்சி பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்து, கைது செய்துள்ள குற்றவாளிகளின் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடை, எஞ்சிய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி #கண்டன_ஆர்ப்பாட்டம் #தோழர்_வினோதினி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்… நேற்று (மார்ச் 10) மாலை 5 மணிக்கு நடைபெற்றது … இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை: #பேராசிரியர்_சரசுவதி PUCL _துணைதலைவர் #ஆசிரியர்_சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் கண்டன உரை : #திமுக_நகர_துணைசெயலாளர் நா. கார்த்திகேயன் வெள்ளிங்கிரி யாழ் திவிக மாவட்டச் செயலாளர் #மடத்துக்குளம்_மோகன் திவிக செயற்குழு உறுப்பினர் #திருப்பூர்_துரைசாமி திவிக மாநில பொருலாளர் #காசு_நாகராசன் ஒருகினைப்பாளர், தமிழ்நாடு திக #தேன்மொழி தமிழ்நாடு மாணவர் கழகம் நன்றியுரை...

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது” – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு (2011 ஆம் ஆண்டு திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். (2016 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

திருப்பூரில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! நாள் : 15.03.2019 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர். தமிழக அரசே ..! பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சியுள்ள உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்! பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு ! இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! தலைமை : #தோழர்_சுசீலா_அவர்கள். முன்னிலை : #தோழர்கள்_பார்வதி_சங்கீதா_முத்துலட்சுமி_கோமதி. கண்டன உரை : #தோழர்_கொளத்தூர்_மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_திருப்பூர்_துரைசாமி, பொருளாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஈரோடு_ரத்தினசாமி, அமைப்புச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_முகில்ராசு, மாவட்டத்தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஆறுமுகம், மாட்டத்தலைவர்,திராவிடர் கழகம், #தோழர்_சண்_முத்துக்குமார், மாநகரத்தலைவர்,த.பெ.தி.க. #தோழர்_துரைவளவன், மாநில துணைச்செயலாளர்,வி.சி.க. #தோழர்_துரை,திருவள்ளுவர் பேரவை. #தோழர்_அபுதாஹீர்,எஸ்டிபிஐ. #தோழர்_அஸ்லம்,த.ம.ஜ.க....

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

*பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.!* *சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்* *சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு* கண்டன உரை : *பேராசிரியர்.சரசுவதி* PUCL *முனைவர்.சுந்தரவள்ளி* த.மு.எ.க.சங்கம் *வழக்கறிஞர். அஜிதா* சென்னை உயர்நீதிமன்றம் *தோழர்.பா.மணியம்மை* திராவிடர் கழகம் *தோழர்.மார்ட்டினா* மனிதி *தோழர்.சுதா காந்தி* த.தே.வி.இயக்கம் *விடுதலை இராசேந்திரன்* திவிக *தோழர்.செந்தில்* சேவ் தமிழ் *தோழர்.பிரவீன்* மே 17 இயக்கம் தோழர்களே அனைவரும் வாரீர்.! *தொடர்புக்கு : 7299230363*

‘புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை’ எனும் தலைப்பில் கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் ‘ ஆற்றிய உரை. (24.02.2019 – சென்னை)

‘புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை’ எனும் தலைப்பில் கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் ‘ ஆற்றிய உரை. (24.02.2019 – சென்னை)

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். நாள் : 10.03.2019 ஞாயிறு நேரம் : மாலை 4 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி. கண்டன உரை : “பேராசிரியர் சரசுவதி”, துணைத் தலைவர் (PUCL) திராவிடர் விடுதலைக்கழகம் – பொள்ளாச்சி.

அன்னை மணியம்மையார்  நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

“அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா” மற்றும் “மகளிர் தின பொதுக்கூட்டம்.” வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…. நாள் : 09.03.019. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பாரதி சாலை, பெரம்பூர், சென்னை. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் ஓவியா, புதிய குரல். தோழர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர் மணிமேகலை. “விரட்டு” கலைக்குழுவினரின் பறையாட்டம், வீதி நாடகம் கலை நிகழ்ச்சி நடைபெறும்

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

இன்று (மார்ச். 8 ) மாலை ஈரோட்டில் உலக மகளிர் நாள் விழா ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், நாள் : 08.03.2019,வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,சித்தோடு, ஈரோடு தோழர் ‘மடத்துக்குளம் மோகன்’ அவர்களின் “அறிவியல் விளக்க நிகழ்ச்சி” நடைபெறும்.

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

தெருமுனைக்கூட்டம். —————————————- சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக காட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை..மக்களிடையே எடுத்துரைக்கும் வகையாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள..மாயவரம் பகுதியில் 24 / 2 /19 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. CM நகர் பிரபு தலைமையேற்க..சீ.ரா .சௌந்தர் , P.கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு தோழர் .வீரா கார்த்தி யின் சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும் ,மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தத் தோழர் .ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெயபாண்டி விஜயகுமார் பிடல்சேகுவேரா சத்யராஜ் குமார் கமலக்கண்ணன் கிருஷ்ணன் பிரபு விஜயரத்தினம் எழிலன்… கூட்டத்தின் முடிவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது…. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டுசெல்லும்...

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23 -02-19 அன்று செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட கழக தலைவர் பூஆ.இளையரசன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்சியில்   பழங்குடி மக்கள் முன்னனி தோழர் சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப்பாண்டியன் ,  விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் தோழர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மணி, மற்றும்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழக தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே...

தமிழர், தலையில் சுமந்த  செருப்பை,  முதல் முதலாகக்  காலில்போட்டு மிதித்தது,  பெரியார் ஒருவரே!  – பிரபஞ்சன்

தமிழர், தலையில் சுமந்த செருப்பை, முதல் முதலாகக் காலில்போட்டு மிதித்தது, பெரியார் ஒருவரே! – பிரபஞ்சன்

தலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர் செருப்புக்குத் தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு ஈசன் படியளந்த இதிகாசக் காலத்தில் ராமன் செருப்புகளே ராஜ்ஜியத்தை ஆண்டன. அரியாசனத்திலிருந்து ஆட்சி செய்தன செருப்புகள். ராஜராஜனுக்குப் பின் ராஜேந்திரன் வந்ததுபோல் அப்பன் செருப்புக்குப் பின் மகன் செருப்பு… ராம செருப்புக்கு வாரிசுச் செருப்புகள் வந்தன. பேட்டா செருப்புகள் போல வேதச் செருப்புகள் – மத வாதச் செருப்புகள் – பல வருணச் செருப்புகள். மறுபாதிச் செருப்புகள் மனுநீதிச் செருப்புகள்… தமிழ்நாட்டில், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்தது ஓர் வார்ச் செருப்பு! ஆரஞ்சு பச்சை அதன் நடுவே வெள்ளையென்று வண்ணம் கொண்ட வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு! அது, வெள்ளைச் செருப்பின் வாரிசுச் செருப்பு! ராமச் செருப்பும், வெள்ளைச் செருப்பும் தில்லிச் செருப்பும் தமிழனின் காலைக் கடிக்கும் கள்ளச் செருப்பே! எந்தச் செருப்பு எங்களுக்குப் பொருந்தும் என்று தமிழர் நொந்து கிடந்த நோய்க் காலத்தில்,...

ஓர் அறிவிப்பு

‘நிமிர்வோம்’ டிசம்பர் இதழ் வெளி வரவில்லை. இது ஜனவரி மாத இதழ். இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து இதழ் வெளி வரும். – நிர்வாகி, நிமிர்வோம். நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்

பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? ர. பிரகாசு

இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India  என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதிலும் கூட பெருமளவில் பாலினப் பாகுபாடு நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல; பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் மொபைல் பயன்பாட்டில் ஆண்-பெண் பாலினப் பாகுபாடு மிகுந்துள்ளது. நாம் இங்கு இந்தியாவைக் கணக்கில் கொள்வோம். இந்தியாவில் 71 விழுக்காடு ஆண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், 38 விழுக்காடு மட்டுமே பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 31 விழுக்காடாக உள்ளது. இதை வெறுமனே பொருளாதாரக் காரணி என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட இயலாது. சாதி, மத, சமூகக் கட்டமைப்பு...

ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி?

‘வானத்தை’ தாங்கள் வணங்கும் தெய்வமாக்கிய ஆரியர்கள், ‘பூமி’யை அடிப்படையாகக் கொண்ட நதிக்கரை நாகரிக மக்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ள பின்பற்றிய தந்திரங்கள் என்ன? ‘ஏகம்-பிரம்மம்’ என்ற தத்துவங்கள் எப்படி வந்தன? விளக்குகிறது இக்கட்டுரை. மனிதர்களைப் பாகுபடுத்தும் சித்தாந்த மாகிய பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அதன் பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கே, வட மேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். இன்று ஈரான், பெர்சியப் பகுதிகளாக அடை யாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள். அவ்வாறு இடம் விட்டு இடம் பெயர்ந்துகொண்டு இருந்ததாலேயே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வானம் இவற்றில் நிலைமை களில் தொடர்ச்சியாக நிகழும் மாறுபாடுகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவேதான் தங்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி,...

கறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்? பெரியார்

மதுரை கறுஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கறுஞ்சட்டைப் படைக்கு தமிழக அரசு தடை போட்டது. அது குறித்து பெரியார் விடுத்த அறிக்கை: திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கு முன்னால், கறுஞ்சட்டை ஸ்தாபனத் தின் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் தடையுத்தரவு குறித்து சில கூற விரும்புகிறேன். நமது மாகாண சர்க்கார், கறுஞ்சட்டை ஸ்தாபனம் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அம்மாதிரி ஸ்தாபனமொன்றும் திராவிடர் கழகத்தின் சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பொதுக் கூட்டங்களின் போதும், மாநாடுகளின் போதும் தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறுஞ்சட்டைக் கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய வேண்டு மென்று நினைத்து அறிக்கை விட்டோம். அதையொட்டி அக்கூட்டத்தில் இருந்து தொண்டாற்ற விரும்பும் தோழர்களைச் சில கேள்விகள் கேட்டோம். உங்களால் கழகத்துக்கு முழு நேரத்தை தொண்டாற்ற முடியுமா? அல்லது தேவைப்பட்ட நேரத்தில்தான் தொண் டாற்ற முடியுமா? என்று கேட்டோம்....

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து… மதுரை கருஞ்சட்டைப் படை மாநாட்டை எரித்த ‘பார்ப்பன தேசியங்கள்’ கருஞ்சட்டையை அடையாளமாக்க வேண்டும் என்ற கருத்து எங்கே முளைவிட்டது?

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிறப்புரையாற்றினார். எம்.ஆர். ராதாவின் நாடகம் நடந்தது. மாநாட்டையொட்டி திருச்சியில் நடந்த ஊர்வலத்தை திட்டமிட்ட பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து, வேறு வழியில் போகுமாறு கூறியது. தோழர்கள் கொதித்தெழுந்தனர். பெரியார், தோழர்களிடம், ‘அரசு...

திராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை

திராவிடர் இயக்கத்தின் மூத்த இதழியலாளர்  92ஆம் வயதை எட்டியுள்ள கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், திருச்சி கருஞ்சட்டைப் பேரணி அணி வகுப்பைத் தொடர்ந்து இயக்க வரலாற்றை நினைவுகூர்ந்து ‘நிமிர்வோம்’ இதழுக்கு அனுப்பிய கட்டுரை. சென்ற 23.12.2018 அன்று திருச்சி மாநகரமே குலுங்கும் அளவுக்கு மாபெரும் கருஞ் சட்டைப் பேரணி நடை பெற்றுப் புதிய ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைப் ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ ஏட்டில் படித்தவுடன் பழைய நிகழ்ச்சி களெல்லாம் எனது நினைவில் நிழலாடின. என்போன்ற பெரியாரின் கொள்கை யுடைய மூத்த தோழர்களெல் லாம் மகிழ்ந்து பெருமைப் படக்கூடிய நிகழ்ச்சி இது. இதேபோல் கருஞ் சட்டைப் படை மாநாடு 1946இல் மதுரையில் நடந்த போது வைத்தியநாத அய்யர் கும்பல் பந்தலுக்கு தீ வைத்தது. வைத்தியநாத அய்யர் காங்கிரசுப் பிரமுகர். அவர்தான் காங்கிரசின் தரம் தாழ்ந்த பேச்சாளரான அணுக்குண்டு அய்யாவு மற்றும் சில அடியாட்களை ஏவிவிட்டு மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தச் செய்தார். மாநாட்டில்...

அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்

‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்த மத்திய சமூக நலத் துறை அய்.நா.விலும் தலித் உரிமைகளைப் பேசுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஜாதிய ஒடுக்கு முறை தலித் மீதான வன்முறைகள் குறித்து அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் ‘தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு’ என்ற பெண்கள் அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. தலித் மனித உரிமைகளுக்கான இயக்கம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் விவாத அரங்குகளில் பங்கேற்று முதன்முதலாக இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு மற்றும் தலித் மக்கள் மீதான பிரச்சினையை அறிக்கையாக்கி சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்: இந்தியாவில் ‘தலித் பெண்களின் கதை’ என்ற தலைப்பில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி ஜெனிவாவில்...

பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள்-சாஸ்திரங்கள்

பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள்-சாஸ்திரங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வேர்கள் – இந்துமதம் கட்டமைத்த சாஸ்திர, புராணங்களில் அடங்கியிருப்பதை, பெரியார் இயக்கம் நீண்டகாலமாக மக்களிடம் எடுத்துச் சொன்னாலும், மார்க்சியர்களின் பார்வை இதில் மாறுபட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண்களை சமூகமாகப் பிரித்துப் பார்ப்பது வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் என்பது அவர்களின் ஒரு பார்வை. பாமர மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் மத புராணங்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு பார்வை. இப்போது பார்ப்பனிய மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்கள். எனவே வரலாறு அணுகுமுறைகளைத் திருத்திக் கெள்ளும் பாதைக்கு நிர்ப்பந்திக்கிறது. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பெண்கள் வன்முறைக்கு எதிரான மாநாட்டையொட்டி அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ பெண்ணடிமையை வலியுறுத்தும் சாஸ்திர புராணங்களை கடும விமர்சனத்துக்கு உள்ளாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது பாராட்டி வரவேற்கத் தகுந்த மாற்றம்;  அந்தக் கட்டுரையை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என தொடர் படுகொலைகளை நடத்திய ‘சனாதன சன்ஸ்தா’வின் பயங்கரவாத பின்னணியை ‘நிமிர்வோம்’ இதழில் படித்தபோது அதிர்ச்சி யடைந்தேன். விரிவாக அம்பலப்படுத்திய ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும். இவ்வளவு படுகொலைகள் செய்த அமைப்பை தடை செய்யாமல், மதவெறியை எதிர்த்தாலே ‘தேச விரோதிகள்’, ‘அர்பன் கொரில்லாக்கள்’ என்று அரசு அடக்குமுறைச் சட்டங்களை ஏவிவிடுவதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். – செந்தில், வேலூர் பட்டியல் இனப் பிரிவினரில் முதல் முதலாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி பொருளாதார வரம்பை உச்சநீதிமன்றம் திணித்திருப்பதை ‘நிமிர்வோம்’ இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல சமூக நீதித் தலைவர்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி தீர்ப்பை வரவேற்றார்கள்? – மனோஜ், நாமக்கல் ‘நேர்மைக்கு ஓர் இலக்கணம்’ பெரியார் பற்றிய கட்டுரை அரிய தகவல்களைக் கொண்டிருந்தது. இளைய தலைமுறை  அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளம் இடம் பெற்றிருந்தன. – தென்றல், சென்னை நிமிர்வோம்...

பாரதியின் பார்ப்பனியம்: பெரியார் எழுப்பிய கேள்விகள் செ. கார்கி

‘இந்துத்துவா’ ஒற்றைப் பண்பாட்டைப் பார்ப்பனியம் இந்தியாவின் பண்பாடாக்க முயலுவதும் இந்தியாவின் தேசியக் கவி பாரதி என்ற ஒற்றை மனிதரை உயர்த்திப் பிடிப்பதும் சாராம்சத்தில் ஒன்று தான். பாரதியின் இரட்டை வேடத் துக்குள் பதுங்கி நின்ற பார்ப்பன மேலாண்மையை பெரியார் அம்பலப் படுத்தியதை பெரியார் மொழியிலேயே விளக்குகிறார், கட்டுரையாளர். வழக்கம் போல இந்தாண்டும் பார்ப்பன பாரதியின் பிறந்த தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழக்கம் போல பாரதியின் அருமை பெருமைகளை எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்தனர். பள்ளிகளில் ஒட்டு மீசையும், முண்டாசும் அணிந்து பாரதியார் வேடமிட்ட குழந்தைகள் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒரிரு பாரதியின் பாடல் வரிகளை ஒப்புவித்து பிற்போக்குவாதிகளை திருப்திப் படுத்தினர். இது எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சடங்கு போல தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆகும். எப்படி என்ன காரணத் திற்காக பண்டிகைகள்...

அரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன?

கடவுள் மத மறுப்புக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையையும் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் சேர்க்கும்போதுதான்  அரசியல் சட்டம் கூறும் அனைவருக்குமான உரிமை – அர்த்தம் பெறும். இந்தியாவில் 13 சதவீதம் பேர் மத நம்பிக்கையில்லாதவர்கள்; 3 சதவீதம் பேர் நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டிருப் பவர்கள். இது 2012ஆம் ஆண்டு ஒருநிறுவனம் தந்துள்ள புள்ளி விவரம் (றin பயடடரயீ சநயீடிசவ – 2012) உண்மையில் மதவாதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர் களானாலும் சரி; கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருப் பவர்களானாலும் சரி; அந்த நம்பிக்கை களிலிருந்து முற்றாக விலகிய வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறியீடு மற்றும் சடங்குகளில்தான் இந்த நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நாத்திகர் என்போர் கடவுள் மறுப் பாளர்கள் அல்ல; வேதத்தை மறுப்போர்தான் என்று காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி கூறி யிருக்கிறார். வேதங்கள் தோன்றிய காலத் திலேயே வேத மறுப்பும் – கடவுள் மறுப்பும் தோன்றிவிட்டன. சார்வாகம்,...

மூன்றாம் ஆண்டில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது. தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி...

திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி

டிசம்பர் 23இல் திருச்சியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரண்டு, “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவெறி சக்திகளுக்கு இடமில்லை; தமிழ்நாட்டின் கனிமவள சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம்” என்ற எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரியார் இறப்புக்குப் பிறகு பிறந்த பல்லாயிரக்கணக்கான  இளைஞர்களின் போர்ப் பாசறை என்றே கூற வேண்டும். பெரியார் தனது மரண சாசனமாக விட்டுச் சென்ற தமிழின விடுதலையை சூளுரையாக ஏற்றிருக்கிறது இந்தப் பேரணி. விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்களைத் தவிர, ஏனையவை கட்டுப்பாடாக இந்தப் பேரணியின் செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டன. பெரியார் பேசிய திராவிடம், ‘தமிழரின் இழிவு ஒழிப்பு – தன்னுரிமைக்கான குறியீட்டுச் சொல்’ என்ற உண்மையைத் திரித்து பெரியாரை தமிழருக்கு எதிராக நிறுத்த முயன்ற குழுக்களின் ‘பிரச்சார மாயை’ வெற்றி பெறாது என்று காட்டியிருக்கிறது பேரணியில் திரண்ட இளைஞர்களின் கூட்டம். ஜாதி ஒழிப்பு; ஜாதியின் உற்பத்தி சக்திகளான இந்து மதம்; பார்ப்பனியம்; அதை மூளையில் சுமந்து நிற்கும் ஜாதி...

அறிவியலுக்கு வாருங்கள்! – பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு

அறிவியலுக்கு வாருங்கள்! – பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...

வாசகர்களிடமிருந்து…

திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள்  மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ்  ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்’ ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்! நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. ழடிற ளுநஉரடயச குயஅடைல ஏயடரநள ளுவயஉம ரயீ என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் (ஞாடை ஷ்ரஉமநசஅயn) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்கா வின் ஞவைணநச  கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார். 2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும்...

பெரியார் கவலைப்பட்டது ஏன்?

எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார். அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன். ‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார். ‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது. நான்...

பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி

பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம்  ரூ.  70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி. பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம்...

மோடி பூமியின் காவலரா?

நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘பூமியின் சாம்பியன்’ விருதை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சுற்றுச்சூழல் முன்னேற்றத் துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படுவது இந்த உயரிய விருது. சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட சூழல் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதற் காகவும், மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதாக அறிவித்துள்ளதாலும் இந்த விருது. இதைப் பெறும் அளவுக்கு மோடி தகுதியானவரா? கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதில் மாற்றம் கொண்டு வந்தார். ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அது அமைய இருக்கும் இடத்தில் அதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதைச் சூழலியல் துறை உறுதிசெய்ய வேண்டும். முன்பு இதற்கான கால அவகாசம் 600 நாட்களாக இருந்தது. மோடி அரசு இதை 170 நாள்களாகக் குறைத்தது....

அந்த வசந்தம் அண்ணா

அண்ணா முதலமைச்சரான பிறகு ‘விடுதலை’ வெளியிட்ட பெரியார் 80ஆவது பிறந்த நாள் மலருக்காக அண்ணா எழுதிய கட்டுரை இது. கட்டுரைக்கு ‘அந்த வசந்தம்’ என்று அண்ணாவே தலைப்பிட்டார். பெரியாரின் வரலாற்றுச் சாதனைகளை கூர்மையாகப் படம் பிடிக்கும் கட்டுரை. எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு – ஆண்டு பலவற்றுக்குப் பிறகு – அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப் பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும். வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன். அப்போது, கலவரம் எழாமல்...

வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் அறிவாயுதம்

அண்ணாவின் பகுத்தறிவு – பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனைகளின் தொகுப்பு இது. ஆழமான கேள்விக் கணைகளால் வைதீகத்தை அண்ணா எப்படி துளைத்தெடுத்திருக்கிறார் என்பதற்கு இந்த எழுத்துகளே சாட்சியங்கள். இலட்சார்ச்சனை : நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்க நாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி? இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின்...

பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்

1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ...